சனி, 8 ஆகஸ்ட், 2015

அந்தப்புரம் (ஹாரம்)

அந்தப்புரம்கூ.செ.செய்யது முஹமது
                            இதுவும் எழுதலாமா வேண்டாமா என்று யோசிக்க வைத்த கட்டுரை. அனால் இதிலும் பல சரித்திரங்கள் புதைந்துள்ளன. சில மன்னர்களின் புத்திசாலித்தனம், போட்டி, வெறியினால் மட்டும் சரித்திரங்கள் மாறவில்லை. குறிப்பாக உலக சரித்திரத்தை பலமுறை இந்த அந்தப்புரங்கள் மாற்றியுள்ளன. முழுக்க முழுக்க ஆணின் எதிர் இனமான பெண்கள் மட்டுமே ஆளுமை செய்த இந்த அந்தப்புரங்கள் சத்தமில்லாமல் சாதித்தவை பல. பல அற்புதமான மன்னர்கள் (உதாரணத்திற்கு மொகலாய ஔரங்கஸேப், ஓட்டோமான் சுலைமான், சௌதியின் சா ஊத் ஆகியோர்) இங்கு இளமையைக் கழித்திருக்கிறார்கள்.
                                ஆங்கிலத்தில் ஹரம் என்று அழைக்கப்படும் இந்த இடம் பெண்களின் தூய்மையான இடம் என்று பொருள்படுகிறது. அரபியில் ஹுர்மா என்ற சொல் பன்மை யில் ஹரிம் என்றாகி ஹரம் என்றாகியது. பல மனைவிகளை உள்ளடக்கிய இது முழுக்க ஆண்களின் நடமாட்டத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது. ஹரம் என்ற சொல் கிழக்கு நாடுகளிலிருந்து தான் பழக்கத்திற்கு வந்தது. இங்கு பெண்ணுறவு அடிமைகள், வைப்பாட்டிகள், அரவாணிகள், ஆங்கிலத்தில் கில்மேன் (GHILMAN)  என்று சொல்லப்படும் வெள்ளைநிற இளம் சிறுவர்கள் (இது திருக்குரானில் இறைவன் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதால் சொர்க்கத்தை நினைவு படுத்திக்கொள்ள) ஆகியோர்களும் இருப்பார்கள். கிரேக்க, ரோம காலங்களில் இந்த அந்தப்புரங்கள் சொல்லும் தரத்தில் இல்லை. இஸ் லாமியர்கள் ஆட்சியில் ஓரளவு பரவாயில்லை. ஓட்டோமான்களின் காலத்தில் இங்கிருந்த பெண்கள் (மனைவிகள் அல்ல) கல்வியறிவு பெற்று சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தில் ஆண்களின் முன் பெண்கள் நடமாடமாட்டார்கள், அதனால் உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனைவரின் அந்தப்புரத்திலும் அரவாணிகள் பணிக்கு அதிகமாக வைக்கப்பட்டார்கள். இதை சில மாற்றுமதத்தினர் கொச்சைபடுத்தினார்கள்.
                            அந்தப்புரம் என்ற சொல்லே உணர்ச்சியைத் தொடக்காரணம் இது மன்னர்களின் ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளுக்காக பயன்பட்டது தான். ஓட்டோமான்களின் ஆட்சியில் செராக்லியோ என்று அழைக்கப்பட்ட அந்தப்புரத்தில் பல பெண்களுடன் மனைவி, தாயார், மகள்கள், அரவாணிகள், பெண் அடிமைகள் என்று பெரும் பெண்கள் கூட்டமே இருக்கும். சில காலகட்டத்தில் 16 வயது வரை சுல்தான்களின் மகன்களும் அந்தப்புரத்தில் வளர்ந்தார்கள். ஓட்டோ மான்களின் டாப்காபி அரண்மனையின் அந்தப்புர வளாகத்தின் உள்ளேயே சுல்தான்களின் குடும்பத் திற்கென தனி தங்குமிடம் உண்டு. இந்த மாதிரியான ஓட்டோமான்களின் அந்தப்புரங்களிலிருந்து தான் புகழ் பெற்ற ஹூர்ரும் சுல்தான் (சுலைமானின் மனைவியும், இரண்டாம் செலிமின் தாயாருமானவர்) மற்றும் கூசெம் சுல்தான் (நான்காம் முராத்), இந்தியாவின் ரஸியா சுல்தான் போன்ற புகழ் பெற்ற பெண்மணிகள் பின்ணனியில் இருந்து நாடாண்டார்கள்.
                                    ஓட்டோமானின் அந்தப்புரத்தை ராணி வலீதே சுல்தான் நிர்வகித்தார். அந்தப்புர பாதுகாப்பை கிஸ்லர் அகா என்ற கருப்பின அரவாணி தலைமையாய் இருந்து பார்த்துக் கொண்டார். டாப் காபி என்னும் அரண்மனை அந்தப்புரத்தில் 400 அறைகள் இருந்தன. போர்களில் குறிப்பாக ஐரோப்பிய பால்கன் பகுதிகளில் பிடிக்கப்படும் அழகான அடிமைப் பெண்கள் இங்கு கொண்டுவரப்படுவார்கள். சுல்தானுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வைப்பாட்டிகள் தகுதிக் கேற்ப கூஸ்தி (GOOZDE- பிரியமானவள்), இக்பல் (IKBAL- அதிர்ஷ்டமானவள்), காதின் (KADIN-மனைவி) என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவார்கள். அதிகபட்ச அந்தப்புர அந்தஸ்து வலீதே சுல்தான் (சுல்தானுக்காக ஆட்சியின் பின்ணனியில் செயல்படுபவர்) ஆகும். வலீதே ராணியின் அனுமதி இல்லாமல் யாரும் அந்தப்புரத்திற்குள் நுழையவோ, வெளியேரவோ முடியாது. இந்த வைப்பாட்டிகளின் நடவடிக்கைகளை ராணியார் அரவாணிகள் மூலம் தெரிந்து கொள்வார். இந்த வைப்பாட்டிகளின் வாழ்வும் சாவும் ராணி யாரின் கையில் தான் உள்ளது. நான்கு காதின்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டு வரிசையாக முறையே ராணிக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள். 1868 ல் சுல்தான் அப்துல் அஜீஸ், தன் தாயார் பெர்டெய்னி யல் சுல்தானை அறிமுகப்படுத்த, ஃப்ரான்சின் பேரரசி ஈஜீனியாவை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென் றார். பெண்ணாயினும் மற்றவர்கள் பிரவேசிப்பதை விரும்பாத வலிதே சுல்தான் அவரை கன்னத்தில் அறைந்தார். மேலும் பேரரசியின் உடையலங்காரம் மேற்கத்திய கலாச்சாரத்தில் அங்கம் தெரிவதாக இருந்தது. இது அக்காலத்தில் பெரும் சர்வதேச பிரச்சினை ஆகியது. ஒரு இஸ்லாமிய அந்தப்புரம் எப்படி இருந்தது என்பதற்கு இச் சம்பவம் பெரும் உதாரணம்.  16 ம் நூற்றாண்டில் மூன்றாம் மெஹ் மூதின் தாயாரும், அந்தப்புர ராணியுமாய் வலீதே சுல்தானாக இருந்த சஃபீயே தர்பாரில் மெஹ்மூதுக் கும், ஒரு இஸ்லாமிய முஃப்திக்கும் இடையேயான வாக்குவாதத்தை திரையின் மறைவிலிருந்து மெஹ்மூதுக்கு அறிவுரை வழங்கினார்.
                            அந்தப்புரத்திற்காக கருப்பு அரவாணிகள் போரிலிருந்து சிறைப் பிடித்தும் அல்லது பால்கன், காகசஸ், அபிசீனியா மற்றும் சூடான் பகுதிகளிலிருந்து விலைக்கு வாங்க பட்டார்கள். இவர்கள் கீழுறுப்பு நீக்கப்பட்டு, எந்நேரமும் சிரைக்கப்பட்டு தூய்மையாக இருக்க வேண் டும். வைப்பாட்டிகளின் சேவையின் போது ஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டும். வெள்ளை நிற அரவாணிகளும் இருந்தார்கள். இவர்கள் ஆணுறுப்புடன் இருக்க அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களை ஓட்டோமான் அந்தப்புரத்தில் அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தினார்கள். இவர்களில் 600 பேர் வரை மாகாண கவர்னர்களால் சுல்தானுக்கு அன்பளிப்பாக அனுப்பப்பட்டவர்கள். சுல்தான் மூன்றாம் அஹ்மது காலத்தில் ஆட்சிக்கு வருவதற்கான பயிற்சியை இளவரசர்களுக்கு வழங்க தனியாக ‘தங்கக் கூண்டு’ (GOLDEN CAGE) என்ற பகுதியைத் துவக்கினார். இங்கு இளம் சுல்தான்களுக்கு அனைத்து வகை பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.
                        1640 லிருந்து 1648 வரை ஆண்ட ஓட்டோமான் சுல்தான் இப்ராஹீம் (IBRAHIM THE MAD) என்பவர் தன் அந்தப்புரத்திலிருந்த 280 வைப்பாட்டிகளை பாஸ்போரஸ் நதியில் வீசிக் கொன்றார். இப்ராஹீமின் ஒரு வைப்பாட்டி தான் புகழ் பெற்ற துர்ஹன் ஹதிஸ், உக்ரைன் பெண்ணான இவர் டடார்களின் படையெடுப்பின் போது பிடிக்கப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டார். புராதன எகிப்திய பாறோ மன்னர்கள் தங்கள் பிராந்தியங்களில் அழகிய பெண்களையே கவர்னர்களாக நியமித்தனர். ஸ்ரீலங்காவின் சிகிரியா மன்னன் கஸ்யபா ‘ஒரோதா’ என்ற தன் அந்தப்புரத்தில் 500 பெண்களை வைத் திருந்தான். மெக்சிகோவின் அஸ்டெக் ஆட்சியாளர் இரண்டாம் மொண்டெஸுமா 4,000 வைப்பாட்டி களை அந்தப்புரத்தில் வைத்திருந்தான். இவன் சந்ததியினரும் இந்த விஷயத்தில் அதேபோல் தான் இருந்தார்கள். 1421 ல் சீனாவின் யோங்கிள் பேரரசர் 2,800 வைப்பாட்டிகள், பணிப்பெண்களை சிறுகச் சிறுக சாகடித்தார். ஆப்பிரிக்க மன்னர்களின் அந்தப்புரங்களும் சொல்லும் தரத்திலில்லை.
                            ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பனாரஸ் மன்னன் தம்பா தான் அதிகபட்சமாக 16,000 பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருந்தான். ஆனால் உறுதி இல்லாத சொல்லாக சுல்தான் 15 ம் நூற்றாண்டின் சுல்தான் கியாசுத்தீன் கில்ஜி 15,000 பெண்களை அந்தப்புரத்தில் வைத்திரு ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காகவே பெரிய பட்டணம் போல் அந்தப்புரத்தை சுற்றி சுவர் எழுப்பி இருந்தாராம். 1800 ல் சியாமின் மோங்குட் ராஜா 9,000 பெண்களையும், 13 ம் நூற்றாண்டின் மங்கோலிய மன்னன் குப்ளாய் கான் 7000 பெண்களையும் வைத்திருந்தாராம். ஒவ்வொரு இரண்டாண்டுக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான வைப்பாட்டிகளை மாற்றி புதிதாய் வரவழைப்பாராம். 17 ம் நூற்றாண்டில் ஜஹாங் கீர் 6,300 பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருந்தாராம்.
Neotorama.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக