வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அப்பாஸிட்கள் வரலாறு 4

இன்னுமொரு அரபுக் காதல் கவிதைக்களஞ்சியம் ‘லைலா, மஜ்னூன்’ ஆகும். இறுதியில் சோகம் ததும்பும் இது ஈரானிய, பெர்ஷிய, அஜர்பை ஜான், துருக்கிய மொழிகளில் மேன்மைப் படுத்தப்பட்டது. இது ஏழாம் நூற்றாண்டில் உமய்யாத்களின் ஆட்சியின்போதே எழுதப்பட்டது. இதன் தழுவல் தான் மேற்கத்தியரின் ‘ரோமியோ ஜூலியட்’ ஆனது. ஒன்பதாம் நூற்றாண்டின் அரபுக் கவிஞர்கள் அல் முதன்னபி, அபு தம்மாம் மற்றும் அபு நுவாஸ் ஆகியோர் பாக்தாதில் கலீஃபாக்களின் அரண்மனைக்கு சென்று வருபவர்களாக இருந்தார்கள். அப்பாஸிட் காலத்தில் தத்துவம் இஸ்லாத்துடன் இணைந்து கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. சிந்தனையாளர்களான அல் கிண்டி, அல ஃபராபி, அல் ஜாஹிஸ், இப்ன் அல் ஹைதம் மற்றும் அவிசின்னா ஆகியவர்களின் தத்துவங்கள் புகழ்வாய்ந்தவை. எட்டாம் நூற்றாண்டுகளின் இறுதியில் சீனாவின் காகித உற்பத்தி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு அறிமுகமானது. அதை பெரிதும் வரவேற்று காகித ஆலையை உருவாக்கி இஸ்லாமிய ஆட்சிதான் பத்தாம் நூற்றாண்டுகளில் அதை ஸ்பெயின் வழியாக ஐரோப்பா கொண்டுசென்று இன்று உலகம் முழுவதும் இன்றியமையாத நிலைக்கு இட்டுச் சென்றது. அதேபோன்று வெடி மருந்து தயாரிப்பு நுட்பமும் சீனாவின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு வந்து பொட்டாசியம் நைட்ரேட்டுடன் இணைத்து வெடிமருந்து துகள்களை தயாரித்து உலகம் முழுவதும் பரவலாக்கினார்கள். 
அப்போது புதிய முறையாக இயந்திரத்தறியில் நூல் உற்பத்தி செய்யப்பட்டும், ஐரோப்பியர்களுடன் இணைந்து அல் அண்டலூஸ் வழியாக பாதாம், சிட்ரஸ் கனிவகைகளை வரவழைத்து சர்க்கரை தயாரிக்கப்பட்டதும் இஸ்லாமிய ஆட்சியில் தான். கடற்பயணத்திற்கென வழிகாட்டும் வரை படம் தயாரித்தது. முதன்முதலில் வியாபாரக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. பதினாறாம் நூற் றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வரும் வரை இந்தியப் பெருங்கடலில் இஸ்லாமியர்களின் கப்பல்களே கோலோச்சின. இதற்காக மெடிட்டரேனியன் கடலில் இணைக்கும் வகையில் கடல்வழிகளை அமைத்து வெனிஸ், ஜினோவா மற்றும் கேடலோனியா போன்ற ஐரோப்பிய நகரங்களுடன் வாணிபம் செய்தார்கள். இந்த கடல் வாணிபத்திற்கு ஹோர்முஸ் துறைமுகம் தளமாக இருந்தது. கடல்வழியில் சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே மத்திய ஆசியாவைக் கடக்க பயன்பட்ட ‘சில்க் ரோட்’ என்னும் கடல்வழி முஸ்லீம் பேரரசில் தான் இருந்தது. 
இன்றைய உலகத்தின் தொழிற்சாலைப் பயன் பாட்டுக்கான பலவற்றை அன்றே இஸ்லாமிய பொறியாளர்கள் உருவாக்கி இருந்தார்கள். விண்ட் பவுடர், டைடல் பவுடர், ஹைட்ரோ பவுடர் போன்றவற்றை கண்டுபிடித்தார்கள். முக்கியமாக பெட்ரோலிலிருந்து மண்னெண்ணை வடிகட்டும் நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். ஏழாம் நூற்றாண்டிலேயே நாட்டின் தொழிற்கூடங்களில் வாட்டர் மில்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஹரிஸாண்டல் வீல், வர்டி கல் வீல் போன்றவற்றையும் பயன்படுத்தி முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். சிலுவைப்போரின் போதே அல் அண்டலூஸ், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பல ஆலைகளை நிர்வகித்திருந்தார்கள். அவைகளில் விவசாயத்திற்கும், தொழிற் கூடங்களுக்கும் தேவையானவற்றைத் தயாரித்தார்கள். மேலும் பழங்காலத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட வேலைகளுக்கு இஸ்லாமிய பொறியாளர்கள் பல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்று கண்டுபிடித்து அணைகளுக்கு பயன்படுத்தி இருந்தார்கள். பல தொழிற் சாலைக்கு பயன்படும் கண்டுபிடிப்புகளை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியதும் இஸ்லாமியர்கள் தான். துணி, காப்பி, சர்க்கரை, கயிறு தயாரித்தல், தரைவிரிப்பு, சில்க் மற்றும் காகித ஆலைகளை முதல் முதலில் பயன்படுத்தினார்கள். வேதியி யல் மற்றும் தொழிற்சாலைக்கான ஆயுதங்கள் செய்யும் நுட்பத்தை பனிரெண் டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப் படுத்தினார்கள். 
அப்பாஸிட்கள் தங்கள் பேரரசில் வசித்த முஸ்லீம் அல்லாதவர்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். தினசரி வாழ்க்கையில் அனைவரும் அரபி மொழி பேசும் அளவுக்கு சுமூக உறவு இருந்தது. இது ஒருவருக்கொருவர் அறிவாற்றலைப் பறிமாறிக்கொள்ள பயன்பட்டது. பெரும்பான்மையான அறிவுத் திறமையும், தொழில்நுட்பமும் சிலுவைப்போரின் போது ஐரோப்பாவில் கொள் ளையடித்துச் செல்லப்பட்டது. அப்பாஸிட்களின் ஆட்சி 1258 ல் மங்கோலியர்களின் பாக்தாத் படையெடுப்பால் முடிவுக்கு வந்தது.    
   

அப்பாஸிட்கள் வரலாறு 3

756 ல் அப்பாஸிட் கலீஃபா அல் மன்சூரும் 4000 வீர்ர்களுடன் டாங்க் எனும் பேரரசை சேர்ந்தவர்களின் ‘அன் ஷி’ புரட்சிப்படையை எதிர்கொண்டார். கருப்புக்கயிறு கட்டிய டாஸிகள் என்றும் அறியப்பட்ட இவர்களை பெர்ஷியர்கள் உமய்யாத்களை ஆட்சியில் இருந்து அகற்ற அழைத்து வந்தனர். டாஸிகள் பாக்தாத் நகரத்தை நிர்மாணிப்பதில் பெரும் பங்காற்றினார்கள். உலகின் முதல் காகித தொழிற்சாலையை பாக்தாதில் நிர்மாணித்து அப்பாஸிட்களின் புத்திசாலித்தனமான புதிய எழுச்சிக்கு காரணமானார்கள். அடுத்த பத்தாவது ஆண்டில் அப்பாஸிட்கள் மற்றொரு காகித ஆலையை கார்டோபா நகரில் தொடங்கினார்கள். 
புதிய முஸ்லீம்களாக மதம்மாறிய பெர்ஷியர்களின் முழுஆதரவும் அப்பாஸிட் களுக்கு இருந்தது. பெர்ஷியாவை சற்று ஒட்டி பாக்தாத் நகரம் இருந்ததால் பெர்ஷிய சரித்திரமும், கலாச்சாரமும் இணைந்து காணப்பட் டது. புதியதாக நியமிக்கப்பட்ட மந்திரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு மத்திய அரசின் முன்னேற்றத் திற்கு உதவினார்கள். கலீஃபா அல் மன்சூர் அவர்கள் அரண்மனைக்கு முஸ்லீம் அல்லாதவர்களையும் வரவேற்றார். அப்பாஸிட்களுக்கு குறிப்பாக பெர்ஷிய, கோரசானிய அரபுகளின் ஒத்துழைப்பு பெரிதும் தேவைப்பட்டது. ஏனென்றால் அவர்கள் உமய்யாத்களை எதிர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அப்பாஸிட்கள் திருக்குரானையும், ஹதீஸ்களையும், மதபோதகர்களையும் பெரிதும் மதித்தார்கள். அப்பாஸிட்கள் ஆட்சியில் இஸ்லாமிய உலகம் கிழக்கு நோக்கி நகர்ந்தது. அது சிரியாவிலிருந்து மெஸோபொடாமியா வரை நீண்டது. ஈராக்கில் டிக்ரிஸ் நதிபாயும் பாக்தாதை அப்பாஸிட்கள் தலைநகரமாக்கிக் கொண்டார்கள். பாக்தாத் சஸானியர்களின் முன்ணனி நகரமான செஸிபோனிலிருந்து இருபது மைல்கள் மேற்புறத்தில் இருந்தது. மேலும், பாக்தாதின் வடக்கே சமர்ரா என்னும் புதிய நகரத்தை உருவாக்கினார்கள். அப்பாஸிட்கள் நீண்ட கால பெர்ஷிய நிர்வாகத் திறனையே பாக்தாதில் கையாண்டார்கள். பெர்ஷிய முஸ்லீம்களும் அரபு முஸ்லீம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர். 
இஸ்லாம் வெகு வேகமாக உலகில் சர்வதேச மதமாகப் பரவிக் கொண்டிருந்தது. மெஸோபொடாமியா மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் புராதன நகர அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டிருந்தது. முதல் முந்நூறு ஆண்டுகால ஆட்சி அப்பாஸிட்களின் ஆட்சி இஸ்லாமிய உலகின் பொற்காலமாக விளங்கியது. பாக்தாதும், சமர்ராவும் வாணிபத்திலும், கலையிலும் சிறந்து விளங்கின. புதிய தொழில்நுட்பங்களும், நவீன செயல் முறைகளும் இவர்களின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன. முஸ்லீம்களும், முஸ்லீமல்லாதவர்களும் உலகின் சிறந்த புத்தகங்களை அரபு மொழி யில் மொழி பெயர்த்தனர். பல அரிய கலைப் படைப்புகள் அரபு, பெர்ஷிய, துருக்கி  ஹீப்ரு மற்றும் லத்தீன் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன. இதனால் ரோம, இந்தியா, சீனா, எகிப்து, வடஆப்பிரிக்கா மற்றும் கிரேக்கர்களின் பல அரிய புராதனப் படைப்புகள் அரபுக்களிடம் சென்றடைந்தது. கலீஃபா ஹாருன் அல் ரஷீத் அவர்களின் ஆட்சியிலும், பின் வந்த கலீஃபாக்களின் ஆட்சியிலும் திறமையான சாதனைகள் நிகழ்ந்தன. அப்பாஸிய ஆட்சியின் கீழிருந்த விஞ்ஞானிகள் அரிய பல இஸ்லாமிய அறிவியல் படைப்புகளை மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளுக்கு மாற்றினார்கள். இன்றியமையாத உலகப்புகழ் பெற்ற ‘அல் ஜீப்ரா’ என்னும் கணித வியல் முஹம்மது இப்ன் மூஸா அல் க்வாரிஸ்மி என்பவரால் படைக்கப்பட்டது தான். மேலும் இவர் அரபிய, இந்திய எண் வடிவத்தையும் உண்டாக்கினார். இப்ன் ஹைதம் என்பவர் விஞ்ஞானத்தின் ஒளியியலுக்குரிய அரிய கண்டுபிடிப்பான உள்வாங்கி இயங்கும் ஆற்றலை 1021 ல் கண்டுபிடித்தார். மருத்துவதுறையிலும் அப்பாஸிய காலம் சிறந்து விளங்கியது. பெர்ஷிய விஞ்ஞானி இப்ன் சினா (AVICENNA) வின் உடற்கூறு மற்றும் நோய் தோன்றும் விதம் குறித்த கண்டுபிடிப்பு இன்றளவும் தொடரப்படுகிறது. இப்ன் சினா எழுதிய ‘தி கேனன் ஆஃப் மெடிசின்’ மற்றும் ‘தி புக் ஆஃப் ஹீலிங்க்’ என்ற மருத்துவ சம்பந்தமான தகவல்களஞ்சியத்தைத் தொடாமல் யாரும் மருத்துவ ஆராய்ச்சியே செய்யமுடியாது. இவரின் பல அரிய படைப்புகள் தான் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்படி மருத்துவ ஆராய்சிக்கு பயன்பட்டது. வியப்பான தகவல் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே பாக்தாத் நகரத் தில் 800 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்தார்கள். தட்டம்மை மற்றும் சின்னம்மை நோயின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 
வானவியலில் பூமியின் மிகத்துல்லியமான மைய அளவைக் குறித்ததில் அல் பத்தானி என்ற இஸ்லாமிய விஞ்ஞானி முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்த கண்டுபிடிப்பை மேலும் விரிவாக்க ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். அதே போல் திரவஆராய்ச்சியில் ஜாபிர் இப்ன் ஹய்யான் (GEBER) முன்னோடியாக இருந்து பல திரவகலப்புகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் திரவ வடிகட்டுதல் ஆராய்ச்சியில் பலவற்றைக் கண்டுபிடித்து ஐரோப்பாவில் பரப்பினார். கற்பனைக் கதைகளில் உலகப்புகழ் பெற்ற “ஆயிரத்தோரு அரபு இரவுகள்’ (THE BOOK OF ONE THOUSAND AND ONE NIGHTS) படைக்கப்பட்டதும் இந்த கால கட்டத்தில் தான். இந்திய மூலக்கருவில், பெர்ஷிய நடையையும் கலந்து, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா கதைகளை இணைத்து புதிய வடிவில் அனைவரையும் படிக்க படிக்க கவர்ந்திழுத்தது இதன் சிறப்பு. இது பத்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினான்காம் நூற்றாண்டில் முடிவுற்றது. இந்த கதைகளில் எண்களும், கதைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டில் அண்டோய்னி கல்லண்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மேற்கத்திய நாடுகளில் பிரபல்யப்படுத்தினர். அலாவுத்தீன், சிந்துபாத் மற்றும் அலிபாபா கதாபாத்திரங்கள் மேற்கத்திய கலைகளில் கையாளப்பட்டன.   

அப்பாஸிட்கள் வரலாறு 2

புவய்ஹித் கலீஃபா அல் கா இம்மால் வெளியுதவியின்றி அவரை அடக்க முடியாமல் போனது. செல்ஜுக் சுல்தான் டோக்ரில் பெக் பாக்தாதில் சுன்னி பிரிவு முஸ்லீம் ஆட்சியையே தக்க வைத்து ஈராக்கை தன் வசப்படுத்திக் கொண்டார். செல் ஜுக் சுல்தான்கள் அல்ப் அர்சலன், மலீக் ஷா மற்றும் மந்திர் நிஸாம் அல் முல்க் ஆகியோரின் இருப்பிடங்கள் பெர்ஷியாவில் அமைந்திருந்தாலும், பாக்தாதின் அதிகாரம் பனிரெண்டாம் நூற்றாண்டில் அவர்கள் வீழும்வரை அப்பாஸிட்களின் வசமே இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் கலீஃபா அல் மா மூன்  இப்ன் அப்துல்லாஹ் என்பவர் ஏழாவது ஆட்சியாளராக இருந்தார். கவர்னர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கிரேக்க அறிவியல், தத்துவம் சார்ந்த புத்தகங்களை மொழி பெயர்த்து “பெய்த் அல் ஹிக்மாஹ்” என்ற அறிவுக்கூடத்தை ஏற்படுத்தினார். மருத்துவத்தில் அதிக ஆர்வம் காட்டினார். மத விஷயங்களில் தீர்ப்பு சொல்ல காதிகளை உண்டாக்கினார். மம்லூக்குகளைக் கொண்ட இராணுவப் படையை அமைத்திருந்தார். அதை பிறகு வந்த அவர் சகோதரர் அல் முதசீம் மேலும் விரிவுபடுத்தினார். மம்லுக் இராணுவம் அப்பாஸிட்களுக்கு உதவியாக வும் இருந்தது, தொல்லையாகவும் இருந்தது. ஆரம்பத்தில் மம்லுக் இராணுவம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து நிலையான ஆட்சி அமைக்க உதவின. அல் முதசிம் தலைநகரை பாக்தாதில் இருந்து சமர்ராவுக்கு மாற்றியதிலிருந்து மம்லுக் இராணுவத்திற்கு கருத்து வேறுபாடு வந்து தனி மாகாணத்திற்கு உரிமை கோரினார்கள். எகிப்தில் மம்லுக்கள் ஆட்சிக்குவந்தனர். பாக்தாதில் மங்கோலியர்களின் வரவால் எகிப்தின் மம்லுக் ஆட்சி அப்பாஸிட்கள் வசம் வந்தது. கெய்ரோவின் முதல் அப்பாஸிட் கலீஃபாவாக அல் முஸ்தன்சிர் பதவியேற்றார். இவர் 6 வயதில் கலீஃபாவானதால் இவரது தாயார் அரசு விவகாரங்களைக் கவனித்துக் கொண்டார். இவரது காலத்தில் அல் ஜம் இ அல் ஜுயுஷி, பாப அல் ஃபுதூஹ், பாப் அல் நாஸ்ர், பாப் ஸுவெய்லா போன்ற பல கட்டிடங்களைக் கட்டினார். 
கெய்ரோவின் கடைசி கலீஃபா மூன்றாம் அல் முதவக்கில், ஓட்டோமான் சுல்தான் முதலாம் செலிம் என்பவரால் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு அவர் மதிப்பாக இருந்த கான்ஸ்டாண்டிநோபிளுக்கு கொண்டு செல்லப்பட்டார். சில காலம் கழித்து கெய்ரோ திரும்பி 1543 ல் மரணமடைந்தார். 1258 ல் மங்கோலியர்களின் தாக்குதலுக்குப் பிறகு, உயிர் தப்பிய சில அப்பாஸிட் குடும்பநபர்கள் இரண்டாம் இஸ்மாயில் என்பவர் தலைமையில் தென்பெர்ஷியாவில் கல்வித் தலைமையக மான கோஞ்ச் நகரத்தில் தஞ்சமடைந்தனர். இரண்டாம் இஸ்மாயில் ஹம்சா என் பவரின் மகனாவார். இரண்டாம் இஸ்மாயிலின் மகன் அப்பாஸுக்கு ஷெய்க் அப்துல்சலாம் கோஞ்ச் என்ற மகன் பாக்தாத் நகரம் வீழ்ந்ததற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து பிறந்தார். இவர் பின்னாளில் சிறந்த சூஃபி துறவியாகி மக்களிடம் நன்மதி ப்பைப் பெற்றிருந்தார். இன்றும் கோஞ்ச் நகரில் இவரின் அடக்கஸ்தலத்திற்கு தூர, அருகாமை மக்கள் பார்வையிட வருகிறார்கள். இவரின் சந்ததியினர் பெரும்பான்மையோர் மத போதகர்களாக மக்களிடம் செல்வாக்கை பெற்றவர்களாவார்கள். ஷெய்க் ஜாபரின் மகன் ஷெய்க் முஹம்மது பஸ்தக் நகரில் இருந்தார். இவ ரின் பேரர் இன்னொரு ஷெய்க் முஹம்மது கோஞ்ச் நகரில் இருந்து பின்னாளில் சூஃபியிசம் பிரபல்யமடைய பஸ்தக் நகரம் சென்றார். இவரின் பேரர் ஷெய்க் ஹசன் (முல்லா ஹசன்) எல்லா அப்பாஸிட் பஸ்தக் நகரவாசிகளுக்கும், சுற்றி யுள்ள பகுதிகளுக்கும் பொது மூதாதையராக இருந்தார். 
ஷெய்க் ஹசனின் பேரர்கள் ஷெய்க் முஹம்மது சயீத், ஷெய்க் முஹம்மது கான் இருவரும் மாகாணத்தின் முதல் இரு கலீஃபாக்களாக ஆனார்கள். ஷெய்க் முஹம் மது சயீத் ஆயுதபடையின் ஒத்துழைப்பை சேகரித்தார். பின் லார் என்ற நகரைக் கைப்பற்றி இறக்கும் வரை பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தார். சகோதரர் ஷெய்க் முஹம்மது கான், தான் ஆண்டுகொண்டிருந்த பஸ்தக் மற்றும் ஜஹாங்கிரியேஹ் பகுதிகளை தன் மூத்த மகன் ஷெய்க் முஹம்மது சாதிக் மற் றும் உறவினர் அகா ஹசன் கான் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு திதிஹ்பான் கோட்டைக்குச் சென்றுவிட்டார். இதனால் “திதிஹ்பான்” என்றே பெயர்பெற்றார். கோட்டையிலிருந்தே இருபது வருடங்களுக்கு மேலாக இரு நகரங்களையும் ஆட்சி செய்தார். மரணத்தருவாயில் மட்டும் திரும்பி பஸ்தக் வந்தார். இவர் மேலும் தனது ஆட்சி எல்லையை லார் மற்றும் பந்தர்அப்பாஸ் வரை அமைத்துக் கொண்டார். 
முதல் அப்பாஸிய ஷெய்க் முஹம்மது கான் தான் “கான்” என்ற பட்டப்பெயரை முதலில் சூட்டிக் கொண்டார். ‘கான்’ என்ற சொல்லுக்கு பெர்ஷிய மற்றும் அரேபிய மொழியில், முறையே ஆட்சியாளர் மற்றும் மன்னர் என்று பொருள். இதன் பிறகு பஸ்தக், ஜஹாங்கிரியாவை ஆண்ட அனைத்து அப்பாஸிய ஆட்சியாளர் களும் “கான்” என்ற பெயரையே தங்கள் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தினர். கடைசி அப்பாஸிய ஆட்சியாளராக பஸ்தக் மற்றும் ஜஹாங்கிரியெஹ்வில் முஹம்மது ரேஸா கான் சத்வத் அல் மமலிக் பனியப்பாஸி என்பவரின் மகன் முஹம்மது அஸாம் கான் பனியப்பாஸி ஆட்சி செய்தார். 1962 ல் இவர் எழுதிய மூதாதைய அப்பாஸிட்களின் ஆட்சி பற்றிய “தாரிக் இ ஜஹான் கிர்யெஹ் வ பனியப்பாஸி யன் இ பஸ்தக்” என்ற புத்தகத்தின் மூலம் அக்காலத்திய பல நிகழ்வுகள் தெரிகின்றன. முஹம்மது அஸாம் கான் பனியப்பாஸி 1967 ல் மரண மடைந்தார்.              
அப்பாஸிட் கலீஃபா அல் முஸ்தர்ஷித் தான் முதன்முதலில் இராணுவத்தை அமைத்து செல்ஜுக்குகளுடன் போரிட்டார். 1135 ல் படுகொலை செய்யப்பட்டு இறந்தார். கலீஃபா அல் முக்தஃபி அப்பாஸிட் கள் இழந்த அனைத்துப் பகுதிகளை யும் மந்திரி இப்ன் ஹுபைராவின் உதவியின் மூலம் கைப்பற்றினார். 1157 ல் செல்ஜுக்குகள் தொடுத்த பாக்தாத் போரில் எதிர்த்து வென்று ஈராக்கை தன் வசப்படுத்தினார். வீரமான மன்னராக அறியப்பட்ட இவர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். 1225 ல் கலீஃபா அல் முஸ்ததி என்பவரின் மகன் அல் நாசிர் கலீஃபா வானார். செல்ஜுக்குடன் போர் புரிந்து மூன்றாம் டோக்ரிலின் தலையை அரண் மனை வாசலில் தொங்க வைத்தார். கிழக்குப் பகுதியில் பலம் வாய்ந்தவராகி ஈராக்கின் மொத்த பகுதியையும் அப்பாஸிட் பேரரசில் இணைத்தார். எல்லையை மொஸோபொடாமியா மற்றும் பெர்ஷியா வரை விரிவுபடுத்தினார். கடைசி காலத்தில் உறுப்புகள் செயலிழந்து மரணமடைந்தார். 1206 ல் மத்திய ஆசியாவில் மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் புதிய பேரரசை உருவாக்கினார். பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் பெரும்பான்மையான ஈரோஷியன் பகுதி களையும், கிழக்கில் சீனா, மேற்கில் பழைய இஸ்லாமிய பிராந்தியங் களையும் வென்றது.  1258 ல் மங்கோலிய ஹுலகுகானின் பாக்தாத் அழிப்பு ஏறக்குறைய அப்பாஸிட்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு சென்றது. மங்கோலிய ஹுலகு கான் பாக்தாதைக் கைப்பற்றி பல உயிர்களைக் கொன்றான். பாக்தாதின் கடைசி கலீஃபா அல் முஸ்தஃசிம் ஆவார். மங்கோலியப் படைகள் பாக்தாதில் நுழைந்து கொடுஞ் செயல்களைப் புரிந்தன. ஹுலகுகான் மீது எந்த போர் நடவடிக்கையும் எடுக்காமல், குறைவாக மதிப்பிட்டு சாதாரணமாக சமாதானம் பேசிக் கொண்டி ருந்தார். ஹுலகுகான் கலீஃபா அல் முஸ்தஃசிமை தரை விரிப்பில் சுருட்டி, குதிரை களை அதன்மேலேற்றி கொடூரமான முறையில் கொலை செய்தான். இது போன்ற ஒரு கொடூரம் இமாம் ஹுசைன்(ரலி) அவர்கள் மரணத்தின்போது கூட நடக்கவில்லை என்று பெர்ஷிய ஷியாக்கள் கருத்து தெரிவித்தனர். அவரின் மகன் களையும் இரக்கமில்லாமல் கொன்றான். கலீஃபா அல் முஸ்தசிம் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரின் நேரடி வாரிசு அதனால் முஸ்லீம்கள் உறைந்து போயினர். கலீஃபாவின் உறவினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். கலீஃபாவின் மகள் ஹுலகுகானின் அரண்மனையில் அடிமையாக்கப்பட்டார் என்றும், சிறு வயதான மகன் மங்கோலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு திருமணமாகி, குழந்தைகளும் உள்ளதாக மங்கோலிய சரித்திரம் சொல்கிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமிய ஆட்சியே எங்கும் இல்லாமல் போனது.   

அப்பாஸிட்கள் வரலாறு 1

அப்பாஸிட்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
மக்காவில் மிகவும் புகழ்பெற்ற குரைஷி வம்சத்தின் அப்த் மனாஃப் இப்ன் குசாய் என்பவரின் வாரிசு வரிசையில் அப்த் அல் முத்தலிப் (நபி (ஸல்) களாரின் பாட்ட னார்.) என்பவரின் மற்றொரு மகன் அதாவது நபி(ஸல்) கள் நாயகத்தின் சிறிய தகப்பனார் அல் அப்பாஸ் என்பவரின் வம்சா வழியினர் தான் இந்த அப்பாஸிட்கள் பேரரசின் ஆட்சியாளர்கள். அல் அப்பாஸ் அவர்களுக்கு அப்துல்லாஹ்வின் மகன், அலியின் மகன், முஹம்மதின் மகன் ஆகியோரின் வழியில் முஹம்மது என்பவரின் இரு பிள்ளைகள் அபு அல் அப்பாஸ் (ரலி) மற்றும் அல் மன்சூர் ஆவார்கள். இதில் அல் மன்சூர் என்பவரின் வழியில் வந்த பெரும்பான்மையோர் தான் பிற்காலத்தில் அப்பாஸிட் பேரரசின் வாரிசு மன்னர்களானார்கள்.
747 ல் பெர்ஷியாவில் உமய்யாத் கலீஃபாவை எதிர்த்து யார் இஸ்லாமிய சாம் ராஜ்ஜியத்தின் தலைமைப் பதவியை வகிப்பது என்று சிறியதாக  துவங்கிய பிரச்சினை கலவரத்தில் வந்து நின்றது. அது ஏறக்குறைய குடும்பசண்டை போல் இருந்தது. அந்த கலவரத்திற்குப் பின்  நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந் தவர்தான் கலீஃபாவாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் இப்ன் அப்த் அல் முத்தலிபின் பிள்ளைகளில் அப்துல்லாஹ் என்பவரின் மகன் அப்பாஸ் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அல் அப்பாஸ் இப்ன் அப்த் அல் முத்தலிஃப் என்ற இவர்கள் நபி(ஸல்) அவர்களு க்கு சில வயது மூத்தவர்கள். வணிகராக இருந்தவர்கள். 624 ல் பத்ர் யுத்தத்திற்குப் பிறகு, இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்களின் மனைவி உம் அல் ஃபத்ல் (லுபாபா பின்த் அல் ஹாரித்) இஸ்லாத்தைத் தழுவிய இரண்டாவது பெண்மணியாவார். இவர்களும் நபிகளாருக்கு ஆதரவாய் இருந்தார்கள். மக்காவில் யாத்ரிகர்களுக்கு ஜம்ஜம் நீர் வழங்கும் பொறுப்பு இவர்களுடையதாய் இருந்தது. அப்பாஸ் (ரலி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் மதீனா ஆட்சி அல்லாமல் சிந்துவில் கல்ஹோரா, பெர்பெரில் பனூ அப்பாஸ், ஏமனில் பவாஸிர், சூடானில் ஷைகியா மற்றும் ஜா அலின் மேலும் பாகிஸ்தானில் முர்ரீ ஆகியோர் வெளிப் பிரதேசங்களிலும் ஆண்டார்கள்.
இவரைத் தொடர்ந்து இவர் வழியில் ஆண்ட கலீஃபாக்களின் ஆட்சி “அப்பாஸிட்கள்” சாம்ராஜ்ஜியமானது. அப்பாஸிட்கள் பெருவாரியான அரபுக்கள், தொல்லைகளுக்கு பெயர் பெற்ற மார்வ்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றிருந்தார்கள். மேலும் இரத்த சம்பந்தமோ, அரபு இனத்தையோ சாராத, உமய்யாத்களால் கீழ்த்தர மக்களாக மதிக்கப்பட்ட ஏமனை சேர்ந்த ‘மவாலி’ களின் ஆதரவையும் பெற்றிருந்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களின் பேரர் முஹம்மது இப்ன் அலி என்பவர் நபி (ஸல்) களாரின் ஹாஷிமிட் குடும்பவழி ஆட்சியை பெர்ஷியாவில் கொண்டுவர பெரிதும் முயற்சித்தார்.
இரண்டாம் மர்வான் ஆட்சியில் அப்பாஸ்(ரலி) அவர்களின் நான்காம் தலைமுறை வழியைச் சேர்ந்த இமாம் இப்ராஹிம் என்பவர் கோரசான் பகுதியில் ஈரானிய ஷியாக்களின் ஆதரவால் புரட்சியில் இறங்கினார். ஆனால், 747 ல் சிறைப் பிடிக் கப்பட்டு இறந்து போனார். சிலர் இவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார் என்றார்கள். இவரைத் தொடர்ந்து இவர் சகோதரர் அப்துல்லாஹ் (சரித்திரம் அறிந்த பெயர் ‘அபு அல் அப்பாஸ் அஸ் ஸஃப்ஃபா’) புரட்சியைத் தொடர்ந்தார். 750 ல் உமய்யாத் களை ஸாப் போரில் வென்று தன்னை  கலீஃபாவாக அறிவித்து கொண்டார். இந்த வெற்றிக்குப் பிறகு, அபு அல் அப்பாஸ் அஸ் ஸஃப்ஃபா தனது படைகளை மத்திய ஆசியாவில் டலாஸ் போருக்கு அனுப்பினார். ஷியாக்களும் அப்பாஸிட்களை நபி (ஸல்)கள் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாததால் ஆதரித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் அவர் களின் ஷியா பிரிவு கொள்கைகளை அப்பாஸிட்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரும் பான்மையானவர்கள் பின்பற்றும் ‘சுன்னி’ கொள்கைகளையே கடைபிடித்தனர். குறிகிய காலத்தில் பெர்பெர் கரிஜியாக்கள் வட ஆப்பிரிக்காவில் சுதந்திரமாக ஒரு பகுதியை அமைத்துக்கொண்டார்கள். இந்த கரிஜியாக்கள் ஒரு முறை மக்காவில் முஆவியா இப்ன் அபுசுஃப்யான், அம்ர் இப்ன் அல் ஆஸ் மற்றும் அலி இப்ன் அபிதாலிப் ஆகியோரை அதிகாலைத் தொழுகையில் கொல்லத் துணிந்தனர். இந்த கரிஜியாக்கள் ஓமனில் பெரும்பான்மையோரும், சிலர் மஃஸாப் ஆக அல்ஜீரியா, ஜெர்பாவாக துனிஷியாவிலும், நஃபுசாவாக லிபியாவிலும், ஜான்சிபாரிலும் இருந்தார்கள். 18 ம் நூற்றாண்டுகளில் வஹ்ஹாபி என்னும் அமைப்பும் இவர்கள் தான் என்று ஹனஃபி போதகர் இப்ன் ஆபிதீன் கூறுகிறார்கள்.
934 ல் அல் ரதி பில்லாஹ் என்பவர் அப்பாஸிட்களின் கலீஃபாவாக பாக்தாதில் இருந்தார். அந்த சமயத்தில் தான் ஹன்பலிக்கள் பிரபல்யமாக இருந்தார்கள். அவர்கள் சரியில்லாத எல்லாவற்றையும் தூக்கி எறிந்தார்கள். மதுக்களை கீழே கொட்டினார்கள், இசைக்கருவிகளை உடைத்து எறிந்தார்கள்.  அல் ரதி அவர்களின் ஆட்சியின் போது துருக்கி இராணுவஜெனரல் ஒரு பகுதியை தனதாக்கிக்கொண்டு ஆண்டு கப்பம் செலுத்த முடியாதென்று குழப்பம் விளைவித்தார். பாக்தாதுக்கு அருகிலுள்ள சில பிராந்தியங்களும் சுயாட்சியை நாட எண்ணினர். அப்பாஸிட்கள் எட்டாம் நூற்றாண்டின் பாதிவரை போட்டியாகஇருந்த சில கலீஃபாக்களையும், மந்திரிகளையும் அடக்கி நிர்வாகத்தை சீர்செய்வதில் கவனம் செலுத்தினர். சிரியாவிலும், அனடோலியாவிலும் பைஸாந்தியர்களை எதிர்த்து நடத்திய போரில் பிராந்திய கவர்னர்கள் மத்திய அரசுக்கு கட்டுப்படாமல் தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டார்கள். மேலும் ஆதர்வாளர்களாய் இருந்த பெர்ஷியர்கள் வடக்கு  பகுதியில் கோரசானில் தனியாக ஒரு மாகாணத்தைக் கைப்பற்றி நிர்வ கித்தார்கள். 820 ல் சமானித்கள் ட்ரான்ஸோக்சியானா மற்றும் கிரேட்டர் கோர சனையும், ஷியாக்கள் வட சிரியாவையும் தங்கள் சுயமாநிலமாக அறிவித்துக் கொண்டார்கள். இதனால் அப்பாஸிட்களுக்கு மத்தியஅரசின் அதிகாரம் மாகாணங்களில் கை நழுவிப் போனது. பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஈராக் முழுவதுமே சிரிய அமிர் என்னும் ஆட்சியாளர்கள் வசம் பல பகுதிகளாகப் பிரிந்தது. அப்போதைய அப்பாஸிட் கலீஃபா அல் ரதி அவர்களை ‘அமிர் அல் உமரா’ (PRINCE OF PRINCES) என்ற தகுதியின் அடிப்படையில் ஒப்புக்கொள்ள வேண்டி நிர்பந்திக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக குறிகிய காலத்தில் பாக் தாதில் டைலம் பகுதியில் இருந்து பெர்ஷிய “புவய்ஹித்’ கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்கள். 
இந்த புவய்ஹித்கள் பெர்ஷிய ஷியா பிரிவினர்கள் ஆவார்கள். லஹிஜான் என்ற இடத்தில் ஸோரோஸ்ட்ரிய மதத்தைச் சேர்ந்த மீனவராக இருந்த ஒருவரின் மகன் புயா என்பவர் ஆவார். புயா நாளடைவில் இஸ்லாமிய ராக மாறி ஷியா கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். இவர் பெயரிலேயே வம்சாவழியினர் புவாயிட்கள் என்றழைக்கப்பட்டார்கள். இந்த புயாவின் மூன்று மகன்கள் பின்னாளில் பாக்தாதில் அப்பாஸிட்களின் பகுதிகளைப் பிடித்துக்கொண்டார்கள். இந்த புவாயிட்கள் அலி(ரலி) அவர்களின் நேரடி வாரிசுகள் அல்ல. தங்கள் ஆட்சியில் கிறிஸ்தவ அதிகாரிகளையே சுன்னி பிரிவுக்கு எதிராக வைத்திருந்தார்கள். இந்த புவாயித் வாரிசு மன்னர்கள் தங்கள் இடமான டைலம் பகுதியை முன்னிலைப்படுத்தி பெயர்களுக்குப் பின்னால் டௌலா என்று வருமாறு வைத்துக்கொண்டார்கள். 
அப்பாஸிட்களின் ஆட்சியில் தான் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் பல பகுதிகளாக சிதறுண்டு போனது. எட்டாம் நூற்றாண்டுகளின் இறுதியில் அவர்களே அதைப் புரிந்து கொண்டது போல்தான் இருந்தது. 793 ல் மொரோக்கோவில் ஃபெஸ் என்னும் பகுதியை ஷியாக்களும், 830 ல் அப்பாஸிய கவர்னர்கள் பலர் இணைந்து ‘அக்லாபித்’ என்னும் மாகாணத்தையும், 860 ல் எகிப்து கவர்னர்கள் இனைந்து அஹமது இப்ன் துலுன் என்பவர் தலைமையில் துலுனித் என்ற மாநிலத்தையும், ஹிராத் பகுதியில் ஸ்ஃப்ஃபாரித்களும், புகாரா பகுதியில் சமானித்களும் தனித் தனியாக அப்பாஸிட்களின் அதிகாரத்திலிருந்து பிரிந்து போனார்கள். அந்த சமயத்தில் மத்திய மெஸோபொடாமியா பகுதி மட்டும் அப்பாஸிட்களின் நேரடி ஆட்சியில் இருந்தது. பாலஸ்தீனும், ஹிஜாஸ் பகுதியும் துலுனித்கள் வசம் இருந்தன. பைஸாந்தியர்களும் அனடோலியாவில் அப்பாஸிட்களை கிழக்கு நோக்கி தள்ளினார்கள்.         920 ல் நிலைமைகள் முற்றிலுமாக மாறியது. ஷியா பிரிவினர் முதல் ஐந்து இமாம்களை மட்டுமே ஒப்புக்கொள்வோம் என்றும் அந்த வழியில் நபி(ஸல்)களாரின் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களின் பெயரில் இத்ரிஸ் மற்றும் அக்லாபித் பகுதிகளை “ஃபாத்திமிட்” பேரரசு என்று பெயரிட்டு, எகிப்தை நோக்கி முன்னேறி கெய்ரோ நகருக்கு அருகில் ஃபுஸ்தத் என்ற இடத்தை தலை நகராக ஆக்கிக்கொண்டார்கள். அங்கு ஷியா பிரிவைப் பற்றியும், அவர்களின் அரசியல் பற்றியும் பயிற்சியளித்தார்கள். 1000 வது வருடத்தில் ஷியாக்கள் அப் பாஸிட்களுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்திருந்தார்கள். இஸ்மாயிலி ஃபாத்திமிட்களாகிய அவர்கள் பாக்தாதிலுள்ள தங்கள் ஷியா பிரிவைச் சேர்ந்த கல்க் என்னும் பிரிவினரின் ஆதரவையும் திரட்டி அப்பாஸிட்களைக் குறிக்கும் இஸ்லாமிய உம்மாக்கள் என்னும் அதிகாரத்திற்கும் உரிமை கொண்டாடினார்கள். பாக்தாத் நகரம் புவய்ஹித் மற்றும் செல்ஜுக்குகளின் பகுதிக்கு வெகு அருகிலி ருந்தது. அப்பாஸிட்களின் கருப்புக்கொடியுடன் தங்கள் பச்சை நிறக்கொடியோடு சவால்விட்ட ஃபாத்திமிட்கள் பனிரெண்டாம் நூற்றாண்டில்தான் வீழ்ந்தார்கள். இதற்கிடையில் சிறு சிறு பிராந்தியங்களாக இருந்த ஆட்சியாளர்கள் தங்களுக் குள்ளேயே சண்டை செய்துகொள்ள ஆரம்பித்தார்கள்.    
அப்பாஸிட்களின் பாக்தாதிலிருந்த இஸ்லாமிய சம்பந்தமான மன்றம் புவய்ஹித்தின் தலைவர் ஹிலால் அல் சபியை மதிப்பு வாய்ந்தவராகக் கருதியது. பஹா அல் தௌலா என்பவரின் மறைவிற்குப் பின்பு புவய்ஹித்கள் மேலும் சில பகுதி களை வெல்லமுடியும் என்று கருதினார்கள். இந்த நிலையில் செல்ஜுக் என்ற ஓகுஸ் துருக்கிகளால் புவய்ஹித்களுக்கு பிரச்சினை உருவானது. 1058 ல் பஸசிரி என்ற துருக்கிய முன்னாள் அடிமையும், தற்போதைய அமீருமான அவர் பாக்தா தில் ஷியா ஃபாத்திமிட்களின் பெயரில் கிளர்ந்தெழுந்தார். ஈராக்கை விட்டு புவாயிட்களை விரட்டிய செல்ஜுக்குகளை எதிர்த்து நின்றார். மொஸோ பொடானிய அரபுகளின் துணையுடன் பாக்தாதை மீண்டும் பிடித்தார். பின்னாளில் ஸ்கிர்மிஷ் என்னும் சிறுபடையால் கொல்லப்பட்டார்.