செவ்வாய், 14 ஜூலை, 2015

சாதியன்கள் வரலாறு 1

சாதியன்கள் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
சாதியன்கள் ஆட்சிவம்சம் இவர்கள் அரபுகளின் வழிவந்த மொரோக்கோவின் ஆட்சியாளர்கள். இவர்கள் ஸகோரா (ZAGORA) என்ற நகரத்தைச் சேர்ந்தவர்கள். அல் மொராவித் என்ற கோட்டையை உடைய இந் நகரம் டஸகோர்ட் என்றும் அழைக்கப்பட்டது. சாதியன் களின் பூர்வீகம் சகோராவிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ட்ரா ஆற்றுப் பள்ளத்தாக்காகும். ஒவ்வோர் ஆண்டும் மௌஸ்ஸிம் என்ற பண்டிகையின் போது இந்நகரத்தில் சூஃபி ஞானி மௌலவி அப்துல் காதர் ஜிலாலி பேரில் கொண்டாடுவார்கள். இங்குள்ள மக்கள் மொரோக்கோ அரபு, டசெல்ஹிட், டம ஸைட் என்ற மொழிகளை அறிந்தவர்கள். இந்த சாதியன் பேரரசைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தாங்கள் அலி இப்ன் அபிதாலிப்(ரலி), ஃபாத்திமா ஜொஹ்ரா ஆகியோரின் வழிமுறையில் வந்த யான்புவைச் சேர் ந்த ‘ஷரீஃபியன்’ வழிமுறை என்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் இவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய தாயார் ஹலிமா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.
சாதியன் ஆட்சிவம்சம் முதல் ஆட்சியாளர் சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் அஷ் ஷரீஃப் அல் ஹசனி ஆவார். இவர் 1544 லிருந்து 1557 வரை மொரோக்கோவை ஆண்டார். ட்ரா ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு டக்மடெர்ட் என்ற பெயரும் இருந்ததால் இவர் பெயருக்குப் பின்னால் அல் த்ராவி அத் டக்மடெர்டி என்ற இணைப்பும் உண்டு. இவர் மொரோக்கோவிலிருந்த போர்ச்சுகீஸியர்களைப் போரிட்டு விரட்டினார். மேலும், வட்டஸிட்கள், ஓட்டோமான்கள் ஆகியோரை மொரோக்கோவிலிருந்து கட்டுப்படுத்தி ஆட்சி செய்தார். சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்கின் தந்தை அபு அப்தல்லாஹ் அல் காயிம் 1517 ல் இறந்த பிறகு, ட்ரா ஆற்று வாசியான இவர் சகோதரர் அஹ்மத் அல் அரஜ் என்பவருடன் இணைந்து 1524 ல் மர்ரகேஷ் என்ற போரில் போர்ச்சுகீசியர்களை வென்றார். ஃபெஸ் பகுதியின் வட்டஸிட் சுல்தான் அங்கீகரிக்கும் வரை அஹ்மத் அல் அரஜ் மர்ரகேஷின் எமிராக வும், சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் டரூடண்ட் ஆட்சியாளராகவும் இருந்தார்கள். 1527 ல் வட்டஸிட் களுடன் நடந்த வாதி அல் அபிட் போரில் சாதியன் சகோதரர்கள் வென்றார்கள். இதனால் ‘டட்லா போர் ஒப்பந்தம்’ ஏற்பட்டு டட்லா மட்டும் தீர்வுகாணாத பகுதியாக ஆக்கப்பட்டு, சாதியன்களின் தனி ஆட்சிவம்சத்திற்கு வட்டாஸிட்கள் ஒப்புக் கொண்டார்கள்.
1536 ல் அஹ்மத் அல் அரஜ்  அதிகாரம் பெற்றதிலிருந்து சகோதர்கள் இருவரிடையே குழப்பம் உண்டானது. அஹ்மத் அல் அரஜ் வட்டாஸிட்களின் ஆட்சியாளர் அலி அபு ஹஸ்ஸுனுடன் கூட்டு வைத்துக் கொண்டார். சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் தென் மொரோக்கோவை அதிகாரத்தில் வைத்துக் கொண்டே 1541 ல் அகதீர் மற்றும் பிற கடற்பகுதிகளையும் போர்ச்சுகீசியர்களிடமிருந்து வென்றார். அகதீரை இழந்த போர்ச்சுகீசியர்கள் அஸமோர் மற்றும் சஃபி பகுதி களை விட்டு வெளியேறினார்கள். அஹ்மத் அல் அரஜ் டஃபிலாலெட்டுக்கு தப்பி ஓடினார். ஐரோப்பிய வெடி மருந்துகளைப் பயன்படுத்தி 1549 ல் வட்டாஸிட்களை வெற்றி பெற்று ஃபெஸ் பகுதியைக் கைப் பற்றினார். தன் மகனுக்கு இராணுவ உதவி கொடுத்து லெம்சென் பகுதியை வென்று அதன் ஸய்யனித் சுல்தானை வெளியேற்றினார். ஃபெஸ் வீழ்ந்ததால் சார் எல் கெபிர் மற்றும் அசிலா பகுதியை விட்டு 1550 ல் போர்ச்சுகீசியர்கள் வெளியேறினார்கள். இறுதியாக டியூடா, டான்ஜியர், மஸாகன் மட்டும் போர்ச் சுகீசியர்கள் வசம் இருந்தது. ஓட்டோமான், வட்டாஸிட்களின் உதவியுடன் அலி அபு ஹஸ்ஸுனின் கீழ் 1554 ன் ஆரம்பத்தில் ஃபெஸ் வெற்றி கொள்ளப்பட்டது. ஆனால் உடனே டட்லா போரில் சுல்தான் முஹ ம்மது அஷ் ஷெய்க் சண்டையிட்டு 1554 செப்டம்பரில் வட்டாஸிட்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். ஓட்டோமான்களின் வசமிருந்த ஓரன் பகுதியை சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் ஸ்பானிஷ் களுடன் கூட்டு வைத்து வெற்றி பெற்றார். இப்போரில் அலி அபு ஹஸ்ஸுன் இறந்து போனார்.
சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் ஓட்டோமான்களை பெரிய அளவில் எதிர்க்க ஸ்பெயினுடன் கூட்டு சேர்வதை அறிந்த பார்பரொஸ்ஸாவின் மகன் ஹசன் பாஷா அவரை ஒழிக்கத் திட்டமிட்டார். சில ஓட்டோமான் வீரர்களை பாலைவனத்திலிருந்து வழி தவறி வந்தவர்கள் என்று கூறி சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்கிடம் பணிக்கு சேர வைத்தார். அவர் கள் சரியான சந்தர்ப்பம் பார்த்து சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்கை படுகொலை செய்தார்கள். அவர் உடல் மர்ரகெச்சிலுள்ள சாதியன்கள் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு, அவர் மகன் அப்தல்லாஹ் அல் காலிப் ஆட்சிக்கு வந்தார். முஹம்மது அஷ் ஷெய்கின் முதல் மனைவியின் மூத்த மகன் இவர். இவர்தான் அதிகாரபூர்வமாக மொரோக்கோவின் சுல்தான் ஆனார். இவரின் தாயார் லல்லா மசூதா புகழ் பெற்றவர். முஹம்மது அஷ் ஷெய்க் இறந்த பிறகு, ஆட்சிக்கு வருவதற்கு அவரின் பிள்ளைகள் இடையே கடும் போட்டி நிலவியது. மூத்தவர் அப்துல்லாஹ் அல் காலிப் 40 வது வயதில் ஆட்சியைப் பிடித்த பின், இளைய சகோதரர்களான அஹ்மத் அல் மன்சூர் மற்றும் அப்த் அல் மாலிக் ஆகியோரை 1576 வரை நாட்டைவிட்டு துரத்தினார். அவர்கள் 17 ஆண்டுகாலம் ஓட்டோமான்களிடம் முறையே அல்ஜீயரிலும், கான்ஸ்டாண்டிநோபிளிலும் இருந்து அவர்களின் கலாச்சாரங்களையும், தொடர்புகளையும் கற்றுக் கொண்டார்கள்.
அப்துல்லாஹ் அல் காலிப் 1558 ல் வாதி அல் லபானை ஆக் கிரமிக்க முயன்ற துருக்கியர்களை போரிட்டு விரட்டினார். இவர்தான் ஓட்டோமான்களுக்கு எதிராக ஸ்பெயினுடன் கூட்டு வைத்து சிறிது காலம் லெம்சென் பகுதியை வைத்திருந்தார். இவர் காலத்தில் நான்காண்டாக உள்நாட்டுப்போர் நடந்தது. மர்ராகெச்சை தன் இருப்பிடமாகக் கொண்டிருந்த அப்துல்லாஹ் அல் காலிப் மருத்துவமனையுடன் இணைந்த முவாஸ்ஸின் மசூதியைக் கட்டினார். அல் மன்சூரியா மஸ்ஜிதை சீரமைத்தார். மர்ராகெஷில் இருந்த பென் யூசுஃப் மதரஸாவை பெரிய அளவில் சீரமைத்தார். முன்பு இது அல்மொராவித் சுல்தான் அலி இப்ன் யூசுஃபால் கட்டப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் அல் காலிப் மொரோக்கோவிலேயே மிகப் பெரிய கல்லூரியாக மாற்றினார். தொழுகை அறை, 900 மாணவ ர்கள் தங்கிப்படிக்க வசதியுடன் பளிங்கு தரையுடன் கட்டி இருந்தார். அப்போது வட ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய மதக்கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரியாகவும் இருந்தது. இதன் ஆசிரியராக புகழ் பெற்ற முஹம்மது அல் இஃப்ரானி இருந்தார். இந்த பென் யூசுஃப் மதரஸா 1960 மூடப்பட்டு, 1982 ல் சரித்திர கால இடமாக பார்வைக்கு திறக்கப்பட்டது. அப்துல்லாஹ் அல் காலிபுக்குப் பின் அவர் மகன் அப்துல் லாஹ் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். சாதியன்களின் சட்டப்படி முன்பு சகோதரருடன் வெளியேறிப் போன அபு மர்வான் அப்த் அல் மாலிக் தான் ஆட்சிக்கு வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக