புதன், 13 மே, 2015

விதைத்தவர்கள் 2

முதல் கிறிஸ்தவ ஆயிராமாண்டு (1000C.E.) வரை பிரிட்டிஷ் தீவுகள் வடமேற்கு ஐரோப்பாவின் ஒதுங்கிய நீர்ப்பரப்பாகத்தான் இருந்தது. பலரால் பலமுறை கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறது. முதலில்  55 B.C.ல் ரோமர்களாலும், பின் 367 C.E. லிருந்து 793 C.E. வரை ஏஞ்சல்கள், ஸாக்சன்கள் மற்றும் ஜூட்களால் தாக்கப்பட்டிருக்கிறது. மேலும் பலரால் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. 1027 C.E.ல் கேனூட் என்னும் டச்சுக்காரர் இங்கிலாந்து, டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடனின் சில பகுதிகளுக்கு மன்னராக இருந்திருக்கிறார். பிரிட்டிஷ் தீவுகள் மிகவும் பலவீனமாகவும், பின் தங்கிய காலனியாகவும் இருந்திருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பாவிலேயே வளமான நாடாக மாறியது. இதன் வளம் சிலுவைப் போரின் பொருளாதாரத்திற்கு அவசியம் என்பதாலும், வேறு பல காரணங்களுக்காகவும் ஃப்ரான்ஸ் இங்கிலாந்து மீது படையெடுத்தது. 1066 C.E. ல் சக கிறிஸ்தவர்களான வடமேற்கு நார்மண்டிகளின் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு கொஞ்சகாலம் பிரிட்டிஷ் தீவுகள் அமைதியாகத்தான் இருந்தது. நார்மண்டிகளின் ஆளுமைக்குப் பிறகு தான் பிரிட்டிஷ் தீவுகள் ஐரோப்பாவுடனும், முஸ்லீம்களுடனும் தொடர்புக்கு வந்தது. பிரிட்டிஷின் வளமை மட்டும் சிலுவைப் போருக்குப் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு முஸ்லீம்கள் மீது எப்படி வெறுப்பைக் காட்டித்தாக்க வேண்டும் என்று தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் பாலஸ்தீனைத் தாக்க இராணுவம் அனுப்பும் அளவுக்கு தயார் செய்யப்பட்டது. ஒன்றும் அறியாத இங்கிலாந்தின் மக்கள் போருக்கு அனுப்பி கொல்லப்பட்டனர். முஸ்லீம்களின் பக்கத்து நாடுகளான ஸ்பெயின், ஃப்ரான்சை விட முஸ்லீம்கள் மீது பெரும் வன்மையை இங்கிலாந்து வளர்த்துக் கொண்டது. முஸ்லீம்களை எதிர்க்கும் முதல் சாம்ராஜ்ய நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. உலகில் நிறைய முஸ்லீம் நாடுகளை கைப்பற்றிய பெருமையும் பிரிட்டிஷுக்கு உண்டு.
                                பிரிட்டிஷ்கள் மீதான நார்மன்களின் போர் இருவருக்கும் இணைபிரியா நட்பை உருவாக்கியது. இஸ்லாமுக்கு எதிராக “ஆங்கிலோ ஃப்ரென்ச் அலையன்ஸ்” என்று ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு சிலுவைப் போர்கள், காலனியிஸப் போர்கள், முதலாம் உலகப் போர், சூயஸ் போர் போன்றவற்றில் பங்கெடுத்துக் கொண்டன. அரபுக்கள், யூதர்கள், துருக்கிகள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் அயர் லாந்துக்களுடன் இனவெறியையும் வளர்த்துக் கொண்டனர். உலக சதுரங்க விளையாட்டு என்று அழைக்கப் பட்ட முதல் உலகப் போரில் ஆங்கிலோ ஃப்ரென்ச் அலையன்ஸ் கிழக்கில் ஓட்டோமான் கலிஃபாவுடன் சண்டையிட்டனர். பிரிட்டனும், ஜெர்மனியும் மதம், இராணுவம், அரசியல் மற்றும் பாரம்பரிய ராஜவம்சம் போன்றவற்றில் மார்டின் லூதர் காலத்திலிருந்து கூட்டாக செயல்பட்டன. பிரிட்டனின் ராஜவம்சத்தினர் ஜெர்மனியின் ஸாக்ஸே கோபர்க் கோதா மற்றும் மவுண்ட்பேட்டன்பர்க் வழிமுறையில் வந்தவர்கள். (முதல் உலகப்போரிலிருந்து விண்ட்சர் என்று பெயர் மாற்றப்பட்டது) ராணி விக்டோரியா ஜெர்மனியைச் சேர்ந்த தன் உறவுக்காரர் ஆல்பர்டை மணந்து கொண்டார். ராணியின் புகழ்பெற்ற பேரப்பிள்ளை ஜெர்மனியின் எம்பரர் இரண்டாம் கைசர் வில்ஹெம் ஆவார். போர் துவங்கும்வரை கைசர் பிரிட்டிஷ் இராணுவத்தில் உயர் பதவியில் இருந்தார். ஃப்ரென்ச்காரர்களால் மதம், இராணுவமும், மற்றும் ஜெர்மனியின் ராஜ குடும்பத்தின் உறவால் ஐரோப்பாவில் கூட்டுக் கலவையாக இங்கிலாந்து மாற்றப்பட்டது. மாபெரும் போர் ஐரோப்பாவில் துவங்கி முஸ்லீம்களின் பூமியை நோக்கி பரவியது. நார்மன்களின் 1066 ன் தென் பிரிட்டன் மீதான புரட்சி சாதாரணமானது அல்ல, அது ஒட்டு மொத்த பிரட்டனை இஸ்லாமின் மீதான வெறியை அடுத்த ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு உலக சரித்திரத்தில் நீரூற்றி வளர்த்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் மட்டுமே உலகில் அதிகமான முஸ்லீம் நாடுகளை கைப்பற்றியது.
                                                      1917 போரின் முடிவில் பிரிட்டன் பாலஸ்தீனை இரண்டாம் தர காலனியாக்கி “ஜுவல் இன் கிரவுன்” என்று புகழ் பாடிக்கொண்டது. தொடர்ந்து ஜெனரல் ஆல்லன்பி, “இன்று சிலுவைப் போர் முடிவுக்கு வந்து விட்டது”, என்று கூறினார். (இங்கிருந்து தான் இஸ்ரேலுக்கான தனி நாடுக்குண்டான திட்டம் தீட்டப்பட்டது.) உலகில் எல்லா இனங்களுக்கும், நாடுகளுக்கும் சொந்த பூமியின் பாரம்பரிய வரலாறு உண்டு. ஆனால் யூதர்களுக்கு மட்டும் தான் சரித்திரத்தில் ஏதொ சொத்து வாங்குவதைப் போல் சூழ்ச்சிகரமாக சுற்றி முஸ்லீம்கள் இருக்கும் பகுதியில் பாலஸ்தீனுக்குள் ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுத்தார்கள். டமாஸ்கஸ் நகரத்தின் சுல்தான் ஸலாவுத்தீன் அல் அய்யூபின் கல்லறையின் மீது ஏறிக்கொண்டு, ஃப்ரான்சின் ஜெனரல் ஹென்றி கௌராட், “ஸலாவுத்தீன் நாங்கள் திரும்பி வந்து விட்டோம்” என்று வெளிப்படையாக கொக்கரித்தார். போரின் முடிவில் பிரிட்டனும், ஃப்ரான்சும் கிழக்கு மெடிட்டரேனியனிலிருந்து இந்தியா வரை அனைத்து முஸ்லீம் நாடுகளையும் கைப்பற்றி இருந்தது. மேற்கத்தியர்களால் தேவையில்லாமல் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இறுதியில் போர் சமாதானமாக முடிவுக்கு வந்தது.
                                               ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவில் இறைவனின் இறுதி தூதராக முகம்மது நபி அவர்கள் தோன்றி மனிதகுலம் அத்தனைக்கும் இறைச்செய்தியை பரப்பினார். அதன் பயனாக மதம், இராணுவம், கலாச்சார வலிமைமிக்க இஸ்லாம் வெகு வேகமாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் பரவியது. முதலில் இரான், சிரியா, எகிப்து, துருக்கி மற்றும் வட ஆப்பிரிக்கா என்று வேகம் பிடித்தது. முதலில் சிரியாவிலும், ஆசிய மைனரிலும் இஸ்லாம் ஆட்சி அமைந்தபோது அங்குள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் தாங்கமுடியாத தொல்லை காரணமாக புதிய இஸ்லாமிய ஆட்சியை வெகுவாக வரவேற்றனர். உலக வரலாற்றில் தன் மத ஆட்சியாளர்களை வெறுத்த மக்கள் கிறிஸ்தவர்கள் தான். சமகாலத்திலேயே முஸ்லீம்கள் கொடுமையாளர்களான பைஸாந்தியர்களையும் (கிழக்கு ரோமர்கள்), பாரசீக சாம்ராஜ்ஜியத்தையும் வென்றனர். பத்தாண்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் நாற்பதினாயிரம் ஊர்களை சுதந்திரமாக்கி, இரண்டாயிரம் மசூதிகளை கட்டினார். முஸ்லீம்கள் ஐந்து பரம்பரை ஆட்சிகளில் அலக்ஸாண்டிரியா, ஜெருசலம், ஆண்டியாக் ஆகிய மூன்றை வென்று நான்காவதாக காண்ஸ்டாண்டிநோபிலை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தார்கள். 638 ல் ஜெருசலம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் முஸ்லீம்கள் வசம் வந்தபோது ஒரு சொட்டு இரத்தம் கூட இரு தரப்பிலும் சிந்தப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலமாகிய நூறாண்டுகளுக்குள் முஸ்லீம்கள் கிரேக்கர்களை விட மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உலகில் நிறுவியிருந்தனர். உலகின் பல சரித்திர ஆசிரியர்களின் பதிவின்படி முஸ்லீம்கள் எந்த நாட்டின் மீதும் இன, மதவெறியால் போர் செய்யவில்லை, சாதாரணமாக தன் ஆட்சியைப் பரப்ப ஒவ்வொரு நாடும் நடத்தும் போர் போல்தான் முஸ்லீம்கள் படையெடுத்தனர். வென்ற எந்தநாட்டு மக்களையும் கட்டாயப்படுத்தி முஸ்லீம்களாக்கவில்லை. அப்படிச்செய்வது இறை மற்றும் நபி(ஸல்)அவர்களின் வழிமுறையும் அல்ல. முஸ்லீம்கள் ஆப்பிரிகாவிலிருந்து மெடிட்டரேனியன் தீவான சைப்ரஸ்(649 CE), கிரீட்(654 CE), ரோட்ஸ்(654 CE), ஐபீரிய தீபகற்பம்(711 CE), டௌலூஸ்-தென் ஃப்ரான்ஸ்(715 CE), ஸர்தீனியா(750 CE, கோர்சிகா(809 CE), மால்டா(824 CE), சிஸிலி(827 CE) மற்றும் (840 மற்றும் தென் இத்தாலி (840 CE) என்று வானமே எல்லையாக பரவிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் முஸ்லீம்கள் அமெரிக்காவுடன் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தினர். அதாவது கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு (அமெரிக்காவை கண்டு பிடித்ததாக சொல்லப் படுகிறவர்)  ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே இது நடந்தது. முதல் ஆயிராமாண்டின் போது, யூசுஃப் பின் டச்ஃபின் என்னும்     சுல்தான் அல்மொராவிட்ஸ் என்ற சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்தார். அது தெற்கில் செனகலையும், வடக்கில் தென் ஐபீரியாவையும், மேற்கில் அட்லாண்டிக்கையும் மற்றும் அல்ஜீரியா, துனிஷியாவை உள்ளடக்கிய மேற்கு ஐரோப்பாவை விட பெரிய பகுதியாகும்.
                                   எட்டாவது, ஒன்பதாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பாவை மதபோதகர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். உதாரணமாக தேவாலயங்கள், வாடிகன், மத மாஃபியாவாக கருதப்பட்ட ஃப்ராங்கிஷ் (ஃப்ரென்ச்/ஆங்கில கூட்டுப்படை), ஹோலி ரோமன் எம்பயர் போன்றவற்றின் பிடியில் ஐரோப்பா இருந்தது. மேலும், சட்டத்திற்கு புறம்பான விபசாரி ஒருத்தியின் மகனான சார்லஸ் மார்டெல் (688-741 C.E.) என்பவனும், அவனின் படிப்பறிவில்லாத பேரன் சார்ல்மாக்னியும் (742-814 C.E.) ஐரோப்பாவில் இஸ்லாம் வளராமல் தடுத்தனர். அதிலும் முதலில் ‘தி ஹாம்மர்’ என்றழைக்கப்பட்ட சார்லஸ் மார்டெல் 732  C.E.ல் மத்திய ஃப்ரான்சில் புகழ்பெற்ற பாய்டியர்ஸ் போரில், ஃப்ராங்கிஷ் படைகளின் துணையுடன் முஸ்லீம்களை (உம்மய்யாத்களை) வென்றான். அப்போது ஐபீரியாவின் முஸ்லீம் எமிராக இருந்தவரை நயவஞ்சகன் ஒருவன் கொலை செய்து விடுகிறான். இந்த வெற்றியின் மூலம் ஃப்ராங்க்ஸ் படை கிறிஸ்துவத்தை காக்க வந்த சக்தியாக ஐரோப்பா முழுவதும் பரவலாக அறியப்பட்டது அல்லது பரப்பப்பட்டது.
                                           சார்ல்மாக்னி (சார்லஸ் தி கிரேட்/CHARLEMAGNE) என்பவன் முப்பது ஆண்டுகளில் வாள்முனையில் 12 நாடுகளில் (அவார்ஸ், ஸ்லாவ்ஸ், ப்ரீடன்ஸ், லம்பார்ட்ஸ், ஸாக்சன்ஸ் ....) 53 முறை போர் புரிந்தான். ஐபீரியாவில் பலமுறை முஸ்லீம்களை எதிர்த்துப் போரிட்டான், 778 C.E. ல் வட பாம்பலோனாவில் 30,000 மூர்கள் இவன் படையை சுற்றி வளைத்துத் தாக்கியதில் படுதோல்வி அடைந்தான். 1095 ல் இரண்டாம் போப் அர்பன் முதல் சிலுவைப் போருக்கு அழைப்பு விடுத்தபோது முன்னின்று கலந்து கொண்டான். ஜுன் 2000 மாவது ஆண்டில் போஸ்னியா, கொஸோவாவில் பால்கன் சிலுவைப் போராளிகளின் சார்பில் முதல் வடஅமெரிக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாதிபதி பில் கிளிண்டன் கலந்து கொண்டபோது, அவருக்கு ‘சார்ல்மாக்னி பரிசு’ ஆஷன் நகரில் (சார்ல்மானி பிறந்த ஊர்) வழங்கப்பட்டது. சார்ல்மாக்னி இறந்த பிறகு, ஹோலி ரோமன் எம்பயர் அவரின் பிள்ளை, பேரப்பிள்ளைகளால் நிரவாகத் திறமையற்று பலமிழந்தது. முஸ்லீம்கள் தென்பகுதி வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய ஆரம்பித்தார்கள். தானாகவே ஹோலி ரோமன் எம்பயர் வலுவிழந்து ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி என்று மூன்றும் மன்னராட்சி பிரதேசமாகப் பிரிந்தது. ஹோலி ரோமன் எம்பயர் பல பகுதிகளாக சிதறியதும், ஃப்ராங்கிஷ் மன்னர்கள் இஸ்லாமை எதிர்க்கக்கூடிய நம்பிக்கையை இழந்தார்கள். இஸ்லாமை எதிர்க்கும் சக்தி வடபுறமாக ஸ்காண்டிநேவியாவை நோக்கி நகர்ந்தது.
                                           “வடக்கின் சீடன்” என்று பலராலும் அறியப்பட்ட ஃப்ரான்சின் ஆமியன் நகரில் பிறந்த அன்ஸ்கர் (801-865 C.E.) என்ற துறவி ஜெர்மனிக்கும் 826 C.E. ல் டென்மார்க்குக்கும் சென்றான். அங்கு அவன் மன்னரையும் மேலும் 400 பேரையும் கிறிஸ்துவத்துக்கு மதம் மாற்றினான். பிறகு, ஸ்வீடன் சென்று முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை ஸ்காண்டிநேவியாவில் நவீன ஸ்டாக்ஹோம்சில் பிர்காவின் வைகிங்க் மையப்பகுதியில் கட்டினான். 832 C.E. ல் அன்ஸ்கர் ஜெர்மனி திரும்பியதும் ஹாம்பர்க் நகரின் பிஷப்பாகி மொத்த ஸ்காண்டிநேவியாவின் பொறுப்பாளராக ஆனான். 848 C.E. ல் போப் இவனை ப்ரீமெனின் ஆர்ச் பிஷப்பாக ஆக்கினார். 854 C.E. ல் டென்மார்க் திரும்பி ஜூட்லாண்டின் மன்னன் எரிக்கை கிறிஸ்துவத்துக்கு மதம் மாற்றினான். இந்த அன்ஸ்கர் தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்துவத்தின் பால் மதம் மாற்றிவன். அன்ஸ்கரின் மறைவிற்குப் பிறகு, டென்மார்க்கும், ஸ்வீடனும் மீண்டும் பாகனியசுத்துக்கு (PAGAN-காட்டுமிராண்டித்தனம்) மாறியது. வைக்கிங் பகுதிவாசிகள் ஸ்கேண்டிநேவியாவிலிருந்து பல பகுதிகளிலும் பரவி முஸ்லீம்களுக்கு எதிராக சோதனைகள், காலனிகள் அமைத்தல் போன்றவற்றை பிரிட்டனிலும், வட ஃப்ரான்சிலும், வட ஜெர்மனியிலும் மேற்க்கொண்டார்கள். மேலும் தெற்கில் ஐபீரியாவில் நுழைந்து ஜிப்ரால்டர் ஸ்ட்ரெய்ட் வழியாக மெடிட்டரேனியனில் பலீயரிக் தீவில் முஸ்லீம்களை உள்ளுர் காலனிவாசிகளின் துணையுடன் அடாவடியாக வெளியேற்றினார்கள். வைக்கிங்குகள் வட ஆப்பிரிக்காவில் கார்டோபாவின் உமய்யத் எமிரேட்டை தாக்கினார்கள். ஐந்து வாரங்களுக்குப் பிறகு, முஸ்லீம் படைகளால் பலமாகத் தாக்கப்பட்டனர். முஸ்லீம்கள் 30 கப்பல்களையும், 1000 வீரர்களைக் கொன்றும், 400 வீரர்களை கைது செய்து விரட்டினர். முஸ்லீம்களின் திட்டமிட்ட எதிர்த்தாக்குதலால் வைக்கிங்குகளால் ஈடு கொடுக்க முடியவில்லை. வைக்கிங்குகள் ரஷ்யாவின் ஆற்றைக் கடந்து கருங்கடல், காஸ்பியன் கடல் வழியாக அப்பாஸிட் கலீஃபாவைத் தாக்கினர்.
                                     முதல் கிறிஸ்தவ ஆயிராமாண்டு ஐரோப்பா ஏறக்குறைய ஸ்கேண்டிநேவியா, வட ஸ்பெயின், ரஷ்யா, பால்கன் என அனைத்துப் பகுதிகளும் கிறிஸ்துவத்துக்கு மாறியது. பாதிக்கும் மேற்பட்ட மேற்கு ஐரோப்பா கிறிஸ்தவ தேவாலயங்ககளின் ஆதிக்கத்தில் வந்தன. தேவாலயங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக சிலுவைப் போரைத் துவங்கத் திட்டமிட்டது. அதற்கு மிகுந்த பொருட்செலவு, வீரர்கள் தேவைப்பட்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்து வளமை மிகுந்த நாடாக இருந்தது. அதன் மன்னர்கள் கம்பளி வியாபாரத்தின் மூலம் வரியாக நிறைய வெள்ளி உலோகத்தை சேர்த்து வைத்திருந்தனர். வெள்ளி சேமிப்பு இங்கிலாந்தை வடமேற்கு ஐரோப்பாவில் வரம் பெற்ற நாடாகவே கருதச்செய்தது. மெரிக்காவின் மன்னன் ஓஃப்ஃபா முதல் முறையாக வெள்ளியில் இங்கிலாந்தின் பென்னி (PENNY) நாணயத்தை வெளியிட் டான். தேவாலயங்கள் நார்மண்டிகளின் மூலமாக இங்கிலாந்தின் வளமையை முஸ்லீம்களுக்கெதிரான சிலுவைப் போருக்கு பயன்படுத்திக் கொண்டது. 911 C.E. ல் நார்வேயின் வைகிங்க் ரோல்லோ என்பவன் வட ஃப்ரான்சில் தனியாக (முஸ்லீம்களிடமிருந்து பாதுகாப்பாக) ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அங்கு தான் ‘லயன் ஹார்ட்’ என்று அழைக்கப்பட்ட ரிச்சர்டின் கோட்டை இருக்கிறது. அந்த பகுதியே உள்நாட்டு சண்டைக்கு புகழ் பெற்ற நார்மண்டி என்று அழைக்கப்பட்டது. ரோல்லோ ஆர்ச்பிஷப் ரோவனின் கரங்களால் கிறிஸ்துவத்தை தழுவி ஃப்ராங்க்சின் பாதுகாவலன் போல் செயல்பட்டான். நார்மண்டிகளின் பிரபுக்கள்       ( DUKES OF NORMANDY) என்னும் பாரம்பரிய வழிமுறையை ஏற்படுத்தினான். நார்மண்டிகள் ஃப்ரான்சின் மதவெறி குணநலன்களுடனும் ரோம், கரோலின், ஃப்ராங்க்ஸ், ஸ்கேண்டிநேவியன், இத்தாலி வழிமுறைகளுடனும், துணையுடனும் இருந்தனர். மேலும் பதினோராம் நூற்றாண்டில் கலாச்சார கலவையாகவும், சக்தி வாய்ந்த மத, அரசியல், இராணுவம் சார்ந்ததாகவும் நார்மண்டி விளங்கியது. தேவாலயங்கள் நார்மண்டிகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின. ஐரோப்பாவில் கிறிஸ்துவத்துக்கு மிகப்பெரிய இராணுவ பலமாக நார்மண்டி உருப்பெற்றது. இவர்கள் நிர்வாகத்தாலும், ஒரு மாதிரியான தலை மழித்த கோலத்துடன் இராணுவ நடவடிக்கைகளைத் தயார் படுத்துவதிலும், நேரம், பயிற்சிக்காக பண முதலீடு செய்வதிலும் ஈடுபட்டனர். கடந்த பல நூற்றாண்டுகளாக நார்மண்டிகள் கடற்கொள்ளையர்களாக இருந்தவர்கள். காலத்தில் அவர்கள் 980 C.E. லிருந்து 1030 C.E. வரை வட ஐரோப்பாவில் அரண்மனைகள் கட்டுவதிலும், அகழிகள் தோண்டுவதிலும் சிறந்து விளங்கினர். நார்மன்கள் போர் இல்லாமல் இருப்பதை விரும்புவதில்லை போரில் தோற்பது போலிருந்தால், சூது செய்தும், லஞ்சம் கொடுத்தும் வெற்றி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
                                            முஸ்லீம்களிடமிருந்து 1000 மைல்களுக்கப்பால் மெடிட்டரேனியனில் நார்மன்கள் முதல் காலனியை அமைத்தனர். 827 C.E. லிருந்து முஸ்லீம் கள் வசமிருந்த சிஸிலி தீவை 1060 C.E. ல் திரும்பக் கைப்பற்றினர். நான்மண்டியில் தேவாலயங்கள் தான் கல்வியறிவு பெற்ற மன்னர்களையும், இளவரசர்களையும், பிரபுக்களையும் அரசாங்கங்கள் அமைக்கத் தேர்ந்தெடுத்தன. அவர்கள் லத்தீன் மொழியின் இலக்கணத்தையும், பேச்சுத்தன்மையும், கணிதத்தையும், இசையையும், புவியியலையும், ஜோதிடத்தையும், பௌதிகத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் கற்றுத் தேர்ந்தனர். போப் இரண்டாம் சில்வெஸ்டர் (945 C.E.-1003 C.E.) என்ற முதல் ஃப்ரென்ச் போப் மதபோதகராக பல சாதனைகள் புரிந்தார். கணிதம், தத்துவம், பௌதிகத்தில் பல கட்டுரைகள் எழுதினார். அரேபிய எண் முறைகளை அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத ரோமன் எண் முறைக்கு மாற்றினார். பூஜ்ஜியத்திற்கு ரோமன் எண் முறைகளில் வடிவம் இல்லை. பதினோராம் நூற்றாண்டின் முதல் பாதியில் நார்மண்டிகள் எல்லாத் துறைகளிலும் ஐரோப்பாவில் பலம் வாய்ந்த சக்தியாக மாறி முஸ்லீம்களை அழிக்க சிலுவைப் போருக்கு தயாராக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலான சிறந்த தகுதியாக இத்தாலியின் மதகுரு லான்ஃப்ரான்க் (சிர்கா 1005 C.E.-1089 C.E.) என்ற பெனடிக்ட் துறவி அறிவுக் கூர்மையுடன் இருந்தார். மிகச்சிறந்த குடும்பத்தில் பிறந்த இவர் மன்னர்களுக்கெல்லாம் மேலாக கருதப்பட்டார். அரசியலிலும், நிர்வாகத்திலும், கற்பிப்பதிலும் ஐரோப்பாவிலேயே சிறந்த மதகுருவாக கருதப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக