புதன், 13 மே, 2015

விதைத்தவர்கள் 5

 1089 C.E. ல் ருஃபூஸ் கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்பான லான் ஃப்ரான்க்  இறந்தவுடன், உடனே அடுத்த ஆர்ச்பிஷப்பை அறிவிக்காமல் நான்காண்டுகள் காலம் தாழ்த்தினான். தேவாலயங்களின் வருமானத்தை தானே பார்த்துக் கொண்டான். பின் 1093 C.E. ல் ஆவோஸ்டாவின் ஆன்செலம் ஆக இருந்த இத்தாலியின் மத மற்றும் தத்துவவாதி ஒருவரை கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்பாக ஆக்கினான். இடையில் ருஃபூஸுக்கும், ஆன்செலமுக்கும் இரண்டாம் போப் அர்பனை நியமிப்பதில் கருத்து வேறுபாடு தோன்றியது. இது போல் பல தொல்லைகள் ருஃபூஸிடமிருந்து வந்ததால் 1097 C.E. ல் ஆன்செலம் இங்கிலாந்திலிருந்து வெளியேறி பெரும்பாலான பதவிக்காலம் வரை  வெளிநாடுகளிலேயே தங்கி இருந்தார். இது ருஃபூஸுக்கு மூன்று பிஷப் ஆலயங்கள் மற்றும் பனிரெண்டு மடங்களின் வருமானத்தை அநுபவிக்க போதுமானதாக இருந்தது. ருஃபூஸ் சிலுவைப் போராளி களுக்கு என்றுமே தடைக்கல்லாகவே இருந்தான். விளைவு 1100 C.E. ல் (தற்போதைய டோடி, டயானாவைப் போல்) மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.
                                           1154 C.E. ல் வில்லியமின் கொள்ளுப்பேரன் இரண்டாம் ஹென்றி இங்கிலாந்தின் புதிய மன்னனாகப் பதவியேற்றான். ஃபிரான்சின் லீ மான்ஸில் பிறந்த இரண்டாம் ஹென்றி ஃபிரான்சின் அக்விடைன் நகரைச் சேர்ந்த இலியனார் என்பவளை மணந்தான். இலியனார் ஏற்கனவே முதல் திருமணமாக ஃபிரான்சின் மன்னன் ஏழாம் லூயிஸை மணந்து இரண்டாவது சிலுவைப் போருக்கு அவனுடன் சென்றாள். அவளின் தகாத போக்கால் தான் இல்லாதபோது அவளின் பேரில் நம்பிக்கையற்று இருந்தான். லூயிஸ் இல்லாத சமயத்தில் தனது மாமன் ஆண்டியாக்கைச் சேர்ந்த ரெய்மாண்டுடன் தகாத உறவு வைத்திருந்த காரணத்தாலேயே கவனம் சிதறி இரண்டாவது சிலுவைப் போர் தோற்பதற்கொரு காரணமாய் அமைந்ததாக ஒரு கருத்து நிலவியது. மன்னன் லூயிஸ் விவாகரத்து செய்த பின் இரண்டாம் ஹென்றியை மணந்து நான்கு குழந்தைகள் பெற்றாள். அதில் மூன்றாவது குழந்தைதான் புகழ் பெற்ற லயன் ஹார்ட் ரிச்சர்ட் (முதலாம்). வாடிகன் வரலாற்றில் ஒரே ஆங்கிலேய போப்பான நான்காம் அட்ரியனின் தேவ ஆசீர்வாதத்துடன் 1171 C.E. ல் இரண்டாம் ஹென்றி அயர்லாந்து மீது போர் தொடுத்தான். இரண்டாம் ஹென்றியும், அட்ரியனும் 1154 C.E. ல் ஒரே வருடத்தில் போப்பாகவும், மன்னனாகவும் பதவியேற்றனர்.
                                          அயர்லாந்தின் செல்வம் சிலுவைப் போருக்கு தேவையானதாக இருந்தது. வெற்றி பெற்ற அயர்லாந்தை இரண்டாம் ஹென்றி தனது முண்னணி ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொண்டான். யார் யார் ஆங்கிலம் பேசி, ஆங்கிலேயர்களைப் போல் உடை உடுத்தி தோன்ற ஒப்புக்கொண்டார்களோ அவர்களை அயர்லாந்திலேயே வாழ அனுமதி அளித்தான். எஞ்சியவர்கள் கொசு, மூட்டைப்பூச்சிகள் போல் வேட்டையாடப்பட்டனர். மேற்கு ஐரோப்பாவின் முண்ணனி பணக்கார நாடாக இருந்த அயர்லாந்து ஏழை நாடாக்கப்பட்டு மிகவும் பின் தள்ளப்பட்டது. வெற்றிகரமான மன்னனாகத் திகழ்ந்ததால் போப் இரண்டாம் ஹென்றியை அழைத்து ஜெருசலத்தின் மன்னராக்க புதிய சிலுவைப் போருக்கு (சுல்தான் ஸலாவுத்தீன் அய்யூபை எதிர்த்து) தலைமை தாங்கச்செய்தார். அன்றிலிருந்தே பிரிட்டிஷ் தீவுகளுக்கு அயர்லாந்தின் தொல்லை பாலஸ்தீன் போல் ஆரம்பமாகியது. எத்தனையோ வெற்றிகரமான ஆங்கில அரசுகள் அடிப்படை கிறிஸ்தவ மதத்தின் பேரில் அயர்லாந்தில் சமாதானத்திற்கு முயற்சித்தன ஆனால் அரசாங்கங்கள் தோல்வியையே பெற்றன. 1187 C.E. ஜுலை 4 ல் ஸலாவுத்தீன் அய்யூபி ஜெருசலத்தை வென்ற பின் ஆண்டியாக்கின் மடாதிபதி, இரண்டாம் ஹென்றிக்கு தான் இங்கிலாந்தை வளமான நாடாக கருதுவதால், அதன் மன்னனிடமிருந்தும், மக்களிடமிருந்தும் சிலுவைப் போராளிகளுக்கு உதவுமாறு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார். இரண்டாம் ஹென்றி 30,000 மார்க் பணத்தை ஜெருசலம் வங்கிக்கு அனுப்பினார். மூன்றாவது சிலுவைப் போருக்காக இரண்டாம் ஹென்றி மக்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை வரியாக தந்துவிட வேண்டுமென்று உத்தர விட்டான். பெரும்பான்மையானவர்களுக்கு  அது சுமையாக இருப்பதாக அறியப்பட்டதால் வரி செலுத்தாதவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என எச்சரிக்கப்பட்டனர். இந்த வரிகள் 1166,1185,1188 C.E. ல் முறையே தனி மனித வருமானத்திற்கு எதிராக புனித மண்ணை மீட்டெடுக்க வசூலிக்கப்பட்டது.
                       1189 C.E. ல் லயன் ஹார்ட் ரிச்சர்ட் இங்கிலாந்தின் மன்னனாக பதவிக்கு வந்தான். செப்டம்பர் 29 1999 ல் லண்டன்டைம்ஸ் பத்திரிக்கை ரிச்சர்ட் ஆணோடு ஆண் (HOMO SEX) உறவு கொள்ளும் பழக்கமுள்ளவன். ஃப்ரான்சின் மன்னன் பிலிப் அகஸ்டசுடனும், ரிச்சர்டின் மச்சினன் ஸான்சோ என்னும் சிறுவனுடனும் இயற்கைக்கு மாறான உறவு வைத்திருந்தான் என்று செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு ஆங்கில திரைப்படத்தில் இவன் காதல் கவர்ச்சி உள்ளவன் போல் பொய்யாகக் காட்டப்பட்டது. உண்மை அதுவல்ல. இவன் ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்திருந்தாலும் இவனின் தாய் மொழி ஃப்ரென்ச் ஆகும். தனது இளமை காலத்தை மத்திய ஃப்ரான்சிலுள்ள பாயிஸ்சர் என்ற இடத்தில் தனது தாயாரின் மாளிகையிலேயே கழித்தான். இவன் மன்னராக இருந்த பத்தாண்டு காலத்தில் இங்கிலாந்தில் ஏறக்குறைய ஆறு மாதகால அளவே தங்கினான். மூன்றுமாத காலத்திற்கு ஒரு முறையும், இரண்டு மாத காலத்திற்கு ஒரு முறையும் ஆக 160 நாட்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வெளிநாடு என்பதாலும், மாற்றுமொழி என்பதாலும் இங்கிலாந்தை வெறுத்தான். அதேபோல் மூன்றாவது சிலுவைப் போருக்கு இரக்கமில்லாமல் வரி வசூலித்ததால் மக்களும் இவனை வெறுத்தார்கள். இவனின் ராஜ எழுத்தாளர் ஹௌடனைச் சேர்ந்த ரோஜர் என்பவர், ரிச்சர்ட் தனது அரண் மனைகள், பட்டங்கள், அரசு அலுவலங்கள் என  அனைத்துப் பொருட்களையும் விற்று சிறந்த மிகப்பெரிய கப்பலை வாங்கினான். ஒரு கட்டத்தில் லண்டன் மாநகரை விற்பதற்குக் கூட தயாரானான். இவன் ஆட்சியிலே இங்கிலாந்து மக்கள் ஒருவர் கூட மகிழ்ச்சியாக இல்லை.
                                  சிலுவைப் போரின் போது ஹாப்ஸ்பர்கின் கொடியை வில்லியம் அக்ராவின் ஆற்றில் தூக்கி எறிந்த காரணத்தால் இவனுக்கும் ஆஸ்டிரியாவின் பிரபு லியோபோல்டுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால், சிலுவைப் போரிலிருந்து திரும்பும் போது ஜெர்மனியால் கைது செய்யப்பட்டு டிசம்பர் 1192 C.E.- ஃபிப்ரவரி 1194 C.E.  வரை சிறையில் இருந்தான். இவனை விடுவிக்க 50,000 (மூன்று மில்லியன் பவுண்டுகள்) மார்க்குகள் பணயத்தொகையாக நிர்ணயிக் கப்பட்டது. இதை இங்கிலாந்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களிடமிருந்து திடீர் வரியாக வசூலிக்கப்பட்டு செலுத்தப்பட்டது. இவன் ஆங்கிலத்தையும், ஆங்கிலேயர்களையும் வெறுத்த போதிலும், மொழியால் பிறப்பால் ஃப்ரென்சாக இருந்த போதிலும் இவனின் சிலை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அருகே உலகின் புகழ் பெற்ற கோதிக் தேவாலயத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. வரிகளை சூசகமாக வசூலிக்க வில்லியம் ரோவனைச் சேர்ந்த யூதர்களை முதல் முறையாக இங்கிலாந்துக்குள் நுழைய விட் டான். அவர்கள் லண்டன், நார்விச், கேண்டர்பரி, ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ், எக்ஸிடர், லின்கன், யோர்க் மற்றும் பல இடங்களில் 27 பகுதிகளில் பரவினார்கள். அவர்கள் மன்னரின் தனிப்பட்ட பணியாட்களாகவும், முக்கியமாக இராணுவத்திற்கு பொருளாதார உதவியளிப்பவர்களாகவும் செல்வாக்குடன் இருந்தனர். ரிச்சர்டின் முடிசூட்டு விழாவின் போது அவனுக்கு பரிசு கொடுப்பதற்காக சில யூதர்கள் தேவாலயத்தில் நுழைந்தனர். இதனால் பெரும் கலவரம் ஏற்பட்டு 30 யூதர்கள் கொல்லப்பட்டும் சில யூதர்களின் வீடுகள் தீயிட்டும் கொளுத்தப்பட்டன. 1190 C.E. ல் ரிச்சர்ட் மூன்றாவது சிலுவைப் போருக்கு கிளம்பிய பின் யோர்க் மற்றும் செயிண்ட் எட்மண்ட் என்ற இடங்களில் மீண்டும் ஆங்கிலேயர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. நார்மண்டியில் சீமான்களும், வியாபாரிகளும், மத குருக்களும் யூதர்களின் எஸ்டேட்கள் மூலம் வரும் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை யூதர்களிடமிருந்து வசூலித்துக் கொண்டனர். மேலும் யூதர்கள் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அரண்மனைகளையும், மடங்களையும், தேவாலயங்களையும் கட்ட பணம் கொடுத்தனர். இதில் பீட்டர்ஸ்பர்க், லின்கனின் தேவாலயங்கள், செயிண்ட் அல்பனின் மடம் மற்றும் ஒன்பது மடங்கள் அடங்கும். வில்லியமின் பேரன் ப்லோயின் ஸ்டீபன் ஆட்சியில் யூதர்களின் வீடுகள் வங்கிகளாகவும், பாதுகாப்பாளர்களின் இடங்களாகவும் இருந்தன. யூதர்களே லின்கனில் சாதாரண குடிமக்களில் முதல் முறையாக கற்களால் வீடு கட்டியவர்கள். 1290 C.E. ல் முதலாம் எட்வர்ட் யூதர்களை இங்கிலாந்தை விட்டு விரட்டி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தார். அவர்களின் இடங்களை ராஜ விசுவாசிகளும், இத்தாலியர்களும், தேவஆசீர் வழங்கப்பட்ட வங்கிகளும் எடுத்துக் கொண்டன. 
                              செஸ்டரைச் சேர்ந்த லியோஃப்ரிக் என்பவனின் மனைவி கோதிவா தன் கணவனிடம் மக்களிடமிருந்து அடாவடியாக வசூலிக்கும் வரியை உடனடியாக நிறுத்த வேண்டினாள். அதற்கு அவன் அவளை நிர்வாணமாக குதிரையின் மீது சந்தைப் பகுதியில் வலம் வந்தால் தான் வரி வசூலிப்பதை நிறுத்துவதாகக் கூறினான். மக்களின் வரிச் சுமையுடன் ப்ளேக் என்னும் நோயும் சேர்ந்து நிறைய உயிர்களை பலி வாங்கியது. மக்கள் யூதர்களையும், மதகுருமார்களையும் தீய சகுனமாக கருதினர். சிலர் யூதர்கள் தான் நோய் கிருமிகளை கிணற்றில் வீசி பரவச் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். இங்கிலாந்து மக்கள் தொகையிலும், முன்னேற்றத்திலும் மேற்குப் பகுதியில் குறிப்பாக ஃப்ரான்சை விட நன்றாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ப்ளேக் நோயின் மரணங்கள் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இத்தாலியை விட இங்கிலாந்தில் குறைந்து கொண்டு வந்தது. 1087 C.E. ல் தன் மூத்த மகன் ராபர்ட் கர்ட்ஹோஸுடனும், ஃப்ரான்ஸ் மன்னன் பிலிப்புடனும் சண்டைப் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது குதிரையிலிருந்து விழுந்து வில்லியம் மரணமடைந்தான். ராபர்ட் கர்ட் ஹோஸ் நார்மண்டியை தனக்கு தருவதாக வாக்களித்து பின் தரமறுத்த தன் தந்தை வில்லியம் மீது கோபமுடனே இருந்தான். ராபர்ட் தன் தந்தையின் மரணத்திற்காக கொஞ்சம் கூட கவலையோ, வருத்தமோ படாமல் ஃப்ரான்ஸ் மன்னனின் உதவியுடன் நார்மண்டியின் நகரங்களை சூறையாடியும், தீக்கிறையிட்டும், மக்களையும் கொன்று வெறியாட்டம் நடத்தினான். வில்லியமின் மரணத்தருவாயின் பாவமன்னிப்பு கலந்த உரை வலைத்தலங்களில் உள்ளன படித்துப்பாருங்கள். இவனின் மரணத்திற்குப் பிறகு இவனின் விசுவாசிகள் குதிரைகளில் ஏறி சொத்துக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளித்தனர். இவனின் பட்டம், பரிசுகள், போர்கருவிகள், நினைவுச்சின்னங்கள் இன்னபிற விலைமதிப்பில்லா பொருட்களை அள்ளிச் சென்று அவனின் இறந்த உடலை நிர்வாணமாக விட்டுச் சென்றனர். இவனின் உடலடக்கம் மிகவும் கேவலமாக நடந்ததாக காலம் குறிப்பிடுகின்றது. இவனின் இறந்த உடலருகே இருந்த இரண்டு காவலர்கள் அழுகிய உடலின் நோய்களால் தாக்கப்பட்டு இறந்து போயினர். வில்லியமின் இறந்த உடலருகே நின்று ஒருவன் இவன் மடங்களின் நிலங்களைக் கொள்ளையடித்தவன் இவனை இங்கே ‘கேயன்’ பகுதியில் புதைக்கக்கூடாது என்று கத்தினான். அவனுக்கு பணம் கொடுத்து கத்தாமல் இருக்கச் செய்தனர். இவனின் உடல் துர்நாற்றத்தினாலும், சிதைந்தும் கனத்ததால் துறவிகளாலும், கொத்தனார்களாலும் வன்முறையான வழியில் அடக்கம் செய்யப்பட்டது. தேவாலயமும், கூடியிருந்தவர்களும் அருவருப்புடனே சடங்கில் கலந்து கொண்டனர். மன்னன் பிலிப், இங்கிலாந்தின் செல்வத்தை உண்டதால் இறந்த உடலின் வயிறு வீங்கி கர்ப்பவதியைப் போல் இருந்தது என்று சொன்னான். டிசம்பர் 24, 1998 ல் பி.பி.சி. ரேடியோ 4 ல் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரும், ஹீப்ருவை தாய் மொழியாகக் கொண்டவருமான கார்டினல் பாஸில் ஹுயூம் வில்லியம் ‘மேன் ஆஃப் தி மில்லினியம்’ என்று புகழுரைத்தான். ஆனால், இரண்டு பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்கள் அதனை மறுத்தனர். உலகில் கிறிஸ்துவத்தைத் தவிர இரத்த வெறி பிடித்தவர்கள் சரித்திரத்தில் காணப்படவில்லை.
                                     இங்கிலாந்தின் ஆட்சிமுறை குடும்ப பாரம்பரியத்தின் வழியே நடைபெறும். எது எப்படியிருந்தாலும் குடும்ப உறவுகள் தொடர்சங்கிலி போல் இருக்கும். சில பெயர்களை சந்ததிகளில் விடுபடாமல் தொடர்வார்கள். உதாரணத்திற்கு வில்லியம், சார்லஸ், ஹென்றி, ரிச்சர்ட் போன்ற பெயர்கள். இங்கிலாந்தின் ராஜ குடும்ப பாரம்பரியம் மக்களின் வருமானத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. நகைப்பில்லை ராஜவம்சத்தின் சொகுசுக் கப்பலின் மதிப்பு மட்டும் 100 மில்லியன் பவுண்டுகள். அதைப் பாதுகாப்பதற்கு மட்டும் 20 லிருந்து 25 மில்லியன் பவுண்டுகள் ஆண்டுக்கு செலவாகிறது. மற்ற அனைத்து ஐரோப்பிய ராஜவம்சத்தினரை விட இது இரு மடங்கு அதிகம். தேவாலயங்கள், ராஜ குடும்பம் இரண்டு மட்டுமே என்றைக்குமே இங்கிலாந்தின் மிகப்பெரிய நிலப்பரப்புகளின் உரிமையாளர்கள். இது பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து மிக நுண்ணியமாக சூழ்ச்சிகரமாக பின்னப்பட்ட ராஜதந்திர வலை. ஜனவரி 27, 2000 ல் நிகோலஸ் டிம்மின்ஸ் என்பவர் லண்டன் ஃபைனான்ஷியல் டைம்ஸின் 7 ம் பக்கத்தில் பிரிட்டனின் பாதி மக்களிடம் வெறும் 7% சதவீத சந்தை மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதென்றும், வெறும் 1% சதவிகித உயர்குடி மக்களிடம் 20% சதவீத சொத்து உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றும் இங்கிலாந்தில் பல துறைகளில் ராஜகுடும்பத்தின் ஊடுருவலும், தடைகளும் உள்ளன.
கல்வி
பணம் செலுத்திப் படிக்கும் தனியார் பள்ளிகள், ஆக்ஸ்பிரிட்ஜ் பட்டப்படிப்பு பயின்றவர்கள் மட்டுமே அரசாங்கம், இராணுவம், தொழில்துறை, விளம்பரத்துறைகளில் உயர் பதவிக்குச் செல்ல முடியும். ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் B.A. பட்டம் பெற்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தானாகவே ஆக்ஸ் பிரிட்ஜின் M.A. பட்டம் கிடைக்கும். 1999 ல் லண்டன் ஃப்னான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கையில் மைக்கேல் ப்ரோவ்சி என்பவர், பிரிட்டனின் 100 பள்ளிகளில் 90 பள்ளிகள் பணம் செலுத்திப் படிக்கும் தனியார் பள்ளிகள், இதில் மாணவர்களில் 7% சதவீதம் மட்டுமே படிக்கின்றனர். இதன் தரம் மற்ற முன்னேறிய ஜனநாயக நாடுகளை விட மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட தனியார் பள்ளியில் பயின்றவர்கள் மட்டுமே சட்டம், மருத்துவத் துறை இன்னபிற முண்ணனித் துறைகளில் சமூகத்தில் வேலை கிடைக்கப் பெறுகிறார்கள். இந்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மேல் வர்க்கத்தினரின் பங்கில் இயங்குகின்றன.
இராணுவம்
இராணுவத்தில் பதவிகள், பயிற்சி, உணவு, உறக்கம் இவைகள் தனியாக இயங்குகின்றன. ஒருமுறை வியாபார நிர்வாகத்தின் ஜாம்பவான், ஜான் ஹார்வி ஸ்மித் போஸ்னிய போரின் போது அட்ரியாடிக் கடலில் ராயல் நேவி விமானத்தைப் பார்வையிடச் சென்று, அதிர்ச்சியடைந்தார். வெறும் ஒரு சில எண்ணிக்கையிலான ஹாரியர் ஜம்ப் ஜெட் விமானங்களை கையாள 1600 நபர்கள் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். அதுவும் வெவ்வேறு அதிகாரிகளுக்கென தனிப்பட்ட உணவு விடுதிகளும் இருந்தன. இந்த குடும்ப அரசுப் பாரம்பரிய வழிமுறையில் 1914-1918 ல் நடந்த மாபெரும் ஐரோப்பியப் போரில் பலதரப்பட்ட உயரதிகாரிகள் லட்சக்கணக்கான இளைஞர்களை முன்னிலைப்படுத்தி போரில் இறக்கச் செய்தார்கள். இவர்கள் கையில் வொயின் கிளாசும், சுருட்டும் புகைத்துக் கொண்டு, பயனளிக்காத உத்தரவுகளைப் பிறப்பித்து இளைய தலைமுறையினரை கால்நடைத் தீவனங்கள் போல் பயன்படுத்திக் கொண்டனர். ஐரோப்பாவின் பாதிக்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினரை சாகடித்து, இரண்டரை லட்சம் பேரைக் காயப்படுத்தி, அதிகமானவர்களை நிரந்தர ஊனமாக்கினார்கள்.
நிர்வாகம்
மக்களுக்கான நிர்வாகம் என்பதில் உயர்பதவியில் வயதான மதவெறி பிடித்தவர்களும், காமத்தில் திளைப்பவர்களுமே இருந்தனர்.
அரசியல் 
ஹவுஸ் ஆஃப் லார்ட் என்பதில் தேர்தல் முறை இல்லாமலே அறிவுஜீவிகளையும், மடாதிபதிகளையும், சீமான்களையும் பதவியில் அமர்த்துவார்கள். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்பது மக்களுக்காக மதவெறி கலந்த பார்லிமெண்ட் என்ற அமைப்பு. உலகின் பணக்காரப்பெண் இங்கிலாந்தின் ராணி. பல நூற்றாண்டுகளின் பழக்க தோஷத்தில் வருடத்திற்கு எட்டு மில்லியன் பவுண்டுகளை வரிமூலமாக கொடுக்கிறார் கள்.
கௌரவம்
கௌரவம் என்பது வில்லியம் பிரபு தனது நம்பிக்கையானவர்களுக்கு கொடுத்த நிலப்பரப்பின் எண்ணிக்கையை வைத்தே கொடுக்கப்படுகிறது. அதில் துரோகியான அந்தோனி ப்ளண்ட் என்பவன் நிறைய கௌரவம் பெற்றவன். சில சமயம் பட்டங்களும், எஸ்டேட்களும் சீமான்களிடமும், கூட்டாளிகளிடமும் வாங்கிக் கொள்ள சில ஐரோப்பிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டன. இங்கிலாந்தின் காட்டுமிராண்டித்தனமான காலனியிஸத்தை பக்கத்து நாடான ஸ்காட்லாந்தில் 13 ம் நூற்றாண்டில் நடந்ததாக “ப்ரேவ் ஹார்ட்” என்னும் திரைப்படத்தில் காட்டியிருப்பார்கள். எனினும் இதன் கதாபாத்திரம் ஸர். வில்லியம் வால்லஸ் மூலம் அடிமைத்தனத்தை தான் காட்டியதாகவும் ஜுடாயிஸத்தை அல்ல என்று அதன் கதாநாயகன் மேல் ஜிப்சன் சொன்னார்.
கலை/கௌரவம்
பொது மக்களிடம் லாட்டரி டிக்கெட்டுகள் மூலம் வசூலாகும் பணம் ராஜ குடும்பத்தினரின் ‘ஓப்பரா’ களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் உயர்வான ‘ஸர்’ பட்டம் வழங்கப்பட்டது. ஷான் கேனரி (சீன் கானரி), ஸர். கெல்டாஃப், ஸர். ரிச்சர்ட் ப்ரான்சன் என்று பட்டங்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டு
விளையாட்டுகள் தகுதிக்கேற்றவாறு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஃபுட்பால் பெரும்பான்மையானவர்களுக்கும், டென்னிஸ், கோல்ஃப் மத்தியதர மக்களுக்கும், போலோ மற்றும் அஸ்காட் என்னும் குதிரை விளையாட்டு ராஜ வகுப்பினர்களுக்கு மட்டும். ராஜ குடும்பத்தினர் ஃபுட்பால் மற்றும் டென்னிஸின் இறுதிப் போட்டியில் மட்டும் பரிசளிக்க கலந்து கொள்வர். இங்கிலாந்தின் ஆங்கிலம் பேசும் வம்சாவழியினர் மற்றும் புதிய காலனி நாடுகள் கிரிக்கெட் விளையாடுவார்கள். 
                                  வருடம் 1066 ன் முக்கியத்துவத்தைப் பார்த்தீர்கள் அல்லவா?. இதை இன்றுவரை மறக்காமல் இருப்பதற்காக தொடர்ந்து அந்த இரத்தவெறியை கடைபிடிக்க, 66 என்பதை டி-ஷர்ட், தெருக்களின் பெயர், ரூட்66 என்று செண்ட், விளையாட்டுக் குழுக்களின் பெயர் என்று நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளின் எந்த வகையான மோனோக்ராமாக இருந்தாலும் பல கோணங்களில் உன்னிப்பாக கவனியுங்கள். உங்களுக்கே புரியும். இந்த ராஜபரம்பரையிலான ஆட்சிமுறை இந்தியாவில் 300 மில்லியன் மக்களை வெறும் இரண்டு லட்சம் பிரிட்டிஷார்கள் 600 ஆள்காட்டி இந்தியக் கூட்டாளிகளுடன் ஆண்டு காட்டினார்கள்.                               

விதைத்தவர்கள் 4

 ஆங்கிலோ ஸாக்சன் இங்கிலாந்தில் பெண்கள் உயர்தரத்தில் நடத்தப்பட்டனர். அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிலங்களை விற்கலாம் வாங்கலாம். நார்மன்களின் கீழ் பெண்களை கடுமையாக கையாள்வதிலிருந்து, பெண்கள் ஆணுக்கு நிகராகவும் கருதப்பட்டனர். கீழ் தரமான நிலையிலிருந்த பெண்களின் நிலை எதிர்ப்பின்றி செயிண்ட் பாலின் நிபந்தனைப்படி, செயிண்ட் அகஸ்டின் மற்றும் முன்பிருந்த தேவாலய பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆதி கிறிஸ்தவர்கள் பெண்களை ‘சைத்தானின் வழிமுறைகள்’, ‘கழிவு நீரின் மேல் கட்டப்பட்ட கோவில்’ என்று எழுதி வைத்திருந்தனர். செயிண்ட் ஜான் க்ரைஸோடம் என்பவன் பெண்களை இரத்தம், பித்தநீர், கீழ்வாதம், செறிமானமான உணவின் நீர்ப்பாகம் என்று கேவலமாக குறிப்பிட்டான். ஃப்ரென்ச் மேதாவி பெர்ட்ராண்ட் டு கூவெஸ்லின் ‘ஒரு ஆட்டை விட அதிகமான அறிவு பெண்ணுக்கில்லை’ என்றான். ஆனால் இறுதி தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் சமமாக உணவளித்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள், அவர்கள் அன்பெனும் ஆடையணிந்தவர்கள், ஆணுக்கு உதவி புரிந்து, இணையாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று உயரிய கருத்தை சொன்னார்கள்.
                                    ஐரோப்பிய வரலாற்றில் இங்கிலாந்தின் தோல்வியைப் போல் ஒன்று நிகழவில்லை. பெரும்பான்மையான சொந்த மக்களை சொந்த நாட்டில் பத்திலிருந்து, இருபது லட்சம் மக்களை வெறும் பனிரெண்டாயிரம் வெளிநாட்டினர் அடக்கி ஆண்டனர்.  (இதே ஃபார்முலா தான் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு ஆரியர்களால் கையாளப்படுகிறது. காரணம் இங்கு மண்ணுக்கு சொந்தமான திராவிடம் என்னும் இனம் பின் தள்ளப்பட்டு, நாமெல்லாம் இந்து என்னும் மதம் முன்னிலைப் படுத்தப்படுகிறது. ஒருநாள் இந்திய கிறிஸ்தவர்கள், தலித்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் என்று ஆரியர்களால் வெறும் வார்த்தையில் மட்டுமே சொல்லப்படும் மக்களும் இனத்தைக் கையில் எடுப்பார்கள்.) இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து ஃப்ரான்சின் காலனியாக்கப்பட்டு நார்மண்டிகள் வசமும், நார்மன்கள் ஃப்ரென்ச் மன்னர்களுக்கு கட்டுப்படுவதும், ஃப்ரென்ச் மன்னர்கள் போப்களுக்கு கட்டுப்படுவதுமாக இருந்தனர். நார்மன் ஆட்சியாளர்கள் வெகு சில ஆண்டுகளே இங்கிலாந்தில் இருந்தனர். ஏனென்றால் ஃப்ரென்சின் பிரபு, தேசங்களை ஒப்பிட்டு இங்கிலாந்தை சாதாரண பகுதியாகவே எண்ணினார். வில்லியம் பிரபு புதிய பிரதேசத்தில் மொழியைக் கற்றுக் கொள்வது பற்றி கவலைப்படவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஃப்ரென்ச் மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் தாய் மொழியான ஃப்ரென்சையே பேசினர்.
கீழ் காணும் ஆங்கில வார்த்தைகள் ஃப்ரென்சிலிருந்தே வந்தன:
நிர்வாகம் - அட்மினிஸ்ட்ரேஷன், லா, க்ரவுன், பார்லிமெண்ட் (பார்லெர்), ரீன், ராயல், ஸ்டேட், சிட்டி, கவுன்சில், கோர்ட், எவிடன்ஸ், ஃபைன், ஃப்ராட், கோல்(GOAL), ப்ரிசன், ஆல்ஸோ, எம்பெஸ்ல், ஜட்ஜ், ஜூரி, லார்செனி, லீஸ், பெர்ஜூரி.
உடைகள் – ஏப்ரான், பான்னட், பூட், ப்ரூச், செயின், காலர், ஜாக்கெட், ஜ்வெல், லேஸ், ஆர்னமெண்ட், பெட்டிகோட்
குடும்பம் – ஆண்டி, கசின், நெப்யூ, நீஸ், அங்கிள்
உணவு – பீஃப், மட்டன், பேட்ரிட்ஜ், பீசண்ட், பைஜீன், பவுல்ட்ரி, சுகர், ட்ரைப், வீல், டின்னர், ஃபீஸ்ட், சப்பர், டேட், ஃபிக், க்ரேப், லெமன், ஆரஞ்ச், ரைஸின், ஃப்ளார், ஆயில்
வீடு – சேம்பர், பேன்ட்ரி, ப்ளாங்கெட், கர்டன், குஷன், க்வில்ட், டவல், சேர், ட்ரெஸ்ஸர், வார்ட்ரோப்
இராணுவம் – ஆர்மி, பேட்டிள், கார்ட், நேவி, பீஸ், ஸோல்ஜர், ஸ்பை, கேப்டன், லியூடெனண்ட்
பதவி – க்ளெர்க், ட்யூக், ஃபார்மர், மாஸ்டர், மிஸ்ட்ரெஸ், ப்ரின்ஸ், செர்வண்ட், சர்
மதம் – அப்பே, கன்வெண்ட், லெசன், மெர்சி, பார்சன், பிட்டி, ப்ரேயர், ப்ரீசர், செயிண்ட், செர்மன், வைசார்
பெயர்கள் – வில்லியம் (கில்லியம்-GUILLIAME), ராபர்ட், ரிச்சர்ட், நார்மன், ஹென்றி, சார்லஸ்
பொருளாதாரம் – ஸ்டெர்லிங்க் (ஃப்ரென்ச் வார்த்தை ‘எஸ்டெர்லின்-ESTERLIN’) இதன் பொருள் லிட்டில் ஸ்டார் என்பதாகும். இங்கிலாந்து நாணயம் பென்னிக்களில் காணப்படும் சின்னம் நார்மண்டியில் உருக்கப்பட்டது.
மேலும் சில – டஸன், ஃப்ளவர், க்ரீஸ், ஹவர், லிட்டெர், மோர், பாஸ்சர், பீப்பிள், பெர்சன், பாக்கெட், க்வாரி, க்வார்ட், க்வார்டர், ரீன், ஸெகண்ட், ஸ்க்யூரல், ஸ்டால்லியன், ஸ்ட்ரேஞ்சர், டெய்லர், ட்யூன் இன்னும் பல வார்த்தைகள் உள்ளன.
மேற்ச் சொன்னவை பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளவை. ஒரு சில படித்த ஆங்கிலேயர்கள் மட்டும் தாய் மொழியுடன் சரளமாக ஃப்ரென்சும், லத்தீன் மொழியும் பேசக் கூடியவர்களாக இருந்தனர். ஃப்ரென்சும், லத்தீனும் பேசக் கூடியவர்கள் உயர் வகுப்பினராக கருதப்பட்டனர். முதலாம் எட்வர்ட் மற்றும் மூன்றாம் ஹென்றியின் (லயன் ஹார்ட்ஸ் ரிச்சர்டின் உறவினன்) ஆட்சியின் போது ஃப்ரென்ச் அதிகார பூர்வமான ஆட்சி மொழியாகியது. மதபோதகர்களும், அறிவுஜீவிகளும் சர்வதேச தேவாலயங்களின் மொழியாக இருந்த காரணத்தால் லத்தீன் மொழியையே பயன்படுத்தினர். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிரபலமான ஃப்ரென்ச் பிரமுகர்கள் தாமஸ் பெக்கெட், மேக்னா கார்டா போன்றோரின் கொலைக்குப் பிறகு மெதுவாக ஆங்கிலம் அரசியல் மொழி ஆகியது. பெரும்பான்மையான ஆங்கிலோ சாக்ஸன்களின் தாய்மொழி ஆர்வத்தால் ஆங்கிலம் கீழ்தர மக்களின் மொழியாகியது. ஆங்கிலம் பேசுபவர்கள் அடிமைகளாகக் கருதப்பட்டனர். கேண்டர் பரியின் ஆர்ச்பிஷப் லான்ஃப்ராங்க் இரண்டாம் போப் அலெக்ஸாண்டருக்கு எழுதிய கடிதத்தில் ஆங்கிலம் பேசியவர்களை ‘காட்டுமிராண்டி மக்கள்’ என்று குறிப்பிட்டார்.
                                    கொஞ்சம் கொஞ்சமாக லண்டன், நார்விச், பிரிஸ்டால் மற்றும் இதர நகரங்களில் ஆங்கிலம் வியாபார மொழியாகி சமூக அந்தஸ்தைப் பெற்றது. டுயூடர் காலத்தில் புகழ்பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் காவிய நாடகம் எழுதும் வரை சிறப்புப் பெற்றது. 1066 C.E. க்குப் பிறகு, ரோமின் தேவாலயம் பிரிட்டிஷ் அரசியலில் ஆர்வம் காட்டியது. நார்மன்களின் போர் பிரிட்டிஷை இராணுவ கிறிஸ்தவ மத நாடாகவே மாற்றியது. இது சாக்ஸன் தேவாலயத்தின் கட்டாயமான, தீவிரமான மத மறு மாற்றத்தாலும், முன்பு குறிப்பிட்ட மிருகத்தனமான வெறியாட்டத்தாலும் சாத்தியமானது. பெரும்பான்மையான ஆங்கில தேவாலயங்கள் நார்மன்களாலும், ஃப்ரென்ச் மடங்களாலும் கைப்பற்றப்பட்டன. 1086 C.E. ல் ஏறக்குறைய இருபது தேவாலயங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகள் செஸ்டர், டெவ்கெஸ்பரி, எவிஷம் போன்ற ஃப்ரென்ச் மடங்களுடன் இணைக்கப்பட்டன. பனிரெண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் க்ளாஸ்டன்பரியின் மடாதிபதியாக ப்ளோயிசின் நார்மன் ஹென்றி இருந்தான். எவிஷாமிலும் நார்மன் ஒருவனே மடாதிபதியாக இருந்தான். 1070 C.E. ல் தனது எழுபதாவது வயதில் கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்பின் இருந்த லான் ஃப்ரான்க் சிறந்த அறிவாற்றலால் பிரிட்டிஷ் தேவாலயங்களை நார்மன் தேவாலயங்களாக மாற்றினான். எல்லா ஆங்கில தேவா லயங்களையும் பிஷப்புகளுக்கு கட்டுப்படுவதாக எழுத்து பூர்வமாக நிர்பந்திக்க வைத்தான். லான்ஃப்ரா ன்க் வில்லியம் பிரபுவுக்கு தன் முழு ஒத்துழைப்பையும் தந்து, எல்லா ஆங்கில பிஷப்புகளையும், மடாதிபதிகளையும் நீக்கிவிட்டு, பதிலுக்கு நார்மன்களையும், மற்ற கண்டங்களைச் சேர்ந்தவர்களையும் அந்த பதவிக்குகளுக்கு நியமித்தான். 1070 C.E. ல் இங்கிலாந்திலும், நார்மண்டியிலும் ஏறக்குறைய அந்த பதவிகளில் இருந்தவர்கள் வில்லியம் பிரபுவுக்கு நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருந்தார்கள். இங்கிலாந்து வெளிநாட்டவர்கள் தங்கும் நாடாகவும், வெளிநாட்டவர்களின் சொத்தாகவே இருந்து அதன் வளங்களை சுரண்டினர். பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் மடாதிபதிகளும், பிஷப்புகளும் பணிப்பெண்களை வைத்துக்கொண்டனர். அவர்களுக்குள் இயற்கைக்கு மாறான உறவுகளும், ஒரே இன உறவுகளும், கன்னி சந்நியாசி பெண்களுக்குள் லெஸ்பியன் (பெண்ணுடன் பெண்) உறவுகளும் சகஜமாக இருந்தன. இவைகளுக்கு வெளிப்படையாக கடும்தண்டனை இருந்தாலும், உள்ளுக்குள் மூடி மறைக்கப்பட்டன. இந்த கண்றாவிகளை சில சமயம் ஹாலிவுட் திரைப்படங்களிலும் காட்டியுள்ளனர். 1086 C.E. ல் ஆர்டெனின் துர்கில், லின்கனின் கோல்ஸ்வீன் என்ற இரு செல்வந்தர்களைத் தவிர இங்கிலாந்திலிருந்து ஏறக்குறைய 4000 செல்வந்தர்கள் 200 நார்மன் சீமான்களால் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிறந்த சீமான்களாக மோர்டைனின் ராபர்டும், வில்லியம் பிரபுவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனும் ஆவர். இதனால் உண்மையான குடிமக்கள் வரியை செல்வப்பிரபுக்களுக்கும், செல்வப்பிரபுக்கள் வரியை மன்னருக்கும், மன்னர் ஆண்டு காணிக்கையாக ஆசீர்வாதம் அருளும் தேவாலயங்களுக்கும் வழங்கினர். இந்த தேவாலய காணிக்கைக்குப் பெயர் ‘பீட்டர்ஸ் பென்ஸ்’ என்று வழங்கப்பட்டது. இதனால் இங்கிலாந்தின் செல்வம் ஆசீர்வாதம் வழங்குவதன் பேரில் சுலபமாக ஐரோப்பாவுக்குள் நுழைந்தது.
                                      இந்த பொருளாதாரம் நார்மண்டிகளின் இராணுவ சேவைக்கு பயன் படுத்தப்பட்டது. இது நார்மண்டிகளின் சக்திவாய்ந்த மத சார்புள்ள இராணுவமாக அமைந்தது. மேலும் ஆங்கிலேயர்களை ஃப்ரான்சின் சண்டைகளுக்கும், சிலுவைப்போருக்கும் பயன் படுத்திக் கொண்டது. இந்த மதப்போர்வை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், பொது எதிரியான இஸ்லாத்தின் மீது சிலுவைப்போர் மூலமாக சண்டையிட வைத்தது. பதிமூன்றாம் நூற்றாண்டின் உண்மையான ஸ்காட் லாந்த், இங்கிலாந்தின் அடிமை அவலங்களை மெல் ஜிப்சன் என்னும் நடிகரால் நடிக்கப்பட்டு ‘ப்ரேவ் ஹார்ட்’ என்னும் ஹாலிவுட் திரைப்படமாகக் கூட எடுத்துக் காட்டினார்கள்.
                                                                                     1085 C.E. ல் க்ளூசெஸ்டரின் கிறிஸ்தவக் கூட்டத்தில் வில்லியம் புதிய வரித்திட்டத்தை அறிமுகப்படுத்தினான். இங்கிலாந்தில் பணக்காரராகவும், சொத்துடனும், வசதியுடனும், மதிப்புடனும் இருப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் ஒரு எருதுவோ, பசுவோ, பன்றியோ விடுபட விடவில்லை. பயங்கரமான சட்டதிட்டங்களுடன், உலக இறுதி நாள் வரை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு புத்தகம் இரண்டு பாகமாக வெளியிடப்பட்டது. இது கிறிஸ்தவர்களிடையே தீர்ப்புநாள் (DOOMS DAY/DOMESDAY) என்று மிகவும் பிரபலமானது இதிலுள்ள எந்தவொரு சட்டத்திற்கும் மேல்முறையீடு இல்லை. முழுக்க முழுக்க லத்தீன் மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த புத்தகம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆங்கிலத்தில் காணப்படவில்லை. ஆங்கிலேயர்கள் இன்றும் கூட உண்மையான மத விஷயங்களுக்கு இந்த புத்தகத்தை கையாள விரும்புவதில்லை. இது திருக்குர்ஆன், பைபிள் போன்ற புனித நூல்களுடன் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. படிப்பறிவில்லாத வில்லியம் இந்த புத்தகத்தை என்றுமே படித்ததில்லை, அந்த புத்தகத்திற்கு சிலுவையோடு கையொப்பம் இட்டதோடு சரி. நம்புங்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் 13,418 இடங்கள் இந்த வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இங்கிலாந்தின் மீது விதிக்கப்பட்ட இந்த புதிய வரிக் கொள்கையால் வசூலிக்கப்பட்ட தொகை உள்நாட்டு, வெளிநாட்டு தேவாலயங் களுக்கும், அதன் நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டது. இதனால் தேவாலயங்கள் பெருவாரியான நிலங்களின் உரிமையாளராகி, மிகவும் பணச்செல்வாக்கும், சக்தியும் பெற்று அரசியலிலும், அரசாங்கத்திலும் தலையிடும் அதிகாரம் பெற்றது. மடாதிபதிகளும், பிஷப்புகளும் கொடுமைக்கார சீமான்களைப் போல் செயல்பட்டு, நிலங்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு குத்தகைக்கு விட்டனர். 1086 C.E. ல் தேவாலயங்கள் இங்கிலாந்தில் மேலும் ஐந்து சதவிகித நிலங்களை கைப்பற்றின. காரணம், பிஷப்புகள் சீமான்களாகவும், சீமான்கள் பிஷப்புகளாகவும் இருந்தனர்.
                                   வொர்செஸ்டரின் பிஷப் ஸ்ராட்ஃபோர்டையும், செஸ்டரின் சீமான்கள் ஸ்டாக்போர்ட், சால்ஃபோர்ட்களையும் உருவாக்கினர். கோவென்ட்ரி நகரத்தை உள்ளூர் தீயவர்களும், நிலச் சீமான்களும் பிரித்துக் கட்டுப்படுத்தினர். 1066 C.E. லிருந்து 1130 C.E. வரை வேல்ஸில் உருவான பதினெட்டு நகரங்கள் இல்லாமல், இங்கிலாந்தில் நாற்பது புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டன. 1191 C.E. லிருந்து 1230 C.E. வரை மேலும் ஐம்பது புதிய நகரங்களுக்குத் திட்டமிடப்பட்டன. 1066 ல் ஐம்பது மதக்கூடங்களும் ஆயிரம் துறவிகள், கன்னியாஸ்திரிகள் இருந்தனர். 1216 ல் ஏறக்குறைய எழுநூறு மதக்கூடங்களும், 13,000 துறவிகள், கன்னியாஸ்திரிகள், மதஅதிகாரிகள், பெண் மதஅதிகாரிகள் இருந்தனர். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, 900 மதக்கூடங்களும், 17,500 துறவிகள், கன்னியாஸ்திரிகள், மதஅதிகாரிகள், பெண் மதஅதிகாரிகள் இருந்தனர். 1147 ல் 13 பெரிய மதக்கூடங்கள் ஃப்ரென்சுக்களால் அமைக்கப்பட்டன. அவைகள் பெனெடிக்டின் உத்தரவில் இயங்கின. இந்த மடங்கள் பெயர் பெற்ற யூத பணக்கடன் வழங்குபவரான லின்கனைச் சேர்ந்த ஆரோன் என்பவரிடம் கடன் பெற்று சொத்து விஸ்தரிப்பிலும், ஆட்டுப் பண்ணை அமைப்பதிலும், கம்பளி ஏற்றுமதியிலும் முதலீடு செய்தனர். இங்கிலாந்தில் திட்டமிட்டு, சூறையாடப்பட்ட நிலங்கள் டூம்ஸ் டே புத்தகத்தின் படி 35 பாகமாகப் பிரிக்கப்பட்டு மடாதிபதிகள், பிஷப்புகள் 26% சதவீதமும், மன்னருக்கும், அவர் குடும்பத்தினருக்கு 17% சதவீதமும், முண்ணனி சீமான்கள் 12% சதவீதமும் பிரித்து ஏறக்குறைய பாதி இங்கிலாந்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் வில்லியமின் உறவினர்கள். இங்கிலாந்தின் வளம் ஐரோப்பாவில் குவிந்தது. 1087 C.E. ல் வில்லியம் தனது மரணப் படுக்கையில், “இங்கிலாந்து மக்களை வெட்டி துன்புறுத்தி சகிக்க முடியாத வகையில் கொடுமைப்படுத்தினேன். எனது காரியத்தில் அவர்களிடம் நீதியின்றியும், காட்டுமிராண்டித்தனமாகவும் பெருவாரியானவர்களை கொன்று குவித் தேன். கடவுள் என் பாவங்களுக்காக என்னை மன்னிப்பானாக” என்று வருத்தப்பட்டான்.
                                    வில்லியம் ஃப்ரான்சில் நார்மண்டியின் பிரபுவாகவும், இங்கிலாந்தில் மன்னனாகவும் இரண்டு பதவிகளில் இருந்தான். இவனது இறப்பிற்குப் பிறகு, இவனது ஆட்சி பிளவுபட்டு மூத்த மகன் ராபர்ட் கர்ட்ஹோஸ் நார்மண்டியின் பிரபுவாகவும், இரண்டாவது மகன் ருஃபுஸ் (இரண்டாம் வில்லியமாக அறியப்பட்டவன்) இங்கிலாந்தின் புதிய மன்னனாகவும் (1087 C.E.-1100 C.E.) ஆகினர். ராபர்ட் கர்ட்ஹோஸ் முதல் சிலுவைப் போரின் செலவினங்களுக்காக 1096 C.E. யில் லயன் ஹார்ட் ரிச்சர்டுக்கு ஏறக்குறைய 150,000 மார்க்குகள் பணம் செலுத்த வேண்டி இருந்தது. அதனால், ராபர்ட் கர்ட்ஹோஸ் நார்மண்டியை சகோதரன் ருஃபூஸிடம் 10,000 மார்க் பணத்திற்கு அடமானம் வைத்தான். சிலுவைப் போருக்கு போகும் வழியில் லூக்கா என்னுமிடத்தில் இரண்டாம் போப் அர்பனை ராபர்ட் கர்ட்ஹோஸ் சந்தித்தான். ருஃபூஸிடம் அடமானப் பணம் கொடுக்க வசதி இல்லை. அவன் இங்கிலாந்து முழுவதும் காரணமில்லாமல் ஒரு வரியை வசூலிக்கச் செய்தான். மடாதிபதிகளும், சீமான்களும் எந்த காரணம் சொல்லியும் வரி வசூலிக்க முடியாது என்று ருஃபூஸிடம் முறையிட்டனர். அதற்கு அவன் ‘இறந்தவர்களின் எலும்புகளைப் போல் தங்கமும், வெள்ளியும் சேர்க்க முடியவில்லையா’? என்று கேட்டான். அவனின் புத்திசாலிகள் மடாதிபதிகள், சீமான்களிடம் நீங்கள் ஏழைகளுக்கு ஆதரவாய் இருப்பதிலிருந்து மன்னரின் கருவூலத்தை நிரப்ப வழி காணுங்கள் என்று சொல்லி அனுப்பினர். சிலுவைப் போருக்கான வசூல் தேவாலயங்களுக்கு நல்ல லாபகரமாகவே இருந்தது. மக்கள் தங்கள் நிலங்களை குத்தகைக்கோ, அடமானத்திற்கோ தேவாலயங்களிடமே ஒப்படைத்தனர். ருஃபூஸ் ஒரு கிறிஸ்தவனாக இருக்கவில்லை. அவன் நாஸ்திகனாக கடவுள் மறுப்பாளனாக இருந்து, அறிவுஜீவிகளுக்கு அதிர்ச்சியளித்து அபச்சாரமாக கருதச்செய்தான். இயற்கைக்கு மாறான இன்ப உறவுப் பழக்கங்களையும் வைத்திருந்தான்.
          

விதைத்தவர்கள் 3

  பவியாவில் சிவில் சட்டம் பயின்ற பிறகு, லான்ஃப்ரான்க் நார்மண்டிக்கு சென்று 1039 C.E. ல் அவ்ரன்செஸ் பகுதியில் பள்ளி ஒன்றைத் துவங்கினார். அங்கு அவர் 1042 C.E. வரை பயிற்றுவித்து விட்டு ரோவனுக்கு அருகில் பெனடிக்ட் எனப்படும் சந்நியாசிகள் மடத்திற்குள் நுழைந்தார். 1045 C.E. ல் லான் ஃப்ரான்க் அங்கு மடாதிபதி ஆனார். அங்கும் ஒரு பள்ளியை நிறுவி ஐரோப்பா முழுவதும் புகழ் பெறச்செய் தார். லான்ஃப்ரான்க் பெக் என்ற இடத்திலிருந்த ஒரு மடத்தை ஐரோப்பாவின் புகழ்பெற்ற சந்நியாசிகள் வசிக்கும் மடமாக ஆக்கினார். பெக் மடத்திலிருந்து பெரும்பாலும் தத்துவவாதிகளே தயாராகினர். சில குறிப்பிட்ட நபர்களையும் தயார்படுத்தினார். ஒருவர் போப் ஸ்தானத்திற்கும், மற்ற மூவர் 1066 C.E. ல் நார்மன் போருக்குப் பின் முண்ணனி தேவாலய நிர்வாகிகளாகவும் ஆனார்கள். இங்கு பயிற்சி பெற்று புகழடைந்த மேலும் சிலராவது :
•    லான்ஃப்ரான்க் – நார்மண்டியின் வில்லியம் பிரபுவின் ஆலோசகர். நார்மன்களின் இங்கிலாந்து போருக்கு பிறகு, கேண்டர்பரியின் முதல் நார்மன் ஆர்ச் பிஷப் ஆவர். ஐரோப்பாவின் சிறந்த அறிவாளியாகச் செயல்பட்டார்.
•    லூக்காவின் ஆன்ஸெல்ம் – இவர் பின்னாளில் இரண்டாம் போப் அலெக்ஸாண்டர் ஆனார். இவரே ஸ்பெயின் கிறிஸ்தவர்களை முஸ்லீம்களுக்கு எதிராக போர் செய்ய அனுமதி அளித்தார். வட ஐரோப்பாவின் இளவரசர்களை ஐபீரிய தீபகற்பத்தின் மீது சிலுவைப் போர் செய்ய உத்தரவிட்டார். ஹுயூகோ கேண்டிடுஸ் என்னும் சட்ட வல்லுனரை அனுப்பி ஸ்பெயின் கிறிஸ்துவர்களின் வழக்கத்திலிருந்த இஸ்லாமிய சட்டங்களை விட்டொழிக்கச் செய்தார். மேலும், நார்மண்டியின் வில்லியம் பிரபுக்கு ஞானஸ்நானம் செய்து இங்கிலாந்துக்குள் அத்துமீறச் செய்தார்.
•    அவோஸ்டாவின் ஆன்ஸெல்ம் – அவர் காலத்தில் தீவிர மதவாதியும், தத்துவவாதியும், திறமையும் கொண்டவர். 1089 C.E. க்குப் பிறகு, கேண்டர்பரியின் ஆர்ச் பிஷப் ஆனார்.
•    (G)காண்டுல்ஃப் – பின்னாளில் ரோகெஸ்டரின் பிஷப்பாகி தேவாலயத்தைச் சேர்ந்த போர் வீரன் ஆவான். திறமைவாய்ந்த கட்டிடக்கலை நிபுணன், இவனே புராதனப் புகழ்பெற்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய லண்டன் டவரை வடிவமைத்தவன். இராணுவ கட்டமைப்பையும் அமைக்கும் ஆற்றலுள்ளவன்.
                                 பெக் பகுதியின் லான்ஃப்ரான்க் எப்போது நார்மண்டியின் வில்லியம் பிரபுவை சந்தித்தாரோ, அப்போதே ஒருவரை ஒருவர் கவர்ந்து கொண்டனர். இருவருக்குள்ளும் இருவருக்குமே சாதகமான இணைபிரியாத நட்பு உருவானது. வில்லியம் பிரபு லான்ஃப்ரான்க்குடன் மட்டுமே ஆழமான நட்பை வைத்திருந்தான். வில்லியம் இவரைத் தனது தந்தையின் ஸ்தானத்தில் வைத்து, ஆசிரியருக்குண்டான மரியாதையைத் தந்து, தனது சகோதரன், மகனைப் போல் பாவித்துப் பழகினான். கல்வி அறிவில்லாத வில்லியம் பிரபுக்கு லான்ஃப்ரான்க் நிர்வாகத்திலும், முன்னேற்றத்திலும், அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சக்தியாக இருந்தார். வில்லியம் பிரபு சார்பாக பதவிகளை நியமிக்கும் அளவுக்கு அந்தஸ்தைப் பெற்றிருந்தார். உதாரணத்திற்கு வில்லியம் பிரபுவின் ஒன்று விட்ட சகோதரன் (தாய் ஒன்று தந்தை வேறு) ஓடோவை 1049 C.E. ல் பயோவுக்ஸின் பிஷப்பாக ஆக்கினார். வில்லியம் பிரபுவின் இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய நபராக விளங்கினார்.
                          பத்தொன்பதாம் வயதில் ஓடோ பிஷப்பாக பதவியேற்றான். இவனுடைய பதவி வெளிப்படையாக சொந்தக்காரர்களுக்கு காட்டப்படும் சலுகையாகவே இருந்தது. ‘ஃபார் எக்சலன்ஸ்’ பட்டம் பெற்ற ஒரே பிஷப் போர்வீரன் இவன் தான். வில்லியம் பிரபுவின் நம்பிக்கையான ஒழுங்கீனமற்ற நிழல் அரசியல்வாதியாக ஓடோ இருந்தான். வில்லியம் பிரபு இங்கிலாந்துக்குள் பிரவேசிக்க 100 கப்பல்களைக் கொடுத்தான். ஓடோ 1082 C.E. ல் போப் ஆகும் ஆசையில் ஒரு இராணுவத்தை ரோமிற்கு அனுப்பினான். எதிர்பாராத விதமாக 1097 C.E. ல் முதல் சிலுவைப் போரில் பாலர்மோ என்ற இடத்தில் முஸ்லீம் படையினரால் கொல்லப்பட்டான். 1066 C.E. ல் குளிர்கால அக்டோபரின் காலைவேளையில் பிரிட்டிஷ் தீவுகள் கொடுமைக்கார நார்மன்களால் ஐரோப்பிய கூட்டமைப்புக்குள் இழுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஐரோப்பா முழுவதும் ரோமின் கொடுங்கோல் போப்களின் ஆட்சிக்குட் பட்டு இருந்தது. அவர்கள் ஐரோப்பிய கிறிஸ்துவர்களை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக சிலுவைப் போருக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
                                   வாழ்ந்த காலத்தில் (GUILLIAME) ‘வில்லியம் தி பாஸ்டர்ட்’   (WILLIAM THE BASTARD பிறப்பு 1028 C.E. இறப்பு 1087 C.E.) என்று சரித்திரத்தில் பெயர் பெற்றான். தோல் பதனிடும் ஒருவனின் மகளின் மகனாக வில்லியம் பிறந்தான். இவன் மட்டுமே முதன் முதலில் சட்டத்திற்கு புறம்பாக பிறந்த நார்மண்டியின் பிரபு அல்ல, இருந்தாலும் இவனது கீழ்தரமான செயல்பாடுகளால் அந்த ‘பாஸ்டர்ட்’ என்னும் அடைமொழி சரித்திரத்தில் இவனுக்கு ஒட்டிக்கொண்டது. மன்னர்கள் சரித்திரத்தில் இவனது மரணமும், உடல் அடக்கமும் மிகவும் பரிதாபமானது. ஐரோப்பாவின் உயர்குடியில் இருந்து வந்தவர்களுக்கு சட்டத்திற்கு புறம்பான பிறப்பு ஒரு சாதாரண விஷயம். உதாரணத்திற்கு, ரோவனின் ஆர்ச்பிஷப் ராபர்டுக்கு வேலைக்காரி மூலம் பிறந்த மூன்று பிள்ளைகள் இருந்தனர். மேலும், பெரும்பான்மையான நார்மன் பிரபுக்கள் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்களாகவும், பிஷப்புகள் தூய்மையற்றவர்களாகவும், தெய்வீகத் தன்மையற்றவர்களாகவுமே இருந்தார்கள். ‘தி டெவில்’ என்று அழைக்கப்பட்ட வில்லியமின் தந்தை முதலாம் ராபர்ட் என்னும் நார்மண்டியின் பிரபு திருமணமாகதவனும் (அப்படியென்றால் வில்லியமின் பிறப்பு?), தனது தீவிரவாத செயலாலும், முரட்டுத்தனத்தாலும் பெயர் பெற்றவன். தந்தை ராபர்ட் ஜெருசலத்திலிருந்து புனிதப் பயணம் சென்று திரும்பும் வழியில் அனடோலியா என்ற இடத்தில் இறந்துவிட்ட காரணத்தால், வில்லியம் நார்மண்டியின் பிரபுவாக எட்டாவது வயதில் பதவிக்கு வந்தான். இவனின் மாமனான ரோவனின் ஆர்ச்பிஷப் இன்னொரு ராபர்ட் என்பவனின் பலமான ஆதரவாலும், பாதுகாப்பாலும் அதிகாரத்திற்கு வந்தான். இவனின் வாழ்நாள் பெரும்பாலும் தீவிரவாதத்திலும், போர்களிலுமே கழிந்தது. ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த இராணுவ அமைப்பை உருவாக்கினான். அதிகமான தேவாலயங்களையும், மடங்களையும் உண்டாக்கினான். இவனின் இரண்டாவது மகள் அடிலிஸா கன்னியாஸ்திரியாகவும், மூன்றாவது மகள் செஸிலி கேயெனின் ஹோலி ட்ரினிட்டியில் கன்னியாஸ்திரிகளின் தலைவியாகவும், மற்றொரு மகள் அடிலா 1080 C.E. ல் ப்ளோயிசின் கவுண்ட் ஸ்டீபனின் மனைவியாகவும் ஆனார். அடிலா முதல் சிலுவைப் போரில் தனது கணவரை உற்சாகமாக பங்கேற்க அனுப்பியதில் புகழ்பெற்றாள். 1098 C.E. யில் மோசூலின் எமிருக்கு பயந்து ஆண்டியாக்கிலிருந்து சில ஃப்ரென்ச் வீரர்களுடன் கணவர் ஸ்டீபன் தப்பி ஓடிவிட்டான். இவனது கெட்ட நேரம் சிலுவைப் போராளிகள் ஆண்டியாக்கை வென்று விட்டனர். வில்லியம் அன்பில்லாதவனாகவும், முரட்டுத்தனமானவனாகவும், உணர்ச்சிவசப்படுபவனாகவும் இருப்பது சரித்திரத்தில் இரு வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1066 C.E. ல் வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் முடி சூட்டுவிழாவில் நடுக்கமுடன் வெறிகொண்டு கத்தினான். மரணப்படுக்கையில் பயத்தில் கதறி அழுதான்.
                                   முதலில் 1066 C.E. ல் நார்மன்களின் இங்கிலாந்தின் மீதான வெற்றி ஏதோ எதிர்பாராதது போல் தோன்றி இருக்கலாம் அல்லது, ஆங்கில ஆட்சிக்கு ஆசைப்பட்டு போரிட்டிருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால், உண்மையில் தேவ ஆசியுடன் ஒரு கிறிஸ்தவ தேசம் இன்னோரு கிறிஸ்தவ தேசத்தின் வளத்திற்காக ஆசைப்பட்டு மட்டுமே போரிட்டது. இங்கிலாந்தின் வாரிசில்லாத வயதான மன்னர் எட்வர்ட் (1042 C.E. – 1066 C.E.) அவரின் மைத்துனர் ஏர்ல் ஹரால்டை தனது மரணத்தின் போது (வெஸ்ஸெக்சின் ஏர்ல்) தனக்குப் பிறகு வாரிசாக்கினார். அப்போதைய பயேவுக்ஸ் டேபெஸ்ட்ரி கருத்தெதுவும் தெரிவிக்காமல் அமைதியாக ஏற்றுக்கொண்டது. ஏர்ல் ஹரால்டின் தேர்வை ஆங்கிலோ ஸாக்சன் கவுன்சிலின் தலைவர் வைடன் ஒப்புக்கொண்டார். எட்வர்டின் நெருங்கிய உறவுக்காரரான நார்மண்டியின் வில்லியம் பிரபு, ஏர்ல் ஹரால்ட் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர் என்று எதிர்ப்பு தெரிவித்தான். வாடிகனும் ஏர்ல் ஹரால்ட் ரோமுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகளை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியது. ஹரால்ட் மன்னரால் மட்டுமே அறிவிக்கப்பட்ட வாரிசு என்றும், இனி உலக அரங்கில் இங்கிலாந்து கிறிஸ்தவ சகோதரத்துவ நாடாக அங்கீகரிக்கப் பட்டு, ஹரால்ட் ஒரு மத நம்பிக்கை அற்றவர் என்று குற்றம் சாட்டி காட்டுமிராண்டித்தனமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஹரால்டின் மீதான குற்றங்கள் நியாயமற்றது என்று கூறிய கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்பும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாவம் சக்திவாய்ந்த மதவாதிகளின் குற்றச்சாட்டிலிருந்து ஹரால்டால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. வில்லியம் பிரபுவின் ஆலோசகர் லான்ஃப்ரான்க் ரோமிற்கு சென்று இங்கிலாந்தைக் கைப்பற்ற மதவாதிகளின் ஆதரவைத் திரட்டினார். இரண்டாம் போப் அலெக்ஸாண்டர் மற்றும் கார்டினல் ஹில்டிப்ராண்ட் (ஆர்ச்டெக்கான்) ஆகியோர் வில்லியமுக்கு இங்கி லாந்தைக் கைப்பற்றி அதற்கு மன்னராகவும் பதவியேற்றுக் கொண்டு ரோமின் தலைமைக்கு கீழ் இயங்க ஆசீர்வதித்தனர். அதே போன்று மதவாதிகளின் ஊக்குவிப்பாலும், ஆசீர்வாதத்தாலும், மத அடிப்படையினாலான மறைமுக சிலுவைப் போருக்கு அனுமதியும் வழங்கப் பட்டது. சிலுவைப் போருக்கு வில்லியம் பிரபுவுடன் எல்லா ஐரோப்பிய மாநில தலைமைகளும் ஒத்துழைக்க வேண்டுமென்று பெக் அப்பேயிலிருந்து மத ஆசீர்வாத நகல் அனுப்பப்பட்டது. இங்கிலாந்தின் அபரிதமான வெள்ளி மற்றும் வளம் வட ஃப்ரான்ஸின் நார்மன் வீரர்களை வெகுவாக கவர்ந்தது.
                                     கார்டினல் ஹில்டெர்ப்ராண்ட், வில்லியம் பிரபுக்கு போருக்கான மதக்கொடியை வழங்கினார். ஹில்டெர்ப்ராண்ட் கூலிக்காக போரிடும் நார்மன்களுக்கு தற்காலிக அதிகாரத்தை இத்தாலிக்கும், அது மட்டுமில்லாமல் ஆல்ப்ஸ் மலை எல்லைவரை வழங்கினார். ஹில்டெர் ப்ராண்ட் ரோமில் கத்தோலிக்கத்தை தழுவிய யூத குடும்பமான பியர்லியோனி சமூகத்துடன் தொடர்பு வைத்திருந்தார். ஹில்டெர்ப்ராண்ட் தானும் யூத தொடர்புள்ள வழியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த தொடர்பு ஏதோ ஒரு காரணமாகத்தான் இருந்தது என்ற நம்பிக்கை இருந்தது. க்ளூனியில் இவர் துறவியாக இருந்தபோது பலமான மதத்தொடர்பான காரணங்கள் இருந்தன. இவர் போப்களை நியமிப்பதில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். ஒன்பதாம் போப் லியோவுடன் இத்தாலிக்கு வந்தார். போப்களை நியமிப்பதில் உண்மையான அதிகாரம் பெற்று இவரின் கீழ் ஐந்து போப்களை பதவியில் அமர்த்தினார். போப் இரண்டாம் நிகோலஸ் இவரால் அமர்த்தப்பட்டவர் தான். ஹில்டெர்ப்ராண்ட் ஒரு மந்திரவாதியாக கருதப்பட்டு (SHAKING LIGHTENING OUT OF HIS SLEAVE) ‘ஷேகிங்க் லைட்டெனிங்க் அவுட் ஆஃப் ஹிஸ் ஸ்லீவ்’ என்று அழைக்கப் பெற்றார். இவர் போப் (ஏழாம் போப் கிர்கோரி 1073 C.E.-1085 C.E.) ஆக நியமனம் பெற்ற பிறகு, போப்களும், தேவாலயங்களும் எப்படி ஐரோப்பாவில் இயங்க வேண்டும் என்று ‘டிக்டேசஸ் பாபாயே’ என்ற அறிக்கையை வெளியிட்டார். அதில், ரோமன் தேவாலயங்கள் நேரடியாக கடவுளால் அமைக்கப்பட்டதென்றும், இளவரசர்கள் போப்பின் கால்களை முத்தமிட வேண்டுமென்றும், ரோம் தேவாலயங்கள் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று புனித நூலில் உள்ளதாக பொய்களையும், நகைப்புக்குரிய விஷயங்களையும் தெரிவித்திருந்தார். 1077 C.E. ல் ஐரோப்பாவில் வாடிகனின் அதிகாரத்திலிருந்து தனியாக மதக்கூடங்களை அமைக்க இருந்த ஜெர்மனியின் நான்காம் ஹென்றியை ஜெர்மனின் எதிர்பாளர்களைத் திரட்டி போப்பின் கால்களை முத்தமிட வைத்தார். இது ஜெர்மனியில் உள்நாட்டுப் போரையும், அரசியல் அமைப்பை தாமதப்படுத்துவதாகவும் இருந்தது. ஒரு போப்பாக தனக்கு இங்கிலாந்தின் மன்னனாக வில்லியம் பிரபு நம்பிக்கையாக இருப்பார் என்று ஹில்டெர் ப்ராண்ட் கருதினார். ஹில்டெர்ப்ராண்ட் வாடிகனின் மத பீரங்கியாகவே மதிக்கப்பட்டார். இவருக்குப் பிறகு, இரண்டாம் போப் அர்பன் நியமனம் பெற்றார்.
                               1066 C.E. ல் ஹாஸ்டிங்க்ஸ் போரில் (ஸசக்ஸ்) ஆங்கிலோ ஸாக்சனின் மன்னன் இரண்டாம் ஹரால்டை கோடன்சஸ், பயேவுக்ஸ் பிஷப்புகளுடன் சேர்ந்து வில்லியம் பிரபு தோற்கடித்தான். இது ஹரால்டின் ஒரு ஆச்சரியமான தோல்வியாகவே எண்ணப்பட்டது. நார்மண்டிகள் வட ஃப்ரான்சின் ஒரத்தில் உள்ள சிறிய ஆளுமைக்குள்ள பிரபுக்கள். பிரிட்டன் ஐரோப்பாவின் பழமையான மன்னர் பிரதேசம். இங்கிலாந்தின் வளமையும், இராணுவ அமைப்பும் நார்மண்டிகளை விட புகழ் பெற்றது. ஹாஸ்டிங்க்ஸ் போரில் ஹரால்ட் கண்களில் தாக்கப்பட்டதாக பயேவுக்ஸின் திரை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. இந்த திரை ஓவியத்தை நீங்கள் பல ஆங்கில விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். நான்கு நார்மன்கள் சேர்ந்து தாக்கியதாகவும், ஒருவன் ஹரால்டின் மார்பிலும், ஒருவன் தலையிலும், ஒருவன் கால்களை வெட்டியும், மற்றொருவன் கீழே தள்ளியும் தாக்கி அனைவரும் அவனின் உடலை நிர்வாணமாக்கி சின்னாபின்னா படுத்தியதாக அந்த திரை ஓவியங்கள் தெரி விக்கின்றன. அவனின் உடலை பணிப்பெண் அடையாளம் காட்டியதாகவும், அவனின் இரு சகோதரர்கள் ஏர்ல்ஸ் லியோஃப்வைன், கிர்த் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஹரால்ட் கொல்லப்பட்ட இடத்தில் 1070 C.E. ல் போப் மற்றும் வில்லியம் பிரபுவின் ஏற்பாட்டில் நினைவுக் கல்வெட்டு வைக்கப்பட்டு அப்பே (ஆசிரமம்) ஒன்று கட்டப் பட்டது. தேசத்தின் பாவங்களைப் போக்க ஃப்ரென்சுக்களுக்கு கடவுள் வெட்டப்பட்ட இடத்தை நினைவிடமாக்கினான் என்றும், கடவுள்  அவர்கள் பக்கம் இருந்து ஆசீர்வதிப்பதாக நம்பினார்கள். பயேவுக்ஸின் திரை ஓவியத்தின் படி ஃப்ரென்ச்சின் வில்லியம் பிரபுவின் இங்கிலாந்தின் மீதான போர் மதவாதிகளின் ஆசிபெற்று மதக்கொடியை ஏந்தி நடத்திய புனிதப் போராகவே கருதப்படுகிறது.
                         1066 C.E. கிறிஸ்துமஸ் தினத்தில் வொர்செஸ்டரின் பிஷப் மற்றும் யோர்கின் ஆர்ச்பிஷப்பின் மூலம் புனித எண்ணெய் தடவப்பட்டு வில்லியம் பிரபு வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயின் இங்கிலாந்து மன்னராக முடி சூட்டிக்கொண்டான். இதன் பிறகு, வெஸ்ட் மினிஸ்டர் அப்பே இங்கிலாந்தின் எல்லா மன்னர்களுக்கும், ராணிகளுக்கும் முடி சூட்டும் வழக்கத்தை மேற்கொண்டது. நார்மன் அறிவுஜீவிகளால் மன்னர் அதிகாரமென்பது நேரடியாக கடவுளிடமிருந்து வருவதாக இங்கிலாந்துக்கு போதிக்கப்பட்டது. தற்போது கெண்டின் ஏர்லாக முடிசூட்டிக்கொண்ட ஓடோ (இவர் முன்னாள் பயேவுக்ஸின் பிஷப்பாகவும் இருந்த வில்லியம் பிரபுவின் ஒன்றுவிட்ட சகோதரர்) புகழ்பெற்ற பயேவுக்ஸின் திரை ஓவியத்தை ஹாஸ்டிங்க் போரின் வெற்றியின் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். அந்த ஓவியத்தின் இரு காட்சிகள் நிர்வாணமாகவும், துன்மார்க்கமாகவும் இருந்தன. ஓடோ ராஜகோல் கொண்டு ஸாக்சனின் எதிரிகளை அறிவில்லாமல் முரட்டுத்தனமாக தாக்குவது போல் இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்தின் 15 அல்லது 20 லட்சம் மக்கள் தொகையுடன் 10,000 நார்மன்கள் அரண்மனைகளில் இராணுவத்தினரைப் போல் பாதுகாப்பாக வாழ்ந்தனர். அந்த அரண்மனைகளை யூதர்கள் பணம் கொடுத்து கட்டிக்கொடுத்தனர். மேலும் நார்மன்கள் வார்விக், நாட்டிங்காம், லின்கன், கேம்பிரிட்ஜ், ஹண்டிங்டன், எக்ஸிடெர், கோல்செஸ்டர், டோவர், வின்செஸ்டர் போன்ற பல இடங்க ளில் அரண்மனைகளைக் கட்டி இங்கிலாந்தின் உள்நாட்டு அரசியலையும், இராணுவ பலத்தையும் கவனித்துக் கொண்டனர். 1100 C.E. ல் ஏறக்குறைய 500 அரண்மனைகளை இங்கிலாந்திலும், வேல்ஸிலும் கட்டியிருந்தனர். கணக்குப்படி இங்கிலாந்தில் ஏறக்குறைய ஆயிரம் அரண்மனைகளும், வேல்ஸில் முன்னூறு அரண்மனைகளும் இருக்கும் என்று கருதப்படுகிறது. நார்மன் (MOTTES) மோட்டீஸ்களும், (BAILEYS) பைலீஸ்களும் ஐயர்லாண்டில் டிப்பேரரி போன்ற வளமான நிலப்பரப்புகளை     நிர்வகித்துக் கொண்டு அங்கேயே இருந்தனர்.
                                             அரண்மனைகளில் புகழ்பெற்றது லண்டன் டவர் என்று அழைக்கப்படும் நான்கடுக்கு உயரம் கொண்ட அரண்மனையே. இதைக்கட்ட இருபது ஆண்டுகள் ஆயின. இதனுள் கோட்டை, ராஜவம்சத்தினர் தங்கும் வசதி, சிறைச்சாலை, தூக்கிலிடப்படும் இடம், இராணுவத் தளவாடங்கள் பாதுகாக்கும் இடம் போன்றவையும், நவீன காலத்தில் ஆசியா, ஆப்பிரிக்காவில் கொள்ளையிடப்பட்ட தங்க, வைர செல்வங்களை பாதுகாக்கும் இடமும் உள்ளன. பெரும்பான்மையான ஆங்கிலேயர்களுக்கு லண்டன் டவர் துக்கமான விஷயமாகவே இருக்கும். ரோசெஸ்டரின் பிஷப்பாக இருந்த (G)கண்டுல்ஃப் என்பவரால் இராணுவ கட்டிட அமைப்பில் கோட்டை போன்ற வடிவத்தில் கட்டப்பட்டது. நார்மன்கள் ஸ்காட்லாண்டை சண்டையிட வடகிழக்கிலும் அரண்மனைகளைக் கட்டினர். நியூ கேசல் என்ற இடத்திலும் நிறைய அரண்மனைகளைக் கட்டினர். மேலும் நார்மன்கள் எண்ணற்ற தேவாலயங்களையும், மடங்களையும் கட்டினர். அதில் ஈடுஇணையற்ற பீட்டர்பர்க், டுர்ஹாம் போன்றவையும் அடங்கும். டுர்ஹாம், ஏலி போன்ற மடங்கள் ஏகாதிபத்தியத்தின் அடையாளங்களை செய்தியாக சொல்வது போலவே இருந்தன. இந்த அரண்மனைகள், தேவாலயங்கள், மடங்கள் குறிப்பிட்ட தனி காலனிகளுக்குள்ளேயே அமைக்கப்பட்டன. வில்லியம் பிரபுவின் போர்கள் ஆக்ரோஷமாகவும், வெறித்தனமாகவும் இருந்து எதிரிகளை அச்சமூட்டின. ஆங்கிலேயர்கள் அவர்களின் சொந்த நாட்டிலேயே நசுக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். நிறைய கற்பழிப்புகளும், அதிகமான கொள்ளைகளும் நடந்தன. புதிய ஆட்சியாளர் பெருமை பொங்க இருந்து கொண்டு ஆங்கிலேயர்களின் நியாமான புகார்களை கூட நிராகரித்தனர். ஓடோ கொடுமையான முறையில் நார்மனின் ஆளுமையில் அகதிகளாகிப் போன ஆங்கிலேயர்களுக்கு இராணுவத் தண்டனைகளை வழங்கினான். அவர்களின் சொத்துக்களையும் கொள்ளை அடித்துக் கொண்டான்.
                                எண்ணற்ற விலை மதிப்பில்லாத செல்வங்கள் கொள்ளை அடித்து நார்மண்டிக்கு கொண்டு செல்லப்பட்டன. நார்மண்டியின் தேவாலயம் கொள்ளையடித்த செல்வத்தால் புதுப்பிக்கப்பட்டது. கேயனில் இரண்டு மடங்கள் பெரிதாக கட்டப்பட்டு, பயேவுக்ஸின் தேவாலயமும் விரிவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் நாணயங்கள் உருக்கப்பட்டு, மீண்டும் நார்மண்டியில் வடிவமைக்கப்பட்டன. அரசியல் ஆதாயத்திற்காக விவசாயம் நூறாண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டது. நார்மன்களின் அதிகாரம் ஆங்கிலேயர்களை வெல்ல மட்டுமல்ல, எதிர்ப்பவர்களை கடுமையான முறையில் அடக்கவும் செய்தது. 1069 C.E. – 1070 C.E. ல் வடக்கிலும், மிட்லேண்டிலும் நார்மன்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் கலகம் செய்தனர். சார்லிமாக்னே காலத்தில் ஹாரியிங்க் (HARRYING) துணையுடன் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டும், அதிகமானவர்களை அகதிகளாக வெளியேற்றியும், நெடுஞ்சாலைகளில் பிணங்களை எரித்தும், கொள்ளையடித்தும், பெரும் கொடுமைகளும், ஈடுசெய்ய முடியாத இழப்புகளும் கலக காலத்தில் நிகழ்ந்தன. (HARRYING OF THE NORTH) வடக்கில் ஹாரி என்று அறியப்பட்ட காலத்தில் வடக்கிலும், மிட்லேண்டிலும் மிகப்பெரிய நிலப்பரப்புகள் நாசம் செய்யப்பட்டன. அந்த பகுதிகளில் விவசாய நிலங்கள் மூன்றில் இரண்டு மடங்கு வெட்டி வீழ்த்தப்பட்டும், தீயிட்டும் கொளுத்தி நாசப்படுத்தப்பட்டன. வில்லியம் பிரபுவின் வீரர்கள் யோர்க்குக்கும், டுர்ஹாமுக்கும் இடையில் ஒவ்வொரு ஊரையும் நாசப்படுத்தி கண்ணில்படும் மனிதர் களை எல்லாம் வெட்டிக் கொன்றனர். ஆங்கிலேயர்களின் புராதன பிரபுக்களின் இடமான மெர்ஷியா போன்ற நகரங்களை எந்த காலத்திலும் தலையெடுக்காத வண்ணம் அடையாளமில்லாமல் அழித்தனர். இந்த அழிவுகள் சரித்திர ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நார்மன்கள் அளவிடமுடியாத நிலப்பரப்புகளை பஞ்சத்திற்கு உட்படுத்தினர். மக்களை குதிரை, நாய், பூனை மேலும் மனிதர்களையே உண்ணும் அவல நிலைக்குத் தள்ளினர். இந்த கொடுமைகளிலிருந்து இங்கிலாந்தின் ஆங்கிலேயர்கள் டென்மார்க், ஸ்காட்லாண்ட் குறிப்பாக க்ரீஸ் மற்றும் பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்துக்கும் குடிபெயர்ந்தனர். கான்ஸ்டாண்டிநோபிளில் நல்ல பணிகளில் அமர்ந்து உயர்வு பெற்றனர். சில ஆங்கிலேயர்கள் தங்களையே அடிமைகளாக விற்றுக் கொண்டனர். 1102 C.E. ல் லண்டன் கவுன்சிலில் ஆர்ச்பிஷப் ஆன்செல்ம் ஆங்கிலேயர்களை மிருகங்களைப் போல் விற்பதை கண்டனம் செய்தார். பிஷப் வுல்ஃப்ஸ்டனும் தனது தேவாலய போதனையில் ஆங்கிலேய அடிமைகளை பிரிஸ்டாலிலிருந்து ஐயர்லாந்துக்கு விற்பனை செய்வதை எதிர்த்தார். ஆனாலும் தேவாலயங்கள் அடிமை விற்பனை செய்வதில் முதலாளிகளாகவே இருந்தன.
                                

விதைத்தவர்கள் 2

முதல் கிறிஸ்தவ ஆயிராமாண்டு (1000C.E.) வரை பிரிட்டிஷ் தீவுகள் வடமேற்கு ஐரோப்பாவின் ஒதுங்கிய நீர்ப்பரப்பாகத்தான் இருந்தது. பலரால் பலமுறை கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறது. முதலில்  55 B.C.ல் ரோமர்களாலும், பின் 367 C.E. லிருந்து 793 C.E. வரை ஏஞ்சல்கள், ஸாக்சன்கள் மற்றும் ஜூட்களால் தாக்கப்பட்டிருக்கிறது. மேலும் பலரால் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. 1027 C.E.ல் கேனூட் என்னும் டச்சுக்காரர் இங்கிலாந்து, டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடனின் சில பகுதிகளுக்கு மன்னராக இருந்திருக்கிறார். பிரிட்டிஷ் தீவுகள் மிகவும் பலவீனமாகவும், பின் தங்கிய காலனியாகவும் இருந்திருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பாவிலேயே வளமான நாடாக மாறியது. இதன் வளம் சிலுவைப் போரின் பொருளாதாரத்திற்கு அவசியம் என்பதாலும், வேறு பல காரணங்களுக்காகவும் ஃப்ரான்ஸ் இங்கிலாந்து மீது படையெடுத்தது. 1066 C.E. ல் சக கிறிஸ்தவர்களான வடமேற்கு நார்மண்டிகளின் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு கொஞ்சகாலம் பிரிட்டிஷ் தீவுகள் அமைதியாகத்தான் இருந்தது. நார்மண்டிகளின் ஆளுமைக்குப் பிறகு தான் பிரிட்டிஷ் தீவுகள் ஐரோப்பாவுடனும், முஸ்லீம்களுடனும் தொடர்புக்கு வந்தது. பிரிட்டிஷின் வளமை மட்டும் சிலுவைப் போருக்குப் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு முஸ்லீம்கள் மீது எப்படி வெறுப்பைக் காட்டித்தாக்க வேண்டும் என்று தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் பாலஸ்தீனைத் தாக்க இராணுவம் அனுப்பும் அளவுக்கு தயார் செய்யப்பட்டது. ஒன்றும் அறியாத இங்கிலாந்தின் மக்கள் போருக்கு அனுப்பி கொல்லப்பட்டனர். முஸ்லீம்களின் பக்கத்து நாடுகளான ஸ்பெயின், ஃப்ரான்சை விட முஸ்லீம்கள் மீது பெரும் வன்மையை இங்கிலாந்து வளர்த்துக் கொண்டது. முஸ்லீம்களை எதிர்க்கும் முதல் சாம்ராஜ்ய நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. உலகில் நிறைய முஸ்லீம் நாடுகளை கைப்பற்றிய பெருமையும் பிரிட்டிஷுக்கு உண்டு.
                                பிரிட்டிஷ்கள் மீதான நார்மன்களின் போர் இருவருக்கும் இணைபிரியா நட்பை உருவாக்கியது. இஸ்லாமுக்கு எதிராக “ஆங்கிலோ ஃப்ரென்ச் அலையன்ஸ்” என்று ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு சிலுவைப் போர்கள், காலனியிஸப் போர்கள், முதலாம் உலகப் போர், சூயஸ் போர் போன்றவற்றில் பங்கெடுத்துக் கொண்டன. அரபுக்கள், யூதர்கள், துருக்கிகள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் அயர் லாந்துக்களுடன் இனவெறியையும் வளர்த்துக் கொண்டனர். உலக சதுரங்க விளையாட்டு என்று அழைக்கப் பட்ட முதல் உலகப் போரில் ஆங்கிலோ ஃப்ரென்ச் அலையன்ஸ் கிழக்கில் ஓட்டோமான் கலிஃபாவுடன் சண்டையிட்டனர். பிரிட்டனும், ஜெர்மனியும் மதம், இராணுவம், அரசியல் மற்றும் பாரம்பரிய ராஜவம்சம் போன்றவற்றில் மார்டின் லூதர் காலத்திலிருந்து கூட்டாக செயல்பட்டன. பிரிட்டனின் ராஜவம்சத்தினர் ஜெர்மனியின் ஸாக்ஸே கோபர்க் கோதா மற்றும் மவுண்ட்பேட்டன்பர்க் வழிமுறையில் வந்தவர்கள். (முதல் உலகப்போரிலிருந்து விண்ட்சர் என்று பெயர் மாற்றப்பட்டது) ராணி விக்டோரியா ஜெர்மனியைச் சேர்ந்த தன் உறவுக்காரர் ஆல்பர்டை மணந்து கொண்டார். ராணியின் புகழ்பெற்ற பேரப்பிள்ளை ஜெர்மனியின் எம்பரர் இரண்டாம் கைசர் வில்ஹெம் ஆவார். போர் துவங்கும்வரை கைசர் பிரிட்டிஷ் இராணுவத்தில் உயர் பதவியில் இருந்தார். ஃப்ரென்ச்காரர்களால் மதம், இராணுவமும், மற்றும் ஜெர்மனியின் ராஜ குடும்பத்தின் உறவால் ஐரோப்பாவில் கூட்டுக் கலவையாக இங்கிலாந்து மாற்றப்பட்டது. மாபெரும் போர் ஐரோப்பாவில் துவங்கி முஸ்லீம்களின் பூமியை நோக்கி பரவியது. நார்மன்களின் 1066 ன் தென் பிரிட்டன் மீதான புரட்சி சாதாரணமானது அல்ல, அது ஒட்டு மொத்த பிரட்டனை இஸ்லாமின் மீதான வெறியை அடுத்த ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு உலக சரித்திரத்தில் நீரூற்றி வளர்த்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் மட்டுமே உலகில் அதிகமான முஸ்லீம் நாடுகளை கைப்பற்றியது.
                                                      1917 போரின் முடிவில் பிரிட்டன் பாலஸ்தீனை இரண்டாம் தர காலனியாக்கி “ஜுவல் இன் கிரவுன்” என்று புகழ் பாடிக்கொண்டது. தொடர்ந்து ஜெனரல் ஆல்லன்பி, “இன்று சிலுவைப் போர் முடிவுக்கு வந்து விட்டது”, என்று கூறினார். (இங்கிருந்து தான் இஸ்ரேலுக்கான தனி நாடுக்குண்டான திட்டம் தீட்டப்பட்டது.) உலகில் எல்லா இனங்களுக்கும், நாடுகளுக்கும் சொந்த பூமியின் பாரம்பரிய வரலாறு உண்டு. ஆனால் யூதர்களுக்கு மட்டும் தான் சரித்திரத்தில் ஏதொ சொத்து வாங்குவதைப் போல் சூழ்ச்சிகரமாக சுற்றி முஸ்லீம்கள் இருக்கும் பகுதியில் பாலஸ்தீனுக்குள் ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுத்தார்கள். டமாஸ்கஸ் நகரத்தின் சுல்தான் ஸலாவுத்தீன் அல் அய்யூபின் கல்லறையின் மீது ஏறிக்கொண்டு, ஃப்ரான்சின் ஜெனரல் ஹென்றி கௌராட், “ஸலாவுத்தீன் நாங்கள் திரும்பி வந்து விட்டோம்” என்று வெளிப்படையாக கொக்கரித்தார். போரின் முடிவில் பிரிட்டனும், ஃப்ரான்சும் கிழக்கு மெடிட்டரேனியனிலிருந்து இந்தியா வரை அனைத்து முஸ்லீம் நாடுகளையும் கைப்பற்றி இருந்தது. மேற்கத்தியர்களால் தேவையில்லாமல் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இறுதியில் போர் சமாதானமாக முடிவுக்கு வந்தது.
                                               ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவில் இறைவனின் இறுதி தூதராக முகம்மது நபி அவர்கள் தோன்றி மனிதகுலம் அத்தனைக்கும் இறைச்செய்தியை பரப்பினார். அதன் பயனாக மதம், இராணுவம், கலாச்சார வலிமைமிக்க இஸ்லாம் வெகு வேகமாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் பரவியது. முதலில் இரான், சிரியா, எகிப்து, துருக்கி மற்றும் வட ஆப்பிரிக்கா என்று வேகம் பிடித்தது. முதலில் சிரியாவிலும், ஆசிய மைனரிலும் இஸ்லாம் ஆட்சி அமைந்தபோது அங்குள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் தாங்கமுடியாத தொல்லை காரணமாக புதிய இஸ்லாமிய ஆட்சியை வெகுவாக வரவேற்றனர். உலக வரலாற்றில் தன் மத ஆட்சியாளர்களை வெறுத்த மக்கள் கிறிஸ்தவர்கள் தான். சமகாலத்திலேயே முஸ்லீம்கள் கொடுமையாளர்களான பைஸாந்தியர்களையும் (கிழக்கு ரோமர்கள்), பாரசீக சாம்ராஜ்ஜியத்தையும் வென்றனர். பத்தாண்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் நாற்பதினாயிரம் ஊர்களை சுதந்திரமாக்கி, இரண்டாயிரம் மசூதிகளை கட்டினார். முஸ்லீம்கள் ஐந்து பரம்பரை ஆட்சிகளில் அலக்ஸாண்டிரியா, ஜெருசலம், ஆண்டியாக் ஆகிய மூன்றை வென்று நான்காவதாக காண்ஸ்டாண்டிநோபிலை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தார்கள். 638 ல் ஜெருசலம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் முஸ்லீம்கள் வசம் வந்தபோது ஒரு சொட்டு இரத்தம் கூட இரு தரப்பிலும் சிந்தப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலமாகிய நூறாண்டுகளுக்குள் முஸ்லீம்கள் கிரேக்கர்களை விட மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உலகில் நிறுவியிருந்தனர். உலகின் பல சரித்திர ஆசிரியர்களின் பதிவின்படி முஸ்லீம்கள் எந்த நாட்டின் மீதும் இன, மதவெறியால் போர் செய்யவில்லை, சாதாரணமாக தன் ஆட்சியைப் பரப்ப ஒவ்வொரு நாடும் நடத்தும் போர் போல்தான் முஸ்லீம்கள் படையெடுத்தனர். வென்ற எந்தநாட்டு மக்களையும் கட்டாயப்படுத்தி முஸ்லீம்களாக்கவில்லை. அப்படிச்செய்வது இறை மற்றும் நபி(ஸல்)அவர்களின் வழிமுறையும் அல்ல. முஸ்லீம்கள் ஆப்பிரிகாவிலிருந்து மெடிட்டரேனியன் தீவான சைப்ரஸ்(649 CE), கிரீட்(654 CE), ரோட்ஸ்(654 CE), ஐபீரிய தீபகற்பம்(711 CE), டௌலூஸ்-தென் ஃப்ரான்ஸ்(715 CE), ஸர்தீனியா(750 CE, கோர்சிகா(809 CE), மால்டா(824 CE), சிஸிலி(827 CE) மற்றும் (840 மற்றும் தென் இத்தாலி (840 CE) என்று வானமே எல்லையாக பரவிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் முஸ்லீம்கள் அமெரிக்காவுடன் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தினர். அதாவது கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு (அமெரிக்காவை கண்டு பிடித்ததாக சொல்லப் படுகிறவர்)  ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே இது நடந்தது. முதல் ஆயிராமாண்டின் போது, யூசுஃப் பின் டச்ஃபின் என்னும்     சுல்தான் அல்மொராவிட்ஸ் என்ற சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்தார். அது தெற்கில் செனகலையும், வடக்கில் தென் ஐபீரியாவையும், மேற்கில் அட்லாண்டிக்கையும் மற்றும் அல்ஜீரியா, துனிஷியாவை உள்ளடக்கிய மேற்கு ஐரோப்பாவை விட பெரிய பகுதியாகும்.
                                   எட்டாவது, ஒன்பதாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பாவை மதபோதகர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். உதாரணமாக தேவாலயங்கள், வாடிகன், மத மாஃபியாவாக கருதப்பட்ட ஃப்ராங்கிஷ் (ஃப்ரென்ச்/ஆங்கில கூட்டுப்படை), ஹோலி ரோமன் எம்பயர் போன்றவற்றின் பிடியில் ஐரோப்பா இருந்தது. மேலும், சட்டத்திற்கு புறம்பான விபசாரி ஒருத்தியின் மகனான சார்லஸ் மார்டெல் (688-741 C.E.) என்பவனும், அவனின் படிப்பறிவில்லாத பேரன் சார்ல்மாக்னியும் (742-814 C.E.) ஐரோப்பாவில் இஸ்லாம் வளராமல் தடுத்தனர். அதிலும் முதலில் ‘தி ஹாம்மர்’ என்றழைக்கப்பட்ட சார்லஸ் மார்டெல் 732  C.E.ல் மத்திய ஃப்ரான்சில் புகழ்பெற்ற பாய்டியர்ஸ் போரில், ஃப்ராங்கிஷ் படைகளின் துணையுடன் முஸ்லீம்களை (உம்மய்யாத்களை) வென்றான். அப்போது ஐபீரியாவின் முஸ்லீம் எமிராக இருந்தவரை நயவஞ்சகன் ஒருவன் கொலை செய்து விடுகிறான். இந்த வெற்றியின் மூலம் ஃப்ராங்க்ஸ் படை கிறிஸ்துவத்தை காக்க வந்த சக்தியாக ஐரோப்பா முழுவதும் பரவலாக அறியப்பட்டது அல்லது பரப்பப்பட்டது.
                                           சார்ல்மாக்னி (சார்லஸ் தி கிரேட்/CHARLEMAGNE) என்பவன் முப்பது ஆண்டுகளில் வாள்முனையில் 12 நாடுகளில் (அவார்ஸ், ஸ்லாவ்ஸ், ப்ரீடன்ஸ், லம்பார்ட்ஸ், ஸாக்சன்ஸ் ....) 53 முறை போர் புரிந்தான். ஐபீரியாவில் பலமுறை முஸ்லீம்களை எதிர்த்துப் போரிட்டான், 778 C.E. ல் வட பாம்பலோனாவில் 30,000 மூர்கள் இவன் படையை சுற்றி வளைத்துத் தாக்கியதில் படுதோல்வி அடைந்தான். 1095 ல் இரண்டாம் போப் அர்பன் முதல் சிலுவைப் போருக்கு அழைப்பு விடுத்தபோது முன்னின்று கலந்து கொண்டான். ஜுன் 2000 மாவது ஆண்டில் போஸ்னியா, கொஸோவாவில் பால்கன் சிலுவைப் போராளிகளின் சார்பில் முதல் வடஅமெரிக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாதிபதி பில் கிளிண்டன் கலந்து கொண்டபோது, அவருக்கு ‘சார்ல்மாக்னி பரிசு’ ஆஷன் நகரில் (சார்ல்மானி பிறந்த ஊர்) வழங்கப்பட்டது. சார்ல்மாக்னி இறந்த பிறகு, ஹோலி ரோமன் எம்பயர் அவரின் பிள்ளை, பேரப்பிள்ளைகளால் நிரவாகத் திறமையற்று பலமிழந்தது. முஸ்லீம்கள் தென்பகுதி வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய ஆரம்பித்தார்கள். தானாகவே ஹோலி ரோமன் எம்பயர் வலுவிழந்து ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி என்று மூன்றும் மன்னராட்சி பிரதேசமாகப் பிரிந்தது. ஹோலி ரோமன் எம்பயர் பல பகுதிகளாக சிதறியதும், ஃப்ராங்கிஷ் மன்னர்கள் இஸ்லாமை எதிர்க்கக்கூடிய நம்பிக்கையை இழந்தார்கள். இஸ்லாமை எதிர்க்கும் சக்தி வடபுறமாக ஸ்காண்டிநேவியாவை நோக்கி நகர்ந்தது.
                                           “வடக்கின் சீடன்” என்று பலராலும் அறியப்பட்ட ஃப்ரான்சின் ஆமியன் நகரில் பிறந்த அன்ஸ்கர் (801-865 C.E.) என்ற துறவி ஜெர்மனிக்கும் 826 C.E. ல் டென்மார்க்குக்கும் சென்றான். அங்கு அவன் மன்னரையும் மேலும் 400 பேரையும் கிறிஸ்துவத்துக்கு மதம் மாற்றினான். பிறகு, ஸ்வீடன் சென்று முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை ஸ்காண்டிநேவியாவில் நவீன ஸ்டாக்ஹோம்சில் பிர்காவின் வைகிங்க் மையப்பகுதியில் கட்டினான். 832 C.E. ல் அன்ஸ்கர் ஜெர்மனி திரும்பியதும் ஹாம்பர்க் நகரின் பிஷப்பாகி மொத்த ஸ்காண்டிநேவியாவின் பொறுப்பாளராக ஆனான். 848 C.E. ல் போப் இவனை ப்ரீமெனின் ஆர்ச் பிஷப்பாக ஆக்கினார். 854 C.E. ல் டென்மார்க் திரும்பி ஜூட்லாண்டின் மன்னன் எரிக்கை கிறிஸ்துவத்துக்கு மதம் மாற்றினான். இந்த அன்ஸ்கர் தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்துவத்தின் பால் மதம் மாற்றிவன். அன்ஸ்கரின் மறைவிற்குப் பிறகு, டென்மார்க்கும், ஸ்வீடனும் மீண்டும் பாகனியசுத்துக்கு (PAGAN-காட்டுமிராண்டித்தனம்) மாறியது. வைக்கிங் பகுதிவாசிகள் ஸ்கேண்டிநேவியாவிலிருந்து பல பகுதிகளிலும் பரவி முஸ்லீம்களுக்கு எதிராக சோதனைகள், காலனிகள் அமைத்தல் போன்றவற்றை பிரிட்டனிலும், வட ஃப்ரான்சிலும், வட ஜெர்மனியிலும் மேற்க்கொண்டார்கள். மேலும் தெற்கில் ஐபீரியாவில் நுழைந்து ஜிப்ரால்டர் ஸ்ட்ரெய்ட் வழியாக மெடிட்டரேனியனில் பலீயரிக் தீவில் முஸ்லீம்களை உள்ளுர் காலனிவாசிகளின் துணையுடன் அடாவடியாக வெளியேற்றினார்கள். வைக்கிங்குகள் வட ஆப்பிரிக்காவில் கார்டோபாவின் உமய்யத் எமிரேட்டை தாக்கினார்கள். ஐந்து வாரங்களுக்குப் பிறகு, முஸ்லீம் படைகளால் பலமாகத் தாக்கப்பட்டனர். முஸ்லீம்கள் 30 கப்பல்களையும், 1000 வீரர்களைக் கொன்றும், 400 வீரர்களை கைது செய்து விரட்டினர். முஸ்லீம்களின் திட்டமிட்ட எதிர்த்தாக்குதலால் வைக்கிங்குகளால் ஈடு கொடுக்க முடியவில்லை. வைக்கிங்குகள் ரஷ்யாவின் ஆற்றைக் கடந்து கருங்கடல், காஸ்பியன் கடல் வழியாக அப்பாஸிட் கலீஃபாவைத் தாக்கினர்.
                                     முதல் கிறிஸ்தவ ஆயிராமாண்டு ஐரோப்பா ஏறக்குறைய ஸ்கேண்டிநேவியா, வட ஸ்பெயின், ரஷ்யா, பால்கன் என அனைத்துப் பகுதிகளும் கிறிஸ்துவத்துக்கு மாறியது. பாதிக்கும் மேற்பட்ட மேற்கு ஐரோப்பா கிறிஸ்தவ தேவாலயங்ககளின் ஆதிக்கத்தில் வந்தன. தேவாலயங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக சிலுவைப் போரைத் துவங்கத் திட்டமிட்டது. அதற்கு மிகுந்த பொருட்செலவு, வீரர்கள் தேவைப்பட்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்து வளமை மிகுந்த நாடாக இருந்தது. அதன் மன்னர்கள் கம்பளி வியாபாரத்தின் மூலம் வரியாக நிறைய வெள்ளி உலோகத்தை சேர்த்து வைத்திருந்தனர். வெள்ளி சேமிப்பு இங்கிலாந்தை வடமேற்கு ஐரோப்பாவில் வரம் பெற்ற நாடாகவே கருதச்செய்தது. மெரிக்காவின் மன்னன் ஓஃப்ஃபா முதல் முறையாக வெள்ளியில் இங்கிலாந்தின் பென்னி (PENNY) நாணயத்தை வெளியிட் டான். தேவாலயங்கள் நார்மண்டிகளின் மூலமாக இங்கிலாந்தின் வளமையை முஸ்லீம்களுக்கெதிரான சிலுவைப் போருக்கு பயன்படுத்திக் கொண்டது. 911 C.E. ல் நார்வேயின் வைகிங்க் ரோல்லோ என்பவன் வட ஃப்ரான்சில் தனியாக (முஸ்லீம்களிடமிருந்து பாதுகாப்பாக) ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அங்கு தான் ‘லயன் ஹார்ட்’ என்று அழைக்கப்பட்ட ரிச்சர்டின் கோட்டை இருக்கிறது. அந்த பகுதியே உள்நாட்டு சண்டைக்கு புகழ் பெற்ற நார்மண்டி என்று அழைக்கப்பட்டது. ரோல்லோ ஆர்ச்பிஷப் ரோவனின் கரங்களால் கிறிஸ்துவத்தை தழுவி ஃப்ராங்க்சின் பாதுகாவலன் போல் செயல்பட்டான். நார்மண்டிகளின் பிரபுக்கள்       ( DUKES OF NORMANDY) என்னும் பாரம்பரிய வழிமுறையை ஏற்படுத்தினான். நார்மண்டிகள் ஃப்ரான்சின் மதவெறி குணநலன்களுடனும் ரோம், கரோலின், ஃப்ராங்க்ஸ், ஸ்கேண்டிநேவியன், இத்தாலி வழிமுறைகளுடனும், துணையுடனும் இருந்தனர். மேலும் பதினோராம் நூற்றாண்டில் கலாச்சார கலவையாகவும், சக்தி வாய்ந்த மத, அரசியல், இராணுவம் சார்ந்ததாகவும் நார்மண்டி விளங்கியது. தேவாலயங்கள் நார்மண்டிகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின. ஐரோப்பாவில் கிறிஸ்துவத்துக்கு மிகப்பெரிய இராணுவ பலமாக நார்மண்டி உருப்பெற்றது. இவர்கள் நிர்வாகத்தாலும், ஒரு மாதிரியான தலை மழித்த கோலத்துடன் இராணுவ நடவடிக்கைகளைத் தயார் படுத்துவதிலும், நேரம், பயிற்சிக்காக பண முதலீடு செய்வதிலும் ஈடுபட்டனர். கடந்த பல நூற்றாண்டுகளாக நார்மண்டிகள் கடற்கொள்ளையர்களாக இருந்தவர்கள். காலத்தில் அவர்கள் 980 C.E. லிருந்து 1030 C.E. வரை வட ஐரோப்பாவில் அரண்மனைகள் கட்டுவதிலும், அகழிகள் தோண்டுவதிலும் சிறந்து விளங்கினர். நார்மன்கள் போர் இல்லாமல் இருப்பதை விரும்புவதில்லை போரில் தோற்பது போலிருந்தால், சூது செய்தும், லஞ்சம் கொடுத்தும் வெற்றி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
                                            முஸ்லீம்களிடமிருந்து 1000 மைல்களுக்கப்பால் மெடிட்டரேனியனில் நார்மன்கள் முதல் காலனியை அமைத்தனர். 827 C.E. லிருந்து முஸ்லீம் கள் வசமிருந்த சிஸிலி தீவை 1060 C.E. ல் திரும்பக் கைப்பற்றினர். நான்மண்டியில் தேவாலயங்கள் தான் கல்வியறிவு பெற்ற மன்னர்களையும், இளவரசர்களையும், பிரபுக்களையும் அரசாங்கங்கள் அமைக்கத் தேர்ந்தெடுத்தன. அவர்கள் லத்தீன் மொழியின் இலக்கணத்தையும், பேச்சுத்தன்மையும், கணிதத்தையும், இசையையும், புவியியலையும், ஜோதிடத்தையும், பௌதிகத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் கற்றுத் தேர்ந்தனர். போப் இரண்டாம் சில்வெஸ்டர் (945 C.E.-1003 C.E.) என்ற முதல் ஃப்ரென்ச் போப் மதபோதகராக பல சாதனைகள் புரிந்தார். கணிதம், தத்துவம், பௌதிகத்தில் பல கட்டுரைகள் எழுதினார். அரேபிய எண் முறைகளை அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத ரோமன் எண் முறைக்கு மாற்றினார். பூஜ்ஜியத்திற்கு ரோமன் எண் முறைகளில் வடிவம் இல்லை. பதினோராம் நூற்றாண்டின் முதல் பாதியில் நார்மண்டிகள் எல்லாத் துறைகளிலும் ஐரோப்பாவில் பலம் வாய்ந்த சக்தியாக மாறி முஸ்லீம்களை அழிக்க சிலுவைப் போருக்கு தயாராக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலான சிறந்த தகுதியாக இத்தாலியின் மதகுரு லான்ஃப்ரான்க் (சிர்கா 1005 C.E.-1089 C.E.) என்ற பெனடிக்ட் துறவி அறிவுக் கூர்மையுடன் இருந்தார். மிகச்சிறந்த குடும்பத்தில் பிறந்த இவர் மன்னர்களுக்கெல்லாம் மேலாக கருதப்பட்டார். அரசியலிலும், நிர்வாகத்திலும், கற்பிப்பதிலும் ஐரோப்பாவிலேயே சிறந்த மதகுருவாக கருதப்பட்டார்.

விதைத்தவர்கள் 1

இந்தக் கட்டுரைக்காக மூலஆசிரியர் கையாண்ட புத்தகங்கள் வருமாறு :
தி நார்மன் கிங்க்ஸ்
தி க்ராஸ் அண்ட் தி க்ரெசெண்ட் எ ஹிஸ்டரி ஆஃப் க்ருஸேட்
தி லைஃப் அண்ட் டைம் ஆஃப் வில்லியம் 1
தி ப்ளடி ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டன்
தி முஸ்லிம் நியூஸ்
ஓரியண்டலிசம்
டைம் அட்லாஸ் ஆஃப் வேல்ட் ஹிஸ்டரி
ஹிஸ்டரி ஆஃப் ஈரோப் அண்ட் தி சர்ச்
க்ருஸேட்ஸ்
டூம்ஸ் டே
ஹாரிபிள் ஹிஸ்டரி
இன்னும் பல புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள்.
                
                                     இந்தக் கட்டுரைப்பகுதி படிப்பவர்களுக்கு முஸ்லீம்களை அழிக்க வந்தவர்கள் யார்? அவர்களின் பூர்வீகம் என்ன? ஆங்கிலேயர்கள் யார்? இங்கிலாந்தில் ஊடூரியவர்கள் யார்? யூதர்கள் எப்படி இங்கிலாந்தில் குடியேறினர் போன்ற சரித்திரச்சுவடுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். மேற்கத்தியர்கள் எப்படி சுலபமாக தங்களின் இரத்தவெறியை சாதாரணப் பொய்கள் மூலம் மறைத்துக் கொண்டனர் என்று தெரியவரும். நான் எதையும் கூட்டி சொல்லவில்லை. அப்படியே மொழி பெயர்த்து எழுதி இருக்கிறேன். இது நிச்சயம் வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும். எதிரியின் உண்மை அடையாளத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மதம் எப்படி இந்த ஐரோப்பிய மடையர்களின் வெறியாட்டத்திற்குப் பயனளித்தது என்பது புரியும். சரித்திரம் என்பதே அடுத்தவர்களுக்கு எழுதப்படுத்தப்பட்ட மரண சாஸ்திரமாகும். முஸ்லீம்களை அவமானப்படுத்த, அழிக்க ஐரோப்பாவிலிருந்து எப்படி ஒரு கூட்டம் புறப்பட்டது என்று இன்றைய காலகட்டத்தில் தெரிந்து கொள்வது கடமையாகும். இந்த இன அழிப்புப் (சிலுவைப்) போர் என்பது முடிவுபெறாது. நாம் இறைவனை சந்திக்கும் இறுதிநாள் வரை தொடரும். இதற்கு ஆதாரமாக பலவற்றைக் கூறலாம். உதாரணமாக போஸ்னியா, கொஸோவா, இந்தோனேஷியா, நைஜீரியா, ஸோமாலியா, சிரியா, ஏமன் மற்றும் பாலஸ்தீன் பிரச்சினைகள். இந்த  முஸ்லீம்கள் நாடுகள் மீதான தாக்குதல் உலகில் முஸ்லீம்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் மேற்கத்தியர்களாலும், அவர்களின் நட்பு, கூட்டு நாடுகளாலும், யூதர்கள், கிறிஸ்தவர்களாலும், கழுத்தறுக்கும் சில முஸ்லீம் நாடுகளாலும் நடத்தப்படுகின்றன.
                                             இவையெல்லாம் குர் ஆன், பைபிளுக்குப் பிறகு மூன்றாவது பெரிய புத்தகமாகக் கருதப்படும் சதிவலைகளால் பின்னப்பட்டு பனிரெண்டாம் நூற்றாண்டில் கூட்டாக வடிவமைக்கப்பட்ட ‘டூம்ஸ் டே’ (THE DOOMS DAY) என்ற புத்தகம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஒருவகையில் பிரிட்டிஷ் தீவுகளின் வரலாறு போலவே தோன்றினாலும், இவர்களுக்குள் யார் எங்கிருந்து ஊடுருவினார்கள் எப்படி இவர்களை முஸ்லீம்களை அழிக்கும் வெறியேற்றினார்கள் என்ற வரலாறைச் சொல்லும் கட்டுரை இது. இதன் ஆங்கில வடிவத்தில் ஃப்ரென்ச், இங்கிலாந்து மன்னர்களின் அருவருக்கத்தக்க, ஆபாசமான காமக்களியாட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசியமானவற்றைத் தவிர நான் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துவிட்டேன். இறைவனிடம் தன் மக்களுக்கு சாந்தியும், சமாதானமும் அருளுமாறு வேண்டிய ஈஸா நபியின் மதமாக எண்ணி வழிபடும் கிறிஸ்தவர்கள் தான் உலகின் மிகப்பெரிய அயோக்கியர்கள், இரத்தவெறி பிடித்தவர்கள், நன்றி கெட்டவர்கள், எத்தனை முறைவேண்டுமானாலும் செய்த சத்தியத்தை மீறுபவர்கள், காமத்தை பல வழிகளிலும் தீர்த்துக்கொள்பவர்கள், இதுவரை இவர்களால் உலகில் பலவழிகளிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பில்லியனை தொடும். ராஜ குடும்பத்தினர் யார்? யார்யாருக்கு எப்படி உறவினர்கள் ஆனார்கள். பூலோகத்தின் அதிகப்படியான மண்னை ஆளும் அளவுக்கு எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்திருப்பார்கள் என்பது இந்த கட்டுரையைப் படிக்கும் போது புரியும். ஒருவகையில் இந்தக்கட்டுரை வேறு கண்டத்தின் வரலாறு போல் தோன்றினாலும், விஷத்தைப் பற்றி ஏற்கனவே ஓரளவு தெரிந்திருக்கும் நாம் அதே நேரத்தில் விஷம் கடித்த பாம்பைப்பற்றி தெரிந்து கொள்வது போல் இருக்கும்.
     ரோமக் கிறிஸ்தவர்களின் நாட்குறிப்புப்படி 15 ஜூலை 1999 அவர்கள் 70,000 முஸ்லீம்களைக் கொன்று ஜெருசலத்தைக் கைப்பற்றிய 900 ஆண்டின் நினைவாண்டு விழா. முன்னர் இதே ஜெருசலத்தை நான்கரை நூற்றாண்டுகளுக்குப் பின் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் முஸ்லீம்கள் வென்றார்கள். உலகில் கிறிஸ்தவர்கள் போல் இரத்தக்கறை படிந்த சமூகம் வேறெதுவும் இல்லை. பெரும்பான்மையான சிலுவைப் போராளிகள் நார்மன் என்று அழைக்கப்படும் வட ஃப்ரான்ஸைச் சேர்ந்த நார்மண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் வில்லியம் என்பவனின் மூத்த மகன் ராபர்ட் கர்ட்ஹோஸ் என்னும் நார்மன் தான் பிரத்தியேக பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து ஆண்டியாக்கையும், ஜெருசலத்தையும் தாக்கினான். 1099 C.E. ல் ஜெருசலத்தை வென்ற பின் ராபர்ட்டை மன்னராக இருக்க கேட்டுக்கொண்டனர். ஆனால், அவன் நிராகரித்து இங்கிலாந்துக்கே திரும்பிச் சென்றுவிட்டான். வில்லியமின் மருமகன் ஸ்டீஃபன் என்பவன் போரில் கொல்லப்பட்டு விட்டான். நார்மன் மற்றும் கிறிஸ்துவ தீவிரவாதிகளுக்கு முஸ்லீம்கள் முதல் இலக்கு அல்ல. அவர்களின் முதல் இலக்கு முதலாம் சிலுவைப் போருக்கு 29 ஆண்டுகளுக்கு முன் 1066 C.E. ல் ஆங்கில பிரிட்டிஷாரின் மீது தான். அப்போது இங்கிலாந்து செல்வச் செழிப்பான நாடாக இருந்தது. இரண்டாம் போப் அலக்ஸாண்டர், இங்கிலாந்து மன்னர் ஹரால்டை பொருட்படுத்தாமல் ஃப்ரான்ஸின் நார்மண்டியான ட்யூக் வில்லியம் பிரபுவுக்கு ஆதரவளித்து இங்கிலாந்தைக் கைப்பற்றி அங்குள்ள மக்களை உலக இறுதிநாள் வரை வரி செலுத்த சொன்னார். நார்மன்களின் 1066 ன் தீவிரவாதம் தான் பிரிட்டிஷ் தீவுகளின் சரித்திரத்தை மாற்றியது. அதன் பிறகு தான் அவர்களின் செங்கோல் இஸ்லாமியர்களின் பக்கம் மதவெறியாக திரும்பியது அல்லது திருப்பிவிடப்பட்டது.
தெரிந்து கொள்ளுங்கள் இதுவரை கோடிக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெரும்பான்மையானோர் தான் ஏன் கொல்லப்படுகிறோம் என்று காரணம் கூட அறியவில்லை. சொத்துக்களும், வாழ்ந்த வீடுகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் உறவுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன, ஏராளமான முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கே கேள்வி என்னவென்றால், முஸ்லீம் தாய்மார்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டுமா? இது தான்  இறைவனும், தூதரும் முஸ்லீம்களுக்குச் சொல்லித் தந்ததா? அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:                                                                     “அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்” –அல் பகரா:217                                        இந்த வரிகள் மிகத் தெளிவாக சொல்கின்றன. அதாவது முஸ்லீம்களை வழிகெடுத்து இஸ்லாமை நிராகரிக்கும் வரை அவர்கள் முஸ்லீம்கள் மீது ஏதேனும் ஒருவகையில், ஏதேனும் ஒரு நாட்டில் கொன்று கொண்டிருப்பார்கள். இது அல்லாஹுத் தாலா சொல்வது. ஜிஹாத் என்பதை உலக அரங்கில் அமெரிக்காவாலும், ஐரோப்பியர்களாலும், பெண்கள் எப்படி பட்டுப்புடவையையும், நகைகளையும் திருமணத்தின் போது மட்டும் பயன்படுத்துவார்களோ அதேபோல் அறிவையும் பயன்படுத்தும் சில நாடுகளும் தவறாக சித்தறிக்கின்றன. அட அழுகிய புண்ணை உண்ணும் அருவருப்பானவர்களே அரபியில் ஜிஹாதிற்கு தூய விளக்கம் என்ன என்று உலகின் அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்த்துப் பாருங்கள். நீங்கள் முஸ்லீமாய் இல்லாவிட்டாலும், ஜிஹாதை விரும்ப ஆரம்பித்துவிடுவீர்கள். எப்படி இஸ்லாமிய வங்கி, இஸ்லாமிய சட்டங்களைக் காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்களோ அதேபோல் ஜிஹாதையும் ஏற்றுக்கொள்வீர்கள். ஜிஹாதின் வழியில் போராடாத வரை இந்த எதிரிகளின் தாக்குதல்கள் நிற்கப் போவதில்லை.                                                           “தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்து விட பார்க்கிறார்கள், அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். இணை வைப்பவர்கள் இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே தன் தூதரை அனுப்பினான். – அத் தவ்பா 32-33                                                           சத்தியம்! சத்தியம்!! எவ்வளவு சத்தியமானது அல்லாஹ்வின் வார்த்தைகள்.

ஞாயிறு, 3 மே, 2015

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 2

சார்ல்மாக்னியின் முதல் சில போர் நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. இஸ்லாமியர்களை எதிர்த்து வட ஸ்பெயினில் நடத்திய போரில் தோல்வியடைந்தான். அப்போதைய கார்டோபாவின் கலீஃபா சார்ல்மாக்னியின் வரவை எதிர்பார்த்துப் போரிட காத்திருந்தார். மேலும் இவன் பாட்டனாரின் டூர்ஸ் வெற்றியின் வெளிப்பாடு இவனிடம் இல்லாமல் போனது. 778 ல் தெற்கு நோக்கி பாம்ப்லோனா நகரைக் கைப்பற்றி, சரகோஸ்ஸாவை வெல்லத் திட்டமிட்டு எதுவும் சாதிக்காமல் ஏமாற்றமடைந்தார். இதற்காக அவனின் படை பாரம்பரிய வழியான ரான்செஸ்வல்லீசைக் கடக்கும் போது, பஸ்க்வெஸ் அல்லது காஸ்கன் குழுக்களால் முன்னால் சென்ற படை தாக்கப்பட்டது. சார்ல்மாக்னியின் பெரிய மாவீரரென்ற கற்பனை இந்த தோல்விகளால் இவன் ஆட்சியில் கரைபடிந்த புள்ளிகளாய் போனது. 799 ன் மத்தியில் மூன்றாம் முறையாக ஃப்ராங்கிஷ் மன்னனுக்கு போப்பின் எண்ணெய் ஸ்நானம் தேவைப்பட்டது. ரோமின் சாலையில் எதிரிகளால் தாக்கப்பட்டான். (எதிரிகள் இவனைக் குருடாக்கி, நாக்கை அறுத்து ஆளத்தகுதி இல்லாமல் ஆக்கத் திட்டம் தீட்டியிருந்தனர்.) மூன்றாம் லியோ ஆல்ப்ஸ் வழியாகச் சென்று சார்ல்மாக்னியை பாடெர்பார்னில் சந்தித்தார்.
                                       இருவரும் என்ன ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், 800 ல் சார்ல்மாக்னி ரோம் சென்று போப்புக்கு ஆதரவு தெரிவித்தார். செயிண்ட் பீட்டர்ஸில் கிறிஸ்துமஸ் தினத்தில் லியோ சார்ல்மாக்னியின் மகனை அடுத்த மன்னனாக தேர்ந்தெடுக்க இருந்தார். ஆனால், பிரார்தனை முடிந்து தலை உயர்த்திய சார்ல்மாக்னியின் தலையிலேயே போப் மீண்டும் கிரீடத்தைச் சூட்டினார். சார்ல்மாக்னி மகிழ்ச்சியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டான். சட்டப்படி மன்னனாகத் தகுதிவாய்ந்தவர் கான்ஸ்டாண்டிநோபிளைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். மன்னன், போப் மற்றும் மக்களின் விருப்பங்கள் இணைந்து ஜெர்மனிய பழங்குடி வாரிசுதான் மேற்கில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று முடிவாகியது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தின் இந்த புதிய முடிவுதான் அன்றிலிருந்து இன்றுவரை போப்களைத் தேர்ந்தெடுப்பதிலும், சிலுவைப்போர் அமைத்து இரக்கமின்றிக் கொல்வதிலும், நேட்டோ படையுடன் சேர்ந்து இஸ்லாமிய நாடுகளை சூறையாடுவதிலும் பங்கு வகிக்கிறது. இந்த இரத்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் தான் இங்கிலாந்தில் அரச குடுப்பத்திலும், மற்ற ஐரோப்பிய நாடுகளின் வாரிசு வரிசையில் இடம்பிடிக்க முடியும்.  800 ல் சார்ல்மாக்னியின் பதவியேற்பில் முதன்முறையாக பிரமாண உறுதி மொழியில் படிக்கப்பட்ட வாசகம் அப்படி. அதாவது, “சார்லஸ் மிகவும் சாந்தமான அகஸ்டஸ், கடவுளின் பெயரால் பதவி ஏற்கப்படுகிறார். இவர் பசிபிக்கின் மாபெரும் சக்கரவர்த்தி, ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யும் சக்கரவர்த்தி ஆவார்”. என்று முன்மொழிந்தனர்.
                          அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாம் லியோ சார்ல்மாக்னியை மதச்சடங்கு ஒன்றில் ஜெர்மனியில் சந்தித்தார். 796 ல் ஆசென் நகரில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுற்ற சார்ல்மாக்னியின் புதிய தேவாலயத்தின் திறப்புவிழாவில் சந்திக்க நேர்ந்தது. சார்ல்மாக்னியின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசென் நகரம் அர்த்தமுள்ளதாகவும், அவசியமாகவும் இருந்தது. அசென் சாம்ராஜ்ஜியத்தின் வடக்கிலும், ரோமின் எதிர்திசையிலும் இருந்தது. சார்ல்மாக்னி தன் ஒரே மகன் லூயிஸை ஆட்சி அதிகாரத்தில் இணைக்க ஆசைப்பட்டான். 805 ல் வடக்கில் பயணம் செய்த போப் இதனை ஆதரிக்கவில்லை. இதனால் போப் இல்லாமலேயே 813 ல் ஆசென் நகர தேவாலத்தில் மகனுக்கு துணைச் சக்கரவர்த்தியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தான். இந்த ஆசென் நகரம் சார்ல் மாக்னியின் ஒன்றிணைந்த ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தள்ளியிருந்தது. மிகச்சரியாக ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மேற்குக்கும், கிழக்குக்கும் நடுவில் இருந்தது. மேலும், நவீன அமைப்பை வெளிப்படுத்தும் விதமாக பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியின் எல்லைகளின் மத்தியில் இருந்தது.                 
                              சார்ல்மாக்னி ஆட்சியைப் பரப்பும் எண்ணம் வந்தவுடன் தன் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணினான். கிறிஸ்தவ அறிவு ஜீவிகள் ஆசென் நகரிலிருந்து சார்ல் மாக்னிக்குக்கு வேலையாட்களைத் தேர்ந்தெடுத்தனர். சார்ல்மாக்னி ஆசெனில் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கென நிகழ்ச்சிகளை நடத்தினான். வடக்கின் பார்பேரிய பகுதியில் மட்டுமே கல்வி கற்றவர்கள் அதிகம் பேர் இருந்தனர். 780 ல் ஆசென் அரண்மனையில் ஒரு பள்ளியை ஆரம்பித்து யோர்க் நகரத்திலிருந்து அல்சியன் என்ற சிறந்த ஆசிரியரை அழைத்து வந்தான். தானும் சமயங்களில் தன் குடும்பத்துடன் பாடம் கற்க செல்வான். சிறந்த ஏடுகள் அங்கு அழகாக நகல் எடுக்கப்பட்டன. அவைகளே பிற்காலத்தில் ரோமன் மாதிரி எழுத்துக்கள் ஆகின. மேலும் தனிச்சிறப்பு உண்டாக்குவதற்காக கரோலின்ஜியன்களின் புத்திசாலித்தனமான கலையம்சமுள்ள வாழ்க்கை முறைகளைக் கொண்டுவந்தான்.
                              சார்ல்மாக்னி தனக்குப்பிறகு, தன் பாரம்பரிய ஆட்சியை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக்கொடுக்க விரும்பினான். ஆனால், அவனின் முதல் இரண்டு பிள்ளைகளும் முறையே 810,811 ம் ஆண்டுகளில் இறந்து போயினர். அதனால் எஞ்சிய கடைசி மகன் லூயிஸ் 814 ம் ஆண்டு மொத்த பகுதிகளுக்கும் ஒரே சக்கரவர்த்தி ஆனான். லூயிஸ் தந்தையைவிட குணத்தில் வித்தியாசமாக இருந்தான். தெயவபக்தி உள்ள லூயிஸ் என்று பொருள்படும் வகையில் லூயிஸ் தி பியஸ் (LOUIS THE PIOUS) என்று அழைக்கப்பட்டான். தேவாலயத்தின் ஆதரவுடனே இருக்க விரும்பினான். சார்ல் மாக்னியின் சாம்ராஜ்ஜியம் யாரும் நெருங்க முடியாத வண்ணம் இருந்தது. ஆனால், 840 ல் லூயிஸ் மரணமடைந்தவுடன் எல்லாம் மாறியது. சார்ல்மாக்னியின் லெஜெண்ட் (LEGEND) என்ற அவன் புகழும், கலைப்படைப்புகளும் இன்று வரை பெயர் பெற்றவை. சார்ல் மாக்னியின் சாம்ராஜ்ஜியம் வடகிழக்கு ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனியின் சில பகுதிகள், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் வட இத்தாலி இணைந்து இருந்தது. 840 ல் சார்ல்மாக்னியின் மகன் லூயிஸ் இறந்தவுடன் பாரம்பரிய பிரதேசத்தைப் பிரிப்பதில் லூயிஸின் மூன்று மகன்களுக்கு இடையில் சண்டை வந்தது. 843 ல் ஒரு குழுவால் சமாதானம் ஏற்பட்டு வெர்டுன் என்ற இடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், பிரிக்கப்பட்ட அந்த எல்லைகளில் எதிர்கால ஐரோப்பாவின் இருண்ட சரித்திரங்கள் ஆரம்பிக்க இருந்தன.
                              ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பூகோள அமைப்பில் ஒருபுறம் அட்லாண்டிக்கரையும், மற்றொரு புறம் ரினியும் உள்ளது. லத்தீன்களுக்கு தெரியும் செங்குத்தான பாகம்தான் பிரான்ஸ் என்று. ஆனால், பிரிக்கப்பட்டது  மேற்குபிரான்ஸ், மத்திய பிரான்ஸ் மற்றும் கிழக்குபிரான்ஸ் ஆகும். மேற்குபிரான்ஸில் மேலும் சில பிரான்ஸ் பகுதிகள் இணைக்கப்படவேண்டும். கிழக்கு பிரான்ஸில் சராசரி ஜெர்மன் மொழிபேசும் ரினியின் கிழக்குப்பகுதி இணைக்கப்பட வேண்டும். மத்தியபிரான்ஸ் சந்தேகத்திற்கிடமாக இருந்தது, ஏனென்றால் அது மொத்த பிரான்ஸிலும் செல்வம் கொழிக்கும் பகுதி. இது லூயிஸின் மூத்த மகன் முதலாம் லோதயிருக்கு வழங்கப்பட்டிருந்தது. மத்தியபிரான்ஸ் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலிருந்து நீண்டு கீழ்பகுதியில் ரினியின் இருபுறமும் ஸ்விட்சர்லாந்தும் இத்தாலியும் இருந்தன. அந்த தவறான பங்கீடின் படியே நூற்றாண்டாக இருந்தது. வடக்குப்பகுதி லோதாரின்ஜியா (லோதர் இன பழங்குடியினர் இருந்ததால்) என்று மாறியது. பிரான்சு லோரியன், ஸ்விட்சர்லாந்து அல்ஸாசி என்று மாறியது. ஆட்சி வலுவடைந்தாலும், வலுவடையாவிட்டாலும், மேற்கோ கிழக்கோ மெதுவாக ஃப்ரான்சும், ஜெர்மனியும் இணைந்தன. ரினிலாந்து பிறகு, ஆட்சி மாறியது. சில நூற்றாண்டுகள் பர்கண்டியும், வட இத்தாலியும் கவனிப்பு இல்லாமல் போயின.
                               புராதன கரோலின்ஜியன்களின் பரம்பரை ஒன்பதாம் நூற்றாண்டில் ரினியின் இருபக்கமும் ஆதிக்க சக்தியில் பேரரசை ஆண்டது. ஆனால் 911 ல் ஜெர்மனியையும், 987 ல் ஃப்ரான் சையும் இழந்தார்கள். 919 களில் ஜெர்மனியை ஆட்சி செய்தவர்கள் சாக்ஸனின் வம்சாவழிகள். ஆனால், 987 ல் ஃப்ரான்சில் ஆட்சிக்கு வந்த ஹியூக் கேபெட் ஒரு ஃப்ராங்க். இவரின் வம்சாவழியினர் தங்கள் குலப்பெயரான ஃப்ராங்க் என்பதை மறக்காதிருக்க “ஃப்ரான்ஸ்” என மாற்றி நான்கு நூற்றாண்டுகளாக பாரிசிலிருந்து ஆண்டார்கள்.                   

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 1

 ஃப்ராங்ஸ்கள் ஏதோ இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்று எண்ணவேண்டாம். இஸ்லாத்தை யூதர்களுக்கு அடுத்து ஆதியிலிருந்து எதிர்த்து வரும் இரத்தவெறி பிடித்த ராஜவம்சக்கூட்டம். ஐரோப்பிய நாடுகளில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள். பலம் வாய்ந்த அமெரிக்க டாலரை வீழ்த்தி ஈரோ என்ற நாணயத்தை பல எதிர்ப்புகளுக்கிடையில் வெளியிட்ட அறிவாளிகள். டயானா, டோடி படுகொலையின் மூலக் குற்றவாளிகள். இன்றைய நேட்டோ படையின் கூட்டாளிகள். ஸ்பெயின், ஃப்ரான்சிலிருந்து இஸ்லாத்தை விரட்டியவர்கள். நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவதூறாகப் பிரசாரம் செய்வதற்கும், ஹிஜாப் அணியக்கூடாது போன்ற இஸ்லாத்துக்கு எதிரான சட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் யார், இவர்களின் உறவுமுறை என்ன எப்படி ஆட்சிகு வந்தார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளவே இந்த தொடர்.                                   

                        ஃப்ராங்க்ஸ்கள் எனப்படுபவர்கள் பிரான்ஸும், பிரிட்டிஷும் இணைந்த கூட்டுப்படையினராவர். ஃப்ராங்க்ஸ்கள் தான் முதலில் பிரான்சில் ராஜவம்ச வழியை கொண்டுவந்தவர்கள். அடிப் படையில் ஜெர்மனியின் பழங்குடிப் பிரிவின் ஒன்றிலிருந்து தான் ஃப்ரான்ஸ் என்ற வார்த்தை வந்தது.   ஐந்தாம் நூற்றாண்டில் மெரோ வின்ஜியன் பேரரசில் மெரோவிச் என்ற தலைவர் இருந்தார். ஃப்ராங்க்ஸ்களின் எதிர்காலம் இவரின் பேரன் க்ளோவிஸ் என்பவனில் இருந்து துவங்கியது. 481 ல் க்ளோவிஸ் முடிசூட்டிக்கொள்ளும் போது 15 வயது. அப்போது இந்த மெரோவின்ஜியன் பேரரசின் தலைநகரம் தூர்னை (தற்போதைய தெற்கு பெல்ஜியம்). க்ளோவிஸின் இரண்டு செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் சரித்திரத்தை மாற்றியது. ஒன்று, தன் பார்பேரிய (பார்பரியம் என்றால் நாகரீகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள் என்று பொருள்) மன்னராட்சியை ஆல்ப்ஸ் மலையின் வடபகுதி வரை பரப்பினான். இரண்டு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவனாக மதம் மாறினான். மற்ற பார்பரிய ஆட்சியாளர்கள் அரியனிஸம் என்ற மதக்கொள்கையில் இருந்தார்கள். க்ளோவிஸ் சோம்மி என்ற பகுதியில் இருந்து லொய்ரி என்ற பகுதி வரை மனசாட்சியற்ற வகையில், பல சதித்திட்டங்கள் தீட்டி சக பழங்குடியின பகுதிகளைக் கைப்பற்றினார். தென் கிழக்கிலிருந்த பர்கண்டியர்களை தனக்கு மரியாதை செய்ய வற்புறுத்தினான். தென் மேற்கில் விசிகோத் என்பவர்களையும் வென்று 507 ல் மெடிட்டரேனியன் கரை தவிர்த்து மொத்த பிரான்சையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
                           இந்த வெற்றிக்கு அவன் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியதும், காவுல் பகுதி மற்றும் ரோமுக்கு மரியாதை செலுத்தும் மற்ற அரிய இன விசிகோத்களும் பெரிதும் உதவியது தான் காரணம். மேலும்,  கிறிஸ்தவ வம்சத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டான். கான்ஸ்டண்டைன் பகுதியை வென்றதின் மூலம் (KENT) கெண்டைச் சேர்ந்த பக்திமிகுந்த ஈதெல்பெர்ட் என்பவளை திருமணம் செய்திருந்தான். மீண்டும் பர்கண்டிய இளவரசி  களோடில்டா என்பவளை மணந்தான். எதிரியான மற்றொரு ஜெர்மனிய பழங்குடியான அலமன்னியை தோற்கடிக்க தன் கணவனின் கிறிஸ்தவ மதமாற்றமே காரணம் என்று கூறினாள். அலமன்னியை வென்றதின் பிறகு, அவனின் இராணுவத்தினர் 3000 பேரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். க்ளோவிஸ் பாரிஸை தலைநகராக மாற்றிக் கொண்டு கிறிஸ்தவத்திற்கு முன்பிருந்த புராதன ‘சாலியன் ஃப்ராங்க்ஸ்’ சட்டங்களை இயற்றினான். இவனின் தலைநகர் மாற்றத்திற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பி கலவரமாகியது. இவனின் சாலியன் சட்டத்தை மட்டும் சில நாள் கழித்து ஏற்றுக்கொண்டனர். வட ஐரோப்பாவிலும், பிரான்சிலும் இவன் மன்னராட்சி புதிய எழுச்சியாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் மாறியது.
                               511 ல் க்ளோவிஸ் இறந்த பிறகு இவனது பகுதிகள் இவனின் நான்கு மகன்களால் பிரிக்கப்பட்டது. அவன் நீண்டகாலமாக உருவாக்கிய பேரரசு சமபாகமாக பிரிக்கப்பட்டு வலுவி ழந்தது. சில நாட்களில் மீண்டும் விரிவாக்கப்பட்டு முற்காலங்களில் மரியாதை செலுத்திய பர்கண்டி இணைக்கப்பட்டு 534 ல் ஃப்ரங்கிஷ் மன்னராட்சியானது. ஃப்ரங்கிஷ் மூன்று தனி மன்னராட்சியாக மாறியது. பழைய இடங்களும், நவீன பெல்ஜியம் மற்றும் வட கிழக்கு பிரான்சும் இணைந்து ஆஸ்ட்ரேஷியா ஆனது. க்ளோவிஸால் வெற்றி கொள்ளப்பட்ட மத்திய பிரான்சு பகுதி நியூஸ்ட்ரியா என்று அழைக்கப்பட்டு, பர்கண்டி அதன் சொந்த பெயரிலேயே இருந்தது. இரு ஆண்டுகளுக்கும் மேலாக க்ளோவிஸின் வழிவந்த வாரிசுகள் ஆண்டுவந்தார்கள். இடையில் நியூஸ்ட்ரியாவும், பர்கண்டியும் இணைக்கப்பட்டன. பின்னாளில் எல்லா பகுதிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே அதிகாரத்திற்கு வந்தது. 613 லிருந்து 639 வரை இரண்டாம் க்ளோடயர் மற்றும் அவன் மகன் முதலாம் டகோபெர்ட் ஆகியோரின் ஆட்சி உதாரணமாக அமைந்தது. டகோபெர்ட் இறந்ததும் ஃப்ரங்கிஷ் மன்னர்கள் மெதுவாக தங்கள் சொந்த அதிகாரத் தை இழக்க ஆரம்பித்து, ஜப்பானின் ஷோகுன் போல் அரண்மனை மேயர் மன்னரின் சமஅந்தஸ்துக்கு வந்தார்.
                               ரோமர்கள் சாம்ராஜ்ஜியத்தில் ‘மஜோர் டோமஸ்’ என்ற பதவியில் ஒருவர் இருந்து கொண்டு அரசு நிர்வாக த்தைக் கவனித்துக் கொள்வார். ஃப்ரங்கிஷ் மன்னர்களும் அதே போன்று பதவி உருவாக்கி தங்கள் ஆட்சியில் தலைமை நிர்வாக அதிகாரியை ‘மேஜர் பலாட்டி’ என்று அழைத்தனர். மேஜர் பின்னாளில் மேயர் என்று ஆகியது. இந்த மேஜர் பலாட்டிகள் மன்னருக்கும், இளவரசருக்குமான தொடர்புகள், ஆட்சியில் மன்னருக்கான ஆலோசனைகள், இராணுவ உத்தரவுகள் ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டனர். ஏழாம் நூற்றாண்டின் இடையில் ஆஸ்ட்ரேஷியா, நியூ ஸ்ட்ரியா மற்றும் பர்கண்டிக்கான மேயர்களுக்கிடையே அதிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. 679 ல் இரண்டாம் பெபின் என்ற ஆஸ்ட்ரேஷியாவின் மேயர் ஒரு மேயரின் கட்டுப்பாட்டில் தான் அனைவரும் செயல்படவேண்டும் என்று விடாமல் போராடி மூன்று அரசுக்கும் தானே முதல்முறையாக மேயரானார். இவரின் அதிகாரத்தில் புதிய கம்பீரமான பேரரசு உதயமானது. 714 ல் இரண்டாம் பெபின் மரணமடைந்தவுடன் கலவரம் வெடித்தது. இரண்டாம் பெபினுக்கு முறையான குழந்தைகள் இல்லை. தவறான உறவுகளின் மூலம் பிறந்த மகனும், பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள். உள்நாட்டு கலவரத்தில் இரண்டாம் பெபினின் முறையற்ற மகன் சார்லஸ் வென்று நாட்டை கைப்பற்றினான். இவனின் இராணுவத்திறமையால் சார்லஸ் மார்டெல் “தி ஹாம்மர்” என்று ஐரோப்பியர்களால் பின்னாளில் புகழப்பட்டான். இவனின் கிறிஸ்தவப் பெயர் கரோலஸ் (CARO LUS) என்பதால் இவனின் கீழ் வந்தவர்கள் கரோலின்ஜியன்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
                                   ஃப்ராங்கிஷின் பாரம்பரிய பூமியை ஆண்டு வந்த சார்லஸ் மார்டெல் தனது வட மற்றும் கிழக்கு எல்லைப் பகுதியில் தொல்லை கொடுத்து வந்த ஜெர்மனிய பழங்குடியினரான ஃப்ரிஷியன்கள், ஸாக்சன்கள் மற்றும் பவேரியன்களை எதிர்த்து நீண்ட போரை நடத்தினான். இதற்கு செயிண்ட் பானிஃபேஸ் என்ற கிறிஸ்தவ தொண்டுநிறுவனத்தின் ஆதரவும் இருந்தது. காவுல் பகுதியில் இருந்த அந்த பார்பேரியன் (நாகரீகமற்றவர்கள்) களால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொந்தரவு இருந்தது. ஆனால் தற்போது தென் பகுதியில் சக்திவாய்ந்த புதியவர்களால் தொந்திரவு வர ஆரம்பித்தது. அவர்கள் ஸ்பெயினில் காலூன்றியிருந்த அரபுக்கள். 711 ல் வந்த அரபுகள் ஸ்பெயினிலிருந்து வட பகுதி நோக்கி புயலைப் போல முன்னேறினார்கள். விரைவில் பைரெனீஸுக்கு அருகில் நெருங்கினார்கள். 720 ல் நார்போன்னையும், 725 ல் பர்கண்டியையும் வென்றார்கள். பிறகு, 732 வரை சற்று அமைதியாய் இருந்தனர். பின் மீண்டும் போர்டிவக்ஸ், பாயிஸ்டர்சை வென்று டூர்ஸ் நோக்கி முன்னேறினார்கள். டூர்ஸில் இஸ்லாமிய இராணுவம் சார்லஸ் மார்டெல் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
                              போர் நடந்தது பாயிஸ்டியர்சிலா அல்லது டூர்ஸிலா என்பது சரியாகத் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இரண்டு இடத்தையுமே குறிப்பிடுகிறார்கள். சார்லஸ் மார்டெல்லின் வெற்றி இஸ்லாமியப் படைகளின் முன்னேற்றத்தை மேற்கில் முற்றிலுமாகத் தடுத்து விடுகிறது. இது குறிப்பிடும் படியான திருப்புமுனையாக அமைந்தது. 741 ல் ஸ்பெயினிலிருந்து இதே போன்று பெர்பெர் கூலிப்படைகள் காவுலில் தோற்கடிக்கப்பட்டன. இஸ்லாமிய படைகளை ஐரோப்பாவிலிருந்து திருப்பி விரட்டியதால் சார்லஸ் மார்டெல்லுக்கு ஐரோப்பிய கிறிஸ்தவ சரித்திரத்தில் தனி இடம் கிடைத்தது. அவன் தங்கள் பூர்வீக மெரொவின்ஜியன் சக்தி தனக் கிருப்பதாக கற்பனை செய்து வைத்திருந்தான். அதேபோல் தான் அவன் மகன் மூன்றாம் பெபின். இவன் 743 ல் சைல்டெரிக் என்னும் ஒரு பொம்மை மன்னனை ஆட்சியில் வைத்திருந்தான். பின் என்ன நினைத்தானோ போப் ஆண்டவரின் ஒப்புதலைப் பெற்று 751 ல் அந்த மன்னனை நாட்டை விட்டே துறத்தினான். ஃப்ராங்க்ஸ்கள் ராஜ்ஜியத்தில் எது செய்தாலும் போப்பின் தேவஆசி பெற்றே செய்தார்கள். மூன்றாம் பெபின் 768 ல் இறந்தான்.
                           எட்டாம் நூற்றாண்டில் சார்லஸ் மார்டெல்லின் பேரனும் மூன்றாம் பெபினின் மகனுமான சார்ல்மாக்னி மன்னனாக பதவியேற்றான். ஆரம்பத்தில் வெறும் சார்லஸ் ஆக இருந்த இவன் பெயர் லத்தீன் மொழியின் வரிசையில் “சார்ல்மாக்னி” (CHARLEMAGNE- சார்லஸ் தி கிரேட்) என்று அழைக்கப்பட்டது. இவனின்  ஃப்ராங்க்ஸ் பேரரசு மட்டுமே பிரான்சையும், ஜெர்மனியையும் இணைத்து (சில ஆண்டுகள் மட்டும் நெப்போலியன் ஆண்டான்) ஒன்றாக ஆட்சி செய்தது. தந்தையின் பாரம்பரிய தேசமான மேற்குப்பகுதி, தென் மேற்கு பிரான்சிலிருந்து கடற்கரைப் பகுதியை ஒட்டி நெதர்லாந்தும், வட ஜெர்மனி பகுதியும் சார்ல்மாக்னிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, சார்ல்மாக்னியின் சகோதரன் கார்லோமான் இறந்த பிறகு, அவனின் பூர்வீக தேசமான மத்திய பிரான்ஸ் மற்றும் தென்மேற்கு ஜெர்மனியும் இவன் வசமே வந்தது. இவன் 814 ல் இறக்கும் போது மீதி இருந்த ஜெர்மனி பகுதியும், வட இத்தாலியும் இவன் ஆட்சியின் கீழேயே இருந்தது. சார்ல்மாக்னி பதவிக்கு வந்த முதல் ஆண்டு போப்பின் ஆசி பெற்று வட இத்தாலி மீது படையெடுத்தான். இவன் குழந்தையாய் இருந்த போதிலிருந்து இவன் குடும்பம் ரோமின் போப்பிடம் பலமான உறவை வைத்திருந்தது. செயிண்ட் டெனிஸில் 754 ல் போப் இரண்டாம் ஸ்டீபனிடம் பன்னிரண்டாவது வயதில் தந்தை, சகோதரர்கள் உடனிருக்க சார்ல்மாக்னிக்கு  எண்ணெய் ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லம்பார்ட்களை எதிர்த்து இத்தாலியின் மீது இருமுறை படையெடுத்தார். 772 ல் வேறொரு போப் முதலாம் அட்ரியன் என்பவர் மீண்டும் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்ய கேட்டுக்கொண்டார். அதன்படியே செய்து தந்தையைப் போலவே இத்தாலி மீது 773 மற்றும் 774 ல் படையெடுத்தார். இது ஆட்சியின் பரப்பளவை பெரிய அளவில் அதிகரிக்கவும், “கிங் ஆஃப் தி லம்பார்ட்ஸ்” என்ற பட்டம் கிடைக்கவும் வழி செய்தது.
                                     சார்ல்மாக்னி தன் பகுதியை ஆல்ப்ஸ் மலையின் வடக்கே இருந்து கிழக்குபக்கமாக பவேரியாவையும் சேர்த்து விரிவுபடுத்தினான். ஆனால் ஜெர்மனி சாக்ஸன்களுக்கு எதிராக மாறியது. சாக்ஸன்களும், ஜெர்மனி பழங்குடியினரும் ஃப்ராங்கிஷ் பகுதிகளுக்காக அடிக்கடி தங்கள் காடுகளிலிருந்து வந்து சண்டையிட்டனர். சார்ல்மாக்னி சாக்ஸன்களை அழித்து, அவர்களின் சிலை வழிபாட்டுப் பழக்கத்தை மாற்றினான். 772 ல் சார்ல்மாக்னி கொடுமையான முறையில் அவர்கள் மீது படையெடுத்து, உலகை தாங்கிக் கொண்டிருப்பதாக அவர்களால் நம்பப்பட்டு வந்த “இர்மின்சுல்” (IRMINSUL)  என்ற மிகப்பெரிய மரத்தூணை உடைத்து எறிந்து புனிதக் கோயிலைத் தரைமட்டமாக்கினான். சார்ல்மாக்னிக்கு அவர்களை வெல்ல 30 ஆண்டுகளாயின. 804 க்குப் பிறகு, முடிவாக அவர்கள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி இவனின் பேரரசில் குடியேறினர். இது ஒரு கொடூரமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இராணுவ நடவடிக்கை மூலம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். அவனின் சட்டப்புத்தகத்தில் கிறிஸ்தவமதம் மாற மறுத்தால் மரணதண்டனை என்று குறிப்பிட்டிருந்தான். நம்பத்தகுந்த தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் ஒரே நாளில் மதம்மாற மறுத்த 4500 சாக்ஸன்களைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.