செவ்வாய், 23 ஜூன், 2015

அய்யுபிட்கள் வரலாறு 2

அல் காமிலுக்கும், அல் முஃஅஸ்ஸிமுக்கும் இடையில் அதிகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் சிஸிலியின் மன்னர் இரண்டாம் ஃப்ரெடெரிக் முன் சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதற்குள் 1227 ல் முஃஅஸ்ஸிம் மரணமடைந்தார். ஃப்ரெடெரிக் ஆறாம் சிலுவைப்போருக்கு தயாரானார். அல் காமில் ஜெருசலம் மற்றும் அனைத்து புனித இடங்களையும் விட்டுக் கொடுத்து விடுவதாக அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைதி ஒப்பந்தம் போட்டார். அதில் கோவில் பகுதி, டோம் ஆஃப் ராக், அக்ஸா மசூதி ஆகியவை முஸ்லீம்கள் வசமிருக்கும் என்றும் முடிவானது. அவர்களுக்கு உண்டான புனித பகுதிகளை தனி அதிகாரிகளை வைத்து அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அல் காமில் 1238 ல் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அவர் மகன்கள் அஸ் ஸாலிஹ்ஹும், இரண்டாம் அல் ஆதிலும் எகிப்தையும், சிரியாவையும் ஆண்டார்கள். அய்யுபிட் பேரரசில் கடுமையான உள்நாட்டுப் போர் நிலவியது. இதற்கிடையில் 1239 ல் ஃப்ரெடெரிக்குடனான அமைதி ஒப்பந்தம் முடிவடைய ஜெருசலம் அய்யுபிட் வசமானது.   
                        அல் காமில் இஸ்லாமிய முறையில் போரிட்டார். சிலுவைபோரில் ஃப்ராங்க்ஸ்கள் தோல்வி அடைந்த போது, படைகளுக்கு உணவளித்ததாக ஆலிவர் ஷோலஸ்டிகஸ் புகழ்ந்தார். அவர்களின் பெற்றோர்களும், மகன்களும், மகள்களும், சகோதர, சகோதரிகளும் எங்கள் கையால் இரக்கமின்றி சாகடிக்கப்பட்டார்கள். அவர்களின் உடமைகளைப் பறித்து கொண்டு நிர்வாணமாக துரத்தி னோம். ஆனால் சுல்தான் எங்கள் படைகளுக்கு உணவளித்தார். இது இறைவனிடமிருந்து வந்த உதவியா கவே கருதுகிறோம் என்றார்.
                            சைஃபுத்தீன் அல் மாலிக் அல் ஆதில் அபுபக்கர் என்ற் இரண்டாம் ஆதில் 1238 ல் எகிப்து அய்யுபிட் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இரண்டு ஆண்டுகளே ஆண்ட இவர் சகோதரர் அஸ் ஸாலிஹின் புரட்சியால் சிறை பிடிக்கப்பட்டு, எட்டாண்டுகள் சிறையிலிருந்தே மரண மடைந்தார். பின் ஆட்சிக்கு வந்த அஸ் ஸாலிஹ் 1221 ல் ஐந்தாம் சிலுவைப் போரில் பணயக்கைதியாக ப்ரெய்னியின் ஜானிடம் இருந்தார். பின்னர் அல் ஜஸீராவில் விடுவிக்கப்பட்டார். 1234 ல் எகிப்தில் இவரால் மம்லுக்குகளுடன் குழப்பம் வர டமாஸ்கஸின் அதிபராக தந்தை இவரை அனுப்பினார். அங்கிருந்து இவர் சிறிய தந்தை அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் விரட்ட ஜஸீராவில் கவாரிசிம்களிடம் அடைக்கலமானார். பின் சில நாளில் டமாஸ்கஸைக் கைப்பற்றி தனது பகுதிகளை பெரிதாக்கினார். அப்போது சகோதரரை நீக்கக் கோரி எகிப்திலிருந்து உதவி கோர, எகிப்து வந்து சுல்தான் ஆனார். டமாஸ்கஸில் மீண்டும் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் ஆட்சியைப் பிடித்தார். அஸ் ஸாலிஹ் இப்போது தன்னை எகிப்துக்கு அழைத்தவர் களைக் கூட நம்பத்தயாராய் இல்லை. மத்திய ஆசியாவில் மங்கோலியர்கள் நுழைந்த பிறகு, பரவலாக கிடைத்த கிப்சக் (மம்லுக்) அடிமைகளை படைக்கு வாங்கினார். இவர் மட்டுமே மம்லுக் அடிமைகளை வாங்கிய முதல் அய்யுபிட் சுல்தான் அல்ல. ஆனால், அஸ் ஸாலிஹ் மட்டுமே மம்லுக்குகளை முழுமை யாக நம்பினார். அவர்களை ஆயிரம் பேர் கொண்ட ‘பஹ்ரிய்யாஹ்’ என்று பிரித்து நைல் நதியின் ரவ்தாஹ் தீவில் வைத்தார். இன்னொரு குழுவை ‘ஜம்தாரீயாஹ்’ என்று பிரித்து தன் சொந்த பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டார். பலகாலமாக அடிமையாகவே இருந்த மம்லுக்குகள் அருமையான சந்தர்ப்பம் வாய்க்க அஸ் ஸாலிஹை நீக்கி விட்டு அய்யுபிட் பேரரசுக்கு முடிவு கட்டினார்கள்.
                            மம்லுக்குகளுக்கு இது இரு சரித்திரப் பதிவாகிப் போன நிகழ்ச்சி. ஆட்சியைப் பிடித்த மம்லுக்குகள் தங்களை பாஹ்ரி மம்லுக் என்று சொல்லிக் கொண்டார்கள். ‘அஸ் ஸாலி ஹால் அமைக்கப்பட்ட ‘பஹ்ரிய்யாஹ்’ மம்லுக்குகள் சில சமயம் ‘சாலிஹிய்யாஹ்’ என்று சொல்லிக் கொண்டார்கள். அல் காமிலால் ஃப்ரெடெரிக்கிடம் இழக்கப்பட்டிருந்த ஜெருசலத்தை அஸ் ஸாலிஹ் சிரியா மற்றும் பாலஸ்தீன் வழியாக கவாரிஸ்மிகளுடன் உதவியுடன் கைப்பற்றினார். சிலுவைப் படையுடன் கூட்டு வைத்திருந்த அஸ் ஸாலிஹ் இஸ்மாயிலையும், கவாரிஸ்மிகளின் உதவியுடன்  ‘லா ஃபோர்பி’ போரில் வெற்றி கொண்டார். அஸ் ஸாலிஹ் 1245 ல் டமாஸ்கஸைப் பிடித்த போது தான் பாக்தாத் கலீஃபா அல் முஸ்தஃஸிம் மூலம் ‘சுல்தான்’ என்று அழைக்கப்பட்டார். கவாரிஸ்மிகள் எப்போதும் ஆபத்து என்றும், கையாள்வது சிரமம் என்றும் கருதிய அஸ் ஸாலிஹ் ஹாம்ஸ் பகுதியில் அவர்களின் தலைவரைக் கொன்று, சிரியா மற்றும் பால்ஸ்தீனில் மிச்சமிருந்த அவர்களின் அடையாளங்களை அழித்தார். அஸ் ஸாலிஹ் சிரியாவில் சண்டையில் இருந்த போது சிலுவைப் போராளிகள் நுழைந்து விட்டதாக செய்திவர, எகிப்து திரும்பி அல் மன்சூராவில் முகாமிட்டார். அங்கு அவரின் கால்கள் முட்டுக்கால் வரை அழுகி விட்டிருக்க நோய்வாய்ப்பட்டார். தனக்குப் பிறகு, அல் முஃஅஸ்ஸம் துரன்ஷா சரியான ஆட்சியாளராக இருக்க மாட்டர் என்று கருதிய அஸ் ஸாலிஹ் அவரை எகிப்தை விட்டு தூரப்பிரதேசமான ஹசன் கெய்ஃபில் வைத்திருந்தார்.  அஸ் ஸாலிஹ் இறந்து போக அவர் மனைவி ஷஜர் அத் துர் இறப்புச் செய்தியை துரன் ஷா வரும் வரை ரகசியமாக வைத்திருந்தார்.
                        துரன்ஷா அல் முஃஅஸ்ஸிம் ஓராண்டு தான் ஆட்சியில் இருந்தார். தந்தை அஸ் ஸாலிஹால் எகிப்தின் அரசியலுக்கு நிராகரிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டார். தந்தை இறந்த பிறகு, பஹ்ரி மம்லுக் கமாண்டர் ஃபரீசுத்தீன் அக்டாயால் ஹசன்கெய்ஃபிலிருந்து அழைத்து வரப்பட்டார். அக்டாய் 1249 டிசம்பரில் 50 வீரர்களுடன் அவரை அழைத்துக் கொண்டு, பதவிப்போட்டியில் இருப்பவர்கள் கண்ணில் படாமல் ரகசியமாக 1250 ஜனவரியில் டமாஸ்கஸின் குஸைர் கிராமத்திற்கு வந்தார்கள். அங்கேயே அவர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். துரன்ஷா ஊர் தலைவர்களுக்கும், தன் பாதுகாப்புக்கும் பெரும் பணம் செலவு செய்தார். எகிப்தின் அல் மன்சூராவுக்கு வந்த அவர் தந்தையின் பாஹ்ரி மம்லுக்கு களை நீக்கிவிட்டு, தனியாக தனக்கென மம்லுக்குகளை நியமித்துக் கொண்டார். கருப்பு மம்லுக் அடிமை களை நம்பகமான பதவியில் வைத்தார். ஒரு கருப்பு அரவாணியை உஸ்ததராக (தலைமை செயலாளர்) வும், இன்னொரு கருப்பரை அமீர் ஜன்தார் (தலைமை அரசு பாதுகாவலர்) ஆகவும் நியமித்தார்.
                        துரன்ஷா சரித்திர ஆசிரியர்களால் நல்ல விதத்தில் மதிப்பிடப்பட வில்லை. குறைந்த புத்திசாலித்தனமும், விரைவில் உணர்ச்சிவசப்படுபவராகவும் இருந்தாராம். ஒருமுறை கத்தியில் மெழுகுவர்த்திகளை வேகமாக நறுக்கிக் கொண்டே, ‘இதுபோல் தான் பாஹ்ரி மம்லுக்குகளை கையாள் வேண்டும்’ என்றாராம். சிலுவைப்போராளிகளிடமிருந்து டமெட்டாவை மீட்டார். பைபர்ஸ், துரன்ஷாவைத் திட்டமிட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 1250 ல் துரன்ஷா பெரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பைபரும், சில மம்லுக்குகளும் விரைந்து அவரைக் கொல்ல முயர்ச்சித் தார்கள். வாளொன்று அவர் கையைப் பிளக்க, தப்பித்த துரன்ஷா நைல் நதி அருகிலிருந்த கோபுரத்தில் ஏறிக் கொண்டார். அதைக் கவனித்த மம்லுக் ஒருவன் கோபுரத்திற்கு தீ வைத்தான். தீயிலிருந்து தப்பிக்க ஆற்றை நோக்கி ஓடிய துரன்ஷாவை மம்லுக் ஒருவன் இடுப்பில் வெட்ட, ஆற்றில் விழுந்த சுல்தான் துரன்ஷா உயிர் பிச்சைக் கேட்க விடாத மம்லுக்குகள் அம்புகளை எறிந்தார்கள். பின்னர் அவரை வெளியில் இழுத்து தூக்கிலிட்டார்கள். ஃபரிசுத்தீன் அக்டாய் தான் துரன்ஷாவின் நெஞ்சைப் பிளந்து இருதயத்தை வெளியே எடுத்தாராம். பின்னாளில் இதே அக்டாய் பைபரால் கொல்லப்பட்டாராம்.
                               அதன் பிறகு, மம்லுக்குகளுக்கு சிரியா அய்யுபிட்களிடமிருந்து எதிர்ப்புவர ஆறு வயது குழந்தையான அல் அஷ்ரஃப் மூஸாவை சுல்தானாக பாஹ்ரி மம்லுக் இஸ்ஸதீன் அய்பக் அறிவித்தார். அல் அஷ்ரஃபைப் பற்றி முழு விவரம் சரித்திர ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவர் அலிப்போவின் ஆட்சியாளராக இருந்த அஸ் ஸாஹிர் காஸியின் கொள்ளுப் பேரர் என்று சொல்லப்படுகிறது. ஏமனில் அய்யுபிட் ஆட்சியாளராக இருந்த அல் மஸ் ஊதின் வழி வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பிறகு, சிரியாவிலிருந்த அய்யுபிட் ஆட்சியாளர் அந் நாசிர் யூசுஃப் எகிப்தின் மீது போர் தொடுக்க, 1253 ல் எகிப்து மம்லுக்குகள் வசமானது. ஓராண்டு இடைவெளியில் இஸ்ஸத்தீன் அய்பக், சுல்தான் சிறுவர் அல் அஷ்ரஃபை அவரின் அத்தையிடமே அனுப்பினார்.

அய்யுபிட்கள் வரலாறு 1

                                                              அய்யுபிட்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
                            எகிப்தை மையமாக வைத்து ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் இன மன்னர் சலாவுத்தீன் அல் அய்யூபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமியப் பேரரசு தான் ‘அய்யுபிட் பேரரசு’. 12, 13 ம் நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளை ஆண்டார்கள். சலாவுத்தீன் அய்யூபி ஆரம்பத்தில் ஃபாத்திமிட் பேரரசில் வைசிராயராக இருந்தார். அய்யுபிட் பேரரசுக்கு ஆரம்ப தளம் அமைத்த நூருத்தீனுக்குப் பிறகு, இவர் மன்னரானார். மூதாதையர் நிஜாமுத்தீன் அய்யூப் பின் ஷாதி என்பவர் வட அர்மேனியாவில் ரவாதியா பழங்குடியினரின் ஒரு பிரிவினரான ஹதபனி பழங்குடியினத் தைச் சேர்ந்தவராவார். அங்கு அரசியலில் முக்கிய நபராக இருந்தார்.
                        ஷாதி அவர்கள் அரசியல் சூழ்நிலை மோசமானதால் அங்கிருந்து மகன் கள் நிஜாமுத்தீன் மற்றும் ஷிர்குஹ் உடன் ஈராக்குக்கு இடம் பெயர்ந்தார். இந் நிகழ்ச்சிகளை நாம் சலாவுத் தீன் அல் அய்யூபின் வரலாற்றில் பார்த்துவிட்டோம். சலாவுத்தீன் தான் வெற்றி பெற்ற பிரதேசங்களில் தன் உறவினர்களையும், அந்த பிரதேசங்களின் உள்ளுர் தலைவர்களையும் வைத்து ஆட்சி செய்தார். சலாவுத் தீன் இறந்த பிறகு, அலிப்போவை அஸ் ஸஹீரும், அவை மூத்த மகன் அல் அஃப்தல், பாலஸ்தீனும் லெபனானும் இணைந்த டமாஸ்கஸையும் ஆட்சி செய்தனர். 1193 ல் மோசூலைச் சேர்ந்த மஸ் உத், சின் ஜாரின் ஸங்கியுடன் இணைந்து (வட மொசபடோனியா) அதிகபட்ச அல் ஜசீரா பகுதிகளைக் கைப்பற்றினார். பெரிய வெற்றி காணும் முன் மஸ் உத் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசூல் திரும்பிவிட்டார். பல அரசியல் சூழ்நிலைகள் மாறி 60 வயதி சலாவுத்தீனின் மகன் அல் ஆதில் என்பவர் பேரரசை பிரித்து தன் மகன்களுக்கு கொடுத்து அடுத்த 50 ஆண்டுகளுக்கு அய்யுபிட் பேரரசை நிலைபடுத்தினார். எகிப்தை அல் காமிலுக்கும், அல் ஜஸீரவை அல் அஷ்ரஃபுக்கும், அல் அவ்ஹதுக்கு தியார் பக்ரையும் பிரித்துக் கொடுத் தார். பின்னாளில் அல் அவ்ஹத் இறந்து போக அப்பகுதி அல் அஷ்ரஃபுக்கு வந்தது.
                        சலாவுத்தீன் இறந்த பிறகு, இரண்டாவது அய்யுபிட் சுல்தானாக அவரின் இரண்டாவது மகன் அல் மாலிக் அல் ஜீஸ் ஒஸ்மான் பின் சலாவுத்தீன் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே சலாவுத்தீன் தன் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்ததில் பல குழப்பங்கள் இருந்தன. இதற்கிடை யில் அல் அஜீஸ் 1193 முதல் 1198 வரை ஒட்டுமொத்தமாக சுல்தானாக இருந்தார். மோசூலில் சன்ஜார் தலைமையிலும், தென் ஈராக்கில் அர்துகித்கள் என்பவர்களாலும் புரட்சி ஏற்பட்டது. அல் அஃப்தலால் துரத்தப்பட்ட மந்திரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அல் அஜீஸ் இழந்திருந்த சிரியாவை மீண்டும் வென்றார். சிரியாவை இழந்த அல் அஃப்தல் சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதிலின் உதவியை நாட அவர் சமதானப்படுத்தினார். சமாதானத்தை மீறி அல் அஃப்தல் செயல்பட இம்முறை 1196 ல் அல் ஆதில் அல் அஜீஸுடன் இணைந்து சிரியாவைக் கைப்பற்றினார். அல் அஃப்தல் சல்காதுக்கு தப்பி ஓடினார். பெயருக்கு அல் அஜீஸ் சுல்தானாக இருந்தாலும், சலாவுத்தீன் சகோதரர் அல் ஆதில் தான் டமாஸ்கஸில் அதிகாரத் தில் இருந்தார்.
                            அல் அஜீஸ் தன் ஆட்சியின் போது, எகிப்திலிருந்த புகழ் பெற்ற கிஸா பிரமிட்டை அழிக்க முயற்சித்தார். அது மிகப்பெரியதாக இருந்ததால் கைவிட்டு விட்டு மென்காயர் பிரமிட்டை அழித்தார். சரித்திரப்புகழ் வாய்ந்த பனியாஸ் மற்றும் சுபைதாஹ் கட்டிடங்களைக் கட்டினார். 1198 ல் ஒரு வேட்டையின் போது ஏற்பட்ட விபத்தில் அல் மாலிக் அல் அஜீஸ் இறந்து போனார்.
                            அல் அஜீஸுக்குப் பின் அவர் மகன் அல் மன்சூர் நாசிர் அல் தீன் முஹம்மது எகிப்தின் மூன்றாவது சுல்தானாக 12 வயதில் ஆட்சிக்கு வந்தார். அப்போது சலாவுத்தீனிடம் பணியாற்றிய அடபெக் என்னும் மம்லுக் அனுபவம் வாய்ந்த சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதில் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று குழப்பம் விளைவித்தார். சலாவுத்தீனின் சிறிய தந்தை ஷிர்குஹ் சலாவுத்தீனின் மூத்த மகன் அல் அஃப்தல் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார். இதனால் அல் அஃப்தலுக்கும், அல் ஆதிலுக்கும் இடையே சண்டை மூண்டது. அல் அஃப்தல் டமாஸ்கஸில் தோல்வி யடைந்ததால், அல் ஆதில் கெய்ரோவில் நுழைந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் அல் மன்சூரின் பெயரை நீக்கி தன் பெயரை முன் மொழிய வைத்தார். அங்கிருந்து வெளியேறிய அல் மன்சூர் தன் சிறிய தந்தை அஸ் ஸஹீர் காஸி இருக்கும் சிரியாவின் அலிப்போ நகரத்திற்குச் சென்றார். அஸ் ஸஹீர் 1216 ல் தனக்குப் பின் தன் பிராந்தியத்தில் அல் மன்சூரை ஆட்சியாளராக ஆக்கினார். அதன் பிறகு அல் மன்சூரின் விவரங்கள் கிடைக்கவில்லை.
                               நிஜாமுத்தீன் அய்யூபின் மகனான அல் ஆதில் (முதலாம் ஆதில்) எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இவரை மரியாதை கலந்து சைஃபுத்தீன் (உண்மையின் வாள்) என்றும் அழைத்தார்கள். சிலுவைப்போரின் போது ஃப்ராங்க்ஸ்கள் இவரை சபாதின் என்று அழைக்க இன்றும் மேற்கத்திய வரலாற்றில் இப் பெயர் நிலைத்திருக்கிறது. தன் சகோதரர் சலாவுத் தீனுடன் சேர்ந்து சமூக மற்றும் இராணுவத் திறமைகளைப் பெற்றவர் அல் ஆதில். அய்யுபிட்களின் ஆட்சி யில் சிறந்த தளபதியாகவும் இருந்தார். சிறிய தந்தை ஷிர்குஹ்ஹின் மூன்றாவது எகிப்தின் தாக்குதல் போது நூருத்தீன் ஸெங்கியின் படையில் அதிகாரியாக இருந்தார். நூருத்தீன் இறந்த பிறகு, 1174 ல் சலாவுத்தீனின் சார்பாக எகிப்தின் கவர்னராக இருந்து அதன் வளர்ச்சிக்கும், சிலுவைப் போராளிகளை திறம்பட எதிர்க்கவும் துணை புரிந்தார். சலாவுத்தீன் இறந்த பிறகு மோசூலில் கலவரம் செய்த இஸ்ஸத் தீனை அடக்கினார்.
                        சலாவுத்தீன் தனக்குப் பிறகு, மகன் அல் அஃப்தல் தான் சுல்தானாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரின் மற்ற மகன்கள் அல் அஃப்தலின் தலைமையை எற்க தயாராய் இல்லை. அல் ஆதில் அவர்கள் குறிப்பாக அல் அஜீஸுக்கும், அல் அஃப்தலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த முயன்றார். அல் ஆதிலுக்கு அல் அஃப்தல் சுல்தானாக தகுதி இல்லாதது போல் தோன்றியதால், அவர் அல் அஜீஸுக்கு ஆதரவளித்தார். எதிர்த்த உறவினர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு 1201 ல் சுல்தானாக ஆட்சி அமைத்தார். மிகச் சிறந்த அய்யுபிட் சுல்தானாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தையும், சிரியாவையும் ஆட்சி செய்தார், பின்னால் ஆட்சிக்கு வந்த இவர் மகன் அல் காமிலும் சிறப்பாக ஆட்சி செய்தார். அல் ஆதில் ஆட்சிக்கு வந்த போது 55 வயதிற்கு மேலாகி விட்டது. சலாவுத்தீன் காலத்திலிருந்து சிலுவைப் போராளிகளுடன் போரிட்டு வந்ததால் ஆட்சி நடத்த போதிய வருவாய் இல்லாமல் இருந்தது. முதலில் வருவாயைப் பெருக்க திட்டமிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால் புதிய நாணயத்தை வெளியிட்டு, புது வரிகளையும் விதித்தார். இச் சூழ்நிலையில் எகிப்தில் பெரிய பூகம்பமும், நைல் நதியில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதையெல்லாம் திறமையாக சமாளித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
                            புதிய சிலுவைப் போருக்கு வித்திட்டிருந்த மேற்கத்தியர்களுடன் மெடிட்டரேனியன் நகரங்களில் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தி திசை மாற்றினார். இதில் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஃப்ராங்கிஷ் கடற்படையினர் ரொஸட்டாவிலும், டமைட்டாவிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். மேலும் குடும்பப்பகை வளராமல் இருப்பதற்கு தன் மகள் தைஃபா கதூனை சலாவுத்தீனின் மகன் அலிப்போவின் அஸ் ஸஹீர் காஸிக்கு 1212 ல் மணமுடித்துக் கொடுத்தார். டமாஸ்கஸில் சிறந்த அரண்மனையைக் கட்டினார். 1217 ல் எதிர்பாராத தருணத்தில் அக்ரியில் சிலுவைப் போராளிகள் வந்திரங்கினார்கள். 72 வயதில் தயாராய் இல்லாத தன் படையை அவசரமாகத் திரட்டி பாலஸ்தீன் சென்றார். அது அவ்வளவாக வெற்றி தராத நேரத்தில் அடுத்த சிலுவைப்படை டமெய்டாவில் வந்திருக்கிறது என்ற செய்தி கிடைத்தது. ஏற்கனவே உடல்நலமில்லாதிருந்த அல் ஆதில் 1218ல் காலமானார். அவருக்குப் பிறகு அவர் மகன் மாலிக் அல் காமில் ஆட்சிக்கு வந்தார். அல் ஆதிலுன் உறவினர்கள் பல பகுதிகளை துண்டாடினார்கள். டமாஸ்கஸ் மட்டும் அய்யுபிட் சுல்தானை நிலை நிறுத்தியது.
                        அய்யுபிட்களின் எகிப்திய சுல்தானாக அல் மாலிக் அல் காமில் ஆட்சியில் அமர்ந்தார். தந்தை வேறொரு பகுதியிலிருக்க மார்டினில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைக்கு தந்தையின் வேண்டுகோளின்படி தலைமை ஏற்றார். எகிப்தின் வைசிராயராக இருந்தார். அப்போது அல் ஆதிலின் இன்னொரு மகன் அல் முஃஅஸ்ஸிம் இசா டமாஸ்கஸின் இளவரசராய் இருந்தார். அல் ஆதில் கெய்ரோவின் அரண்மனை கட்டும் பணியில் கவனமாய் இருந்த போது, அல் காமில் ஏறக்குறைய சுல்தான் போல் செயல்பட்டார். அதிகாரமிக்க மந்திரி இப்ன் ஷுக்ரை பதவியிலிருந்து நீக்கினார். அல் ஆதில் இற்ந்த போது அல் காமில் எகிப்தையும், அல் முஃஅஸ்ஸிம் பாலஸ்தீன் மற்றும் ட்ரான்ஸ்ஜோர்டானையும், மூன்றாவது சகோதரர் அல் அஷ்ரஃப் மூசா சிரியா மற்றும் அல் ஜஸீராவையும் நிர்வாகத்தில் வைத்திருந் தனர். ஐந்தாவது சிலுவைப்படை எகிப்தை தாக்க துவங்கியது.
                        அல் காமில் தலைமையில் டமெய்டாவில் சிலுவைப்படைகளை எதிர் கொண்டார். இதற்கிடையில் ஹக்கரி குர்திஷ் கமாண்டரான இமாதத்தீன் இப்ன் அல் மஷ்துப் குழப்பம் விளைவித்து ஏறக்குறைய அல் காமிலை ஆட்சியை விட்டு தூக்க இருந்தார். அதிலிருந்து தப்பித்து தன் மகன் அல் மஸ் உத் ஆட்சி செய்யும் ஏமனுக்கு தப்பிச் செல்ல இருந்தார். அதற்குள் சகோதரர் முஃஅஸ்ஸிம் சிரியாவிலிருந்து வந்து குழப்பத்தை சரி செய்தார். இதற்கிடையில் சிலுவைப்போரைத் தடுக்க பலவழியிலும் முயற்சி செய்தார். அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. கடுமையான பஞ்சமும், நைல் நதி வற்றிப் போனதும் அல் காமிலால் டமெய்டாவைக் காப்பற்ற முடியவில்லை. அல் மன்சூரா கோட்டையிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொண்டு மீண்டும் ஜெருசலத்தை விட்டுக் கொடுப்பதாகவும் சிலுவைப்படை எகிப்தை விட்டு வெளியேர வேண்டும் என்று சமாதானத்திற்கு முயன்றார். இம்முறையும் நிராகரிக்கப்பட்டு சிலுவைப்படை கெய்ரொவிற்கு படையெடுத்தது. அல் காமில் புத்திசாலித்தனமாக மக்களை பத்திரப்படுத்திக் கொண்டு, அப்போதைய நைல் நதியின் தடுப்புகளைத் திறந்து வெள்ளம் உண்டாக்கினார். வேறுவழியின்றி எட்டு ஆண்டு அமைதிக்கு ஒத்து வந்தார்கள் டமெய்டாவையும் திருப்பி தந்தார்கள்.