திங்கள், 6 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 11

ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர்
கூ.செ.செய்யது முஹமது
                                                 அக்பரின் முழுப்பெயர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் மொகலாயப் பேரரசின் அதிமுக்கிய மன்னரானவர். தன் குடிமக்களின் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாக ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். சிறுவய தில் சிறிய தந்தை கம்ரானின் பாதுகாப்பில் இருந்த போது, ஹுமாயுன் கம்ரா னைச் சுட கம்ரான் குழந்தை அக்பரை துப்பாக்கிக்கு முன் நீட்டினார். அதிர்ஷ்ட வசமாக அன்று அக்பர் தப்பித்தார். பனிரெண்டு வயதான போதே ஒட்டகம், யானை, குதிரைகளை கையாளும் திறமையைப் பெற்றார். போர்க்கருவிகளை யும் சிறப்பாகப் பயன்படுத்த அறிந்துகொண்டார். தந்தை ஹுமாயுன் இறந்த போது பதிமூன்று வயதான அக்பர் 1556 ல் பிப்ரவரி மாதம் 14 ல் பதவியேற்றார். சிறு வயதாய் இருந்ததால், தந்தையின் நண்பரான பைரம் கான் அதிகாரத்தில் உதவி புரிந்தார். அக்பரின் இளைய சகோதரர் முஹம்மது ஹகீம் காபூலின் தலைமையை ஏற்றார்.
                                        அக்பர் பதவியேற்ற வேளையில் இந்தியாவில் கடுமையான ப்ளேக் நோய் பரவி எண்ணற்றவர்கள் மரணமடைந்தனர். பூகோ ள அமைப்பின்படி பிரதேசம் மிகவும் சிறியதாக இருந்தது. அரசியல் ரீதியாக வடமேற்கு இந்தியாவை சிக்கந்தர்சூரும், முஹம்மது ஆதிலும் பிரித்து ஆண்டு கொண்டிருந்தார்கள். ஆப்கானுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே டெல்லி மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது. காபூலை சுதந்திரமாக முஹம்மது ஹக்கீம் ஆண்டு கொண்டிருந்தார். பதக் ஷானின் சுலைமான் இவருக்கு மிரட்ட லாக இருந்தார். பெங்காலும் சுதந்திரமாக ஆப்கான் ஆட்சியாளரின் அதிகாரத் தில் இருந்தது. ராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள் பாபரிடம் கண்ட தோல்வியிலி ருந்து இன்னும் மீளாமல் கோட்டையில் முடங்கி இருந்தனர். மால்வாவும், குஜராத்தும் அதன் மத்தியஅரசுடன் இணைந்து முஹம்மது துக்ளக் ஆண்டு வந்தார். கோண்ட்வானா உள்ளூர் தலைவனால் ஆளப்பட்டும், ஒரிசா சுதந்திரப் பிரதேசமாகவும், காஷ்மீர், சிந்த் மற்றும் பலுசிஸ்தான் யாருடைய கட்டுப்பாட் டிலும் இல்லாமல் இருந்தது. அஹமதாபாத், பிஜப்பூர், கோல்கொண்டா, காந் தேஷ் மற்றும் பிரார் போன்றவற்றை தனித்தனி சுல்தான்கள் ஆண்டு வந்தார் கள். இந்து பேரரசு விஜயநகரம் பலம் வாய்ந்தும், செல்வச் செழிப்பாகவும் இருந்தது. போர்ச்சுகீசியர்கள் அரபிக்கடல், பெர்ஷிய கடல்பகுதிகளில் பலமாக இருந்து இந்தியாவின் மேற்குக் கடலோர துறைமுகங்களிலும், கோவா, டையூ போன்ற இடங்களிலும் வாணிபம் செய்து கொண்டிருந்தார்கள். இதுதான் அக் பர் பதவியேற்றபோது இருந்த இந்தியாவின் அரசியல் அமைப்பு.                        
                                                      இராணுவத்தலைமை அதிகாரி ஹேமு, ஏற்கனவே இருபத்தி இரண்டு போர்களை முன்னின்று நடத்தி அனுபவம் பெற்றவர். இவர் பெரும்படைகளுடன் தலைநகர் சுனாரிலிருந்து ஆக்ரா நோக்கி மொகலாயர் களை எதிர்க்க வந்து கொண்டிருந்தார். பைராம்கான் தயாராகி வருவதற்குள், டெல்லியின் கவர்னர் தர்தி பெக் ஆக்ராவில் தோற்கடிக்கப்பட்டு தப்பி ஓடிவிட் டார். அக்பர் குறிப்பிட்ட வயதை எட்டும் வரை பைராம் கான் கண்ணும் கருத்து மாக வளர்த்து வந்தார். பைராம்கானின் தலையாய காரியம் ஹேமுவை வெற்றி கொள்வதாக இருந்தது. இராணுவ அதிகாரிகளும் அதையே கூறினார் கள். பைராம்கான் தவறுதலாக படை நடத்தி தோல்விகண்டு தப்பி யோடிய தர்திபெக்கை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு தானே ஹேமுவை எதிர்க்க தயாரானார். மொகலாய முன்னனிப்படைகள் ஹேமுவைத்தாக்கி கண்ணை ஊனமாக்கியது. அவன் யானையின் மீதிருந்து கீழே விழுந்தான். வீரர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இரு படைகளும் இரக்கமில்லாமல் மோதி க்கொண் டன. இறுதியில் மொகலாயப் படை வெற்றிபெற்றது. ஹேமு சிறைப் பிடிக்கப்பட்டு பேரரசர் முன் நிறுத்தப்பட்டான். பைராம்கான் இளம்மன்னன் அக்பர் ஹேமுவைக் கொல்வதைப்பார்க்க ஆர்வமாய் இருந்தார். ஆனால், அக் பர் தோல்வியுற்று கைதியாகிய ஒருவனைக் கொல்ல தான் விரும்ப வில்லை என்று கூறுகிறார். உடனே பைராம் கான் தனது வாளை உருவி ஹேமுவைக் கொன்றுவிடுகிறார்.
                                             அக்பரின் பலமான எதிரி பானிபட்டில் நடந்த இந்தப் போரினால் தோற்கடிக்கப்பட்டது. போரில் பெருவாரியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொன்பொருட்களும், 1500 யானைகளும் கைப்பற்றப்பட் டன. டெல்லி, ஆக்ரா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் மொகலாய வசமா யின. ஹேமுவின் மூலம் இந்து சாம்ராஜ் ஜியத்தை நிறுவதற்கு போட்ட திட் டம் சரிந்தது. அக்பர் இந்தியாவின் பேரரசர் ஆனார். இரண்டாம் பானிபட் போரையும் மொகலாயர்களே வென்றார்கள். இப்போது பைராம்கானும், அக்ப ரும் சூர் பிரதேசத்தின் மீது கவனம் கொண்டார்கள். பைராம்கான் சிக்கந்தர்சூரு க்கு எதிராக ஒரு படையை அனுப்பினார். சிக்கந்தர்சூர் தப்பித்து சிவாலிக் மலையின் மன்காட் பகுதியிலிருந்து எதிர்கொண்டார். அங்கிருந்து எதிர்ப்பின் பலம்குன்றி சரணடைந்தார். சிக்கந்தர்சூர் கிழக்கில் ஒரு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டு 1569 ல் மரணமடைந்தார். 1557 ல் முஹம்மது ஷா ஆதில் பெங்காலில் போரிட்டு மரணமடைந்தார். 1558 ல் அஜ்மீர், குவாலியர், ஜான்பூர் அகியவை மொகலாயப் பேரரசுடன் இணைந் தன. பைராம்கான் தற்போது உள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
பைராம்கானின் தனி வரலாறு  
                                                    பைராம்கான் பிறப்பால் ஒரு துருக்கியர். ஷியா பிரிவு முஸ்லீமைச் சேர்ந்தவர். தனது எஜமானர் ஹுமாயுனின் வீழ்ச்சியிலும், குடு ம்ப விவகாரத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். இவரின் ஆலோசனையால் தான் ஹுமாயுன் மீண்டும் இந்தியாவை வெல்ல முடிந்தது. ஒரு மன்னனுக்கு நன்றி விசுவாசத்துடன் கூடிய சிறந்த அறிவாளி அமைவது மிகவும் அபூர்வம், அதற்கு பைராம்கான் சிறந்த உதாரணம். துரோகத்தனமே மிஞ்சி இருக்கும் மன்னர்களின் வாழ்க்கையில் அக்பர் போன்ற சிறிய மன்ன னை பக்குவப்படுத்தி பேரரசராக உயர்த்தியதிலிருந்து இவர் தனிப்பெருமை யுடன் விளங்குகிறார். இவரின் கீழ்தான் ஒரு பேரரசுக் குண்டான பரந்த பிரதே சங்கள் அக்பருக்கு வென்று கொடுக்கப்பட்டது. ஒழுக்கத்துடன் கூடிய அரசியல் வாதியான இவரின் ஆற்றலும், அறிவும் மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரி தும் பயன்பட்டது.
                                                                  அக்பர் மற்றும் பைராம்கானின் நட்பு மிகவும் உணர்ச்சிகரமானது. ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம், மாற்றாந் தாய் மஹாம் அன்காஹ், மாற்றான் சகோதரர் ஆதம்கான், டெல்லி கவர்னர் ஷஹாபுத்தீன் ஆகியோர் சொந்த விருப்பின் காரணமாக பைராம்கானை வெறு த்தனர். குழந்தையிலேயே அக்பரிடம் நன்கு பரிச்சயமாக இருந்தாலும், தனக் காகவும், தன் பணியாட்களுக்காகவும் எந்த சிபாரிசுக்கும் அக்பரிடம் சென்ற தில்லை.  ஆனால் இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒருமுறை அக்பர் யானைகளுடன் போர்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது, அதில் இரண்டு யானைகள் தடுப்பைத் தாண்டி அருகிலிருந்த பைராம்கானின் கூடாரத்தை பிடுங்கி பைராம்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவி க்க இருந்தன. உடனே அக்பர் தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் பாய்ந்து யானைகளைக் கட்டுப்படுத்தினார். இதனால் பைராம்கான் கடும்கோபம் கொண்டு உடனிருந்த இரு பணியாட்களைக் கொன்று விடுமாறு உத்தரவிட் டார்.
                                          

மொகலாய வரலாறு 12

                                                               ஒரு சமயம் அக்பரின் ஆசிரியர் ஹுமாயுனின் உறவுப்பெண் சலீமா சுல்தானாவுக்கு தவறுதலாக கை குலுக்க முயல, அக்பர் பெரிதாக நினைக்காமல் அவரை மன்னிக்க இருந்தார். ஆனால், பைராம்கான் கோபத்துடன் அவரை சிறையில் அடைக்கச் செய்தார். இன்னொருமுறை அர ண்மனைப் பணியாள் பீர்முஹம்மது என்பவனை செய்த தவறுக்காக கொல்ல சொன்னார். மேலும் நம்பிக்கைக்காக தன் ஷியா பிரிவைச் சேர்ந்த உறவுக்கார ர்களை பணியில் அமர்த்தி இருந்தார். மேலும் ஹுமாயுனின் சகோதரர் கம்ரா னின் மகன் அபுல் யாஸிமை மன்னராக்க திட்டமிட்டிருப்பதாகவும் அக்பருக் குத் தகவல் போகிறது. இதனால் அக்பருக்கும், பைராம்கானுக்கும் இடையே ஆன உறவில் விரிசல் பலமாகிக் கொண்டு போனது. போதாக்குறைக்கு, ஒரு குழப்பம் உருவாக்கும் வகையில் ஹமீதாபானுபேகம், மஹம் அன்காஹ், ஆத ம்கான், ஷஹாபுதீன் மற்றும் அக்பர் ஆகியோர் வேட்டைக்காக பைனாஹ் போனபோது, அனைவரும் அக்பரை வற்புறுத்தி உடல் நலம் குன்றி இருக்கும் தாயாரைப் பார்க்க டெல்லி செல்ல வற்புறுத்தி அக்பரை அனுப்பிவிடுகிறார் கள்.
                                                    உடன்சென்ற மஹம் அன்காஹ் அக்பருக்கு திரும்பிச் சென்றவுடன் ஒரு உத்தரவை வெளியிட அறிவுரைக்கிறார். அதன்படி, அக்பர் டெல்லியிலிருந்து திரும்பியவுடன், நமது அரசின் நலனில் அக்கறையுள்ள அர சாங்கப் பணியாளர்கள் எல்லா பணிகளிலிருந்தும் முற்றிலுமாக விலக்கப் பட்டு புனித மக்கா பயணம் சென்று இறுதிகாலத்தை இறைவனை வணங்குவ தில் கழிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று அரசு உத்தரவொன் றைப் பிரப்பிக்கிறார். பைராம்கான் அந்த உத்தரவு தன்னைத்தான் பதவியிலி ருந்து விலக்குகிறது என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, இரண்டு நம்பிக்கை யான அதிகாரிகளை அக்பரிடம் அனுப்பி, தான் என்றைக்கும் ஆட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்றும் கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தன்னை அந்த உத்தரவிலிருந்து நீக்கவும் கோருகிறார். அக்பர் வந்த தூதுவர் களை சிறையில் அடைத்து, பீர்முஹம்மது என்ற அரசு ஊழியனிடம் செய்தி அனுப்பி பைராம்கானை மக்கா செல்ல பயணமாகும்படி கூறுகிறார். பைராம் கான் உணர்ச்சி வசப்பட்டு கலவரத்தில் இறங்குகிறார். ஆனால், விரைவில் கைது செய்யப்பட்டு அக்பரின் முன் நிறுத்தப்பட அக்பர் அவர் தனக்கு முன்பு செய்த நல்லவைகளை நினைத்து மன்னித்து விடுகிறார். அக்பரை அரண்ம னையில் கண்டதும் பைராம்கான் விழுந்து அழுதுவிடுகிறார். அக்பர் அவரை கைப் பிடித்து தூக்கி தன்னருகே வலப்பக்க இருக்கையில் அமர வைக்கிறார். அக்பர் அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் அழகிய அங்கியை அணிவித் து மூன்று மாற்று வாய்ப்புகளை அறிவித்து ஒன்றை  தேர்ந்தெடுத்துக் கொள்ள செய்கிறார்.
                                                    ஒன்று, அவர் பழைய பணியிலேயே இருப்பதானால் அரசு அவருக்கு உகந்த மரியாதை கொடுத்து அங்கீகரிக்கும். இரண்டு, அவர் விருப்பப்பட்டால் பெரிய மாகாணம் ஒன்றுக்கு கவர்னராக பதவி அளிக்கப் படும். மூன்று, புனித மக்கா பயணம் செல்வதாக இருந்தால் உரிய அரசு மரியா தையுடன் அனுப்பி வைக்கப்படுவார். பைராம்கான் ‘இந்த மூன்றை விட தாங் கள் என்னை மன்னித்து நான் முன்பு செய்த பணிகளுக்கு நன்றி செலுத்தி விட் டீர்கள் இதுவே போதும்’ என்றார். ஆனாலும், அக்பர் அவரை உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் புனித மக்காவுக்கு பயணம் அனுப்பி, அவர் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற வழிசெய்தார். ஆனால், மக்கா செல்லும் வழி யில் பைராம் கானால் பாதிக்கப்பட்ட எதிரி ஒருவனால், பதான் என்ற இடத்தில் கொல்லப்பட்டு இறந்து போனார். இது ஜனவரி மாதம் 1561 ல் நடந்தது. பைராம் கானின் மொகலாய அரசின் வெற்றிடம் பாவாடை அரசியலுக்கு (PETTY COAT POLITICS) சாதகமாகிப் போனது. டாக்டர் ஸ்மித் என்பவரின் கூற்றுப்படி, மஹம் அன்காஹ் அரசின் முக்கியமான உயர் பதவிக்கு வந்தார். ஒரு பெரிய பேரரசு க்கு தகுதியில்லாத மனசாட்சியற்ற பெண்மனி மஹம் அன்காஹ் யோக்கியம ற்றவர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தினார். டாக்டர் ஸ்மித் உண்மை யின் அடிப்படையிலேயே மதிப்பிட்டிருக்கிறார்.
                                                               எல்லா விஷயத்திலும் அவளாள் அக்பரை மீற முடியவில்லை.  பைராம்கானின் விதி முடிந்த பிறகு, ராஜ்ஜியத்தில் மஹம் அன்காஹ்வே அக்பருக்கு பிரதான எதிரியாக இருந்தாள். இவள் தூண்டுதலின் பேரிலேயே ஒருவேளை அக்பர் முழுமையாக செயல்பட்டிருந்தால், தனக்கெ திராக புரட்சியில் ஈடுபட்ட பைராம்கானை கனிவாக நடத்தி இருக்க மாட்டாள். இவள் தன் மகன் ஆதம்கானை எந்த உயர்பதவியிலும் அமர்த்த முடியவில் லை. ஒரு முறை ஆதம்கானை படைக்கு தலைமையாக்கி மால்வா பகுதிக்கு அனுப்பினார். அவன் அந்தப் போரையே நாசப்படுத்தினான். உடனே அக்பர் நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். அடுத்த முறை ஆதம்கான் ஷம்சுத்தீன் அத்கா கானை கொலை செய்து விட, அக்பர் நீதிபதிகளிடமும், வழக்கறிஞர் களிடம் அவன் தாயாரின் போக்கில் செயல்பட வேண்டாம் என்று கூறி, நேர் மையான முறையில் தீர்ப்பளிக்கச் சொன்னார். அதன்படி, ஆதம்கானை கோட்டையின் மதில் சுவரிலிருந்து இரண்டுமுறை தலைகீழாக வீசப்பட்டு தலை சிதறி சாகடிக்கப்பட்டான். ஒருவேளை அக்பர் முழுக்க மஹம் அன்கா ஹ்வின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது.
                                                  அக்பர் டெல்லி தலைநகரின் அரியணையில் இருந்து தானே நேரடியாக விவகாரங்களை கவனித்து ஆட்சி நடத்தினார். ஆட்சியில் அவ்வப்போது தோன்றிய கலவரங்கள், புரட்சியை அடக்கினார். 1560 ல் பெங்கா லில் இருந்து முஹம்மது ஷா ஆதிலின் மகன் இரண்டாம் ஷேர்ஷா டெல்லி யைக் கைப்பற்ற போரிட்டான். அக்பரின் தளபதி கான்ஸமான் என்பவரால் படுதோல்வி அடைந்து, யானைகள் மற்றும் போர்தளவாடங்களை ஒப்படைக்க மறுத்தான். அக்பர் நேரடியாக ஜான்பூர் சென்றார். அக்பர் வருவதைக் கேள்விப் பட்ட அவன் அவருக்குத் தலைவணங்கி எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத் தான். அக்பரின் வழக்கமான தாராள மனம் ஜான்பூரை இரண்டாம் ஷேர்ஷாவி டமே திரும்ப கொடுத்துவிட்டார். உஸ்பெஸ்கிஸ்தான்களை அடக்கினார்.
                                                             அக்பர் பரந்த மொகலாயப்பேரரசு இந்தியாவில் அமைய வேண்டுமானால், ராஜபுத்திரர்கள் போன்ற தாய்நாட்டு வீரர்களின் அரவணைப்பு வேண்டும் என்பதை உணர்ந்தார். அதனால் அவர்களுடன் இரத்த உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார். அதன்படி முதலில் அம்ப ரைச் சேர்ந்த பார்மல் கஸ்வாஹா என்ற ராஜபுத்திரரின் மகளை திருமணம் செய்து கொண்டார். தொடந்து ஜெய்சல்மார், பிகானிர் இளவரசிகளையும், இள வரசர் சலீமுக்கு ராஜா பக்வாந்தாசின் மகளையும் திருமணம் செய்து வைத் தார். திறமையான ராஜபுத்திரர்களை சமூக மற்றும் இராணுவத்துறைகளில் உயர்பதவியில் அமர்த்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். ராஜா தோடர் மால், ராஜா பர்மால், ராஜா பக்வான்தாஸ் மற்றும் ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் இராணு வத்தில் உயர்பதவியில் இருந்து அனுபவித்தார்கள். மேலும், பாதிக்கும் மேற்பட்ட படை வீரரகளும் இந்துக்களாகவே இருந்தனர். இந்துக்கள் சுதந்திரமாக கோவில்களில் வழிபடச் செய்தார். குழந்தை திருமணங்களை தடை செய்து, சதி ஏறுதல், விதவைத் திருமணங்களை ஆதரித்தார். முஸ்லீம் அல்லாதவர்களுக்கான ஜிஸ்யா வரியை நீக்கினார். இதனாலேயே மொகலாய பேரரசு நான்கு தலைமுறையாக ஆட்சி செய்ய ஏதுவாய் இருந்ததாக டாக்டர் பேனி பிரசாத் கூறுகிறார்.
                                                           அக்பர் ஃபதேபூர் சிக்ரியில் ‘இபாதத் கானா’ என்ற அறிவுஜீவிகளுக்கான அமைப்பொன்றை ஏற்படுத்தினார். கோவாவிலிருந்த போர்ச்சுகீசியர்களுக்கு அவர்களின் மதத்தில் இருந்த சிறந்த கிறிஸ்தவமத ஞானம் உள்ளவர்களை கலந்து கொண்டு கருத்துக்களை தெரியபடுத்த வேண் டினார். அவர்களும் இந்தியப் பேரரசின் மன்னரை கிறிஸ்துவராக மாற்ற அரு மையான சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதென்று ஃபாதர் ருடோல்ஃப் அக்வாவி வா மற்றும் ஃபாதர் மான்செர்ரட் தலைமையில் ஒரு குழுவை ஆர்வமுடன் அனுப்பி வைத்தனர். அக்பர் அவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்தி, ஆக் ராவில் அவர்களை தேவாலயம் கட்டிக்கொள்ள அனுமதித்தார். ஏசுநாதர் மற் றும் அன்னை மேரியின் படங்களின் மீது ஆர்வமாய் இருந்தார். தன் மகன் சலீமை அவர்களின் சபைக்கு அனுப்பி கிறிஸ்தவ போதனைகளைக் கேட்கச் செய்தார். ஆனால், சலீமுக்கு இஸ்லாமைத் தவிர வேறுமதத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. மூன்று ஆண்டுகள் அரண்மனையில் தங்கியிருந்த கிறிஸ்தவகுழு அக்பரை மதமாற்றம் செய்ய முடியாமல் திரும்பியது. 1590 ல் இரண்டாவது குழு வந்து மூன்று ஆண்டுகள் முயன்றது அதுவும் அக்பரை மதம் மாற்றம் செய்ய முடியாமல் திரும்பியது.
                                            மூன்றாவது கிறிஸ்தவகுழு லாஹூருக்கு வந்தது. அது முடிந்தமட்டும் மக்களில் சிலரை மதம் மாற்றம் செய்து, லாஹூரிலும், ஆக்ரா விலும் தேவாலயங்களைக் கட்டியது. மேலும் போர்ச்சுகீசியர்களுக்கு சாதகமா க வாணிப ஒப்பந்தம் ஒன்றை மொகலாயப்பேரரசுடன் ஏற்படுத்திக் கொண்டது. அக்பர் சிறு பிரதேசங்களையும் இணைத்து நிலையான அதிகாரமிக்க மத்திய ஆட்சியைக் கொண்டு வர ஆர்வம் கொண்டார். சிறு பிரதேசங்களின் ஆட்சியா ளர்களால் அவ்வப்போது எழும் பிரச்சினை இதனால் அடங்கிப் போகலாம் என்று எண்ணினார். 1564 ல் கோந்த் வானா என்ற ராஜபுத்திர இடத்திற்கு அசாஃப் கான தலைமையில் படையனுப்பினார். கோந்த்வானாவை சிறுவயது மகனின் சார்பாக துர்காவதி என்பவள் ஆண்டுவந்தாள். அவள் முடிந்த மட்டும் போராடி, போர்களத்திலேயே தற்கொலை செய்துகொண்டாள். பெருவாரியான போர் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இடையில் உஸ்பெஸ்கிஸ்தானின் கலவரத் தால் சற்று பாதிப்படைந்த ராஜபுத்திர பிரதேசங்களை சரி செய்ய எண்ணினார்.
                                                ராஜஸ்தானை ராணாசிங்கின் மகன் உதய்சிங் ஆண்டு வந்தான். இவன் தந்தையின் தரத்திற்கு தகுதி இல்லாதவனாக இருந்தான். சித் தூர் ராணாவும் அக்பரிடம் திருமண உறவு ஏற்படுத்திக்கொள்ள மறுத்தார். அக் பர் என்றுமே நிலையான இந்தியாவை ஆளவே ஆசைப்பட்டார். அக்பர் உதய்சி ங்குடன் போரிட்டார். உதய்சிங் 8000 வீரர்களை ஜெயமால் மற்றும் பட்டா என்ப வர்கள் தலைமையில் போரிட விட்டு விட்டு தப்பித்து மலைப்பிரதேசத்திற்கு ஒடினான். ராஜபுத்திர வீரர்கள் கோட்டைக்குள் பதுங்கி இருந்தபடி போரிட்ட னர். 1567 ல் கோட்டையை கைப்பற்றிய மொகலாயப் படைகள் சுரங்கம் இருப்ப தை கண்டுபிடித்தனர். அக்பர் பொறியாளர்களை வைத்து சுரங்கங்களை ஆய்வு செய்தார். வெடிவைத்து சுரங்கத்தை தகர்த்ததில் 500 வீரர்கள் இறந்து போயினா ர்கள். சித்தூருடன் ரன்தம்போர் மற்றும் கலிஞ்சர் என்ற இரண்டு கோட்டைக ளும் கைப்பற்றப்பட்டன. இன்னொரு ராஜபுத்திர மன்னர் ராஜா ராம் சந்திரா ராஜஸ்தானின் பலம்வாய்ந்த இரு கோட்டைகள் மொகலாயர்கள் வசம் வீழ்ந்த தைக் கேள்விப்பட்டவுடன் அக்பரிடம் சரணடைந்தார். இவரைத் தொடர்ந்து அனைத்து சிறு ராஜபுத்திர மன்னர்களும் அக்பரிடம் சரணடைந்தனர்.
                                                         தப்பிச் சென்ற உதய்சிங் உதய்பூர் என்ற நகரத்தை தனியாக உருவாக்கி ஆண்டுவந்தான். 1527 ல் அவன் மரணமடைந்தவுடன், அவன் மகன் ராணா பிரதாப் சிங் மன்னனாகி, பேரரசுக்கு எதிரானதைவிட, இஸ்லாமுக்கு எதிரானான். இந்துக்களிடம் மத உணர்வைத் தூண்டிவிட்டான். தான் முஸ்லீம்களை இந்த பூமியை விட்டு விரட்டுவேன் என்று சபதமிட்டான். மொகலாயப்படையுடன் ஒப்பிடும்போது இவனின் படைகள் பலமற்று இருந்த து. இவன் முறையற்ற போரின் மூலம் மேவாரை வென்றான். இரண்டாம் அசாஃப்கான் தலைமையில் பெரும் படையுடன் கோல்கொண்டா கோட்டை யை முற்றுகையிட்டான். கடுமையான போருக்குப் பிறகு, காயமடைந்து மலைப்பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டான். அக்பர் லாஹூரில் தூரன் என்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்ய தவிர்க்க முடியாத காரணத் தால் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மீண்டும் ராணா பிரதாப் சிங் 1578 ல் வெளியில் வந்து கோந்த்வானா, உதய்பூர் மட்டும் முன்பு இழந்திருந்தவன் சித்தூர், அஜ்மீர், மண்டல்கர் தவிர மொத்த மேவாரை யும் வென்றெடுத்தான்.  1597 ல் ராணா பிரதாப் சிங் இறந்துபோனான்.
                                     ,

மொகலாய வரலாறு 13

                                             இவனுக்குப் பிறகு, மகன் அமர்சிங் ஆட்சியிக்கு வந்தான். அக்பர் தன் மகன் சலீம் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். சலீம் ஃப தேபூர், அலஹாபாத், புகழ்பெற்ற கோட்டைகள் சித்தூர், ரன்தம்போர், கலிஞ்சர், அஜ்மீர் அனைத்தையும் கைப்பற்றினார். ராஜ்புதனா தனிப் பிரதேசமாக ஆக்கப் பட்டது. பெரும்பான்மை ராஜபுத்திரர்கள் அக்பரின் கீழ் வந்தனர். தன் தந்தை வசம் இருந்த குஜராத்தின் மீது அக்பர் இப்போது பார்வையைத் திருப்பினார். அச்சமயம் குஜராத் மிகவும் செழிப்பாக இருந்தது. குஜராத் முஸஃப்ஃபர் ஷா என்ற பொம்மை மன்னனின் ஆட்சியில் இருந்தது. உள்நாட்டு கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன. குஜராத்தின் மந்திரி இதிமத் கான் அக்பருக்கு தூது அனுப்பி குஜராத்தைக் கைப்பற்றி காப்பாற்றும்படி வேண்டினார். அக்பர் தலை நகர் அஹமதாபாத் வந்து விட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் முஸஃப்ஃபர் ஷா சோளக்காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். குஜராத் அக்பர் வசமானது தனது மாற்றாந்தாய் மகன் கான் இ அஸாம் மிர்ஸா அஸிஸ் கோகா என்பவ ரை அதற்கு கவர்னராக்கினார்.
                                                   பின் சூரத் நகரமும் மொகலாயர் வசம் சரணடைந்தது. அக்பர் அதுவரை கடலைப் பார்த்தது இல்லை. ஆர்வத்துடன் கடற்கரையில் சுற்றுலா சென்று, கடலிலும் சற்று தூரம் பயணித்தார். மிர்ஸாக்களால் குஜராத் தில் கலவரம் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அக்கால அதிசயமாக உடனே 600 மைல் தூரத்தை ஓன்பது நாட்களில் கடந்து அஹமதாபாத் வந்தார். இதை சற்றும் எதிர்பாராத மிர்ஸாக்களின் கலவரம் அடக்கப்பட்டு குஜராத் அமைதி யானது. ராஜாதோடர்மால் என்பவர் தான் அமைதி ஏற்பட பெரிதும் பாடுபட் டார். குஜராத் பேரரசுடன் இணைக்கப்பட்டவுடன் போர்ச்சுக்கீசியர்களின் வாணி பமும் நடந்தது. அந்தகால பணத்தில் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு வரு வாய் ஈட்டியது. குஜராத் வெற்றி மேலும் பெங்காலை வெல்வதற்கு உந்துத லாக இருந்தது. பெங்காலை சுலைமான் கரீம் என்பவர் சுதந்திரமாக ஆண்டு கொண்டிருந்தார். 1572 ல் அவர் மரணமடைந்த பின் அவர் மகன் தாவூத் என்பவ ன் ஆட்சிக்கு வந்து தன் பெயரிட்ட நாணயத்தை பதவியேற்கும் தினத்தன்றெ வெளியிட்டான். தாவூது வெளிப்படையாக பேரரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தான். ஸமானியா என்ற கோட்டையை பேரரசிடமிருந்து கைப்பற்றினான் அக்பர் நேர டியாக தானே படையெடுத்து அவனை பாட்னாவிலிருந்து ஓடச் செய்தார். தாவூதை துகராய் என்ற இடத்தில் வெற்றி பெற்று சரணடையச் செய்து பேரரசு க்கு ஆண்டு கப்பம் செலுத்தச் செய்தார். பெங்காலில் முனிம்கான் என்பவரை கவர்னராக அக்பர் நியமித்தார். 1575 ல் முனிம்கான் இறந்துவிட மீண்டும் தாவூ த் தன் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அக்பர் திறமையான தளபதியை அனுப்பி அவனை வெற்றி கொண்டு சிறைப்பிடித்து 1576 ல் ராஜ்மஹாலில் அடைத்தார்.
                                               1571 ல் அக்பர் ஃபதேபூர் சிக்ரியில் ஒரு அரண்மனையை கட்ட விரும்பினார். அது அக்பருக்கு மூன்று பிள்ளைகள் பிறக்கும் என்று முன் பே கூறிய அவரின் ஆஸ்தான சூஃபி மதபோதகர் ஒருவரின் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தது. முதல் இரு பிள்ளைகள் பிறந்தபோது அரண்மனைக்கு அடிக்கல் நாட்டினார். அதற்கு ஃபதேபூர் (வெற்றி) சிக்ரி என்று பெயரிட்டார். பிறகு தான் மூன்றாவது மகன் பிறந்தார். இந்த அரண்மனை சரித்திரத்தில் மிக வும் புகழப்பட்டது. மிக உயர்ந்த சிகப்புக்கல்லால் அலங்கரித்தார். உள்ளேயே மசூதியும் அமைத்திருந்தார். போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தா ல் அப்போது இந்த அரண்மனை 14 வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படுகிறது. அரண்மனை மலையின் முகப்பில் அமைக்கப்பட்டு, கீழே நகரம் நிர்மாணிக்கப்பட்டது. திவான் இ கஸ் என்னும் பொதுமக்கள் அரங்கமும் கட்டப்பட்டிருந்தது. இது ஒரே ஒரு மையத்தூணில் அமைக்கப்பட்டிருந்தது.
                                                         பெரும்பாலான தீவிர மதப்பற்றுள்ள முஸ்லீம்கள் அக்பரை அவரின் கொள்கைகளுக்காக எதிர்த்தார்கள். முஸ்லீம்கள் அக்பரின் சகோதரர் மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தலைமையில் கலவரம் உண்டாக்கி புரட்சியில் ஈடுபட்டனர். மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தளபதி ஒருவரின் தலை மையில் படையனுப்பி பஞ்சாபை தாக்கச் சொன்னார். அது தோல்வியில் முடி ந்தது. மிர்ஸா முஹம்மது ஹக்கீம் மீண்டும் ஷத்மான் என்ற தளபதி தலைமை யில் ஒரு படை அனுப்பினார். அப்போது பஞ்சாபின் பொறுப்பில் இருந்த ராஜா மன்சிங் அடக்கி விரட்டினார். இப்போது மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தானே 15,000 வீரர்களுடன் படையெடுத்து வந்தார். அக்பர் அவரை வென்று, காபூலிலே யே இறக்கும் வரை ஆட்சி செய்ய அனுப்பி வைத்தார். 1585 ல் மிர்ஸா முஹம் மது ஹக்கீம் இறந்த பின் காபூல் மொகலாயப் பேரரசில் இணைந்தது. ராஜா மான்சிங் காபூலின் அதிகாரம் கொடுக்கப்பட்டு, அந்த மக்களின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை அவருக்கு சரிவராமல் திரும்ப அழைக்கப்பட்டார். அவருக்கு பதில் ராஜா பீர் பால் அனுப்பப்பட்டு, அவரும் யூஸுஃப் அஃப்சலுக்கு எதிராக காபூலில் ஒரு போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் மங்கோலியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்தார்கள். பலமான இராணுவ எல்லைகளை அமைத்தும், திறமை யான உயரதிகாரிகளை பாதுகாப்புக்கு நிறுத்தியும் கண்காணித்தனர். பால்பன், காஸி மாலிக் மற்றும் அலாவுதீன் கில்ஜி போன்றவர்களின் நடவடிக்கைகள் சிறந்த உதாரணம்.
                                                           அக்பரும் வடமேற்கு எல்லையை பாதுகாப்பதில் தீவிரமாய் இருந்தார். காபூலை வென்றபின் பழங்குடி பகுதிகளை குறைத்தார். லாஹூரிலும் ஒரு அரண்மனையை 1585 லிருந்து 1598 வரை வைத்திருந்தார். அந்த காலங்களில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானியர்களை தடுத்துக் கொண்டிரு ந்தார். உஸ்பெகிஸ்தான் தலைவர் அப்துல்லாஹ், மிர்ஸா சுல்தான் மற்றும் பதக் ஷானுடன் சேர்ந்து கொண்டு காபூலைப் பிடிக்க சமயம் பார்த்துக் கொண்டி ருந்தார் அப்துல்லாவுக்கு காபூலின் தீவிர முஸ்லீம்கள் ஆதரவளித்தனர். மொகலாயப் படையிலிருந்து ராஜா பீர்பால், ஹகீம் அப்துல் பத் மற்றும் ஸைன் கான் ஆகியோர் அனுப்பப்பட் டனர். மூன்று ஜெனரல்களும் போர் அனுபவம் இல்லாதவர்கள் எட்டாயிரம் மொகலாய வீரர்களும், ராஜா பீர்பா லும் கொல்லப்பட்டு, ஸைன் கான் மயிரிழையில் உயிர் தப்பினார். அக்பர் ராஜா தோடர் மாலையும், அவர் மகன் முராதையும் பெரும் படையுடன் அனுப் பினார். அவர்கள் காபூலின் புரட்சிப் படையை அடக்கி எண்ணற்றவர்களை கொன்றார்கள். அப்துல்லாஹ் புரட்சியில் இருந்து விலகிக் கொண்டார்.                    
                                              1586 ல் காஷ்மீரை ஆண்ட முஸ்லீம் மன்னர் அங்குள்ள இந்து மக்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக அக்பருக்கு செய்தி வந்தது. இதனாலும், காஷ்மீரின் தட்பவெப்பநிலை, பள்ளத்தாக்கின் அழகு போன்றவற் றைக் கேள்விப்பட்டதாலும் காஷ்மீரை வெல்ல அக்பர் ஆர்வமானார். மிர்ஸா ஷாருக் மற்றும் ராஜா பக்வான் தாஸ் ஆகியோரை காஷ்மீர் ஆட்சியாளர் யூஸுஃப் ஷாவிடம் அனுப்பினார். யூஸுப் ஷா ஒரு சமாதான உடன்படிக்கை க்கு விரும்பினார். ஆனால், அக்பர் அதை விரும்பாமல் காஸிம் கான் என்ற தளபதியின் தலைமையில் ஒரு படையை அனுப்பி தனக்கு நேரடியாக சரண டைய வேண்டும் என்று உத்தரவிட்டார். யூஸுஃப் ஷா பணிந்து போக, அவர் மகன் யாகூப் தப்பித்து தலைமறைவானார். ஆனால், விரைவில் பிடிபட்டு அவ ரும் சரணடைந்தார். காஷ்மீர் மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப் பட்டு, அவ்வப்போது அக்பர் கோடையில் ஓய்வெடுக்கும் விடுமுறைத் தலமாக மாறியது. இதேபோல் முல்தானும், பலுசிஸ்தானும். கந்தாரும் வெற் றிகொள்ளப்பட்டது
                                           அக்பரின் ராஜ்ஜியம் டெல்லி, ஆக்ரா, ஔத், அலஹாபாத், அஜ்மீர், குஜராத், பெங்கால், பிஹார், ஒரிஸ்ஸா, மால்வா, சிந்த், முல்தான், லாஹூர், காபூல், காஷ்மீர், பந்தேஷ், அஹ்மத்நகர் மற்றும் பிரார் என்று பதி னெட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இறுதியாக அலிகாரை கைப்பற்றிய வுடன் அக்பர் மிகவும் குன்றிப்போனார். அவரின் பிள்ளைகளால் மிகவும் கவலை அடைந்தார். ஏற்கனவே மகன்கள் முராதும், தனியாலும் குடிப்பழக்க த்தால் முறையே 1599 லும், 1604 லும் இறந்து போனார்கள். அடுத்த மகன் சலீம் (ஜஹாங்கீர்) இவரும் நீண்ட குடி மற்றும் போதை பழக்கமுள்ளவர். இவரின் நலனுக்காக ராஜகுடும்பத்தினர் அதிகம் இறைவனை வேண்டியதாகவும், பல புனித பயணங்கள் மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர் உடல்ரீதி யாக பலமாக இருந்தவர்.
                                                      1600 ல் வயதான அக்பர் டெக்கான் பகுதியில் போரில் இருந்தபோது, சலீம் புரட்சியில் ஈடுபட்டு அலஹாபாத்தைக் கைப்பற்றினார். 1602 ல் மேலும் வயதான அக்பருக்கு அதிர்ச்சிதரும் வகையில் பிரபல கொள் ளைக்கூட்டத் தலைவன் பீர்சிங் பந்தேலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். இறுதி நாட்களில் அக்பர் கொஞ்சம் கூட நிம்மதியில் இருந்ததில்லை. அபுல் ஃபஸல் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டிருந்தார். நம்பிக்கையான சிலரை பதவியில் நியமித்திருந்தாலும், மக்களிடையே நம்பிக்கையற்று போனார் அக்பரின் மகன் சலீம். ராஜா மான்சிங் தலைமையில் ஒரு குழு அமைத்து சலீ மின் மகன் குஸ்ரு (பேரர்) தலைமையில் ஆட்சியை ஒப்படைத்தார். ஆனால், அது நிலையில்லாமல் போனது. 1605 ல் அக்பர் மிகவும் உடல்நலம்குன்றி போனார். அதிகமான வயிற்றுப்போக்கும், மூச்சுத்திணறலும் மருத்துவர்களா ல் காப்பாற்ற முடியாமல் போனது. அவர் கட்டிக்கொண்டிருந்த சிகந்தரா கோபு ர நினைவிடத்திலேயே அக்பரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
                                          இஸ்லாமிய ஆட்சி என்பது நபிகள் (ஸல்), நேர்மையான நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, முதலாம் வலீத் என்பவர் கிறிஸ்தவர்களும் இருந்த ஆட்சியில் இஸ்லாமிய ஆட்சியை நிலைப்படுத்தினார். இதில் அப்பா ஸிட்களுக்கு முக்கிய பங்குண்டு. பாக்தாதை இஸ்லாமிய மையமாக்கி தாரு ஸ் ஸலாம் ஏற்படுத்தினார்கள். ஒரு நாட்டை வென்றெடுத்த மன்னரின் விரு ப்பமே நாட்டின் மதமாக இருந்தது. ஆரம்பத்தில் அக்பர் இஸ்லாமிய ஆட்சியா க இந்தியாவில் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவே தெரிகிறது. அக்பரு ம் சிறுவயதிலேயே ஆட்சிக்கு வந்து அரசியலில் தீவிரமாக இருந்ததால் வெளி யுலக இஸ்லாமிய ஆட்சியை அறிந்திருக்கவில்லை. ஆனால், தீவிரமான இஸ்லாமிய மதபோதகர்கள் அக்பரை இஸ்லாமிய ஆட்சியே இந்தியாவில் ஆள வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அக்பரின் ஆளுகையின் கீழ் பெருவாரியான ராஜபுத்திர இந்துக்களின் பிரதேசங்களும் இருந்தன. அக்பரின் நெருங்கிய நண்பரும், ஆலோசகருமான அபுல் ஃபஸல் இந்த விவகாரத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய கடமைக்காளானார். இவரின் ஆலோசனையில் அக்பர் சுன்னி பிரிவு முஸ்லீமாய் இருந்தார். அக்பர் சிறந்த தொழுகையாளி யாக இருந்தார். சில சமயங்களில் மு அத்தீன் (தொழுகைக்கு அழைப்பு விடுப் பவர்) ஆகவும் இருந்திருக்கிறார். 

மொகலாய வரலாறு 14

                                           ஒவ்வொரு ஆண்டும் அஜ்மீரின் ஷெய்க் சலீம் சிஷ்டியின் நினைவிடத்திற்கு செல்பவராக இருந்தார். அந்த ஞானியின் பெயரையே தன் மகன் சலீமுக்கு சூட்டினார். நாடெங்கும் இமாம்களை அமர்த்தினார். ஒருமு றை அக்பரின் பிறந்த நாளுக்கு அரண்மனைக்கு இஸ்லாமிய ஞானி ஒருவர் வருகை தந்தார். அவர் அக்பருக்கு இந்துக்களின் முறைப்படி வண்ணமயமான உடையலங்காரம் செய்திருப்பதைக் கண்டு, கூடாது என்பதுபோல் கைத்தடி யை அசைத்தார். அது தவறுதலாக அக்பரின் மீது பட்டுவிட்டது என்பதற்காக கடுமையாக அரண்மனை பெண்மணிகளால் தண்டிக்கப்பட்டார். மெஹ்தி என்ற ஒரு அமைப்பும் அக்பரின் காலத்தில் இருந்தது. அதன் தலைவர்களை கைது செய்தார். பின் பெரும் இஸ்லாமிய அறிஞர்களை வரவழைத்து பல தர ப்பு ஆலோசனைக்குப் பிறகு, இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவித் தார். இதனால் பலமான எதிர்ப்பு கிளம்பியது. சில இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதனால் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுடன் இந்தியாவின் மற்ற மதக் கொள்கைகளையும் இணைத்து ‘தீனே இலாஹீ’ என்ற புதிய மதத்தை அறிமுக ப்படுத்தினார். இதில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, இஸ்லாமை ப்போல் ஸலாம் அலைக்கும் என்பதற்கு பதிலாக, அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொ ள்ள வேண்டும். அப்போதைய இஸ்லாமிய உலகின் அப்பாஸிட்களும், உமய் யாத்களும் அக்பரை மிகவும் கடுமையாக கண்டித்தனர். இது ஒரு முட்டாளின் கண்டுபிடிப்பு என்று இகழப்பட்டார். தீனே இலாஹீ ஒரு நபியின் வழியாக தோன்றிய மதமல்ல அரசியல் ஆதாயத்திற்காக ஒரு மன்னரால் தோற்றுவிக் கப்பட்டது என்று கூறப்பட்டது. உண்மைதான் ராஜபுத்திரர்கள் தங்கள் உறவுக ளை அக்பரின் குடும்பத்திற்கு மணமுடித்துக் கொடுத்தனர்.
                                                           பதாயோனி என்பவர் தனது புத்தகத்தில் கீழ் கண்ட நடைமுறைகள் அக்பரின் ஆட்சியில் இருந்ததாக குறிப்பிடுகிறார் :
தலையை தரையில் வைத்து (சஜ்தா) மன்னரை வணங்கும் முறை இருந்தது. தீ வழிபாடும், சூரிய வழிபாடும் அக்பரின் ஆட்சியில் இருந்தது. அக்பர் மணந்து கொண்ட இந்து பெண்களின் திருப்திக்காக ஆண் காட்டுப்பன்றி அரண்மனை யில் கட்டி வைக்கப்பட்டு சகுனம் பார்க்கப்பட்டது. தன் மனைவிகளுக்காக நெற்றியில் பொட்டிடும் பழக்கமும் அக்பரிடம் இருந்தது. மாட்டிறைச்சி, பூண் டு, வெங்காயம் உபயோகப்படுத்தப்பட்டு, தாடி வைப்பது தடை செய்யப்பட்டிரு ந்தது. தாடி வைத்திருந்த முல்லாக்கள் தண்டிக்கப்பட்டனர். மிருகங்களை பலி யிடுவதும், உண்பதும் இஸ்லாமில் ஆகுமானதாக இருக்க, அக்பர் இந்துக்களுக் காக பசுக்களைக் கொல்வதையும், உண்பதையும் தடை செய்தார். ஆண்களுக் கு பனிரெண்டு வயதிற்கு முன் விருத்தசேதனம் செய்வதும், பூப்பெய்தாத பெண்கள் மண முடிக்கவும் தடை செய்யப்பட்டது. அரபுமொழி பயில்வது ஆர் வமூட்டப்படாமல் இருந்தது. பகிரங்கமாக தொழுகைக்கு அழைப்பதும், பொது இடத்தில் தொழுவதும் தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய பெயர்களான முஹமது, அஹமது, முஸ்தபா போன்ற பெயர்கள் மன்னருக்கு எதிராக (அவர் அக்பர் அல்லவா) இருப்பதாக கூறி வேறு பெயர்கள் வைக்கப்பட்டனர். புனித மக்கா பயணம், ரமதான் மாத நோன்புகள் ஆதரிக்கப்படவில்லை. குர்ஆன், ஹதீஸ்கள் புழக்கத்திலிருந்து மறைக்கப்பட்டன. மசூதிகளும், வணக்கவிடங் களும் வீரர்களின் ஓய்வறையாகவும், பொருள் சேகரிக்கும் இடமாகவும் ஆக்க ப்பட்டன. தனது தீனே இலாஹிக்காக ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இஸ்லா மின் வாடையே இந்தியாவில் இல்லாமல் செய்தார். பிரிட்டிஷாரின் கூற்றுப் படி அக்பர் தங்களை விட பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டார். அவரின் ஆட்சிக்கு தீனே இலாஹீ போன்ற பொதுவான மதம்தான் இந்தியா போன்ற பல மதமுள் ள நாட்டுக்குத் தேவை என்று வாதிட்டாலும். இஸ்லாம் இதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது அல்லது அவர் இஸ்லாமியரே அல்ல. ஜஹாங்கீர் தன் தந் தை ஒரு சிறந்த தொழுகையாளி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதை யாரும் அங்கீகரிக்கவில்லை. நண்பர் அல்லாமா அபுல் ஃபஸல் மூலம் “அக்பர் நாமா” என்ற நூலை எழுதச்செய்தார்.
       கலைகளிலும், இலக்கியத்திலும் மிகவும் புலமை வாய்ந்திருந்தார். உலகளவில் ‘தி க்ரேட்’ என்று போற்றப்பட்ட மிகச்சிலரில் அக்பரும் ஒருவர். பிரபல்யமான புத்தகங்களான கான் இ கானான், ஜாமா இ ரஷீதி, மு அஜம் உல் புல்தான், ஷாஹ்னாமா, ஹயாத் உல் ஹைவான் ஆகிய வற்றை பெர்ஷிய மொழியில் மொழி பெயர்க்க வைத்தார். தன்னைச் சுற்றிலும் எப்போதும் தத்துவவாதிகள், போதகர்கள், கவிஞர்கள், சரித்திர ஆய்வாளர்கள் இருப்பது போல் வைத்துக் கொண்டார். அக்பரின் நெருங்கிய நண்பராகவும், ரகசிய ஆலோசகராகவும் அபுல் ஃபஸ்ல் என்பவர் இருந்தார். அபுல் ஃபஸ்ல் தலையாய பெர்ஷிய போதகராகவும், பரந்த கலாச்சார மற்றும் மத அடையாள மாகவும் திகழ்ந்தார். இவரின் மூத்த சகோதரர் ஃபைஸி என்ற அபுல் ஃபைஸ் அரண்மனை நூலகக் காப்பாளராகவும், பெர்ஷிய கவிஞராகவும் இருந்தார். எண்ணற்ற சமஸ்கிருத, ஹிந்தி மொழி கணிதம், விஞ்ஞானம் மற்றும் பலது றை புத்தகங்களை பெர்ஷிய மொழியில் மொழி பெயர்த்தார். தலைசிறந்த அப் துல் காதிர், பைரம்கான், பீர் முஹம்மது, அமீர் மீர் தகி ஷரீஃபி, மௌலானா கீருத்தீன் ரூமி, ஷெய்க் அபுன்நபி தெஹ்லாவி, மிர்சா முஃப்லிஸ், ஹாஃபிஸ் தாஷ்கண்டி மற்றும் முல்லாஹ் சாதிக் ஹால்வி போன்ற இஸ்லாமிய மதபோ தகர்களும் அக்பரின் சபையில் இருந்தார்கள்.
   தனக்கு ஆலோசனை வழங்கவும், அதிகாரிகளாக இருப்பவர்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அக்பர் பார்ப்பதில் லை. மற்ற முஸ்லீம் ஆட்சியாளர்களை விட அக்பரின் அரண்மனையில் இந்து க்கள் தான் பெருவாரியாக இருந்தார்கள். சூஃபி சகோதரர்களான அபுல் ஃபஸ்ல் மற்றும் அபுல் ஃபைஸ் தவிர, ராஜா தோடர்மால், பீர் பால், ராஜா பக்வான் தாஸ், ராஜா மான் சிங், ராஜா பிஹாரி மல், ஹரி நாத், சூர் தாஸ், துளசி தாஸ் மற்றும் பல் ஹிந்துக்கள் சிறப்பான அந்தஸ்தில் இருந்தார்கள். ஓவியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அக்பர் அதற்காக ஓவியப்பள்ளிகளை அமைத் தார். ஃபதேபூர் சிக்ரியில் அக்பர் அமைத்த ஓவியங்களுடன் கூடிய கலை மண் டபம் பிரசித்திப் பெற்றது. நல்ல ஓவியக் கலைஞர்களுக்கு பெரிய ஊதியமும், ஊக்கத் தொகைகளும் கொடுத்தார். சையத் அலி தப்ரீஸ், கவாஜா அப்துல் சமத் மற்றும் கேசு போன்ற சிறந்த ஓவியர்கள் இருந்தார்கள். தன் காலத்தில் இந்தியாவில் இசைக்கலையை மிக உச்சத்தில் அக்பர் வைத்திருந்தார். தானே ஒரு இசைக்கலைஞராக இருந்தார். சுபான் கான், சருத் கான், ஸ்ரீ கியான் கான், மியான் கான், மியான் லால், தாவூத் தாரி, முஹம்மத் கான் தாரி, முல்லாஹ் இஸ் ஹாக் தாரி, நானக் ஜர்ஜு, பிலாஸ் கான், தன்தரங்க் கான், ரங்க் சென், ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பீர் ஸாதாஹ் போன்ற இசைக்கலைஞர்கள் இருந் தார்கள். இவர்களுக்கெல்லாம் மேல் காலத்தால் அழிய முடியாத இசை மேதை மியான் தான்சேன் இருந்தார். தனது இசைத்திறமையால் யமுனா நதியையே தீயால் எரியச் செய்ததாக வரலாறு உள்ளது. இன்றும் இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்கள் குவாலியரில் உள்ள இவரின் கல்லறையில் அமர்ந் து பாடுவதுண்டு. மியான் தான்சேனைப் போலவே அக்பரின் அவையில் ராம் தாஸ் மற்றும் ஹரி தாஸ் என்ற இருவர் ‘பாடும் குயில்கள்’ என்ற சிறப்பில் அழைக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். பீன், புல்லாங்குழல், கிசக், கரானா, கபுஸ், சர்மண்டல், சுர்னா, தம்புரா, ரபப் மற்றும் கானூன் போன்ற இசைக்கரு விகள் பிரபல்யமாக இருந்தன. இந்த கருவிகளை இசைக்கும் வல்லுனர்களாக ஷெய்க் தவான் தாரி, ஷிஹாப் கான், புர்பின் கான், உஸ்தாத் தோஸ்த், மீர் செய்யத் அலி, பஹ்ராம் குலி, தாஷ் பேக், பீர் மண்டல் கான், உஸ்தாத் யூசுஃப், சுல்தான் ஹாஷிம், உஸ்தாத் முஹம்மத் ஹுசெய்ன், உஸ்தாத் முஹம்மத் அமீன், உஸ்தாத் ஷா முஹம்மத், மீர் அப்துல்லாஹ் மற்றும் காஸிம் ஆகியோ ர் இருந்தனர். அக்பரின் அவையில் ‘தர்பாரி’ என்ற ராகம் மிகவும் பிரபல்யமாக இருந்தது.
அக்பர் கட்டிடக் கலையில் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் கால கட்டிடக் கலை இன்றும் ஃபதேபூர் சிக்ரியில் பறைசாற்று கின்றது. பாரசீக கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் ஹுமாயுன் கல்லறை, அத ன் அருகிலுள்ள பிரமாண்ட வாயில் கொண்ட மசூதி உலகில் எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆக்ரா கோட்டையிலுள்ள ஜஹாங்கிரி மஹால், ஷெய்க் சலீம் சிஷ்தி கல்லறை, ஃபதேபூர் சிக்ரியின் அழகிய மசூதி, ஜோதாபா ய் அரண்மனை, அக்பர் அரண்மனையின் மத்திய அரங்கம், தி க்ரேட் மாஸ்க் என்னும் மசூதி, ராஜபுதனாவின் மிர்தாவில் உள்ள அழகிய மசூதி, குவாலியரி ல் உள்ள துறவி முஹம்மது கௌஸ் கல்லறை, ராஜா பிஹாரி மாலின் மனை வியின் சதி புர்ஜ், அலஹாபாத்தில் உள்ள நாற்பது தூண்கள் மண்டபம், பீர் பால் இல்லம், கோபிந்த் தேவ், கோபி நாத், மதன் மோஹன், ஜுகல் கிஷோர் ஆகி யோரின் நாற்கோவில் மற்றும் சிக்கந்தராவில் உள்ள அக்பர் ஸ்தூபி ஆகிய வை அக்பரின் கட்டிடக் கலையின் சிறப்புகள் ஆகும். தோட்டக்கலையிலும் ஃபதேபூர் சிக்ரி பூங்கா மற்றும் காஷ்மீரின் நசீம் பாக் ஆகியவை சிறப்பானவை. இவைகளை எல்லாம் மொகலாயர்களுக்குப் பின்னால் ஆளவந்த பிரிட்டிஷார் கண்டு வியந்து போயினர். உலக மன்னர்களெல்லாம் வாளெடுத்து ரத்தம் சிந்தி, கொள்ளையடித்து பூமிகளைத் தான் பிடிப்பார்கள் என்று அறிந்திருந்த பிரிட்டிஷாருக்கு மொகலாயர்களைப் போல் வென்ற இடங்களில் கலை வளர் க்க முடியுமா என்று திகைத்துப் போனார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பனி ரெண்டாம் நூற்றாண்டு வரை சீனாவிலிருந்து மேற்கில் ஸ்பெயின் வரை இஸ் லாமிய மன்னர்கள் இந்த உலகுக்கு காட்டிய கட்டிடம் மற்றும் கலைகளை யாரும் காட்டியதில்லை, இனி காட்டவும் முடியாது. தேம்ஸ் நதி பாலம், பிக் பென் கடிகாரம், சுதந்திரதேவி சிலை மற்றும் குதிரைகளில் அமர்ந்து வாள் காட் டும் நான்காம் ஹென்றி, இரண்டான் சார்லஸ் என்று இவர்களாகவே ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியது தான். உலகிலேயே வருடாவருடம் அதிகமா ன மக்கள் இஸ்லாத்தில் இணைவது ஸ்பெயினில் மட்டும் தான் காரணம் அங்கு இஸ்லாம் விட்டு வந்த உண்மையான ஆட்சி, கட்டிடக் கலை மற்றும் கலை, கலாச்சாரங்களும் தான். தோல் உரிக்கப்பட்ட சப்போட்டா பழத்தின் உள்ளே அதிசயமாக மாம்பழம் வந்தாலும் வருமே தவிர, மேற்கத்தியர்களால் உலகில் அமைதியை நிலை நாட்ட முடியாது.
           அக்பரால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இந்து கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறி, பின்னால் ஆட்சிக்கு வந்த அக்பரின் பேரர் ஷாஜஹான் இடித்தார்.