செவ்வாய், 30 ஜூன், 2015

மொகலாய வரலாறு 10

                       இந்துக்களையும், குறிப்பாக பிராமணர்களையும் பணியில் அமர்த்தி இருந்ததாக கனுங்கோ என்பவர் கூறுகிறார். தபால்துறையில் குதிரைகளை யும் மற்ற கால்நடைகளையும் பட்டுவாடாக்கள் செய்ய அமைத்தார். மக்தப், மதரஸாக்களை அமைத்து இலவச உணவு, கல்வி கிடைக்கச் செய்தார். பஞ்சா பில் ரோடாஸ் கோட்டை, ஆக்ராவின் அரண்மனைக் கோட்டை ஆகியவற்றை கட்டினார். இந்திய வரலாற்றில் தனி இடம் பிடித்த ஷேர்கான் ஹுமாயுனுக்கு எதிராக திறமையாக போர்திட்டம் வகுத்திருந்தார். இராணுவத்தில் 150,000 குதி ரை வீரர்கள், 250,000 போர் வீரர்கள், 5,000 யானைப்படைகள் என்று பிரம்மாண்ட மாக்கினார். இராணுவத்தில் ஊழல்களுக்கு இடம் தராமல் தன்நேரடி கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். நிலங்களின் பரப்பளவுக் கேற்றவாறு வருவாய் செலுத்தும் வழிமுறையைக் கொண்டு வந்தார். சாதாரண குடிமகனுக்கும் நியாயமான நீதி கிடைக்கச் செய்தார். மதிப்புக்கேற்றவாறு தங்கம், செம்பு, வெள்ளியில் உருக்கிய நாணயத்தை வெளியிட்டார். தன் வாழ்நாளிலேயே தனக்கும், தன் தந்தை ஹசன் கான் சூரிக்கும் நினைவு கோபுரங்களைக் கட்டி னார். இவர் மகன் இஸ்லாமுக்கும் நினைவுகோபுரம் கட்டியபோது, பாதியிலே யே ஆட்சியை இழந்தார். குழந்தைப்பருவத்திலிருந்து மாற்றாந்தாய்களினால் வேதனையைச் சுமந்து, பின் சமூக, வருவாய் துறையில் சிறப்பான பயிற்சி பெற்று கவர்னராய் மாறி, பலமான மொகலாய, ராஜபுத்திரர்களை வென்று மன் னனாகவே ஆகிப்போன ஷேர்கான் 1545 மே மாதம் 22 ல் வெடிமருந்தை  கையா ளும்போது தவறுதலாக வெடித்து இறந்துபோனார். இவருக்குப் பிறகு, இளைய மகன் ஜலால்கான், சலீம்ஷா என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார். இவர் தனக்கெ திராக இருந்த அமீர்களை சிறையிலிட்டும், கொன்றும் கடுமையாக நடந்து கொண்டார். ஒருமுறை அஸீம் ஹுமாயுன் என்ற பஞ்சாபின் கவர்னரை தன் னை வந்து சந்திக்கும்படி கூறினார். அஸீம் ஏதோ காரணத்தால் தன் உதவியா ளரை அனுப்பினார். இதை அவமானமாகக் கருதிய சலீம் ஷா அஸீமைக் கொன்றுவிட உத்தரவிட்டார். இதை அறிந்த அஸீம் புரட்சியில் ஈடுபட அம்பா லா என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டு, காஷ்மீருக்கு தப்பி ஓடினார். அங்கே ஒரு பழங்குடி மனிதனால் அஸீம் சுடப்பட்டு இறந்து போனார். எட்டாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு சலீம்ஷா இறந்துபோனார். அடுத்து சலீம்ஷாவின் மகன் ஃபிரோஸ்ஷா ஆட்சிக்கு வந்தார் . இவர் மகன்களாலும், பேரப் பிள்ளைகளா லும் ஆட்சி ஆளும் திறமை இல்லாததாலும்,எதிரிகளை கையாள முடியாத தால் ஷேர்கானின் சூர் பேரரசு ஆட்சி குறிகிய காலத்தில் முடிவுற்றது. பல குழப்பங்களுக்கிடையில் சிலர் ஹுமாயுனை மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டினர்.
மீண்டும் ஹுமாயுன்
14,000 வீரர்களுடன் சென்று கந்தஹாரில் சகோதரர் கம்ரானை வென்று, காபூல் நோக்கி முன்னேறி  அதையும் வென்றார். இரவு நேரத் தாக்குதலில் எதேச்சையாக மிர்சா ஹிண்டால் கொல்லப்பட்டார். காபூ லை விட்டு தப்பி ஓடிய கம்ரான் சுல்தான் சலீம் ஷாவிடம் அடைக்கலம் தேடி னார். சலீம் ஷா கம்ரானை அவமரியாதை செய்ய, ககார் என்ற பகுதிக்குச் சென் றார். அதன் ஆட்சியாளரும் கம்ரானை அவமரியாதை செய்து, ஹுமாயுனிடம் ஒப்படைத்தார். சகோதரர்களை நல்ல விதமாக பார்த்துக் கொள்ளச் சொன்ன தந்தை பாபரின் உபதேசம் நினைவுக்கு வர, கம்ரானைக் கொல்லாமல் கண்க ளை மட்டும் பிடுங்கி இனி தமக்கெதிராக சதிகள் புரியாவண்ணம் செய்தார். கம் ரானின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மனைவியுடன் புனித மக்கா நகருக்கு அனுப்பப்பட்டு, இறுதி காலம் வரை அங்கேயே இருந்தார். அதே போல் இன் னொரு சகோதரர் மிர்சா அஸ்கரியும் பிடிக்கப்பட்டு மக்காவுக்கு அனுப்பி வைக் கப்பட்டார். தனது எதிரிகளை விலக்கிய பின் மீண்டும் ஹிந்துஸ்தான் மீது படையெடுத்தார்.
    இந்தியாவின் சில பகுதிகளிலிருந்தும் ஹுமாயுனுக்கு ஆதரவு வந்தது. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். உன்னிப்பாக இந் தியாவை கவனித்து வந்த ஹுமாயுன் 1555 ல் தகுந்த இராணுவ பலத்துடன் லாகூரைக் கைப்பற்றினார். அரசு கஜானாவில் பல ஊழல்களைச் செய்த சுல் தான் சிக்கந்தர் சூர் சர்ஹிந்தில் எதிர்த்து வர அவரை ஹுமாயுன் விரட்டி அடித் தார். பழைய இந்திய தலைநகரைக் கைப்பற்றிய ஹுமாயுன் ஒரு வருட காலம் ஆட்சி செய்தார். . இவர் ஆட்சி செய்த காலத்தில் விஞ்ஞானத்திலும், கலைகளிலும் ஆர்வம் காட்டினார். கவிதையிலும், ஓவியத்திலும் மிகச்சிறந்த புலமை பெற்றிருந்தார்.இவரது கவிதைகள் அர்த்தம் வாய்ந்ததாக இருந்தது. பூகோளவியலிலும் சிறந்து விளங்கினார். வானின் ஏழு கோள்களை நினை வில் கொண்டு ஏழு பெரிய மண்டபங்களுடன் கூடிய மாளிகையைக் கட்டினார். சந்திரன் என்னும் மண்டபத்தில் நீதிபதிகள், தூதர்கள், கவிஞர்கள் மற்றும் பய ணிகள் கூடுவதற்கும், செவ்வாய் மண்டபத்தில் தளபதிகள் மற்றும் இராணுவ தலைவர்களுக்காகவும், புதன் மண்டபத்தில் பொறியாளர்களுக்காகவும், சனி மற்றும் வியாழன் மண்டபங்கள் அரசு நிர்வாகங்களுக்காகவும், வெள்ளி மண்ட பத்தில் கவிஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கூடவும் நிர்மாணித்திருந் தார்.
      மிகச்சிறந்த தச்சுத்தொழிலாளிகளை தருவித்து கலைநயத்துடன் கூடிய நான்கு படகுகளைத் தயாரித்து ஜமுனா ஆற்றில் பய ணிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். படகுகளில் சிலவற்றை சிறுவணிகத் திற்கும் பயன்படுத்தினார்.  அவைகள் டெல்லி ஃபரிதாபாத்திலிருந்து ஆக்ரா வரை சென்றன. ஒரு படகில் தோட்டம் அமைத்து நகரும் தோட்டம் ஆக்கி னார். இவரின் மிகப் பிரமாண்டமான பணியாவது ஒரு படகை மூன்று தளங்க ளடங்கிய அரண்மனை ஆக்கி இருந்தார். எப்போது வேண்டுமானாலும் அந்த மரப்படகை தனிமைப்படுத்தி பிரித்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது சேர்த்துக்கொள்ளலாம். சேர்க்கும்போது இணைத்ததற்கான அடையாளமே தெரியாது. படகின் மேல்தளத்திற்கு செல்லும் படிகள் தேவைப்படாத போது மடித்து வைத்துக் கொள்ளலாம். ஹுமாயுனின் ஆட்சி அமைப்பு, அதிகாரிகள், கலைகளைப்பற்றி பக்கம் பக்கமாக குறிப்புகள் ஆதாரங்களுடன் இருக்கின்றன. தஸ்கிரத் உல் வகியதி ஹுமாயுன் என்ற நூலில் ஆசிரியர்  ஜவஹர் என்பவர் பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறார். ஹுமாயுன் நிறைய படிப்பவராக இருந்தார். இந்தியாவை விட்டு தப்பி ஓடும்போது கூட பிடித்தமான புத்தகங்க ளையும், நூலகக் காப்பாளர் லாலா பெக் (தெரிந்த பெயர்-பாஸ் பஹதூர்)        கையும் அழைத்துக்கொண்டு போனார். மதப்பற்று மிக்க முஸ்லீமாக சுன்னி பிரிவைச் சார்ந்து இருந்தார். அரசு நிர்வாகத்தையும் நான்கு பிரிவாக பிரித்து க்வாஜாஹ் அப்துல் மலிக், க்வாஜாஹ் லுத்ஃப் உல்லாஹ், க்வாஜாஹ் ஹசன் மற்றும் க்வாஜாஹ் ஜலாலுத்தீன் மிர்சா பேக் ஆகிய தகுதியான அமைச்சர்கள் வசம் கொடுத்திருந்தார். டெல்லியில் சிறந்த கல்லூரியை நிறுவினார். ஹுமா யுன் கோபுரம் என்ற அந்த கட்டிடம் இன்றும் இருக்கிறது. ஆரம்பத்தில் ஷியா பிரிவுக்கு மாறியிருந்ததாலும், அதிகமான ஷியா பிரிவினரை பதவிகளில் வைத்திருந்ததாலும் ஹுமாயுன் ஷியா பிரிவைச் சேர்ந்தவராக அதிகமானோர் கருதினர். ஆனால் இவர் ஒரு சிறந்த சுன்னிப்பிரிவு முஸ்லீமாகவே இருந்தார். அதிகாரிகளிடமும், சாதாரண சிப்பாய்களிடம் கூட நண்பர் போல் பழகக் கூடிய வராக இருந்தார். சிறந்த மகனாகவும், தந்தையாகவும், சகோதரராகவும் இருந் தார். தந்தையைப் போலவே வெகு சீக்கிரத்தில் புகழ்பெற்ற தீன் பனாஹ் என்ற நூலக கட்டிடத்திலிருந்து 1556 ல் ஜனவரி மாதம் 24ல் தவறி விழுந்து மரணம டைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக