செவ்வாய், 30 ஜூன், 2015

மொகலாய வரலாறு 8

நசீர் உத் தீன் முஹம்மது ஹுமாயுன்
கூ.செ.செய்யது முஹமது
                     பாபரின் முதல் மனைவி மாஹம் பேகமுக்கு பிறந்தவர்கள் ஹுமாயுன், பார்பூல் மிர்சா, மிஹ்ர்ஜான் பேகம், இஷான் தௌ லத் பேகம் மற்றும் ஃபாரூக் மிர்சா. இரண்டாவது மனைவி மசூமா சுல்தான் பேகம் பிரசவத்தில் இறந்து போனதால், அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. மூன்றாவது குல்ருக் பேகம் என்ற மனைவிக்கு காம்ரான் மிர்சா, அஸ்கரி மிர்சா, ஷாருக் மிர்சா, சுல்தான் அஹ்மது மிர்சா மற்றும் குல் இஸார் பேகம் ஆகியோர் பிறந்தனர். நான்காவது மனைவிக்கு குல்ரங்க் பேகம், குல்சிஹ்ரா பேகம், ஹிண்டால் மிர்சா, குல்பதன் பேகம் மற் றும் அல்வார் மிர்சா ஆகியோர் பிறந்தனர். நசீருத்தீன் முஹம்மது ஹுமாயுன் 1508 மார்ச் 6 ல் (துல்கதா 4, 913) காபூல் அரண்மனையில் பிறந்தார். இவர் பிறந்த தற்குப் பிறகு தான் எல்லா மகன்களுக்கும் “மிர்சா” என்று வருமாறு பாபர் பெய ரிட்டார். தன்னையும் பாபர் பாதுஷா என்று அழைத்துக் கொண்டார்.
           ஒருமுறை ஹுமாயுன் கடுமையாக நோய் வாய்ப்பட்டு, மிகவும் பலவீனமாக போன போது பாபர் தொடர்ந்து தொழுகை யில் ஈடுபட்டு, இறைவனே உன்னுடைய அதிகாரத்தில் உயிர்களை பறிமாறிக் கொள்ளும்படி இருந்தால், என் மகன் ஹுமாயுனுக்குப் பதில் என்னுடைய உயிரை எடுத்துக் கொள் என்று வேண்டினார். பாபர் 1530 டிசம்பர் 26 ல் (ஜுமாதா 5, 937) இறந்தார். இறப்பதற்கு முன்பிருந்தே தனக்குப் பிறகு ஹுமாயுன் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். ஹுமாயுன் அழகாக திருக்கு ரானை ஓதக்கூடிய 60 நபர்களை சில தினங்கள் பாபரின் மறுமைக்காக ஓதச் செய்தார்.
                                                                           1530 ஆம் ஆண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஹுமாயுன் ஆட்சிக்கு வந்தார். இவரால் அமைதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. எதிரியான ஷேர்ஷாவினால் பல தொல்லைகளுக்கு ஆளா னார். ஹுமாயுனின் சகோதரர்கள் பல மாகாணங்களை கவர்னர்களாக நிர்வகி த்தனர். காபூல் மற்றும் கந்தஹாரை காம்ரானும், ஆள்வார் மற்றும் மெவாத் தை மிர்சா ஹிண்டாலும், சம்பலை மிர்சா அஸ்கரியும், பதக் ஷானை உறவி னர் மிர்சா சுலைமானும் நிர்வகித்தார்கள். இந்த சகோதரர்களின் சதியாலும், ராஜதுரோகத்தாலும் மொகலாயப் பேரரசு ஆரம்பத்திலேயே நிலை குலைந் தது.  பாபரை விட திறமை குறையவராக இருந்தார். ஹுமாயுனின் தாராள குணமும், தாட்சன்யமும் அவரின் மிகப்பெரிய குறையாக இருந்தது. அரசியல் சூழ்நிலை ஸ்திரமற்று இருந்தது. கிழக்கில் ஆஃப்கானில் ஷேர்கானும், மேற் கில் பஹதூர்ஷாவும் மொகலாய ஆட்சியை அப்புறப்படுத்த திட்டமிட்டனர். ஹுமாயுனின் சகோதரர்களோ தாங்கள் இருந்த பகுதிகளை சொந்தம் கொண் டாடுவதில் மும்முரமாய் இருந்தார்கள். சில தலைவர்களும், ஹுமாயுனால் பதவி அளிக்கப்பட்ட சில இராணுவ அதிகாரிகளும் ஹுமாயுனுக்கு எதிராகவே இருந்தார்கள்.
                     முஹம்மது ஸமான் என்பவனால் ஒரு குழப்பம் ஹுமாயுனுக்கு எதிராக உண்டானது. அதில் அவன் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். திட்டம் செயல்படு த்துவதற்கு முன்பாகவே வெளிப்பட்டு விட்ட்தால் அவன் தப்பியோடி குஜராத் தில் பஹதூர்ஷாவிடம் சேர்ந்து கொண்டான். அடுத்து சுல்தான் இப்ராஹிம் லோடியின் சகோதரன் அலாவுத்தீன் என்பவன் தன் மகன் டாடார்கானின் தலைமையில் 40,000 வீரர்களை ஹுமாயுனுக்கு எதிராக அனுப்பினான். பியா னாஹ் என்ற இடத்தில் சண்டை இடப்பட்டு தோற்கடிக்கப்பட்டு டாடார்கான் கொல்லப்பட்டான். காபூல், கந்தஹாரிலிருந்து ஹுமாயுனின் சகோதரர்கள் அஸ்கரியும், காம்ரானும் பெரும் படையுடன் திரண்டு வந்து ஹுமாயுனுக்கு ராஜ விருது வழங்க இருப்பதாக நாடகம் ஆடினர். ஆனால் ஹுமாயுன் முன் கூட்டியே ஒரு படையை அனுப்பி தான் காபூலுக்கு பதிலாக லம்கானையும், பெஷாவரையும் தன் பிரதேசத்தில் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கிறார். கம்ரான் அதைப் பொருட்படுத்தாமல் பஞ்சாபைக் கைப்பற்றி தனது காபூல் மற்றும் கந்தஹாருடன் இணத்துக் கொண்டார். சகோதரனுடன் போர் செய்ய விரும்பாத ஹுமாயுன் அமைதியாக இருந்தார். இது ஹுமாயுனின் மிகப் பெரிய தவறாகப் போனது. வடமேற்கில் மொகலாயப் படைகளுக்கு எதிராக ஒரு தடுப்புப்படையை உருவாக்க ஏதுவானது. டெல்லியில் இருந்து படை கந்தஹார் வந்தால் வழியிலேயே தடுக்கப்பட்டுவிடும்.
                 இதற்கிடையில் வளமானதும், பலமானதுமான குஜராத்திலிருந்து பஹதூர் ஷா, ஹுமாயுன் மீது படையெடுத்து வந்தார். பஹ தூர் ஷா ஹுமாயுனை சற்று குறைவாக மதிப்பிட்டார். ஹுமாயுன் பலமான பீரங்கித் தாக்குதல் கொடுக்க பஹதூர் ஷா தப்பித்து போர்ச்சுகீசியர்களிடம் ஓடி டையூ என்ற இடத்தில் அடைக்கலம் ஆனார். ஹுமாயுன் குஜராத் மற்றும் மால்வாவின் பெரும் பகுதியை தன் பிரதேசத்துடன் இணைத்துக் கொண்டார். வெற்றிபெற்ற பகுதிகளை நிரந்தரமாக தன்னுடன் வைத்துக் கொள்ள திட்டமிட தவறினார். பஹதூர் ஷா நம்பகமான இமாத் உல் முல்க் என்னும் தளபதியின் கீழ், போர்ச்சுகீசியர்களின் உதவியுடன் ஒரு படையை ஏற்பாடு செய்தார். இதை அறிந்த ஹுமாயுன் முன்னேறிச் சென்று இமாத் உல் முல்கை விரட்டினார். தன் சகோதரர் அஸ்கரியின் அதிகாரத்தில் குஜராத்தை விட்டார். அஸ்கரியின் நடவடிக்கைகள் அவரின் அதிகாரிகளுக்கே பிடிக்காது. சரியான சந்தர்பத்திற் காக காத்திருந்த பஹதூர் ஷா அஹமதாபாத்தின் மீது படையெடுத்து தான் இழந்த பகுதிகளை மீட்டார். ஹுமாயுன் மாண்டுவுக்கு சென்றதால் மால்வா வும் இழக்கப்பட்டது. ஆனால், பஹதூர் ஷாவால் ஆளமுடியாமல் துரதிஷ்ட வசமாக கடலில் தவறி விழுந்து இறந்து போனார். இதற்கிடையில் ஷேர்கான் சௌஸா என்ற் இடத்தை வென்று தன்னை “ஷேர் ஷா” என்று அழைத்துக் கொண்டார். ஹுமாயுனை கனாஜ் என்ற இடத்திலும் படுதோல்வி அடையச் செய்தார். இந்த தோல்விகள் ஹுமாயுனை இந்தியாவை விட்டு விரட்டியது. சர் ஹிந்த் பகுதிக்குச் சென்ற ஹுமாயுனை, இவரால் பாசமாகக் கவனிக்கப் பட்ட அவரது சகோதரர்களே பாதுகாப்பளிக்க மறுத்துவிட்டனர்.
          இந்த சூழ்நிலையில் ஷெய்க் அலி அக்பர் ஜாமி என்பவரின் மகள் ஹமீதா பானு பேகம் என்பவரை திருமணம் செய்து கொண் டார். ஜோத்பூரின் ராஜா இருபத்தைந்தாயிரம் ராஜ்புத் இராணுவ வீரர்களை தந்து உதவுவதாக வாக்களித்ததின் பேரில் ஹுமாயுன் அவரிடம் சென்றார். ஆனால் ராஜாவும் ஏமாற்றினார். இறுதியாக அமர்கோட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ராணா பிரசாத் ஹுமாயுனுக்கு நம்பிக்கை அளித்து தட்டா மற்றும் பக்கரை தாக்குவதற்கு உதவுவதாகக் கூறினார். இது மீண்டும் ஹுமா யுன் இந்தியாவின் பேரரசர் ஆவதற்கு சந்தர்பத்தைத் தந்தது. இந்த தருணத்தில் ஹுமாயுனுக்கு அக்பர் என்ற மகன் பிறந்தார். ராணா பிரசாதின் உதவியுடன் பக்கரை தாக்கினார். இடையில் ராஜ்புத் வீரர்களுக்கும், ஹுமாயுனின் வீரர்களு க்கும் இணக்கமில்லாமல் போக, ஹுமாயுனின் வீரர்கள் தனிமைப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பக்கரின் ஆட்சியாளர் போரினால் தளர்ந்து சமாதானத்திற்கு உடன்பட்டார். சமாதானத்தின் அடையாளமாக ஹுமாயுனுக்கு முப்பது படகு களும், பத்தாயிரம் மிஷ்கால்களும், ஆயிரம் மூட்டை தானியங்களும், முன் னூறு ஒட்டகங்களும் கிடைத்தன. அத்தனையும் எடுத்துக் கொண்டு கந்தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த பகுதி முழுவதும் சகோதரர்கள் காம்ரான், அஸ்கர் மற்றும் ஹிந்தால் வசமிருந்தால் பாதுகாப்பிருக்காது என கருதி பெர் ஷியா செல்ல முடிவெடுத்து ஷாவுக்கு தெரியப்படுத்தினார். தனது ஒரு வயது மகன் அக்பரை பிரிந்து பெர்ஷியா செல்ல ஹுமாயுன் முடிவெடுத்தார். பெர் ஷியாவின் ஷா ஹுமாயுனுக்கு ராஜ வரவேற்பு கொடுக்க வேண்டி தன் அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். பெர்ஷியாவின் ஷா ஷியா பிரிவு கொள்கை கொண்டவராக இருந்ததால், சுன்னிப் பிரிவு ஹுமாயுனையும் ஷியாவுக்கு மாறும்படி வற்புறுத்தினார். ஹுமாயுனின் உடனிருந்தவர்களும் ஆலோசனை கூறியதால் ஷியா பிரிவுக்கு மாற ஒப்புக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷா காபூல், கந்தார் மற்றும் பொகாரா ஆகியவற்றை வெல்ல ஹுமா யுனுக்கு இராணுவ உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இடைப்பட்ட ஷேர் ஷா சூரியின் ஆட்சி                              
                                                    வெற்றிபெற்ற ஷேர் ஷா சூர் டெல்லியைக் கைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டார். ஷேர் ஷாவின் உண்மைபெயர் ஃபரீத். இவர் 1486 ல் ஹிசார்ஃபிரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் ஹசன். ஹசனுக்கு நான்கு மனைவிகள். ஷேர் ஷா சிறுவயதில் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவித்தார். தந்தை ஹசன் மகன்களிடம் பாசமற்று இருந் தார். ஃபரீத் என்ற ஷேர்ஷா வீட்டைவிட்டு விலகி, ஜான்பூர் என்ற இடத்தில் தந்தையின் நண்பர் பீஹாரின் கவர்னராய் இருந்த ஜமால் கான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளைக் கற்றார். ஷேர்ஷாவின் திறமைகளை அறிந்த கவர்னர் ஜமால்கான் ஹசனிடம் பிள்ளை யிடம் கனிவாக இருக்க கேட்டுக்கொண்டார். திரும்ப வந்த மகன் ஃபரீதுக்கு ஹசன் நிர்வாகத்தில் வேலை கொடுத்தார். இவரின்நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்தது. 1519 ல் மாற்றாந் தாய்களின் பிரச்சினையால் அந்த வேலையிலிரு ந்து திரும்பிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பீஹார் சென்று தரியா கான் லோஹானியின் மகன் கவர்னர் பஹார்கானிடம் வேலைக்குச் சேர்ந்தார். 1522 லிருந்து 1526 வரை ஃபரீத் பஹார்கானிடம் மிகவும் சிறப்பாக சமூக மற்றும் வருவாய்துறையில் பணியாற்றினார். இயற்கையாக இவருக்கிருந்த வேட்டை யாடும் திறமையால் ஒரு முறை புலி ஒன்றைக் கொன்றதால் “ஷேர்கான்” என்ற சிறப்புப்பெயர் பெற்றார். தனது எஜமானரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் ராஜினாமா செய்துவிட்டு, பாபர் அவர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்.

மொகலாய வரலாறு 9

                                                                   இந்த சூழ்நிலையில் ஷெய்க் அலி அக்பர் ஜாமி என்பவரின் மகள் ஹமீதா பானு பேகம் என்பவரை திருமணம் செய்து கொண் டார். ஜோத்பூரின் ராஜா இருபத்தைந்தாயிரம் ராஜ்புத் இராணுவ வீரர்களை தந்து உதவுவதாக வாக்களித்ததின் பேரில் ஹுமாயுன் அவரிடம் சென்றார். ஆனால் ராஜாவும் ஏமாற்றினார். இறுதியாக அமர்கோட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ராணா பிரசாத் ஹுமாயுனுக்கு நம்பிக்கை அளித்து தட்டா மற்றும் பக்கரை தாக்குவதற்கு உதவுவதாகக் கூறினார். இது மீண்டும் ஹுமா யுன் இந்தியாவின் பேரரசர் ஆவதற்கு சந்தர்பத்தைத் தந்தது. இந்த தருணத்தில் ஹுமாயுனுக்கு அக்பர் என்ற மகன் பிறந்தார். ராணா பிரசாதின் உதவியுடன் பக்கரை தாக்கினார். இடையில் ராஜ்புத் வீரர்களுக்கும், ஹுமாயுனின் வீரர் களுக்கும் இணக்கமில்லாமல் போக, ஹுமாயுனின் வீரர்கள் தனிமைப்பட்ட னர். அதிர்ஷ்டவசமாக பக்கரின் ஆட்சியாளர் போரினால் தளர்ந்து சமாதானத் திற்கு உடன்பட்டார். சமாதானத்தின் அடையாளமாக ஹுமாயுனுக்கு முப்பது படகுகளும், பத்தாயிரம் மிஷ்கால்களும், ஆயிரம் மூட்டை தானியங்களும், முன்னூறு ஒட்டகங்களும் கிடைத்தன. அத்தனையும் எடுத்துக் கொண்டு கந் தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த பகுதி முழுவதும் சகோதரர்கள் காம்ரான், அஸ்கர் மற்றும் ஹிந்தால் வசமிருந்தால் பாதுகாப்பிருக்காது என கருதி பெர்ஷியா செல்ல முடிவெடுத்து ஷாவுக்கு தெரியப்படுத்தினார். தனது ஒரு வயது மகன் அக்பரை பிரிந்து பெர்ஷியா செல்ல ஹுமாயுன் முடிவெடுத் தார். பெர்ஷியாவின் ஷா ஹுமாயுனுக்கு ராஜ வரவேற்பு கொடுக்க வேண்டி தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பெர்ஷியாவின் ஷா ஷியா பிரிவு கொள்கை கொண்டவராக இருந்ததால், சுன்னிப் பிரிவு ஹுமாயுனையும் ஷியாவுக்கு மாறும்படி வற்புறுத்தினார். ஹுமாயுனின் உடனிருந்தவர்களும் ஆலோசனை கூறியதால் ஷியா பிரிவுக்கு மாற ஒப்புக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷா காபூல், கந்தார் மற்றும் பொகாரா ஆகியவற்றை வெல்ல ஹுமாயுனுக்கு இராணுவ உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இடைப்பட்ட ஷேர் ஷா சூரியின் ஆட்சி                              
                                                  வெற்றிபெற்ற ஷேர் ஷா சூர் டெல்லியைக் கைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டார். ஷேர் ஷாவின் உண்மைபெயர் ஃபரீத். இவர் 1486 ல் ஹிசார்ஃபிரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் ஹசன். ஹசனுக்கு நான்கு மனைவிகள். ஷேர் ஷா சிறுவயதில் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவித்தார். தந்தை ஹசன் மகன்களிடம் பாசமற்று இருந் தார். ஃபரீத் என்ற ஷேர்ஷா வீட்டைவிட்டு விலகி, ஜான்பூர் என்ற இடத்தில் தந்தையின் நண்பர் பீஹாரின் கவர்னராய் இருந்த ஜமால் கான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளைக் கற்றார். ஷேர்ஷாவின் திறமைகளை அறிந்த கவர்னர் ஜமால்கான் ஹசனிடம் பிள்ளை யிடம் கனிவாக இருக்க கேட்டுக்கொண்டார். திரும்ப வந்த மகன் ஃபரீதுக்கு ஹசன் நிர்வாகத்தில் வேலை கொடுத்தார். இவரின்நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்தது. 1519 ல் மாற்றாந் தாய்களின் பிரச்சினையால் அந்த வேலையிலிரு ந்து திரும்பிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பீஹார் சென்று தரியா கான் லோஹானியின் மகன் கவர்னர் பஹார்கானிடம் வேலைக்குச் சேர்ந்தார். 1522 லிருந்து 1526 வரை ஃபரீத் பஹார்கானிடம் மிகவும் சிறப்பாக சமூக மற்றும் வருவாய்துறையில் பணியாற்றினார். இயற்கையாக இவருக்கிருந்த வேட்டை யாடும் திறமையால் ஒரு முறை புலி ஒன்றைக் கொன்றதால் “ஷேர்கான்” என்ற சிறப்புப்பெயர் பெற்றார். தனது எஜமானரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் ராஜினாமா செய்துவிட்டு, பாபர் அவர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்.
                                                             இவரின் திறமைகளைக்கண்ட பாபர் இவரை பல மாகாணங்களுக்கு கவர்னராக்கினார். அதில் ஷெர்கானின் தந்தையார் இருந்த மாகாணமும் அடங்கும். இதற்கிடையில் பஹார்கான் மரணமடைய அவர் மகன் ஜலால்கான் பதவிக்கு வருகிறார். ஜலால்கான் வயதில் சிறியவராக இருந்ததால், ஷேர்கான் அதிகாரத்தில் துணைக்கு இருந்து நிர்வகித்தார். ஜலால்கான் பெரியவராக வளர்ந்ததும், ஷேர்கானின் உதவியின்றி தானே தனியாக நிர்வகிக்கவும், மொத்த ஆப்கானையும் ஆள்வதற்கும் விருப்பம் கொண்டார். ஜலால்கான் பெங்காலின் ஆட்சியாளரைத் துணைக்கு அழைத்துக் கொண்டார். ஆனால், இவர்களின் கூட்டணி சூரஜ்கர் என்ற இடத்தில் ஷேர் கானிடம் தோற்க அவர் பீஹாரின் ஆட்சியாளர் ஆனார். இதிலிருந்து ஷேர்கான் சோர்வடையாமல் ஆட்சியின் அடுத்த முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். பீஹா ருக்குப் பிறகு, பெங்கால் இவரை ஈர்த்தது 1536 ன் ஆரம்பத்தில் கௌர் நகரை நெருங்கினார். பெங்காலின் ஆட்சியாளர் ஷேர் கானுடன் போரிடுவதற்கு பதில், பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து காப்பாற்றிக்கொண்டார். அடுத்த வருடம் ஷேர்கான் மீண்டும் படையெடுத்து கௌர் மற்றும் பலமான ரோஹ்டாஸ் பகுதியை வென்று பெங்காலைக் கைப்பற்றினார்.  ஷேர்கானின் கிழக்குப்புற வெற்றிகளைக் கேள்விப்பட்ட ஹுமாயுன் தாமதிக்காமல் பெங்கா லைக் கைப்பற்ற படையெடுத்தார்.
                                    மொகலாயப் படைகள் கௌர் மற்றும் ஜன்னத்பாத் நகரங்களைக் கைப்பற்றியது. ஷேர்கானும் பீஹாரின் ஜான்பூரைக் கைப்பற்றி கன்னாஜ் வரை வந்தார். ஷேர்கானின் நடவடிக்கையை அறிந்த ஹுமாயுன் தனது தலைமையிலேயே சவ்ஸா என்ற இடத்தில் போருக்குத் தயாரானார். கங்கை நதி யைக் கடந்து முங்கீர் என்ற இடத்தை அடைந்தவுடன், நிலைமை வேறாக இருக்க  ஷேர்கானுடன் சமாதானத்திற்கு முயன்றார். ஆனால், முடி யாமல் போக சவ்ஸா போரில் ஹுமாயுன் தோல்வியுற்றார். பேரரசர் ஹுமா யுன் தப்பிக்கும்போது ஆற்றில் தவறிவிழ, நிஜாம் என்னும் பணியாள் அரசரை காப்பாற்றினான். நிஜாம் இரண்டு நாட்கள் ஹுமாயுனுடன் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டான். வெற்றி பெற்ற ஷேர்கான் தன்னை மன்னன் தகுதிக்கு ஆளாக்கிக் கொண்டார். ஆட்சியில் தனது சகோதரர்களை உதவிக்கு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டார். ஆனால், அவர் சகோதரர்கள் இவரை ஒதுக்கிவிட்டு, பாபரின் பிள்ளைகளுடன் நேசமாக இருந்தனர். ஷேர்கான் கங் கையைக் கடந்து கன்னாஜ் சென்று விடாமல் ஹுமாயுனுடன் போரிட்டார். இந்த முறையும் ஹுமாயுன் தோல்வியுற்று தப்பிச் சென்றார்.
                                             ஷேர்கான் இப்போது பெங்கால், பீஹார், ஜான்பூர் மற்றும் டெல்லிக்கு ஆட்சியாளரானார். பஞ்சாபையும், ஆக்ராவையும் வென்று முழு மையாக மொகலாயர்களை இந்தியாவை விட்டு விரட்ட எண்ணி புதிய போரைத் துவங்கினார். முதலில் பஞ்சாப் அவர் வசமானது. ஹுமாயுனின் சகோதரர் கம்ரான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒப்படைத்து விட்டார். இருந்தா லும் கம்ரான் காஷ்மீரின் அதிகாரத்தில் இருந்த ஹுமாயுனின் இன்னொரு சகோதரர் மிர்ஸா ஹிண்டாலுடன் சேர்ந்து வடமேற்கில் எதிர்க்கலாம் என்று எச்சரிக்கை அடைந்தார். இதனால், ஜீலம் நதிக்கரையில் பலமான கோட்டை ஒன்றை நிர்மாணித்து 50,000 வீரர்களையும், நம்பிக்கையான இராணுவ அதிகா ரியையும் காவலுக்கு வைத்தார். இப்போது ஷேர்கான் பெங்காலின் இன்னொரு பகுதியான மால்வாவின் மீது பார்வையைத் திருப்பினார். மால்வாவை பலமற்ற இரண்டாம் முஹமது என்பவர் ஆண்டு வந்தார். மல்லூகான் என்ற உள்ளூர் தலைவன் ஒருவன் இரண்டாம் முஹமதின் நிர்வாகம் சரியில்லாத தால், மாண்டு, உஜ்ஜைனி, சாரங்க்பூர் மற்றும் சில பகுதிகளை இணைத்து தனி சுதந்திரப்பிரதேசமாக ஆண்டுவந்தான்.
                                                          மல்லூகான் இல்லாமல் மேலும் இரண்டு உள்ளூர் தலைவர்கள் அருகில் இரு பிரதேசங்களை ஆண்டு வந்தார்கள். இந்த அருகா மை குழப்பங்களை கவனித்த ஷேர்கான் அந்த பிரதேசங்களை வெற்றிகொள்ள    எண்ணினார். 1542 ல் குவாலியர், சாரங்க்பூர், உஜ் ஜைனி மற்றும் மால்வா பகுதிகளை வென்றார். 1543 ல் ராஜபுதனா மற்றும் மார்வாரின் தலைநகர் ஜோத் பூரையும் வென்றார். மால் தேவாவில் ஷேர்கானுக்கு ராஜபுத்திரர்களிடமிரு ந்து பலத்த எதிர்ப்பு இருந்தது. ராஜபுத்திரர்கள் சதித்திட்டம் வைத்திருந்தனர். போரில் அதிகமான வன்முறையைக் கையாண்டனர். ஆனால், இறுதியில் ஷேர்கான் வெற்றி பெற்றார். வெற்றியின் உற்சாகத்தால், மவுண்ட் அபுவை வென்று, சித்தூரை நோக்கி முன்னேறினார். சாதாரண வாழ்க்கையிலிருந்து துவங்கிய ஷேர்கான் பல துறைகளிலும் சிறப்பான அனுபவம் பெற்றிருந்தார். இவரின் கீழிருந்த ராஜ்ஜியம் சூர் பேரரசு என்று அழைக்கப்பட்டது. இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த அறிவாளியாக இருந்தார். கீன் என்பவரின் கருத்து ஷேர்கானை மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது. பின்னால் வந்த மொகலாய மன் னர்கள் இவரின் நிர்வாக வழிமுறையையே தொடர்ந்தனர். ஆக்ராவிலிருந்து புர்ஹான்பூர், ஆக்ராவிலிருந்து பைனாஹ் வழியாக மார்வார், லாஹூரிலிரு ந்து முல்தான் பகுதிகளுக்கு சாலைகளை அமைத்திருந்தார். சாலைகளின் வழியில் மசூதிகளைக்கட்டி, பூந்தோட்டங்களை அமைத்து அதிகாரிகளின் மேற்பார்வையில் நீர்விட்டு பாதுகாக்கச் செய்தார்.  

மொகலாய வரலாறு 10

                       இந்துக்களையும், குறிப்பாக பிராமணர்களையும் பணியில் அமர்த்தி இருந்ததாக கனுங்கோ என்பவர் கூறுகிறார். தபால்துறையில் குதிரைகளை யும் மற்ற கால்நடைகளையும் பட்டுவாடாக்கள் செய்ய அமைத்தார். மக்தப், மதரஸாக்களை அமைத்து இலவச உணவு, கல்வி கிடைக்கச் செய்தார். பஞ்சா பில் ரோடாஸ் கோட்டை, ஆக்ராவின் அரண்மனைக் கோட்டை ஆகியவற்றை கட்டினார். இந்திய வரலாற்றில் தனி இடம் பிடித்த ஷேர்கான் ஹுமாயுனுக்கு எதிராக திறமையாக போர்திட்டம் வகுத்திருந்தார். இராணுவத்தில் 150,000 குதி ரை வீரர்கள், 250,000 போர் வீரர்கள், 5,000 யானைப்படைகள் என்று பிரம்மாண்ட மாக்கினார். இராணுவத்தில் ஊழல்களுக்கு இடம் தராமல் தன்நேரடி கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். நிலங்களின் பரப்பளவுக் கேற்றவாறு வருவாய் செலுத்தும் வழிமுறையைக் கொண்டு வந்தார். சாதாரண குடிமகனுக்கும் நியாயமான நீதி கிடைக்கச் செய்தார். மதிப்புக்கேற்றவாறு தங்கம், செம்பு, வெள்ளியில் உருக்கிய நாணயத்தை வெளியிட்டார். தன் வாழ்நாளிலேயே தனக்கும், தன் தந்தை ஹசன் கான் சூரிக்கும் நினைவு கோபுரங்களைக் கட்டி னார். இவர் மகன் இஸ்லாமுக்கும் நினைவுகோபுரம் கட்டியபோது, பாதியிலே யே ஆட்சியை இழந்தார். குழந்தைப்பருவத்திலிருந்து மாற்றாந்தாய்களினால் வேதனையைச் சுமந்து, பின் சமூக, வருவாய் துறையில் சிறப்பான பயிற்சி பெற்று கவர்னராய் மாறி, பலமான மொகலாய, ராஜபுத்திரர்களை வென்று மன் னனாகவே ஆகிப்போன ஷேர்கான் 1545 மே மாதம் 22 ல் வெடிமருந்தை  கையா ளும்போது தவறுதலாக வெடித்து இறந்துபோனார். இவருக்குப் பிறகு, இளைய மகன் ஜலால்கான், சலீம்ஷா என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார். இவர் தனக்கெ திராக இருந்த அமீர்களை சிறையிலிட்டும், கொன்றும் கடுமையாக நடந்து கொண்டார். ஒருமுறை அஸீம் ஹுமாயுன் என்ற பஞ்சாபின் கவர்னரை தன் னை வந்து சந்திக்கும்படி கூறினார். அஸீம் ஏதோ காரணத்தால் தன் உதவியா ளரை அனுப்பினார். இதை அவமானமாகக் கருதிய சலீம் ஷா அஸீமைக் கொன்றுவிட உத்தரவிட்டார். இதை அறிந்த அஸீம் புரட்சியில் ஈடுபட அம்பா லா என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டு, காஷ்மீருக்கு தப்பி ஓடினார். அங்கே ஒரு பழங்குடி மனிதனால் அஸீம் சுடப்பட்டு இறந்து போனார். எட்டாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு சலீம்ஷா இறந்துபோனார். அடுத்து சலீம்ஷாவின் மகன் ஃபிரோஸ்ஷா ஆட்சிக்கு வந்தார் . இவர் மகன்களாலும், பேரப் பிள்ளைகளா லும் ஆட்சி ஆளும் திறமை இல்லாததாலும்,எதிரிகளை கையாள முடியாத தால் ஷேர்கானின் சூர் பேரரசு ஆட்சி குறிகிய காலத்தில் முடிவுற்றது. பல குழப்பங்களுக்கிடையில் சிலர் ஹுமாயுனை மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டினர்.
மீண்டும் ஹுமாயுன்
14,000 வீரர்களுடன் சென்று கந்தஹாரில் சகோதரர் கம்ரானை வென்று, காபூல் நோக்கி முன்னேறி  அதையும் வென்றார். இரவு நேரத் தாக்குதலில் எதேச்சையாக மிர்சா ஹிண்டால் கொல்லப்பட்டார். காபூ லை விட்டு தப்பி ஓடிய கம்ரான் சுல்தான் சலீம் ஷாவிடம் அடைக்கலம் தேடி னார். சலீம் ஷா கம்ரானை அவமரியாதை செய்ய, ககார் என்ற பகுதிக்குச் சென் றார். அதன் ஆட்சியாளரும் கம்ரானை அவமரியாதை செய்து, ஹுமாயுனிடம் ஒப்படைத்தார். சகோதரர்களை நல்ல விதமாக பார்த்துக் கொள்ளச் சொன்ன தந்தை பாபரின் உபதேசம் நினைவுக்கு வர, கம்ரானைக் கொல்லாமல் கண்க ளை மட்டும் பிடுங்கி இனி தமக்கெதிராக சதிகள் புரியாவண்ணம் செய்தார். கம் ரானின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மனைவியுடன் புனித மக்கா நகருக்கு அனுப்பப்பட்டு, இறுதி காலம் வரை அங்கேயே இருந்தார். அதே போல் இன் னொரு சகோதரர் மிர்சா அஸ்கரியும் பிடிக்கப்பட்டு மக்காவுக்கு அனுப்பி வைக் கப்பட்டார். தனது எதிரிகளை விலக்கிய பின் மீண்டும் ஹிந்துஸ்தான் மீது படையெடுத்தார்.
    இந்தியாவின் சில பகுதிகளிலிருந்தும் ஹுமாயுனுக்கு ஆதரவு வந்தது. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். உன்னிப்பாக இந் தியாவை கவனித்து வந்த ஹுமாயுன் 1555 ல் தகுந்த இராணுவ பலத்துடன் லாகூரைக் கைப்பற்றினார். அரசு கஜானாவில் பல ஊழல்களைச் செய்த சுல் தான் சிக்கந்தர் சூர் சர்ஹிந்தில் எதிர்த்து வர அவரை ஹுமாயுன் விரட்டி அடித் தார். பழைய இந்திய தலைநகரைக் கைப்பற்றிய ஹுமாயுன் ஒரு வருட காலம் ஆட்சி செய்தார். . இவர் ஆட்சி செய்த காலத்தில் விஞ்ஞானத்திலும், கலைகளிலும் ஆர்வம் காட்டினார். கவிதையிலும், ஓவியத்திலும் மிகச்சிறந்த புலமை பெற்றிருந்தார்.இவரது கவிதைகள் அர்த்தம் வாய்ந்ததாக இருந்தது. பூகோளவியலிலும் சிறந்து விளங்கினார். வானின் ஏழு கோள்களை நினை வில் கொண்டு ஏழு பெரிய மண்டபங்களுடன் கூடிய மாளிகையைக் கட்டினார். சந்திரன் என்னும் மண்டபத்தில் நீதிபதிகள், தூதர்கள், கவிஞர்கள் மற்றும் பய ணிகள் கூடுவதற்கும், செவ்வாய் மண்டபத்தில் தளபதிகள் மற்றும் இராணுவ தலைவர்களுக்காகவும், புதன் மண்டபத்தில் பொறியாளர்களுக்காகவும், சனி மற்றும் வியாழன் மண்டபங்கள் அரசு நிர்வாகங்களுக்காகவும், வெள்ளி மண்ட பத்தில் கவிஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கூடவும் நிர்மாணித்திருந் தார்.
      மிகச்சிறந்த தச்சுத்தொழிலாளிகளை தருவித்து கலைநயத்துடன் கூடிய நான்கு படகுகளைத் தயாரித்து ஜமுனா ஆற்றில் பய ணிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். படகுகளில் சிலவற்றை சிறுவணிகத் திற்கும் பயன்படுத்தினார்.  அவைகள் டெல்லி ஃபரிதாபாத்திலிருந்து ஆக்ரா வரை சென்றன. ஒரு படகில் தோட்டம் அமைத்து நகரும் தோட்டம் ஆக்கி னார். இவரின் மிகப் பிரமாண்டமான பணியாவது ஒரு படகை மூன்று தளங்க ளடங்கிய அரண்மனை ஆக்கி இருந்தார். எப்போது வேண்டுமானாலும் அந்த மரப்படகை தனிமைப்படுத்தி பிரித்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது சேர்த்துக்கொள்ளலாம். சேர்க்கும்போது இணைத்ததற்கான அடையாளமே தெரியாது. படகின் மேல்தளத்திற்கு செல்லும் படிகள் தேவைப்படாத போது மடித்து வைத்துக் கொள்ளலாம். ஹுமாயுனின் ஆட்சி அமைப்பு, அதிகாரிகள், கலைகளைப்பற்றி பக்கம் பக்கமாக குறிப்புகள் ஆதாரங்களுடன் இருக்கின்றன. தஸ்கிரத் உல் வகியதி ஹுமாயுன் என்ற நூலில் ஆசிரியர்  ஜவஹர் என்பவர் பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறார். ஹுமாயுன் நிறைய படிப்பவராக இருந்தார். இந்தியாவை விட்டு தப்பி ஓடும்போது கூட பிடித்தமான புத்தகங்க ளையும், நூலகக் காப்பாளர் லாலா பெக் (தெரிந்த பெயர்-பாஸ் பஹதூர்)        கையும் அழைத்துக்கொண்டு போனார். மதப்பற்று மிக்க முஸ்லீமாக சுன்னி பிரிவைச் சார்ந்து இருந்தார். அரசு நிர்வாகத்தையும் நான்கு பிரிவாக பிரித்து க்வாஜாஹ் அப்துல் மலிக், க்வாஜாஹ் லுத்ஃப் உல்லாஹ், க்வாஜாஹ் ஹசன் மற்றும் க்வாஜாஹ் ஜலாலுத்தீன் மிர்சா பேக் ஆகிய தகுதியான அமைச்சர்கள் வசம் கொடுத்திருந்தார். டெல்லியில் சிறந்த கல்லூரியை நிறுவினார். ஹுமா யுன் கோபுரம் என்ற அந்த கட்டிடம் இன்றும் இருக்கிறது. ஆரம்பத்தில் ஷியா பிரிவுக்கு மாறியிருந்ததாலும், அதிகமான ஷியா பிரிவினரை பதவிகளில் வைத்திருந்ததாலும் ஹுமாயுன் ஷியா பிரிவைச் சேர்ந்தவராக அதிகமானோர் கருதினர். ஆனால் இவர் ஒரு சிறந்த சுன்னிப்பிரிவு முஸ்லீமாகவே இருந்தார். அதிகாரிகளிடமும், சாதாரண சிப்பாய்களிடம் கூட நண்பர் போல் பழகக் கூடிய வராக இருந்தார். சிறந்த மகனாகவும், தந்தையாகவும், சகோதரராகவும் இருந் தார். தந்தையைப் போலவே வெகு சீக்கிரத்தில் புகழ்பெற்ற தீன் பனாஹ் என்ற நூலக கட்டிடத்திலிருந்து 1556 ல் ஜனவரி மாதம் 24ல் தவறி விழுந்து மரணம டைந்தார்.

ஞாயிறு, 28 ஜூன், 2015

மொகலாய வரலாறு 7

                                              ஒரு தருணத்தில் ராணா மயிரிழையில் உயிர் தப்பினார். அவனின் படைகள் சிறைப்பிடிக்கப்பட்டு, சிலர் கொல்லப்பட்டனர். ராஜ புத்திரர் கள் வெகுவேகமாகத் தோல்வியை நோக்கி நகர்ந்தனர். மேலும், ஹசன் கான் மேவதி, ராவல் உதை சிங் துங்கார்புர் மற்றும் சில தலைவர்களும் கொல்லப் பட்டனர். சொந்ததேசத்தில் வீரத்தின் விளைநிலங்களாக இருந்த ராஜ புத்திரர் களுக்கு இது எதிர்பாராத தோல்வியாக இருந்தது. அதேசமயம், கன் வாஹ் வெற்றி பாபரின் எதிர்கால இந்தியப் பேரரசின் உதயத்திற்கு மிகப்பெரிய வெளி ச்சத்தை ஏற்படுத்தியதாகவும், மேலும் பல பகுதிகளை வென்று இந்தியாவில் பலமான பேரரசை நிர்மாணிக்க உதவியதாகவும் பேராசிரியர் ரஷ்ப்ரூக் வில் லியம் தெரிவிக்கிறார். மிச்சமிருந்த ராஜபுத்திரர்கள் சந்தேரியின் மதிம்ராவ் என்பவரின் தலைமையில் ஒன்று கூடினார்கள். 1528 ல் மதிம்ராவை வென்று சந்தேரியைக் கைப் பற்றினார். இதன்பிறகு, ராஜபுத்திரர்களின் கடைசி நம்பிக் கையாக இருந்த ராணா சிங் மரணமடைந்தார். இதற்கிடையில், ஆப்கானிஸ் தானில் தலைதூக்கிய புரட்சியை அடக்கினார். இந்த தொடர் வெற்றிகள் பாப ரை ‘மாஸ்டர் ஆஃப் ஹிந்துஸ் தான்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுத்தந்தது.
                                                         பாபரின் பேரரசு காபூல், பஞ்சாப், பெங்கால், பீஹார், ஔத், குவாலியர் மற்றும் மேவார் அடங்கிய பெரிய பகுதியான ராஜபுதனா ஆகியவை சேர்ந்ததாக இருந்தது. வடக்கில் ஹிமாலயாவிலிருந்து தெற்கில் குவாலியர் வரையிலும், மேற்கில் பஞ்சாபிலிருந்து கிழக்கில் பெங்கால் வரை யிலும், பரவி இருந்தது. தைமூரியர்கள் கலை, கலாச்சாரத்தில் மிகவும் உலகப் பிரசித்தி பெற்றவர்கள். அவர்களின் சமர்கண்ட் நகரம் மேற்கு, மத்திய ஆசியா வின் கலாச்சார மையமாக இருந்தது. மொகலாயர்கள் அந்த பாரம்பரிய அரா பிய துருக்கிய கலை நுணுக்கங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்து, இந்து முஸ்லீம் கலாச்சாரத்திற்கு வித்திட்டார்கள். பாபர் இராணுவத்திறமையும், சிறந்த போர்வீரராகவும், நிர்வாகத் திறமை வாய்ந்தவராகவும், கலை, கவிதை களை ரசிப்பவராகவும் இருந்தார். அழகான தோட்டங்களை நிர்மாணித்து அதில் விருந்துகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி ரசிப்பார். போர் வீரராக இருந்த அதேநேரத்தில் மிதமிஞ்சிய பலசாலியாகவும் இருந்தார். உடற்பயிற்சி க்காக சர்வசாதாரணமாக மலை ஏறுவார்.
                                          பாபரின் ஆட்சியில்தான் டெல்லியிலிருந்து காபூல் வரை கிரேட் டிரங்க் ரோடு என்னும் பரந்தசாலை சீரமைக்கப்பட்டது. மிகக்குறிகிய காலத்தில் ஆக்ராவில் தோட்டங்கள், கட்டிடங்கள், சாலைகள், கிணறுகள், மர ங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் கட்டி னார். இவரின் கவிதைத்தொகுப்பு பாபர் நாமா என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து, அக்பரின் காலத்தில் பெர் ஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. விரைவில் ஆப்கானிஸ்தான் மற் றும் இந்தியாவின் மற்ற பகுதிகளையும் வென்றார். தன் ஆட்சியின் கீழிருந்த பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை அறிபவராக இருந் தார். பொதுப்பணித்துறையை அறிமுகப்படுத்தி பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டினார். பாபர் இன்னும் கூட இந்தியாவின் பெரும் பகுதிகளை வெல்லக்கூடி யவர்தான். பாபர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் தான் ஒரு மிகச் சிறந்த நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதை நிரூபித்திருப்பார் என்று பரஷ்ப் ரூக் வில்லியம் ஆணித்தரமாகக் கூறுகிறார்
                                                       இதற்கு ஆதாரமாக பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்த பாதுகாக்கப்பட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டுகிறார். அதன் விவரமானது : (நான் அப்படியே மொழி பெயர்த்திருக்கி றேன்)
இறைவன் புகழுக்குறியவன்.
                                    ஸாஹிருத்தீன் முஹம்மது பாபர் பாதுஷாவின் ரகசிய மர ணசாசனமான இது இளவரசர் நசீருத்தீன் முஹம்மது ஹுமாயுனுக்கு, இறை வன் அவர் ஆயுளை நீட்டிக்கச் செய்யட்டும்.  
பேரரசின் ஸ்திரத்தன்மைக்காக எழுதப்படுவது.
                                               ஓ என் மகனே ஹிந்துஸ்தான் என்ற இந்த பிரதேசம் பல மதக்கோட்பாடுகளை கொண்டது. நேர்மையானவனும், புகழுக்குரியவனும், உயர்ந்தோனுமாகிய இறைவன் இந்த பிரதேசத்தை ஆளும் அதிகாரத்தை நம க்கு தந்திருக்கிறான். நமது இதயம் தூய்மையாக இருந்து  எல்லா மதத்தவர் களின் மீதும் நம்பிக்கை வைத்து நியாயமான நீதி அனைவருக்கும் கிடைத்திட வேண்டும், குறிப்பாக பசுவை பலி இடுவதிலிருந்து, விலகி நில் அப்போதுதான் இந்த மக்களின் இதயங்களை வெல்லமுடியும். கோயில்களையும், மடங்களை யும் சேதப்படுத்தாதே. மக்களுக்கு பயனுள்ள தீர்ப்பை வழங்கு, திருப்பி மக்கள் பயனளிப்பார்கள். இஸ்லாமின் முன்னேற்றம் அன்பெனும் ஆயுதத்தால் ஏற்பட வேண்டுமே தவிர, கொடுமை எனும் ஆயுதத்தால் ஏற்படக்கூடாது. ஷியா மற் றும்  சுன்னி பிரிவுகளில் இருக்கும் வேறு பாட்டைத் தவிர்த்துவிடு, அவைகள் இஸ்லாமின் பலவீனங்கள். அதை மக்களிடமே விட்டுவிடு. அவர்கள் தண்ணீர், காற்று, தீ, மண் போன்றவற்றி லிருந்து மனித உடலின் வியாதிக்கு எது பாதுகா ப்பென்று கருதுகிறார்களோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஹஸ்ரத் தைமூர் சாஹிப் குர்தினியின் போதனைகளை நினைவில் வைத்துக்கொள். அதனால், அரசாங்க விவகாரங்களில் முதிர்ச்சி பெறுவாய்.
  1 ஜமாதி உல் அவ்வல் 935 ஹிஜ்ரி 11, ஜனவரி 1529.
                                              துருக்கிய, மங்கோலிய இரத்தப்பரம்பரையில் வந்த ஒரு மன்னன் சம்பந்தமில்லாத பலதரப்பட்ட மதங்களைச்சார்ந்த மக்களை வேறொ ரு நாட்டில் ஆளப்போகும் தன் மகனுக்கு கூறிய அறிவுரையைப் பாருங்கள். பெர்ஷிய மொழியில் உள்ள இதன் மூல ஆவணம் போபாலில் ஹமிதா நூலக த்திலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் போபாலைச் சேர்ந்த நவாப்சாஹிப் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இதை என்.சி. மெஹ்தா என்பவர் அல ஹாபாத்தில் வெளியிட்டார்.            
                                                   மெய்விர்ஸ் என்பவரின் சுயசரிதத்தில் பாபரைப் பற்றி பெருவாரியான தகவல்களைத் தந்திருக்கிறார். அதில் பாபருக்கு கலையின் மீதான ஈடுபாட்டை தெளிவாக வெளியிட்டிருக்கிறார். தன் அரண்மனையில் தினசரி 680 கல்வெட்டுப் பணியாளர்களையும், ஆக்ரா, சிக்ரி, பைனா, தோல்பூர், குவாலியர் மற்றும் காயில் போன்ற இடங்களுக்கு 1491 கல்வெட்டுப் பணியாள ர்களையும் வேலைக்கு அமர்த்தி கட்டிடப்பணிகளை நிர்வகிப்பாராம். பானிபட் டில் காபுல்பாக் என்ற இடத்திலுள்ள கிரேட் மசூதியும், சம்பலில் உள்ள ஜாமியா மசூதியும் அப்படிக் கட்டப்பட்டவைதானாம். பாபர் பிறப்பிலேயே கவிஞராக இருந்திருக்கிறார். இவரின் கவிதைத் தொகுப்புகளான துஸ்க் இ பாபரியைப் பற்றி அபுல் ஃபஸ்ல் என்பவர் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார்.
                                               முபின் என்றழைக்கப்பட்ட இவரின் பெர்ஷிய காதலைப் பற்றிய நூல் அந்தக்காலத்தில் மிகவும் புகழப்பட்டது. யாப்பிலக்கணத்தைப் பற்றி எழுதிய முஃபஸ்ஸிலும், தரிதில் இ ராஷிதி போன்ற நூல்களும் எழுதி யுள்ளார். சித்திரங்களிலும் மிகவும் ஈடுபாடுள்ளவராக இருந்திருக்கிறார். தனது தைமூரிய மூதாதையர்களின் நூலகங் களிலிருந்து அற்புதமான சித்திரங் களை டெல்லிக்கு கொண்டு வந்திருக்கிறார். இடையில் நாதிர்ஷா என்பவரின் படையெடுப்பால் பெர்ஷியாவுக்கு கொள்ளையடித்துச் செல்லப்பட்டது. இசை யிலும், தோட்டக்கலையிலும் ஆர்வமுள்ளவராக இருந்திருக்கிறார். பாக் இ வஃபா, பாக் இ கிலன் என்ற அற்புதமான தோட்டங்களை காபூலுக்கு அருகில் அமைத்திருந்தார். ராம் பாக், ஜொஹ்ரா பாக் தோட்டங்களையும் ஆக்ராவில் அமைத்திருந்தார். 1530 ல் கடுமையான கோடையில் மகன் ஹுமாயுன் மோச மான நோயில் விழுந்தார். தன் மகனின் நோயின் காரணமாக பாபர் மிகவும் வருத்தப்பட்டார். தன்னிடமிருந்த விலையுயர்ந்த சரித்திரப்புகழ் வாய்ந்த “கோஹிநூர்” வைரத்தைக்கூட தன் மகனுக்கு ஈடாகத்தருவதாக நண்பர்களி டம் கூறினார். பிறிதொரு முறை தன் உயிரைக்கூடத் தருவதாகக் கூறுகிறார். இவருக்குப்பிறகு, இவர் மகன் ஹுமாயுன் இந்தியாவின் பேரரசர் ஆனார். ஆனால், தனது சிறுவயதிலிருந்து பெரும் போராட்டத்துடன் வாழ்க்கையை துவங்கிய பாபர் வெற்றிகள் பெற்று ஒரு பேரரசை நிறுவிய வேகத்திலேயே கோக்ரா போருக்குப்பிறகு, ஓராண்டுகழித்து, 1530 டிசம்பர் 26 ல் ஆக்ராவில் மரணமடைந்தார். பாபருக்குப்பின் அவர் மகன் ஹுமாயுன் மொகலாயப் பேரர சின் மன்னர் ஆனார்.              

மொகலாய வரலாறு 6

                                         ஓமர் ஷெய்க் மிர்சாவுக்கு பாபர் தான் மூத்த பிள்ளை. இவர் தாயாரின் பெயர் கூத்லுக் நிகார் கானும். இரண்டு வயது இளையவராக ஜஹா ங்கீர் மிர்சா என்று ஒரு சகோதரர். இவரின் தாயார் பாரம்பரியமிக்க மொகல் துமான் என்ற பரம்பரையைச் சேர்ந்த ஃபாத்திமா சுல்தான் ஆவார். மூன்றாவது சகோதரர் நாசிர் மிர்சா இவரின் தாயார் அந்திஜான் நாட்டைச் சேர்ந்த உமெய்த் ஆவார். பாபரின் தாயாருக்குப் பிறந்த கான்ஸாதே பேகம் என்ற சகோதரி ஒரு வர் இருந்தார். உமெய்த் என்னும் தாயாருக்கு பிறந்த மெஹர்பானு பேகம், ஷெஹெர்பானு பேகம் என்று மேலும் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அகா சுல்தான் என்னும் அதிகாரமில்லாத தாயார் மூலம் யாத்கார் சுல்தான் என்ற சகோதரியும், சுல்தான் மக்தூம் பேகம் என்ற தாயாருக்குப் பிறந்த ருக் கையா சுல்தான் அல்லது கரகூஸ் பேகம் என்ற சகோதரியும் இருந்தார்கள். பாபரின் தாயார் கூட்லுக் நிகார் கானும் மகனுடன் பல போர்களில் உடன் சென் றார். பாபர் காபூலை வென்ற ஆறு மாதங்களில் தாயார் இறந்து போனார்.  
                                                      இவரின் உறவுக்காரர்கள் இவரைப் பதவியை விட்டு விரட்டி, இவரின் ராஜ்ஜியத்தை திருடிக்கொண்டார்கள். இவர் மீது கருணை கொண்ட சில மக்களும், சில நண்பர்களும் இவருக்கு உணவளித்து தங்க இடம் கொடுத்து ஆதரித்தனர். மூன்று முறை போரிட்டு வென்று சில மாதங்களே சமர்கண்டை வைத்திருந்தார். பின்னர் ஏழு மாத கடும் சிரமத்திற்குப்பின் பாபர் சமர்கண்டை நகரைக் கைப்பற்றினார். உடன் கடுமையான நோயில் விழுந் தார். நோய் வாய்பட்டிருந்த இந்த தருணத்தைப் பயன்படுத்தி, இவரின் பேரா சைப்பிடித்த மந்திரி ஒருவன் பாபர் இறந்துவிட்டதாகப் புரளி கிளப்பி ஃபர்கா னாவை  கைப்பற்ற சமர்கண்டிலிருந்து படையுடன் சென்றான். அவன் கிளம் பியவுடன் அவனின் உறவினன் அலி என்பவன் 1498 ல் சமர்கண்டை அபகரித் துக் கொண்டான். பின் 1499 ல் ஃபர்கானாவையும் கைப்பற்றிக் கொண்டான். ஆனால், உஸ்பெஸ்கிஸ்தான் அவனை அமைதியாக ஆட்சி செய்ய விடவில் லை. அவன் 1501 ல் கடுமையான போரில் தோற்கடிக்கப்பட்டு உயிர் தப்பி ஃபர் கானாவையும், சமர்கண்டையும் இழந்து ஓடினான்.
                                                    நோயிலிருந்து மீண்டு வந்த பாபர் இதன்பிறகு  1502 ல் இந்துகுஷ் பகுதியில் காபூலைக் கைப்பற்ற முயற்சி மேற் கொண்டார். இவரின் உறவினர்கள் ஆண்ட காபூலை இவர்களின் வம்சாவழியில் வரும் ஒரு இளவ ரசன் மட்டுமே ஆளமுடியும் என்று கேள்விப்பட்டார். 1504 ல் கடும் போராட்டத் திற்கு  பின் காபூலை வென்றெடுத்தார். தங்கள் மூதாதையர்களின் பாரம்பரிய முறைப்படி காபூலில் தோட்டம் அரண்மனை அமைத்து ஆட்சி புரியத் தொடங் கினார். மேற்கில் முதலாம் இஸ்மாயில் என்ற மன்னரின் தலைமையில் சக்தி வாய்ந்த பெர்ஷிய பேரரசும், வடக்கில் ஷைபானிகான் தலைமையில் முரட் டுத் தனமான உஸ்பெஸ்கிஸ்தான் அரசும் இருந்தது. இந்த இருஅரசுகளைத் தவிர்த்தே பாபர் இந்தியாவின் மீது வெற்றி கொள்ள விருப்பம் கொண்டார். அதைத் தொடர்ந்து கந்தஹார், ஹிராத், பதக் ஷான் ஆகிய நகரங்களையும் வென்றார். 1513 ல் பெர்ஷியாவின் ஷாவுடன் இணைந்து போகரா மற்றும் சமர்கண்டை மீண்டும் வென்றார். இவரையும் உஸ்பெஸ்கிஸ்தான் மக்கள் நிம்மதியாக ஆளவிடவில்லை. காரணம் இவர் ஷியா பிரிவு முஸ்லிம்களான அவர்களுக்கு எதிரான சுன்னி பிரிவைச் சேர்ந்தவராக இருந்தார். 24 காவது வய தில் முகச்சவரம் செய்யத் துவங்கினார். துருக்கிகள் முதன்முதலில் முகச்சவ ரம் செய்வதை சகவயது வாலிபர்களுடன் குதூகலமாக கொண்டாடுவார்கள். 1505 ஷாபான் மாதத்தில் ஹிந்துஸ்தானை வெல்லும் எண்ணத்துடன் காபூலி லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அதினாபூர் வந்தடைந்தார். பாபர் கண்ட மனிதர்கள், புல், மரங்கள், மிருகங்கள் அனைத்திலும் ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார்.
கைபரைக் கடந்து ஜாம் என்ற இடத்தில் முகாமிடு கிறார். பெஷாவரில் குர்கத்ரி என்ற இடத்திற்கு இந்துக்கள் தலைமுடி காணிக் கை செலுத்த வருவார்கள் என்று அறிகிறார்.  தங்களுக்கு ஹிந்துஸ்தானுக்கு வழிகாட்டியாக வந்த மாலிக் பு சயீத் கமரி என்பவரிடம் குர்கத்ரியைப் பற்றி விசாரித்தார். அவர் சரியான விளக்கம் சொல்லவில்லை.
                                                         கஸ்னினிலும், கோரசானிலும் தனது அதிகாரத்தை நிலை நாட்டிவிட்டு, சற்று பலத்துடன் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய இருந் தார். அப்போது டெல்லியை ஆப்கானைச் சேர்ந்த லோடிகள் ஆண்டு வந்தனர். இவர்களுக்கு முஸ்லீம் புரட்சி குழுக்களிடமிருந்தும், ராஜபுத்திர இந்து ஆட்சி யாளர்களிடமிருந்தும் மிரட்டல்கள் இருந்தன. திறமை வாய்ந்த ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி மரணித்திருந்தார். அவருக்குப்பிறகு, அவரின் முட்டாள் மகன் இப்ராஹிம் லோடி டில்லியில் பதவியிலிருந்தார். இவரின் திறமையற்ற ஆட் சியும், முரட்டுத்தனமான நடவடிக்கைகளும் இப்ராஹிம் லோடியின் உறவின ர்களுக்கு பிடிக்காமல் போனது. மேலும், அதிகாரிகளையும் தரக்குறைவாக நடத்தியதால் அவர்களும் இவர் மீது வெறுப்பாக இருந்தனர். இதனால் இப்ரா ஹிம் லோடிக்கு எதிராக இரகசிய திட்டம் தீட்டினார்கள். பெங்கால், ஜான்பூர், மால்வா, குஜராத் மற்றும் சில பிரதேசங்கள் சுதந்திரமாகிப் போயின. கிழக்கு மாநிலங்களான குத், பீஹாரில் மன்னனுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். இப்ரா ஹிம் லோடியின் உறவினர் அலாவுத்தீன் புரட்சியில் ஈடுபட்டு, ஏற்கனவே பாபரை இந்தியாவுக்கு வர ஆலோசனை கூறியிருந்தார். ஏற்கனவே நான்கு முறை இந்து ஆற்றின் கரையைக் கடந்து இந்தியா வர முயற்சித்த பாபர் ஏதே னும் ஒரு காரணத்தால் தோல்வி அடைந்து திரும்பியவர்.
                                                    1525 ல் இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கருதிய பாபர் லாஹூர் வழியாக இந்தியா வந்து தௌலத்கானுடன் போரிட்டு பஞ்சாபைக் கைப்பற்றி, டெல்லியை நோக்கி முன்னேறினார். இப்ராஹிம் லோடியும் படைகளை ஒன்று திரட்டி பாபரை ஆக்ராவில் எதிர்த்தான். 1526 ல் இரு படைகளும் நேருக்குநேர் சரித்திரப்புகழ் வாய்ந்த பானிபட் என்ற இடத்தில் சந்தித்தன. பாபர் தனது 12,000 வீரர்கள் அடங்கிய படையை திறமையாக திட்ட மிட்டு அமைத்திருந்தார். இப்ராஹிம் லோடி 100,000 வீரர்கள் அடங்கிய பிரமா ண்டமான படையுடன் வந்து போரிட்டான். பாபரின் பீரங்கி வீரர்கள் மிகச் சரி யான இடத்தில் நின்று போராடியதால், பாபர்,இப்ராஹிம் லோடியை வென்று டெல்லி மற்றும் ஆக்ராவைக் கைப்பற்றினார். 1526 ஏப்ரல் மாதம் 22 ந் தேதி வெள்ளிக்கிழமை டெல்லியின் தலைமை மசூதியின் உரை புதிய பேரரசர் பாப ரின் பெயரில் துவங்கியது. அந்த முதல் வெற்றி சாதாரணமானது அல்ல. எதிர் காலத்தில் இந்தியா என்ற பரந்ததேசத்தை ஆளப்போகும் அவர் சந்ததிக்களுக் கான முதல் வெற்றி. இந்த நிலையில் இப்ராஹிம் லோடியின் தாயார் பாபரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்தார். அது நடந்திருந்தால், இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரி மாறியிருக்கும். பாபருக்கு ஆரம்பத்தில் நிறைய எதிர் ப்பு கிளம்பியது. இவருக்கெதிராக நாடெங்கும் கலவரங்களும் நடந்தன. பாபர் தனது சாமர்த்தியமான பதவியேற்பு விழா பேச்சில் அனைத்தையும் அடக்கி னார். தன் எதிர்காலமும், மரணமும் இந்தியாவில் தான் நடக்குமென்றும், மிகச்சிறந்த ஆட்சியைத் தன்னிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கலாம் என்று உறுதிபட பேசினார்.
                                                     இவரின் இந்த பேச்சு இந்தியாவின் ராஜபுத்திரர்களை உசுப்பிவிட்டது. ராஜபுத்திரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருந்தார்கள். இந்தியாவின் ஆட்சி ஆப்கானைச் சேர்ந்த ஒருவருக்கும் பங்காகிப்போனதால், திட்டமிட்ட அனைத்து சிறு இந்து இளவரசர்களும், மேவாரின் ராஜாவும் ராணா சிங் தலைமையில் ஒன்று கூடினார்கள். இந்தியாவின் பல பகுதிகளை சிறு மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். ராஜபுத்திர வம்சத்தில் ராணா புகழ் பெற்றவ ராக இருந்தார். மேவார் ராஜா மற்றும் அஜ்மீர், சிக்ரி, ரைசின், புண்டி, சந்தர், கார் காவுன், ராம்பூரா இளவரசர்கள் ராணாவுக்கு தலை வணங்குபவர்களாக இருந் தார்கள். ராணா பாபரை சந்திப்பதற்கு முன்னாலேயே நூறு போர்களைச் சந்தி த்தவர். எண்பது வீரத்தழும்புகளை உடல் முழுதும் பெற்றிருந்தார். ஒரு கையையும், ஒரு காலையும், ஒரு கண்ணையும் போர்களில் இழந்திருந்தார். 1527 பிப்ரவரியில் ராணா முகாமிட்டிருந்த ஃபதே பூருக்கு அருகிலிருந்த சிக்ரி என்ற கிராமத்திற்கு, பாபர் ஆக்ராவிலிருந்து புறப்பட்டார். முதல் தாக்குதலி லேயே பாபரின் படையை ராஜபுத்திரர்கள் திருப்பி விரட்டினர். பாபரின் படை நட்சத்திரக் கூட்டம் போல் சிதறியது. இக்கட்டான ஒரு தருணத்தில் பாபரின் இரத்தக்குழாய் ஒன்று வெட்டுப்பட்டு, எப்போதுமே பயன் பெறாது போனது. 

மொகலாய வரலாறு 5

         ஸஹீருத்தீன் முஹம்மது என்ற பாபர்
கூ.செ.செய்யதுமுஹமது
                                                    “மெமாயர்ஸ் ஆஃப் ஜஹீர் எத் தின் முஹம்மத் பாபர்” என்று பாபரால் கைப்பட துருக்கி மொழியில் எழுதப்பட்ட மூலப் புத்தகத்தை ஜான் லெய்டென் மற்றும் வில்லியம் எர்ஸ்கீன் ஆகியோர் 1826 ல் ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கப்பட்டு, இந்தியன் சிவில் சர்வீசிலும், யூனிவர்சிடி ஆஃப் டப்ளினில் அரபிக், பெர்ஷியன் மொழி மற்றும் இந்திய வரலாற்றுப் பேராசிரிய ராக இருந்த ஸர். லூகாஸ் கிங் அவர்களால் மறுபதிப்பும் செய்யப்பட்ட புத்தகத் தின் தமிழ் மொழி மாற்றம் இந்த வரலாறு. அவர், ஜஹீருத்தீன் முஹமது பாப ரின் உடை, உணவு மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். சென்ற நாடுகள், அதன் காட்சிகள், தட்பவெப்ப நிலை, கலைநயம், மனிதர்களின் குணாதிசயம் ஆகியவற்றைப் பற்றி பாபர் விளக்கி இருப்பதை படிக்கும் போது நாம் உடன் இல்லையே என்று வருத்தம் தருவதாக லூகாஸ் கிங் புகழ்கிறார். இதன் ஆதி பெர்ஷிய மொழி மூலப்புத்த கம் 1590 ல் அப்த் உர் ரஹீம் என்பவரால் எழுதப்பட்டது. இதன் இரண்டு புத்தகங் கள் பாரீஸ் ப்ப்ளிக் லைப்ரரியிலும், ஒரு புத்தகம் தன்னிடமும், ஒரு புத்தகம் இந்திய அரசாங்கத்திடமும் (பு. எண்:2989), ஒரு புத்தகம் பிரிட்டிஷ் அருங்காட்சி யகத்திலும் இருப்பதாக லூகாஸ் கிங் கூறுகிறார். பயண்டாஹ் கான் மற்றும் முஹம்மது கூலியின் 1586 ம் வருட இதே புத்தகம் இடங்களும், பெயர்களும் மற்றும் முழுமை பெறாத நிலையில் (6588 II- 913) இந்திய அரசில் இருப்பதாக வும், 1590 ல் ஷெய்க் ஸெய்னுத்தீன் க்வாஃபி அவர்களால் எழுதப்பட்ட இதே புத்தகம் முடிக்கப்படாத நிலையில் (1999-26202) ஒன்று உள்ளதாகவும் சொல்கி றார். 1817 ல் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட புத்தகம் ஏனோ வெளியிடவில்லை.
அப்போதைய ஆசியா கண்டம் இரு பகுதிகளாக இருந்தது. சீனாவிலிருந்து சங்கிலித் தொடர் போல் மலைகள் கிழக்கிலும், கருங்கடலும், மெடிட்டரேனியன் பகுதியுடன் மேற்கிலும், வட மேற்கில் மலைப் பகுதிகளாக அஸ்ஸாம், பூடான், நேபால், ஸ்ரீநகர், திபெத் மற்றும் லடாக் பகுதிகள் இருந்தன. மேற்கிலிருந்து வடக்காக பெஷாவர் மற்றும் காபூல் இருந்தது. மேற்கிலிருந்து தென் மேற்காக சிறு சிறு மலைகளாக பிரிந்து கோரசான் பகுதியை தனியாக்கி யது. கிழக்கு காஷ்மீர் பகுதி இந்துக்கள் நிறைந்ததாக இருந்தது. மேற்கு காஷ் மீர், தார்த், திபெத்பால்டி, சிறிய திபெத், சிட்ரால் மற்றும் காஃபிர்ஸ்தான் பகுதி களில் கோவார், பஞ்சாபி, ஷினா, காஃபிர் போன்ற மொழிகள் பேசிய மக்கள் கலந்திருந்தனர்.  
                                                                   முஸ்லிம் பேரரசர் பாபர் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர், இவர் திட்டமிட்டு வெற்றிகரமாக மொகலாயப் பேரரசை இந்தியா வில் நிறுவினார். பாபரின் தந்தை பெயர் உமர் ஷெய்க் மிர்ஸா, மத்திய ஆசியப் பகுதியின் தைமூர் இனத்தைச் சேர்ந்தவர். ஃபர்கானா என்ற மாகாணத்தின் ஆட்சியாளராக இருந்தார். பாபர் தந்தை வழியாக தைமூர் இனத்தையும், தாயின் வழியாக மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கானின் பரம்பரையையும் சேர்ந்தவர். இவர் தைமூரித் மற்றும் சகாதாய்-துர்கிக் என்னும் வழிமுறையி லேயே அறிமுகப் படுத்தப்பட்டார். இவரின் வீரம், பயிற்சி மற்றும் கலாச்சாரம் பெர்ஷிய கலாச்சாரத்தை ஒத்து இருந்தது. பாபர் 1483 பிப்ரவரி மாதம் 24 ந் தேதி இன்றைய உஸ்பெஸ்கிஸ்தான் பகுதியில் அண்டிஜான் என்ற இடத்தில் பிறந் தார். இவர் சார்ந்த மங்கோலிய வம்சம் துருக்கியையும், பெர்ஷியாவையும் ஆண்டது. இவரின் பெயர் ஸஹிருத்தீன் முஹம்மது ஆகும். பாபர் என்ற இவ ரது விருப்பப்பெயர் பெர்ஷிய மொழியில் சிங்கத்தைக் குறிக்கும்.
                                                  இந்தியாவில் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய பாபர் அவர்களின் ஆரம்ப வாழ்க்கை என்னதான் மன்னனின் மகனாய் இருந்தாலும் அவ்வளவு ஆனந்தமாக இருக்கவில்லை. துரோகம், கவலை, உயிர் காக்கும் போராட்டம் என்று வயதிற்கு மீறிய சிரமத்தில் இருந்தது. 1494 ல் தனது பனிரெ ண்டாவது வயதில் தந்தைக்குப் பிறகு, ஃபர்கானா மாகாணத்தின் மன்னனாக முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தார். ஃபர்கானாவைச் சுற்றியுள்ள சிறு சிறு பகுதிகளை இவரின் இரு பிரிவு குடும்பவாரிசுகளே போட்டி பொறாமையு டன் ஆண்டார்கள். பல ஆசிய பகுதிகளை வெற்றிகரமாக ஆண்ட மன்னரான தைமூர் பேக் 1405 ல் சிர் ஆற்றின் அருகில் ஓட்ரார் நகரத்தில் இறந்து போனார். இவரின் வாரிசுகள் ஆளத்தகுதி இல்லாமல் ஒற்றுமையின்றி இருந்தார்கள். இறக்கும் தருவாயில் மகன்களையும், மற்ற உறவினர்களையும் சிறு பகுதி யாக பிரதேசங்களைப் பிரித்து கொடுத்து ஆளச் செய்தார். இவரது பேரன் கலீல் என்பவர் பாட்டனாரின் தலைநகரான சமர்கண்டிலிருந்து ஆட்சி செய்தார். இவ ரை சுற்றி இருந்தவர்களே கலீலை கொன்று விடுகிறார்கள்.    
                                                     இதைக் கேள்விப்பட்ட கலீலின் மாமனும், தைமூரின் கடைசி மகனுமான ஷாருக் 1415 ல் தான் ஆண்டு கொண்டிருந்த கோரசான் பகுதியிலிருந்து வெகுண்டு வந்து  கலகக்காரர்களை அடக்கி சமர்கண்டை கைப்பற்றினார். 1446 ல் இறக்கும் வரை ஆண்டு வந்தார். அவருக்குப் பிறகு அவ ரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை ஆங்காங்கிருந்த அவர் மகன்களும் கவர்னர்களும் பங்கு போட்டு ஆண்டார்கள். இவரின் பகுதி மூத்த மகனான உலுக் பேக் வசம் வந்தது. உலுக் பேக் திறமையுடன் சமர்கண்டை ஆண்டார். பதவிக்கு வந்தவுடன் கோரசானை அபகரித்த சகோதர் மகன் அலா உத் தௌ லத் மீது முர்காப் ஆற்றின் அருகே போரிட்டு விரட்டினார். அலா உத் தௌலத் தன் சகோதரன் பாபர் மிர்சாவிடம் ஓடி அடைக்கலம் அடைந்தான். பாபர் மிர்சா தனது பாட்டனார் ஷாருக் காலத்திலிருந்து கஸ்பியனின் தென் கிழக்கில் உள்ள ஜோர்ஜான் (அல்லது கோர்கான்) என்ற பகுதியை ஆண்டு வந்தான். தன் சகோதரன் அலா உத் தௌலதுக்கு உதவும் வண்ணம் பாபர் மிர்சா உலுக் பேக் மீது படையெடுத்து வந்தான். ஆனால் படுதோல்வி அடைந்து தன் சொந்த தலைநகரமான அஸ்தராபாத்தையும் இழந்தான். இரு சகோதரர்களும் உயிர் பிழைத்து ஈராக்கை ஆண்ட மற்றொரு சகோதரன் முஹம்மது மிர்சாவிடம் ஓடினார்கள். உலுக் பேக் திரும்பிய பிறகு தான் பாபர் மிர்சா கோரசான் வந்தார். இதற்கிடையே உலுக் பேக்கின் சொந்த மகன் அப்துல் லதீஃப் என்பவர் கலகம் செய்து பால்க் பகுதியைப் பிடித்துக் கொண்டார். உலுக் பேக்கின் துரதிஷ்டம் முஹம்மது மிர்சாவின் மகன் அபு சயீத் மிர்சா, தைமூரின் இன்னொரு பேர ரும், பாபரின் பாட்டனாருமான மிரான் ஷா என்பவரும் எதிர்த்தார்கள். முஹம் மது மிர்சாவின் மகன் அபு சயீதை, உலுக் பேக் தான் ஆதரவும், பாதுகாப்பும் தந்து படிக்க வைத்து ஆளாக்கினார். இவர்களை எதிர்க்கும் போது, சொந்த மகன் அப்துல் லதீஃபால் தந்திரமாக உலுக் பேக் கொல்லப்பட்டார். பின் அப்துல் லதீஃப் அபு சயீத் மிர்சாவை வென்று சிறை பிடித்து சமர்கண்டைக் கைப்பற்றி னார்.
   அபு சயீத் மிர்சா சிறையிலிருந்து தப்பித்து பொகாராவில் தஞ்சமடைந்தார். அப்போது அப்துல் லதீஃப் சொந்த இராணுவத்தினரின் கலகத் தால் கொல்லப்பட்டு, ஷாருக்கின் இரண்டாவது மகன் இபுராஹீமின் மகன் அப் துல்லாஹ் ஆட்சிக்கு வந்ததாக அறிகிறார். இதை ஒரு சந்தர்ப்பமாகக் கருதிய அபு சயீத் மிர்சா தானிருந்த பால்கிலேயே கலகம் செய்து பால்கைக் கைப்பற்றி அங்கிருந்து சமர்கண்டின் மீது படையெடுத்தார். ஆனால் தோல்வியுற்று துர்கி ஸ்தான் (இது தாஷ்கண்டின் கீழுள்ள பகுதி) ஓடினார். அடுத்த ஆண்டு பாலை வன உஸ்பெக்குகளை துணைக்கு அழைத்துக் கொண்டு, சமர்கண்டில் அப்துல் லாஹ்வை எதிர்த்து கடுமையாகப் போரிட்டு மொத்த மாவெரல்நெஹாரையும் வென்றார். பாபர் மிர்சா தந்திரமாக அலா உத் தௌலத்தை கைது செய்து தீக்கம் பியினால் கண்களை குருடாக்க உத்தரவிடுகிறார். எதேச்சையாகவோ அல் லது தண்டிப்பவனின் கருணையாலோ அலா உத் தௌலத்தின் கண் குருடாக வில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அலா உத் தௌலத் தப்பித்து விடுகிறார். கோரசா னில் 1457 ல் அளவுக்கதிகமான மது அருந்தியதால் நோய்வாய்பட்டு பாபர் மிர்சா மரணமடைந்தார். இப்போது அபு சயீத் மிர்சா மீண்டும் கோரசானை வெல்ல முயன்றார். இதற்கிடையே துருக்கிய தலைவர் ஜிஹான் ஷா என்பவ ரும் கோரசானில் நுழைய இருவருவரும் சமாதானத்திற்கு முன் வந்தனர்.
         செம்னான் நகரை எல்லையாகக் கொண்டு அப்புறம், இப்புறம் என்று பிரித்துக் கொண்டார்கள். இதுவரை சொன்னதுக்கே நீங்கள் தளர்ந்திருப்பீர்களோ என்று அச்சப்படுகிறேன். ஸஹீருத்தீன் பாபர் வெறுமனே இந்தியாவை ஆண்டவரில்லை. சாம்ராஜ்ஜியம் அமைத்தவர். அதனால் பாரம் பரிய பிண்னணியும், சூழ்நிலையும் மிக முக்கியம் என்பதாலேயே விளக்க வேண்டிய அவசியமாகிறது. இன்னும் நிறைய இருந்தாலும் நேரடியாக பாபரி ன் வருகைக்குள் செல்வோம்.
சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் பாபரின் உறவினர்கள் கௌரவத்திற்காகவும், அடாவடித்தனத்திற்காகவும் ஆட்சி செய்து வந்தனர். சமர்கண்டில் சுல்தான் அஹ்மது மிர்சாவும், டாஷ்கண்டில் சுல்தான் மஹ்மூத் கானும் ஆட்சி செய்து கொண்டிருந்த சூழ்நிலையில் தந்தை சுல்தான் ஒமர் ஷெய்க் மிர்சாவின் மரணத்திற்கு ஸஹீருத்தீன் முஹம்மது என்ற பாபர் ஃபர் கானாவில் ஆட்சிக்கு வந்தார். முஹர்ரம் 6 ல் ஃபிப்ரவரி 14 1483ல் பாபர் பிறந் தார். ஐந்து வயது ஆனபோது சமர்கண்டில் சுல்தான் அஹ்மத் மிர்சாவின் மகள் இளவரசி ஆயிஷா சுல்தான் பேகமுடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட் டது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக சொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வாஸ்கோடா காமா இந்தியாவில் கால் பதித்ததற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபர் ஃபர்கானாவில் ஆட்சிக்கு வந்தார். ஃபர்கா னாவின் கிழக்கில் காஷ்கரும், மேற்கில் சமர்கண்டும், தெற்கில் மலைகளைத் தொடர்ந்து பதக் ஷானும், வடக்கில் புராதன நகரங்களான அல்மாலி(G)க் (ஆப் பிள் மரங்கள் வளரும் இடம்), அல்மாட்டு, யாங்கி ஆகியவை இருந்தன. இந் நகரங்கள் சரித்திர ஆய்வாளர்களால் ஓட்ரார் என்றும் சமீபகாலங்களில் உஸ் பெக் என்றும் சொல்லப்படுகிறது. ஃபர்கானா நாடு சிறியதென்றாலும், தானியங் களும், பழவகைகளும் விளைந்தன. சமர்கண்டின் புறம் வெளிநாட்டு எதிரிகள் நுழைவதற்கு ஏதுவாய் இருந்தது.

சனி, 27 ஜூன், 2015

மொகலாய வரலாறு 4

                                                      தனது சந்ததியில் 72 பேர் இந்த பூமியை ஆள்வார்கள் என்று கனவு காண்கிறார். தைமூரின் தந்தை திராகாய் அடிக்கடி ஷெய்க் ஷம் ஸுத்தீன் என்ற ஞானியை சந்திப்பவராக இருந்தார். ஷெய்க் தைமூரின் பரம் பரை உலகின் ஏழு பகுதிகளை ஆளும் என்றார். பிற்காலத்தில் அதுதான் நடந் தது. ஒருமுறை அவர் திருக்குரானின் 67 வது அத்தியாயமான அல் முல்க் ஓதிக்கொண்டிருக்கும் திராகாய் சென்றதால், நிறுத்திவிட்டு உனது பிள்ளை க்கு “தைமூர்” என்று பெயர் சூட்டு என்று கேட்டுக் கொண்டார். ஆங்கிலேயர் களுக்கு ‘டாமெர்லேன்’ ஆகும். தைமூருக்கு ஏழு வயதான போது அவர் தந்தை திராகாய் முல்லா அலி பேக் என்பவரிடம் கல்வி கற்க சேர்த்தார். அவரிடம் தைமூர் அரபு மொழி பயின்றார். இவருக்கு எட்டு வயதான போது தாயார் மற்றும் சகோதரர்களுடன் எதிரி பிரிவினரால் சிறை பிடிக்கப்பட்டு சமர்கண்டு க்கு கொண்டு செல்லப்பட்டார். தனது ஒன்பதாவது வயதிலிருந்து தொழுகை யை கடை பிடித்து அத்தியாயம் 91 ஐ ஓதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். வகுப்பில் அவர் தலைமை மாணவன் போல் கர்வத்துடன் செயல்பட்டார். ஒருமுறை மாணவர்களிடம் அமர்வதில் சிறப்பான முறை எது கேள்வி எழ, தைமூர் அவர்கள் முட்டுக்கால் மடக்கி அமர்வதே சிறந்தது என்று கூறி அனை வரின் பாராட்டைப் பெறுகிறார். மாணவர்களை இரு பிரிவாகப் பிரித்து படை போல் ஆக்கி சண்டை செய்ய விட்டு தான் நீதிபதி போல் பார்வையிடும் விளை யாட்டை அடிக்கடி விளையாடுவார். எந்த அணியாவது தோற்பது போல் இருந் தால் தான் களத்தில் இறங்கி சண்டையிட்டு அந்த அணியை வெற்றி பெறச் செய்வார். பனிரெண்டு வயது தான் சிறப்பான நிலையில் இருப்பதாக உணர்ந் தார். ஒன்பது வயதிலிருந்து எழுபத்தோரு வயது வரை அல்லாஹ் அவருக்கு நாடியதெல்லாம் வழங்கினான். எப்போதும் நண்பர்கள் சூழ தான் இருப்பார். ஒவ்வொரு முறை புதிய உடையை அணிந்து கழட்டினால், தன் நண்பர்களுக் குக் கொடுத்துவிடுவார். (அப்போதைய நாகரீகம் குறைந்த ஆப்கானிஸ்தானி யர்கள் ஒருமுறை உடை உடுத்தினால் அது கிழியும் வரை கழட்ட மாட்டார் கள்) தைமூருக்கு 16 வயது ஆகும் போது, தன் பழங்குடியினரிடம் அவர் தந்தை இனிமேல் ஜக்தாய் மற்றும் பெர்லாஸ் குடும்பத்தின் தளபதி தன் மகன் தான் என்று அறிமுகம் செய்தார். என்னதான் தங்க கூஜாவானாலும் அதே பழைய பூரான்களும், பாம்புகளும் தானே அதனுள்ளே என்பது போல் உணர்ந்தாலும், அவர்களிடையே தைமூர் தங்கள் குடும்ப பாரம்பரியத்தை நிலை நாட்டினார். இவரின் தந்தை மூலம் தைமூரியர்கள் துமுனெஹ் கான் என்பவரின் கீழ் வந்த வாரிசுகள் என்றும், துமுனெஹ் கான், நூஹ்(அலை) அவர்களின் வரிசையில் ஜாஃபெட் என்பவரின் கீழ் வந்தவரென்றும் அறிந்து கொண்டார்.
                                                          இவர்களின் பழங்குடி பரம்பரையில் இஸ்லாமைத் தழுவியர்கள் தைமூர் வம்சம் தான். ஜக்தாய் கானின்(சக்குதாய்) மருமகன் கெராச்சார் நூயன் என்பவர், தான் மறுமையில் ஒரு வாழ்வு இருப்பதை நம்பு வதாகவும், இதையே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்வதால் தான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாகவும் சொல்லி இருந்தார். தன் தந்தைக்குப் பிறகு தைமூர் அவர் பணியைத் தொடர்ந்தார். தைமூர்  தன் பழங்குடியினரின் கால்நடைகளை பிரித்து நூறு எண்ணிக்கை கொண்டப் பிரிவுக்கு ஒரு பாது காப்பாளரை நியமித்தார். அதன் வருவாய் பால், வெண்ணெய், தோல் முதலிய வற்றிலிருந்து ஈட்டப்பட்டது. அதுபோல் கால்நடைகளில் ஆண்,பெண் என பிரித்து கூடும் காலங்களை முறைப்படுத்தி வருவாய் வரச் செய்தார்.
        பதினெட்டு வயதாகும் போது தைமூர் குதிரையேற்றம், வேட்டையாடுவதில் சிறந்து விளங்கினார். இடையில் நான்கு மாதங்கள் கடு மையான நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடினார். இந்த கால கட்டத்தில் குரான் ஓதுவதிலும், மதப்பூர்வமான பணிகளிலும், ஓய்வு நேரத் தில் சதுரங்கம் விளையாடுவதிலும் ஈடுபட்டார். சிறப்பான வகையில் போர் பயிற்சிகளையும் பெற்றார். தனது தகப்பனார் திராய் கானிடமிருந்து மூதா தையர் யாஃபித் அக்லானின் வரலாறுகளைத் தெரிந்து கொண்டார். யாஃபித் அக்லான் பொதுவாக அபு அல் அத்ராக் என்றும் அறியப்பட்டார். ஜாபெட்டின் மகனான யாஃபித் அக்லான் துருக்கிகளின் தந்தை என போற்றப்பட்டவர். ஜாஃபெட்டின் ஐந்தாவது மகனான அல்ஜிஹ் கானுக்கு இரட்டை ஆண் குழந் தைகள் பிறந்தன. அதில் ஒரு மகன் வரிசை டடார்களாகவும், இன்னொரு மகன் வரிசை மொகலாயர்களாகவும் பிரிந்தனர். டடாரின் எட்டு குழந்தைகள் எட்டு பழங்குடியினராகவும், மொகல்களின் ஒன்பது குழந்தைகள் ஒன்பது பழங்குடியினராகவும் பிரிந்து வாழ்ந்தார்கள். எப்போதுமே டடார்களுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே நட்பில்லாமல் துர்கிஸ்தான் பகுதியில் அடிக் கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். இஸ்லாமில் இணைந்த துமெனாஹ் கான் துர்கிஸ்தானை ஆண்ட போது, இரட்டை குழந்தைகளாக கஜூலி என்பவ ரும், குபெல் கானும்(இவரை காபுல் கான் என்றும் அழைப்பர்) பிறந்தார்கள். கஜுலி இரு பிரிவினரையும் அழைத்து, பெரிய விருந்து வைத்து தங்கள் ‘கான்’ பரம்பரை உலகை ஆளும் தகுதி உள்ளவர்கள் நம்மிடையே பகை இருக்கக் கூடாது. இனிமேல் ஒற்றுமையாக இருப்போம் என்று கூறி, குபெல் கானின் சந்ததி தளபதியாகவும், கஜூலி சந்ததியினர் பிரதம மந்திரியாகவும் இருந்து கொள்ளலாம் என்று கூறி அதை ஒரு உலோகத்தட்டில் பதிவு செய்து பொக் கிஷ அறையில் பாதுகாத்தார்கள்.
    549 ல் குபெல் கானின் மகன் முங்கு பஹதூருக்கு          ( யெசுகெய் பகதூர் என்றும் அழைப்பர்), திமுஜி(திமுஜின்) என்ற மகன் பிறந்து அவர் துர்கிஸ்தானை ஆண்டார். இந்த திமுஜி தான் பிற்காலத்தில் ஜெங்கிஸ்கானாக புகழப்பட்டு மூதாதையர்கள் ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய வம்சத்தைச் சேர்ந்தவர்களை லட்சக் கணக்கில் இரக்கமின்றி கொன்றார்.                                              
                                     நான்கு நேர்மையான மந்திரிகளை தனக்கு கீழ் நியமித்தார். அதில் ஒருவர் போற்றுதலுக்குரிய கோரசானின் கவர்னர் மஹ்மூத் மற்றவர் நசீருத்தீன். அவர்கள் தைமூரிடத்திலே எந்த பொய்யும் சொல்லவில்லை. ஊழல் போன்ற செயல்களிலும் ஈடுபடவில்லை. அனடோலியாவில் பதினை ந்து மைல்களுக்கு தைமூரின் இராணுவம் அணிவகுத்து நின்ற போது, தனக்கு கீழ் இத்தனை பெரிய கூட்டமா என்று இறைவனின் கருணையை எண்ணினார். தைமூருக்கு இருபத்தியோரு வயது ஆனபோது ஷெய்க் ஸெய்னுத்தீன் அபு பக்கர் என்னும் மதகுரு தனது சால்வையைப் போர்த்தி, தலையில் தொப்பி யையும் அணிவித்து, விரலில் அழகாக செதுக்கப்பட்ட வைர மோதிரம் (ராஸ்டி வ ரூஸ்டி) ஒன்றையும் அணிவித்து, தைமூருக்கு நபிகளாரின் சந்ததிகளின் மூலமாக மிகப்பெரிய சிறந்த எதிர்காலம் என்றாவது வரும் என்று தான் உண ருவதாகச் சொன்னார். தைமூருக்கு எழுபது வயது ஆகும் போது அனடோலி யாவை வெற்றி கொண்ட பிறகு, ஷெய்க் சுத்தர்தீன் அர்திபெல்லி(குத்ப் அல் ஆரிஃபைன்) என்னும் துருக்கி ஞானி ஒருவரின் ஆசீர்வாதம் பெற சென்றார். அவர் ஆசீர்வாதம் வழங்கியதோடு, ‘சலாரன் மலையில் சில சமயம் சூடாக வும், சில சமயம் குளிர்ந்த நிலையிலும் நீர் வரும் அருவி ஒன்று இருக்கிறது. அங்கு சென்று அதிகாலைத் தொழுகையை தொழு. அங்கு உனக்குப் பின் வரும் முதல் மனிதரே உனது குருநாதர் அவரை பின் தொடர்ந்து கொண்டால் நல்ல எதிர்காலம் வரும் என்று சொல்கிறார்.
         தைமூர் அவர்களும் ஞானியின் சொல்படி சலாரன் மலை சென்று அதிகாலைத் தொழுகையைத் தொழுது முதல் மனித ருக்காகக் காத்திருக்கிறார். ஆச்சரியம் வந்த முதல் மனிதர் தைமூரின் குதிரை களைக் கழுவி பராமரிக்கும் தலைமைப் பணியாள்(மீர் அகூர்). ஷெய்க் தனக்கு ஏதோ தவறான தகவலைத் தந்து விட்டார் என்று கருதிய தைமூர் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் தொடர்ந்து அந்த இடத்திலே தொழுது வந்தார். ஆச்சரியம் அதே பணியாள் தான் தொடர்ந்து முதலில் வந்தார். தைமூர் அவரிடம், ‘நீ என் பணியாள் என்று தெரியும் எனக்கு மட்டுமே அறிவுறுத்தப்பட்ட இந்த சிறப்பான இடத்திற்கு எப்படி நீ தினமும் தொழ வருகிறாய்’ என்று கேட்டார். அந்த பணி யாள்,‘என் தொழுகையின் போது நட்சத்திரங்களுக்கெல்லாம் தலைவர் போல் ஒருவர் உடன் தொழுதார். அவர் எனது வேண்டுதல்களுக்கெல்லாம் பதில் சொன்னது போல் தோன்றியது. நான் நம்பிக்கையை வேண்டினேன். அவர் இந் நிலையில் நீ அல்லாஹ்வின் விருந்தாளி. அல்லாஹ்வின் விருந்தாளிகளான முஹம்மதின் வழித்தோன்றல்களுக்கு அது அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றார். நான் தொழுது முடித்தபோது அவர் என்னருகில் உயிருடன் இல்லை. நான் சென்று ஷெய்க் அவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னேன். எனக்கு வழங்கப்பட்ட அருளில் இருந்து சொல்கிறேன் இந்த ஆண்டு கைசரின் ஆட்சி வீழ்ந்துவிடும். அல்லாஹ் அந்த ரோமுக்கு தகுதியான வாரிசை கொடுக்க இருக்கிறான் என்றார். ஒருவேளை இதைத் தெரிவிக்கதான் நான் இங்கு வருகி றோனோ?’ என்றார்.                              
                                           தைமூர் 1378 ல் தூரனுக்கு வெளியே உள்ள உஸ்பெக்கில் முடி சூட்டிக் கொள்ள சென்றார். அரசு மதகுரு மன்னரின் நல்வாழ்வுக்காக மக்களை பிரார்தனை செய்து கொள்ள வேண்டுகிறார். அனால் அப்போது மிக வும் புகழ் பெற்ற மதகுருவான குவாஜீ அபித் என்பவர், இவருக்காக பிரார்த னை செய்யாதீர்கள். துருக்கிகள் அதிகமான முஸ்லீம்களைக் கொன்றவர்கள் என்றார். அதே இரவு குவாஜீ அபித், தைமூரிடம் வந்து தான் தவறு செய்து விட்டதாகவும் மன்னித்து விடுமாறும் வேண்டினார். (இதற்கு தைமூர் எழுதி யுள்ள காரணம். குவாஜீத் கனவில் நபி (ஸல்) நாயகத்தைக் கனவில் கண்டது போலவும், குவாஜித்தை கடிந்து கொண்டது போலவும் பத்து பக்கத்துக்கு எழுதி உள்ளார். இது இஸ்லாத்துக்கு உகந்ததாக இல்லை என்று தவிர்த்து விடுகி றேன்.) 1393 ல் தைமூர் அனடோலியாவில் படை எடுத்த போது ஓட்டோ மான்(உஸ்மானிய) சுல்தான் பயேசித் என்பவர் எதிர்த்து வந்தார். எகிப்தில் நசீருத்தீன் ஃபரஜ் என்பவர் ஆட்சியில் இருந்தார். தைமூரின் அங்காரா போர் பிரசித்தி பெற்றது. ஓட்டோமான்களை விட செல்ஜுக்குகளை நல்லவர்களாகக் கருதினார். தைமூர் படைகளை முன்னேறி செலுத்திக் கொண்டிருந்த போது ஈராக், கர்பலா மற்றும் நஜஃப் பகுதியைச் சேர்ந்த முந்நூறு வீரர்கள் சையது முஹம்மது மிஃப்தாஹ் என்பவரின் கிழ் வந்து உதவினார்கள். இது தனக்கு இறைவனிடமிருந்து வந்த உதவியாக தைமூர் கருதினார். தனது மகன் ஷாஹ் ரூக்குடன் சென்று ஃபர்ஸ் பகுதியைக் கைப்பற்றினார். கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்த அர்மேனியா மற்றும் ஜியார்ஜியாவை வென்றார். 60,000 பேர் அடிமைகளாக சிறை பிடித்தார்.
                                       பின் கோரசானிலிருந்து அதன் சுல்தான் கியாஸித்தீனிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கடிதம் வருகி றது. இதனால் மகிழ்ந்த தைமூர் ஜிஹுன் பகுதியைக் கடந்து கோரசானை வென்றார். சமர்கண்ட் நகரத்தில் இருந்த போது, அடிக்கடி இந்தியாவை வெல்ல வேண்டும் என்று உறுதி கொள்கிறார். துக்ளக் பேரரசின் மன்னர் நசீருத்தீன் முஹம்மது ஷா என்பவர் டெல்லியை ஆண்ட போது வட இந்தியா வின் மீது படையெடுத்தார். அவரை ஜாட்களும், அஹீர்களும் எதிர்த்தனர். அங்கிருந்த பிராமணர்கள் பெரும் எடையுள்ள தங்கத்தை பகரமாக தர முன் வந்தார்கள். இந்துஸ் நதியைக் கடந்து துலம்பா என்ற இடத்தைக் கைப்பற்றி னார். பின் அங்குள்ள இந்திய முஸ்லீம்களுக்கு பொருளுதவி செய்தார். பின் முல்தானை நோக்கி முன்னேறினார். சுல்தான் முஹம்மது ஷாவின் படை யில் தந்தங்களில் விஷம் தடவப்பட்டு, சங்கிலியால் பினைக்கப்பட்ட யானைப் படையும் இருந்தது. தைமூரின் வீரர்கள் யானையைக் கண்டு பயந்தார்கள். தைமூர் தன் படைகளின் முன் பெரிய குழிகளை வெட்டச் செய்தார். ஓட்டகங் களின் மீது சுமக்கும் அளவுக்கு மரங்களையும், வைக்கோலையும் ஏற்றி, யானைப்படைகள் தாக்க வரும் போது, வைக்கோலையும், மரங்களையும் எரித்து பெரிய இரும்பு கம்பிகளை அதில் சூடேற்றி யானயைத் தாக்கச் செய் தார். சூட்டைத் தாங்காத யானைகள் மதம் கொண்டு தாறுமாறாக ஓடி சொந்த படைகளையே துவம்சம் செய்தது. ஏறக்குறைய 100,000 பேர் கொல்லப்பட்டு டெல்லி வெல்லப்பட்டது. டெல்லி வெற்றி ஜெங்கிஸ்கான் மற்றும் அலெக்ஸா ண்டரின் வீரத்திற்கு ஈடாக பேசப்பட்டது. தைமூரின் படையெடுப்பால் சிதைந்த டெல்லி மீண்டு வர 100 ஆண்டுகள் ஆயிற்று. ஈராக்கின் பாக்தாத் நகரத்தை வென்றார். சிரியாவின் மீது படையெடுக்க முனைந்தபோது, தைமூரின் தளபதி கள் சிரியாவுடன் எகிப்து மற்றும் கான்ஸ்டாண்டிநோபிள் படைகளும் இணை வதால், மூன்று பெரும் படைகளுடன் போரிட நாமும் அதற்கேற்றவாறு பல மான இராணுவம் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தைமூர் அதை பொருட்படுத்தாமல் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு உறுதியுடன் எதிர்த்து சிரியாவை வென்றார். 1365 ல் தைமூருக்கு ஒரு மகன் பிறக்கிறான். அதற்கு முஹம்மது என்று பெயர் சூட்டுகிறார். பின் ஜஹாங்கீர் (உலகை வென் றவர்) என்றும் பெயரிட்டார். மதகுருமார்களும், மந்திரிகளும் வெள்ளிக் கிழமை தொழுகையில் தைமூரின் பெயரை மொழியவும், நாணயம் வெளி யிடவும் வேண்டுகிறார்கள். தைமூர் இது சரியான நேரமில்லை என்று மறுத்து விடுகிறார். ஜாட்களின் தலைவர் அமீர் கிஸர் யுசுரி தனது கூட்டத்துடன் தைமூரின் தலைமையில் செயல்பட சம்மதிக்கிறார். 30 வயதில் மொத்த துர் கிஸ்தான் (மாவ்ர் அல் நெஹார்) பகுதிகள் இவரின் கீழ் வந்தது. அருகாமை பழங்குடிகள் அனைவரும் தைமூரின் கிழ் வந்து சேர்ந்தார்கள்.
          சமர்கண்ட் பகுதியில் அமீர் தாவூத் என்பவரை கவர்னராக்கி, அம்மக்களிடம் எந்த வரியும் வசூலிக்கக்கூடாது என்று கூறுகி றார். தைமூரின் நம்பிக்கையான நால்வர் ஸிந்த் குஷ்ம், அமீர் மூஸா, அபுல் மற்றும் அபு உல் மௌலி ஆகியோர் ஒரு வேட்டையில் இருக்கும் போது அவரைக் கொல்ல முயல்கிறார்கள். அதிலிருந்து தப்பித்த தைமூர் அவர் களைக் கைது செய்து அரண்மனையில் நிறுத்துகிறார். அவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம் என்று மதகுருமார்களைக் கேட்கிறார். அவர்கள் மரணதண்டனைக் கொடுக்கலாம். ஆனால் முதல் முறை என்பதால் மன்னி த்து விடலாம் என்று கூறுகிறார்கள். தைமூர், அபு மௌலவியிடம், ‘நாயகத் தின் சந்ததியில் வந்த நீ எப்படி ஒரு முஸ்லீமைக் கொல்லலாம்? நான் உன்னை மன்னிக்கிறேன்’ என்றார். அபுலிடம்,  அவரொரு அரேபிய வம்சாவழி யினராதலால் மன்னிப்பதாகக் கூறுகிறார். அமீர் மூஸாவிடம், தாம் இருவரும் மிகவும் நெருங்கிய உறவினர்கள். தான் எந்த உறவினருக்கும் வேதனை செய்ய மாட்டேன் என்று உறுதி கொண்டிருப்பதால் அவரை மன்னிப்பதாகக் கூறினார். தைமூரின் மனைவி ‘சிராய் முல்க் கானும்’ என்பவர் கிசான் கானின் மகளும், அமீர் ஹுசைனின் விதவையும், அமீர் மூஸாவின் சகோதரரும் ஆவார். ஷிர்கான் பகுதியில் நல்ல பொறுப்பில் இருந்து கவனித்ததால் ஷிண்ட் குஷ்மையும் விடுதலை செய்தார்.
இராணுவ நடவடிக்கை மூலம் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவை வென்ற இஸ்லாமிய மன்னராக அறியப்பட்டார். எகிப்தி லும், சிரியாவிலும் மம்லுக்குகளை வென்றார். ஓட்டோமான்களை எதிர்த்தார். இவரின் தைமூர் பேரரசு தான் 16 ம் நூற்றாண்டில் வெடித் துகள்களை போரில் பயன்படுத்தினார்கள். தைமூர் தங்கள் பழங்குடி குழுக்கள் பலரை இஸ்லாமில் இணைய வைத்தார். இவர் காலத்தில் இஸ்லாமின் போர்வாள் என்று புகழப் பட்ட இவர் பல மதக்கல்வி நிலையங்களை துவங்கினார். அன்றைய உலக மக்கள் தொகையில் 5% பேர் அதாவது 17 மில்லியன் மக்கள் இவரது பல படை யெடுப்புகள் மூலம் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தைமூர், கணித வல்லுனரும், வானாராய்ச்சி நிபுணருமான “உலுக் பேக்” கின் பாட்டனாராவார். மொகலாயச் சக்கரவர்த்தி பாபருக்கு மூன்று தலைமுறைக்கு மூத்தவர். இப்ன் கல்தூன் மற்றும் ஹ்ஃபீஸ் இ அப்ரூ ஆகிய இஸ்லாமிய அறிஞர்களிடம் நட்பு கொண்டவர். ஜெங்கிஸ்கானின் வாரிசுகள் ‘கான்’ என்ற பட்டப்பெயரை பயன் படுத்தியதால் இவர் தன் பெயருக்குப் பின்னால் கான் என்று போட்டுக் கொள்ள வில்லை. இறைவனிடமிருந்து தனக்கு தனி சக்தி வழங்கப்படுவதாக எப்போ தும் எண்ணிக் கொள்வார். காஸலை ஆண்ட மூன்றாம் ஹென்றியுடன் நட்பாக இருந்தார். ஹஜ்ஜி முஹமது அல் காஸி என்பவரை பரிசுப் பொருள்களுடன் தூதுவராக ஹென்றி இடம் அனுப்பினார்.
                 1402 ல் ஆறாம் சார்லஸுக்கு, வாணிபம் செய்ய அழைப்பு விடுத்து பாரசீக மொழியில் எழுதிய கடிதம். 1403 ல் அதே சார்லஸு க்கு லத்தீன் மொழியில் எழுதிய கடிதம். பயேஸித்தை வெற்றி கொண்டதாக மகன் மிரான் ஷா எழுதிய கடிதங்கள் ஆதாரமாக உள்ளன. அக்காலத்தில் முஸ்லீம்களை ஒருங்கிணைத்தவர் இவரே. புகழ் பெற்ற இந்திய தத்துவ வாதி யும், கவிஞருமான முஹம்மது இக்பால் எழுதிய “ட்ரீம் ஆஃப் திமூர்” என்ற கவிதை புகழ் பெற்று, பின்னாளில் இரண்டாம் பஹதூர் ஷாவின் அரண்மனை யில் பாடப்பட்டு வந்தது. 1941 ல் சோவியத்தைச் சேர்ந்த மிகாயீல் ஜிராசிமாவ் என்ற ஆராய்சியாளரால் தைமூரின் சமாதி தோண்டி எடுக்கப்பட்டது. பின் 1942 நவம்பர் மாதம் இஸ்லாமிய முறைப்படி மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. ஹிராத் பகுதியில் திமுரித் மசூதி, கோஹர்ஷாத் மசூதி, பீபி கானும் மசூதி, பால்க் பகுதியில் கிரீன் மசூதி என்று பல மசூதிகளையும், கலைநயத்துடன் கூடிய காஜா அஹ்மத் யசாவி நினைவு மண்டமும் தைமூர் கட்டினார்.
         தைமூருக்கு ஜஹாங்கீர், உமர் ஷெய்க், மிரான் ஷா மற்றும் ஷாருக் என்று நான்கு பிள்ளைகள். தைமூர் இறந்த சில நாட்களிலே யே மிரான் ஷா இறந்து போனார். தைமூருக்குப் பிறகு வாரிசாக ஷாருக் ஆட்சி க்கு வந்தார். அவருக்குப் பின் பேரர் பீர் முஹம்மது இப்ன் ஜஹாங்கீர் ஆட்சிக்கு வந்தார். பீர் முஹம்மதுக்குப் பிறகு பதவிக்காக சில காலம் இவர்களுக்குள்ளே யே சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இவரின் வாரிசுகள் முறையே தைமூர், தைமூருக்குப் பிறகு ஃபர்கானாவை ஆண்டவர்களாக மைரன் ஹுசென், முஹம்மது மிர்ஸா, அபு சயீத், ஓமர் ஷெய்க், இந்தியாவை ஆண்ட வர்களாக பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஒளரங்க ஸேப், பஹதூர் ஷா, ஃபரூக் ஷாயர், முஹம்மது ஷா, இரண்டாம் ஆலம்கீர், ஷா ஆலம், அக்பர் ஷா ஆகியோராவார்கள். இவர்களல்லாமல் காபூல், சமர்கண்ட் என்று பிரிந்து ஆண்டவர்களும் உள்ளார்கள். தைமூர் இறந்து பல நூற்றாண் டுகள் ஐரோப்பாவில் பேசப்பட்டார். காரணம் அப்போது கிழக்கு ஐரோப்பியர் களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய பயேஸித்தை தைமூர் வென்றதே ஆகும். தைமூர் இறந்த பிறகு, உடலை சணல் துணியில் வைத்து சந்தனம், பன்னீரால் அடைத்து சமர்கண்ட் நகரத்திற்கு அனுப்பினார்கள். இன்றைக்கும் “குர் இ அமீர்” என்ற இவரது கல்லறை உள்ளது.

மொகலாய வரலாறு 3

                                               மொகலாயர்களின் ஆரம்பம்
கூ.செ.செய்யது முஹமது
                                             
                                           ஆரம்பத்திற்கான ஆதார புத்தகதகமாவது. கிழக்கிந்திய கம்பெனியின் கல்லூரியில் பல்மொழி பேராசிரியராக இருந்த மேஜர் சார்ல்ஸ் ஸ்டீவர்ட் என்பவர் 1830 ல் எழுதிய மொகல் எம்பெரர் டிமூர் ( பார்சி மொழியில் “முல்ஃபுஸாத் திமூரி”) என்ற புத்தகம் ஆன் லைனில் படிக்க நேர்ந்தது. சார்ல் ஸ் ஸ்டீவர்ட், 1636 ல் இப்ன் அரப் ஷா என்பவரால் எழுதப்பட்ட இதன் துருக்கி மொழி மூலப் புத்தகத்தை தேடிச் சென்றது போன்ற சுவாரசியமான சம்பவத் தையே ஒரு பெரிய கட்டுரையாகப் போடலாம். நான் சுருக்கமாக சொல்கி றேன். அபு தாலிப் ஹுஸ்ஸெய்ன் என்ற வரலாற்று ஆசிரியர், துருக்கிய மொழியில் தைமூர் அவர்களால் சுயசரிதை போல் எழுதப்பட்ட “முல்ஃபுஸத் திமூர்” என்ற மூலப் புத்தகத்தை, தனது பிறப்பிடமான மக்கா நகரிலிருந்த ஏமனின் கவர்னர் (ஹாகிம்) வீட்டில் தான் பார்த்து படித்ததாகக் கூறுகிறார். இந்தியாவை பெரிய சாம்ராஜ்ஜியமாக ஆண்ட மொகலாயர்களின் முதல் மனிதர் தைமூரியர் என்பதைப் புரிந்து கொண்ட அபு தாலிப் ஹுஸ்ஸெய்ன் அப்புத்தகத்தை பாரசீக மொழிக்கு மொழி மாற்றம் செய்தார். மொகலாயர் களின் சமகாலத்திலேயே 1610 ல் பாஷா என்பவரால் அந்த புத்தகம் ஏமனுக்கு வந்ததென்றும், அதன் காலத்தை வைத்து புத்தகத்தின் உண்மை தன்மையை உறுதி செய்கிறார். அபு தாலிப் ஹுஸ்ஸெய்ன் இதை எழுதும் போது ஷாஜ ஹான் அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். இந்த புத்தகத்தை தான் பாரசீக மொழியிலிருந்து மேஜர் சார்ல்ஸ் ஸ்டீவர்ட் ஆங்கிலத்தில் மொழி பெயர்த் தார். மொகலாய சாம்ராஜ்ஜியத்தை மன்னர் பாபரின் வம்சா வழியினரான தைமூரியலிருந்து பார்ப்போம். சுயசரிதை ஆகியதால் அதிலிருந்து தேவை யான பகுதியை மட்டும் எடுத்து தைமூரை பற்றி தெரிந்து கொள்ள சுருக்கமாக எழுதுகிறேன். ஐம்பது மைல்களுக்கு ஒரு ராஜா என்று சிதறுண்டு ஆண்டு கொண்டிருந்த ஒரு நாட்டை இந்தியா என்று மாபெரும் சாம்ராஜ்ஜியமாக ஒரே சக்கரவர்த்தியின் கீழ் கொண்டு வந்தவர்கள் மொகலாய மன்னர்கள். அன்றைய சிதறிய இந்தியாவை, கடல்நீர் குடித்துவிட்டு சுவையாக இருக்கிறது என்று சொல்வதற்கு தயாராய் இருக்கும் ஒருவன் கூட இந்தியா ஒன்றாகுமா என்று கேட்டால் புயல்காற்று வீசுவது போல் தலையை இடமும், வலமும் இல்லை என்று பலமாக ஆட்டுவான். அந்த மொகலாய மன்னர்களின் மூத்தவர் தான் இந்த தைமூர். இவரின் ஆரம்பகால டெல்லித் தாக்குதல் பயங்கரமானது. டெல்லி சீரடைய நூராண்டுகளுக்கும் மேலானது. அதனால் இவரிலிருந்து ஆரம்பிப்பது சரி என்று நினைக்கிறேன். சுன்னிப் பிரிவைச் சேர்ந்தவராக அறிய ப்பட்டாலும் இவரின் நடவடிக்கைகள் ஷியா பிரிவைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று கருதுகிறார்கள். காரணம் நபிகளாரின் குடும்ப வாரிசுகளுடன் நெருங்கி இருந்தார். ஆனால் இவரின் அரச மதகுரு ஹனஃபி பிரிவு அப்துல் ஜப்பார் க்வாரஸ்மி ஆவார். எதுவாக இருந்தாலும் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மூத்த வாரிசு. இவரின் செயல்பாடுகள் அறிவதால் இவரின் சந்ததிகள் எப்படி உயர்ந்தார்கள் என ஓரளவு ஊகிக்க முடியுமல்லவா?. மூன்று மொழிகளில் மாற்றம் பெறுவதால் பெயர் மற்றும் இடங்களில் சிறிது வித்தியாசம் (உ: அமிர், எமிர், ஆமீர்) இருக்கலாம்.
         தைமூரியர்கள் தங்கள் கால்நடைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கோத்ஸ், வண் டல்ஸ், ஹூன்ஸ், துர்க்ஸ் போன்ற பல டடார்களின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் கள். கிழக்குக் கரையிலிருந்து ஐரோப்பா வரை தோராயமாக ஒரு பிரிவுக்கு ஐந்தாயிரத்திலிருந்து, ஏழாயிரம் குடும்பங்களை  கொண்டவர்கள். தங்கள் குழுவிலேயே சிறப்பானவரின் பெயரையே கூட்டத்தின் பெயராக வைத்துக் கொள்வார்கள். இதில் ஒரு குழு ‘கான்’ (மன்னன்) என்பதாகும். இவர்களுடன் இன்னும் பல குழுக்கள் சேர்ந்து கொள்ள அதன் தலைவர் ‘காகான்’ (எம்பரர்) என்று அழைக்கப்பட்டார். பத்தாம் நூற்றாண்டில் துமேனாஹ் கான் என்பவர் தேர்ந்த சரித்திர ஆராய்ச்சியாளர்களால் இவரின் பூர்வீகம் நூஹ்(அலை) அவர் களின் பரம்பரை என்று கண்டறிந்து சொன்னார்கள். வடமேற்கு சீனாவின் மொகல் (துருக்கியமொழியில் மொகல் என்றால் இரும்பு) என்று தற்போதைய கூட்டப் பெயரில் இருந்த அவருக்கு ஒன்றாகப் பிறந்த இரட்டை குழந்தையாக குபேல் கான், கஜூலி பஹதூர் என்று இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். தனக்குப் பின்னால் தன் மகன்கள் தான் தலைமைக்கு வர வேண்டும் என்று கூட்டத்தாரிடம் சொல்லி இருந்தார். இந்த மகன்களில் ஒரு மகனின் நான்கா வது வரிசையில் வந்தவர் தான் 1154 ல் பிறந்த ஜெங்கிஸ்கான் (சீனர்களுக்கு-CHENG ZHE KAH HAN|) . மற்றொரு மகனின் எட்டாவது வரிசையில் மாவெரல்ன ஹெர்(மா வெரா அல் நெஹெர்-ட்ரான்ஸாக்சியானா) பகுதியில் கேஷ் மாகா ணத்தில் 1336 ல் பிறந்தவர்கள் தான் மொகலாய வம்சத்தினர்.
ஜெங்கிஸ்கானுக்கு ஜூஜி(டூச்சி), ஜக்தாய், ஒகுதாய், தூலி என்று நான்கு குழந்தைகள் இருந்தார்கள். முதல் பிள்ளை கிப்சாக்(கிரேட் டர்டார்) பகுதியையும், இரண்டாவது மகன் துர்கிஸ்தான் மற்றும் ட்ரான்ஸாக் சியானா பகுதியையும், மூன்றாவது பிள்ளை மொகலிஸ்தான் மற்றும் வட சீனாவையும், நான்காவது பிள்ளை பெர்ஷியா மற்றும் இந்தியாவின் ஒரு பகுதியான இந்துஸ் ஆற்றின் மேற்குப் பகுதியையும் ஆண்டு வந்தார்கள். இந்த பழங்குடியின டடார்களிலேயே புகழுக்கு வந்தவர்கள் ஜெங்கிஸ்கானும், தைமூரும் தான். தைமூரின் வழியில் கெராசார் நூயான் என்பவர் ஜெங்கிஸ் கானின் இரண்டாவது மகன் ஜக்தாயின் மகளை மணந்தவர். இப்புத்தகம் சுயசரிதை ஆனதால் நான்  நான் என்று தைமூர் சொல்வது போல் இருக்கிறது. அதனால் அதை மட்டும் மாற்றி சாதாரண வரலாறு அடிப்படையில் எழுது கிறேன்.
இவர்களின் பழங்குடி பரம்பரையில் இஸ்லாமைத் தழுவியர்கள் தைமூர் வம்சம் தான். ஜக்தாய் கானின் மருமகன் கெராச்சார் நூயன் என்பவர், தான் மறுமையில் ஒரு வாழ்வு இருப்பதை நம்புவதாகவும், இதையே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்வதால் தான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாகவும் சொல்லி இருந்தார். தன் தந்தைக்குப் பிறகு தைமூர் அவர் பணியைத் தொடர்ந்தார். தைமூர்  தன் பழங்குடியினரின் கால்நடை களை பிரித்து நூறு எண்ணிக்கை கொண்டப் பிரிவுக்கு ஒரு பாதுகாப்பாளரை நியமித்தார். அதன் வருவாய் பால், வெண்ணெய், தோல் முதலியவற்றி லிருந்து ஈட்டப்பட்டது. அதுபோல் கால்நடைகளில் ஆண்,பெண் என பிரித்து கூடும் காலங்களை முறைப்படுத்தி வருவாய் வரச் செய்தார்.
               எதிர் காலத்தில் பல வெற்றிகளை குவிக்கப் போகும் தன் பிள்ளைகளுக்கும், இளவரசர்களான தன் பேரப் பிள்ளைகளுக்கும் மற்றும் பின்வரும் சந்ததியினருக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஒரு சுய சரிதையை காஃப் என்னும் உயரமான மலைப்பகுதியிலிருந்து வெளி உலகத் துக்கு வந்த தைமூர் எழுதுகிறார். தன் வாரிசுகளின் மீது என்ன ஒரு கணிப்பு. பின்னாளில் 600 ஆண்டுகளுக்கு அவரின் வாரிசுகளுக்கு அல்லாஹ் ஆட்சியை இந்தியாவில் வழங்கினானே என்ன ஒரு சிறப்பு. என் செயல்களுக்கு உதவிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும், பாதுகாப்பாய் இருந்த இறைதூதரின் வழி காட்டலுக்கும் மிக்க நன்றி என்றும், தனது வெற்றிகளுக்கு காரணமாய் இருந்த மக்கள், வீரர்கள், மந்திரிகள் புரிந்து கொள்வதற்கும், தனது சட்டதிட்டங்கள் பின்வருபவர்களுக்கு ஆட்சியை வீழ்ந்து விடாமல் காப்பதற்கு ஏதுவாய் இருப் பதற்காகவும் சுயசரிதையை எழுதுவதாகவும் குறிப்பிடுகிறார். தோராயமாக 1320 லிருந்து 1330 வரை உள்ள காலத்தில் ட்ரான்ஸாக்சியானா பகுதியில் கேஷ் என்ற இடத்தில் பிறந்தார். தன் சிறப்புகளுக்கு கீழ் காணும் பனிரெண்டு கோட் பாடுகளே காரணம் என்று கூறுகிறார்:
1. எப்போது நீதியைக் கையில் எடுத்தாலும், அது குறைக்கப்பட்டாலும், கூட்டப்பட்டாலும் அனைவருக்கும் சமமாக இருக்க தான் பார்த்துக் கொண்ட தாகக் கூறுகிறார்.
2. நிர்வாகத்தில் உண்மை, பொய் கண்டறிந்து நேர்மையை நிலைநாட்ட எப்போதும் பெரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
3. அல்லாஹ்வின் கட்டளைகளையும், அதைக் கடைபிடித்தவர்களையும், அல்லாஹ் சிறப்பித்தவர்களையும் பின்பற்ற வேண்டும்.
4. அல்லாஹ்வின் படைப்புகளின் மீது கருணை காட்ட வேண்டும். எந்த ஒரு நபருக்கும் தவறான தீர்ப்பு வழங்கக்கூடாது. தன்னை நாடி வருபவருக்கு உதவ வேண்டும்.
5. மதத்தைச் சேராதவர்கள் மீது மதக்கோட்பாடைத் திணிக்கக்கூடாது. இறை வனுக்கு செய்ய வேண்டிய கடமையை முதலில் செய்ய வேண்டும்.
6. எப்போதுமே உண்மை பேச வேண்டும், உண்மைக்கு செவி சாய்க்க வேண் டும். குறுக்கான வழியை என்றும் தேர்ந்தெடுக்கக்கூடாது. முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்ட போது, மலக்குகளுக்கும், அல்லாஹ்வுக்கும் நடந்த உரையாடலை என்றும் நினைவில் வையுங்கள்.
7. யாருக்காவது வாக்கு கொடுத்தால் தான் அதை நிறைவேற்றாமல் இருந்ததில்லை. நீங்களும் வாக்கை தவறவிடாதீர்கள். உறவுகளிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கொடுங்கோல் தனத்தைக் காட்டாதீர்கள்.
8. ஆள்பவர்கள் கஜானாவை இறைவனின் சொத்தாக கருதவேண்டும். மத குருமார்களின் அனுமதியின்றி மதச்சொத்துகளை செலவிடக்கூடாது. தனது வசதிக்காகவும், அதிகாரத்திற்காகவும் செல்வம் படைத்தவர்களைச் தன்னைச் சுற்றி வைத்திருக்கக்கூடாது. வீரர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் நலனில் அக்கரை காட்ட வேண்டும்.
9. எந்நிலையிலும் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கும், நபி(ஸல்) நாதர் அவர்களின் போதனைகளுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
10. இஸ்லாமுக்காக சொத்துக்களை அள்ளிக் கொடுத்ததாகவும், அது எப்போ தும் மன்னனையும், மக்களையும் காக்கும் என்று தான் நம்பியதாகவும் சொன் னார்..
11. நபி(ஸல்) அவர்களின் வம்சாவழியினரை தான் நேசித்ததாகவும், எப்போ தும் தன் அரண்மனையில் அவர்களுக்கு இடமளித்து அலோசனைகளைக் கேட்டதாகவும் சொல்கிறார்.
12. எந்த காரணம் கொண்டும் நீதியைத் தவிர்த்து முஸ்லீம்களை கொன்ற தில்லை. எதிரிகளைக் கூட மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவராகவும் கூறுகிறார். தான் நாடியவருக்கே ஆட்சியைத் தருவதாக அல்லாஹ் சொல் கிறான். அப்படியானால் குறிப்பிட்ட சில பகுதியின் மக்களை அல்லாஹ் ஒரு மன்னனின் வசம் விடுகிறான். அப்படியானால் அம்மன்னன் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தான் உணர்ந்ததாகக் கூறுகிறார்.

வியாழன், 25 ஜூன், 2015

மொகலாய வரலாறு 2

மொகலாயப் பேரரசு 2  
                                                                     பெரும்பாலும் மொகலாய வரலாறு பாபரிட மிருந்து தான் ஆரம்பிக்கும். ஆனால், முதல் முதலில் இந்திய மண்ணில் கால் பதித்த முஸ்லீம் வீரர் முஹம்மது பின் காசிம் என்பவர். தனது பதினேழாவது வயதில் அவர் இந்த சாதனையை செய்தார். இவர் தைமூ ருக்கு முன் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தனது படையுடன் சிந்து மாகாணத்தில் நுழைந்து வெற்றி கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தார். இவரைப் பற்றி தெரிந்து கொண்டு நாம் இந்த மொகலாய வரலாற்றைத் தொடர்வோம். 695 ல் அரேபியாவின் தாயிஃப் நகரத்தில் பிறந்தவர் முஹம்மது பின் காசிம். உமய்யாத்களுக்காக மேற்கு பஞ்சாப், சிந்து போர்களை நடத்தியவர். தாகீஃப் என்னும் குலப் பிரிவை சேர்ந்தவர். இவர் தந்தை பெயர் காசிம் பின் யூசுஃப், முஹம்மது பின் காசிம் இளமையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர். இவரது நெருங்கிய உறவினரும் (சிறிய தந்தை) உமய்யாத் கவர்னராக இருந்த அல் ஹஜ்ஜாஜ் இப்ன் யூசுஃப் அல் தகாஃபி என்பவர் காசீமை வளர்க்கும் பொறு ப்பை ஏற்றுக் கொண்டார். நிர்வாகம், போர் பயிற்சி போன்றவற்றை சிறிய வயதிலேயே கற்று தேர்ந் தார். அல் ஹஜ்ஜாஜின் மகள் சுபைதாவை மணந்து கொண்டார். இவரின் இன்னொரு நெருங்கிய உறவினர் முஹம்மது பின் யுசுஃப் என்பவர் ஏமனில் கவர்னராக இருந்தார். அல் ஹஜ்ஜாஜின் வழி காட்டுதலில் பெர்ஷி யாவின் கவர்னராக நியமிக்கப்பட்டு அங்கு நடந்த உள்நாட்டு கலவரத்தை திறமையாக அடக்கி புகழ் பெற்றார். முஹம்மது பின் காசிம் மூலம் உமய்யாத் கள் சிந்துவைக் கைப் பற்றியதற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுகின் றன. பெர்ஸினின் கூற்றுப்படி சிந்துவிலிருந்து ராஜா தஹீர் என்பவர் மூலம் முஸ்லீம் வணிக கப்பல்கள் துருக்கி கந்தாராவிலிருந்து கைபர் கண வாயைக் கடக்கும் போதெல்லாம் தாக்கப்பட்டும், முஸ்லீம் ஆண், பெண்கள் சிறைப் பிடிக்கப்பட்டும் வந்தனர். மேலும், சிந்துவைக் கைப்பற்றுவதால் கந்தாராவி ற்கு செல்ல இன்னுமொரு வழி சுலபமாகும் போன்ற காரணத்திற்காக சிந்து வை கைப்பற்றினார்கள். அடுத்து விங்க்கின் கூற்றாவது, சிந்துவிலிருந்த மெட்ஸ் என்னும் பழங்குடியினர் டிக்ரிஸ் நதியிலிருந்து இலங்கை செல்லும் கடல்வழியில் கட்ச், டிபால் மற்றும் கதியாவார் போன்ற மெட்ஸ்களின் தளங் களி லிருந்து அரபுக்களின் கப்பல்களை கொள்ளையடித்து வந்தனர். மேலும், டிபால், கட்ச் பகுதிகளை வெல்வதின் மூலம் இந்தியாவிற்கான வாணிப வழி யும் சுலபமாகும் என்ற காரணத்தாலும், அல் ஹஜ்ஜாஜ் கவர்னராக இருந்த போது இலங் கையிலிருந்து அரேபியா திரும்பிக்கொண்டிருந்த பெண்கள் நிறைந்த கப்பல் ஒன்றை மெட்ஸ்கள் கடத்திச் சென்றனர். இதனால் அல் ஹஜ் ஜாஜ் தன் உறவினரான முஹம்மது பின் காசிம் தலைமையில் ஒரு படையை அனுப்பி சிந்துவைக் கைப்பற்ற உத்தரவிட்டார். காசிமின் சிந்துவின் மீதான படையெ டுப்பு மூன்றாவது முறையாக தான் முழுமையானது. முதல் இரண்டு முறை எதிரிகளைப்பற்றி சரியாகக் கணிக்கத் தவறியதாலும், கடுமையான வெப்பத்தாலும் பாதில் பின் துஹ்ஃபா என்பவரின் தலைமை யில் சென்று வெல்ல தவறவிட்டனர். அல் ஹஜ்ஜாஜ் தனது தனிப்பட்ட கவனம் கொண்டு கூஃபா நகரிலிருந்து மொத்த போர் நடவடிக்கைக்கும் உத்தரவுகளும், ஆலோச னைகளையும் வழங்கினார். 710 ல் முஹம்மது பின் காசிம் தலைமையில் ஷிராஸ் நகரத்திலிருந்து 6,000 சிரிய வீர்ர்கள் மற்றும் மாவாலிப் படைகளுடன் கிளம்பினார். சிந்துவின் எல்லையில் மேலும் சில முன்ணனிப் படைகளும், 6,000 ஒட்டகப் படைப்பிரிவினரும், மக்ரானின் கவர்னரின் உதவியில் ஐந்து போர்ப்படகுகளும் வழங்கப்பட்டன. காசிம் சிந்துவை கைப்பற்றிய சூட்டோடு, ஏற்கனவே இழந்திருந்த உமய்யாத்களின் நகரங்களான ஃபன்னாஸ் புர் மற்றும் அர்மானபெலாஹ் (லாஸ்பெலா) போன்றவற்றைக் கைப்பற்றினார். அல் ஹஜ்ஜாஜின் அறி வுரைப்படி டெபால் நகரை ஆக்ரோஷமாகத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்.
                            டெபாலுக்குப் பிறகு, அரபு இராணுவம் வடக்கில் அமைதியாக நெருன் மற்றும் சடுசான் (செஹ்வான்) நகரங்களைக் கைப்பற்றியது. போரில் கைப்பற்றிய ஐந்தில் ஒரு பகுதி பொருட் களும் அடிமைகளும் அல் ஹஜ்ஜாஜு க்கும், கலிஃபா வுக்கும் அனுப்பபட்டது. அடுத்தப் பகுதியில் ராஜா தஹிர் காசி மை எதிர்ப்பதற்கு படையைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார். காசிம் இந்துக் கரையை அடைந்து பெட் தீவின் ராஜா மோகாஹ் பசாயாஹ்வின் உதவியுடன் கரையின் அடுத்தபுறம் அடைந் தார். ரோஹ்ரி என்ற இடத்தில் தஹீரை எதிர் கொண்டார். போரில் ராஜா தஹிர் கொல்லப்பட்டு சிந்து வின் அதிகாரம் காசி மின் வசப்பட்டது. அதைத்தொடர்ந்து பிராமனாபாத், அரொர் மற்றும் முல்டான் போன்ற பகுதிகள் அரபுப் படைகளின் சிறிய இழப்பிற்குப் பின் கைப்பற்றப் பட் டன. காசிம் இந்து ராஜா க்களுக்கு கடிதம் எழுதி அவர்களை சரணடையும்படி யும், இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். ராஜா தஹிர் புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், அவருக்கு இந்துக்களிடம்  வெறுப் பிருந்தது. இது அவரை வெற்றி கொண்ட காசிமிற்கு சாதகமாக இருந்தது. வெற்றி கொண்ட பகுதிகளில் காசிம் புதிய இஸ்லாமிய நிர்வாகத்தின் கீழ் ஆட்சிமுறையை ஏற்படுத்தினார். கிராமப் புறங்களில் இந்துக்கள் அவர்களின் நிர்வாகத்தையே நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சச்னாமா, ஜைனுல் அக்பர் மற்றும் தரிக் இ பைஹாகி ஆகியோர் காசிமின் படைகளின் மீது போர் தொடுத்தனர். சிறை பிடிக்கப்பட்ட ஜாட்கள் ஈராக்குக்கு காசிமால் அடிமை களாக அனுப்பப்பட்டனர். முல்டானில் இருந்த சூரியக்கோவில் காசிமால் தகர்க்கப்பட்டதாக சில சரித்திர ஆசிரியர் களால் சொல்லப்படுகிறது. ஆனால், எல்லியாட், கோசென்ஸ், மஜும்தார் மற்றும் வைத்தியா போன்ற சரித்திர ஆசிரியர்கள் இது புனையப் பட்ட கதை என்று மறுக்கிறார்கள். சிலர் முஸ்லீம் களாக மதம் மாறியதாகவும், இந்துக்களும், புத்தமதத்தவர்களும் திம்மிக்களாக வே கருதப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.
                                                        இதற்கிடையில் ஹஜ்ஜாஜ் இறந்துவிட, கலீஃபா முதலாம் அல் வலீத் சுலைமான் இப்ன் அப்த் அவர்கள் அல் மாலிக்குக்கு பதிலாக பதவிக்கு வந்தார். இவர் ஹஜ்ஜாஜிக்கு மிகவும் நெருங்கியவர்களை பழிவாங்கினார். ஹஜ்ஜாஜால் முன்பு வெறுக்கப்பட்ட யாஸித் இப்ன் அல் முஹல்லப் என்பவரை ஃபார்ஸ், கிர்மான், மக்ரான் மற்றும் சிந்த் பகுதிகளுக்கு கவர்னராக்கி உடனடி யாக காசிமை விலக்கினார். முஹம்மது பின் காசிம் மேலும் இந்தியாவை நோக்கி முன்னேற விரும் பினார். அல் ஹஜ்ஜாஜின் நெருங்கிய உறவினர் என்ற காரணத்தாலேயே கலீஃபா ஆட்சிக்கு வந்ததும் முஹம்மது பின் காசிம் கொல்லப்பட்டார். சொந்த கலீஃபாவாலேயே கொல்ல ப்பட்டபோது காசிமிற்கு இருபது வயது. பிற்காலத்தில் இவரது மகன் அம்ர் பின் முஹம்மது அதே சிந்துவிற்கு கவர்னராக வந் தார். முஹம்மது பின் காசிம் தான் முதன் முதலாக இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த முஸ் லிம் ஆட்சியாளர். இவரைப்பற்றி ஸ்டான்சி லேன் பூலே என்பவரின் மெடீவல் இண்டியா என்ற புத்தகத்தை 1970 ல் ஹாஸ் கெல் ஹவுஸ் பப்ளி சர்ஸ் லிமிடட் வெளியிட்டிருக்கிறது.          
                                                                                  மஹாராஷ்டிராவில் மராத்திகளும், பஞ்சாபில் சீக்கியர்களும் பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். விவசாயி களாக இருந்த சீக்கியர்களுக்கு அவர்களின் தலைவர் கள் நாட்டின் நலம்கருதி போர்ப்பயிற்சி அளித்தார்கள்.

மொகலாய வரலாறு 1

மொகலாயர்கள் வரலாறு-1
கூ.செ.செய்யது முஹமது
                                                                                 உங்களுக்கு சந்தர்ப்பம் அமைந்தால் வாழ்நாளில் ஒருமுறையேனும் விடுமுறைப் பயணத்தை இந்தியாவின் வடக்குப்பகுதியில் அமைத்துக்கொண்டு டெல்லி, ஆக்ரா, அஹம தாபாத், ஃபதேபூர்சிக்ரி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு போய் பாருங்கள். மொகலாயர்களின் ஆட்சியைப்பற்றி யாரும் உங்களுக்கு பக்கம்பக்கமாகச் சொல்லத் தேவையில்லை. அங்கிருக்கும் கோட்டைகளும், அரண்மனைகளும், தோட்டங்களும் மௌனமாய் உங்களுக்கு மொகலாயர்களைப் பற்றிச் சொல்லும் அல்லது பார்த்தவர்களைக் கேளுங்கள் சொல்வார்கள். மொகலாயர்களை வென்று இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் பார்த்து வாயடைத்து அனுபவங்களை பிரிட்டிஷ் நூலகங் களில் புத்தகமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இது மிகைப்படுத்தப்பட்டதல்ல ஒருமுறை வட இந்தியா பயணித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சரித்திரத்தை எழுத வருபவன் நன்றாக அதன் உண்மைகளை கூடுமான வரை அறிய முயற்சித்திருக்க வேண்டும் அல்லது  அறிந்திருக்க வேண்டும் என்று புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  குறிப்பாக  எழுதுகோல் எந்த விதத்திலும் அநியாயத்தின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது. காலமெல்லாம் நல்ல சிந்தனையில் இருந்து விட்டு சாகும்போது மது குடிக்க பணமில்லாமல் ‘அர்த்தமுள்ள ...............’ என்று எழுதிவிட்டுப்போன கவிஞர்களையெல்லாம் கண்டவர்கள் நாம். இந்த தொடர் ஏதோ வாந்தி எடுத்தவர்கள் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ போல அல்ல. சரித்திரத்தில் தவறு ஏற்பட்டபோதெல்லாம் இந்த மனித சமுதாயம் உலகில் பல இடங் களில் இரத்தம் சிந்தி இருக்கிறது.
                                                                                  அதுவும் இந்தியா போன்ற பல சமுதாயத்தினர் இணைந்து வாழும் ஒரு நாட்டில் மிகவும் கவனமாக எழுதப்பட வேண்டும். எழுதினார்களா? அதை அறிந்தால் வேதனையின் உச்சிக்கே போய் விடுவீர்கள்.  இதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 ல் பூனாவில் நடைபெற்ற ஆல் இந்தியா சரித்திர மாநாட்டில் ஒரு கமிட்டியை அமைத்து இந்திய வரலா ற்றை குறிப்பாக முஸ்லீம்களின் ஆட்சியை முடிந்த மட்டிலும் உண்மைகளைத் திரட்டி எழுதிட பணித் தது. இஸ்லாமுக்குப் பிறகு, ‘தீனே இலாஹி’ என்ற மதத்தைத் தோற்றுவித்தவர் அயோக்கியனில்லாமல் எப்படி ‘மாமன்னன்’ அக்பர் ஆனார். (அக்பரின் மற்ற திறமைகளை நாம் குறை கூறவில்லை. இவர் தான் முழு இந்தியாவை உருவாக்கினார்.) நேர்மையான கலீஃபாக்களின் ஆட்சிக்கு ஈடாக ஆட்சி செய்த ஔரங்கஸேப் எப்படி உண்மைக்குப் புறம்பாக தீய ஆட்சியாளரானார். ஜஹாங்கீர் இந்தியாவிலேயே பிறந்தவர். இந்திய கலாச்சாரத்தை மிகவும் விரும்பியவர். இந்தி பாடல்கள் கவிதைகளை நேசித்தவர். டெல்லியை ஆட்சி செய்த முதல் மன்னன் அய்பெக். மொகலாயப் பேரரசை ஆட்சி செய்த முதல் பேரர சர் பாபர். இவரிலிருந்து தொடர்ந்த மொகலாய வாரிசுகள் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்களாய் இருந்தார்கள், இந்திய மக்களை ஆண்டார்கள். இவைகள் ஆதார பூர்வமாக அப்போதைய உயர் அதிகா ரிகள், இராணுவத்தினரின் உத்தரவுகள், நாட்குறிப்புகள் மூலம் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட ஆவணங் களின் மூலமும், கவர்னர்கள், ரகசிய உளவாளிகள், செய்தி ஆசிரியர்களின் மூலமும் தெரிகிறது. இது அல்லாமல் அக்பர்நாமா. பாபர் நாமா போன்ற சுயவரலாற்றிலிருந்தும், அக்கால வெளிநாட்டு பயணி கள் வான் நோயர், டி லாயட், கோர்யட், நிக்கோலியோ மனுச்சி, பெர்னியர் மற்றும் தவர்னியீ ஆகியோ ரின் பயணக்குறிப்பிலிருந்தும் தெரிகிறது. இந்த தொடர் பிரிட்டிஷ் சரித்திர எழுத்தாளர்கள், போர்ச்சு கீஸிய கடல் பயணிகளின் அனுபவங்களை கேட்டும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து திரட்டியது.
                                           இங்கிலாந்தின் சார்பில் ராஜ்ய பிரதிநிதி மற்றும் வைசிராயாக பேரரசர் ஜஹாங்கீரின் சபையில் டெர்ரி என்பவரும், ஹாகின்ஸ் என்பவரும் இருந்திருக்கிறார்கள். போர்ச்சுகீசிய நாட்டின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மான்செர்ரட் சேவியர் மற்றும் சிலர் மொக லாய அரண்மனையில் தங்கி இருந்திருக்கிறார்கள். 1857 ல் நடந்த கலவரத்தில் அதிகமான மொகலாய ஆவணங்கள் அழிந்து போனாலும், எஞ்சியவைகள் ஐரோப்பிய நூலகங்களில் மௌனமாக மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் உண்மைகளைச் சுமந்து கொண்டு இருக்கின்றன. பேராசிரியர் ரஷ்புரூக் வில்லிய ம்ஸ், இந்தியா புராதன நாடுதான் என்பதை மறுப்பதற்கில்லை இந்து, புத்தமத கலவரங்களாலும், சிறிய பிரதேச மன்னர்களின் முறையற்ற ஆட்சியாலும் களையிழந்திருந்த இந்தியாவை நவீனத்திற்கு இட்டுச் சென்றது பதினைந்தாம் நூற்றாண்டின் வாஸ்கோடா காமாவின் வருகையும், மொகலாய பேரரசர்களின் ஆட்சியும்தான் என்று கூறி இருக்கிறார். ஒருவகையில் நிச்சயமாக மொகலாயர்கள் இந்தியாவை வேறு காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்களின் பிடியில் செல்லாமல் பாதுகாத்ததா கவே மதிப்பிடுகிறார்கள். மங்கோலியர்கள் டெல்லியை நாசப்படுத்தியதை உதாரணமாகக் கூறுகி றார்கள். நமது இந்திய சரித்திரத்திலேயே மிகவும் ஆர்வமான பகுதி மொகலாயர்கள் ஆட்சி தான். மொகலாயர்கள் மதத்தால் இஸ்லாமையும், கலாச்சாரத்தால் பெர்ஷியாவையும் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அதுவும் ஔரங்கஸேப் குறிப்பாக மதப்பற்றுள்ளவராக இருந்தார்.
இந்த தொடரின் ஆதார மூலங்கள் :
ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால்                                 ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் லண்டன்                                   ஜர்னல் ஆஃப் தி ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸ், லண்டன்                                அலிகார் முஸ்லிம் யூனிவர்சிடி                                                                                                  மொகல் எம்பரர் ஆஃப் திமூர்                                                                      
 மெமோயர்ஸ் ஆஃப் ஸெஹிருத்தீன் பாபர்                                                           ஜஹாங்கீர் நாமா                                                                                        
ஹிஸ்டரி ஆஃப் ஹுமாயூன்                                                                              
 ஹிஸ்டரி ஆஃப் ஔரங்கஸேப்                                                                        
 மற்றும் பல பிரிட்டன் லைப்ரரி ஆன் லைன் புத்தகங்கள்.

செவ்வாய், 23 ஜூன், 2015

அய்யுபிட்கள் வரலாறு 2

அல் காமிலுக்கும், அல் முஃஅஸ்ஸிமுக்கும் இடையில் அதிகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் சிஸிலியின் மன்னர் இரண்டாம் ஃப்ரெடெரிக் முன் சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதற்குள் 1227 ல் முஃஅஸ்ஸிம் மரணமடைந்தார். ஃப்ரெடெரிக் ஆறாம் சிலுவைப்போருக்கு தயாரானார். அல் காமில் ஜெருசலம் மற்றும் அனைத்து புனித இடங்களையும் விட்டுக் கொடுத்து விடுவதாக அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைதி ஒப்பந்தம் போட்டார். அதில் கோவில் பகுதி, டோம் ஆஃப் ராக், அக்ஸா மசூதி ஆகியவை முஸ்லீம்கள் வசமிருக்கும் என்றும் முடிவானது. அவர்களுக்கு உண்டான புனித பகுதிகளை தனி அதிகாரிகளை வைத்து அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அல் காமில் 1238 ல் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அவர் மகன்கள் அஸ் ஸாலிஹ்ஹும், இரண்டாம் அல் ஆதிலும் எகிப்தையும், சிரியாவையும் ஆண்டார்கள். அய்யுபிட் பேரரசில் கடுமையான உள்நாட்டுப் போர் நிலவியது. இதற்கிடையில் 1239 ல் ஃப்ரெடெரிக்குடனான அமைதி ஒப்பந்தம் முடிவடைய ஜெருசலம் அய்யுபிட் வசமானது.   
                        அல் காமில் இஸ்லாமிய முறையில் போரிட்டார். சிலுவைபோரில் ஃப்ராங்க்ஸ்கள் தோல்வி அடைந்த போது, படைகளுக்கு உணவளித்ததாக ஆலிவர் ஷோலஸ்டிகஸ் புகழ்ந்தார். அவர்களின் பெற்றோர்களும், மகன்களும், மகள்களும், சகோதர, சகோதரிகளும் எங்கள் கையால் இரக்கமின்றி சாகடிக்கப்பட்டார்கள். அவர்களின் உடமைகளைப் பறித்து கொண்டு நிர்வாணமாக துரத்தி னோம். ஆனால் சுல்தான் எங்கள் படைகளுக்கு உணவளித்தார். இது இறைவனிடமிருந்து வந்த உதவியா கவே கருதுகிறோம் என்றார்.
                            சைஃபுத்தீன் அல் மாலிக் அல் ஆதில் அபுபக்கர் என்ற் இரண்டாம் ஆதில் 1238 ல் எகிப்து அய்யுபிட் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இரண்டு ஆண்டுகளே ஆண்ட இவர் சகோதரர் அஸ் ஸாலிஹின் புரட்சியால் சிறை பிடிக்கப்பட்டு, எட்டாண்டுகள் சிறையிலிருந்தே மரண மடைந்தார். பின் ஆட்சிக்கு வந்த அஸ் ஸாலிஹ் 1221 ல் ஐந்தாம் சிலுவைப் போரில் பணயக்கைதியாக ப்ரெய்னியின் ஜானிடம் இருந்தார். பின்னர் அல் ஜஸீராவில் விடுவிக்கப்பட்டார். 1234 ல் எகிப்தில் இவரால் மம்லுக்குகளுடன் குழப்பம் வர டமாஸ்கஸின் அதிபராக தந்தை இவரை அனுப்பினார். அங்கிருந்து இவர் சிறிய தந்தை அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் விரட்ட ஜஸீராவில் கவாரிசிம்களிடம் அடைக்கலமானார். பின் சில நாளில் டமாஸ்கஸைக் கைப்பற்றி தனது பகுதிகளை பெரிதாக்கினார். அப்போது சகோதரரை நீக்கக் கோரி எகிப்திலிருந்து உதவி கோர, எகிப்து வந்து சுல்தான் ஆனார். டமாஸ்கஸில் மீண்டும் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் ஆட்சியைப் பிடித்தார். அஸ் ஸாலிஹ் இப்போது தன்னை எகிப்துக்கு அழைத்தவர் களைக் கூட நம்பத்தயாராய் இல்லை. மத்திய ஆசியாவில் மங்கோலியர்கள் நுழைந்த பிறகு, பரவலாக கிடைத்த கிப்சக் (மம்லுக்) அடிமைகளை படைக்கு வாங்கினார். இவர் மட்டுமே மம்லுக் அடிமைகளை வாங்கிய முதல் அய்யுபிட் சுல்தான் அல்ல. ஆனால், அஸ் ஸாலிஹ் மட்டுமே மம்லுக்குகளை முழுமை யாக நம்பினார். அவர்களை ஆயிரம் பேர் கொண்ட ‘பஹ்ரிய்யாஹ்’ என்று பிரித்து நைல் நதியின் ரவ்தாஹ் தீவில் வைத்தார். இன்னொரு குழுவை ‘ஜம்தாரீயாஹ்’ என்று பிரித்து தன் சொந்த பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டார். பலகாலமாக அடிமையாகவே இருந்த மம்லுக்குகள் அருமையான சந்தர்ப்பம் வாய்க்க அஸ் ஸாலிஹை நீக்கி விட்டு அய்யுபிட் பேரரசுக்கு முடிவு கட்டினார்கள்.
                            மம்லுக்குகளுக்கு இது இரு சரித்திரப் பதிவாகிப் போன நிகழ்ச்சி. ஆட்சியைப் பிடித்த மம்லுக்குகள் தங்களை பாஹ்ரி மம்லுக் என்று சொல்லிக் கொண்டார்கள். ‘அஸ் ஸாலி ஹால் அமைக்கப்பட்ட ‘பஹ்ரிய்யாஹ்’ மம்லுக்குகள் சில சமயம் ‘சாலிஹிய்யாஹ்’ என்று சொல்லிக் கொண்டார்கள். அல் காமிலால் ஃப்ரெடெரிக்கிடம் இழக்கப்பட்டிருந்த ஜெருசலத்தை அஸ் ஸாலிஹ் சிரியா மற்றும் பாலஸ்தீன் வழியாக கவாரிஸ்மிகளுடன் உதவியுடன் கைப்பற்றினார். சிலுவைப் படையுடன் கூட்டு வைத்திருந்த அஸ் ஸாலிஹ் இஸ்மாயிலையும், கவாரிஸ்மிகளின் உதவியுடன்  ‘லா ஃபோர்பி’ போரில் வெற்றி கொண்டார். அஸ் ஸாலிஹ் 1245 ல் டமாஸ்கஸைப் பிடித்த போது தான் பாக்தாத் கலீஃபா அல் முஸ்தஃஸிம் மூலம் ‘சுல்தான்’ என்று அழைக்கப்பட்டார். கவாரிஸ்மிகள் எப்போதும் ஆபத்து என்றும், கையாள்வது சிரமம் என்றும் கருதிய அஸ் ஸாலிஹ் ஹாம்ஸ் பகுதியில் அவர்களின் தலைவரைக் கொன்று, சிரியா மற்றும் பால்ஸ்தீனில் மிச்சமிருந்த அவர்களின் அடையாளங்களை அழித்தார். அஸ் ஸாலிஹ் சிரியாவில் சண்டையில் இருந்த போது சிலுவைப் போராளிகள் நுழைந்து விட்டதாக செய்திவர, எகிப்து திரும்பி அல் மன்சூராவில் முகாமிட்டார். அங்கு அவரின் கால்கள் முட்டுக்கால் வரை அழுகி விட்டிருக்க நோய்வாய்ப்பட்டார். தனக்குப் பிறகு, அல் முஃஅஸ்ஸம் துரன்ஷா சரியான ஆட்சியாளராக இருக்க மாட்டர் என்று கருதிய அஸ் ஸாலிஹ் அவரை எகிப்தை விட்டு தூரப்பிரதேசமான ஹசன் கெய்ஃபில் வைத்திருந்தார்.  அஸ் ஸாலிஹ் இறந்து போக அவர் மனைவி ஷஜர் அத் துர் இறப்புச் செய்தியை துரன் ஷா வரும் வரை ரகசியமாக வைத்திருந்தார்.
                        துரன்ஷா அல் முஃஅஸ்ஸிம் ஓராண்டு தான் ஆட்சியில் இருந்தார். தந்தை அஸ் ஸாலிஹால் எகிப்தின் அரசியலுக்கு நிராகரிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டார். தந்தை இறந்த பிறகு, பஹ்ரி மம்லுக் கமாண்டர் ஃபரீசுத்தீன் அக்டாயால் ஹசன்கெய்ஃபிலிருந்து அழைத்து வரப்பட்டார். அக்டாய் 1249 டிசம்பரில் 50 வீரர்களுடன் அவரை அழைத்துக் கொண்டு, பதவிப்போட்டியில் இருப்பவர்கள் கண்ணில் படாமல் ரகசியமாக 1250 ஜனவரியில் டமாஸ்கஸின் குஸைர் கிராமத்திற்கு வந்தார்கள். அங்கேயே அவர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். துரன்ஷா ஊர் தலைவர்களுக்கும், தன் பாதுகாப்புக்கும் பெரும் பணம் செலவு செய்தார். எகிப்தின் அல் மன்சூராவுக்கு வந்த அவர் தந்தையின் பாஹ்ரி மம்லுக்கு களை நீக்கிவிட்டு, தனியாக தனக்கென மம்லுக்குகளை நியமித்துக் கொண்டார். கருப்பு மம்லுக் அடிமை களை நம்பகமான பதவியில் வைத்தார். ஒரு கருப்பு அரவாணியை உஸ்ததராக (தலைமை செயலாளர்) வும், இன்னொரு கருப்பரை அமீர் ஜன்தார் (தலைமை அரசு பாதுகாவலர்) ஆகவும் நியமித்தார்.
                        துரன்ஷா சரித்திர ஆசிரியர்களால் நல்ல விதத்தில் மதிப்பிடப்பட வில்லை. குறைந்த புத்திசாலித்தனமும், விரைவில் உணர்ச்சிவசப்படுபவராகவும் இருந்தாராம். ஒருமுறை கத்தியில் மெழுகுவர்த்திகளை வேகமாக நறுக்கிக் கொண்டே, ‘இதுபோல் தான் பாஹ்ரி மம்லுக்குகளை கையாள் வேண்டும்’ என்றாராம். சிலுவைப்போராளிகளிடமிருந்து டமெட்டாவை மீட்டார். பைபர்ஸ், துரன்ஷாவைத் திட்டமிட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 1250 ல் துரன்ஷா பெரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பைபரும், சில மம்லுக்குகளும் விரைந்து அவரைக் கொல்ல முயர்ச்சித் தார்கள். வாளொன்று அவர் கையைப் பிளக்க, தப்பித்த துரன்ஷா நைல் நதி அருகிலிருந்த கோபுரத்தில் ஏறிக் கொண்டார். அதைக் கவனித்த மம்லுக் ஒருவன் கோபுரத்திற்கு தீ வைத்தான். தீயிலிருந்து தப்பிக்க ஆற்றை நோக்கி ஓடிய துரன்ஷாவை மம்லுக் ஒருவன் இடுப்பில் வெட்ட, ஆற்றில் விழுந்த சுல்தான் துரன்ஷா உயிர் பிச்சைக் கேட்க விடாத மம்லுக்குகள் அம்புகளை எறிந்தார்கள். பின்னர் அவரை வெளியில் இழுத்து தூக்கிலிட்டார்கள். ஃபரிசுத்தீன் அக்டாய் தான் துரன்ஷாவின் நெஞ்சைப் பிளந்து இருதயத்தை வெளியே எடுத்தாராம். பின்னாளில் இதே அக்டாய் பைபரால் கொல்லப்பட்டாராம்.
                               அதன் பிறகு, மம்லுக்குகளுக்கு சிரியா அய்யுபிட்களிடமிருந்து எதிர்ப்புவர ஆறு வயது குழந்தையான அல் அஷ்ரஃப் மூஸாவை சுல்தானாக பாஹ்ரி மம்லுக் இஸ்ஸதீன் அய்பக் அறிவித்தார். அல் அஷ்ரஃபைப் பற்றி முழு விவரம் சரித்திர ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவர் அலிப்போவின் ஆட்சியாளராக இருந்த அஸ் ஸாஹிர் காஸியின் கொள்ளுப் பேரர் என்று சொல்லப்படுகிறது. ஏமனில் அய்யுபிட் ஆட்சியாளராக இருந்த அல் மஸ் ஊதின் வழி வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பிறகு, சிரியாவிலிருந்த அய்யுபிட் ஆட்சியாளர் அந் நாசிர் யூசுஃப் எகிப்தின் மீது போர் தொடுக்க, 1253 ல் எகிப்து மம்லுக்குகள் வசமானது. ஓராண்டு இடைவெளியில் இஸ்ஸத்தீன் அய்பக், சுல்தான் சிறுவர் அல் அஷ்ரஃபை அவரின் அத்தையிடமே அனுப்பினார்.

அய்யுபிட்கள் வரலாறு 1

                                                              அய்யுபிட்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
                            எகிப்தை மையமாக வைத்து ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் இன மன்னர் சலாவுத்தீன் அல் அய்யூபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமியப் பேரரசு தான் ‘அய்யுபிட் பேரரசு’. 12, 13 ம் நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளை ஆண்டார்கள். சலாவுத்தீன் அய்யூபி ஆரம்பத்தில் ஃபாத்திமிட் பேரரசில் வைசிராயராக இருந்தார். அய்யுபிட் பேரரசுக்கு ஆரம்ப தளம் அமைத்த நூருத்தீனுக்குப் பிறகு, இவர் மன்னரானார். மூதாதையர் நிஜாமுத்தீன் அய்யூப் பின் ஷாதி என்பவர் வட அர்மேனியாவில் ரவாதியா பழங்குடியினரின் ஒரு பிரிவினரான ஹதபனி பழங்குடியினத் தைச் சேர்ந்தவராவார். அங்கு அரசியலில் முக்கிய நபராக இருந்தார்.
                        ஷாதி அவர்கள் அரசியல் சூழ்நிலை மோசமானதால் அங்கிருந்து மகன் கள் நிஜாமுத்தீன் மற்றும் ஷிர்குஹ் உடன் ஈராக்குக்கு இடம் பெயர்ந்தார். இந் நிகழ்ச்சிகளை நாம் சலாவுத் தீன் அல் அய்யூபின் வரலாற்றில் பார்த்துவிட்டோம். சலாவுத்தீன் தான் வெற்றி பெற்ற பிரதேசங்களில் தன் உறவினர்களையும், அந்த பிரதேசங்களின் உள்ளுர் தலைவர்களையும் வைத்து ஆட்சி செய்தார். சலாவுத் தீன் இறந்த பிறகு, அலிப்போவை அஸ் ஸஹீரும், அவை மூத்த மகன் அல் அஃப்தல், பாலஸ்தீனும் லெபனானும் இணைந்த டமாஸ்கஸையும் ஆட்சி செய்தனர். 1193 ல் மோசூலைச் சேர்ந்த மஸ் உத், சின் ஜாரின் ஸங்கியுடன் இணைந்து (வட மொசபடோனியா) அதிகபட்ச அல் ஜசீரா பகுதிகளைக் கைப்பற்றினார். பெரிய வெற்றி காணும் முன் மஸ் உத் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசூல் திரும்பிவிட்டார். பல அரசியல் சூழ்நிலைகள் மாறி 60 வயதி சலாவுத்தீனின் மகன் அல் ஆதில் என்பவர் பேரரசை பிரித்து தன் மகன்களுக்கு கொடுத்து அடுத்த 50 ஆண்டுகளுக்கு அய்யுபிட் பேரரசை நிலைபடுத்தினார். எகிப்தை அல் காமிலுக்கும், அல் ஜஸீரவை அல் அஷ்ரஃபுக்கும், அல் அவ்ஹதுக்கு தியார் பக்ரையும் பிரித்துக் கொடுத் தார். பின்னாளில் அல் அவ்ஹத் இறந்து போக அப்பகுதி அல் அஷ்ரஃபுக்கு வந்தது.
                        சலாவுத்தீன் இறந்த பிறகு, இரண்டாவது அய்யுபிட் சுல்தானாக அவரின் இரண்டாவது மகன் அல் மாலிக் அல் ஜீஸ் ஒஸ்மான் பின் சலாவுத்தீன் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே சலாவுத்தீன் தன் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்ததில் பல குழப்பங்கள் இருந்தன. இதற்கிடை யில் அல் அஜீஸ் 1193 முதல் 1198 வரை ஒட்டுமொத்தமாக சுல்தானாக இருந்தார். மோசூலில் சன்ஜார் தலைமையிலும், தென் ஈராக்கில் அர்துகித்கள் என்பவர்களாலும் புரட்சி ஏற்பட்டது. அல் அஃப்தலால் துரத்தப்பட்ட மந்திரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அல் அஜீஸ் இழந்திருந்த சிரியாவை மீண்டும் வென்றார். சிரியாவை இழந்த அல் அஃப்தல் சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதிலின் உதவியை நாட அவர் சமதானப்படுத்தினார். சமாதானத்தை மீறி அல் அஃப்தல் செயல்பட இம்முறை 1196 ல் அல் ஆதில் அல் அஜீஸுடன் இணைந்து சிரியாவைக் கைப்பற்றினார். அல் அஃப்தல் சல்காதுக்கு தப்பி ஓடினார். பெயருக்கு அல் அஜீஸ் சுல்தானாக இருந்தாலும், சலாவுத்தீன் சகோதரர் அல் ஆதில் தான் டமாஸ்கஸில் அதிகாரத் தில் இருந்தார்.
                            அல் அஜீஸ் தன் ஆட்சியின் போது, எகிப்திலிருந்த புகழ் பெற்ற கிஸா பிரமிட்டை அழிக்க முயற்சித்தார். அது மிகப்பெரியதாக இருந்ததால் கைவிட்டு விட்டு மென்காயர் பிரமிட்டை அழித்தார். சரித்திரப்புகழ் வாய்ந்த பனியாஸ் மற்றும் சுபைதாஹ் கட்டிடங்களைக் கட்டினார். 1198 ல் ஒரு வேட்டையின் போது ஏற்பட்ட விபத்தில் அல் மாலிக் அல் அஜீஸ் இறந்து போனார்.
                            அல் அஜீஸுக்குப் பின் அவர் மகன் அல் மன்சூர் நாசிர் அல் தீன் முஹம்மது எகிப்தின் மூன்றாவது சுல்தானாக 12 வயதில் ஆட்சிக்கு வந்தார். அப்போது சலாவுத்தீனிடம் பணியாற்றிய அடபெக் என்னும் மம்லுக் அனுபவம் வாய்ந்த சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதில் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று குழப்பம் விளைவித்தார். சலாவுத்தீனின் சிறிய தந்தை ஷிர்குஹ் சலாவுத்தீனின் மூத்த மகன் அல் அஃப்தல் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார். இதனால் அல் அஃப்தலுக்கும், அல் ஆதிலுக்கும் இடையே சண்டை மூண்டது. அல் அஃப்தல் டமாஸ்கஸில் தோல்வி யடைந்ததால், அல் ஆதில் கெய்ரோவில் நுழைந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் அல் மன்சூரின் பெயரை நீக்கி தன் பெயரை முன் மொழிய வைத்தார். அங்கிருந்து வெளியேறிய அல் மன்சூர் தன் சிறிய தந்தை அஸ் ஸஹீர் காஸி இருக்கும் சிரியாவின் அலிப்போ நகரத்திற்குச் சென்றார். அஸ் ஸஹீர் 1216 ல் தனக்குப் பின் தன் பிராந்தியத்தில் அல் மன்சூரை ஆட்சியாளராக ஆக்கினார். அதன் பிறகு அல் மன்சூரின் விவரங்கள் கிடைக்கவில்லை.
                               நிஜாமுத்தீன் அய்யூபின் மகனான அல் ஆதில் (முதலாம் ஆதில்) எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இவரை மரியாதை கலந்து சைஃபுத்தீன் (உண்மையின் வாள்) என்றும் அழைத்தார்கள். சிலுவைப்போரின் போது ஃப்ராங்க்ஸ்கள் இவரை சபாதின் என்று அழைக்க இன்றும் மேற்கத்திய வரலாற்றில் இப் பெயர் நிலைத்திருக்கிறது. தன் சகோதரர் சலாவுத் தீனுடன் சேர்ந்து சமூக மற்றும் இராணுவத் திறமைகளைப் பெற்றவர் அல் ஆதில். அய்யுபிட்களின் ஆட்சி யில் சிறந்த தளபதியாகவும் இருந்தார். சிறிய தந்தை ஷிர்குஹ்ஹின் மூன்றாவது எகிப்தின் தாக்குதல் போது நூருத்தீன் ஸெங்கியின் படையில் அதிகாரியாக இருந்தார். நூருத்தீன் இறந்த பிறகு, 1174 ல் சலாவுத்தீனின் சார்பாக எகிப்தின் கவர்னராக இருந்து அதன் வளர்ச்சிக்கும், சிலுவைப் போராளிகளை திறம்பட எதிர்க்கவும் துணை புரிந்தார். சலாவுத்தீன் இறந்த பிறகு மோசூலில் கலவரம் செய்த இஸ்ஸத் தீனை அடக்கினார்.
                        சலாவுத்தீன் தனக்குப் பிறகு, மகன் அல் அஃப்தல் தான் சுல்தானாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரின் மற்ற மகன்கள் அல் அஃப்தலின் தலைமையை எற்க தயாராய் இல்லை. அல் ஆதில் அவர்கள் குறிப்பாக அல் அஜீஸுக்கும், அல் அஃப்தலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த முயன்றார். அல் ஆதிலுக்கு அல் அஃப்தல் சுல்தானாக தகுதி இல்லாதது போல் தோன்றியதால், அவர் அல் அஜீஸுக்கு ஆதரவளித்தார். எதிர்த்த உறவினர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு 1201 ல் சுல்தானாக ஆட்சி அமைத்தார். மிகச் சிறந்த அய்யுபிட் சுல்தானாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தையும், சிரியாவையும் ஆட்சி செய்தார், பின்னால் ஆட்சிக்கு வந்த இவர் மகன் அல் காமிலும் சிறப்பாக ஆட்சி செய்தார். அல் ஆதில் ஆட்சிக்கு வந்த போது 55 வயதிற்கு மேலாகி விட்டது. சலாவுத்தீன் காலத்திலிருந்து சிலுவைப் போராளிகளுடன் போரிட்டு வந்ததால் ஆட்சி நடத்த போதிய வருவாய் இல்லாமல் இருந்தது. முதலில் வருவாயைப் பெருக்க திட்டமிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால் புதிய நாணயத்தை வெளியிட்டு, புது வரிகளையும் விதித்தார். இச் சூழ்நிலையில் எகிப்தில் பெரிய பூகம்பமும், நைல் நதியில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதையெல்லாம் திறமையாக சமாளித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
                            புதிய சிலுவைப் போருக்கு வித்திட்டிருந்த மேற்கத்தியர்களுடன் மெடிட்டரேனியன் நகரங்களில் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தி திசை மாற்றினார். இதில் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஃப்ராங்கிஷ் கடற்படையினர் ரொஸட்டாவிலும், டமைட்டாவிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். மேலும் குடும்பப்பகை வளராமல் இருப்பதற்கு தன் மகள் தைஃபா கதூனை சலாவுத்தீனின் மகன் அலிப்போவின் அஸ் ஸஹீர் காஸிக்கு 1212 ல் மணமுடித்துக் கொடுத்தார். டமாஸ்கஸில் சிறந்த அரண்மனையைக் கட்டினார். 1217 ல் எதிர்பாராத தருணத்தில் அக்ரியில் சிலுவைப் போராளிகள் வந்திரங்கினார்கள். 72 வயதில் தயாராய் இல்லாத தன் படையை அவசரமாகத் திரட்டி பாலஸ்தீன் சென்றார். அது அவ்வளவாக வெற்றி தராத நேரத்தில் அடுத்த சிலுவைப்படை டமெய்டாவில் வந்திருக்கிறது என்ற செய்தி கிடைத்தது. ஏற்கனவே உடல்நலமில்லாதிருந்த அல் ஆதில் 1218ல் காலமானார். அவருக்குப் பிறகு அவர் மகன் மாலிக் அல் காமில் ஆட்சிக்கு வந்தார். அல் ஆதிலுன் உறவினர்கள் பல பகுதிகளை துண்டாடினார்கள். டமாஸ்கஸ் மட்டும் அய்யுபிட் சுல்தானை நிலை நிறுத்தியது.
                        அய்யுபிட்களின் எகிப்திய சுல்தானாக அல் மாலிக் அல் காமில் ஆட்சியில் அமர்ந்தார். தந்தை வேறொரு பகுதியிலிருக்க மார்டினில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைக்கு தந்தையின் வேண்டுகோளின்படி தலைமை ஏற்றார். எகிப்தின் வைசிராயராக இருந்தார். அப்போது அல் ஆதிலின் இன்னொரு மகன் அல் முஃஅஸ்ஸிம் இசா டமாஸ்கஸின் இளவரசராய் இருந்தார். அல் ஆதில் கெய்ரோவின் அரண்மனை கட்டும் பணியில் கவனமாய் இருந்த போது, அல் காமில் ஏறக்குறைய சுல்தான் போல் செயல்பட்டார். அதிகாரமிக்க மந்திரி இப்ன் ஷுக்ரை பதவியிலிருந்து நீக்கினார். அல் ஆதில் இற்ந்த போது அல் காமில் எகிப்தையும், அல் முஃஅஸ்ஸிம் பாலஸ்தீன் மற்றும் ட்ரான்ஸ்ஜோர்டானையும், மூன்றாவது சகோதரர் அல் அஷ்ரஃப் மூசா சிரியா மற்றும் அல் ஜஸீராவையும் நிர்வாகத்தில் வைத்திருந் தனர். ஐந்தாவது சிலுவைப்படை எகிப்தை தாக்க துவங்கியது.
                        அல் காமில் தலைமையில் டமெய்டாவில் சிலுவைப்படைகளை எதிர் கொண்டார். இதற்கிடையில் ஹக்கரி குர்திஷ் கமாண்டரான இமாதத்தீன் இப்ன் அல் மஷ்துப் குழப்பம் விளைவித்து ஏறக்குறைய அல் காமிலை ஆட்சியை விட்டு தூக்க இருந்தார். அதிலிருந்து தப்பித்து தன் மகன் அல் மஸ் உத் ஆட்சி செய்யும் ஏமனுக்கு தப்பிச் செல்ல இருந்தார். அதற்குள் சகோதரர் முஃஅஸ்ஸிம் சிரியாவிலிருந்து வந்து குழப்பத்தை சரி செய்தார். இதற்கிடையில் சிலுவைப்போரைத் தடுக்க பலவழியிலும் முயற்சி செய்தார். அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. கடுமையான பஞ்சமும், நைல் நதி வற்றிப் போனதும் அல் காமிலால் டமெய்டாவைக் காப்பற்ற முடியவில்லை. அல் மன்சூரா கோட்டையிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொண்டு மீண்டும் ஜெருசலத்தை விட்டுக் கொடுப்பதாகவும் சிலுவைப்படை எகிப்தை விட்டு வெளியேர வேண்டும் என்று சமாதானத்திற்கு முயன்றார். இம்முறையும் நிராகரிக்கப்பட்டு சிலுவைப்படை கெய்ரொவிற்கு படையெடுத்தது. அல் காமில் புத்திசாலித்தனமாக மக்களை பத்திரப்படுத்திக் கொண்டு, அப்போதைய நைல் நதியின் தடுப்புகளைத் திறந்து வெள்ளம் உண்டாக்கினார். வேறுவழியின்றி எட்டு ஆண்டு அமைதிக்கு ஒத்து வந்தார்கள் டமெய்டாவையும் திருப்பி தந்தார்கள்.