வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 8

இத்தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஹுலகு (அக்காலத்திய ஜார்ஜ் டபிள்யூ. புஷ்) என்னும் மங்கோலிய மன்னனால் பாக்தாத் நகரம் அழிக்கப்பட்டது. 10 லட்சம் முஸ்லீம்களைக் கொன்று, மஸ்ஜிதுகள், நூலகங்கள், பள்ளிக்கூடங்கள், அரண்மனைகள் ஆகியவற்றைத் தரைமட்டமாக்கினான். அக்காலத்திலேயே கால்வாய் நீர்பாசனம் கொண்டிருந்த பாக்தாதின் நகர கால்வாய்களை சேதமாக்கி கலீஃபாவையும், அவர் குடும்பத்தினரையும் காட்டுமிராண்டித் தனமாக கொன்று குவித்தான். அதன்பின் ஓட்டோமான் ஆட்சியாளர்களால் தான் மீண்டும் இஸ்லாமியர்கள் தலைதூக்கினார்கள். திறமைவாய்ந்த பெய்பர்ஸ் அஸ் ஸாஹிர் என்பவர் மங்கோலியர்களை அய்ன் ஜாலூத் போரில் வென்று உருவெடுத்தார். கிறிஸ்தவ சிலுவைப்படைகளுடன் இணைந்திருந்த மங்கோலியர்களை போரிட்டு, சிலுவைப்படைகளிடமிருந்த அரபு நகரங்களான அர்சூஃப், அட்லிட், ஹைஃபா, சஃபிட், ஜஃப்ஃபா, ஆண்டியாக் ஆகியவற்றை தொடர்ச்சியாக வென்றார். ஃப்ரான்சின் மன்னன் ஒன்பதாம் லூயிஸ் மீண்டும் அரபுகளை வெல்ல 1270 ல் எட்டாவது சிலுவைப்போரை நடத்தினான். அரபு பிரதேசத்தை இடையில் துண்டித்துவிடும் நோக்கில் துனிஷியாவின் மீது படையெடுக்க இருந்தான். எதிர்பாராத விதமாக கொடும் கிருமி நோயால் தாக்கப்பட்டு, துனிஸ் நகரில் இறந்து போனான். அவன் உடல் பாரீஸ் நகரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு ‘ஞானி’ யாக புதைக்கப்பட்டான். அடுத்து பெய்பர்ஸ் சலாவுத்தீனால் வெற்றி கொள்ளமுடியாமல் போன சிலுவைப்படைகளின் சிரியாவிலுள்ள ஹிஸ்ன் அல் அக்ரத் (ஃப்ரென்சில் “க்ராக் டெஸ் செவாலியர்ஸ்”) கோட்டையைக் கைப்பற்றினார். 1289 ல் எகிப்திய சுல்தான் அல் மன்சூர் கலாவூன் என்பவர், முஸ்லீம்கள் சிலிர்ப்படையும் வகையில் சிலுவைப்படைகள் வசமிருந்த காலனிய பகுதியான திரிபோலியை வென்றார். இப்போது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஃப்ரான்சின் கொடுமைக்கார மன்னன் ஹென்றியின் கீழ் அக்ரி துறைமுக நகரம் மட்டும் இருந்தது. இந்நிலையில் ஹென்றியின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பாவில் போப் நான்காம் நிக்கோலஸ் ஒன்பதாம் சிலுவைப்போருக்கு ஆட்களைத் திரட்டினான். பெரும் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு அக்ரி நகரை நோக்கி வந்தார்கள். அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு அங்கிருந்த முஸ்லீம் வணிகர்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட அல் மன்சூர் கலாவூன் பெரும் கோபம் கொண்டு ஐரோப்பியர்களை அரபு மண்ணிலிருந்து விரட்டும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் செய்தார். ஆனால், அவர் இறந்துபோக, அவர் மகன் அல் அஷ்ரஃப் கலீல்அக்ரியை வென்று சபதத்தை நிறைவேற்றினார். மன்னன் ஹென்றியும், ஐரோப்பிய தலைவர்களும் தப்பித்து சைப்ரஸ் ஓடிச்சென்றார்கள். மீதியிருந்த ஐரோப்பியர்கள் கலீலின் படையால் பிடித்துக் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவ வெறியாளர்களிடமிருந்து அக்ரியைக் கைப்பற்ற முஸ்லீம்களுக்கு 100 ஆண்டுகள் ஆயிற்று. பெருமகிழ்ச்சி அடைந்த அரபுகள் இனி கிறிஸ்தவ சிலுவைப்படைகள் முஸ்லீம் பிரதேசத்தில் நுழைந்து கொடுமைகள் செய்யக்கூடாது என்று இறைவனைப் பிரார்த்தித்தார்கள். அது அடுத்த சில ஆண்டுகளுக்கு பதிலாய் அமைந்தது. 74 ஆண்டுகளுக்குப் பிறகு, சைப்ரஸின் மன்னன் பீட்டர் 1365 ல் பத்தாவது கடைசி சிலுவைப்போரை ஏற்பாடு செய்தான். இது கிறிஸ்தவ அரபு நகரமான அலெக்ஸாண்டிரியா நகரத்தை எதிர்த்து கிளம்பியது. நகரின் எண்ணற்ற பலர் கொல்லப்பட்டார்கள். லத்தீன் வியாபாரிகளின் கடைகளும், வீடுகளும் பீட்டரின் படைகளால் சூறையாடப்பட்டது. இவர்களை எதிர்த்து அரபுகளே புரட்சி செய்து மன்னன் பீட்டரைக் கொன்றார்கள். 1395 ல் துருக்கிய முஸ்லீம்கள் கான்ஸ்டாண்டிநோபிளை நோக்கி படையெடுத்தார்கள். அப்போது பைஸாந்திய மன்னன் மானுவேல் இரண்டாம் பலாயிவோலோகஸ் ஐரோப்பியர்களை உதவிக்கு அழைத்தான். உடனே ஹங்கேரியின் மன்னன் சிஜிமுண்ட் 1396 ல் பத்னோறாவது சிலுவைப்போராக அறிவித்து கான்ஸ்டாண்டிநோபிள் மட்டுமல்லாமல், ஜெருசலத்தையும் மீட்பேன் என்று சூளுரைத்தான். இந்தச் சிலுவைப்படையில் பால்கன், ஃப்ரான்ஸ், பர்கண்டி, ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகியவற்றின் வீரர்கள் இணைந்தார்கள். இந்த பதினோறாவது சிலுவைப்படை நிகோபோலிசில் துருக்கிய சுல்தான் முதலாம் பயாஸிட்டால் நொறுக்கப்பட்டது.
பிறகு 48 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய கிறிஸ்தவ தீவிரவாதிகள் பால்கனில் துருக்கியர்களை எதிர்த்து வந்தார்கள். சுல்தான் இரண்டாம் முராதால் வெற்றி கொள்ளப்பட்டார்கள். பலம் கொண்ட துருக்கிய முஸ்லிம் படைகள் பைஸாந்திய பேரரசை அழித்து பால்கனில் பலம் பெற்றது. அங்கிருந்து முன்னேறி கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பியாவில் நுழைந்து இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துச் சென்றது. 1481 ல் தென் இத்தாலியைக் கைப்பற்றியது. ஐரோப்பியர்களின் முஸ்லீம்கள் மீதான தீவிரவாதம் 15, 16, 17 ம் நூற்றாண்டுகளில் பல ரூபங்களில் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் காலனி ஆதிக்கத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பரப்பினார்கள். 19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில் பலம் வாய்ந்த ஓட்டோமான் பேரரசை வீழ்த்தும் வழியைக் கண்டுபிடித்தார்கள். பலநூறாண்டுகளாகப் போராடி பிடிக்க முடியாமல் போன ஜெருசலத்தை 1948 ல் யூத இஸ்ரேல் என்னும் நாடை பாலஸ்தீனத்தில் உருவாக்கி அதை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நீரூற்றி வளர்த்து, ஹாஷிமிட்கள், சௌத்கள், அல் தானிகள், அல் கலீஃபா, பனியாஸ்களாகவும் இன்னும் பல பிரிவுகளாக ஒவ்வொரு முஸ்லீம்களுக்குமான ஜிஹாதை மறந்து தங்கள் குடும்பப் பெருமைக்காக மட்டுமே வாழும் இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் வைத்து இஸ்லாமியர்கள் மீது தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்தி விடுகின்றன. ஆனாலும் துருக்கிய ஆட்சியாளர்கள் ரோமப்பேரரசின் கான்ஸ்டாண்டிநோபிளை ‘இஸ்தான்புல்’ லாக மாற்றி பல மஸ்ஜித்களை கட்டி ஆணித்தரமாக இஸ்லாமிய நகரமாக மாற்றி வெற்றிகொடி நாட்டினார்கள். மேற்கத்திய கிறிஸ்தவ தீவிரவாதிகளால் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என்று சொல்லப்படுகின்ற சமீபத்திய ISIS என்ற அமைப்பு பரம எதிரியான இஸ்ரேலை எதிர்த்து ஒரு ஊசிப்பட்டாசு கூட வெடிக்கவில்லை. மதுரையில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் திருச்சிக்காரர்கள் தான் காரணம் என்று எந்த ஆதாரமும் காட்டாமல், வெறும் கூப்பாடு மட்டுமே போட்டுக்கொண்டு திருச்சியில் ஒவ்வொரு வீட்டின் சமையல்கட்டு, கழிவறைகள், படுக்கை அறைகள் என்று மதுரைக்காரர்கள் பல ஆண்டாக நினைத்த போதெல்லாம் வந்தால் திருச்சிகாரர்கள் சும்மா இருப்பார்களா? ஆனால், என்ன ஆச்சரியம் அரபு நாடுகள் சும்மா இருக்கின்றன. இவர்கள் என்னதான் சர்வதேச அரசியலை காரணம்காட்டினாலும் நபி (ஸல்) கள் நாயகத்தின் உண்மையான இஸ்லாமிய ஆட்சி எங்கே என்பதற்கு இவர்களிடம் பதிலில்லை. நேட்டோ படைகளுக்கு விமானதளம், துறைமுகம், உணவு, பெட்ரோல் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோபடை கப்பல்களுக்கு ஜப்பான் அரசு வருடத்திற்கு 5000 விலைமாதர்களை அனுப்புகிறார்கள். 1570 ல் ஓட்டோமான் துருக்கிகள் சைப்ரஸை வென்ற பிறகு, கிறிஸ்தவ சிலுவைப்படை போராளிகளுக்கு, பெரும் பின்னடைவாகிவிட்டது. 1571 ல் ஓட்டோமானின் கடற்படையை சிலுவைப்படைகள் லெபாண்டோவில் அழித்தாலும், மீண்டும் ஓராண்டில் கடற்படையை சிறப்பாக ஓட்டோமான்கள் அமைத்துக் கொண்டார்கள். கடந்த காலங்களில் சிலுவைப்படைகள் செய்த அட்டூழியத்தால் புராதன கிறிஸ்தவர்களான அரபு கிறிஸ்தவர்களிடத்தில் மிகப்பெரிய இழிவான எண்ணத்தையே விதைத்திருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக