ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 3

இன்று நாம் பார்க்கும் இந்தியாவை ஏறக்குறைய சிறிதும் பெரிதுமாக 500 மேற்பட்ட ராஜபுத்திர, சாளுக்கிய, மராட்டிய, சீக்கிய, பாண்டிய, சேர, சோழ, கூர்ஜர, கன்னோசி, பாலர்கள், கலிங்க, பிரதிஹர என்று பலமொழி, பலசட்டங்கள் கொண்டு பலதரபட்ட ஆட்சியாளர்கள் ஆண்டு வந்தார்கள். 50 கிலோமீட்டருக்கு ஒரு மொழி பேசிக்கொண்டு எவனும் எவனுக்கும் ஒத்துவராமல் இருந்தார்கள். முஸ்லீம்களின் பாதம் இங்கு படாமல் போயிருந்தாலோ, மங்கோலியர்கள் முழுமையாக வந்திருந்தாலோ இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரியாக மாறி இருக்கும் என்பது அனைத்து சரித்திர ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து. அனைத்து மன்னர்களையும் போரிட்டு ஒரு நாடாக ஆக்கியதில் கோரி முஹம்மதுக்கும், குதுப்தீன் அய்பெக்குக்கும், இல்டுட்மிஷ்ஷுக்கும், கியாசுத்தீன் பால்பனுக்கும் முக்கிய பங்குண்டு. அதற்குப்பிறகு வந்த அலாவுத்தீன் கில்ஜி ஒரே நாடு என்பதில் தீவிரமாய் இருந்து இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். ஆனால், என்ன கொடுமை இந்த மகத்தான உண்மையை இந்திய மக்களுக்கு வலுக்கட்டாயமாக பாடமாக போதிக்க மறுத்துவிட்டார்கள். ஒருநாள் அல்லாஹுத்தாலாவால் அழிக்கப்படப்போகும் பூமிதானே என்று எண்ணியோ முஸ்லீம்களும் பாமரமக்களுக்கு அதை எடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டார்கள். முஸ்லீம்கள் வந்தார்கள் அவனை வென்றார்கள், இவனை வென்றார்கள், கோவிலை இடித்தார்கள், கொள்ளையடித்தார்கள் என்று இன்றுவரை கூப்பாடுதான் போடுகிறார்களே தவிர, முஸ்லீம்கள்தான் இந்தியா என்று ஒரு நாட்டை உருவாக்கினார்கள் என்று உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் முதல்முதலாக வந்த அப்துல் காசீம் கூட அப்படியே போட்டுவிட்டு  மத்திய ஆசியாவின் கலீஃபா அழைக்க சென்று மரணமடைந்துவிட்டார். அதன்பிறகு மேற்சொன்ன ஆட்சியாளர்களிலிருந்து மொகலாய ஆட்சியாளர்கள் வரை யாரும் இந்தியாவிலிருந்து எந்த செல்வங்களையும் எடுத்துச் சென்றதாக வரலாறு இல்லை. மேலும் அனைவரும் இங்கேயே பிறந்து, இங்கேயே போரிட்டு, பிரிந்திருந்த இந்திய மக்களை ஒன்றாக்கி 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இங்கேயே இறந்து போனார்கள் இது சரித்திரம். வெறும் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து 46,000 கப்பல்கள் செல்வத்தை இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இன்றுவரை கேட்பதற்கோ, அதைப்பள்ளிகளில் ஓங்கிச் சொல்லிக் கொடுக்கவோ ஆளில்லை. சரி, அப்படி அனைவரையும் விரட்டி இன்றுவரை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு (இந்தியாவிலிருந்தது இந்து மதமல்ல திராவிட இனம்) ஆண்டார்களே கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில்தான் ட்ரில்லியன் கணக்கில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா கொள்ளையடித்தவன் திராவிடன் அல்ல. அவன் எங்கும் போக மாட்டான். 500 ஆண்டுகால முஸ்லீம்கள் ஆட்சியில் எந்த நாட்டில் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். யாராவது சொல்லமுடியுமா. நல்லுணவு உண்டு, நல்லுடை உடுத்தி, நல்ல கருவில் பிறந்த மாமன்னர்கள் முஸ்லீம் ஆட்சியாளர்கள். தான் கொண்ட மார்க்கத்திற்கு பயந்தார்கள், தான் ஆட்சி செய்யும் மக்களுக்கு பயந்தார்கள். சில ஆட்சியாளர்கள் அதனாலேயே சில இந்துக்களுக்கு சலுகைகளும் தந்தார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தின் உயர்பதவிகளில் இந்துக்களுக்கு இடமளித்திருக்கிறார்கள். சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் தவறாக ஆண்டிருக்கலாம் அது நியதி. ஊன்றிப்பார்த்தோமானால் பொதுநிலையிலிருந்து சிந்தித்துப்பார்த்தால் இந்திய மக்கள் விழி இரண்டையும் அகல விரித்து, சேர்ந்து விடாமல் இருக்க குறுக்கே தடுப்பிட்டு, உலகிலுள்ள அனைத்து வகையான மண்ணையும் தங்கள் கண்களில் தாங்களே இட்டு நிரப்பிக் கொண்டார்கள். ஒரு இன்னலிலிருந்து ஒருநாடு விடுபட்டால் பலமடங்கு முன்னேற வேண்டும். உலகில் பலநாடுகள் இதற்கு உதாரணமாக இருக்கின்றன. சொல்ல வேண்டுமானால் சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் எத்தனையோ மடங்கு உயர்ந்துவிட்டது. ஜப்பான் ஒரு அழிவிற்குப் பிறகு, எத்தனையோ படி முன்னேறிவிட்டது. ஆனால், இந்தியா மட்டும் முன்னேறாமல் முஸ்லீம் ஆட்சியைவிட, ஆங்கிலேய ஆட்சியைவிட மக்களின் வாழும்தரம் கீழே போய்விட்டது. வாழும் தரம் என்பது ஒரு எல்.சி.டிவி வைத்துக் கொள்வதோ, ஒரு மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொள்வதோ, விதவிதமாக உணவகங்களில் உண்பது மட்டுமல்ல. அப்படி நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இல்லை. ஜப்பான் முன்னேற 50 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியாவிலிருக்கும் அறிவிற்கும், வளத்திற்கும் முன்னேறுவதற்கு 25 ஆண்டுகள் போதும். இதுவரை ஆண்ட ஜெய்ஹிந்த்களும், பாரத்மாதாக்களும், ஹமாரா பாரத்களும் என்ன செய்கிறார்கள். தீவிரவாதம் தீவிரவாதம் என்று கூப்பாடு போட்டு முஸ்லீம்களைப் பழிசுமத்துகிறார்கள். அட தீவிரவாதத்தால் நாம் கொல்லப்பட்டுவிடுவோம் என்று பயந்து யாராவது ஆட்சிக்கு வராமலோ, தேர்தலில் நிற்காமலோ இருக்கிறார்களா?. இந்தியாவை ஆள்வது இந்துக்கள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு ஆள்பவர்களே பிறரைக் குற்றம்சாட்டும் முன் சிந்தியுங்கள். மக்கள் என்றும் முட்டாளாகவே இருக்கமாட்டார்கள். தன்னுடைய கடையில் தன்னுடைய கல்லாவில் இருக்கும் ஒருவன் ஐயோ முந்தாநாள் 7000 ரூபாய் காணாமல் போய்விட்டது, நேற்று 5000 ரூபாய் காணாமல் போய்விட்டது என்று குறிப்பாக ஒரே திருடன் மீது எத்தனை நாள் பழி சொல்லமுடியும்?. எனதருமை மாற்றுமத சகோதரனே ஒன்றைச் சிந்தித்தாயா? 4,000, 5,000 பேரைத்திரட்டிக் கொண்டு உருவிய வாளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் போகும் தலைவரும் இந்துதான். வியாபம் எனப்படும் ஊழலை வெளிக் கொண்டுவந்த அரசு ஊழியன் ஒருவன் அவனும் ஒரு இந்துதான். ஆனால், வாளுடன் பெரும் கூட்டத்துடன் இருக்கும் ஒரு இந்துவுக்கு 150 கோடி ரூபாய்க்கு அரசு பாதுகாப்பு. ஊழலில் பங்குபெற்ற 1000 பேருக்கு மேலானவர்களால் எந்நேரமும் உயிருக்கு வெளிப்படையாக ஆபத்து இருக்கும் ஒரு இந்துவுக்கு ஒரு சைக்கிள் காவலர் பாதுகாப்பு. உங்களுக்கே இது சிரிப்பாகத் தோன்றவில்லையா? அல்லது சிந்திக்கும் அறிவே இல்லாமல் படைக்கப்பட்டுவிட்டீர்களா?. மறைக்கப்பட்டுவிட்ட இஸ்லாமிய சரித்திரங்களைப் படித்துப்பாருங்கள். இஸ்லாமிய ஆட்சி என்பது அனைத்துப் பக்கமும் கூர் உள்ள கத்தியைப் போன்றது. உலகமுழுவதுமுள்ள முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்களுக்கு இறைவன் வழங்கிய ஆட்சியை அந்த கத்தியை அவ்வளவு லாவகமாகக் கையாள்கிறார்கள். சுதந்திரம் பெற்று நம் இந்திய நாட்டை முன்னேற்றாமல் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிய துணைபோனது யார்?, சீனாவுக்கு எதிராக திபெத்தில் தலாய்லாமாவை ஆதரிப்பது யார்?. 80 கோடிகளில் இருந்த நம் மக்களின் நலனைவிட, மேற்சொன்ன இரண்டும் முக்கியமா?. அதெல்லாம் சர்வதேச அரசியல் என்றால், சீனாவிடம் பல ஆயிரம் சதுரஅடிகள் நிலப்பரப்பை கோட்டைவிட்டு விட்டு அமைதியாக இருப்பது ஏன்?. நாம் முஸ்லீமாக இருந்து ஆயிரம் சொல்லிவிடலாம். ஆனால், நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலைமையும், வந்தபின் இருந்த நிலைமையும் ஒருவர் ஆர அமர சரித்திரங்களைப் புரட்டிப்பார்த்தால் தெரிந்து கொள்வார்கள்.
முஸ்லீம்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த பகுதிகளை எதிர்த்தே பிற்காலத்தில் போரிட்டார்கள். எங்கே? இன்று ஆளூம் ஆரியர்களை இஸ்ரேலை எதிர்த்துப் போரிடவேண்டாம். பேசச்சொல்லுங்கள். மாட்டார்கள். இதுதான் அவர்களின் தேசபக்தி. திருட வந்தவனுக்கும், குடியிருக்க வந்தவனுக்கும் உள்ள வித்தியாசமும் இதுதான். ஒரு உருவத்தை (நாட்டை) பல பாகமாகப் பிரித்து அவரவர் என்னுடையது என்று வைத்திருந்தார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்கள் அவர்களை (இந்து மன்னர்களை) வென்று இந்தியா என்னும் மறைந்திருந்த உருவத்தைக் கொடுத்தார்கள். நிலப்பரப்பையே ஆண்ட அவர்களை வென்று முத்தரப்பிலும் கடல்சூழ ஒரு நாடாக்கினார்கள். இதை உலகில் யாராலுமே செய்யமுடியாது. அல்லாஹுத்தாலா அந்த அற்புதத்தை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கையில் கொடுத்தான். இந்தியா ஒரு உலகில் ஒரு அற்புதபூமி. நபிமார்கள் வரலாற்றில் ஆதம் (அலை) நபிகள் பூமிக்கு வரும் போது சொர்க்கத்திலிருந்து கொண்டுவந்த வாசனைப் பொருட்கள் கையிலிருந்து இந்தியப் பகுதியின் மீது சிதறியதால்தான் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சந்தனம் போன்ற பல வாசனைப் பொருடகள் இங்கு விளைவதாக ஒரு வரலாறு. முஹம்மது கோரி முதலில் கன்னாசிகளையும், பிரதிஹரர்களையும் வென்று டெல்லி சுல்தானேட்டை உருவாக்கினார். இல்டுட்மிஷ் மேலும் நிலப்பரப்புகளை வென்று நாட்டை விரிவுபடுத்தினார். அலாவுத்தீன் கில்ஜிதான் டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியா என்னும் பெரிய நாடு உருவாக காரணமாக இருந்தார். ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே ஆட்சிமொழி என்று கொண்டுவந்தார். ஆனால், இந்திய பள்ளிக்கூடங்கள் இவர்களை எல்லாம் படையெடுப்பாளர்களாகத் தான் போதிக்கின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஊர்வலத்தில் வடை விற்றவன், தேநீர் விற்றவனை எல்லாம் சுதந்திரப் போராளிகளாக சித்தரிக்கிறார்கள். பால்பனின் மகன் முஹம்மது கான் இந்தியாவைக் காக்க மங்கோலியப் போரில் உயிர்விட்டான் இதை யாராவது மறுக்கமுடியுமா?. தனது தள்ளாத 80 வயதிலும் எல்லைப்புரத்தில் கோட்டைகளைக் கட்டி இந்தியாவை மங்கோலியர்களிடமிருந்து பால்பன் காப்பாற்றினார். அப்படியும் நுழைந்த மங்கோலியர்களை மாலிக் காபூர், ஜாபர்கான், காஜி மாலிக் போன்ற தளபதிகள் வீரமாகப் போரிட்டு விரட்டினார்கள் அதைச் சொன்னார்களா?. அதாவது மங்கோலியர்கள் வரலாற்றிலே ஒரு சொல் உண்டு. குதிரைகள் நீர் அருந்த தயங்கினால், ‘ஏன் ஜாபர்கான் தென்படுகிறாரா’? என்று கேட்பார்களாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக