புதன், 13 மே, 2015

விதைத்தவர்கள் 5

 1089 C.E. ல் ருஃபூஸ் கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்பான லான் ஃப்ரான்க்  இறந்தவுடன், உடனே அடுத்த ஆர்ச்பிஷப்பை அறிவிக்காமல் நான்காண்டுகள் காலம் தாழ்த்தினான். தேவாலயங்களின் வருமானத்தை தானே பார்த்துக் கொண்டான். பின் 1093 C.E. ல் ஆவோஸ்டாவின் ஆன்செலம் ஆக இருந்த இத்தாலியின் மத மற்றும் தத்துவவாதி ஒருவரை கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்பாக ஆக்கினான். இடையில் ருஃபூஸுக்கும், ஆன்செலமுக்கும் இரண்டாம் போப் அர்பனை நியமிப்பதில் கருத்து வேறுபாடு தோன்றியது. இது போல் பல தொல்லைகள் ருஃபூஸிடமிருந்து வந்ததால் 1097 C.E. ல் ஆன்செலம் இங்கிலாந்திலிருந்து வெளியேறி பெரும்பாலான பதவிக்காலம் வரை  வெளிநாடுகளிலேயே தங்கி இருந்தார். இது ருஃபூஸுக்கு மூன்று பிஷப் ஆலயங்கள் மற்றும் பனிரெண்டு மடங்களின் வருமானத்தை அநுபவிக்க போதுமானதாக இருந்தது. ருஃபூஸ் சிலுவைப் போராளி களுக்கு என்றுமே தடைக்கல்லாகவே இருந்தான். விளைவு 1100 C.E. ல் (தற்போதைய டோடி, டயானாவைப் போல்) மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.
                                           1154 C.E. ல் வில்லியமின் கொள்ளுப்பேரன் இரண்டாம் ஹென்றி இங்கிலாந்தின் புதிய மன்னனாகப் பதவியேற்றான். ஃபிரான்சின் லீ மான்ஸில் பிறந்த இரண்டாம் ஹென்றி ஃபிரான்சின் அக்விடைன் நகரைச் சேர்ந்த இலியனார் என்பவளை மணந்தான். இலியனார் ஏற்கனவே முதல் திருமணமாக ஃபிரான்சின் மன்னன் ஏழாம் லூயிஸை மணந்து இரண்டாவது சிலுவைப் போருக்கு அவனுடன் சென்றாள். அவளின் தகாத போக்கால் தான் இல்லாதபோது அவளின் பேரில் நம்பிக்கையற்று இருந்தான். லூயிஸ் இல்லாத சமயத்தில் தனது மாமன் ஆண்டியாக்கைச் சேர்ந்த ரெய்மாண்டுடன் தகாத உறவு வைத்திருந்த காரணத்தாலேயே கவனம் சிதறி இரண்டாவது சிலுவைப் போர் தோற்பதற்கொரு காரணமாய் அமைந்ததாக ஒரு கருத்து நிலவியது. மன்னன் லூயிஸ் விவாகரத்து செய்த பின் இரண்டாம் ஹென்றியை மணந்து நான்கு குழந்தைகள் பெற்றாள். அதில் மூன்றாவது குழந்தைதான் புகழ் பெற்ற லயன் ஹார்ட் ரிச்சர்ட் (முதலாம்). வாடிகன் வரலாற்றில் ஒரே ஆங்கிலேய போப்பான நான்காம் அட்ரியனின் தேவ ஆசீர்வாதத்துடன் 1171 C.E. ல் இரண்டாம் ஹென்றி அயர்லாந்து மீது போர் தொடுத்தான். இரண்டாம் ஹென்றியும், அட்ரியனும் 1154 C.E. ல் ஒரே வருடத்தில் போப்பாகவும், மன்னனாகவும் பதவியேற்றனர்.
                                          அயர்லாந்தின் செல்வம் சிலுவைப் போருக்கு தேவையானதாக இருந்தது. வெற்றி பெற்ற அயர்லாந்தை இரண்டாம் ஹென்றி தனது முண்னணி ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொண்டான். யார் யார் ஆங்கிலம் பேசி, ஆங்கிலேயர்களைப் போல் உடை உடுத்தி தோன்ற ஒப்புக்கொண்டார்களோ அவர்களை அயர்லாந்திலேயே வாழ அனுமதி அளித்தான். எஞ்சியவர்கள் கொசு, மூட்டைப்பூச்சிகள் போல் வேட்டையாடப்பட்டனர். மேற்கு ஐரோப்பாவின் முண்ணனி பணக்கார நாடாக இருந்த அயர்லாந்து ஏழை நாடாக்கப்பட்டு மிகவும் பின் தள்ளப்பட்டது. வெற்றிகரமான மன்னனாகத் திகழ்ந்ததால் போப் இரண்டாம் ஹென்றியை அழைத்து ஜெருசலத்தின் மன்னராக்க புதிய சிலுவைப் போருக்கு (சுல்தான் ஸலாவுத்தீன் அய்யூபை எதிர்த்து) தலைமை தாங்கச்செய்தார். அன்றிலிருந்தே பிரிட்டிஷ் தீவுகளுக்கு அயர்லாந்தின் தொல்லை பாலஸ்தீன் போல் ஆரம்பமாகியது. எத்தனையோ வெற்றிகரமான ஆங்கில அரசுகள் அடிப்படை கிறிஸ்தவ மதத்தின் பேரில் அயர்லாந்தில் சமாதானத்திற்கு முயற்சித்தன ஆனால் அரசாங்கங்கள் தோல்வியையே பெற்றன. 1187 C.E. ஜுலை 4 ல் ஸலாவுத்தீன் அய்யூபி ஜெருசலத்தை வென்ற பின் ஆண்டியாக்கின் மடாதிபதி, இரண்டாம் ஹென்றிக்கு தான் இங்கிலாந்தை வளமான நாடாக கருதுவதால், அதன் மன்னனிடமிருந்தும், மக்களிடமிருந்தும் சிலுவைப் போராளிகளுக்கு உதவுமாறு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார். இரண்டாம் ஹென்றி 30,000 மார்க் பணத்தை ஜெருசலம் வங்கிக்கு அனுப்பினார். மூன்றாவது சிலுவைப் போருக்காக இரண்டாம் ஹென்றி மக்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை வரியாக தந்துவிட வேண்டுமென்று உத்தர விட்டான். பெரும்பான்மையானவர்களுக்கு  அது சுமையாக இருப்பதாக அறியப்பட்டதால் வரி செலுத்தாதவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என எச்சரிக்கப்பட்டனர். இந்த வரிகள் 1166,1185,1188 C.E. ல் முறையே தனி மனித வருமானத்திற்கு எதிராக புனித மண்ணை மீட்டெடுக்க வசூலிக்கப்பட்டது.
                       1189 C.E. ல் லயன் ஹார்ட் ரிச்சர்ட் இங்கிலாந்தின் மன்னனாக பதவிக்கு வந்தான். செப்டம்பர் 29 1999 ல் லண்டன்டைம்ஸ் பத்திரிக்கை ரிச்சர்ட் ஆணோடு ஆண் (HOMO SEX) உறவு கொள்ளும் பழக்கமுள்ளவன். ஃப்ரான்சின் மன்னன் பிலிப் அகஸ்டசுடனும், ரிச்சர்டின் மச்சினன் ஸான்சோ என்னும் சிறுவனுடனும் இயற்கைக்கு மாறான உறவு வைத்திருந்தான் என்று செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு ஆங்கில திரைப்படத்தில் இவன் காதல் கவர்ச்சி உள்ளவன் போல் பொய்யாகக் காட்டப்பட்டது. உண்மை அதுவல்ல. இவன் ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்திருந்தாலும் இவனின் தாய் மொழி ஃப்ரென்ச் ஆகும். தனது இளமை காலத்தை மத்திய ஃப்ரான்சிலுள்ள பாயிஸ்சர் என்ற இடத்தில் தனது தாயாரின் மாளிகையிலேயே கழித்தான். இவன் மன்னராக இருந்த பத்தாண்டு காலத்தில் இங்கிலாந்தில் ஏறக்குறைய ஆறு மாதகால அளவே தங்கினான். மூன்றுமாத காலத்திற்கு ஒரு முறையும், இரண்டு மாத காலத்திற்கு ஒரு முறையும் ஆக 160 நாட்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வெளிநாடு என்பதாலும், மாற்றுமொழி என்பதாலும் இங்கிலாந்தை வெறுத்தான். அதேபோல் மூன்றாவது சிலுவைப் போருக்கு இரக்கமில்லாமல் வரி வசூலித்ததால் மக்களும் இவனை வெறுத்தார்கள். இவனின் ராஜ எழுத்தாளர் ஹௌடனைச் சேர்ந்த ரோஜர் என்பவர், ரிச்சர்ட் தனது அரண் மனைகள், பட்டங்கள், அரசு அலுவலங்கள் என  அனைத்துப் பொருட்களையும் விற்று சிறந்த மிகப்பெரிய கப்பலை வாங்கினான். ஒரு கட்டத்தில் லண்டன் மாநகரை விற்பதற்குக் கூட தயாரானான். இவன் ஆட்சியிலே இங்கிலாந்து மக்கள் ஒருவர் கூட மகிழ்ச்சியாக இல்லை.
                                  சிலுவைப் போரின் போது ஹாப்ஸ்பர்கின் கொடியை வில்லியம் அக்ராவின் ஆற்றில் தூக்கி எறிந்த காரணத்தால் இவனுக்கும் ஆஸ்டிரியாவின் பிரபு லியோபோல்டுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால், சிலுவைப் போரிலிருந்து திரும்பும் போது ஜெர்மனியால் கைது செய்யப்பட்டு டிசம்பர் 1192 C.E.- ஃபிப்ரவரி 1194 C.E.  வரை சிறையில் இருந்தான். இவனை விடுவிக்க 50,000 (மூன்று மில்லியன் பவுண்டுகள்) மார்க்குகள் பணயத்தொகையாக நிர்ணயிக் கப்பட்டது. இதை இங்கிலாந்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களிடமிருந்து திடீர் வரியாக வசூலிக்கப்பட்டு செலுத்தப்பட்டது. இவன் ஆங்கிலத்தையும், ஆங்கிலேயர்களையும் வெறுத்த போதிலும், மொழியால் பிறப்பால் ஃப்ரென்சாக இருந்த போதிலும் இவனின் சிலை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அருகே உலகின் புகழ் பெற்ற கோதிக் தேவாலயத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. வரிகளை சூசகமாக வசூலிக்க வில்லியம் ரோவனைச் சேர்ந்த யூதர்களை முதல் முறையாக இங்கிலாந்துக்குள் நுழைய விட் டான். அவர்கள் லண்டன், நார்விச், கேண்டர்பரி, ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ், எக்ஸிடர், லின்கன், யோர்க் மற்றும் பல இடங்களில் 27 பகுதிகளில் பரவினார்கள். அவர்கள் மன்னரின் தனிப்பட்ட பணியாட்களாகவும், முக்கியமாக இராணுவத்திற்கு பொருளாதார உதவியளிப்பவர்களாகவும் செல்வாக்குடன் இருந்தனர். ரிச்சர்டின் முடிசூட்டு விழாவின் போது அவனுக்கு பரிசு கொடுப்பதற்காக சில யூதர்கள் தேவாலயத்தில் நுழைந்தனர். இதனால் பெரும் கலவரம் ஏற்பட்டு 30 யூதர்கள் கொல்லப்பட்டும் சில யூதர்களின் வீடுகள் தீயிட்டும் கொளுத்தப்பட்டன. 1190 C.E. ல் ரிச்சர்ட் மூன்றாவது சிலுவைப் போருக்கு கிளம்பிய பின் யோர்க் மற்றும் செயிண்ட் எட்மண்ட் என்ற இடங்களில் மீண்டும் ஆங்கிலேயர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. நார்மண்டியில் சீமான்களும், வியாபாரிகளும், மத குருக்களும் யூதர்களின் எஸ்டேட்கள் மூலம் வரும் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை யூதர்களிடமிருந்து வசூலித்துக் கொண்டனர். மேலும் யூதர்கள் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அரண்மனைகளையும், மடங்களையும், தேவாலயங்களையும் கட்ட பணம் கொடுத்தனர். இதில் பீட்டர்ஸ்பர்க், லின்கனின் தேவாலயங்கள், செயிண்ட் அல்பனின் மடம் மற்றும் ஒன்பது மடங்கள் அடங்கும். வில்லியமின் பேரன் ப்லோயின் ஸ்டீபன் ஆட்சியில் யூதர்களின் வீடுகள் வங்கிகளாகவும், பாதுகாப்பாளர்களின் இடங்களாகவும் இருந்தன. யூதர்களே லின்கனில் சாதாரண குடிமக்களில் முதல் முறையாக கற்களால் வீடு கட்டியவர்கள். 1290 C.E. ல் முதலாம் எட்வர்ட் யூதர்களை இங்கிலாந்தை விட்டு விரட்டி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தார். அவர்களின் இடங்களை ராஜ விசுவாசிகளும், இத்தாலியர்களும், தேவஆசீர் வழங்கப்பட்ட வங்கிகளும் எடுத்துக் கொண்டன. 
                              செஸ்டரைச் சேர்ந்த லியோஃப்ரிக் என்பவனின் மனைவி கோதிவா தன் கணவனிடம் மக்களிடமிருந்து அடாவடியாக வசூலிக்கும் வரியை உடனடியாக நிறுத்த வேண்டினாள். அதற்கு அவன் அவளை நிர்வாணமாக குதிரையின் மீது சந்தைப் பகுதியில் வலம் வந்தால் தான் வரி வசூலிப்பதை நிறுத்துவதாகக் கூறினான். மக்களின் வரிச் சுமையுடன் ப்ளேக் என்னும் நோயும் சேர்ந்து நிறைய உயிர்களை பலி வாங்கியது. மக்கள் யூதர்களையும், மதகுருமார்களையும் தீய சகுனமாக கருதினர். சிலர் யூதர்கள் தான் நோய் கிருமிகளை கிணற்றில் வீசி பரவச் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். இங்கிலாந்து மக்கள் தொகையிலும், முன்னேற்றத்திலும் மேற்குப் பகுதியில் குறிப்பாக ஃப்ரான்சை விட நன்றாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ப்ளேக் நோயின் மரணங்கள் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இத்தாலியை விட இங்கிலாந்தில் குறைந்து கொண்டு வந்தது. 1087 C.E. ல் தன் மூத்த மகன் ராபர்ட் கர்ட்ஹோஸுடனும், ஃப்ரான்ஸ் மன்னன் பிலிப்புடனும் சண்டைப் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது குதிரையிலிருந்து விழுந்து வில்லியம் மரணமடைந்தான். ராபர்ட் கர்ட் ஹோஸ் நார்மண்டியை தனக்கு தருவதாக வாக்களித்து பின் தரமறுத்த தன் தந்தை வில்லியம் மீது கோபமுடனே இருந்தான். ராபர்ட் தன் தந்தையின் மரணத்திற்காக கொஞ்சம் கூட கவலையோ, வருத்தமோ படாமல் ஃப்ரான்ஸ் மன்னனின் உதவியுடன் நார்மண்டியின் நகரங்களை சூறையாடியும், தீக்கிறையிட்டும், மக்களையும் கொன்று வெறியாட்டம் நடத்தினான். வில்லியமின் மரணத்தருவாயின் பாவமன்னிப்பு கலந்த உரை வலைத்தலங்களில் உள்ளன படித்துப்பாருங்கள். இவனின் மரணத்திற்குப் பிறகு இவனின் விசுவாசிகள் குதிரைகளில் ஏறி சொத்துக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளித்தனர். இவனின் பட்டம், பரிசுகள், போர்கருவிகள், நினைவுச்சின்னங்கள் இன்னபிற விலைமதிப்பில்லா பொருட்களை அள்ளிச் சென்று அவனின் இறந்த உடலை நிர்வாணமாக விட்டுச் சென்றனர். இவனின் உடலடக்கம் மிகவும் கேவலமாக நடந்ததாக காலம் குறிப்பிடுகின்றது. இவனின் இறந்த உடலருகே இருந்த இரண்டு காவலர்கள் அழுகிய உடலின் நோய்களால் தாக்கப்பட்டு இறந்து போயினர். வில்லியமின் இறந்த உடலருகே நின்று ஒருவன் இவன் மடங்களின் நிலங்களைக் கொள்ளையடித்தவன் இவனை இங்கே ‘கேயன்’ பகுதியில் புதைக்கக்கூடாது என்று கத்தினான். அவனுக்கு பணம் கொடுத்து கத்தாமல் இருக்கச் செய்தனர். இவனின் உடல் துர்நாற்றத்தினாலும், சிதைந்தும் கனத்ததால் துறவிகளாலும், கொத்தனார்களாலும் வன்முறையான வழியில் அடக்கம் செய்யப்பட்டது. தேவாலயமும், கூடியிருந்தவர்களும் அருவருப்புடனே சடங்கில் கலந்து கொண்டனர். மன்னன் பிலிப், இங்கிலாந்தின் செல்வத்தை உண்டதால் இறந்த உடலின் வயிறு வீங்கி கர்ப்பவதியைப் போல் இருந்தது என்று சொன்னான். டிசம்பர் 24, 1998 ல் பி.பி.சி. ரேடியோ 4 ல் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரும், ஹீப்ருவை தாய் மொழியாகக் கொண்டவருமான கார்டினல் பாஸில் ஹுயூம் வில்லியம் ‘மேன் ஆஃப் தி மில்லினியம்’ என்று புகழுரைத்தான். ஆனால், இரண்டு பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்கள் அதனை மறுத்தனர். உலகில் கிறிஸ்துவத்தைத் தவிர இரத்த வெறி பிடித்தவர்கள் சரித்திரத்தில் காணப்படவில்லை.
                                     இங்கிலாந்தின் ஆட்சிமுறை குடும்ப பாரம்பரியத்தின் வழியே நடைபெறும். எது எப்படியிருந்தாலும் குடும்ப உறவுகள் தொடர்சங்கிலி போல் இருக்கும். சில பெயர்களை சந்ததிகளில் விடுபடாமல் தொடர்வார்கள். உதாரணத்திற்கு வில்லியம், சார்லஸ், ஹென்றி, ரிச்சர்ட் போன்ற பெயர்கள். இங்கிலாந்தின் ராஜ குடும்ப பாரம்பரியம் மக்களின் வருமானத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. நகைப்பில்லை ராஜவம்சத்தின் சொகுசுக் கப்பலின் மதிப்பு மட்டும் 100 மில்லியன் பவுண்டுகள். அதைப் பாதுகாப்பதற்கு மட்டும் 20 லிருந்து 25 மில்லியன் பவுண்டுகள் ஆண்டுக்கு செலவாகிறது. மற்ற அனைத்து ஐரோப்பிய ராஜவம்சத்தினரை விட இது இரு மடங்கு அதிகம். தேவாலயங்கள், ராஜ குடும்பம் இரண்டு மட்டுமே என்றைக்குமே இங்கிலாந்தின் மிகப்பெரிய நிலப்பரப்புகளின் உரிமையாளர்கள். இது பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து மிக நுண்ணியமாக சூழ்ச்சிகரமாக பின்னப்பட்ட ராஜதந்திர வலை. ஜனவரி 27, 2000 ல் நிகோலஸ் டிம்மின்ஸ் என்பவர் லண்டன் ஃபைனான்ஷியல் டைம்ஸின் 7 ம் பக்கத்தில் பிரிட்டனின் பாதி மக்களிடம் வெறும் 7% சதவீத சந்தை மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதென்றும், வெறும் 1% சதவிகித உயர்குடி மக்களிடம் 20% சதவீத சொத்து உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றும் இங்கிலாந்தில் பல துறைகளில் ராஜகுடும்பத்தின் ஊடுருவலும், தடைகளும் உள்ளன.
கல்வி
பணம் செலுத்திப் படிக்கும் தனியார் பள்ளிகள், ஆக்ஸ்பிரிட்ஜ் பட்டப்படிப்பு பயின்றவர்கள் மட்டுமே அரசாங்கம், இராணுவம், தொழில்துறை, விளம்பரத்துறைகளில் உயர் பதவிக்குச் செல்ல முடியும். ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் B.A. பட்டம் பெற்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தானாகவே ஆக்ஸ் பிரிட்ஜின் M.A. பட்டம் கிடைக்கும். 1999 ல் லண்டன் ஃப்னான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கையில் மைக்கேல் ப்ரோவ்சி என்பவர், பிரிட்டனின் 100 பள்ளிகளில் 90 பள்ளிகள் பணம் செலுத்திப் படிக்கும் தனியார் பள்ளிகள், இதில் மாணவர்களில் 7% சதவீதம் மட்டுமே படிக்கின்றனர். இதன் தரம் மற்ற முன்னேறிய ஜனநாயக நாடுகளை விட மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட தனியார் பள்ளியில் பயின்றவர்கள் மட்டுமே சட்டம், மருத்துவத் துறை இன்னபிற முண்ணனித் துறைகளில் சமூகத்தில் வேலை கிடைக்கப் பெறுகிறார்கள். இந்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மேல் வர்க்கத்தினரின் பங்கில் இயங்குகின்றன.
இராணுவம்
இராணுவத்தில் பதவிகள், பயிற்சி, உணவு, உறக்கம் இவைகள் தனியாக இயங்குகின்றன. ஒருமுறை வியாபார நிர்வாகத்தின் ஜாம்பவான், ஜான் ஹார்வி ஸ்மித் போஸ்னிய போரின் போது அட்ரியாடிக் கடலில் ராயல் நேவி விமானத்தைப் பார்வையிடச் சென்று, அதிர்ச்சியடைந்தார். வெறும் ஒரு சில எண்ணிக்கையிலான ஹாரியர் ஜம்ப் ஜெட் விமானங்களை கையாள 1600 நபர்கள் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். அதுவும் வெவ்வேறு அதிகாரிகளுக்கென தனிப்பட்ட உணவு விடுதிகளும் இருந்தன. இந்த குடும்ப அரசுப் பாரம்பரிய வழிமுறையில் 1914-1918 ல் நடந்த மாபெரும் ஐரோப்பியப் போரில் பலதரப்பட்ட உயரதிகாரிகள் லட்சக்கணக்கான இளைஞர்களை முன்னிலைப்படுத்தி போரில் இறக்கச் செய்தார்கள். இவர்கள் கையில் வொயின் கிளாசும், சுருட்டும் புகைத்துக் கொண்டு, பயனளிக்காத உத்தரவுகளைப் பிறப்பித்து இளைய தலைமுறையினரை கால்நடைத் தீவனங்கள் போல் பயன்படுத்திக் கொண்டனர். ஐரோப்பாவின் பாதிக்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினரை சாகடித்து, இரண்டரை லட்சம் பேரைக் காயப்படுத்தி, அதிகமானவர்களை நிரந்தர ஊனமாக்கினார்கள்.
நிர்வாகம்
மக்களுக்கான நிர்வாகம் என்பதில் உயர்பதவியில் வயதான மதவெறி பிடித்தவர்களும், காமத்தில் திளைப்பவர்களுமே இருந்தனர்.
அரசியல் 
ஹவுஸ் ஆஃப் லார்ட் என்பதில் தேர்தல் முறை இல்லாமலே அறிவுஜீவிகளையும், மடாதிபதிகளையும், சீமான்களையும் பதவியில் அமர்த்துவார்கள். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்பது மக்களுக்காக மதவெறி கலந்த பார்லிமெண்ட் என்ற அமைப்பு. உலகின் பணக்காரப்பெண் இங்கிலாந்தின் ராணி. பல நூற்றாண்டுகளின் பழக்க தோஷத்தில் வருடத்திற்கு எட்டு மில்லியன் பவுண்டுகளை வரிமூலமாக கொடுக்கிறார் கள்.
கௌரவம்
கௌரவம் என்பது வில்லியம் பிரபு தனது நம்பிக்கையானவர்களுக்கு கொடுத்த நிலப்பரப்பின் எண்ணிக்கையை வைத்தே கொடுக்கப்படுகிறது. அதில் துரோகியான அந்தோனி ப்ளண்ட் என்பவன் நிறைய கௌரவம் பெற்றவன். சில சமயம் பட்டங்களும், எஸ்டேட்களும் சீமான்களிடமும், கூட்டாளிகளிடமும் வாங்கிக் கொள்ள சில ஐரோப்பிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டன. இங்கிலாந்தின் காட்டுமிராண்டித்தனமான காலனியிஸத்தை பக்கத்து நாடான ஸ்காட்லாந்தில் 13 ம் நூற்றாண்டில் நடந்ததாக “ப்ரேவ் ஹார்ட்” என்னும் திரைப்படத்தில் காட்டியிருப்பார்கள். எனினும் இதன் கதாபாத்திரம் ஸர். வில்லியம் வால்லஸ் மூலம் அடிமைத்தனத்தை தான் காட்டியதாகவும் ஜுடாயிஸத்தை அல்ல என்று அதன் கதாநாயகன் மேல் ஜிப்சன் சொன்னார்.
கலை/கௌரவம்
பொது மக்களிடம் லாட்டரி டிக்கெட்டுகள் மூலம் வசூலாகும் பணம் ராஜ குடும்பத்தினரின் ‘ஓப்பரா’ களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் உயர்வான ‘ஸர்’ பட்டம் வழங்கப்பட்டது. ஷான் கேனரி (சீன் கானரி), ஸர். கெல்டாஃப், ஸர். ரிச்சர்ட் ப்ரான்சன் என்று பட்டங்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டு
விளையாட்டுகள் தகுதிக்கேற்றவாறு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஃபுட்பால் பெரும்பான்மையானவர்களுக்கும், டென்னிஸ், கோல்ஃப் மத்தியதர மக்களுக்கும், போலோ மற்றும் அஸ்காட் என்னும் குதிரை விளையாட்டு ராஜ வகுப்பினர்களுக்கு மட்டும். ராஜ குடும்பத்தினர் ஃபுட்பால் மற்றும் டென்னிஸின் இறுதிப் போட்டியில் மட்டும் பரிசளிக்க கலந்து கொள்வர். இங்கிலாந்தின் ஆங்கிலம் பேசும் வம்சாவழியினர் மற்றும் புதிய காலனி நாடுகள் கிரிக்கெட் விளையாடுவார்கள். 
                                  வருடம் 1066 ன் முக்கியத்துவத்தைப் பார்த்தீர்கள் அல்லவா?. இதை இன்றுவரை மறக்காமல் இருப்பதற்காக தொடர்ந்து அந்த இரத்தவெறியை கடைபிடிக்க, 66 என்பதை டி-ஷர்ட், தெருக்களின் பெயர், ரூட்66 என்று செண்ட், விளையாட்டுக் குழுக்களின் பெயர் என்று நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளின் எந்த வகையான மோனோக்ராமாக இருந்தாலும் பல கோணங்களில் உன்னிப்பாக கவனியுங்கள். உங்களுக்கே புரியும். இந்த ராஜபரம்பரையிலான ஆட்சிமுறை இந்தியாவில் 300 மில்லியன் மக்களை வெறும் இரண்டு லட்சம் பிரிட்டிஷார்கள் 600 ஆள்காட்டி இந்தியக் கூட்டாளிகளுடன் ஆண்டு காட்டினார்கள்.                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக