சனி, 23 ஆகஸ்ட், 2014

அடிமைகள் வரலாறு 2



பதினைந்தாம் நூற்றாண்டுகளில் போலந்தில் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டிருந்தது. 1588 ல் லிதுவேனியாவிலும் தடை செய்யப்பட்டு மறுபரிசீலனையாக அடிமைகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தனர். 1679 ல் ரஷ்யாவில் விவசாய அடிமைகளாய் இருந்தவர்கள் பணியாட்களாக மாற்றப்பட்டனர். 1723 வரை ரஷ்யாவில் சிறு அளவிலிருந்த அடிமைகள் பீட்டரால் வீட்டு வேலைக்கு மாற்றப்பட்டனர். போலந்து, ரஷ்யாவிலிருந்து தப்பிய அடிமைகள் ஒன்றாக இணைந்து எவருக்கும் கட்டுப்படாத “கொஸாக்கு” (COSACK) களாக மாறினர். போரில் பிடிபட்ட, கடன் செலுத்த முடியாத, தானாகவே முன்வந்த அடிமைகள் பிரிட்டனில் இருந்தார்கள். அயர்லாந்தும், டென்மார்க்கும் கைது செய்யப்பட்ட ஆங்கிலோ சாக்ஸன் மற்றும் செல்டிக் அடிமைகளை விற்றுவந்தனர். அடிமைகளுக்கும் இஸ்லாமிய உலகுக் கும் நிறைய தொடர்புகள் இருந்தன. வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரிய தீபகற்பத் தின் மீது படையெடுத்த போது மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெருவாரியான அடிமைகளை இறக்குமதி செய்தார்கள். இஸ்லாமிய சட்டமும், கிறிஸ்துவ, யூத, சபிய, மாஜிய சட்டங்களும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்து வதை தடை செய்தன. ஆனால், அடிமைகள் போரில் கைப்பற்றப்பட்டால் சட்டம் அவர்களை ஒரு பொருளாக கருதி விலக்கி விடுகிறது. முஸ்லீம்களாக மதம் மாறிவிட்ட அடிமைகளை முஸ்லீம்கள் விடுதலை செய்து வந்தார்கள். மாறவி ல்லை என்றாலும் உரிமையாளர்கள் நல்லுபதேசம் செய்தார்கள். ஆனால், பொதுவாக இஸ்லாமியர்கள் அடிமைகளை மதம் சொன்ன அடிப்படையில் நடத்தவில்லை.
                            அடிமைகள் வியாபாரம் யூதர்களிடத்தில் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே இருந்தது. யூத வியாபாரிகள் அடிமைகளை கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும், கிறிஸ்துவ ஸ்பெயினிலிருந்தும் அல் அண்டலூஸ் அடிமைச்சந்தைக்கு கொண்டு வந்து மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு விற்று வந்தனர். ஆங்கிலத்தில் ஸ்லேவ் என்று சொல்லப்படும் அடிமைகளைக் குறிக்கும் சொல் ஸ்க்லபோஸ் (SKLABOS) என்ற பதத்திலிருந்து வருகிறது. 1100 லிருந்து 1500 வரை ஐரோப்பிய அடிமைகள் வியாபாரம் மேற்கத்திய மெடிட்டரேனியன் இஸ்லாமிய நாடுகளையும், கிழக்கு கிறிஸ்துவ, முஸ்லீம் நாடுகளையும் சார்ந்திருந்தது. பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் வெனிஸ் மற்றும் ஜினோவா நகரங்கள் கிழக்கு மெடிட்டரேனியனையும், பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் கருங்கடலையும் சார்ந்து வியாபாரம் செய்தன. அவர்கள் ஸ்லாவிக், பால்டிக், ஜியார்ஜிய, துருக்கிய அடிமைகளை இஸ்லாமிய நாடுகளுக்கு விற்று வந்தனர். 1440 லிருந்து பதினெட் டாம் நூற்றாண்டு வரை லட்சக்கணக்கான உக்ரைன் நாட்டு அடிமைகள் துருக்கி நாட்டுக்கு விற்கப்பட்டனர். டடார் (TATOR) எனப்படுபவர்கள் 1575 ல் 35,000 பேரையும், 1676 ல் 40,000 பேரையும், 1688 ல் 60,000 பேரையுமான உக்ரைனிய அடிமைகளை பிடித்து சந்தைகளில் விற்றனர். 1864 ல் தடை செய்யும் வரை ஐந்நூறு ஆண்டுக ளாக ரோமில் சில அடிமைகள் இருந்தனர். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய கடற்கொள்ளையர்கள் குறிப்பாக அல்ஜீரியன்கள் ஓட்டோமான் பேரரசின் ஆதரவுடன் ஐரோப்பிய கடலோரங்களில் ஆயிரக்கணக்கான அடிமைகளைப் பிடித்து சந்தையில் விற்றுவந்தனர். சில ஐரோப்பிய நாடுகள் பணவசூல் செய்து தங்கள் அடிமைகளை விலை கொடுத்து மீட்டனர்.
                                   பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் மங்கோலியர்கள் படையெடுப்பின் போது ஏராளமான அடிமைகளை கையகப்படுத்தி திறமையான பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பிரித்து கரகோரம் அல்லது சராய் பகுதிகளு க்கு அனுப்பினர். பெரும்பான்மையானவர்களை நோவ்கோராட் சந்தைக்கு ஏற்று மதி செய்தனர். அமெரிக்க காலனிய நாடுகளில் புகையிலை, பருத்தித் தோட்டங்க ளில் அடிமைகள் வேலை செய்திருக்கிறார்கள். உலகில் மெடிட்டரேனியன் பகுதி தான் அடிமைச்சந்தைக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி அளவுக்கதிகமாக “ஸ்லாவ்” இன அடிமைகளை பிடித்து வைத்திருந்தது. அவர்களின் இனப்பெயரே ஸ்லேவாக ஆங்கிலத்தில் ஆகியது. ஒரு கட்டத்தில் அடிமைகளை கருங்கடல் ஒர நாடுகளில் இறக்குமதி செய்வதே ரஷ்யாவின் வருமானமாக இருந்தது. மெடிட்டரேனியனின் தென்பகுதியில் அரபுகளின் பேரரசுகள் இருந்ததால் சஹாராவில் ஸ்வீலா என்ற நகரில் 700 அடிமை வியாபாரிகள் இருந்தனர்.         
                             பழங்காலத்தில் மனிதசமுதாயத்தில் இன்றியமையாமல் போனவர்கள் அடிமைகள். புராதன காலத்தில் எல்லா இனமக்களும் அடிமைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் கிடைப்பது மிக சுலபமாக இருந்தது. போர்கள் இன்றியமையாததாக இருந்த காலங்களில் தோற்றவர்களிடம் இரு ந்து பிடிபட்ட மனிதர்களில் பலசாலிகளை அடிமைகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டு மீதியுள்ளவர்களை கொன்றுவிடுவார்கள். கடற்கொள்ளையர்கள் ஒரு பொருள் போல அடிமைகளையும் கொள்ளையடித்தனர். கடும் குற்றம் செய்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கடனைத் திருப்பி செலுத்த முடியாதவர்களும் அடிமைகளாக்கப்பட்டனர். வறுமையில் இருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அடிமைகளாக விற்றுவிட்டனர். சில எஜமானர்கள் அடிமைகளை குடும்பமாக இருக்க விடமாட்டார்கள். அடிமைகளுக்கென்றே சட்டங்கள் இயற்றிய அரசாங்கங்கள் இருந்தன.
                             அரேபியாவில் அடிமைத்தனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே  இருக்கிறது. ஆனால் திருக்குரானும், நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகளும் அடிமைத்தனத்தைத் தடுத்து அடிமைகளை விடுதலை செய்யும் ஆர்வத்தை தூண்டின. அடிமைகளை விடுதலை செய்து விட மனிதனுக்கு பரிந்துரைக்கிறது. அரேபியாவில் குறிப்பாக பெண் அடிமைகள் மதிப்புடன் நடத்தப்பட்டனர். ஒரு காலத்தில் நாடோடிகளாகவும், அடிமைகளாகவும் இருந்த “மம்லுக்” இனத்தவர்கள் இஸ்லாமிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் சரியான சந்தர்ப்பத் தில் தனது எஜமான கலீஃபாக்களை மதிக்காமல் தாங்களே கைப்பற்றிய பகுதிக்கு ஆட்சியாளர்கள் ஆனார்கள். இதனால் அரேபியப் பகுதியில் அடிமைகளை இராணுவத்தில் சேர்ப்பது குறைந்தது. இஸ்லாமில் அடிமைத்தனம் எப்போது நபி(ஸல்) நாயகம் ஒரு எத்தியோப்பிய் அடிமை பிலால் இப்ன் ரிபாஹ் அவர்களை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இறைவனை தொழ பாங்கு என்ற அழைப்பு விடுக்கச் சொன்னார்களோ அப்போதே தெளிவாகிவிட்டது. குர்ஆனும், ஹதீஸ்களும் அடிமைகள் பற்றி நிறைய கூறி இருக்கின்றன. குறிப்பாக அடிமைகளை விடுதலை செய்வதின் நன்மையை எடுத்துறைக்கிறது. நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகன் ஸைதும் ஒரு அடிமைதான். நபிகளாரும், அவர் மனைவி, தோழர்கள் 39,237 அடிமைகளை விடுதலை செய்ததாக பதிவு இருக்கிறது. 
                                   அரபுகளின் அடிமை வியாபாரம் 20 ம் நூற்றாண்டு வரை மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் பரவலாக இருந்தது. மேற்கத்திய நாடுகளும், பிரிட்டனும் கொடுத்த அழுத்தத்தால் சௌதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகள் 1962 ல் அடிமைகள் வியாபாரத்தை தடை செய்தன. இதைத்தொடர்ந்து அனைத்து நாடுகளும் வரிசையாகத் தடை செய்தன. பழங்காலத்திலிருந்தே அரபு நாடுகளில் அடிமைகள் வியாபாரம் பரவலாக இருந்தது. பெரும்பாலும் போர் சமயங்களின் போதும், பயணங்களின் போதும் கைப்பற்றப்பட்டார்கள்.
                                                                     ஆனால் கிறிஸ்தவ நாடுகளில் ஆண், பெண் அடிமைகள் மிகவும் மோசமாக கையாளப்பட்டனர். அடிமைகள் பற்றிய கிறிஸ்தவர்களின் நிலை சொல்லும் தரத்தில் இல்லை. சிலவற்றை நீங்களே பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளில் பார்த்துக்கொள்ளுங்கள்.
                                                                                யூதர்களின் வேத புத்தகத்தில் அடிமைகளைப் பற்றி சட்டமே உள்ளது. தனக், தால்முத் 12 ம் நூற்றாண்டின் மைமோனிடிசின் என்னும் ரப்பியின்(யூத குரு) மிஷ்னே தோராஹ் மற்றும் 16 ம் நூற்றாண்டின் யோசெஃப் கரோ என்னும் ரப்பியின் ஷுல்சன் ஆருச் போன்ற புத்தகங்களில் அடிமைகளைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சரித்திரப்பூர்வமாக சில யூதர்கள் சொந்தமாக அடிமை வியாபாரம் செய்து வந்தனர். அட்லாண்டிக் அடிமை வியாபாரத்திலும், சில ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அடிமை வியாபாரத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. தென் அமெரிக்காவில் பல யூதர்கள் அடிமை வியாபாரியாக இருந்ததாக ஜேசன் எச். சில்வர்மேன் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
                               எக்சோடஸ் ஆஃப் எகிப்து என்ற கதை யூத வேத புத்தகம் தோராஹ்வை மையப்படுத்தி யூதர்களை பற்றி வெளிபடுத்தியது. எகிப்தில் அடிமைப்பட்டிருந்த யூதர்களை கடவுள் வந்து காப்பாற்றுவது பற்றியது. ஹீப்ரோக்களின் குடும்பத்தில் அடிமைகள் இன்றியமையாமல் இருந்தார்கள். வேத புத்தகத்தின் அடிமைச் சட்டப்படி, அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்ளப் பட்டார்கள். வேத புத்தகப்படி(லெவ்.25:39-43) யூத அடிமைகளுக்கும்,(லெவ்:25:45-46) யூதரல்லாத அடிமைகளுக்கும் சட்டங்கள் இருந்தன. ஹீப்ரு அடிமைகள் வறுமையின் வாயிலாக வந்தவர்கள் என்றும், அவர்கள் தங்களை எந்த யூத குடுப்பத்திலும் தானே விற்றுக்கொள்ளலாம். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களை விடுதலை செய்து விடவேண்டும். ஹீப்ரு அல்லாத அடிமைகள் போரில் கைப்பற்றபட்டவர்கள் என்றும் அவர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கூட அடிமையாகவே வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஓடிப்போய் விட்டு திரும்ப வரும் ஹீப்ரு அல்லாத அடிமைகளை மீண்டும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று தோராஹ் கூறுகிறது. தால்முத்தில் யூத அடிமைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் எஜமானர்களே கொடுக்கவேண்டும. சில ரப்பிகள் யூத ஆண்கள் எந்த பெண் அடிமையையும், யூத பெண்கள் எந்த ஆண் அடிமையையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சட்டமிட்டனர். சில அடிமைச்சட்டங்கள் உறவு சம்பந்தமாக இருப்பதால் அது நமக்குத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக