வெள்ளி, 10 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 22

முஹி உத் தின் முஹம்மது ஔரங்கஸேப் ஆலம்கீர்
கூ.செ.செய்யது முஹமது
இவரின் வரலாறு நீ......ண்டதாக இருக்கலாம். காரணம் ஒரு திரைப்படம், நாவலுக்குண்டான விறுவிறுப்பு கொண்டது. மேலும் இவரது வரலாற்றி னுடனே சிவாஜி என்பவனின் காலகட்டமும் இணைந்தது. மீர் ஜும்லா என்ற கர்நாடக பிரதம மந்திரியின் வரலாறும் உள்ளது. ஔரங்கஸேப் மொகலாய பேரரசர்களிலேயே அதிக பிரச்சினைகளின் இடையே ஆட்சி செய்தவர்.
   ஷாஜஹான், மும்தாஜ் மஹல் தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். ஷாஜஹான் தனது குடும்பத்துடன் குஜராத்தில் உஜ்ஜைனிக்குப் போகும் வழியில் தோஹத் என்ற இடத்தில் 1618 அக்டோபரில் 24 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறந்தார். ஷாஜஹான் தனது தந்தையிடமிருந்தும், நூர்ஜஹானின் சூழ்ச்சியிலிருந்தும் தப்பிக்க தெலுங்கானா, ஒரிஸ்ஸா, பெங்கால், டெக்கானுக்கு இடையே ஆபத்தான பாதையில் மனைவி, குழந்தைகளுடன் ஓடிக்கொண்டிருந்தார். உதவியற்று இருந்தபோது பணயமாக மகன்கள் தாரா ஷிகோவையும், ஔரங்கஸேப்பையும் ஜஹாங்கீரின் தர்பாரில் விட்டு வைத்தார். 1626 ல் ஜூன் மாதம் முதல் 1628 பிப்ரவரி வரை இருவரும் நூர்ஜஹானின் கண்காணிப்பில் இருந்தனர். ஜஹாங்கீர் இறந்த பின்னர் தான் குழந்தைகள் பெற்றோரிடம் திரும்பினர். ஔரங்கஸேபுக்கு தினம் 500 ரூபாய் செலவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
 பத்து வயதான போது ஷாஜஹானிடம் வைஸ்ராயராக இருந்த சஃதுல்லா கான் என்பவரிடம் கல்வி கற்றார். இன்னொரு ஆசிரியர் கிலானைச் சேர்ந்த மீர் முஹம்மது ஹாஷிம் ஆவார். இவர் பனிரெண்டு ஆண்டுகள் மக்கா, மதீனாவில் பயின்றவர். ஹகீம் அலி கிலானி என்பவரிடம் மருத்துவமும் பயின்ற ஹாஷிம் இந்தியா வந்து அஹ்மதாபாதில் நீதிபதியாகவும் இருந்தார். ஷாஜஹானின் ஆட்சிகாலம் முடியும் வரை ஹாஷிம் ஔரங்கஸேபுக்கு ஆசிரியராக இருந்தார். எதையும் விரைவில் கற்றுகொள்ளும் ஆவலுள்ள ஔரங்கஸேப் திருக்குரானையும், ஹதீஸ் களையும் மனப்பாடம் செய்திருந்தார். எந்த நேரத்திலும் குறிப்பிட்ட அத்தியாயத்தின் எண்களுடன் சொல்லக்கூடியதுடன் பெர்ஷியா, அரபு மற்றும் ஹிந்தி மொழிகள் யாவும் அறிந்திருந்தார். அரபு மொழியில் திருக்குரான் மொத்தத்தையும் தன் கையால் எழுதக்கூடியவர். அப்படி எழுதப்பட்டு உயரிய முறையில் தொகுக்கப்பட்ட இரு பிரதிகளை மக்காவுக்கும் ,மதீனாவுக்கும் கொடுத்தார். மூன்றாவது பிரதியை டெல்லியிலுள்ள நிஜாமுத்தீன் அவுலியா நினைவிடத்திற்கு கொடுத்தார். மேலும் பல பிரதிகளை விற்றும், இஸ்லாமியர்கள் அணியும் தலைத் தொப்பியைப் பிண்ணி விற்றும் அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர் உணவு உண்டார். அரசு சம்பந்த மான அனைத்து கடிதங்களையும் தானே தன் கையால் எழுதுவார்.
யானையுடனான ஔரங்கஸேபின் வீரச்செயல் இந்தியா முழுவதும் மிகப்பிரபல்யமானது. ஷாஜஹான் யமுனா நதிக்கரையில் அமர்ந்து யானை சண்டைகளைப் பார்ப்பதை மிகவும் விரும்புவார். அப்படி ஒருநாள் சுதாகர், சூரத் சுந்தர் என்று பெயரிடப்பட்டிருந்த பெரிய யானைகளின் சண்டையை மூன்று மகன்களுடன்பார்த்துக் கொண்டிருந்தார். சண்டை யின் தீவிரத்தில் குதிரை மீதமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஔரங்க ஸேப் தன்னை அறியாமல் யானைகளின் மிக அருகில் சென்று விட்டார். சண்டையின் போக்கிலிருந்த சுதாகர் என்ற யானை பலமாக பிளிறிக் கொண்டு ஔரங்கஸேபை நோக்கி திரும்பியது. பனிரெண்டு வயதே ஆன ஔரங்கஸேப் சற்றும் பயப்படாமல் கையிலிருந்த ஈட்டியால் யானை யின் தலையில் தாக்கினார். மேலும் பிளிறிய யானையின் ஓசையால் அனைவரும் சிதறி ஓடினர். யானை ஔரங்கஸேபை நோக்கி பிளிறிய வண்ணம் வர ஔரங்கஸேபும் குதிரையிலிருந்து இறங்கி உருவிய வாளுடன் பயப்படாமல் யானையை எதிர்கொண்டார். யானையுடன் தனித்து விடப்பட்ட ஔரங்கஸேபை ஷாஜஹானின் தனி வீரர்கள் வந்து பாதுகாத்தார்கள். ஷாஜஹான் மகனைப் பாராட்டி ‘பஹதூர்’ என்று புகழ்ந்து எடைக்கு எடை தங்க நாணயங்களும், இரண்டு லட்ச ரூபாய் பெருமானமுள்ள பிற பொருள்களும், சுதாகர் யானையையும் ஔரங்கஸேபுக்கு பரிசளித்தார். பதினாறு வயது கடக்கும் முன்பே சிகப்பு நிற கூடாரம் அமைத்துக் கொள்ளும் அந்தஸ்தும், பத்தாயிரம் குதிரை மற்றும் நான்காயிரம் வீரர்களின் நிர்வாகமும், டெக்கானின் கவர்னராக வும் பதவி பெற்றார். 1635 ல் முதல்முறையாக இராணுவ திறமைக்காக பந்தேலா போரில் ஜுஜார் சிங்கையும், அவர் மகன் விக்ரமஜித்தையும் எதிர்த்து கலந்து கொண்டார். 
பழைய ஆக்ராவிலிருந்து டெக்கான் செல்லும் வழியில் இடப்புறம் குவாலியரைத் தவிர்த்து நீண்ட பெரும் காட்டுப்பகுதி பந்தேல்கண்ட் ஆகும். கஹர்வார் ராஜபுத்திரர் களின் வழி வந்த பழைய பந்தேலா பழங்குடியினரின் பெயரால் இப்பகுதி அழைக்கப்படுகிறது. அங்கு நியமிக்கப்பட்டிருந்த மூன்று மொகலாய தளபதிகள் ஒரே தகுதியுடைய வர்கள் ஆனதால் அவர்களி டையே ஒத்துப்போவதில் பிரச்சினை இருந்தது. அதனால் ஷாஜஹான், ஔரங்கஸேபை அங்கு நியமித்தார். ஜுன்ஜ்ஹார் சிங்கை எதிர்த்து உர்ச்சா, தாமுனி ஆகிய இடங்களைக் கைப்பற்றினார். ஜுன்ஜ்ஹார் சிங் கோண்ட்வானாக்களால் கொலை செய்யப்பட்டார். அவரின் இரு மகன்களும், பேரனும் இஸ்லாமைத் தழுவினார்கள். மொகலாயர்கள் எப்போதுமே பெர்ஷியர்களுடன் இரத்த உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஷாநவாஸ் கான் என்பவரின் மகள் தில்ரஸ் பானுவை 1637 ல் ஔரங்கஸேபுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
1657 ல் உடல்நலக் குறைவால் குழந்தைப் பேற்றின் போது, தில்ரஸ் பானு பேகம் இறந்தார். இரண்டாவதாக காஷ்மீரின் ரஜௌரி மாகாண மன்னர் ராஜா ராஜு என்பவரின் மகள் நவாப் பாய் என்னும் ரஹ்மத்துன்னிசா என்பவரை ஔரங்கஸேப் மணந்தார். இவர் தான் பின்னாளில் மொக லாய வாரிசான முதலாம் பஹதூர்ஷாவின் தாயார் ஆவார். சில அரசியல் மற்றும் குடும்ப காரணங்களால் கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்திருந்த இவர் 1691 இறக்கும் வரை டெல்லியில் வசித்தார். ஔரங்க ஸேபின் இன்னொரு மனைவி பெயர் ஔரங்கபாதி மஹல் ஆகும். இவர் ஔரங்காபாதைச் சேர்ந்ததால் இந்த பெயரில் அழைக்கப்பட்டார். உயிர்கொல்லும் ப்ளேக் நோயால் 1688 ல் பிஜப்பூரில் மரணமடைந்தார். அரசு அதிகாரமில்லாத இன்னொரு மனைவி உதைய்புரி மஹல் ஆவார். இவர் தான் கம் பக் ஷின் தாயார். வயதான ஔரங்கஸேபுக்கு மிகவும் பிடித்த இளம் மனைவியாக இருந்தார். இவரின் அழகிலும், அன்பிலும் கவரப்பட்ட ஔரங்கஸேப் கம் பக் ஷின் பல தவறுகளை மன்னித்தார். மேலும் ஹிராபாய் என்ற மனைவியும் இருந்தார். ஹிராபாய் ஔரங்க ஸே பின் அத்தை (ஷாஜஹானின் சகோதரி) வீட்டில் இருந்த அடிமைப் பெண் என்றும், அவருடனான ஔரங்கஸேபின் காதல் சிறுவயதில் குரான் படித்திருந்த ஒரு தீவிர முஸ்லீமுக்கு உண்டானதாகவும் நம்பும் படியும் இல்லை. அதனால் அந்த ஹிராபாய், ஔரங்கஸேபுக்கு மது       கொடுத்தது போன்ற நீண்ட கதைகளை தவிர்த்து விடுவோம்.                ஔரங்கஸேபுக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர். அதிகாரபூர்வமான மனைவி தில்ரஸ் பானு பேகத்திற்கு, ஸெபுன்னிசா (1638 ல் தௌலதா பாதில் பிறந்து 1702 ல் டெல்லியில் இறந்து ‘முப்பதாயிரம் மரங்கள்’ என்னும் காபூலீ நுழைவாயிலில் புதைக்கப்பட் டார். திருக்குரானை மனப்பாடம் செய்து ஔரங்கஸேபின் கையால் 30,000 தங்கத் துண்டுகளை பரிசாக  பெற்றார்.), ஜீனத்துன்னிசா (பதிஷா பேகம் என்றும் அழைக்கப் பட்ட இவர் 1643ல் பிறந்தார். தன் சொந்த செலவில் டெல்லியில் கட்டிய ‘ஜீனத்துல் மசூதி’ யின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டார்.), சப்தத்துன் னிசா (1651 ல் பிறந்த இவர் தாரா ஷிகோவிம் இரண்டாவது மகன் ஸிபிர் ஷிகோவை மணந்தார். 1707 ல் இறந்தார்), என்ற மகள்களும், முஹம்மது ஆஸம் (1653 ல் பிறந்து 1707 ல் இறந்தார்), முஹம்மது அக்பர் (1657 ல் ஔரங்காபாதில் பிறந்து, 1704 ல் பெர்ஷியாவில் இறந்தார்) என்ற மகன்களும் பிறந்தார்கள். மனைவி நவாப் பாய்க்கு முஹம்மது சுல்தான் (1639 ல் கதுராவில் பிறந்து, சிறை வைக்கப் பட்ட போது 1676 ல் இறந்து போனார்.), முஹம்மது முஃஅஸ்ஸம் (ஷா ஆலம் என்றும் அழைக்கப்பட்ட இவர் ஔரங்கஸேபுக்குப் பிறகு பஹதூர் ஷா என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார். 1643 ல் பிறந்து 1712 ல் இறந்தார்.) என்ற மகன்களும், பத்ருன்னிசா (1647 ல் பிறந்து, 1670 இறந்த இவரும் திருக்குரானை சிறப்பாக ஓதக் கூடியவர்.) என்ற மகளும் பிறந்தார்கள். மனைவி ஔரங்காபாதிற்கு ஒரே குழந்தையாக மெஹ்ருன்னிசா (1661 ல் பிறந்து 1706 ல் இறந்த இவர் முராத் பக் ஷின் மகன் இஸித் பக் ஷை மணந்திருந்தார்.) என்பவர் பிறந்தார். மனைவி உதைய்புரி மஹலுக்கு, முஹம்மது கம் பக் ஷ் (1667 ல் டெல்லியில் பிறந்து 1709 ல் ஹைதராபாதில் இறந்து போனார்.) என்ற மகன் பிறந்தார்.
தீக்காயமடைந்து நோயிலிருந்த சகோதரி ஜஹனாராவைக் காண ஔரங்கஸேப் ஆக்ரா வந்தார். அத்தருணத்தில் அவரின் பதவி நீக்கப் பட்டு, தகுதி, ஊக்கத் தொகை அனைத்தும் நிறுத்தப்பட்டது. அதற்கான காரணம் முட்டாள்தனமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும், பேரரசரின் அனுமதியின்றி சில முடிவுகளை எடுத்ததற்காகவும் என்று கூறப்பட்டது. ஔரங்கஸேப், ஷாஜஹான் அளவுக்கதிகமாக தாரா ஷிகோவிடம் நெருங்கி இருப்பதாகவும், அதனால் தந்தையுடன் தனது தனிமை மற்றும் ஆதரவும் பாதிக்கப்படுவதாகக் கூறி ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. 1646 ல் பல்க் பகுதியில் ஷாஜஹானின் இளைய மகன் முராத் பக் ஷ் தலைமையில் 15,000 வீரர்களுடன் போரிடப்பட்டது. அவர் வெற்றி பெற்று பலமுறை தந்தைக்கு கடிதம் எழுதி, தன்னை திரும்ப அழைக்குமாறு வேண்டினார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஷாஜஹானால் மறுக்கப்பட்டது. இருபத்தி இரண்டு வயதான முராத் பஹதூர் கானின் பொறுப்பில் பல்கை விட்டு விட்டு அனுமதியின்றி வெளியேறினார். பின்னர் ஷாஜஹானால் சஃதுல்லா கான் அனுப்பப்பட்டு, முறையான அதிகாரிகளை நியமித்து நிலைமை சரி செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, குஜராத்தின் நிர்வாகத்திலிருந்த ஔரங்கஸேப், மால்வாவின் கவர்னர் ஷாயிஸ்தா கானை அங்கு மாற்றப்பட்டு, வைஸ் ராயராக பல்கில் நியமிக்கப்பட்டார். பல்க் பகுதி பல பிரச்சினைகளையும், போர்களையும் அவ்வப்போது சந்தித்து மொகலாய வீரர்களின் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. 1648 லிருந்து 1652 வரை மீண்டும் டெக்கானின் வைஸ்ராயராக ஆகும் வரை ஔரங்கஸேப் முல்டானின் கவர்னராகவும் இருந்தார். அக்காலகட்டத்தில் ஔரங்க ஸேப் 1649 மற்றும் 1652 ல் இருமுறை பெர்ஷியர்களை எதிர்க்க கந்த ஹாருக்கு அழைக்கப்பட்டார். 1650 லிருந்தே ஔரங்கஸேப் பரவலாக புகழடைந்தார். இவரின் தனிசெயலாளராக காபில் கான் என்ற மற்றொரு பெயருடனும், ‘முன்ஷி உல் மமாலிக்’ என்ற பதவியும் அளிக்கப்பட்ட ஷெய்க் அபுல் ஃபத் இருந்தார். தன் கண் பார்வை பழுதடையும் வரை இருபத்தாறு ஆண்டுகள் அபுல் ஃபத் ஔரங்கஸேபிடம் சிறந்த உதவியாள ராக இருந்தார். இவரால் பாதுகாக்கப்பட்ட பல ஆவணங்களிலிருந்து தான் ஔரங்கஸேபின் வாழ்க்கை வரலாறு தெரிய வந்தது.
மலிக் அம்பர் அஹ்மத்நகரை புணரமைத்த போது தலைநகரை சிறு கிராமமாக இருந்த கிர்கி என்ற பகுதியில் அமைத்தார். அங்கு சுல்தான் தங்குவதற்காக ஒரு அரண்மனையும், அதை ஒட்டி தனக்கும் ஒரு மாளிகையைக் கட்டினார். மேலும் மக்களை அங்கு குடியமர்த்த தண்ணீர் மிக அவசியமாக இருந்தது. அதற்காக அர்சூலுக்கருகிலுள்ள ஆற்றி லிருந்து கால்வாய் மூலம் நீரைக் கொண்டு வந்து மிகப்பெரிய தொட்டி யில் சேமித்தார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராமம் வளர்ந்தது. இரண்டாம் முறையாக ஔரங்கஸேப் டெக்கான் பகுதியின் அதிகாரத்திற்கு வந்த போது, தௌலதாபாதில் சிறிய குழுவுடனே தங்க முடிந்தது. பல அதிகாரிகளுடன் இருந்து ஆட்சி செய்ய நல்ல இடத்தை தேடிய ஔரங்கஸேபுக்கு கிர்கி தோதாக இருந்ததால் நீர்த் தொட்டிக்கு அருகில் ஒரு அரண்மனையைக் கட்டினார். மேலும் அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் நிலங்களை அளித்து வீடுகள் கட்டிக் கொடுத்தார். அவர் கிர்க்கியின் அரண்மனைக்கு குடியேறிய பிறகு, மிக வேகமாக அப்பகுதி வளர்ச்சி அடைந்தது. பின்னர் ஔரங்கஸேபின் பெயர் தாங்கி ‘ஔரங்காபாத்’ என்று அழைக்கப்பட்டது. 
பலமுறை தாக்குதலுக்குள்ளான டெக்கானில் வளர்ச்சியின்றி வரி வசூலில் மிகவும் பின் தங்கி இருந்தது. பலமுறை ஔரங்கஸேப் தந்தை ஷாஜஹானிடம் உதவித் தொகை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இவரையே சமாளித்து சில வரிகளை உயர்த்தி வசூலிக்கச் சொன்னார். அதில் ஔரங்கஸேப் ஈடுபாடு காட்டாததால் ஷாஜஹான் கடிந்து கொண்டார். ஔரங்கஸேபின் எதிரிகளின் தூண்டுதல்களால் பல விவகாரங்களில் அவரின் செயல் ஷாஜஹானிடத்தில் பல அவநம்பிக்கை யும், சந்தேகத்தையும் விளைவித்தது. ஷாஜஹானுக்குப் பிறகு, சகோதரர் தாரா ஷிகோ ஆட்சிக்கு வர ஆர்வம் கொண்டிருந்தார். ஷாஜஹானும் அவரைக் கொண்டுவர விரும்பினார். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஔரங்கஸேப்பை விழா மற்றும் சிறப்பு கூட்டங்களுக்கு தலைநகர் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். நாம் ஏற்கனவே சிலவற்றை ஷாஜஹான் வரலாற்றில் பார்த்துவிட்டதால் சிலவற்றை தவிர்த்து விடுவோம். ஒருவரை ஆகவில்லை என்றானால் பல சிறு சிறு விவகாரங்கள் கூட பிரச்சினையாகத் தோன்றும். அது போல் ஷாஜஹான், ஔரங்கஸேப் உண்டான சிறு பிரச்சினைகள் பல பக்கங்களுக்கு உள்ளது. அது தேவையில்லை.   
தனக்கு தடங்கலாக இருந்த அனைத்து நபர்களையும் புறம் தள்ளிய ஔரங்கஸேப் 1658 ஜூலையில் ஆட்சிக்கு வந்தார். வெள்ளிக்கிழமை தொழுகையில் ஔரங்கஸேப்பின் பெயர் மொழியப்பட்டு, நாணயமும் புதியதாக வெளியிடப்பட்டு, “அபுல் முஸஃப்ஃபர் முஹி உத் தின் முஹம்மது ஔரங்கஸேப் பஹதூர் ஆலம்கீர் பாதுஷா இ காஸி “ என்று பட்டம் சூட்டப்பட்டார். ராஜகுடும்ப பெண்களான பாதுஷா பேகம் 5,00,000 ரூபாயும், ஸெபுன்னிஸா 4,00,000 ரூபாயும், பதுருன்னிஸா 1,60,000 ரூபாயும், ஸுப்ததுன்னிஸா 1,50,000 ரூபாயும், இளவரசர்களான முஹம்மது ஆஸம் 2,00,000 ரூபாயும்,10,000 குதிரைகளும், முஹம்மது சுல்தான் 3,00,000 ரூபாயும், யானைகள் மற்றும் நகைகளும், முஹம்மது முஃஸ்ஸம் 2,00,000 ரூபாயும், முஹம்மது அக்பருக்கு 1,00,000 ரூபாயும் வழங்க ஆணையிட்டார். மேலும் உயரதிகாரிகளான அமீருல் உமராஃபாஸில் கான்ஸமான், சாஃதுல்லாஹ் கான் மற்றும் ராஜா ரகுநாத் ஆகியோருக்கும் ராஜஅங்கியும் வழங்கி சிறப்பித்தார். பதவியேற்பு விழாவை இரண்டு மாதங்கள் விருந்தளித்து கொண்டாடினார்கள்.
பல வெளிநாட்டு முஸ்லீம் தூதுவர்களும் வந்து வாழ்த்தினார்கள். அவர்களும் சிறப்பு அங்கி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். டச்சு மற்றும் ஃபிரான்சு நாட்டு பிரதிநிதிகளும் வந்து மரியாதை செலுத்தினார்கள். ஆரம்பத்தில் பல போர்கள் நடந்ததால், மொகலாய நிர்வாகம் சற்று கவனம் இல்லாமல் போனது. ‘ராஹ்தாரி’ எனப்படும் சாலை கடக்கும் (TOLL) வரி, வெறும்காலி நிலம் மற்றும் வீடு கட்டிய நிலத்திற்கான ‘பண்டாரி’ வரி என்று எண்பது வகையான வரிகள் விதிக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் ஔரங்கஸேப் நீக்கினார். சோளத்தின் மீதிருந்த வரியை நீக்கி உணவுப் பொருள் விலையை வீழ்த்தினார். மது விற்பனை, விபச்சார, சூதாட்டவிடுதிகளை தடைசெய்து முஸ்லீம் ஞானிகளிடமும், ஹிந்து யாத்ரீகர்களிடமும் நற்பெயர் பெற்றார். நாணயங்களில் ‘கலிமா’ வரிகளை பொறிப்பதை நிறுத்தினார். மது அருந்தி, அருவருப்பான நடனம் ஆடிக் கொண்டாடும் பெர்ஷிய நௌரோஸ் பண்டிகையை தடை செய்தார். பழைய பள்ளிவாசல்களை புதுப்பித்து அரசு ஊதியத்தில் இமாம்களையும், முஃஅத்தீன்களையும் (தொழுகைக்கு அழைப்பவர்) நியமித்தார். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து சமூக பொதுத்துறைகளும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
தனது முன்னோர்களின் ஆட்சியில் அதிக கவனம் செலுத்தப்படாமல் இருந்த சுன்னிப்பிரிவு இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாகக் கடைபிடித்து வெற்றி கொண்டதால் இன்றுவரை பல உலகநாடுகளின் பாராட்டை பெற்று வருகிறார். ஊழலில் ஊறிக்கிடந்த பல மாகாண கவர்னர்களையும், வைஸ்ராயர்களையும் இடம் மாற்றினார். கீழ் பணிபுரிந்த அனைவரும் ஔரங்கஸேப்புக்கு உண்மையாக உழைத்தனர். அவரும் பெருமகிழ்ச்சி கொண்டு பல பதவி உயர்வும், பரிசுகளையும் கொடுத்து நன்றியை வெளிப்படுத்தினார். லாகூரின் கவர்னராக இருந்த ராஜா ஜெய்சிங் மேலும் சம்பார் பகுதிக்கும் கவர்னராக ஆக்கப்பட்டார். டெக்கானுக்கு ஷாயிஸ்தா கானும், மஹபத்கான் குஜராத்துக்கும், ஷெய்க் மீர் காபூலுக்கும், டெல்லிக்கு டானிஷ்மண்ட் கானுக்கும், லாகூருக்கு கலீலுல்லாஹ்வும், அலஹாபாத்துக்கு மீர் பாபாவும், பாட்னாவுக்கு லஷ்கர்கானும், காஷ்மீருக்கு  தைனத் கானும், சிந்துவுக்கு ஷாஹ் ஷுஜாவும் நியமிக்கப்பட்டார்கள். கச் பகுதியின் ராஜாவால் மொகலாயப் பகுதிகளான பீகாரும், அஸ்ஸாமும் கையகப்படுத்தப்பட்டது. மீர் ஜும்லாவின் தலைமையில் படையெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. மீர் ஜும்லா மேலும் சென்று சீனாவை கைப்பற்ற எண்ணினார். ஆனால் கடுமையான மழை காரணமாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு திரும்பிவிட்டார். வயதின் காரணமாக 1663 மார்சில் டெக்கானை அடையும் முன் கிஸ்ர்பூரில் மரணமடைந்தார். 
  இங்கு மீர் ஜும்லாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். பிஜப்பூர், கோல்கொண்டா அரசியலில் ஒரு மிக்கிய புள்ளியாக இருந்த இவர் கோல்கொண்டாவின் வஸீராக இருந்தார். இவர் பெர்ஷியாவின் இஸ்ஃபஹானைச் சேர்ந்த சையத் வம்சத்தின் எண்ணெய் வியாபாரின் மகனாவார். இளமையில் ஷியா பிரிவினரின் பல வெற்றிகளைக் கேள்விப்பட்டிருந்த மீர் ஜும்லா எதிர்காலம் வேண்டி, 1630 ல் டெக்கான் சுல்தான் பகுதிக்கு வந்தார். ஒரு வைர வியாபாரியான இவருக்கு செல்வம் பெருவாரியாக இருந்தது. அதல்லாமல் இவரின் தனிப்பட்ட திறமைகள் அப்துல்லா குத்ப் ஷாவால் கவனிக்கப்பட்டு, பிரதம மந்திரியாக ஆக்கப் பட்டார். இவர் தொழில், இராணுவம், தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியடைந்தார். கர்நாடகாவுக்கு பொறுப்பேற்ற இவர் பல மாற்றங்களைச் செய்தார். தனது சொந்த முயற்சியால் ஐரோப்பிய துப்பாக்கி வீரர்களையும், பீரங்கிகளையும் கொண்டு பலப்படுத்தி சுல்தானால் முன்னேற முடியாமல் போன கடப்பாவை வெற்றி கொண்டார். மலைக்கோட்டையான கண்டிகோட்டா, கிழக்கு கடப்பாவில் சித்தௌட், வட ஆற்காட்டில் சந்திரகிரி மற்றும் திருப்பதியை வென்றார். தென்பகுதியில் பழைய கோவில்களில் புதையுண்டிருந்த பல பொக்கிஷங்களை அள்ளி வந்தார். செம்பாலான பல இந்து கடவுள் சிலைகளை உருக்கி பீரங்கிகளைச் செய்தார். பல இடங்களைத் தோண்டி வைரங்களை கண்டு பிடித்தார். தென் பகுதியின் இணையற்ற பெரும் செல்வந்தரானார். மீர் ஜும்லா ஷாஜஹானிடம் பணிக்கு சேர்ந்த போது, பதினைந்து லட்ச ரூபாய் அன்பளிப்பு செய்தார். அதே தொகையை ஔரங்கஸேபுக்கும், அவர் மகனுக்கும் கொடுத்தார். 300 மைல் நீளம், 50 மைல் அகலத்தில் கர்னாடகாவில் வைரச் சுரங்கங்களுடன், ஆண்டுக்கு ரூபாய் 40 லட்சம் வருவாய் வரும் சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். திறமையான 5000 குதிரை வீரர்கள், 20,000 காலாட்படை, பீரங்கிப் படை, போர் பயிற்சி பெற்ற யானைப்படை என்று ஒரு இராணுவத்தையும் அமைத்திருந்தார்.
மீர் ஜும்லாவின் செல்வத்தில் பங்கும், அவ்வப்போது இராணுவ உதவியும் கிடைத்தும், கர்நாடகாவில் தனிச் செல்வாக்கிலிருந்த மீர் ஜும்லாவின் சிறப்பு சுல்தான் குத்ப் ஷாவைக் கலவரப்படுத்தியது. இதனால் பங்கில் பிரச்சினை எழுப்ப்பட்டு, மீர் ஜும்லாவுக்கு செய்யும் சேவைக்கு ஏற்ப சுல்தானால் ஊதியம் மட்டுமே தரப்படும் என்றும் மற்ற அனைத்தும் சுல்தானுக்கு சேர வேண்டும் என்று பிரச்சினை உருவானது. தன் சொந்த உழைப்பால் பல முதலீடுகளைச் செய்து வெற்றி கண்ட மீர் ஜும்லாவுக்கு தன் எஜமானனின் பலவீனம் நன்கு தெரியும். மீர் ஜும்லா சுல்தானால் அழைக்கப்பட்டு, கோல்கொண்டா சென்றார். இவர் வந்தால் கைது செய்து கண்களைப் பிடுங்க திட்டம் தீட்டி சுல்தான் தயாராய் இருந்தார். திட்டம் செயலாவதற்கு முன்பு சுதாரித்துக் கொண்டு மீர் ஜும்லா திறமையாகத் தப்பித்துச் சென்றார். இதன் பிறகு, எத்தனையோ முறை குத்ப் ஷா அழைத்தும் மீர் ஜும்லா கோல்கொண்டா செல்லவில்லை. இதை அறிந்த பிஜப்பூர் சுல்தான் ஆதில் ஷா கர்நாடகாவை மீர் ஜும்லாவே வைத்துக் கொள்ளட்டும் என்றும், வைரம் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த கழுத்தணியை பரிசளித்து தன்னிடம் இருக்க அழைத்தார்.  மீர் ஜும்லா வுக்கு அதில் விருப்பமில்லாததால் டெக்கானின் இரு சுல்தான் களிடமிருந்து பாதுகாப்பு வேண்டி பெர்ஷியாவை நாடினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. மீர் ஜும்லா மொகலாயர்களின் உதவியை நாடினார். அதேநேரத்தில் வளம் கொழிக்கும் கோல்கொண்டாவைப் பிடிக்க ஆர்வமாய் இருந்த ஔரங்கஸேபும் மீர் ஜும்லா மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும், அவரின் செல்வங்களுக்குப் பாது காப்புக்கும் உத்திரவாதம் அளிப்பதாகவும், அதற்கு பிரதியாக அவரை மொகலாய தர்பாரில் பணி செய்யுமாறும் அழைத்தார். இதைத் தொடர்ந்து ஔரங்கஸேப் விவேகமான தரகராக முஹம்மது முஃமீன் என்பவரை ரகசிய பணி ஒப்பந்தம் ஒன்றைக் கொடுத்து நேரடியாக மீர் ஜும்லாவிடம் அனுப்பினார்.
  இதைகேள்விப்பட்ட குத்ப் ஷா பதறிப்போய் நம்பகமான அதிகாரிகளை அனுப்பி மீர் ஜும்லாவை கட்டுப்படுத்தினார். அதற்கு மீர் ஜும்லா அடுத்த இரண்டாண்டுகளில் ஒன்று தான் குத்ப் ஷாவுக்கு பணி செய்யலாம் அல்லது இந்தியாவை விட்டு போகலாம் என்று இருப்பதாகக் கூறினார். இதற்கிடையில் மொகலாயர்களுக்கும், மீர் ஜும்லாவுக்கும் இடையே ரகசியமாக தூதுவர்கள் செய்தி பறிமாறிக்கொண்டிருந்தார்கள். ஓராண்டில் தனக்கான துறைமுக வரி பாக்கிகளை வசூலித்துக் கொண்டு மொகலாயப் பணியில் இணைவதாக ஒப்புக் கொண்டார். இதற்குள் மீர் ஜும்லாவின் நடவடிக்கை பிஜப்பூர் சுல்தானுக்கும் தெரிய வர இரண்டு சுல்தான்களும் கூட்டாக இணைந்து மீர் ஜும்லாவைத் தாக்க முடிவெடுத் தார்கள். மீர் ஜும்லா தாமதிக்காமல் ஔரங்கஸேபுக்கு, தான் ஷாஜ ஹானுக்கு கீழ் பணிபுரிய ஒப்புதல் அளிப்பதாகவும், தன்னை சுல்தான்களிடமிருந்து காப்பாற்றுமாறும் கடிதம் எழுதினார். ஔரங்க ஸேப் சுல்தான்கள் மீர் ஜும்லாவை தாக்கும் வரை பொறுமையாய் இருந்து, அப்புறம் தான் சம்மதித்து பதில் கடிதம் அனுப்பினார். 
      மீர் ஜும்லாவின் மகன் முஹம்மது அமீன் தந்தையின் அபரிதமான சொத்துக்களின் காரணமாக திமிர் பிடித்தவனாக இருந்தான். கோல் கொண்டா சுல்தான் குத்ப் ஷாவிடம் பணியிலிருந்த காலங்களில், அவரை மன்னராகக்கூட மதிக்காமல் உரக்கப் பேசுவது, மறுத்துப்பேசுவது என்று தான் ஏதோ இளவரசர் என்பது போல் நடந்து கொள்வான். இப்போது அவன் நன்கு மது அருந்திவிட்டு, சுல்தானின் அறையிலேயே அலங்கோல மாக உறங்கினான். இனி பொறுப்பதற்கு ஆகாது என்று சுல்தான், முஹம்மது அமீனின் குடும்பத்தைச் சிறைப்பிடித்து, சொத்துக்களைப் பறிமுதல் செய்தார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதிய ஔரங்கஸேப் ஷாஜஹானிடம் போருக்கு உத்தரவு கேட்க, அவர் மீர் ஜும்லாவுக்கு 5000 குதிரைவீரர்களுக்கு தகுதியாகவும், அவர் மகனுக்கு 2000 குதிரைவீரர்கள் தகுதியாகவும் கௌரவித்து மொகலாய தர்பாரில் பணி நியமன உத்தரவையும் வழங்கி, கையோடு சுல்தானுக்கு மீர் ஜும்லா வின் மீது நடவடிக்கையோ, சொத்துப் பறிமுதலோ செய்யக்கூடாது என்றும், அவர் மகனையும் குடும்பத்தையும் விடுதலை செய்ய வேண்டு மென்றும் உத்தரவிட்டார். மொகலாய உத்தரவை செயல்படுத்தும் முன் சுல்தான் படைகளை கோல்கொண்டா எல்லை நோக்கி நகர்த்தினார். மொகலாயர்களின் அனைத்து உத்தரவுகளையும் மீறி குத்ப் ஷா பொரில் இறங்கினார். மொகலாயர்கள் மீர் ஜும்லாவுக்கு ஆதரவாக வருகிறார்கள் என்று அறிந்தவுடன் பிஜப்பூர் சுல்தான் விலகிக் கொண்டார். ஜுன்னார் பகுதியில் சிவாஜி தொந்திரவு கொடுத்த போதிலும் மொகலாயப் படைகள் முன்னேறின. சுல்தானின் படைகளை வெற்றி கொண்டு மொகலாயர்கள் வளமான, பல தலைவர்களையும், அதிகார்களையும், வைர வாணிபமும் நடந்து கொண்டிருந்த ஹைதராபாதுக்குள் நுழைந்தார்கள். சுல்தானின் அனைத்து செல்வங்களையும் ஔரங்கஸேப் கைப்பற்றினார். பின்னர் மூன்று திசைகளிலிருந்தும் தாக்கி கோல்கொண்டாவை வெற்றி கொண் டார். பின்னர் சுல்தான் தன் தாயாரை ஔரங்கஸேபிடம் மன்னிப்பு வேண்டியும், தன் மகளை ஔரங்கஸேபின் மகனுக்கு மணமுடித்து தருவதாகவும் கெஞ்சினார். இங்கு ஔரங்கஸேபுக்கும், தந்தை ஷாஜஹானுக்கும் இடையேயான நீண்ட அரசியல் தகராறு இருப்பதால் அக்கதையை நாம் தவிர்த்து விடுவோம். பிற்காலத்தில் மீர் ஜும்லா, ஷாஜஹானின் தர்பாரில் சிறப்பாக பணிபுரிந்து இரந்து போனார். மீர் ஜும்லாவின் அனைத்து பொறுப்புகளும் மகன் முஹம்மது அமீனுக்கு வழங்கப்பட்டது.
மீர் ஜும்லா கவர்னராக இருந்த பெங்கால் மட்டும் ஷாயிஸ்தாகானுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிட்டகாங்கில் அட்டூழியம் செய்து கொண்டிருந்த கொள்ளைக்காரர்களையும், அவர்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்த அராகானின் ராஜாவையும் அடக்க புதிய கவர்னர் ஷாயிஸ்தாகான் நடவடிக்கை எடுத்தார். 1665 ல் மாக் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளையும் கைப்பற்றி, 1666 ஜனவரியில் முழுவதுமாக சிட்டகாங்கை வெற்றி கொண்டு இஸ்லாமாபாத் என்று பெயர் மாற்றினார்கள். வங்காள விரிகுடாவில் சொந்தீப் தீவையும் கைப்பற்றியதால் அப்பகுதியில் கொள்ளைக்காரர்கள் முற்றிலும் தடுக்கப்பட்டனர். ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் ஔரங்கஸேப் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இடையே ராஜா ஜஸ்வந்த் சிங்கும், மஹபத்கானும் சிறையிலிருந்து ஷாஜஹானை விடுவிக்க இருக்கிறார்கள் என்று பேச்சு அடிபட்டது. ஒருபிரிவினர் ஔரங்கஸேப்பின் மகன் முஃஅஸ்ஸமையும், இன்னொரு பிரிவினர் இன்னொரு மகன் அக்பரையும் ஆட்சிக்கு கொண்டு வர ஆதரித் தனர். அடுத்த ஐந்து நாட்களில் ஔரங்கஸேப் உடல்நலம் பெற்று தன் அலுவல்களை கவனித்தார்.
தன்னால் இயலாமல் போனால், தான் உத்தரவிட்டு போகும் போது மட்டும் உபயோகிக்க வேண்டி சகோதரி ரௌஷனாரா பேகத்திடம் கொடுத்து வைத்திருந்த ராஜ முத்திரையை திரும்பப் பெற்றார். மேலும் உடல்நலம் தேற ஓய்வெடுக்க காஷ்மீர் சென்றார். ஃபிரான்சு தத்துவஞானி பெர்னியரையும் உடன் அழைத்துச் சென்றார். பின்னர் வடமேற்குப் பகுதியில் தீவிர கவனம் செலுத்தினார். பழங்குடிகளை கொண்ட அப்பகுதி எப்போதுமே பேரரசுக்கு பாரமாகவே இருந்தது. சட்டம், ஒழுங்கு சரியில்லாத இடமாகவே இருந்தது. அப்பிரதேச வெற்றி அறைகுறை யாகவே இருந்தது. பழங்குடியினர் அடிக்கடி மொகலாய பிரதேசமான பெஷாவரில் நுழைந்து  தாக்குதல் நடத்தினர். 1667 ல் பாகு தலைவன் யூசஃப்ஸைஸ் என்பவன் இந்துவைக் கடந்து ஹஸாரா மாகாணத்தைத் தாக்கினான். அங்கிருந்த ஏழைகளைத் தாக்கி அதிகாரம் செலுத்தினான். மொகலாய எல்லைகளைத் தாக்கி மேலும் உள்ளே நுழைய முன்னேறி னான். ஔரங்கஸேப் மீர் ஜும்லாவின் மகன் முஹம்மது அமின் கான் மூலம் படை அனுப்பி, யூசஃப்ஸைஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கச் செய்தார். அமின் கான் மேலும் காமில்கான், ஷம்ஷெர்கான் ஆகியோரு டன் சேர்ந்து யூசஃப்ஸைஸை காபூல் பள்ளத்தாக்கின் ஆற்றில் விரட்டிச் சென்று தோற்கடித்தனர். ஜம்ரூத் பகுதியில் ராஜா ஜஸ்வந்த் சிங் அதிகாரத்தில் வைக்கப்பட்டவுடன் ஆஃப்கான் சற்று அடங்கியது.

மொகலாய வரலாறு 23

மீண்டும் 1671 ல் அஃப்ரிதிகளின் ராஜாவாக இருந்த அக்மல்கான் மூலம் மொகலாயர்களுக்கு எதிராக போர் அறிவித்தனர். மொகலாயத் தரப்பில் மீண்டும் முஹம்மது அமின் கான் தலைமையில் போரிட்டு அலி மஸ்தித் என்ற இடத்தில் பெரும் பொருள் மற்றும் உயிரிழப்பில் தோல்வி அடைந்தார்கள். பல மொகலாய வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டு, மத்திய ஆசியாவில் அடிமையாக விற்கப்பட்டனர். அமின் கான் தப்பித்து ஓடினார். அவரது குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு பெரும் தொகை பணயமாகக் கொடுத்து மீட்கப்பட்டார்கள். இதன் பின் அஃப்ரிதி ராஜா அக்மல் கான் பெரும் பெற்று அவரது வீரர்கள் மொகலாயப் பகுதிக்குள் அடிக்கடி நுழைந்து அவர் பெயர் சொல்லி மிரட்டி பணம் பறித்தனர். இதைவிட பெரிய கலகம் கட்டாக்குகளின் தலைவன் குஷால் கானால் பேரரசு மீது நடத்தப்பட்டது. குஷால் கான் பெஷாவரின் அரசவைக்கு அழைக்கப்பட்டு, பேரரசால் கைது செய்யப்பட்டார். டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட அவர் சில நாட்கள் கழித்து ரன்தம்போர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1666 ல் இவர் சிறையிலிருந்து விடிவிக்கப்பட்டு, அவரின் பரம எதிரியான மேற்சொன்ன யூசஃப்ஸைஸுக்கு எதிராக போரிட வைக்கப்பட்டார். அமீர்கானின் ராஜ நடவடிக்கை மூலமும், சுற்றுப்புர கிராம பழங்குடி யினருக்கு பணமும், சலுகையும் கொடுத்து அவர்களின் ஆதரவும் பெறப்பட்டது. ஔரங்கஸேப்பின் கவனம் முழுவதும் ஆப்கான் மீது இருந்ததால் இந்தியாவில் ஹிந்துக்கள் தொந்திரவு செய்ய ஆரம்பித் தார்கள். அதனால், ஔரங்கஸேப் இந்தியாவின் பக்கம் திரும்பினார்.
முந்தைய மொகலாய ஆட்சியாளர்களாலும், அவர்களின் சட்டங்களாலும் பாதிப்பில்லாமல் இருந்ததாகக் ஹிந்துக்கள் கருதினார்கள். இராணுவத்திலும், சமூகத்திலும் ஏறக்குறைய அரசருக்கு அருகில் இருந்தார்கள். சுதந்திரமாக அவர்களின் கடவுள்களை வணங்கவும், தடையின்றி மதப் பிரச்சாரமும் செய்து வந்தார்கள். ஷாஜஹானின் ஆட்சியின் போது பல மசூதிகளை கோவிலாக மாற்றினார்கள். பல முஸ்லீம் பெண்களை பலவந்தமாக தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். அதுவும் இறுதியில் கொஞ்சகாலம் தாரா ஷிகோ ஆட்சியில் இருந்த போது ஹிந்துக்கள் எந்த அச்சமும் இன்றி பல கொடுமைகளில் ஈடுபட்டார்கள். இதில் உச்சமாக ஒரு வருட காலத்திற்கு பல நகரங்களில் முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தவில்லை. இந்நிலைமை ஔரங்கஸேப் ஆட்சிக்கு வந்தும் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. ஹிந்துக்கள் தாங்களே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள். அதேநேரத்தில் மராட்டியர்களின் கை ஓங்குவது போலிருந்ததால் ஹிந்து பேரரசை நிறுவவும் மறைமுகமாகத் திட்டம் தீட்டினார்கள். இதற்காக பேரரசுக்கு எதிராக தீவிரவாதியாக இருந்த ஷிவாஜி என்பவருடன் தொடர்பில் இருந்தார்கள். டெல்லி, ஆக்ரா மற்றும் தெற்குப்பகுதிகளில் மொகலாயப் பேரரசுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார் கள். மாகாணங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட வரிகளை தலைநகருக்கு கொண்டு செல்லும் வாகனங்களைத் தாக்குவது, அரசு ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஜிஸ்யா வரி என்பது ஹிந்துக்களை பாதுகாப்பதற்காக வசூலிக்கப்பட்டது. இராணுவத் தில் ஹிந்துக்கள் பணி செய்தால் அவ்வரி வசூலிக்கப்படாது. முஸ்லீம்கள் இராணுவப் பணியுடன் கண்டிப்பாக இறைவனின் ஆணைப்படி 2.5% ஜக்காத் வசூலிக்கப்பட்டது. அக்பரால் நீக்கப்பட்ட ஜிஸ்யா வரி ஔரங்கஸேப்பின் அதிகாரத்தால் மீண்டும் விதிக்கப்படவில்லை. இது உலகளாவிய இஸ்லாமிய நாடுகளுக்குண்டான முஸ்லீம் அல்லாத வர்களிடம் வசூலிக்கப்படும் அதிகாரபூர்வமான வரி. எந்த இஸ்லாமிய நாடுகளிலும் மாற்று மதத்தினர் இராணுவத்தில் பணி செய்ய கட்டாயப் படுத்தில்லை. ஔரங்கஸேப்பால் விலக்கப்பட்ட எண்பது வரிகள் மூலம் பெரும் பயன்பெற்றதை அடியோடு மறந்து ஹிந்துக்கள் மீது விதிக்கப்பட்ட வரியையே அவருக்கு எதிராக வேண்டுமென்றே பெரிதுபடுத்தினர். ஔரங்கஸேப் அரசுப்பணியில் இருக்கும் ஹிந்துக்கள் ஜிஸ்யா செலுத்தத் தேவையில்லை என்று மேலும் தளர்த்தினார். ஏழை ஹிந்துக்களிடம் வசூலிக்கக்கூடாது என்றும் கூறினார். (மேலும் இந்த ஔரங்கஸேப்பின் ஜிஸ்யா சம்பந்தமான விளக்கம் வேண்டுபவர்கள் “ஔரங்கஸேப் அண்ட் ஹிஸ் டைம்ஸ்” – பக்கம் 140 ல் அறிந்து கொள்ளலாம்)
அரசு நிர்வாகம், நடவடிக்கைகள் ஹிந்துக்களுக்கு தெரியவர அவர்கள் அதற்கேற்றவாறு தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது அதிகமாகியது. ஔரங்கஸேப் ஒரே நடவடிக்கையில் அத்தனை ஹிந்துக்களையும் உயர் அரசுப்பணியிலிருந்து நீக்கினார். ராஜா ஜஸ்வந்த் சிங்கை மட்டும் பலமுறை மன்னித்து அவர் மகன் அஜித் சிங்கையும் மார்வாருக்கு ராஜாவாக்கினார். இதனால் அவர்கள் மராட்டியர்களுடன் சேர்ந்து எதிர்க்காமல் பார்த்துக் கொண்டார். வேலை இழந்தவர்கள் கோரிக்கை வைத்த போது, ஓரங்கஸேப், முஸ்லீமாகிய எங்களின் ஆட்சியில், உயிர் கொடுத்தாவது உங்களுக்கு பாதுகாப்பும் அரசாங்கமல்லாத மாற்று வேலையும் அளிக்கப்படும். இந்த விஷயத்தில் யாரும் மதவெறியைத் தூண்டத்தேவையில்லை என்றார். இதை ஏற்காதவர்கள் யாராய் இருந்தாலும் அழிக்கப்படுவார்கள் என்றார். மேலும், திருக்குரானின் சொற்களான ‘உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு’ என்பதை மேற்கோள் காட்டினார். இராணுவத்திலும், மற்ற துறைகளிலும் ஒரு ஹிந்து, ஒரு முஸ்லீம் என்று பணியில் அமர்த்தினார்.
கோவில், ஆசிரமம் போன்ற இடங்களில் பிராமணர்கள் என்பவர்கள் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு கடவுள்கள் போல் செயல்படு வதைக்கண்டு கோபம் கொண்டார். மற்ற தாழ்த்தப்பட்டவர்களும் சமமாக வழிபட கூடுமானவரை முயற்சி செய்தார். இது உயர் இந்துக்களிடம் ஓரங்கஸேப் மீது வெறுப்படையச் செய்தது. ஓரங்கஸேப் எப்போதுமே மாற்று மதத்தினரை கொடுமை செய்ததில்லை. நபிகள் (ஸல்) நாயகத் தின் வார்த்தைகளான, ’யார் மாற்று மதத்தினரை கொடுமை செய்கிறார் களோ அவர்கள் என்னைக் கொடுமை செய்வதற்கு சமம்’ என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். (ஆதாரம்: ஔரங்கஸேப் அண்ட் ஹிஸ் டைம்ஸ் பக்கம்-321/153. இந்த முன் பின் பாராக்கள் இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் சரித்திரத்தை விடாமல் தவறாக எழுதிவரும் “வந்தார்கள் வென்றார்கள்” என்ற வாந்தியெடுத்து சரித்திரப் பிழை ஏற்படுத்த ஆசைப்பட்ட ஆசிரியருக்கும், அதன் பத்திரிக்கைக்கும் சமர்பணம்) முந்தைய மொகலாய முன்னோர்களின் காலத்தில் மசூதிகளை இடித்து விட்டு, கோவில்களைக் கட்டினார்கள். அந்தக் கோவில்களை மட்டும் இடிக்க ஆணையிட்டார். இதன் சரித்திரம் அறியாத தரித்திரம் பிடித்த இந்து மத தீவிரவாதிகள் ஓரங்கஸேப் கோவில்களை இடித்தார் என்பதை மட்டும் சொல்லி சொல்லி இன்றுவரை மதவெறியை வளர்க்கிறார்கள். எப்படி சரித்திரம் ஓரங்கஸேப் ஒரு உண்மையான இஸ்லாமிய ஆட்சியாளர் என்று பதிவு செய்து வைத்திருக்கிறதோ, அப்படிப்பட்டவர் அடுத்த மதத்தவர்கள் வழிபாடுகளை தடை செய்யவில்லை என்று அடுத்து வந்த ஆங்கிலேயர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். உங்களுக்கு சந்தர்ப்பம் வாய்ந்தால் ராகுல சாங்கிருத்யாயன் என்பவர் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தேவநேய பாவாணர் நூலகத்தில் படித்த ஞாபகம். இந்துமத தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி அப்புத்தகத்திற்கு தடை வாங்கி வைத்திருந்தார்கள். நூலகத்தில் பணிபுரிந்த ஒரு நண்பர் மூலம் அங்கேயே மறைவாக படித்தேன். குப்தர்களின் ஆட்சியின் போது, பௌத்த மத பிட்சுகளை கூட்டம் கூட்டமாக கொளுத்தினார்கள். பல பௌத்த மடங்களை இடித்து தரை மட்டமாக்கினார்கள். உலகின் பெரிய மதங்களில் ஒன்றான புத்த மதத்தின் வழிபாட்டுக்குரியவர் கௌதம புத்தர் பிறந்த பூமி இந்தியா. பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் நாணயங்களில் பொறிக்கப்படும் சின்னத்தைக் கொண்ட பௌத்த மன்னன் அசோகர் ஆட்சி செய்த பூமி இந்தியா. அப்படியானால் இங்கிருந்த பௌத்த மதம் எங்கே போனது?. புத்த மதத்தை இந்தியாவில் கருவறுத்த காரணத்தால் சாதரணமாக வளரும் ஒரு கேசத்தின் வளர்ச்சி கூட இல்லாத குப்தர்கள் ஆண்ட காலத்தை பொற்காலம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். குப்தர்களின் காலத்தில் தான் மனுசாஸ்திரம் எழுதப்பட்டது. பல பௌத்த பீடங்களை கைப்பற்றி காஞ்சி சங்கரமடம், காசி, மதுரா, வாரணாசி என்று கோவில்களை எழுப்பி வாரிசு வாரிசாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பௌத்த மன்னன் அசோகனின் சின்னம் தான் நாணயத்திலும், தேசியக் கொடியிலும் இருக்கும் முத்தலை சிங்கமும், அசோக சக்கரமும் அவைகள் தான் இன்றுவரை இந்தியா திராவிடர்களுக்குச் சொந்தம் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. யாராலும் அதை எடுக்க முடியாது. ஐம்பது அல்லது நூறு திராவிடர்களை (இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு) கொன்ற பின் தான் ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம் உயிர்கள் இந்து தீவிரவாதிகளால் அறுவடை செய்ய முடிகிறது. என்ன அந்த அப்பாவி மக்களுக்கு இன்னும் புரியவில்லை. ஐப்பது, நூரும், ஆயிரமும் திராவிட உயிர்கள் தான் என்று. பல நூறாண்டுகளாக சேவகம் மட்டுமே செய்து கொண்டிருந்த திராவிடர்கள் படிக்கிறார்கள், படித்துக் கொண்டே இருக்கிறார்கள். சரித்திரம் என்பது கடிகாரம் அல்ல ஒரே புறம் சுற்றுவதற்கு, அது சூரியன் பின் புறமாக உள்ளது சுழன்று வந்தால் வெளிச்சமாகிவிடும். வெளிச்சம் வந்துவிட்டால் இருட்டு போய்விடும்,  இருட்டு போய்விட்டால் உண்மை தெரிந்துவிடும். ஷாஜஹானும் நிறைய கோவில்களை இடிக்கச் சொன்னார். ஆனால், ஆச்சரியம் அதை ஹிந்து தீவிரவாதிகள் பெரிதுபடுத்தவில்லை.
பனாரசின் கவர்னராக இருந்த அபுல் ஹசன் கூறுவதாவது, ‘நமது புனித சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நாம் இந்துக்கோவிலை இடிக்கவுவில்லை, புதியதாக ஒன்றைக் கட்டவுமில்லை. குறிப்பிட்ட அந்தப்பகுதியில் சிலர் அந்தகோவிலில் முறைகேடுகள் செய்து வந்த பிராமண நிர்வாகிகளை நீக்கினார்கள். பனாரசிலும் அடுத்துள்ள இந்து குடியிறுப்புகளிலும் கலவரம் செய்தனர். நமது காவலர்கள் அங்கு சென்று யாரும் சட்டத்தை தங்கள் விருப்பப்படி ஆளக்கூடாது. யாரும் அங்கிருக் கும் பிராமணர்களையும், இந்துக்களையும் தாக்கவோ, புண்படுத்தவோ கூடாது. முன்பிருந்தது போல் அவர்கள் அமைதியாக வழிபட இந்த அரசு உத்தரவிடுகிறது’. என கூறுகிறார். கடித ஆதாரம். தேதி : 15, ஜுமதா 11 ஏ. எச். 1069 (ஏ.டி. 1659 (ஆதாரம் “ப்ரீச்சிங்க் ஆஃப் இஸ்லாம்” ஆசிரியர் ஸர். தாமஸ் அர்னால்ட் பக்கம் 214, “அனெக்டாட்ஸ் ஆஃப் ஔரங்கஸேப்’ ஆசிரியர் ஸர். ஜாதுனாத் சர்கார் பக்கம் 9710, “ஔரங்கஸேப் அண்ட் ஹிஸ் டைம்ஸ்” பக்கம் 190/202, “முன்தகிப் உல் லுபாப்’ பக்கம் 249/252, “ஸ்டடீஸ் இன் முகல் இந்தியா” 162/163) மேற்கூரிய கடித ஆதாரமட்டு மல்லாமல் மேலும் நான்கு கடிதங்கள் இது சம்பந்தமாக முழுக்க முழுக்க பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கோஷியன் ராம்ஜீவன் மற்றும் அவர் மகனுக்கும் ஆதரவாகவே இருக்கிறது. அவர்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் இருப்பிடங்களை சீராக்கி தந்தார்.(தேதி: 17 ராபி 2 1091 ஏ.எச். வகாயி ஆலம்கீர் பக்கம் 104/689, ஔரங்கஸேப் அண்ட் ஹிஸ் டைம்ஸ்- பக்கம்- 106) உலகில் எந்த ஒரு இஸ்லாமிய ஆட்சியாளரும் மாற்று மதத் திற்கு அளிக்காத சுதந்திரத்தை ஔரங்கஸேப் இந்து பிராமணர்களுக்கு அளித்தார். இதற்கு ஆதாரமான பல அரசு கடிதங்களின் உண்மை தொகுப்பு மேற்சொன்ன புத்தகங்களில் பக்கம்பக்கமாக உள்ளன. ஔரங்கஸேப் இந்துக்களை புணபடுத்தினார் என்று சொல்வது அப்பட்டமான பிராமணர்களின் பொய். பிரச்சினைக்கு காரணமான இந்துக் கோவிலையும், மசூதியையும் இடித்து பின் தரமானதாக மீண்டும் கட்டிக்கொடுத்தார். (“முந்தகீப் உல் லுபாப்”- பக்கம் -472) பின்னர் முஸ்லீம் கள் கோவில் கட்டிக்கொடுக்கக்கூடாது என்று பிரச்சினை எழுப்பிய போது, அதை சட்டப்பூர்வமாகத் தடுத்தார். ஔரங்கஸேப் மன்னரானதை இந்துக்கள் விரும்பவில்லை அல்லது மற்ற இந்துக்களையும் விரும்ப விடவில்லை. (“பாதுஷாநாமா” வால்யூம் 1- பக்கம் 452/ மா ஆஸீர் இ ஆலம்கீர்- பக்கம் 81). இந்தச் சரித்திரச் சான்றுகளுக்கு ஔரங்க ஸேப்பின் ஆட்சிக்குப் பிறகு, இந்தியாவுக்கு வருகைதந்த அலெக்ஸாண்டர் ஹாமில்டன் என்ற சரித்திர ஆய்வாளர் இந்துக்கள் ஔரங்க ஸேப்பின் ஆட்சியில் முழு சுதந்திரமாக இருந்தார்கள். (“தி இண்டூஸ் நியூ அக்கவுண்ட் ஆஃப் ஈஸ்ட் இண்டீஸ்” ஆசிரி யர்-வால்யூம் 1-பக்கம்-159/162/163) கிறிஸ்தவர்களும் புதிய தேவாலயங்களைக் கட்டி வழிபட்டனர். வெளிநாட்டுக்காரர்களுக்கு தெரிந்த உண்மை இஸ்லாமிய மொகலாய ஆட்சியில் உண்டு வாழ்ந்த இந்த நன்றி கெட்டவர்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சரிமில்லை. 2% சதவீதமாக இருந்து பின் எப்படி 100% சதவீத இந்தியாவை இவர்களால் பொய்கூறாமல் ஆளமுடியும்.
அக்பருக்குப் பிறகு, சாதகமான தாரா ஷிகோவே மன்னராக வருவார் என்று ஹிந்துக்கள் எதிர்பார்த்தார்கள். மாறாக ஔரங்கஸேப் வந்தது அவர்கள் முற்றிலும் எதிர்பாராதது அதனால் முழுமூச்சாக அவதூறு களை அள்ளிவீசி எதிர்த்தார்கள். குறிப்பாக மராட்டியர்கள். தட்டாஸ், முல்டான் மற்றும் முக்கியமாக பனாரசில் மாகாணங்களில் முஸ்லீம், ஹிந்து குழந்தைகள் சேர்ந்து படிக்கும் பள்ளியில் முதல் வணக்கமாக பிராமணர்கள் இந்துக் கடவுள் வணக்கம் மட்டும் மற்றும் புராணங்களை மட்டுமே பாடங்களாக நடத்தினர். மற்றச் சொல்லி அரசானை அனுப்பியும் கேட்காததால் அத்தனை பள்ளிக்கூடங்களையும் இடிக்க உத்தரவிட்டார். உண்மையைச் சொன்னால் அக்பருக்கு பின் ஆண்டவர்கள் இஸ்லாமிய ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாமல் மார்க்க அறிவு இல்லாமல் இருந்ததை ஹிந்துக்கள் தங்கள் இஷ்டம் போல் மத விஷயங்களை கையாண்டார்கள். அதுவும் தாரா ஹிந்து மதத்தை ஆதரித்தார். ஹிந்துக் கள் முஸ்லீம் பெண்களை ஆசிரமத்திற்கு கடத்திச் சென்று அடிக்கடி கற்பழிப்பது தொடர்ந்தது. இவைகளை மார்க்கம் தெரிந்த ஔரங்கஸேப் சரி செய்தார். நல்லமுறையில் இருந்த கிறிஸ்தவர்களை தேவாலயங் களை கட்டிக் கொண்டு வழிபடவும், மதபிரச்சாரம் செய்து கொள்ளவும் அனுமதித்தார். ஹிந்துக்கள் ஔரங்கஸேபின் ஆணைகளை புறந்தள்ளி பல இடங்களில் கலகம் செய்தனர். ஔரங்கஸேப் பல வழிமுறைகளை கையாண்டு அவர்களை அடக்கி இஸ்லாமிய கோட்பாடுகளை நிலைக்கச் செய்தார். இதனால் சாம்பியன் ஆஃப் இஸ்லாம் என்று புகழப்பட்டார்.
          அக்பர் மற்றும் ஜஹாங்கீரால் மதுராவின் ஜாட்கள் பல சலுகை களை அனுபவித்து வந்தனர். அக்பரே அரண்மனை அந்தஸ்தில் மதுராவில் கோபிந்த் தேவ், ஜுகல் கிஷோர், கோபிநாத் கோவில்களைக் கட்டித் தந்தார். அல்லாமா அபுல் ஃபஸ்லை கொன்ற ராஜா நர்சிங் தேவ் பந்தேலாவுக்கு, பிந்த்ராபன் மற்றும் மதுராவில் 32 லட்சம் ரூபாயில் அழகிய கோவில்களைக் கட்டிக் கொள்ளக் கொடுத்தார். அபுல் ஃபஸ்ல் கொலைக்குப் பிறகு, அப்பணத்தை திரும்ப ஒப்படைக்கச் சொன்னார். ஷாஜஹானின் ஆட்சியின் போது ஜாட்கள் மதுராவில் கலவரத்தைச் செய்தார்கள். ஷாஜஹான் சிறந்த அதிகாரிகளான ஆஸம் கான் மற்றும் மிர்சா ஈசா கான் ஆகியவர்களை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டச் செய்தார். ஆனால் அங்கு மொகலாய அதிகாரத்தில் இருந்த தாரா ஷிகோவின் தலையீட்டால் நிலைமை சீர் செய்ய முடியாமல் திரும்பி விட்டார்கள். இந்த ஜாட்களின் கலவரம் ஔரங்கஸேப் காலம் வரை தொடர்ந்தது. ஔரங்கஸேப்பால் ஃபவுஜுதாராக நியமிக்கப்பட்ட செய்யது அப்துன் நபி ஹிந்து நகரமான மதுராவில் ஜும்மா மசூதி ஒன்றைக் கட்டினார். இதிலிருந்து ஜாட்களின் மதுரா கலவரம் மேலும் சூடு பிடித்தது.
1669 ல் தில்பத் பகுதியின் ஜமீன்தார் கோகலே தலைமையில், பெரிய கலவரம் செய்து, மசூதியையும் இழிவுபடுத்தி மொகலாய ஃபவுஜுதாரைக் கொன்றார்கள். பின் புதிய ஃபவுஜுதாராக ஹசன் அலி என்பவர் நியமிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை மூலம் ஜாட்களின் கலவரம் சரி செய்யப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளுக்கு மதுரா அமைதியாக இருந்தது. ஔரங்கஸேப் வெகு தொலைவு மாகாணமான டெக்கான் சென்றிருந்த போது மீண்டும் 1681 ல் ஜாட்கள் ராஜா ராம் என்பவரது தலைமையில் கலவரம் செய்தனர். இம்முறை பரத்பூரிலிருந்து வடமேற்கில் 16 மைல் தொலைவிலிருந்த சன்சானி என்ற இடத்தில் கலவரம் செய்தனர். அதன் தலைவரை கொன்று அவ்வூரைக் கைப்பற்றினார்கள். ஔரங்கஸேப் புக்கு பெரும் தொல்லைகொடுக்க ஆரம்பித்தார்கள்.   1691 லும் பல இடங்களில் கலவரம் செய்து சிகந்தராபாத்தில் அக்பர் ஸ்தூபியை கொள்ளையடித்து அக்பரின் எலும்புகளை வெளியே எடுத்து தீயில் இட்டனர். இப்படியாக ஜாட்கள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்க, ஸத்னமி என்பவர்களும் கலவரம் செய்ய ஆரம்பித்தார்கள். நார்னால் என்ற இடத்தை தலைமையாகக் கொண்ட இவர்கள் மிகவும் அழுக்கானவர்கள். சுத்தமற்ற இவர்கள் வியாபாரமும், விவசாயமும் செய்து வந்தார்கள். ஒருங்கிணைந்த அமைப்பாக ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். ஒருநாள் சாதாரணமாக ஒரு சிப்பாய் காவலில் இருக்க, ஒரு சத்னமி சாமியாருடன் வாக்குவாதம் வந்தது. இதில் மேலும் சில சத்னமிகள் கூடி அந்த சிப்பாயை அடித்து கொன்று போட்டார்கள். இதை வேறு விஷயமாக திசை திருப்பி மதக்கலவரமாக மாற்றி பல உயிர்களையும், பெரும் பொருள் சேதத்தையும் சத்னவிகள் உண்டாக்கி னார்கள். பேரரசர் உத்தரவின்படி கலவரக்காரர்களைப் பிடிக்க அனுப்பப் பட்ட அதிகாரிகளையும் தோற்கடித்து அனுப்பினார்கள். டெல்லியில் இருந்து ஒருபடை வந்து கொண்டிருக்க மொத்த நார்னல் பகுதியையும் கொள்ளை அடித்து மசூதிகளை இடித்தார்கள். அப்பகுதி மொகலாய ஃபவுஜுதாரை கொன்றார்கள். அதுவரை ஒழுங்காக மொகலாயர்களுக்கு கப்பம் கட்டி வந்த ராஜபுத்திரர்கள் சிலர் செலுத்துவதை நிறுத்திவிட்டு சத்னவிகளுடன் கலவரத்தில் கலந்து கொண்டார்கள். இது ஔரங்கஸேப்பை அவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க வைத் தது. சத்னவிகள் படுதோல்வி அடைந்து அடக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களை அடக்கிய ரடாண்டாஸ் கான் என்பவரை ‘ஷுஜா அத் கான்’ என்று அழைத்து ஔரங்கஸேப் கௌரவித்தார்.
வளமான ராஜபுத்திரர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மொகலாயர்களுக்கு எதிராக தொந்தரவும், ஒத்துப்போகாமலும் இருந்தார்கள். சத்னவிகளுடன் அவர்கள் கலவரத்தில் கலந்து கொண்டதால், அவர்கள் மொகலாயர்களின் முதுகில் சூழலுக்கேற்ப குத்துபவர்கள் என்று அறியப்பட்டார்கள். ஔரங்கஸேப்பால் ஜம்ரூத் என்ற பகுதிக்கு ஆட்சியாளராக அனுமதிக்கப்பட்டிருந்த ராஜா ஜஸ்வந்த் சிங் கைபர் அரண்மனையில் மரணமடைந்தார். அடுத்து அவருக்கு வாரிசு இல்லை. லாகூரிலிருந்த அவரின் விதவை மனைவிகள் இருவர், இரு மகன்களைப் பெற்றெடுத்தார்கள். அதில் ஒரு குழந்தை இறந்து போக, ஒன்று உயிருடன் இருந்தது. இது மொகலாயர்களுக்கு எதிராக இருந்து சக இந்து மதத்தினருக்கு மார்வாருக்கு ஒரு வாரிசு வந்துவிட்டதாக உணர்வை ஏற்படுத்திவிட்டது. மறைந்த ராஜா ஜஸ்வந்த் சிங்கும் ஔரங்கஸேபுக்கு நேர்மையாக இருக்கவில்லை. பலமுறை அவரை மன்னித்தார். ஒருமுறை ஔரங்கஸேப்பின் அனுமதியின்றி ஜம்ரூத்தை விட்டுச் சென்றார். அப்படி போகும் போது அட்டாக்கை கடக்கையில் பாஸ்போர்ட் கேட்ட ஒரு அதிகாரியை சுட்டுக் கொன்றார். இதற்கும் மேலாக ராஜா ஜஸ்வந்த் சிங் அரசுக்கு தெரியாமல் நிறைய கையாடல் செய்து நெருக்கடியான காலத்தில் தாரா ஷிகோவுடன் ரகசிய தொடர்பும் வைத்திருந்தார். காஜ்வாஹ் போரின் போது ஆலம்கீரை தனியாக விட்டுவிட்டு தன் ராஜபுத்திர வீரர்களுடன் திரும்பி விட்டார். ஷாயிஸ்தா கான் மீது கடுமையாக சண்டையிட தீவிரவாதி சிவாஜுக்கு உதவி புரிந்தார். மற்ற ராஜபுத்திர ராஜாக்களுடன் இணைந்து மொகலாயர்களை ஒழிக்க ரகசிய திட்டத்தில் இருந்தார். இப்படிப் பல ராஜதுரோகங்களின் மொத்த உருவம் தான் மறைந்த ராஜா ஜஸ்வந்த் சிங். இவைகளை பெர்னியர் சரித்திரப் பதிவாக்கி இருக்கிறார். ஒரு ராஜ அந்தஸ்தில் இருந்தவரே இப்படி துரோகச் செயலில் இருந்ததால், ஜஸ்வந்த் இடத்தில் வேறு யாரையும் வைக்காமல் ஔரங்கஸேப் நேரடியாக மார்வாரை மொகலாய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். 1679 ல் ஔரங்கஸேப் நேரடியாக ஆக்ரா சென்று ஜோத்பூரின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நகரத்தை கான் ஜஹான் வசம் ஒப்படைத்தார். அதே வருடம் மே மாதம் ராஜா ஜஸ்வந்த் சிங்கின் தூரத்து உறவினர் இந்தர் சிங்கை மார்வாருக்கு ராஜாவாக்கினார். ஔரங்கஸேப்பின் இடத்தில் வேறு ஒரு மன்னர் இருந்திருந்தால், துரோகம், கலவரம் செய்த அத்தனை இந்துக்களையும் துவம்சம் செய்திருப்பார் என்று அனைத்து சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். மாற்று மதத்தினருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற திருக்குரான் வசனத்திற்கு அடி பணிந்தார்.
 இந்தர் சிங் ராஜாவான அதே மாதம், உயிருடனிருந்த ராஜா ஜஸ்வந்த் சிங்கின் இன்னொரு குழந்தையான அஜீத் சிங்கை அழைத்துக் கொண்டு ராஜகுடும்பத்தினர் டெல்லி வந்து ஔரங்கஸேப்பை சந்தித்து அடுத்து மார்வாருக்கு அஜீத் சிங்கை ராஜாவாக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தனர். ஆலம்கீரும் பருவ வயது வந்தவுடன் தான் நிறைவேற்றுவ தாக உறுதி அளிக்க அஜீத் சிங்கை அரண்மனையிலேயே விட்டுச் செல் கிறார்கள். சந்திப்பு முடிந்து ராஜகுடும்பத்தினர் திரும்பிச் சென்றது காலதாமதமாக ஔரங்கஸேப்புக்கு தெரிய வந்தது. இதற்குள் ராத்தோர்கள் அடங்கிய ஒரு குழுவினர் துர்கா தாஸ் என்ற தெய்வீகம் நிரம்பியவர் (ராஜபுத்திரர்கள் குறிப்பீட்டின்படி) தலைமையில் மொகலாய வீரர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று ராணியையும், உடனிருந்த குழந்தையையும் சிறை பிடித்து மார்வார் வந்தார்கள். அந்த சிறுவனை இவர்தான் இனி ராஜா என்று ஊர்வலமாக வீதி எங்கும் உலா வந்தனர். ஆனால், ஔரங்கஸேப் டெல்லியில் ராணிகள் விட்டு வந்த சிறுவர் தான் ஜஸ்வந்த் சிங்கின் உண்மையான வாரிசு என்று கூறினார். சித்தூரின் ராணா இளவரசியை கரம் கொடுத்து அந்த சிறுவரை ஜஸந்தின் வாரிசாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று ஒப்புக் கொண்டார். இது ஔரங்கஸேப்புக்கு ஒரு கசப்பான அனுபவத்தைத் தந்தது. ஜோத்பூரின் ஃபவுஜுதார் தாஹிர் கானை பதவி நீக்கம் செய்து, இந்தர்சிங்கின் கையாலாகாத தனத்திற்காக மரணதண்டனை தந்து உத்தரவிட்டார்.
       

மொகலாய வரலாறு 24

ஔரங்கஸேப் தானே அஜ்மீர் சென்று மார்வாரின் மீதான தாக்குதலுக்கு நேரடி உத்தரவிட்டார். முல்தானிலிருந்த இளவரசர் அக்பர் அழைக்கப் பட்டு தலைமை தாங்கவும், அஜ்மீரின் ஃபவுஜுதார் தஹவர் கான் உதவி செய்யவும் உத்தரவிட்டார். ராத்தோர்கள் தோற்கடிக்கப்பட்டு மார்வார் கைப்பற்றப்பட்டது. அது பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மொகலாய ஃபவுஜுதார்கள் நியமிக்கப்பட்டார்கள். ராத்தோர்கள் சிசோடியன்களுடன் சேர்ந்து  மார்வாரைப் போலவே மேவாரில் மொகலாயர்களை எதிர்த்த னர். ஜெய்பூரின் ராஜா மொகலாயர்களுக்கு சாதகமாக இருந்தார். 1679 நவம்பரில் போர் துவங்கி, 1681 வரை நடந்தது. மொகலாயர்களால் உதைய்பூரும், சித்தூரும் வெற்றி கொள்ளப்பட்டது. மொகலாயர்களிடம் போராடி களைத்துப் போன ராஜபுத்திரர்கள் கொரில்லா என்னும் போர் முறையில் இறங்கினார்கள். மொகலாயர்களுக்கு பெருத்த சேதம் விளைவித்து, பீதியை உண்டு பண்ணினார்கள். உதைய்பூர் ராணாவின் மகன் குமார் பீம் சிங் என்பவன் திடீரென்று குஜராத்தின் மீது படையெடுத்து, ராஜபுத்திரர்களிடமிருந்து மொகலாயர்களைத் திசை திருப்பினான். இடார் என்னும் நகரத்தைக் கைப்பற்றி, சில நகரங்களைக் கொள்ளையடித்து முந்நூறுக்கும் மேற்பட்ட மசூதிகளை இடித்தான். ராஜபுத்திர பொருளாதார மந்திரி தயாள் ஷா என்பவன் மால்வாவுக்குள் நுழைந்து மசூதிகளை கொள்ளையடித்து, அங்கிருந்த திருக்குரான் புத்தகங்களை தீயிட்டுக்கொளுத்தி இமாம்களை கேவலப்படுத்தினான். மேலும் திருக்குரான் புத்தகங்களை கிணற்றில் வீசியும், இமாம்களை வலுக்கட்டாயமாக தாடிகளை மழித்தும் துன்புறுத்தினான். இவைகளை டாட் என்பவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். இளவரசர் அக்பரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஔரங்கஸேப் இவரை திரும்ப அழைத்துக் கொண்டு, பெங்காலில் இருந்த இன்னொரு மகன் ஆஸாம் என்பவரை குஜராத்துக்கு வரவழைத்தார். டெக்கனிலிருந்து முஃஅஸ்ஸம் என்பவரும் அழைக்கப்பட்டார். ராஜபுத்திரர்களுக்கும், மராட்டியர்களுக்கும் இடையே தொடர்புகளை துண்டிக்க குஜராத் ஆளுநர் கேட்டுக் கொள்ளப்பட்டார். ராஜபுத்திரர்களை தெற்கிலிருந்து தாக்குமாறும் உத்தரவிடப்பட்டது. பலமுனைகளில் ராஜபுத்திரர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இளவரசர் உதைய்பூரின் ராஜா ராஜ் சிங் இருந்த மலைக்குச் சென்றார். ஒரு வழியாக வெற்றி கிடைக்கும் நிலையில் மீண்டும் இளவரசர் அக்பர் மேவார் வந்தார்.
இந்நிலையில் ராஜபுத்திரர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டார்கள். அவர்கள் இளவரசர் முஃஅஸ்ஸமிடம், அடுத்து அவரை மொகலாய மன்னராக்குவதாக ஆசை காட்டினார்கள். அவரின் தாயார் நவாப் பாய் உறுதியாக அறிவுரை கூறியும் முஃஅஸ்ஸம் மறுத்து விடுகிறார். ராஜ புத்திரர்கள் இதே அணுகுமுறையை இளவரசர் அக்பரிடம் கையாள அவர் ஒத்துப்போகிறார். ராஜபுத்திரர்களுடன் சேர்ந்து 1681 ஜனவரியில் புரட்சி யில் ஈடுபடுகிறார். தன்னை மொகலாய பேரரசராக அறிவித்துக் கொண்டு, பலவந்தமாக முடிசூட்டிக் கொள்ள அஜ்மீருக்கு சென்றார். சூழ்நிலையை நன்றாக ஔரங்கஸேப் ஆராய்ந்தார். அக்பருக்கு அடிப்படை ஆதரவாக இருந்த தஹவர்கானை டெல்லிக்கு அழைத்துக் கொண்டு, மேலும் சில இராணுவ அதிகாரிகளை அழைத்துக் கொண்டார். அக்பர் உதவியின்றி தானாக செயல்படும் திறமை இல்லாதவர். நம்பிக்கையாளர்கள் என்று இருந்த ராஜபுத்திரர்கள் இரவோடிரவாக இளவரசர் அக்பரின் உடமை களை கொள்ளை அடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். தனியாகிப் போன அக்பர் குதிரையில் தப்பித்து டெக்கானில் ஷம்பாஜியிடம் அடைக்கலம் ஆனார். சில நாட்களுக்குப் பிறகு பெர்ஷியா சென்றவர்   1704 ல் அங்கேயே இறந்து போனார். ஆலம்கீரின் ஒவ்வொரு வெற்றியும் அவரின் திறமை யான அணுகுமுறையே காரணம். சரியான நேரத்தில் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு, அக்பரை திசை திருப்பியதால் ராஜபுத்திரர்களின் தந்திரம் தோற்றுப்போனது.
1681 மார்ச் வரை நடந்த மேவார், மார்வார் போர் இருபுறமும் சமாதானம் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளியது. ராஜபுத்திரர்கள் மிகவும் தளர்ந்து போயிருந்தனர். அதேநேரத்தில் தெற்குப்பகுதியில் நிலைமை மோசமாகிப் போனதால், ஔரங்கஸேப் அங்கு போக வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த உதைய்பூர் உடன்படிக்கையானது, ஜெய்சிங் ராணாவாக இருப்பார். ராணா மூன்று மாகாணங்களை மொகலாயர் களிடம் கொடுத்து விட வேண்டும். அதற்கு பதில் ஜிஸ்யா வரி செலுத்தத் தேவையில்லை. மூன்றாண்டுகள் கழித்து மாகாணங்கள் திருப்பித் தரப்படும். ராணா இழப்புத்தொகையாக மூன்று லட்ச ரூபாய் இரண்டாண்டுக்குள் கொடுத்துவிட வேண்டும். ராஜபுத்திரர்களிடமிருந்து ஆயிரம் குதிரை வீரர்கள் எடுத்துக் கொள்ளப்படும். சித்தூர் கோட்டையை புதுப்பிக்கக்கூடாது. ராத்தோர் புரட்சியாளர்களுக்கு ராணா ஆதரவளிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. முப்பதாண்டுகளாக ராஜபுத்திரர்கள் மொகலாயர்களுக்கு எதிராக புரட்சி செய்து கொண்டிருந்தார்கள். இதனால் மால்வாவிலிருந்து டெக்கான் வரை சட்டம் சீர்குலைந்திருந்தது. தெற்கில் மராட்டியர்கள் சொந்தம் கொண்டாடினார்கள். தெற்கே சில ஷியா சுல்தான்களும் இருந்தார்கள். 
1634 ல் தெற்கில் ஷாஜி போன்ஸ்லே என்ற மராட்டிய வீரர் மொகலாய அரசியலில் தலைவலியாக நுழைந்தார். மொகலாயர்களிடமிருந்து அஹ்மத்நகர் மற்றும் பிஜப்பூரை மீட்கப் போராடினார். பெரும் ஆதரவாளர் களுடனும், நவீன ஆயுதங்களுடனும் இருந்தார். அவருக்குத் துணையாக மொகலாய அதிகாரிகளை கடத்தியும், வரி வசூலித்து வரும் வாகனங் களை சிறை பிடித்தும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அவர் மகன் சிவாஜி இருந்தார். சிவாஜியின் பிறப்பு முறையானதல்ல. இவன் ஏதோ மொத்த இந்தியாவையும் ஹிந்துக்கள் சார்பாக மொகலாயர்களிடமிருந்து காப்பாற்றுவது போல் தோற்றம் தந்தான். மராட்டியர்களுக்கு தலைநகரம் போலிருந்த மஹாராஷ்டிரா தெற்கில் நர்மதா ஆறும், எதிர்புறம் விந்தியா, சத்புரா பகுதியுடன் மலைகள் சூழ்ந்திருந்தது. இயறகையாகவே மேற்கு கட் அல்லது சஹ்யாத்ரி பகுதி நீண்ட சுவர் போல் நகரை இரண்டாக பிரித்தது. முடிவில் இருந்த கோட்டை நகரைப் பாதுகாப்பது போல் இருந் தது. இந்த அமைப்பினால் முன்பிருந்த இளவரசர்களும், தலைவர்களும் வடக்கில் அதிகாரம் செய்பவர்களுக்கு பணியாமல் ஆதாயம் அடைந்த னர். மறைந்து தாக்குவதற்கு ஏற்றவாறு மலைப்பாதைகளில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகளும், கோட்டைக் கதவுகள் போலுள்ள நுழைவுவாயில்களும், வெகுதொலைவில் வந்தாலும் அறிந்து கொள் ளும் வசதியுள்ள கண்காணிப்பு தூண்களும் வரணாக அமைந்திருந்தன. இந்த இயற்கை அமைப்பினால் மராட்டியர்களும், சில தகுதிகளை வளர்த்துக் கொண்டார்கள். கொரில்லா தாக்குதல் முறை எதிரிகளின் பலம் குறைக்கவும், அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடிக்கவும் பயனுள்ளதாக இருந்தது. மராட்டியர்களை வெல்வது மொகலாயர் களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
மராட்டியர்கள் ஹிந்துக்களிடையே வெறியூட்டும் விதமாக கவர்ச்சிகரமான ‘பக்தி’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார்கள். இது ஒட்டு மொத்த இந்துக்களையும் ஒன்று படுத்தியது. தகுதியான பிரச்சாரகர் களை வைத்து இந்தியா முழுவதும் பிரபல்யமாக்கினார்கள். (இதுதான் பல பெயர்கள் மாறி மாறி, சில காலம் அடங்கி இன்று ரத்தம் குடிக்கும் RSS என்று இருக்கிறது.) அனைத்து முஸ்லீம்களுக்கு எதிராக தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வண்ணம் வளர்த்தார்கள். எல்லாவழிகளிலும் பிரிவினை வாதத்தை வளர்த்தார்கள். டெக்கானில் இந்துக்களின் புனித இடமாக கருதப்பட்ட பந்தர்பூரை மையமாக வைத்து, துகா ராம்,ராம் தாஸ், வமன் பண்டிட் மற்றும் ஏக்நாத் ஆகிய போதகர்களை வைத்து இந்துக்களை ஒருங்கிணைத்தார்கள். தங்களுக்கு வேண்டிய இராணுவ மற்றும் சமூக நிர்வாகப் பயிற்சிகளை பிஜப்பூர், கோல்கொண்டா ஆகிய ஷியா பிரிவினர் ஆளும் பகுதிகளில் இருந்து பயின்று கொண்டார்கள். முதார் ராவ், மதன் பண்டிட் போன்ற ராஜ் ராய் குடும்பத்தினர் கோல்கொண்டாவில் மந்திரி களாக இருந்தனர். நர்சு, யாசு பண்டிட் போன்ற மராட்டிய தலைவர்கள் பிஜப்பூரில் சிறப்பான இடத்தில் இருந்தார்கள். பாமனி ராஜாக்கள் இந்துக்களின் மீது நம்பிக்கை வைத்து பல பொறுப்பான பதவிகளில் வைத்திருந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் அழுக்குக்கறை போல் படிந்து போன அஹ்மத்நகர் ஆட்சியும், மிரட்டலாகத் தோன்றிய பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆட்சியும் இருக்கும் சூழல் மொகலாயர்களை எதிர்க்க இதுவே தக்க தருணம் என்று மராட்டிய மந்திரிகளையும், வீரர்களையும் நினைக்கத்தோன்றியது.
    முக்கியமாக சிவாஜியைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். மராட்டியர்கள் முக்கிய நடவடிக்கைகள் எடுத்து அதில் வெற்றியும் கண்டனர். மராட்டியர்களுக்கு தலைவராக ஜாகிர்தாராக இருந்த ஷாஜி போன்ஸ்லே. ஷாஜி 1632 ல் பிஜப்பூர் சுல்தானால் பணியமர்த்தப்பட்டு, வஸீராக இருந்த கவாஸ்கானின் நண்பர் முராரி ஜக்தேவா என்பவரின் சிபாரிசில் விரைவாக முன்ணனிக்கு வந்தார். சிரா, பெங்களூர் அடங்கிய மைசூர் மீது படையெடுத்து வெற்றிகரமாக வருமானம் வரும் ஜாகிராக மாற்றினார். 1627 ல் மராட்டியர்கள் பலம் வாய்ந்த சிவானர் பகுதியில் ஷாஜி போன்ஸ்லே, ஜிஜா பாய் தம்பதியினருக்கு மகனாக சிவாஜி போன்ஸ்லே பிறந்தார். (சிவாஜியின் பிறப்பில் பல இரகசியங்கள் இருப்ப தாக சில பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எப்படி சம்பந்தமே இல்லாமல் நேரு குடும்பத்தில் காந்தியின் பெயர் அடைமொழி ஆனதோ அதைப்போல). தந்தை வழியில் உதைப்பூரின் ராஜ்புத் ராஜாக்கள் வழியிலும், தாய் வழியில் தீயோகரியை ஆண்ட யாதவாக்கள் வழியிலும் வந்தவர் என்று சொல்லப்படுகிறது. தீவிர ஹிந்துப் பெண்மனியான சிவாஜியின் தாய் ஜிஜா பாய் முன்னோர்களின் பல வீரக்கதிகளை கூறி மகனை வளர்த்தாராம். ஷாஜியின் பரந்த தோட்டங்களின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த   தரகர் தாதாஜி கொண்டதேவ் என்பவரிடம் சிவாஜியை கல்வி கற்க வைத்தார் தந்தை. கல்வியுடனே குதிரையேற்றம், வேட்டையாடுதல் மற்றும் இராணுவப் பயிற்சிகளைப் பெற்றார். பல திறமைகளைப் பெற்ற சிவாஜியை எதிர்கால அரசியலுக்கு கொண்டுவர மராட்டிய சாமியார்களும், போதகர்களும் திட்டமிட்டார்கள். மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரு ராம் தாஸ் முழக்கமிட்டார். மேலும் சிவாஜி பிராமணர்களையும், பசுவையும் காக்க வந்தவர் என்று கூறினார். (இதனால் தற்போது மராட்டியர்கள் வசமான மஹாராஷ்டிராவில் மாடு அறுக்கத்தடை, மறுபுறம் சிவசேனா மராட்டியர்கள் தவிர அனைவரும் வெளியேறிவிடவேண்டும் என்று அறைகூவல். முஸ்லீம்களுக்கு வேலை மறுப்பு போன்றவை.) தாய் பூமி தாய்க்கு சமானம் என்றும் கூறி சிவாஜியை நன்கு முறுக்கேற்றினார். சிவாஜியும் முறுக்கேறி தாய் நாட்டிற்காக எதையும் செய்ய முன் நின்றார். 
மஹாராஷ்டிராவிலேயே பிறந்து வளர்ந்ததால் அதன் பூமியின் அமைப்பு இவருக்கு அத்துப்படியானது. மவாலிகளின் உதவியுடன் பல கொள்ளை களும், அரசுக்கெதிராக பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார். (சிவாஜியின் கொள்ளைகள் என்று தனி அத்தியாயங்கள் அடங்கிய வரலாறுகள் உண்டு. அதிலிருந்து சில பகுதிகளைத்தான் எழுதுகிறேன்) பத்தொன்பதாவது வயதில் பொது வாழ்வில் ஈடுபட்டான். 1646 ல் பிஜப்பூர் சுல்தான் நோய்வாய்பட்ட போது, பாதுகாப்பு கொடுத்த இடத்திலேயே துரோகித்தனமாக டோர்னா மற்றும் ராய்கர் கோட்டையை சுலபமாகக் கைப்பற்றினான். கொட்டையை மறுசீரமைப்புச் செய்து மாமன் ஷம்பூஜிக்கு கொடுத்தான். சகன்களின் பலமான இந்தாபூர், பாரமதி ஆகியவற்றைக் கைப்பற்றினான். கொண்டானா, புரந்தர், சிங்கார் கோட்டைகளை வரிசையாகக் கைப்பற்றி, குடும்பத்தின் பண்ணைகளை பாதுகாத்துக் கொண்டான். பிஜப்பூர் சுல்தானை நோயிலேயேவிட்டு, நட்பாக இருந்த சில மந்திரிகளை வைத்து தர்பார் நடத்தி, எதிர்ப்பான வர்களை சிறை பிடித்தான். அதை தன் குடும்ப சொத்தாக்கிக் கொண்டான். விரைவில் மராட்டிய குதிரைப்படை ஒன்றை அபாஜி சுந்தர் என்பவனது தலைமையில் கொங்கன் பகுதிக்கு அனுப்பி, கல்யானைக் கைப்பற்றி னான். தென்பகுதி கொலாபாவுக்கு சென்று முஸ்லீம் தலைவர்களைத் தூக்கிவிட்டு இந்துத் தலைவர்களை அமர்த்தி அவர்களின் கருணையைப் பெற்றான்.
   கல்யானைக் கைப்பற்றியதால் பிஜப்பூர் நிர்வாகம் எதிர்ப்பாகிப் போனது. ஓரளவு தேறிய பிஜப்பூர் சுல்தான் தனது இராணுவ உயரதிகாரி முஸ்தபாவுக்கு கட்டுப்படாத காரணத்தாலும், மகன் சிவாஜி தன் நாட்டின் பல பகுதிகளை குடும்பச் சொத்தாக ஆக்கிக் கொண்டதாலும் தந்தை ஷாஜியை சிறையிலடைத்தார். சிறையிலிருந்த தந்தையைக் காப்பாற்றித் தருமாறு அப்போது டெக்கானிலிருந்த பேரரசரின் மகன் முராத் பக் ஷிடம் வேண்டுகோள் விடுத்தான். அவர் தந்தை ஷாஜஹானிடம் முறையிட, மொகலாய எதிர்ப்பைத் தவிர்த்திட வேண்டி பிஜப்பூர் சுல்தான் ஷாஜியை நான்கு ஆண்டுகளுக்கு சிவாஜி பிஜப்பூர் பக்கம் வரக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்தார். சிவாஜி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு பிஜப்பூரின் கவனம் செலுத்தாமல் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் கைப்பற்றிய பகுதிகளின் நிர்வாகத்தை சீர்படுத்தினான்.
  ஷாஜி விடுதலையான பின் கர்நாடகாவில் ஜாகீராகத் தொடர்ந்தார். சிவாஜி மீண்டும் தெற்குப்பகுதியில் தாக்குதல்களைத் தொடர்ந்தான். சிவாஜி தென் கொங்கனின் பரந்த நிலப்பரப்பை பிடிக்க ஜாவ்லியின் ராஜாவான சந்திர ராவ் என்பவருடன் இணைந்தான். அவர் பிஜப்பூரின் மன்னரின் பேரில் அதை நிர்வகித்து வந்தார். தற்போது முஸ்லீம் மாகாணங்களை எதிர்க்க சிவாஜியுடன் சேர சம்மதித்தார். அப்போது அவருக்கு சிவாஜி தனக்கு பெரும் துரோகம் செய்யப் போகிறான் என்று தெரியவில்லை. ராஜாவைக் கொல்லும் நோக்கத்துடன் இரண்டு தரகர்களை ராஜாவின் மகள் மூலமாக சந்திக்க வைத்தான். ராஜா மிகவும் மரியாதயுடன் தரகர்களை வரவேற்க, தனிச் சந்திப்பில் தரகர்கள் ராஜா வைக் குத்திக் கொன்றார்கள். பின் மறைந்தோடி கட்ச் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த சிவாஜியுடன் சேர்ந்து கொண்டார்கள். ஒன்றுமே தெரியாதவர்கள் போல் திடீரென்று அரண்மனையைத் தாக்கினார்கள். ராஜாவின் மகன்கள் பலமாக போராடியும் முடியாமல் சிறைப் பிடிக்கப் பட்டு தென்பூனாவில் நிம்கஸா என்ற இடத்தில் அடைக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட ராஜாவின் அரசப் பெண்கள் ரகசியமாக புரந்தர் என்ற இடத்தில் வைக்கப்பட்டு பல நாட்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர்.
         

மொகலாய வரலாறு 25

1656 ல் பிஜப்பூரின் அல் ஆதில் ஷா இறந்த பிறகு, ஔரங்கஸேப் அதை மொகலாயப் பேரரசுடன் இணைக்க விருப்பப்பட்டார். அப்பிரதேசத்திற்கு நீண்ட நாட்களாகக் காத்திருந்த சிவாஜி எப்படியேனும் அதை அபகரிக்கத் திட்டமிட்டான். அதனால் ஔரங்கஸேப்பிடம் கூட்டு வைக்க பலமுறைப் பேசினான். சிறுவயதிலிருந்தே கொள்ளை, துரோகம் என்று வளர்ந்த சிவாஜியால் பெரிய பேரரசருடன் நட்பு பழக தெரியவில்லை அதனால் கூட்டு வைப்பது தோல்வியில் முடிந்தது. உடனே அறிவீனன் சிவாஜி மொகலாயர்களின் அஹ்மத்நகர், ஜுன்னார் ஆகிய பகுதிகளைத் தாக்கி னான். டெக்கானில் தந்தை ஷாஜஹானின் உடல்நலக்குறைவினால் அருகில் இருந்த ஔரங்கஸேப்பால் மராட்டியர்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலும் ஷாஜஹானின் மகன்கள் ஆட்சியை பிடிப்பதில் வேறு கவனம் செலுத்தியதால், சிவாஜிக்கு மேலும் மேலும் மொகலாயப் பகுதிகளைப் பிடிக்க சுலபமாகிப் போனது. அப்போதிருந்த பிஜப்பூரின் சுல்தானால் சிவாஜியின் கொடுமைகளைத் தாள முடியவில்லை. சுல்தான் தந்தை ஷாஜியை இனி பிஜப்பூரின் நிலப் பரப்பை ஆக்கிரமிப்பதை கைவிடுமாறு கூறினார். ஷாஜி தங்களை மன்னித்து விடுமாறு சுல்தானிடம் வேண்டினார். சுல்தான் தேர்ச்சிபெற்ற தளபதி அஃப்சல் கானை பெரிய படையுடன் மராட்டியர்களுக்கு எதிராக அனுப்பினார். அப்பெரும் படையையும், அஃப்சல் கானின் திறமையான போர் உத்திகளின் முன்பு வெல்லமுடியாது என்று கணித்த சிவாஜி குள்ளநரித்தனமாக சிந்தித்தான். 
தேனொழுக பேசியும், விலயுயர்ந்த பரிசுகளையும் பிராமண நடுவர்கள் மூலம் அனுப்பி அஃப்சல் கானிடம் சமாதானம் பேச அழைத்தான். உலகளாவிய இஸ்லாமிய படைகளின் தளபதிகளில் ஒருவரான அஃப்சல் கான் நேர்மையான நல்லெண்ணத்தின் வழியில் சம்மதித்தார். யார் துணையும் இல்லாமல் சிவாஜி மற்றும் அஃப்சல் கான் மட்டும் தனிமையில் ஆயுதங்கள் இன்றி சந்தித்துக் கொள்ள முடியானது. ஆனால், பிறப்பில் கோளாறுள்ள துரோகி சிவாஜி சங்கிலியாலான சட்டை போன்ற அமைப்பை உடுத்தி அதை மறைக்க பூவேலை செய்யப்பட்ட நீண்ட அங்கியை அணிந்து கொண்டான்.  தலையில் இரும்பு தொப்பி அணிந்து அதையும் மறைக்க டர்பன் போன்ற நீண்ட துணியை தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டான். இடக்கை விரல்களில் கூரிய புலி நகங்களைக் கட்டிக் கொண்டான். வலக்கையின் மூட்டுக்கருகில் பிச்சுவா கத்தி என்ற ஆயுதத்தை மறைத்துக் கொண்டான். போதாக்குறைக்கு அஃப்சல்கானை சந்திக்க போகும் வழி நெடுகிலும் மரங்களுக்கிடையில் தன் வீரர்களை ஒளிந்து கொள்ள வைத்தான். இந்த அசிங்கம் பிடித்த வீரத்தை பின்னால் வந்த பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் காறித்துப்பி பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு குழந்தை அரவாணிக்குள்ள வீரம். மதவெறி பிடித்தவனின் மழுங்கிய வீரம். ஜாவ்லியில் இருந்த அந்த இடத்திற்கு பிறப்பிலேயே வீரம் சொரிந்த அஃப்சல் கான் சாதாரண ஒரு பணியாளுடன் வந்தார். அவருக்குப் பின்னரே கோழையான சிவாஜி வந்தான். அவனும் ஒரு பணியாளுடன் வந்து அடிக்கடி ஆயுதமே இல்லாதவன் போல் காட்டிக் கொண்டான். கை கொடுத்து தழுவிக் கொள்ள வந்த அப்பாவி அஃப்சல் கானை துரோகி சிவாஜி தான் வைத்திருந்த ஆயுதத்தால் கடுமையாகத் தொடர்ந்து தாக்கிக் கொன்றான்.
அஃப்சல் கானை கொன்ற பிறகு, பிஜப்பூரின் கூடார நிலையை எட்டிய மராட்டிய வீரர்களின் படை பெரும் கொள்ளையடித்தது. இராணுவத்தில் முதல் பயிற்சிகளில் ஒன்றான கை, கால்களை தரையில் ஊன்றி உடலை உயர்த்தி இறக்கும் ‘தண்டால்’ என்னும் பயிற்சியை செய்யும் புதிய வீரன் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு வெற்றியை இழிவான சிவாஜி பெற்றான்.  இந்த துரோகக் கொலையை ஐரோப்பிய, இஸ்லாமிய, சில ஹிந்து எழுத்தாளர்களும் வண்மையாகக் கண்டித்தார்கள். அடுத்த முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதியை இடிப்பதன் மூலம் பலகோடி இதயங்களை நொறுக்கப் போகும் அவர்களுக்கு அந்த கண்டனங்கள் ஒரு பொறுட்டல்ல. பொய்களில் படுத்துறங்கும் மராட்டியர்களின் கல்மி பாகர் தற்காப்பின் போது தானே குத்திக் கொண்டு அஃப்சல் கான் இறந்ததாக ஒரு பொய்யைச் சொன்னான். அஃப்சல் கான், சிவாஜி சந்திப்பிற்கு தூதுவனாக இருந்த கிருஷ்ணாஜி என்பவனும் அஃப்சல் கான் தான் ஒரு ரகசிய திட்டம் வைத்திருந்தான் என்று ஒரு பொய்யைச் சொன்னான். கோபிநாத் பண்ட் என்பவன் ஒரு பொய்யைச் சொன்னான். பல விசாரனைகள். பல பொய்கள். ஆனால், எந்த ஒன்றும் எடுபடவில்லை. அஃப்சல் கான் தனியாக ஒரு திட்டம் வைத்திருந்தது காலாகாலமாக பணிபுரிந்த பிஜப்பூரின் படைகளுக்குக் கூட தெரியாமல் எப்படி கோபிநாத் பண்டுக்குத் தெரிந்தது?. சிவாஜியை உயிரோடு பிஜப்பூர் சுல்தான் முன் கொண்டு வந்து நிறுத்துவேன் என்று புறப்படும் முன் எல்லார் முன்னிலையிலும் அஃப்சல் கான் கூறி இருந்தார். அப்படிப் பட்டவர் தனித்திட்டம் வைத்திருக்க வாய்ப்பில்லை. அஃப்சல் கான் ஒரு தந்திரத்துடன் சிவாஜியைச் சந்திக்கச் சென்றிருந்தால், அதன்படி அடுத்த நடவடிக்கை எப்படி எடுக்க வேண்டும் என்று அடுத்த நிலையிலுள்ள வர்களுக்குச் சொல்லி இருப்பார் என்று மராட்டியர்களின் மூக்கை உடைத் தார்கள். அஃப்சல் கான் பிஜப்பூர் அரசாங்க தளபதியாக அனுப்பப்பட்டவர். உலகத்தளபதிகளில் மிகச் சிறப்பானவர். எப்படிச் சுற்றி எப்படி வந்தாலும் சிவாஜி தான் துரோகி என்று முடிவானது. அஃப்சல் கான் ஹிந்துக்கள் சொன்ன எந்த பொய்யிலும் பொருந்தாதவர் என்று பிஜப்பூர் அரசு கூறி விட்டது. அவ்வளவு பிரமாண்டமான பாபர் மசூதியை இடிக்க கடப்பாறை கள், ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் எப்படி வந்தன என்ற இக்கால தலைவர்கள், நீதிமன்றங்கள் கேட்டே பதிலில்லை. அக்காலத்தில் கத்தி எப்படி வந்தது, யார் எப்புறம் தாக்கினார்கள், எப்படி அஃப்சல் கான் இறந் தார் என்பதற்கு பதிலா வந்திருக்கும்?. மதவெறியர்களின் எத்தனையோ கரும்புள்ளிகளில் ஒரு புள்ளி அவ்வளவு தான். 
 சிவாஜியை சத்திரபதி என்று பெயரிட்டு பல கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் எடுத்து மாவீரனாக சித்தரித்தார்கள். தமிழில் கூட பிற்காலத்தில் கனேசன் என்ற சிறந்த நடிகனை வைத்து நாடகம் நடத்தி, அதைப் பார்த்த சரித்திரம் மறந்த ராமசாமிப்பெரியார் நடிகரை ‘சிவாஜி கணேசன்’ என்று விவரம் அறியாமல் பெருமைப்படுத்தினார். இதே சிவாஜி கணேசனை வைத்து தமிழகத்தின் தென்பகுதியை ஆண்ட ‘கட்டபொம்முலு’ என்ற தெலுங்கு மன்னனின் வரலாற்றை, அதே தெலுங்கினத்தைச் சேர்ந்த பி.ஆர். பந்துலு என்பவர் தயாரித்தார். வரலாறை தெரியாத, வந்தாரை வரவேற்கும் தமிழர்கள் கட்டபொம்மனை வீரத்தமிழனாக வசனங்கள் மூலம் அறிந்து கை தட்டி மகிழ்ந்தார்கள். பந்துலு தன் மூதாதையர்கள் சரித்திரத்தை பதிவு செய்த நிம்மதியில் போய் சேர்ந்தார். இப்போதும் சிவாஜிராவ் என்ற உண்மை பெயருள்ள மராட்டிய நடிகர் நாட்டின் கொடுமைகளை எதிர்த்து இரண்டரை மணி நேரத்தில் கிராபிக்ஸில் பலமாடிகள் கொண்ட நகரை ‘சிவாஜி’ என்ற பாத்திரத்தின் மூலம் உருவாக்கி தன் மூதாதையரை பதிவு செய்து விட்டார். இந்த பெயரை வைக்க சிவாஜிகணேசனின் மகனிடம் அனுமதி வாங்கினார் என்று பத்திரிக்கையில் செய்தி போட்டு மக்களை திசை திருப்பி விட்டார்கள். பன்றியின் பெயர் வைக்க கழுதையிடம் அனுமதியா?. மராட்டிய சரித்திரம் தெரியாத மறத்தமிழன் நடிகரின் உருவப் படத்திற்கு தீபாராதனைக் காட்டி, பாலூற்றி உள்ளம் குளிர்ந்தான். வேதனையில் நெஞ்சம் விம்முகிறது.   
அஃப்சல் கானின் கொலைக்குப் பிறகு, பிஜப்பூரின் போக்கை புரிந்து கொண்ட சிவாஜி இனி என்ன ஆனாலும் ஆகட்டும் என்று ஆயுதம் ஏந்தி அருகாமை பகுதிகளை கைப்பற்றினான். பலம் வாய்ந்த பன்ஹாலா மற்றும் பல கோட்டைகளைக் கைப்பற்றி பிஜப்பூருக்கு சவாலாக விளங்கி னான். கிருஷ்ணா நதியின் கரையில் இருந்த ராஜ்பூர், தபால் ஆகிய இடங் களை தாக்கினான். ஒவ்வொரு இடங்களைத் தாக்கும் போதும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்தான். பிஜப்பூரின் சுல்தான் அலி ஆதில் 1660 ல் தன் தளபதிகள் மூலம் சிவாஜியை மூன்று திசைகளில் இருந்து தாக்கினார். பன்ஹாலாவில் சிதி ஜோஹர் என்பவர் நான்கு மாதங்கள் முற்றுகை நடத்தி கைப்பற்றினார். விஷால்கர் என்ற இடத்தில் இரவில் சூழப்பட்ட சிவாஜி தப்பிப்பதற்கு போக்குக் காட்டினான். இறுதியில் இவன் தப்பித்து ஒடிய போது, பிஜப்பூர் தளபதி சிதி ஜோஹரின் சதியே காரணம் என்று பிஜப்பூர் அரசால் சொல்லப்பட்டது. இப்போது அலி ஆதில் ஷாவே நேரடியாக களத்தில் இறங்கினார். பெரும் படையுடன் சென்று துரோகி சிவாஜியின் வசமிருந்த பன்ஹாலா, பவன்கர் கோட்டைகளையும் சில பகுதிகளையும் மீண்டும் கைப்பற்றினார். சுல்தான் மழைக்காலம் வந்தும் தாக்குதலை விடவில்லை. எப்படியாவது சிவாஜியை சரணடைய வைக்க வேண்டி விரட்டிக் கொண்டே இருந்தார். 
இறுதியாக சுல்தானின் சார்பாக சிவாஜியின் தந்தை ஷாஜியையே நடுவராக சிவாஜியிடம் ஒப்பந்தம் பேச வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் முடிவில் 150 மைல்கள் நீளமும், 100 மைல்கள் அகலும் கொண்டு,வடக்கில் கல்யாணும், தெற்கில் பொண்டாவும், கிழக்கில் இந்தாபூரும், மேற்கில் தபாலும் அமைந்த பகுதியை சிவாஜி சுதந்திரமாக ஆளலாம் என்று முடிவானது. மீதி அனைத்து பகுதிகளும் பிஜப்பூர் வசம் ஒப்படைக்கப் பட்டது. தந்தை ஷாஜி உயிருடன் இருக்கும் காலம் வரை பிஜப்பூருடன் சமாதானமாக இருப்பதாக சிவாஜி சபதம் செய்தான். தந்தையின் ஆலோ சனையின் பேரில் ராய்ரி என்ற இடத்தை ராய்கர் என்று பெயர் மாற்றி தலைநகராக்கிக் கொண்டான். அவனிடம் 7000 குதிரை வீரர்களும், 60,000 காலாட்படையும் இருந்தது. இப்போது தனது ஆட்சியை மொகலாயப் பகுதிகளில் பெருக்க தன்னிடம் இருக்கும் பலம் போதுமென்று எண்ணி திசை திரும்பினான். மொகலாயப் பேரரசர் ஷாயிஸ்தா கானை டெக்கானின் வைஸ்ராயாக நியமித்தார். ஷாயிஸ்தா கான் சிவாஜியை விரட்டி சகன் கோட்டையைப் பிடித்தார். அடுத்து சிவாஜி இளமையில் இருந்த அரண்மனை இருப்பிடத்துடன் பூனாவைக் கைப்பற்றினார். நகரை பாதுகாப்பாக்கி தான் சிவாஜியின் மாளிகையிலேயே தங்கினார். சிவாஜி மாறுவேடமிட்டு கைதேர்ந்த நானூறு வீரர்களுடன் இந்து திருமண ஊர்வலம் போல் நகருக்குள் ஊடுருவினான். அவனின் இருப்பிடம் அவனுக்கு அத்துப்படியானதால் பாதுகாப்பை திறமையாக சமாளித்து நன்கு உறங்கிக் கொண்டிருந்த தளபதி ஷாயிஸ்தா கானின் அறையில் திடீரென்று நுழைந்தான். இதைக் கவனித்த அருகிலிருந்த ஷாயிஸ்தா கானின் மகன் அபுல் ஃபத் சரியான ஆயுதமின்றி சிவாஜியுடன் எதிர்த்துப் போராடி தந்தையைக் காக்க உயிரிழந்தார். ஷாயிஸ்தா கானும் இரு விரல்கள் துண்டிக்கப்பட்டார். இதற்குள் படைகள் வர சண்டை மூண்டது. ஷாயிஸ்தா கான் பிறகு ஔரங்காபாதுக்குச் சென்றார். பின்னர் பேரரசரால் பெங்காலின் கவர்னராக அனுப்பப்பட்டார். ஒரு வீரன் என்பவன் வெற்றியோ, தோல்வியோ நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். வெள்ளைக்காரர்கள் கூட கடினம் என்று தெரிந்தும் ஹைதர் அலி, திப்பு சுல்தானிடம் மோதினார்கள். ஆனால், ஆயுதம் இல்லாதவர்களை திருடன் போல் வந்து தாக்கிய சிவாஜிக்குப் பெயர் மாவீரனாம். இவன் பெயரில் மும்பையில் மத்திய இரயில் நிலையம், விமான நிலையம், தெருவுக்குத் தெரு சிலைகள் அட மூளையற்ற மூதேவிகளே. சரித்திரம் தெரிந்த வெளி நாட்டவர் நகைக்கிறார்கள். இந்தியாவை விட்டே தாண்டாத சிவாஜியின் சரித்திரம் ஒரு சாக்கடை.    
 மேற்குக்கரையில் அப்போது சூரத் நகரம் திட்டமிட்ட மிகவும் அழகிய நகரமாக இருந்தது. 1664 ல் சிவாஜி தவறான தீவிரவாத அமைப்புகள் மூலமும், எதிரிகளை ஏமாற்றியும் இங்கு அதிகமாகக் கொள்ளை அடித்து தலைநகர் ராய்கரில் பதுக்கி வைத்துக் கொண்டான். பூனாவை விட சூரத் அதிக பலனளிக்கக்கூடியது. சிவாஜி சூரத்தை மராட்டியத்துடன் இணைத்துக் கொள்வது கௌரவம் என்று கருதினான். துங்கபத்ரா நதிக்கருகில் ஒரு இடத்தில் நடந்த கலவரத்தை அடக்கச் சென்ற சிவாஜி யின் தந்தை ஷாஜி மரணமடைந்தார். ஷாஜியின் மறைவிற்குப் பிறகு அஹ்மத்நகரின் சுல்தான் அவரின் சேவையை மெச்சும் வண்ணம் மகன் சிவாஜியை ராஜா என்று கௌரவித்தார். இதனால் சுதந்திரமாகிவிட்ட சிவாஜி தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டுக் கொண்டான். புனித பயணமாக மக்காவுக்கு செல்பவர்களுக்கும், இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு வாணிபம் செய்வதற்கும் இடையூறாக இருந்த அப்பகுதியில் கொள்ளை அடித்து பதுக்கி வைத்திருந்த செல்வங்களை அப்புறப்படுத்திக் கொண்டான்.

மொகலாய வரலாற் 26

சிவாஜியின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வந்த ஔரங்கஸேப் இளவரசர் முஃஅஸ்ஸிம் தலைமையிலும், துணைக்கு புகழ் பெற்ற தளபதி சர்தார் ஜஸ்வந்த் சிங்குடன் சிறப்பான படை ஒன்றை சிவாஜியை எதிர்க்க அனுப்பினார். ஆனால் அவர்கள் எடுத்த நடவடிக்கை யில் எந்த பலனும் இல்லாததால், ஔரங்க்ஸேப் திருப்பி அழைத்துக் கொண்டார். பின்னர் ராஜா ஜெய்சிங் மற்றும் தலேர் கான் தலைமையில் மேலும் சிறந்த தளபதிகளுடன் மீண்டும் அனுப்பினார். அவர்கள் சிங்கார் மற்றும் புரந்தர் பகுதிகளை வென்றார்கள். மேலும் மொகலாயர்கள் முன்னேறுவதை கண்ட சிவாஜி இனி பயனில்லை என்று சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தான். அது மட்டும் ஆகாது என்று தன் ராஜா என்ற கௌரவத்தை துறந்து கொள்வதாக் அறிவித்து ராஜா ஜெய்சிங் தங்கியிருந்த கூடாரத்திற்கு வந்தான். சமாதானத்தின் தீர்வாக தன் வசமிருக்கும் 23 கோட்டைகளை மொகலாயர்களுக்கு கொடுத்து விட்டு, 12 கோட்டைகளை தான் ஜாகீர் அந்தஸ்தில் வைத்துக் கொள்வதாகவும், கொங்கன் பகுதியின் ஆண்டு வருவாய் நான்கு லட்சமும், பலாகாட்டில் ஐந்து லட்சமும் கிட்டும் பட்சத்தில் ஆண்டுக்கு நாற்பது லட்சம் ரூபாய் பதிமூன்று தவணைகளில் ஔரங்கஸேப்புக்கு செலுத்துவதாகவும், பதிலுக்கு பிஜப்பூரை சிவாஜியின் வசம் கொடுக்கப்பட வேண்டும். சிவாஜியின் மூத்த மகனுக்கு ஐந்தாயிரம் குதிரைகளின் பொறுப்புத் தகுதி தரவேண்டும். ஔரங்கஸேப் எதிரிகளை எதிர்த்துப் போரிடும் போது, தன் வீரர்களுடன் தானும் கலந்து கொள்வதாகவும் முடிவானது. தளபதி ராஜா ஜெய்சிங் மேற்படி ஒப்பந்தங்களை ஆலம்கீரின் பார்வைக்கு அனுப்பினார். மூன்று மாதகாலத்திற்குள் சிவாஜி சரணடைந்து ஒப்பந்தத்தை நிறை வேற்ற வேண்டும் என்று முடிவானது. சிவாஜியும், மொகலாயர்கள் பிஜப்பூர் சுல்தானுக்கு எதிராக நடத்திய போரில் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செய்தான்.
புரந்தர் ஒப்பந்தமாகி ஆறு மாதங்கள் கடை பிடிக்கப்பட்டதற்குப் பிறகு தான் ராஜா ஜெய்சிங் பிஜப்பூரின் போரில் கவனம் செலுத்தினார். சிவாஜி யும் டெக்கான் பகுதியில் மொகலாயர்களின் வெற்றிக்கு பாடுபட்டான் அல்லது பாடுபடுவது போல் நடித்தான். இரண்டாயிரம் குதிரைவீரர் களுடனும், ஏழாயிரம் காலாட்படையுடனும் கலந்து கொண்டான். பன் ஹாலா என்ற பகுதியின் போரில் அதை வெற்றி கொள்ள முடியா விட்டாலும், பல பலம் வாய்ந்த பகுதிகளை வெல்ல உதவி புரிந்தான். இதை கௌரவிக்கும் விதம் ஔரங்கஸேப் அவனுக்கு பொன்னால் அலங்கரிக்கப்பட்ட வாளும், சிறப்பு அங்கியும் கொடுத்தார். மொகலாய அரண்மனையில் சிவாஜியை சந்திக்க பேரரசர் அழைத்தார். அவனது புத்தியைப் போலவே சிந்தித்த சிவாஜி தனக்கு பாதுகாப்பு அளிப்பதாக இருந்தால் தான் பேரரசரை சந்திப்பதாகக் கூறினான். தனது பிரதேசத்தை தன் தாயார் ஜீஜிபாய் வசம் ஒப்படைத்து, மேலும் மூன்று சிறப்பு அதிகாரிகளை தாயாரின் துணைக்கு வைத்து விட்டு, 1666 மார்சில் மகன் சம்பூஜியுடன் பேரரசரை சந்திக்க ஆக்ரா வழியாக கிளம்பினான். தலை நகரில் சிவாஜியை ராஜா ஜெய்சிங்கின் மகன் வைஸ்ராய் ராம்சிங்கும், அமிர் முக்லிஸ் கானும், இரண்டு மொகலாய அதிகாரிகளும் வரவேற்ற னர். இவன் சென்ற நேரத்தில் தான் ஔரங்கஸேப்புக்கு ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சிவாஜியை ராம்சிங் தர்பாருக்கு அழைத்துச் சென்றான். சிவாஜியும் ஔரங்கஸேப்புக்கு 1,500 தங்கத்துண்டு களை காணிக்கையாகவும், 6000 ரூபாய் பரிசாகவும் கொடுத்தான். நடைமுறை சந்திப்பு முடிந்த பிறகு, ஔரங்கஸேப்பும் தகுதி எனப்படும் மொகலாய மன்சாபாக 5000 குதிரைகளின் தகுதியை சிவாஜிக்குக் கொடுத்தார். இப்பெருமைகளால் தன்னிலை மறந்த சிவாஜி பெருமை கொண்டு, தானும் பேரரசருக்கு இணையானவன் போல் கருதி கொண்டு மூன்றாம் தர (THIRD DEGREE) நிலைபாட்டில் தர்பாரில் அனைவர் முன்பும் செயல்பட்டான். ஒரு பேரரசர் வயதில் மூத்தவர் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் நடந்தான். சிவாஜியின் இக்கீழ்தரமான நடவடிக்கைப் பற்றியும் ஆய்வாளர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார் கள். இது பரம்பரையாக சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வரும் ஔரங்கஸே புக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. கொள்ளையடித்தும், கொலை செய்தும் குறுக்கு வழியில் வந்து ஒரு சிறு பிரதேசத்தை ஆட்சி செய்த சிவாஜியின் செயல் தர்பாரின் கௌரவத்தைக் குலைத்து அவமானப் படுத்தியதாகக் கருதப்பட்டு அவனுக்கு வழங்கப்பட இருந்த கௌரவம் பறிக்கப்பட்டது. இதற்கு முன்பு 5000 மன்சாப்புகள் கௌரவம் ஜஹாங்கீ ரால் உதைய்பூரின் ராஜா ராய்கரணுக்கும், ஷாஜஹானால் சிவாஜியின் தந்தை ஷாஜிக்கும், ஔரங்கஸேப்பால் ராணா ராஜ் சிங்குக்கும் வழங்கப் பட்டிருந்தது. தற்போதைய தளபதி ராஜா ஜெய்சிங்குக்கு 5000 மன்சாப் வழங்கப்பட்டு, மராட்டியர்கள் மீது சிறந்த நடவடிக்கை எடுத்த காரணத் தால் 7000 மன்சாபுகளுக்கு உயர்த்தப்பட்டார். இவர்களின் தரத்திற்கு இணையில்லாவிட்டாலும் ஆலம்கீர் சிவாஜியை 5000 மன்சாப் வழங்கி இருந்தார். அதைக் கெடுத்துக் கொண்டான். மொகலாய சட்டப்படி தர்பாரில் இருந்தவர்கள் சிவாஜியை வீட்டுக் காவலில் வைத்தார்கள். 
விடுதலை வேண்டி விண்ணப்பித்த அனைத்து மனுக்களையும் ஔரங்கஸேப் புறந்தள்ளினார். கோல்கொண்டாவை வெல்ல உதவுவதாகவும் தன்னை விடுவிக்க வேண்டியும் கோரினான். அப்படியும் ஔரங்கஸேப் ஒப்புக்கொள்ளவில்லை. தனிமையில் சந்திக்க கோரிய தையும் அவர் ஏற்கவில்லை. சிவாஜியின் குடும்பத்தினரின் மீதான ஔரங்கஸேபின் கருணை காலத்தால் போற்றத்தக்கது. மிர்சா ராஜா ஜெய்சிங்கின் சிபாரிசின் பேரில் சிவாஜியின் மகன் சம்பூஜிக்கும், மருமகன் நதூஜிக்கும் தலா 5000 மன்சாபுகளை வழங்கினார். சாஹூஜி என்பவருக்கு 7000 மன்சாபுகளும், ராஜா என்ற அந்தஸ்தும் வழங்கினார். சிவாஜியின் குடும்பத்தினரும் ஔரங்கஸேப் மீது அளவு கடந்த மரியாதை செலுத்தி னர். சிவாஜி சில நாட்கள் நோய்வாய்பட்ட்து போல் இருந்தான். அதன் பிறகு தன் பிராமண பெரியவர்களுக்கு அன்பளிப்பு செய்வது போல் பழக்கூடைகளை அனுப்பினான். கருணை உள்ளம் கொண்ட ஔரங்க ஸேப் வேதக்காரர்களுக்குச் செல்வதால் அவற்றை சோதனை செய்து அவமானப்படுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால், குணத்தில் நரி என்றுமே நரி தான் என்பது போல் இரு பழக்கூடைகளில் சிவாஜியும் அவன் மகன் சம்பூஜியும் தப்பிச் சென்றார்கள். ஆக்ராவிலிருந்து ஆறு மைல் தொலைவில் இவர்களுக்காக காத்திருந்த குதிரைகளில் ஏறி மதுரா சென்றார்கள். மொகலாய காவலர்களிடமிருந்து தப்பிக்க கிழக்குப் புறமாக பெங்கால், ஒரிஸ்ஸா மற்றும் கொண்ட்வானா பகுதியாகச் சென்றார்கள். ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு தனது தலைநகருக்கு வந்தான். ராம் சிங்கின் உதவியுடன் தான் சிவாஜி தப்பித்தான் என்பதை பின்னால் தெரிந்து கொண்ட ஔரங்கஸேப் அவனின் பதவி சொத்துக் களைப் பறித்து தண்டனை கொடுத்தார். 
மொகலாயர்கள் பிஜப்பூரை வெற்றி கொண்டது சாதாரணமாக இல்லை. சிவாஜிக்கும் பிஜப்பூரின் மீது ஒரு கண் இருந்த பட்சத்தில் சாதுரியமாக அவனை திசைத் திருப்பி, புரந்தர் ஒப்பந்தத்தின் மூலம் அவனை வைத்தே பிஜப்பூரை வென்றது முழுக்க முழுக்க ராஜா ஜெய்சிங்கின் இணை யில்லாத ராஜதந்திரமே. அதன் வெற்றி அவரையே சாரும். அதன் பிறகு அவர் டெக்கானுக்கு அழைக்கப்பட்டு இறந்து போனார். ராஜா ஜெஸ்வந்த் என்றுமே பேரரசுக்கு ஆதரவாய் இருந்ததில்லை. அவர் மராட்டியர்களின் உயர்வையே விரும்பினார். மொகலாய இளவரசரால் தலேர் கான் வெறுக்கப்பட்டார். அதனால் அவர் பிதாருக்கு மாற்றப்பட்டார். இளவரச ரால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது. மேலும் பஞ்சாப் பகுதியில் பெர்ஷியர்களின் ஊடுருவல் இருந்ததால் அங்கு ஒரு படை அனுப்பப் பட்டது. இடையில் ஓராண்டாக பெஷாவரில் யூசுஃப்ஸைஸ் என்பவரின் புரட்சி வேறு இருந்தது. இவையெல்லாம் தப்பி வந்த சிவாஜிக்கு சாதக மாக இருந்ததால் அவன் நேரடியாக ஔரங்கஸேப்பை எதிர்க்க எண்ணினான். 1669 வரை அமைதியாக இருந்து நிர்வாகத்தை சீர்படுத்தினான்.
 சிவாஜியின் நண்பரான ராஜா ஜெஸ்வந்த் சிங் மூலம் ஔரங்கஸேப்பிடம் சமாதானம் பேசப்பட்டது. அதில் மஹாராஷ்டிராவை ராஜா என்ற அந்தஸ்துடன் சிவாஜி தனியாக ஆண்டு கொள்ளலாம் என்றும், மேலும் ஒரு ஜாகிர் (இராணுவம் மற்றும் நிர்வாக அந்தஸ்தில் உள்ள) அந்தஸ்தில் பிராரில் ஓர் இடமும், மகன் சம்பூஜிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மன்சாபை தொடரவும், சிவாஜியின் அனைத்து கோட்டை களை திரும்ப ஒப்படைப்பதாகவும் இது 1668 லிருந்து 1670 வரை செல்லுபடி யாகும் என்று இருந்தது. அதேநேரத்தில் பிஜப்பூர் சுல்தானுடனும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஔரங்கஸேபால் போடப்பட்டது. அதில் சுல்தான் ஷோலாபூரை மொகலாயர்களுக்கு திருப்பித்தருவதாகவும், மேலும் 1,80,000 பகோடாக்கள் வருமானம் வரும் ஒரு இடத்தையும் தருவதாகவும் போடப்பட்டது. சிவாஜி இது தான் தருணம் என்று பிஜப்பூர், கோல் கொண்டாவிலுள்ள சாவூத் மற்றும் சுர்தேஷ்முகி ஆகிய இடங்களையும் கேட்டான். அது அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் ஆண்டுக்கு பிஜப்பூர் 3.5 லட்சமும், கோல்கொண்டா 5 லட்சமும் மொகலாயர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் முடிவானது. 1670 ல் மீண்டும் சிவாஜி மொகலாயர் களின் கோட்டைகளின் மீது படையெடுத்தான். சிங்கார், புரந்தர், மஹூலீ, கர்னல்லா மற்றும் லோஹ்கர் பகுதிகளைப் பிடித்தான். சிவாஜியைத் தடுப்பதில் மொகலாய அதிகாரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது. மொகலாயர்கள் சாவூத் மற்றும் சுர்தேஷ்முகியை மீட்டனர். சிவாஜி சூரத்தைத் தாக்கி பெரும் கொள்ளையடித்தான். மொகலாயர் களுக்கு எதிராக பெரும் சக்தியாக இந்துக்களுக்கு தெரிந்தது.

மொகலாய வரலாறு 27

1674 ல் மொத்த மஹாராஷ்டிராவையும் பிடித்து, ராய்கரை தலைநகராக்கிக் கொண்டு தானே முடிசூட்டிக் கொண்டான். வேத சாஸ்திர நடைமுறைகளை தனது பிரதேசத்தில் கொண்டு வந்து பழைய இந்து ஆட்சியை நினைவு படுத்தி னான். ஆலம்கீர் வடமேற்கில் ஆஃப்கான் பழங்குடியினரின் பிரச்சினையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, 1676 லிருந்து 1680 வரை சிவாஜி தெற்கில் மேலும் சில பகுதிகளை வென்றான். ஜின்ஜி, வேலூர் மற்றும் விஜயநகர பேரரசின் சில பகுதிகளையும் வென்று இறுதியாக ஔரங்கஸேப்பை எதிர்க்கத் தயாரானான். ஆனால், 1680 ல் தன் ஐம்பத்தி மூன்றாவது வயதில் மரண மடைந்தான்.
பல மொகலாய தளபதிகளால் டெக்கானை வெல்ல முடியாத பட்சத்தில் ஔரங்கஸேப் தானே முன் வந்தார். ராஜபுத்திரர்களுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டு, தனது முன்னோர்கள் வழியில் போரிட்டார். வரிசையாக பாமனி பேரரசு, பிதார், அஹ்மத்நகர், பிரார் ஆகியவற்றை தந்தையின் ஷாஹ்ஜ ஹானி படைகளின் உதவியுடன் கைப்பற்றினார். எஞ்சியது பலகாலமாக போராடி வரும் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா மட்டுமே. அதற்கு காரணம் அந்த சுல்தான்கள் ஷியா பிரிவு இஸ்லாமிய கொள்கைகளை உடையவர்கள். பெரும் கப்பத்தொகையை மொகலாயர்களுக்கு செலுத்தாமல் வைத்திருந் தார்கள். மராட்டியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மொகலாயர்களை மிரட்டி வந்தார்கள். மொகலாயர்களை விட பெர்ஷியாவின் ஷா தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாய் காட்டிக் கொண்டார்கள். அவர்களின் பூமி மிகவும் வளம் கொழிப்பதாக இருந்தது. ஔரங்கஸேப் பெரும் படையை இரண்டாகப் பிரித்து ஒன்றை இளவரசர் முஃஅஸ்ஸிம் தலைமையில் மராட்டியர்களை எதிர்க்கவும், இன்னொன்றை இளவரசர் ஆஸம் தலைமையில் பிஜப்பூரை எதிர்க்கவும் அனுப்பினார். முஃஅஸ்ஸிம் கொங்கனின் உள்பகுதி வரை சென்று பலத்த இழப்புடன் திரும்பினார். இருந்தாலும் ஷோலாப்பூரை வென்றார். 1684 ல் முஃஅஸ்ஸிம் பிஜப்பூரின் படையெடுப்பில் தந்தையிடம் சுல்தானிடம் சமாதானமாகப் போக வேண்டி தொந்தரவு செய்தார். பல பிரச்சினைக்குப் பிறகு, ஔரங்கஸேப் தானே சென்று 1686 ல் பிஜப்பூரைக் கைப்பற்றினார். அப்போது அங்கு சுல்தானாக சிக்கந்தர் ஆதில் ஷா இருந்தார். 
அடுத்து கவனம் கொல்கொண்டாவின் மீது திரும்பியது. அங்கு பல இந்து மந்திரிகள் இருந்தார்கள். குறிப்பாக வைஸ்ராயர்கள் மடன்னா மற்றும் அகன்னா இவர்கள் இருவரும் முஸ்லீம்களிடத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள். மன்னரும் மொகலாயர்களுக்கு எதிராக சம்பூஜிக்கு ஆதரவளித்தார். மொகலாயப் போரில் பிஜப்பூருக்கும் உதவி செய்தார்கள். அதன் சுல்தான் அபுல் ஹசன் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார். மொகலாயர் களுக்கு கோல்கொண்டாவை வெல்வது கடுமையாக இருந்தது. அதன் தளபதி அப்துர் ரசாக் அரணாக நின்று சுல்தானைக் காத்தார். ஷியா பிரிவு அரசு களிலேயே தைரியமான தளபதி அப்துர் ரசாக். ஒற்றை வீரராக இருந்து நேருக்கு நேர் மோதினார். இறுதியில் அவர் வீழ்ந்த போது எழுபது இடங்க ளிலே காயமுற்றிருந்தார். முடிவில் அபுல் ஹசன் சிறைபிடிக்கப்பட்டு கோல்கொண்டா பேரரசுடன் இணைக்கப்பட்டது. தளபதி அப்துர் ரசாக்கின் குணநலன்களையும், வீரத்தையும் நன்கறிந்திருந்த ஔரங்கஸேப் தனது தனிப்பட்ட மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார். கோல்கொண்டா கோட்டையைக் காக்க அவர் காட்டிய வீரத்திற்காக ஔரங்கஸேப் கோட்டையை கைப்பற்றவில்லை. அடுத்து சிவாஜிக்குப் பிறகு மராட்டிய மன்னனான அவன் மகன் சம்பூஜி பெரும் குடிகாரனாக இருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தையும், செல்வங்களை பெண்களுக்கு செலவழிப்பதிலும் மூழ்கி இருந்தான். ஆட்சி நிர்வாகத்தை மராட்டியர்கள் அறிந்திடாத காவி குலேஷ் (காலூஷா) என்ற அமைச்சர் கவனித்து வந்தார். சம்பூஜியின் சரித்திரத்தை நாம் தவித்திடுவோம். இவனது வீரர்கள் வழக்கம் போல் கொள்ளையடித்து தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்தார்கள். இது மொகலாயர்களுக்கு சாதகமாக இருக்க 1689 ல் வெற்றி பெற்றார்கள். சம்பூஜி சங்காமேஷ்வரா என்ற இடத்தில் குடிபோதையில் பெண்களுடன் நீராடிக் கொண்டிருக்கும் போது மொகலாய தளபதி தகர்ரப் கானால் கைது செய்யப்பட்டான். மராட்டிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சம்பூஜியின் மகன் சாஹுவை ஔரங்கஸேப் நன்றாக நடத்தி ஹானஸ்ட் என்று கூறி கௌரவித்தார்.
மராட்டியர்கள் பலவீனமடைந்தார்கள். பேரரசர் ராஜபரிவட்டத்துடன் பூனா வருகை அவர்களிடத்திலே பயத்தை உண்டுபண்ணியது. மேலும் ஔரங்க ஸேப் இராணுவத்தை அனுப்பி தலைநகர் ராய்கரை கைப்பற்றினார். மராட்டிய தலைவர்கள் ஒன்றுகூடி இறந்து போயிருந்த ஐந்து வயதே ஆகி இருந்த சம்பூஜியின் மகன் இரண்டாவது சிவாஜியை ராஜாவாக தேர்ந்தெடுத்து, ராஜாராம் அவருக்கு மேலிருந்து ராஜ்ஜியத்தை கவனித்துக் கொள்வார் என்று முடிவு செய்திருந்தார்கள். ராய்கரை பிடித்த பின் மொகலாயர்கள் மிரிசி மற்றும் பன்ஹாலா கோட்டைகளைப் பிடித்தார்கள். இளம் சிவாஜியையும் சிறை பிடித்தார்கள். ராஜாராம் ஜின்ஜிக்கு ஓடிப்போய் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டார். ராஜாராமை எதிர்த்து ஸுல்ஃபிகர் கான் என்னும் தளபதியை ஔரங்கஸேப் அனுப்பினார். அவர் ஜின்ஜியை வெல்ல முடியாமல் திரும்பி னார். மொகலாயர்களும் பல பிரதேசங்களை வென்றிருந்ததால் அவைகளைக் காக்க படைகள் பல கூறாகப் பிரிந்தது. ஸுல்ஃபிகருக்கு ஜின்ஜியில் பல ஆண்டு ஆனதால், இந்த தருணத்தை பயன்படுத்தி மராட்டியர்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு உதவியதால் இளவரசர் காம் பக் ஷை ஔரங்கஸேப் சிறையிலடைத்தார். ஸுல்ஃபிகார் கானை திரும்ப அழைத்துக் கொண்டு, 1694 லிருந்து 1697 வரை பல தளபதிகளை மாற்றியும் ஜின்ஜியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஔரங்கஸேப் பிராஹமாபுரியில் தங்கி இருந்து மராட்டியர்களுக்கு எதிரான நடவடிக்கையை கவனித்து வந்தார். மராட்டிய தளபதிகளிடையே பிரச்சினை வர மொகலாயர்கள் சில பகுதிகளை வென்றார்கள். ஜின்ஜி வீழ்ந்து விட ராஜாராம் சதாராவில் அரசு அமைத்துக் கொண்டார். அங்கும் மொகலாய படை விரைய ராஜாராம் குடும்பத்துடன் கிலோனா தப்பிச் சென்றார். ஓடிக்கொண்டிருந்த ராஜாராம் சிங்காரில் இருந்த போது 1700 ல் மரணமடைந்தார்.
ராஜாராம் இற்ந்த பிறகு, அவர் மகன் கர்ணா ராஜாவானார். அவர் குறுகிய நாளில் சின்னம்மை நோய் கண்டு மரணமடைந்தார். சிவாஜியின் விதவை மனைவி தாரா பாய் மூன்றாவது குழந்தையை மூன்றாவது சிவாஜியாக தேர்ந்தெடுத்து தானே அவனுக்கு பின் நின்று ஆட்சி புரிந்தார்.  இவள் வீறு கொண்டு மொகலாய படைகளை எதிர்க்க கிளம்பினாள். பெண்ணாகக் கிளம்பியதால் மராட்டியர்களிடம் ஒரு வேகம் வந்தது. இது மொகலாய படைகளை சிதறடித்தது. ஔரங்கஸேபுக்கு எண்பத்து நான்கு வயதான போது பிரச்சைனைகள் நாற்புறமும் சூழ்ந்தது. பஞ்சாபில் சீக்கியர்கள் பலம் பெற ஆரம்பித்தார்கள். புர்ஹான்பூரில் ஜாட்கள் மொகலாயர்களுக்கு இணங்காமல் புரட்சியில் ஈடுபட்டார்கள். இச்சூழ்நிலையில் 1707 ல் ஔரங்கஸேப் மரண மடைந்தார். மராட்டியர்கள் காணும் இடமெல்லாம் மொகலாய வாகனங்களை கொள்ளையடித்தார்கள். சீக்கியர்கள் சுதந்திர பூமி வேண்டி விரைந்தார்கள். ஆங்கிலேயர்களும் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி பலமாகிக் கொண்டிருந்தார்கள். ஜஹாங்கீரின் காலத்தில் தர்பாருக்கு வந்த சர். தாமஸ் ரவ் பேரரசால் வாணிபம்செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் 1639 ல் சந்தேரி ராஜாவிடம் ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து மதராஸில் கோட்டையுடம் கூடிய தொழிற்சாலையைக் கட்டி டச்சுக்காரர்களை எதிர்த்தனர். அதுதான் இன்றைக்கும் இருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எல்லா மொகலாய மன்னர்களை விட ஷாஜஹான் ஆங்கிலேயர்களை 1650-51ல் ஹூக்லி, காசிம்பஜார் ஆகிய இடங்களில் பல தொழிற்சாலைகளை கட்டிக் கொள்ள அனுமதித்தார். எட்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் அனைத்து தொழிற்சாலைகளையும் சூரத் நகருக்கு மாற்றிக் கொண்டார்கள். 1666 ல் சிவாஜியுடனான போரில் இறக்குமதிக்கான வரியை மொகலாயர்களிடம் குறைத்ததற்காக ஔரங்கஸேப் பாராட்டினார். 1668 ல் மேற்குகரைப் பகுதிகளான பம்பாய், சால்செட்டில் பலமாக இருந்தார்கள். தற்போது சொந்த துறமுகம் இருந்த அந்த பகுதியில் மராட்டியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் பயந்தவர்களாக இருந்தார்கள்.
1685 ல் அப்போது பெங்காலின் கவர்னராக இருந்த ஷாயுஸ்தா கான் ஆங்கிலேயர்களுக்கு சில வரிகளை விதித்தார். அதை செலுத்த ஆங்கிலேயர் கள் மறுத்தனர். இதனால் ஆங்கிலேயர்களுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே நிர்வாகப் போர் இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்தின் மன்னர் இரண்டாம் ஜேம்ஸ் ஆதரவளித்தார். அவர்கள் பத்து கப்பல்களில் சென்று சிட்டகாங்கை பிடித்தனர். சர். ஜான் சைல்ட் என்பவன் மொகலாய கப்பல்களைத் தாக்கினான். இதனால் ஆலம்கீர் அவர்களை சிறைபிடித்து சூரத், மசூலிப்பட்டனம் மற்றும் ஹீக்லியில் இருந்த தொழிற்சாலைகளை மூட வைத்தார். அந்நிய வாணிபத்தை தடை செய்தார். சில நாட்கள் கழித்து அப்போது பெங்காலின் கவர்னராக இருந்த இப்ராஹீமிடம் ஆங்கிலேயர்கள் மீது கடுமை காட்ட வேண்டாம் என்றார். இதனால் இப்ராஹீம் ஜாப் சர்னாக் என்ற ஆங்கிலேயரை திரும்ப அழைத்து 1690 ல் ஹூக்ளி கரையில் அவர்களுக்காக தனி பகுதியை உருவாக்கிக் கொள்ள அனுமதித்தார். அப்படி அவர்கள் உருவாக்கிய நகரம் தான் தற்போதைய கல்கத்தா நகரம். ஹூக்ளி ஆற்றின் இருந்த சிறு கிராமமான காலீகதா என்ற பெயரையே இந்நகரம் பெற்றது. சிறியதாக துவங்கிய இந்த கல்கத்தா நகரம் பின்னாளில் விரிவாக்கப்பட்டு பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய நகரமானது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கால் பதிக்க சூரத்தின் தலைவராக இருந்த ஜான் சைல்ட் மொகலாயர்களுக்கு எதிராக போர் அறிவித்தான். ஆனால் அமைதி வேண்டி சமாதானம் ஆனான். பேரரசர் அவர்களை மன்னித்து 1,50,000 ரூபாய் செலுத்தி விட்டு மீண்டும் வாணிபம் செய்து கொள்ள அனுமதித்தார். 1690 ல் உச்சத்தில் இருந்த ஔரங்கஸேப் ஏறக்குறைய இந்தியாவை ஆண்டார். வடக்கில் காஷ்மீர், தெற்கில் கேப் கொமோரின், மேற்கில் காபூல், கிழக்கில் சிட்டகாங்க் வரை பரவி இருந்தார். 
ஆட்சி நிர்வாகத்தில் முன்னோர்களின் நடைமுறையையே கடை பிடித்தார். அதிக நிலப்பரப்புகளை வென்றெடுத்த பின் எல்லைகளை மாற்றி அமைத்தார். பெங்கால், முல்டான், காபூல் ஆகியவை பெரிய மாகாணங்களாக இருந்ததால் தனித்தனி கவர்னர்களை நியமித்தார். அரசியலையும், மதத்தையும் தனியாக்கினார். சட்டங்கள் திருக்குரானின் வழிகாட்டுதல் படி அமைத்தார். அக்பரின் தீனே இலாஹி நடைமுறைகளை புறந்தள்ளி இஸ்லாமிய நாட்காட்டியை பின் பற்றினார். மதத்திற்கு ஒத்துவராத அனைத்து வரிகளையும் நீக்கினார். இந்து புனிதஸ்தலங்களுக்கான வரியை நீக்கி ஜிஸ்யாவை கொண்டு வந்தார். ஆனால் அதில் கடுமையைக் காட்டவில்லை. விபச்சாரம், மது மற்றும் போதை பழக்கங்களை ஒழித்தார். விபச்சாரிகளை நகரை விட்டு வெளியேற்றி தனியாக ஒரு இடத்தில் சிவப்பாடை மட்டுமே உடுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் ‘லால் பீபி’ என்று அழைக்கப்படச் செய்தார். மக்களின் பணத்திற்கு மன்னர் பொறுப்பானவராக இருந்தார். ‘பெய்த் உல் மால்’ என்னும் இஸ்லாமிய முறைப்படி அமைத்திருந்தார். நீதி வழங்குவதற்கு ஒவ்வொரு புதன் கிழமையும் ‘தீவான் இ காஸ்’ என்ற மண்டபத்தில் காலை எட்டு மணி முதல் மதியம் வரை இருப்பார். (இதை இப்போதும் மத்திய அரசு பாஸ்போர்ட் போன்ற பலதுறைகளில் அதாலத் தின் (தீர்ப்பு நாள்)என்று பழக்கப்படுத்தி வருகிறது.) இதில் ஔரங்கஸேபுக்கு சிறப்பு வாய்ந்த ஒரு குழு உதவியாக இருந்தது. ஒவிங்க்டன் என்பவர், ஔரங்கஸேப் நீதியின் கடல், சமமான நீதியைத் தருவதில் குறியாக இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வமாக இருந்தார். எல்லா நகரங்களிலும் பல்கலைக் கழகங்களை நிறுவினார். சிறிய நகரங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். ஔரங்கஸேப் ஆட்சியில் டெல்லி, ஜொன்பூர், சியால்கோட் மற்றும் தட்டா ஆகியவை கல்வியில் முதல்நிலையில் இருந்தது. ஹாமில்டன் என்பவர், ‘தட்டா நகரம் நானூறு கல்லூரிகளை நிறுவி மதக் கல்வி, தத்துவம், அரசியல் போன்ற துறைகளை இளைஞர்களுக்கு போதித்து வந்தது’ என்று பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய இலக்கணம் நன்கு இருந்தது. குறிப்பாக ராஜவம்சத்தினர் கடந்த கால அரசியல், பொதுக் கல்வி, வெளிநாட்டு மொழிகள் கற்றுக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தார். ஆட்சிக்காலம் முழுதும் பிரச்சினைகள் சூழ்ந்திருந்ததால், கலையை இவர் முக்கியமாக கருதவில்லை. இவர் காலத்தில் டெல்லி கோட்டையில் பளிங்கு கல் மசூதியும், லாகூரில் பாதுஷாஹி மசூதியும் சிறப்பானது. மற்றபடி இசை, ஓவியங்களில் அவ்வள வாக ஆர்வமில்லாதவர். அக்பரின் காலத்தில் ஏறக்குறைய ஊக்குவிக்கப்பட்டு இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் எல்லா காலகட்டத்திலும், நிகழ்ச்சிகளிலும், புனித தலங்களிலும் தலைவிரித்து ஆடிய இசையை தடை செய்தார்.அக்பரின் காலத்தில் தான்சேன் போன்ற புகழ் பெற்ற இசைக் கலைஞர்களை கொண்டிருந்த மொகலாய சபையை அறவே இசை இல்லாமல் செய்தார். ஒரு வெள்ளிக்கிழமை ஔரங்கஸேப் அறியும் வண்ணம் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் அழுதவாறு கல்லறையை நோக்கி ஊர்வலமாகச் சென்று இசையைத் தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக்கேள்விப்பட்ட ஔரங்கஸேப் அவர்களின் உறவினர்கள் நல்லவிதமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறாரா என்று பார்க்கச்செல்லும் யாரையும் தடை செய்யவேண்டாம் என்று அமைதியாகக் கூறிவிட்டார். சில ஓவியர்கள் போர் நடவடிக்கை ஓவியங்களை வரைந்திருந்தனர். தோட்டங்களில் லாகூரில் பாதுஷாஹி மசூதியுடன் இணைந்த அழகிய தோட்டமும், டெல்லியில் ரோஷனாரா பேகம் தோட்டம், லாகூரில் சௌபுர்ஜி பாக், நவான்கல் பாக் மற்றும் பின்ஜார் தோட்டம் ஆகியவை இவர் உருவாக்கியவை. இவரின் தோற்றம் பேரரசருக்கு உரிய கம்பீரம் இருக்கும். சிறந்த மதப்பற்றுள்ளவர். பொது வாழ்க்கையில் ஆடம்பரமில்லாத மிக மிக சாதாரணமானவர். கடிதங்கள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். ஏழைகளின் பாதுகாவலானாக இருந்தார். இவரின் குணாதிசயங்களுக்காகவே ஒரு பெரும் கட்டுரை எழுதலாம். புகழ் பெற்ற நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, மிகவும் தூய்மையான ஒரு இஸ்லாமிய மன்னர் என்று உலகம் போற்றியது. 
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியைத் தோற்றுவித்தாலும் மாற்று மதத்தவருக்கு பெரும் மரியாதை செய்தார். இஸ்லாமியர்களாய் இருந்தாலும், மனம் போல் தன் முன்னோர்கள் ஆண்டதால் அப்போதைய இந்துக்கள் பல மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டினார்கள். அதற்கு அப்போதைய மொகலாய ஆட்சியின் இந்து அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்கள். அப்படிப்பட்ட கோவில்களைத் தான் இடிக்கச் சொன்னார். ஆனால், பாவிகள் இன்றுவரை உலகின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவரான ஔரங்கஸேப்பை அரசியல் ஆதாயத்திற்காக இந்துக்களுக்கு எதிரானவர் என்று சொல்லி வருகிறார்கள். இழிவான சில ஹிந்துக்களைத் தவிர பெர்னியர், நிக்கோலாவ் மனுச்சி, கீன், ஓர்மி போன்ற பல ஆசிரியர்கள் ஔரங்கஸேபை புகழ்ந்து எழுதியுள்ளனர்.