வியாழன், 25 ஜூன், 2015

மொகலாய வரலாறு 1

மொகலாயர்கள் வரலாறு-1
கூ.செ.செய்யது முஹமது
                                                                                 உங்களுக்கு சந்தர்ப்பம் அமைந்தால் வாழ்நாளில் ஒருமுறையேனும் விடுமுறைப் பயணத்தை இந்தியாவின் வடக்குப்பகுதியில் அமைத்துக்கொண்டு டெல்லி, ஆக்ரா, அஹம தாபாத், ஃபதேபூர்சிக்ரி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு போய் பாருங்கள். மொகலாயர்களின் ஆட்சியைப்பற்றி யாரும் உங்களுக்கு பக்கம்பக்கமாகச் சொல்லத் தேவையில்லை. அங்கிருக்கும் கோட்டைகளும், அரண்மனைகளும், தோட்டங்களும் மௌனமாய் உங்களுக்கு மொகலாயர்களைப் பற்றிச் சொல்லும் அல்லது பார்த்தவர்களைக் கேளுங்கள் சொல்வார்கள். மொகலாயர்களை வென்று இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் பார்த்து வாயடைத்து அனுபவங்களை பிரிட்டிஷ் நூலகங் களில் புத்தகமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இது மிகைப்படுத்தப்பட்டதல்ல ஒருமுறை வட இந்தியா பயணித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சரித்திரத்தை எழுத வருபவன் நன்றாக அதன் உண்மைகளை கூடுமான வரை அறிய முயற்சித்திருக்க வேண்டும் அல்லது  அறிந்திருக்க வேண்டும் என்று புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  குறிப்பாக  எழுதுகோல் எந்த விதத்திலும் அநியாயத்தின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது. காலமெல்லாம் நல்ல சிந்தனையில் இருந்து விட்டு சாகும்போது மது குடிக்க பணமில்லாமல் ‘அர்த்தமுள்ள ...............’ என்று எழுதிவிட்டுப்போன கவிஞர்களையெல்லாம் கண்டவர்கள் நாம். இந்த தொடர் ஏதோ வாந்தி எடுத்தவர்கள் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ போல அல்ல. சரித்திரத்தில் தவறு ஏற்பட்டபோதெல்லாம் இந்த மனித சமுதாயம் உலகில் பல இடங் களில் இரத்தம் சிந்தி இருக்கிறது.
                                                                                  அதுவும் இந்தியா போன்ற பல சமுதாயத்தினர் இணைந்து வாழும் ஒரு நாட்டில் மிகவும் கவனமாக எழுதப்பட வேண்டும். எழுதினார்களா? அதை அறிந்தால் வேதனையின் உச்சிக்கே போய் விடுவீர்கள்.  இதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 ல் பூனாவில் நடைபெற்ற ஆல் இந்தியா சரித்திர மாநாட்டில் ஒரு கமிட்டியை அமைத்து இந்திய வரலா ற்றை குறிப்பாக முஸ்லீம்களின் ஆட்சியை முடிந்த மட்டிலும் உண்மைகளைத் திரட்டி எழுதிட பணித் தது. இஸ்லாமுக்குப் பிறகு, ‘தீனே இலாஹி’ என்ற மதத்தைத் தோற்றுவித்தவர் அயோக்கியனில்லாமல் எப்படி ‘மாமன்னன்’ அக்பர் ஆனார். (அக்பரின் மற்ற திறமைகளை நாம் குறை கூறவில்லை. இவர் தான் முழு இந்தியாவை உருவாக்கினார்.) நேர்மையான கலீஃபாக்களின் ஆட்சிக்கு ஈடாக ஆட்சி செய்த ஔரங்கஸேப் எப்படி உண்மைக்குப் புறம்பாக தீய ஆட்சியாளரானார். ஜஹாங்கீர் இந்தியாவிலேயே பிறந்தவர். இந்திய கலாச்சாரத்தை மிகவும் விரும்பியவர். இந்தி பாடல்கள் கவிதைகளை நேசித்தவர். டெல்லியை ஆட்சி செய்த முதல் மன்னன் அய்பெக். மொகலாயப் பேரரசை ஆட்சி செய்த முதல் பேரர சர் பாபர். இவரிலிருந்து தொடர்ந்த மொகலாய வாரிசுகள் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்களாய் இருந்தார்கள், இந்திய மக்களை ஆண்டார்கள். இவைகள் ஆதார பூர்வமாக அப்போதைய உயர் அதிகா ரிகள், இராணுவத்தினரின் உத்தரவுகள், நாட்குறிப்புகள் மூலம் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட ஆவணங் களின் மூலமும், கவர்னர்கள், ரகசிய உளவாளிகள், செய்தி ஆசிரியர்களின் மூலமும் தெரிகிறது. இது அல்லாமல் அக்பர்நாமா. பாபர் நாமா போன்ற சுயவரலாற்றிலிருந்தும், அக்கால வெளிநாட்டு பயணி கள் வான் நோயர், டி லாயட், கோர்யட், நிக்கோலியோ மனுச்சி, பெர்னியர் மற்றும் தவர்னியீ ஆகியோ ரின் பயணக்குறிப்பிலிருந்தும் தெரிகிறது. இந்த தொடர் பிரிட்டிஷ் சரித்திர எழுத்தாளர்கள், போர்ச்சு கீஸிய கடல் பயணிகளின் அனுபவங்களை கேட்டும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து திரட்டியது.
                                           இங்கிலாந்தின் சார்பில் ராஜ்ய பிரதிநிதி மற்றும் வைசிராயாக பேரரசர் ஜஹாங்கீரின் சபையில் டெர்ரி என்பவரும், ஹாகின்ஸ் என்பவரும் இருந்திருக்கிறார்கள். போர்ச்சுகீசிய நாட்டின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மான்செர்ரட் சேவியர் மற்றும் சிலர் மொக லாய அரண்மனையில் தங்கி இருந்திருக்கிறார்கள். 1857 ல் நடந்த கலவரத்தில் அதிகமான மொகலாய ஆவணங்கள் அழிந்து போனாலும், எஞ்சியவைகள் ஐரோப்பிய நூலகங்களில் மௌனமாக மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் உண்மைகளைச் சுமந்து கொண்டு இருக்கின்றன. பேராசிரியர் ரஷ்புரூக் வில்லிய ம்ஸ், இந்தியா புராதன நாடுதான் என்பதை மறுப்பதற்கில்லை இந்து, புத்தமத கலவரங்களாலும், சிறிய பிரதேச மன்னர்களின் முறையற்ற ஆட்சியாலும் களையிழந்திருந்த இந்தியாவை நவீனத்திற்கு இட்டுச் சென்றது பதினைந்தாம் நூற்றாண்டின் வாஸ்கோடா காமாவின் வருகையும், மொகலாய பேரரசர்களின் ஆட்சியும்தான் என்று கூறி இருக்கிறார். ஒருவகையில் நிச்சயமாக மொகலாயர்கள் இந்தியாவை வேறு காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்களின் பிடியில் செல்லாமல் பாதுகாத்ததா கவே மதிப்பிடுகிறார்கள். மங்கோலியர்கள் டெல்லியை நாசப்படுத்தியதை உதாரணமாகக் கூறுகி றார்கள். நமது இந்திய சரித்திரத்திலேயே மிகவும் ஆர்வமான பகுதி மொகலாயர்கள் ஆட்சி தான். மொகலாயர்கள் மதத்தால் இஸ்லாமையும், கலாச்சாரத்தால் பெர்ஷியாவையும் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அதுவும் ஔரங்கஸேப் குறிப்பாக மதப்பற்றுள்ளவராக இருந்தார்.
இந்த தொடரின் ஆதார மூலங்கள் :
ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால்                                 ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் லண்டன்                                   ஜர்னல் ஆஃப் தி ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸ், லண்டன்                                அலிகார் முஸ்லிம் யூனிவர்சிடி                                                                                                  மொகல் எம்பரர் ஆஃப் திமூர்                                                                      
 மெமோயர்ஸ் ஆஃப் ஸெஹிருத்தீன் பாபர்                                                           ஜஹாங்கீர் நாமா                                                                                        
ஹிஸ்டரி ஆஃப் ஹுமாயூன்                                                                              
 ஹிஸ்டரி ஆஃப் ஔரங்கஸேப்                                                                        
 மற்றும் பல பிரிட்டன் லைப்ரரி ஆன் லைன் புத்தகங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக