ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

உமய்யாத்கள் வரலாறு 3

அல் வலீதுக்குப் பின் அவர் சகோதரர் சுலைமான் என்பவர் கலீஃபாவானார். இவர் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்ற நீண்ட போரை நடத்தினார். அது முடியா மல் போக பைஸாந்திய பேரரசை வெல்லும் ஆர்வம் முஸ்லீம்களிடத்தில் குறை ந்தது. முதல் இருபது ஆண்டு உமய்யாக்களின் ஆட்சியில் மேற்கில் ஐபீரிய தீபகற் பம், குதைய்பா இப்ன் முஸ்லிமின் கீழ் ட்ரான் ஸாக்சியானா மற்றும் கிழக்கில் வட இந்தியா வரை பரவினார்கள். சுலைமானுக்குப் பிறகு, உறவினர் உமர் இப்ன் அப்துல் அஜீஸ் கலீஃபாவாக பதவியேற்றார். உமய்யாத்களில் இவரின் கலீஃபா பதவி மட்டும் விந்தையாக இருந்தது. இவரை மட்டும் இஸ்லாமிய பாரம்பரிய வழிமுறையில் கலீஃபாவாக ஏற்றுக்கொண்டார்கள். உமர் இப்ன் அப்துல் அஜீஸ் புதியதாக முஸ்லீம் மதம் மாறுவதன் சம்பந்தமாக இருந்த பிரச்சினையை திறம் பட சமாளித்து நற்பெயர் பெற்றார். உமய்யாத்களின் காலத்தில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்துவர்களாகவும், யூதர்களாகவும், ஸோரோஸ்ட்ரியன்களாகவும் இருந்தார்கள். அவர்களை யாரும் முஸ்லீமாக மதம் மாற கட்டாயப் படுத்தவில்லை. ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு விதிக்கப்படும் ‘ஜிஸ்யா’ வரியைத் தவிர்ப்பதற்கு பலர் முஸ்லீமாக மதம் மாறினார்கள். இதனால் மாகாணங்களில் வரி மூலம் போதிய வருவாய் இல்லை. கவர்னர்கள் மதம் மாறுபவர்களைத் தடுத்தனர். இதைத்தான் உமர் இப்ன் அப்துல் அஜீஸ் அவர்கள் திறமையாகக் கையாண்டார்கள். ஆனால், எப்படி என்பதற்கான குறிப்புகள் கிடைக்க வில்லை. 
உமர் இப்ன் அப்துல் அஜீஸ் இறப்பிற்குப் பின் மற்றொரு மகனான அப்துல் மலிக் இரண்டாம் யஸீத் 720 லிருந்து 724 வரை கலீஃபாவாக இருந்தார். இவர் பிரச்சினை யாக இருந்த கர்ஜியாக்களுடன் சமாதானத்திற்கு முயன்றார். இதற்கிடையில் இவரின் படைகள் கரிஜியாக்களின் தலைவர் ஷவ்தாபைக் கொன்றனர். அதிலிருந்து தப்பித்த யஸீத் பின் அல் முஹல்லப் என்பவர் தனக்கு ஆதரவு அதிகமாய் இருந்த ஈராக்குக்குத் தப்பி ஓடினார். இவர் இரண்டாம் யஸீத் ஆட்சிக்கு வந் ததை விரும்பவில்லை. வெகு சீக்கிரம் வளர்ந்த இவர் மஸ்லமாஹ் இப்ன் அப்த் அல் மலீக் படைகளால் கொல்லப்பட்டார். இவர் நாட்டில் உள்ள அனைத்து கிறி ஸ்தவ அடையாளமுள்ள சிலைகளை இடிக்கச் சொல்லி சிலை வணக்கத்திற்கு எதிராக இருந்தார். இவரது ஆட்சியிலும் ஈராக்கில் யஸீத் இப்ன் அல் முஹல்லப் என்பவர் புரட்சி செய்தார். 724 ல் இரண்டாம் யஸீத் அப்துல் மாலிக் எலும்புருக்கி நோயால் மரணமடைய அவர் கடைசி மகன் ஹிஷாம் என்பவர் கலீஃபா பதவி யேற்றார். இவர் 743 வரை ஆண்டார். பல பிரச்சினைகள் இருந்த இவரின் நீண்ட கால ஆட்சியில் உமய்யாத்களின் இராணும் விரிவுபடுத்தப்பட்டது. தனது அரண் மனையை டமாஸ்கஸை விட்டு தொலைவில் பைஸாந்திய எல்லைக்கு அருகில் வட சிரியா பகுதியில் ரிஸாஃபா என்ற இடத்தில் அமைத்துக்கொண்டார். இது ஏற்கனவே கான்ஸ்டாண்டிநோபிள் மீது படையெடுத்த காரணத்தால் கோபத்தி லிருந்த பைஸாந்தியர்களை மேலும் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. ஹிஷாம் வெற்றிகரமாக அனடோலியாவைக் கைப்பற்றினார். ஆனால் அக்ரோயினன் போரில் பெரும் தோல்வி கண்டு மேலும் பேரரசை விசாலமாக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.  732 ல் ‘டூர்ஸ்போரில்’ ஃப்ராங்க்ஸ் படைகளிடம் தோல்வியுற்றதால், மேற்கிலும் பரவ முடியாமல் போனது. ஹிஷாமின் ஆட்சியில் 739 ல் வட ஆப்பி ரிக்காவில் பெர்பெர்கள் பெரும் புரட்சியில் ஈடுபட்டார்கள். காகசஸில் கஸார் என் பவர்களின் பிரச்சினையும் சிக்கலாக இருந்தது. ஹிஷாம் டெர்பெண்ட் என்னும் உயரிய இராணுவ படையை அமைத்து பலமுறை வட காகசின் மீது படையெடுத் தார். ஆனால், கஸார் நாடோடிகளை ஒன்றும் செய்யமுடியவில்லை. உமய்யாத் படைகள் மர்ஜ் அர்தாபில் போரில் நிறைய இழப்புகளைச் சந்தித்தது. கிழக்கிலும், பல்க் மற்றும் சமர்கண்டிலும் ஆட்சிக்குட்பட்ட பகுதி இருந்தாலும், நிர்வாகம் செய்யமுடியாமல் இருந்தது. மீண்டும் முஸ்லீமல்லாதவர்களின் வரிப் பிரச்சினை சோக்டியன் என்ற பிரிவினரால் டிரான்ஸ்ட்ராக்சியானாவில் தோன்றியது. குராசனின் கவர்னர் அப்துல்லாஹ் சுலாமி முஸ்லீமாக மாறிய அவர்களின் வரியைக் குறைப்பதாக உறுதியளித்தார். ஆனால் மாகாணத்தின் வரிப்பற்றாக் குறையினால் அது முடியாமல் போனது. மேலும் உமய்யாத்களுக்கு முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைப்                                             பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகிப் போனது.                                 
ஹிஷாம் அவர்களின் ஆட்சியில் கல்வித் துறை பலமாக வளர்ந்து பல பள்ளிக் கூடங்கள் புதியதாகக் கட்டப்பட்டன. கலாச்சாரத்தை மேம்படுத்தினார். பல அரிய வேற்று மொழி நூல்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்தார். உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போதிருந்த இஸ்லாமிய ஷரியா சட்டத்தை உறுதியாக நிலை நாட்டினார். தன் குடும்பத்தினரிடையும் அதைக் கடை பிடித்தார். ஆட்சிக்கு வந்த போது உடுத்திய அதே பச்சை நிற அங்கியையே மரணிக்கும் வரை அணிந் திருந்தார். மக்களுக்கு எப்படி ரொட்டி தயாரிப்பதென்றும், ஆட்டிலிருந்து எப்படி பால் கறக்க வேண்டும் என்பதையும் கௌரவம் பார்க்காமல் செய்து காட்டினார். மர்வான்களின் வாரிசிலேயே போருக்கு போகாவிட்டால் ஊதியம் பெற மாட்டார். ப்ளேக் நோயிலிருந்து தப்பிக்க பாலைவனத்தில் சில காலம் தங்கி இருந்தார். பைஸாந்தியர்களின் எல்லைக்கருகில் இரு அரண்மனைகளைக் கட்டினார். 
ஹிஷாமிற்குப் பிறகு. இரண்டாம் யஸீதின் மகன் இரண்டாம் அல் வலீத் ஆட்சிக்கு வந்தார். இவர் குடிப்பழக்கம் உள்ளவராக இருந்ததால், ஹிஷாம் அவருக்கான உதவித்தொகைகளை நிறுத்தி, இஸ்லாமிய நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து அவரை நல்ல முறையில் ஆட்சிக்கு தயார் படுத்தினார். பின்னாளில் ஹிஷாமின் மகன் சுலைமான் இப்ன் ஹிஷாமை குடிப்பது, பாட்டு பாடுவது மேலும் கீழ்தரமான செயல்களிலும் ஈடுபட்ட காரணத்தால் சிறையில் அடைத்தார். குதிரையின் மீது ஆர்வமாய் இருந்த இரண்டாம் வலீத் பந்தயங்களை நடத் தினார். இதனால் வெறுப்புற்ற இவரின் அரசியல் எதிரிகள் இவரை கொல்ல திட்டம் தீட்டினர். காலித் இப்ன் அப்துல்லாஹ் அல் கஸ்ரி என்பவர் நேரடியாக வலீதை எச்சரித்தார். அவரை சிறையிலடைத்து யூசுஃப் பின் உமர் என்பவர் மூலம் கொல்லச் செய்து சொந்த குடும்பத்தில் பகையை வளர்த்துக் கொண்டார். இவர் கலை வண்ணத்துடன் கூடிய கட்டிடங்களைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினார். பாலைவன அரண்மனைகள் என்று புகழப்பட்ட இவரின் குஸைர் அம்ரா, கிர்பத் அல் மஃப்ஜர் கட்டிடங்கள் சிறப்பு வாய்ந்தது. இவர் தனது ஆட்சியை எதிர்த்தவர் களை தூக்கிலிட்டும், கதரிய்யாக்களை துன்புறுத்தியும் கவனம் பெற்றார். 744 ல் இடையில் முதலாம் அல் வலீதின் மகன் மூன்றாம் யஸீத் என்பவர் டமாஸ்கஸில் தான் தான் கலீஃபா என்று கிளர்ந்தெழுந்தார். 744 ல் தற்போதைய ஜோர்டானுக்கருகில் அல் அக்தஃப் என்ற இடத்தில் சுலைமான் இப்ன் ஹிஷாம் படைகளுடன் கடுமையாகப் போராடி கொல்லப்பட்டார். மூன்றாம் யஸீத் இரண்டாம் அல் வலீதைக் கொன்று ஆறுமாத காலமே கலீஃபாவாக இருந்தார். மூன்றாம் யஸீத் முதலாம் வலீதின் சட்டத்திற்குட்படாத (வைப்பாட்டி) மனைவியான பெர்ஷிய இளவரசிக்குப் பிறந்தவர். இவர் தானே கடைதெருவுக்கு சென்று பொருட்களை வாங்குவார். இவர் கதரிய்யாக்கள் மீது இரக்கம் காட்டினார். மூளை அதிர்வு நோயால் அக்டோபர் 744 ல் இறந்து போனார். இவர் தனக்குப் பிறகு தன் சகோதரர் இப்ராஹிம் கலீஃபாவாக இருக்க ஆணையிட்டிருந்தார். ஆனால், மர்வானின் பேரர் இரண்டாம் மர்வான் என்பவர் வடக்கு முண்ணனிப் படையுடன் டமாஸ்கஸில் நுழைந்து 744 ல் கலீஃபாவாக நியமித்துக் கொண்டு 750 வரை ஆண்டார். இவர் முன்பு ஹிஷாமால் அர்மேனியாவிலும், அஸர்பைஜானிலும் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார். உடனடியாக தலைநகரை ஹர்ரானுக்கு (தற்போதைய துருக்கி) மாற்றிக் கொண்டார். ஹாம்ஸுக்கும் டமாஸ்கஸுக்கும் நடுவில் பெரிய சுவரை எழுப்பினார். இரண்டாம் மர்வானுக்கு ஈராக் மற்றும் ஈரானிலிருந்த கரிஜியாக்களிடமிருந்து தஹ்ஹக் இப்ன் கைய்ஸ், அபு துலாஃப் தலைமையில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. கலீஃபா எப்படியாவது அதை அடக்கி ஈராக்கை கட்டுப்பாட் டில் கொண்டுவர நினைத்தார். ஆனால் கோரசான்களிடமிருந்து பலமான மிரட் டல் கிளம்பியது. 
மக்கா குரைஷி இனத்தவரின் ஹாஷிம் பரம்பரையில் வந்தவர்கள் அப்பாஸிட்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களில் கைசானியப் பகுதியைச்சேர்ந்த சிலர் அபு ஹாஷிம் என்பவரைச் சேர்ந்தவர்கள் என்று குறிக்கும் வண்ணம் “ஹஷிமிய் யா” என்ற ஒரு அமைப்பை நடத்தினார் கள். அபு ஹாஷிம் என்பவர் முஹம்மது இப்ன் அல் ஹனஃபிய்யா என்பவரின் மகனும், அலி(ரலி) அவர்களின் பேரரும் ஆவார், ஹஷிமியாக்கள் எப்போதுமே உமய்யாக்களின் எதிரியாகத்தான் இருந் தார்கள். மூத்தவர் அபு ஹாஷிம் முஹம்மது இப்ன் அலியின் இல்லத்தில் மரணமடையும் போது, முஹம்மது இப்ன் அலி அவர்கள் கலீஃபாவாக வேண்டும் என்றார். இந்த பாரம்பரிய வார்த்தையை முன் வைத்து தான் அல் முக்தார் என்பவர் நாம் முன் அத்தியாயங்களில் பார்த்த கலீஃபா அப்த் அல் மாலிக் காலத்தில் புரட் சியில் ஈடுபட்டுத் தோற்றுப்போனார். இந்த ஹஷிமிய்யா அமைப்பினர் முதலில் குராசன் பகுதியில் ஆதரவைத் திரட்டினார்கள். இவர்கள் தங்கள் பிரச்சாரத்தில் “தாஃவா” என்னும் அல்லாஹ் மற்றும் இஸ்லாமிய மதச்சார்புடைய வண்ணமும், தாங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வண்ணமும் அமைத்துக் கொண்டார்கள். இதனால் இவர்களுக்கு முஸ்லீம்களிடத்திலும், முஸ்லீமல்லாதவர்களிடத்திலும் செல்வாக்கு உயர்ந்தது.
746 ல் குராசனில் அபு முஸ்லிம் ஹஷிமிய்யாக்களின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். 747 ல் கருப்புக் கொடியேந்தி உமய்யாத்களுக்கு எதிராக புரட்சியை உண்டாக்கினார். குராசனின் பகுதியைக் கைப்பற்றி நாசர் இப்ன் சய்யார் என்னும் உமய்யாத் கவர்னரை வெளியேற்றி மேற்குப் பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார். 749 ல் குஃபா நகரமும், உமய்யாத்களின் பலம் வாய்ந்த வாசித் நகரமும் ஹஷிமிய்யாக்கள் கைப்பற்றினார்கள். அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் அபு அல் அப்பாஸ் என்பவரை தங்கள் கலீஃபாவாக குஃபா நகர மசூதியில் தேர்ந்தெடு த்தார்கள். அந்த நேரத்தில் உமய்யாத் கலீஃபா மர்வான் ஹர்ரானிலிருந்து படைகளை ஈராக் நோக்கி திருப்பினார். இரு படைகளும் ‘ஸாப் போரில்’ சந்தித்து உமய்யாத்கள் தோல்வி அடைந்தனர். அந்த போரின் போது 85 வயதான நாஸர் நோயினால் மரணமடைந்தார். டமாஸ்கஸ் நகரம் அப்பாஸிட்கள் வசம் வந்து மர்வான் எகிப்தில் கொல்லப்பட்டார். உமய்யாத்களின் கோபுரங்கள் இடிக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் 80 நபர்கள் பொது மன்னிப்பு வழங்கபட்டு மீதி நெருங்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். உமய்யாத்களில் கலீஃபா ஹிஷாம் அவர்களின் பேரர் முதலாம் அப்த் அல் ரஹ்மான் மட்டும் தப்பித்து அல் அண்டலூசில் (மூரிஷ் ஐபீரியா) ஆட்சி அமைத்தார்.
உமய்யாத்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய மதம் பெரும் வளர்ச்சியைக் கண்டது. அதிகமான பெர்ஷியர்கள், பெர்பெர்கள், காப்டுகள் மற்றும் அரமாயிக்குகள் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்கள் ஆரம்ப முஸ்லீம்களை விட கல்வியி லும், வாழ்க்கைத் தரத்திலும் உயர்ந்தனர். உமய்யாத்களின் அழிவிற்கு ஈராக், சிரியாவுக்கிடையில் இருந்த வேற்றுமையே காரணம் என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் மூ ஆவியா அவர்கள் சாம்ராஜ்ஜியத்தில் நிலையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஏற்கனவே ஆண்ட பைஸாந்தியர் களின் வழியையே பின்பற்றினார். மேலும், அரசு நிர்வாகத்தை அரசியல் மற்றும் இராணுவத்தை கவனிக்க ஒரு பிரிவும், வரி வசூல்களைக் கவனிக்க ஒரு பிரிவும், மத விவகாரங்களைக் கவனிக்க ஒரு பிரிவுமாக மூன்று பிரிவாகப் பிரித்தார். அதிலிருந்து அதனுள்ளேயே பல அலுவல்கள் மற்றும் பிரிவுகளை உண்டாக்கி னார். பூகோள அமைப்புப்படி நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. எல்லைப் பகுதிகள் அவ்வப்போது வென்ற பகுதிகளுக்கேற்ப பலமுறை மாற்றி அமைக்கப் பட்டன. ஒவ்வொரு பகுதிக்கும் கவர்னர்கள் கலீஃபா வால் நியமிக்கப்பட்டார்கள். கவர்னர்கள் மத விஷயங்கள், இராணுவ தலைமைகள், காவலர்கள் மற்றும் சமூக நிர்வாகம் ஆகியவற்றை கவனித்துக் கொண்டார்கள். அந்தந்த பகுதிகளில் வசூலிக்கப்படும் வரிகளைக் கொண்டு உள் பகுதி செலவுகளைக் கவனித்துக் கொண்டு, உபரியை மத்திய அரசு வகிக்கும் டமாஸ்க ஸுக்கு அனுப்பினார்கள். சிலசமயங்களில் சில கவர்னர்கள் மீதி வரித்தொகையை டமாஸ்கஸுக்கு அனுப் பாமல் பிரச்சினையை உண்டாக்கினார்கள். 
உமய்யாத் சாம்ராஜ்ஜியம் வளர வளர மூ ஆவியா அவர்கள் தகுதிவாய்ந்த அரபு வேலையாட்களை புதியதாக வெற்றி பெற்ற பகுதிகளுக்கு அனுப்பி முன்னேற்றம் கண்டார்கள். இப்படி முன்னேற்றம் கண்ட பகுதிகளாக கிரீக், காப்டிக் மற்றும் பெர் ஷியா ஆகும். கலீஃபா அப்த் அல் மாலிக் காலத்தில் முறையாக அரசு பணிகளை பதிவு செய்து பாதுகாக்க உத்தரவிட்டிருந்தார். உமய்யாத்களின் ஆரம்ப காலத்தில் பைஸாந்திய, ஸசானிய நாணயங்களே புழக்கத்திலிருந்தன. அதன் மீது திருக்குரான் வசனங்கள் மட்டும் பதியப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன. பின்னாளில் உமய்யாத்கள் சொந்த நாணயத்தை வெளியிட்டு உலகில் நாணயம் வெளியிட்ட முதல் இஸ்லாமிய நாடு என்ற பெருமையைப் பெற்றார்கள். தங்க நாணயங்கள் தினார் என்றும், வெள்ளி நாணயங்கள் திர்ஹாம் என்றும் அழைக்கப்பட்டன.  
கலீஃபாவிற்கு நிர்வாகத்தில் உதவியாக ஆறு துறைகள் இருந்தன. திவான் அல் கரஜ் (வருவாய்த்துறை), திவான் அல் ரஸா இல் (ஒப்புதல் சரிபார்த்தல்), திவான் அல் கதம் (அதிகார முத்திரையிடுபவர்கள்), திவான் அல் பரித் (தகவல் தொடர்பு), திவான் அல் குதத் (நீதித்துறை), திவான் அல் ஜுந்த் (இராணுவ நிர்வாகம்) ஆகியவை ஆகும். இதில் திவான் அல் கரஜ் என்னும் வருவாய்த்துறை, மொத்த சாம்ராஜ்ஜியத்தின் வரி விதிப்பு, வரி குறைப்பு, வரி வசூல், ஊதியம் வழங்கல் ஆகிய வற்றைக் கவனித்துக் கொண்டது. திவான் அல் ரஸா இல் என்னும் ஒப்புதல் சரிபார்த்தல் துறை அனைத்து துறைகளின் விண்ணப்பங்கள், மத்திய, பிராந்தியங் களுக்கிடையிலான கடிதப்படிவங்களை சரி பார்த்தல் மற்றும் மனுக்கள் ஆகியவ ற்றை கவனித்துக் கொண்டன. திவான் அல் கதம் என்னும் முத்திரைத்துறை, மூஆவியா காலத்தில் பிரத்யேகமாக உருவாக்கப் பட்டது. எந்தவொரு அரசு ஆணையும், மற்ற உத்தரவுகளும் போலி களுக்கு இடம் கொடுக்காமல், முதலில் சம்பந்தப்பட்ட துறைக்கோ அல்லது நபருக்கோ அதன் நகல் அனுப்படும். இந்தத்துறை நகலையும், உண்மையையும் ஒப்பிட்டு சரி பார்த்து முத்திரையிட்டு அனுப்ப வேண்டும். இந்த துறை கலீஃபா அப்த் அல் மாலிக் ஆட்சி காலத்தில் பெரிதும் உதவிகரமாக இருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக