புதன், 19 ஆகஸ்ட், 2015

லிபியா வரலாறு 1

லிபியா வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் பெர்பெர் பேரரசினால் சிதைந்துபோன வட ஆப்பிரிக்காவின் (பார்பரி கோஸ்ட்) கடற்கரையோரப் பகுதிகள் இரண்டு மெடிட்டரேனியன் நகரங்களான மேற்கின் ஸ்பெயினையும், கிழக்கின் துருக்கியையும் கவர்ந்தது. பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் துருக்கியின் பகை துருக்கியின் மதப்பூர்வமான அணுகுமுறையால் கொஞ்சம் சமாதானமாகியது. அதனால் துருக்கியின் கடற்கொள்ளையர்கள் அந்த கடலோரப் பகுதியை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்பட்டு ஓட்டோமான் பேரரசின் பாதுகாப்பில் வந்தது. அப்படி முதலில் 1512 ல் அல்ஜீரியா கரையில் ஒரு கூட்ட மும், இரண்டாவது கூட்டம் 1551 லிபியா கரையிலும் குடியேறியது. அந்த கடற் கொள்ளைக் கூட்டங்களிலேயே மிகவும் புகழ்பெற்ற கைர் எத் தின் என்பவர் 1535 ல் துனீஷியாவில் குடியேறினான். ஐரோப்பியர்கள் இவரை பார்பரொஸ்ஸா என்று அழைத்தனர். 1535 ல் ஸ்பெயினையும், 1574 ல் துனீஷியாவையும் ஓட்டோமான் பேரரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
கடற்கொள்ளை அந்த பார்பேரிய பகுதிகளில் துருக்கிய குடியேற்றவாசிகளுக்கு முக்கிய தொழிலாகவும், வருமானம் பெற்றுத்தரக்கூடிய தாகவும் இருந்தது. முந்நூறு ஆண்டுகளாக நடந்துவந்த கடல்கொள்ளை 1830 ல் பிரான்சு அல்ஜீரியாவில் நுழைந்ததால் தடைப்பட்டது. ஆனால் பிரான்சு 1847 வரை முழுமையாக அல்ஜீரியாவைக் கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால், துருக்கி கடல்பகுதியிலிருந்து பெர்பெர்கள் எதிர்த்துக்கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் கள் தொல்லைமிகுந்த அந்த மொத்த பார்பேரிய கடல்பகுதிகளையும் காவல் புரிந்துவந்தார்கள். 1881 ல் துனீஷியா பிரான்சின் பாதுகாப்பில் வந்தது. மாரினிட் பேரரசின் உள்நாட்டு சுல்தானிடமிருந்து சுதந்திரம் அடைய போராடிக் கொண்டிரு ந்த மொரோக்கோவும் 1912 ல் பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதே 1912 ல் இத்தாலி துருக்கிகளிடமிருந்த லிபியாவை கைப்பற்றியது.
துருக்கிகளிடம் நவீன லிபியா இருந்தபோது ஓட்டோமான் பேரரசின் வசம் இருந்ததைவிட சற்று நன்றாக இருந்தது. மேற்கு மாகாணமான திரிபோலிடானியாவை ஓட்டோமான் பேரரசின் கவர்னரின் சந்ததியைச் சேர்ந்தவ ரான அஹ்மத் கரமான்லி பரம்பரைப் பிரதேசமாக 1711 லிருந்து 1832 வரை ஆண்டு கொண்டிருந்தார். கிழக்கு மாகாணமான சைரெனைக்கா பத்தொன்பதாம் நூற்றா ண்டுகளில் பிதோயின் பழங்குடியின மக்களிடையே புகழ்வாய்ந்த இஸ்லாமிய சுன்னி பிரிவு தலைவர் அல் செனுஸ்ஸி அல் கபிர் என்பவரின் சந்ததிகள் செனு ஸ்ஸிகளின் அதிகாரத்தில் இருந்தது. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் கைய கப்படுத்துவது உள்நாட்டு எதிர்ப்புகிளம்பும் என்று கருதிய இத்தாலி ஆப்பிரிக்கா வில் படர சற்று அவகாசம் எடுத்துக்கொண்டது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அல்ஜீரியா மற்றும் துனீஷியா பிரான்சின் வசமும், எகிப்து பிரிட்டன் வசமும் இருந்தது.  பிரா ன்சு மற்றும் பிரிட்டன் பகுதிகளுக்கு மத்தியில் வட ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாக இருந்த லிபியாவில் இத்தாலி பெரிய வாணிப ஸ்தலமாக உருவாக்கி யது. 1900 ல் பிரான்சும், இத்தாலியும் சுமூகமாகவும், ரகசியமாகவும் ஒரு ஒப்பந் தம் செய்துகொண்டன. அதன்படி பிரான்சும் மொரோக்கோவை வடிவமைத்தது. லிபியாவிலும், மொரோக்கோவிலும் எல்லாவற்றிற்கும் சுலபமாக அனுமதித்துக் கொள்ளவேண்டும் என்பதே ஒப்பந்தமாகும். 1911 ல் திடீரென்று ஒருநாள் இத்தாலி தன் படைகளை திரிபோலியானாவுக்கும், சைரெனைக்காவுக்கும் அனுப்பி அங்கி ருக்கும் உள்நாட்டு இத்தாலியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனுமதி வேண்டி இஸ்தான் புல்லுக்கு மிரட்டல் விடுத்து இருபத்திநான்கு மணிநேர நிபந்தனை விடுத்தது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் இத்தாலி வட ஆப்பிரிக்காவில் நுழை வதற்கு  உடனடி போர் அறிவித்தது.
இத்தாலிக்கு செனுஸ்ஸியின் பழங்குடியினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. துருக்கியின் அனைத்துப்பகுதியிலும் தொல்லைவர ஆரம்பித் தது. ஏரிப்பகுதி மாகாணமான லாசன்னில் அவ்சி என்ற இடத்தில் ஒரு உடன்படிக் கை ஏற்க்கப்பட்டு, திரிபோலிடானியாவும், சைரெனைக்காவும் இத்தாலியின் கீழ் படிதலுக்கு ஆளானது. இதனால் இத்தாலி செனுஸ்ஸிகளின் அதிகாரத்திலிருந்த தென்மேற்கு பகுதியான ஃபெஸ்ஸானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந் தது. இணைக்கப்பட்ட ஃபெஸ்ஸான் மாகாணம் நவீன லிபியாவாக இத்தாலியால் மாற்றப்பட்டது.
உலகப் போர்
இத்தாலி லிபியாவில் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கும் போதே, இரண்டு உலகப்போர்களை லிபியா சந்தித்தது. மேலும், இத்தாலி அரசுக்கு எதிராக எதிர்ப்புக்குழுவும் உருவானது. முதல் உலகப்போரின் கோரிக்கைப்படி இத்தாலி லிபியாவின் கடற்கரை நகரங்களைத்தவிர, மற்ற இடங் களை விட்டு விடவேண்டும் என்று முடிவாகியது. இதனால், எங்கு பார்த்தாலும் செனுஸ்ஸிகளின் ஸவியா (ZAWIYA- மசூதிகளின் பிண்ணனியிலுள்ள பலமான அமைப்பு) வின் அதிகாரத்திற்கு மீண்டும் லிபியா நகரங்கள் வந்தன. முதல் உலக போருக்குப் பிறகு, செனுஸ்ஸிகளின் தலைவர் முஹம்மது இத்ரிஸ், இத்தாலி யுடன் வெற்றிகரமாக ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். அதாவது, இத்தாலியின் வசமுள்ள சைரெனைக்கா கடற்கரைப் பகுதிகளை தாங்கள் அங்கீ கரிப்பதாகவும், பதிலுக்கு தன்னை எமிராக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரி இருந்தார்.
ஆனால், இந்த சிரமமான உறவு நிறைய எதிர் விளைவுகளை உண்டாக்கியது. 1923 ல் முஹம்மது இத்ரிஸ் எகிப்து பயணம் போயிருந்த போது, மதப்பற்றுள்ள லிபியாவின் கவர்னர்கள் திரிபோலிடானியாவிலும், சைரெனைக்காவிலும் அதிகப்படியான அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள். (இந்த இரண்டு மாகாணங்களும் தான் 1934 ல் இணைக்கப்பட்டு லிபியா காலனி நாடாகியது). இரண்டாம் உலகப்போர் செனுஸ்ஸிகளுக்கு வெற்றியைத் தந்தது. அவர்கள் இத்தாலியின் எதிரிகளாக இருந்ததால், இயற்கையிலேயே பிரிட்டனுடனும், அமெரிக்காவுடனும் போரில் கூட்டு வைத்திருந்தார்கள். 1942-43 ல் செனுஸ்ஸிகள் எல்லா போர் நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துக்கொண்டு இத்தாலியையும், ஜெர்மனியையும் வட ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற்றினார்கள்.
போருக்குப் பிறகு. சில சிறிய சண்டைகளின் மூலம் திரிபோலிடானியா மற்றும் சைரெனைக்கா பகுதிகளின் நிர்வாகத்தை பிரிட்டனும், ஃபெஸ்ஸான் மாகாணத்தை பிரான்சும் எடுத்துக்கொண்டன. லிபியாவின் எதிர்காலத்தை ஐக்கியநாட்டுசபையில் வைத்து தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது. இது லிபியாவின் சுதந்திரத்திற்கான புரட்சியாகிப்போனது. 1950 ல் லிபியாவின் மூன்று பெரிய மாகாணங்களும் முஹம்மது இத்ரீஸ் அவர்களை லிபியாவின் மன்னராக தேர்வு செய்தது. 1951 டிசம்பர் 24 ல் இத்ரீஸ் அவர்கள் லிபியாவை சுதந்திரநாடாக அறிவித்தார்.
ராயல் லிபியா 1951-1969
முஹம்மது இத்ரீஸ் அவர்களின் ஆட்சி பழைய மன்னர்களின் நடைமுறை ஆட்சிபோல் இருந்து எந்த ஜனநாயக அறிகுறியும் தெரியவில்லை. முதல் எட்டாண்டுகள் இவரின் ஆட்சியின் கீழ் லிபியாவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் பின் தங்கிப்போனது. பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானப்படைதளத்துக்கு அனுமதி அளித்ததன் பேரின் கிடைத்த வருவாயிலும், சர்வதேச நாடுகளின் மூலம் கிடைத்த உதவியாலும் நிர்வாகம் தடுமாறிக்கொண்டு இருந்தது. இந்த நிலை அப்படியே 1959 ல் தலைகீழாக மாறியது. லிபியாவின் எண்ணேய் வளம் கண்டறியப்பட்டது. முஹம்மது இத்ரிஸ் அவர்கள் தன் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொண்டு, புதிய சுதந்திர லிபியாவின் தரத்தை மேம்படுத்த தயாரானார். வெளிநாட்டு சக்திகள் லிபியாவை விட்டு வெளியேற பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், மன்னரை ஓய்வுபெறச்சொல்லி எதிர்ப்பு வலுத்தது. 1969 ல் மன்னர் முஹம்மது இத்ரிஸ் துருக்கிக்கு சென்றிருந்த போது, 27 வயதான இராணுவ தளபதி மாம்மர் அல் கத்தாஃபி என்றவரால் இரத்தமின்றி மன்னராட்சி நீக்கப்பட்டது.
1969 லிருந்து மாம்மர் அல் கத்தாஃபியின் ஆட்சி
மாம்மர் அல் கத்தாஃபி உடனே ஆயுதப்படையின் கமாண்டர் இன் சீஃப் மற்றும் லிபியாவின் புரட்சிப்படை கவுன்சிலின் சேர்மனாகவும் இருந்து லிபியாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். 1979 லிருந்து இவர் சாதாரண புரட்சியாளராய் இருந்து பிடிப்புடன் ஆட்சிசெய்தார். இவருடைய சொந்த சட்டமே லிபியாவின் சட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மாம்மர் அல் கத் தாஃபி விரைவில் ஒரு சர்வாதிகாரியாக மாறினார். இவரது அரசியல் தத்துவம் இஸ்லாம், அரபு தேசியம் மற்றும் சோஷலிசம் உள்ளடங்கியதாக இருந்ததாக இவரைப்பற்றி தி க்ரீன் புக் தெரிவிக்கிறது. மேலும் தனிப்பொருள் சேரும் வண்ணம் 1977 ல் பீப்பிள்ஸ் சோஷியலிஸ்ட் லிபியன் அராப் ஜமஹிரியா என்று நாடு குறிக்கப்பட்டது. அதாவது கூட்டமாக ஆள்வது என்று பொருள். அதற்கேற்றார் போல் 1500 உள்நாட்டுக்குழுக்களை அமைத்தார். ஆனால், இதெல்லாம் வெளி உலகத்திற்கு மட்டும்தான் உண்மையில் அவர் ஒருவர்தான் ஆட்சிசெய்தார்.
அதிகமாக சர்வதேச உலகில் அறியப்படாத பெயராக இருந்த மாம்மர் அல் கத்தாஃபி லிபியாவின் எண்ணெய் வளத்தால் உலகம் அறிந்தவரானார். துருக்கிக்கும், சாட் நாட்டுக்கும் இடையே நல்ல உறவைப் பேணாதிருந்தார். வெளிநாட்டில் இருந்த லிபியா எதிர்ப்பாளர்களை உளவாளிகள் மூலம் கொன்றார். லிபியாவின் பொருளாதாரம் வெளிநாட்டு தீவிரவாதத்திற்குப் பயன் படுத்தப்பட்டது. 1972 ல் மாம்மர் அல் கத்தாஃபி வட அயர்லாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக செயல்படும் ஐ.ஆர்.ஏ என்ற அமைப்பை ஆதரிப்பதாகக் கூறினார். தீவிரவாதத்திற்கு எதிராக தங்கள் நடவடிக்கையை தெரிவிப்பதாகக் கூறி 1986 ல் அமெரிக்க ஜனாதிபதி ரீகன் பிரிட்டனிலிருந்து லிபியாவின் நகரங்களான திரிபோலி மற்றும் பென்காஸியின் மீது விமானத்தாக்குதல் நடத்தினார். அதில் மாம்மர் அல் கத்தாஃபியின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தனர். மாம்மர் அல் கத்தாஃபி மயிரிழையில் உயிர் தப்பினார். அதன் பிறகு, அழுகிய மூளையுள்ள அமெரிக்கா பலமுறை கடாஃபியைக் கொல்ல முயற்சி செய்து தோற்றுப்போனது.

லிபியா வரலாறு 2

பின் சில காலம் கழித்து 1988 ல் ஸ்காட்லாந்தில் லாக்கர்பீ என்னுமிடத்தில் 259 பயணிகளுடன் பான் அம் என்ற விமானம் வெடித்துச் சிதறியது. தரையிலிருந்த மேலும் 11 பேரும் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு லிபியர்கள் தான் பாரிஸிலிருந்து புறப்படும் போது வெடிகுண்டு வைத்ததாகக் கூறப்பட்டது. அந்த இரண்டு லிபியர்களையும் விசாரணைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கூறியது. ஆனால், அதிபர் கடாஃபி மறுத்துவிட்டார். இதனால் ஐக்கிய நாட்டு சபை 1993 ல் லிபியா மீது பொருளாதாரத்தடை கொண்டு வந்தது. மேலும் எண்ணெய் எடுப்பதற்காகத் தேவைப்படும் கருவிகளை லிபியாவிற்கு விற்பதற்கும் வியாபாரத்தடை போட்டது.
1970 ல் லிபியாவிலிருந்த இத்தாலியர்களும், யூதர்களும் வெளியேறி விட்டனர். அருகிலிருந்த வடஆப்பிரிக்க நாட்டவர்களும் வெளியேறி விட்டனர். ஆனால், இவர்களை கடாஃபி தான் வெளியேற்றி விட்டார் என்று கூறப்பட்டது. அப்படி அது உண்மை என்றாலும் அது தவறில்லை. தன் நாட்டு எண்ணெய் வளத்தை தன் தேசத்தவர்களே அனுபவிக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு. கடாஃபி லாக்கர் பீ விமான வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்பட்ட இருவரை நெதர்லாந்தில் விசாரணைக்கு அனுப்பினார். லிபியா மீதிருந்த பொருளாதாரத்தடையும் நீங்கியது. லிபியாவின் புராதன இடங்கள் உலக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டது.
லிபியாவில் அதன் அதிபர் மாம்மர் கடாஃபி செய்திருக்கும் கீழே சொல்லப்பட்ட நன்மைகள் இதுவரை எந்த செல்வநாடும் உலகில் செய்ததில்லை. தன் நாட்டு வளத்தை (இந்திய அரசியல்வாதிகள் போலல்லாமல்) தன் மக்களுக்கே கொடுத்த இராணுவ வழி வந்த அதிபர். பொறாமைப்படாதீர்கள்.
1. திருமணமான அனைத்து தம்பதிகளுக்கும் புதிய வாழ்க்கை ஆரம்பிக்க 50,000 டாலர் அரசுப்பணம்.
2. அனைத்து லிபிய மக்களுக்கும் வீடு இலவசம்
3. அனைத்து லிபிய மக்களுக்கும் மின்சார கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம்.
4. இஸ்லாத்தில் வட்டி இல்லாததால் எந்த வங்கி, அரசாங்கம், கம்பெனி கடன்களுக்கு வட்டி இல்லை.
5. கடாஃபி அதிபராக வருவதற்கு முன் 25% மட்டுமே இருந்த கல்வியறிவு பெற்ற லிபிய மக்களை 83% உயர்த்தினார். அரசு பல்கலைக்கழகங்களில் அனைத்தும் இலவசம்
6. லிபியாவில் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மருந்து உட்பட.
7. உலகில் எண்ணெய் வளத்தில் மிகச்சிறப்பான நிலையில் இருந்த லிபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 0.14 செண்ட்கள்.
8. லிபிய குடிமகன் கார் வாங்கினால் அரசாங்கம் 50% தொகையை ஏற்றுக் கொள்ளும்.
9. குடும்ப அளவு (FAMILY SIZE) ரொட்டியின் 40 துண்டுகள் இணைந்ததின் விலை 15 செண்ட்கள்.
10. பொருளாதாரம் மிகவும் உச்சத்திலிருந்தது. 150 பில்லியன் டாலர்கள் கையிருப்பு இருந்தது.
11. வேலை கிடைக்கும் வரை அரசு ஊக்கத்தொகை கிடைக்கும்.
12. லிபிய தாய் குழந்தைப் பெற்றால், 5000 டாலர்கள் ஊக்கத்தொகை
13. விவசாயம் செய்ய முன்வருபவர்களுக்கு நிலம், கருவிகள், விதைகள், இலவசம்.
14. லிபிய இளைஞர்கள் வெளிநாடுகளில் படித்தால் மாதம் 2000 டாலர் தொகை, தங்குமிடம், போக்குவரத்து இலவசம்.
15. 27 பில்லியன் டாலரில் மனித முயற்சியில் செயற்கை ஆறு திட்டம்.
16. லிபியாவின் எண்ணெய் வருமானத்தில் ஒரு பங்கு அனைத்து குடி மக்களுக்கும் அவர்களின் வங்கிக்கணக்கில் போய்விடும்.
லிபியாவில் உலகின் மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலையைக் கட்ட திட்டமிட்டிருந்தார். அது இப்போதே உலகின் 8 வது அதிசயமாகக் கூறப்பட்டது. கடாஃபியின் தகப்பனார் இறந்தபோது, அவரது தாயும், மனைவியும், அவரும் வீடில்லாமல் கூடாரம் அடித்து வாழ்ந்தார்கள். அதன் வேதனை அறிந்து நாட்டு மக்களுக்கு இலவச வீடு கொடுத்தார். பெண் காவலர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த புகைப்படத்தைப் போட்டு அவரை எப்படியெல்லாம் யூத, அமெரிக்க நாடுகள் கேவலப்படுத்தின. ஒரு சர்வாதிகாரி மேற்சொன்ன விஷயங்களைத் தன் நாட்டு மக்களுக்கு செய்வாரா? அல்லது செய்ததாக சரித்திரம் இருக்கிறதா?
உலக யூத வங்கிக்கு எதிராக கடாஃபியின் நடவடிக்கை இருந்ததால், அவருக்கு எதிராக இருந்த அவரின் மக்களாலேயே நாயைவிட கேவலமாக கொல்லப்பட்டார். இனி அந்த மக்களுக்கு யார் தருவார் சலுகைகளை, கடுமையான மன்னராட்சியில் இருந்து லிபிய புரட்சியின் மூலம் மீட்டார். ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரே கரன்சியைக் கொண்டு வர முயன்றார். சென்ட்ரல் பேங்க் ஆஃப் லிபியாவை தானே நடத்தினார். 150 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்திருந்தார்.

லிபியா வரலாறு 3

பின்வரும் காரணங்களுக்கு அவர் ஒத்துப்போக மறுத்ததே மேற்க்குலகினர் அவரை அடித்துக் கொல்ல காரணமாகியது.
ரோத்ஸ்சைல்ட் சென்ட்ரல் ரிசர்வ் பேங்கிங் கார்டெல்லின் கட்டளையை ஏற்க மறுத்தார்.
மொத்த ஆப்பிரிக்காவுக்கும் 400 மில்லியன் டாலரில் சொந்த சாட்டிலைட் நிறுவ தயாரானார். அதில் 300 மில்லியன் லிபியா செலவிடவும் முடிவெடுத்தார். இதில் அடுத்தவர்களுக்கு என்ன என்று நீங்கள் நினைக்கலாம். ஆப்பிரிக்கா கண்டம் வருடத்திற்கு 500 மில்லியன் டாலர் ஐரோப்பிய மேற்கு நாடுகளுக்கு சாட்டிலைட் பயன்பாட்டிற்கு கொடுத்துக் கொண்டிருந்தது. ஆப்பிரிக்கா சொந்தமாகத் தொடங்கினால் ஐரோப்பிய பொருளாதாரம் தடைபடும்.
ஆப்பிரிக்கா மானிட்டரி ஃபண்ட் இனி ரோத்ஸ்சைல்ட் சென்ட்ரல் வங்கியிடம் கடன் பெறாது. தங்கள் வசம் இருக்கும் தங்கத்தின் மூலம் சொந்த கரன்சியை உருவாக்கிக் கொள்ளும். வட்டி இல்லை
மொத்த ஆப்பிரிக்கா கண்டத்தின் எண்ணெய் வளத்தையும் லிபியா சொந்தமாகக் கண்காணிக்கும். மேற்கத்தியர்களின் தலையீடு போய்விடும்
தன் நாட்டு எண்ணெய் வளத்திலிருந்து ஆப்பிரிக்கா கண்டத்தை ஐரோப்பிய அதிகாரத்திலிருந்து அனைத்து விஷயங்களிலும் துண்டித்து விட நினைத்தார்.
1960 களில் லிபிய பாலைவனத்தில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட போது, கூடவே தரமான இயற்கை நீர் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நீர் வளம் லிபியாவுக்கு மிகப்பெரிய பொக்கிஷம். இதனால் பூமிக்கு அடியிலேயே குஃப்ரா பேசின், சிர்ட் பேசின், மொர்ஸுக் பேசின் மற்றும் ஹமதா பேசின் என்று பிரம்மாண்டமான நான்கு பெரிய ராட்சத பேசின் அமைப்புகளுக்காக 1984 ல் “கிரேட் மேன் மேட் ரிவர் ப்ராஜக்ட்” ஒன்றை 25 பில்லியன் டாலர் செலவில் முதல் கட்டமாகத் துவங்கினார். இந்த திட்டத்தால் 35,000 க்யூபிக் கிலோமீட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். இது உலகின் மிகப்பெரிய சரித்திரத்துவம் வாய்ந்த திட்டம். இதில் லிபிய நிர்வாகத்தால் மூன்று கட்ட பணிகள் முடிந்து விட்டன. ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் க்யூபிக் மீட்டர் தண்ணீரை பாலவனத்திலிருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு வரமுடியும். ஒரு க்யூபிக் மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 3.75 டாலரில் கிடைக்கும். இங்கு கிடைக்கும் மொத்த தண்ணீரும் நைல் நதியிலிருந்து 200 வருடங்கள் கிடைக்கும் தண்ணீருக்கு ஈடாகும் என்று அறிஞர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். இதனால் ஆப்பிரிக்கா கண்டம் வளமடைந்து விட்டால், ஐரோப்பிய நாடுகள் பின் தங்கி விடுமே என்ன ஒரு கேடு சிந்தனை.
சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் கையிலிருந்து ஐஸ் நழுவி விழுந்தாலே பார்த்து பரிதாபப்படும் நாம். ஒரு நாட்டு அதிபர் இறைவன் கொடுத்த சொந்த நாட்டு வளத்தை மொத்த கண்டத்திற்கும் வளம் கொடுக்க இருந்ததை ஈவு இரக்கம் இல்லாமல் சிதைத்து விட்டனர் மேற்குலகத்தினர். நேற்றுவரை தங்களுடன் ஐ.நா மற்றும் வெளிநாட்டு விழாக்களில் கை குலுக்கி மகிழ்ந்த ஒரு தலைவரை, அதுவும் கௌரவமற்ற முறையில் ஒரு பிக்பாக்கெட்காரன் போல் ஒரு அதிபரை கேவலப்படுத்தினார்கள். ஆம் இதுவும் ஒரு யூத, கிறிஸ்தவ தீவிரவாதம் தான்.
எந்த ஒரு உண்மையான லிபிய குடிமகனைக் கேட்டாலும் சொல்வான் தங்களுக்கு கடாஃபிதான் அதிபராக வேண்டும் என்று. அவர் ஒரு வேளை ஒழுங்கிணத்திலும், நட்பு பாராட்டுவதிலும் தடுமாறி இருக்கலாம். ஏன் ஜார்ஜ் புஷ் மகள் திருமணமாகாமல் ஆண் நண்பருடன் கேளிக்கைக்கு போனாரே, இங்கிலாந்து ராணியின் பேரன் ஹாரி இரவு விடுதியில் குடித்து கும்மாளமிட்டாரே அது மட்டும் சோஷலிசமா? கடாஃபி ஒரு நல்ல தலைவராக இல்லாமலும் இருக்கலாம். தெரியாமல் ஒரு சொட்டு தேனோ அல்லது நெய்யோ விரலில் விழுந்தால் நக்கித்தான் பார்ப்போம். ஆனால் ஒரு நாட்டின் அதிபர்களுக்கு கை முழுவதும் தேனோ, நெய்யோ நனைந்து கொண்டே இருக்கும். அதை நக்காமல் தவித்துக் கொள்பவர்கள் தான் ஈமான் உள்ள தலைவர்கள். மாம்மர் கடாஃபி தன் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். நானோ, நீங்களோ அவர் புறம் ஆதரவளிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவரின் மரணம் இறைவனின் விருப்பம்.
லிபியாவின் அரசியல்வாதி மஹ்மூத் ஜிப்ரில் என்பவர், “யார் இந்த உள்நாட்டு கலவரத்தைச் செய்து பல அப்பாவி லிபிய மக்களின் உயிர்களைப் பறித்தார்களோ அவர்களுக்கு தெரியாது. இது மேற்கத்தியர்களின் வேலை என்று. கடாஃபி வீழ்ந்ததால் மொத்த லிபியாவும் வீழ்ந்ததென்று. ஆனால், லிபியா இப்போது தலைவன் இல்லாமல் தனித்து விடப்பட்டு விட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவன் சொந்தம் கொண்டாடுகிறான். இது எங்கே ஆப்பிரிக்காவின் இன்னொரு சோமாலியா ஆகிவிடுமோ என்று அச்சம் வருகிறது.” என்று கூறுகிறார்.
அமெரிக்க ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த, சர்வதேச பிரச்சினைகளின் மதிப்பீட்டாளர் பால் க்ரீக் ராபர்ட்ஸ் என்பவர், “வாஷிங்டன் கடாஃபியை விலக்கி விட்டது. அதே போல் காட்சியை சிரியாவிலும் நடத்த திட்டமிடுகிறது. மேலும், சீனாவை மெடிட்டரேனியன் கடல்பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என்றும் நம்புகிறது. ஆப்பிரிக்காவின் எரிசக்தி துறையில் சீனாவின் பங்கு இல்லாமல் செய்வதற்கும் முயற்சிக்கிறது. இதை ஏற்கனவே அமெரிக்காவும், இங்கிலாந்தும் 30 ம் வருட ஆரம்பத்தில் செய்தன. கடாஃபிக்கு அமெரிக்கா வழங்கிய தண்டனை அவர் அமெரிக்க ஆப்பிரிக்க (AFRICOM) உத்தரவுக்கு பணியாததே. தற்போது இவர்கள் லிபியா உள்நாட்டு கலவரத்திற்கு வழங்கிய ஆயுதங்கள் பணிமுடிந்து ஆப்பிரிக்க தீவிரவாதிகளின் கைகளில் சிக்கியுள்ளன. லிபியா அம்மக்கள் சிலரின் தவறான முடிவினால் படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கடாஃபி செய்து வைத்திருந்த நன்மைகள் போய் எங்கு பார்த்தாலும் வெடி, வெடி என்று நிம்மதியை இழந்து விட்டார்கள்.” என்று கூறியுள்ளார். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஜார்ஜ் புஷ் கொன்று குவித்துவிட்டு பதவியை விட்டுப் போகும் போது 'ஸாரி' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போய்விட்டான். ஆனால், சதாம் ஹுசெய்னுக்கும், மாம்மர் கடாஃபிக்கும் வாய்ப்பிருந்தும் 'ஸாரி' என்னும் வார்த்தை சொல்லாமலே போய்விட்டார்கள்.
இன்னும் நிறைய அரசியல்வாதிகளும், நலம் விரும்பிகளும் லிபியாவின் உண்மைகளை தினசரி எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னவொன்று கடாஃபியுடன் தொலைந்து போன லிபிய மக்களின் நல்வாழ்வு திரும்ப கிடைக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ.