வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 3

1096 ல் பைஸாந்திய கப்பல்கள் அணிவகுக்க, பியர்ரி எர்மிட் (PIERRE L’ERMIT) என்பவன் தலைமையில் பாஸ்போரஸ் ஆற்றைக் கடந்து இஸ்லாமிய துருக்கிப் பகுதிக்கு வந்தது. கிரேக்க தேவாலயங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு, ‘முஸ்லீம்களை வெளியேற்று வோம்’ என்று வெறியோடு முன்னேறினார்கள். துருக்கிய விவசாய பூமிகளை தீயிட்டு கொளுத்தினார் கள். இரக்கமில்லாமல் அப்பாவி முஸ்லீம் பொதுமக்களைக் கொன்று, அவர்களின் குழந்தைகளை உயிரோடு தீயிட்டு கொளுத்தினார்கள். அணிந்திருக்கும் உடைகளை வைத்தே கொன்றார்கள். ஆனால் அதில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், யூதர்களும் அடங்குவார்கள். அவர்களின் குழந்தைகளை தீயின் மேலே கம்புகளில் வைத்து சுட்டுச் சாப்பிட்டார்கள். பியர்ரி எர்மிட்டின் படைகள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தில் இருந்தார்கள். பைஸாந்தியப் பேரரசர் அலெக்சியஸின் மகள் இளவரசி அன்னா கோம்னினா, இறந்த உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்ததாகவும். அவள் தந்தை கொடுமைகளை பார்த்து ஏன் சிலுவைப் படைகளை அழைத்தோம் என்று வருத்தப்பட்டதாகச் சொன்னாள். நிகாயாவில் (தற்போதைய இஸ்னிக் நகரம்) நடந்த முதல் போரில் துருக்கிய கிலிஜ் அர்சலன் வெற்றி பெற்றார். ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை.
சிலுவைப்போருக்காக கான்ஸ்டாண்டிநோபிள் வந்த படைகள் வரும் வழியெல்லாம் இருந்த நகரங்களில் கொடுமைகளை செய்து கொண்டு வந்தார்கள். 60,000 பேர் வரை இருந்த படையில் 5,000 குதிரைப்படையினர் இருந்தார்கள். இதில் ரெய்மண்டின் படை 8,500 வீரர் களும், 1,200 குதிரைப்படை வீரர்களும் ஆவார்கள். வந்த சிலுவைப் போராளிகளின் தலைவர்கள் உணவுக்காக அலெக்சியஸை நாடினார்கள். சிறிது நாளில் அவர்களின் நடவடிக்கைகளை அறிந்த அலெக் சியஸ் வெறுப்படைந்தார். மேலும் தந்தை ராபர்ட் கூயஸ்கார்டுடன் சேர்ந்து பலமுறை பைஸாந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமித்த நார்மன் எதிர் போஹிமாண்டும் அதில் இருந்தான். போருக்காக வந்த இளவரசர்கள் அலெக்சியஸை தலைமை தாங்க விரும்பினார்கள். ஆனால் அலெக்சியஸ் அதை விரும்பாமல் அவர்களை விரைவாக அவர்களை மைனர் ஆசியாவுக்குள் அனுப்ப முயற்சித்தான். அவர்களின் தலைவர்களை துருக்கிகளிடமிருந்து கைப்பற்றும் இடங்களை விசுவாசத்துடன் திருப்பித் தருமாறு கேட்டான். முதலில் காட்ஃபிரே உறுதியளிக்க மற்றவர்களும் ஒவ்வொருவராக அலெக்சியஸுக்கு உறுதிமொழி அளித்தனர். ரெய்மண்ட் மட்டும் உறுதிமொழி கூறாமல் பைஸாந்தியப் பேரரசுக்கு எந்த தொந்திரவும் செய்ய மாட்டேன் என்று கூறினான். அனைத்துப் படைகளையும் பாஸ்போரஸ் ஆற்றின் கரைக்கு அழைத்து வந்த அலெக்சியஸ், எப்படி செல்ஜுக் இராணுவத்தை கையாள்வது என்று அறிவுறுத்தினான்.
அலெக்சியஸ் தன் ஜெனரல்களான மானுவேல் பௌடூமிட்ஸ் மற்றும் டடிகியோஸ் ஆகியோரை உதவிக்கு அனுப்பினான். முதலாம் கிலிஜ் அர்சலனின் சுல்தானிய ரோம தலைநகராக இருந்த நிகாயாவை மீண்டும் சிலுவைப்படைகள் தாக்கினார்கள். அப்போது கிலிஜ் அர்சலன் தன் குடும்பம், செல்வங்களை விட்டுவிட்டு மத்திய அனடோலியாவில் ஒரு படையெடுப்பில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சிலுவைப் படைகளின் பலம் தெரியவில்லை. நிகாயாவில் நீண்ட போர் நடந்து கொண்டிருந்தது. இது கிலிஜ் அர்சலனை எட்ட அவர் விரைந்து வந்து மே மாதம் 16 ந் தேதி சிலுவைப் படைகளுடன் மோதினார். இரு தரப்பிலும் கடும் சேதம் விளைந்தது. கடுமையான போரில் சிலுவைப்படைகளின் கை ஓங்கியது. கிலிஜ் அர்சலன் சற்று பின் வாங்கினார். அலெக்சியஸ் பெரிய மரத்துண்டுகளை நிலத்தில் பரப்பி துருக்கிய பாதுகாப்புப் படையை முடக்கி ஜூன் 18 ல் சரணடைய வைத்தான். நிகாயா நகரம் பைஸாந்தியரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, சிலுவைப் போராளிகள் நகருக்குள் புகுந்து கொள்ளையடித்து அட்டூழியம் புரிந்ததால் பேரரசுடன் குழப்பம் நிலவியது. சிறைப் பிடிக்கப்பட்ட பல துருக்கிய வீரர்களை அடிமைச் சந்தையில் விற்றார்கள். துருக்கிய படைகள் தோற்ற செய்தி மொத்த அரபு நாடுகளுக்கும் பரவியது. வழியிலுள்ள மொத்த அரபு நாடுகள், நகரங்கள், கிராமங்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தன. சிலர் தங்கள் வீடுகள், சொத்துக்களை விட்டு தூரப்பகுதிகளுக்கு தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள ஓடினார்கள். உறுதி மொழியை மீறி சிலுவைப்போராளிகள் நடந்து கொண்டாலும், அலெக்சியஸ் அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்தார்.
ஜூன் மாத இறுதியில் சிலுவைப்படைகள் அனடோலியாவை நோக்கி நகர்ந்தன. சில பைஸாந்திய படைகளுடன் தளபதி டடிகியாஸும் உடன் சென்றான். மேலும் சில பைஸாந்திய படைகள் பின்னர் வரும் என நம்பப்பட்டது. அவர்கள் படையை நார்மன்கள் தலைமையில் ஒன்றும், ஃப்ரென்ச்கள் தலைமையில் ஒன்றுமாகப் பிரித்துக் கொண்டார்கள். இரண்டும் டோரிலாயம் நகரில் சந்திப்பதாக திட்டம். ஜுலை 1 ல் ஃப்ரென்ச் படைகளுக்கு முன்பாகச் சென்ற நார்மன்கள் படையை டோரிலாயம் நகரில் கிலிஜ் அர்சலன் எதிர் கொண்டார். இப்போது எதிரியின் பலம் அறிந்ததால் கிலிஜ் அர்சலன் வேகமாக அம்பெறியும் திறன்படைத்த வீரர்களுடன் பெரும் படையைத் திரட்டி நார்மன்களைச் சுற்றி வளைத்தார். சரியான தருணத்தில் ஃப்ரென்ச் படைகள் காட்ஃப்ரே தலைமையில் வர துருக்கிய படைகளின் திட்டம் நிறைவேறவில்லை. துருக்கிய படை இருபுறமும் சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சிலுவைப்படைகள் அனடோலியாவில் நுழைந்தது. அது சரியான கோடைகாலம், கிலிஜ் அர்சலன் நகரை விட்டு வெளியேறும் முன் சரியாகத் திட்டமிட்டு நகரின் அனைத்து வளங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். இதனால் சிலுவைப்படைகளுக்கு போதிய உணவு இல்லாமல் வீரர்களும், குதிரைகளும் இறந்தன. நகரின் சில கிறிஸ்தவர்கள் அவ்வப்போது உணவு கொடுத்தாலும், படைகள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கொள்ளையடித்தும் திருடியும் வந்தனர். சிலுவைப்படைகளை யாரும் தலைவராக இருந்து கட்டுப்படுத்த முடியவில்லை. அதேமர் என்பவர் மட்டும் மதத்தலைவராக மதிக்கப்பட்டார். இத்தாலி போலோனியாவைச் சேர்ந்த பால்ட்வின் சிலிசியன் கேட்ஸ் என்ற பகுதியைக் கடந்த பின் அர்மேனியாவில் தன் படையுடன் தங்கினார். போருக் குப் பிறகு, ஐரோப்பாவில் அவருக்கிருந்த ஒரே சொத்தான அவர் மனைவி இறந்து போனதால் திரும்பி ஐரோப்பா போகும் எண்ணம் அப்போதைக்கு அவருக்கு இல்லை. புனித பூமியை மீட்டெடுக்கும் பணி யில் தன்னை அற்பணித்துக் கொண்டார். புராதன கிறிஸ்தவராக இருந்ததால் அர்மேனியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எடிஸ்ஸாவின் ஆட்சியாளர் தோரஸ் 1098 ல் பால்ட்வினைத் தத்தெடுத்துக் கொண்டார். பின்னாளில் தோரஸ் கொல்லப்பட பால்ட்வின் எடிஸ்ஸாவின் ஆட்சியாளராக மாற முதல் சிலுவைப் போராளிகளின் மாகாணமாக எடிஸ்ஸா ஆகியது.
சிலுவைப்படைகள் அரபுகளால் அல் ருஹா என்று அறியப்பட்ட எடிஸ்ஸாவுக்கு (தற்போது இது துருக்கியில் உர்ஃபா என்ற பெயருடன் இருக்கிறது) முன்னேறியது. அங்கும் பெருவாரியான மக்களைக் கொன்று ஃப்ரான்சின் முதலாம் பால்ட்வின்னின் தலைமையில் முதல் லத்தீன் மன்னராட்சியை (ஐரோப்பிய காலனியாக) நிறுவினார்கள். கொடுமைக்குப் பெயர் போன பால்ட்வின் அர்மேனிய கிறிஸ்தவ இளவரசர், இளவரசியை எடிஸ்ஸாவின் அதிகாரத்தை கைவிடச் சொன்னான். அவர்கள் பயந்து இவனை வளர்ப்பு தந்தையாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தப் பின்னும் அவர்களைக் கொன்றான். பின் படைகள் தென் பகுதியில் அரபுகள் நிறைந்த சிரியாவின் பெரிய நகரமான ஆண்டியாக்கை நோக்கி நகர்ந்தது. (தற்போது இது துருக்கியின் அண்டாக்கியாவாக உள்ளது). இந்நகரம் பலமான கோட்டைகளுடன், பெரும் உணவு கிடங்குகளுடன் எப்படிப்பட்ட தாக்குதலையும் சமாளிக்கும் வண்ணம் இருந்தது. 12,000 மீட்டர் நீளத்தில் நகரம் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் 60 அடி நீளம் உயரத்தில் 400 பெரிய கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன. இரத்தவெறி பிடித்த 50,000 சிலுவைப்படை வீரர்கள் எட்டு மாதமாக (அக்டோபர் 1097 லிருந்து 1098 ஜூன் வரை) கடும் குளிரிலும், மழையிலும் நகரின் சுவரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களால் வெற்றி மீறி உள்ளே நுழைய முடியவில்லை. உணவில்லாமல் பஞ்சத்தில் வாடிப்போன சிலுவைப்படைகள் அருகாமை அரபு நகரங்கள், கிராமங்களில் நுழைந்து கால்நடைகள், தானியங்களைக் கொள்ளை அடித்தனர். ஆண்டியாக் நகரத்தில் நுழைய முடியாத ஆத்திரத்தில் அலிப்போ நகரவாசிகளின் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தலைகளை மட்டும் வெட்டி, நகரச் சுவற்றின் உள்ளே மழை போல் கொட்டினார்கள்.

சிலுவைப்போர் 4

அந்நகரை போரிட்டுப் பிடிக்க படைகளால் முடியவில்லை அதனால் நகருக்குள் யாராவது காட்டிக் கொடுக்கும் ராஜதுரோகி கிடைப்பானா என்று ஆராய்ந்தார்கள். ஃபைருஸ் என்ற முஸ்லீம் அர்மேனியன் அரசுக்குத் தெரியாமல் கள்ளக்கடத்தலில் ஈடுபட்டதால், ஆண் டியாக்கின் அதிகாரிகளால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தான். அவன் இப்போது நகரின் ஒரு கதவில் காவலில் இருந்தான். அதிகாரிகளைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, எதிரிகளிடம் கையூட்டுப் பெற்று சரித்திரத்தில் செய்யக்கூடாத மாபாவச்செயலை செய்தான். நகரில் அவனிருந்த கதவை சிலுவைப்படைகளுக்கு அதிகாலை 4 மணிக்கு திறந்து விட்டான். பெரும் அலையென உள்ளே புகுந்த சிலுவைப்படைகள் ஏதோ தொழில் செய்வது போல் கொலைகளை வெகுவேகமாக சரியான கண் விழிப்பில் இல்லாத மக்களைக் கொன்றும் தீயிட்டும் கொளுத்தினார்கள். ஆம் அது எந்தமாதிரியான மன்னிப்புக்கும் தகுதியில்லாத பாவச்செயல். நகர முஸ்லீம் பெண்களின் அனைவரின் பிள்ளை சுமக்கும் அடிவயிறையும் வாள்களால் அறுத்தார்கள். கொட்டும் மழையில் தப்பித்துப் போகும் குடும்பங்களை சில நூறு வீரர்கள் நகர கதவின் வெளிப்புறத்திலிருந்து சேற்றிலும், சகதியிலும் வைத்து வெட்டி வீழ்த்தினார்கள். மலம் தின்னும் மேற்கத்தியர்கள் இதை சில ஆங்கிலப்படங்களில் மாற்றி முஸ்லீம்கள் அவர்களை வெட்டுவது போல் காட்டினார்கள். முஸ்லீம்கள் கொட்டும் மழையில் சாவின் பயத்திலும், காயத்தின் காரணமாகவும் இன்னும் பல சொல்லொனா துயரங்களின் காரணமாக அழுது கொண்டிருக்க, சிலுவைப்படைகள் மது அருந்தி நடனமாடிக் கொண்டு ஆண்டியாக் நகரை கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அந்நகரம் தீயால் புகைந்து கொண்டிருந்தது. பல மாதங்களுக்கு அந்நகரில் பிணவாடை வீசிக்கொண்டிருந்தது. இதன் முழு விவரமும் அறிந்தால் எப்படிப்பட்ட நெஞ்சும் உருகிவிடும். இதை அவர்கள் கால்வைத்த எல்லா முஸ்லீம் நகரங்களிலும் தொடர்ந்தார்கள். செய்தி அறிந்து மோசூலிலிருந்து கெர்போகா என்பவர் தலைமையில் முஸ்லீம் இராணுவம் ஆண்டியாக் வந்தது. தாமதமாக வந்து நகரத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அக்காட்சி கண்கள் வற்றும் வரை அவர்களை அழச் செய்தது. கெர்போகா சிலுவைப்படைகளுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் போட சமாதானம் பேசினார். கொஞ்சம் கூட தாமதிக்காத சிலுவைப் போராளிகள் தயாராய் இல்லாத அவர் படைகளை சின்னா பின்னப்படுத்தி அவர்களைக் கொன்றது. சிலுவைப் படைகளை வென்றால் எங்கே கெர்போகா அதிகாரமிக்கவராக ஆகிவிடுவாரோ என்று எண்ணி   உதவிக்கு வர இருந்த ஃபாத்திமிட் பகுதி படைகள், துருக்கிய படைகளை தனியாக விட்டுச் சென்றன.
ஒரு சிலுவைப்படையின் தலைவன் ப்லோயிசின் ஸ்டீபன் என்பவன் அலெக்சியஸிடம் முஸ்லீம்களை வெல்ல முடியாது என்று சொல்லி ஃப்ரான்சுக்கு திரும் பியதாக ஒரு தகவல் உண்டு. ஆண்டியாக்கில் அலெக்சியஸ், பொஹிமாண்ட், ரெய்மாண்ட் ஆகியோ ரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. சில சரித்திர ஆசிரியர்கள் வட ஃப்ரான்சைச் சேர்ந்த ஃப்ராங்கு களும், தென் ஃப்ரான்சைச் சேர்ந்த ப்ரோவின்கல்ஸ்களும், தென் இத்தாலி நார்மன்களும் தங்களுக் கென தனி நாடு உருவாக்குவதைப் பற்றி திட்டமிட்டார்கள் என்று சொல்கிறார்கள். கொலைகார முத லாம் பொஹிமாண்ட் ஆண்டியாக்கின் மன்னன் ஆனான். ஆண்டியாக்குக்குப் பிறகு, கிறிஸ்தவ படைகள் தெற்கு நோக்கி ஜெருசலம் நகர்ந்தனர். 1098 டிசம்பர் மாதம் சிரியாவின் மஃஅர்ரா (மாஃஅர்ரத் அல் நுமான்) என்ற அரபு நகரத்தை சிலுவைப் படைகள் அடைந்தன. அங்கு அரபுலகின் புகழ் பெற்ற தத்துவவாதியும், கவிஞருமான அபு அல் அல அல் மஃர்ரி இருந்தார். இங்கு தான் போராளிகள் மனிதர்களைக் கொன்று உண்ண ஆரம்பித்தார்கள். முழுக்க விவசாயத்தைச் சார்ந்திருந்த அல் மஃர்ராவில் எந்த இராணுவமும் இல்லை. மிகவும் அமைதியான நகரம். நகரத்தின் பொருளாதாரம் அங்கு விளையும் திராட்சை, ஆலீவ் மற்றும் ஃபிக் பழங்களின் உற்பத்தியைச் சார்ந்திருந்தது. ஆயுதமே இல்லாத அந்த மக்கள் இரண்டு வாரம் சிலுவைப் படைகளை சமாளித்தார்கள். பொஹிமாண்ட் அவ்வூர் தலைவர்களிடம் சரணடைந்தால் அனைவரையும் உயிருடன் விட்டு விடுகிறேன் என்று உறுதி மொழி கொடுத்தான். ஆனால் தான் ஒரு மேற்கத்திய மிருகம் என்பதை உறுதிபடுத்தினான். உடனிருந்த காயனைச் சேர்ந்த ருடால்ஃப் என்பவன் பின்னாளில் எழுதியதாவது: ‘எங்கள் படை பெரியவர்களை அறுத்து பானைகளில் வேக வைத்தது. சிறுவர்களை துண்டு துண்டாக வெட்டி சுட்டுத் தின்றது’ என்றான். சிறிய மன்னர்களும், சில வீரர்களும் விடாமல் ஜெருசலம் போக வேண்டும் என்று தொந்திரவு செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டியாக்கின் முதல் இளவரசர் பொஹிமாண்ட் தலைமையில் 1099 படை கிளம்பியது. மெடிட்டரேனி யன் கரைப்பகுதியைக் கடக்கும் போது சில தடங்கல்கள் வந்தன. அங்கிருந்த நகரங்கள் சண்டையை தவிர்க்க சிலுவைப் படைகளுக்கு தேவையானவற்றைக் கொடுத்து உதவின. சில ஊர்வாசிகள் காடுகளுக்குள் போய் ஒளிந்து மிருகங்களிடம் சாவதே மேல் என்று போய்விட்டார்கள். போப் இரண்டாம் அர்பனின் வெறிபிடித்த கிறிஸ்தவக்கூட்டம் 1099 ஜூனில் ஜெருசலத்தை அடைந்தது. ஜெருசலம் ஓராண்டுக்கு முன்புதான் செல்ஜுக் பேரரசிடமிருந்து, ஃபாத்திமிட்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. சில சிலுவைப்படை வீரர்கள் வெகு நீண்ட பயணம் செய்து வந்ததிற்குப் பிறகு, அந்த புனித நகரத்தைப் பார்த்ததால் அழுதார்கள். மூன்று நாட்கள் பாவம் தீர நோன்பிருந்தார்கள். வெற்றுக்காலுடன் புகழ்பெற்ற ஜெருசலம் சுவரை (இந்த சுவற்றின் பின்னால் தான் நாயகம்(ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது புராக் என்னும் சிறகுடைய வாகனத்தைக் கட்டினார்கள்) சிலுவை ஏந்திய கைகளுடன் சுற்றி வந்து தாவூத் (அலை) நபிகளின் ஸபூர் வேதத்தைப் பாடினார்கள் அந்த மனிதர்களைத் தின்ற கூட்டத்தினர்.
ஜெருசலம் நகரத்தின் வெளிப்புறத்தில் முகாமிட்ட அவர்கள் உணவுக்கும், குடிநீருக்கும் அவதிப்பட்டார்கள். எங்கே திடீரென்று ஃபாத்திமிட் படைகள் வந்து தாக்குமோ என்று வேறு அச்சப்பட்டார்கள். ஆண்டியாக்கைப் போல முற்றுகையிடவும் சந்தர்ப்பமில்லை. ஜெருசலத்தை அடைந்த போது படையில் 12,000 வீரர்களும், 1,500 குதிரை வீரர்களும் இருந்தனர். அதில் ஐரோப்பாவின் பலதரப்பட்ட மக்களாய் இருந்ததால் தனித்தனியாக காக்ஃப்ரே மற்றும் டான்க்ரீடும் வடக்குப்புறமும், ரெய்மாண்ட் தெற்குப் புறமும் இருந்தார்கள். ஜூன் 13 ல் நடந்த தாக்குதலில் ப்ரோ வென்கால்கள் கலந்து கொள்ளவில்லை. ஜெருசலம் நகரத்தின் மீதான முதல் தாக்குதல் தோல்வியடைந்தது. பின் அனைவரும் கூடிப் பேசி, அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்டார்கள். லார்ட் டாங்க்ரெட் (இவன் பொஹிமாண்டின் உறவினன்) சரணடைந்தால் அனைத்து முஸ்லீம்களையும் உயிரோடு விட்டு விடுவதாகவும், மேலும் அல் அக்ஸா மஸ்ஜிதில் முஸ்லீம்கள் தடையில்லாமல் வழிபடவும், மற்ற இஸ்லாமிய புனித இடங்களை ஒன்றும் செய்யாமல் இருப்பதாகவும் உறுதி அளித்தான். அதன்படி ஜூலை 15 வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த முஸ்லீம்கள் சரணடைய ஒப்புக் கொண்டு நகர வாசல்களைத் திறந்தார்கள். ஆனால் நன்றிகெட்ட அந்த கிறிஸ்தவ வெறிபிடித்த கூட்டம் அல் மஃஅர்ராவில் செய்த துரோகம் போல் வடக்கு, தெற்கு வாசல்களைத் தாக்கத் துவங்கினார்கள். இரு வாசல் வழியாகவும் சிலுவைப் படைகள் நகரத்தின் உள்ளே ஊடுருவினார்கள். கண்ணில் தென்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அனைவரையும் சரமாரியாகக் கொன்று குவித்தார்கள். டான்க்ரிட் தலைமையில் வடக்கில் நுழைந்த வீரர்கள் மலைக்கோவிலுக்குச் சென்றார்கள். தடுத்தவர்களை வெட்டிக் கொன்றார்கள். தப்பித்தவர்கள் அல் அக்ஸா மசூதிக்குள் ஓடினார்கள். தெற்குப் பகுதியில் நுழைந்த ரெய்மாண்டின் ஆட்கள் நகருக்குள் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள். ஃபாத்திமிட்களின் படைத்தளபதி இஃப்தி நகார் அல் தௌலா கொலைகளைப் பார்த்து, அரண்மனையை ஒப்படைத்து விடுவதாகவும், எஞ்சியவர்களை பத்திரமாக அஸ்கலான் செல்ல அனுமதிக்க வேண்டினார். நாள் முழுவதும் முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அடைக்கலம் தேடி மடத்துக்குள் ஓடிய யூதர்கள் மடத் தோடு கொளுத்தப்பட்டார்கள். தெற்கில் அல் அக்ஸாவில் அடைக்கலம் புகுந்த முஸ்லீம்களும்    கொல்லப்பட்டார்கள்.
ஜெருசலத்தின் கிழக்குப் பகுதி கிறிஸ்தவ மக்கள் தப்பித்து ஓடினார்கள். தொடர்ந்து ஒரு வாரம் கொன்று நகரத்தில் ஒருவர் கூட உயிரோடில்லாமல் செய்தார்கள். அந் நகரில் ஓடிய ரத்தம் முழங்காலளவு இருந்ததாக மாற்று மத சரித்திர ஆசிரியர்களே எழுதி இருக்கிறார்கள். அவர்கள் கொன்றது 70,000 பேர் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அல் அக்ஸா மஸ் ஜித் அருகிலிருந்த டோம் ஆஃப் ராக்கை தேவாலயமாக மாற்றினார்கள். சரித்திர ஆசிரியர் ரொனால்ட் பைண்டன் கீழ் வருமாறு சொல்கிறார்: சிலுவைப் படைகளில் சில பேர் கொல்லப்பட்டவர்களின் மூக்குகள், பெருவிரல்களை அறுத்து பாதுகாத்துக் கொண்டார்களாம். அதை போப் இரண்டாம் அர்பனிடம் காட்டி ஆசி பெறுவதற்கு. இதன்பிறகு, போப் அர்பன், டயரின் ஆர்ச் பிஷப் ஆகியோர் வெளியிட்ட அறிக் கைகள் கேவலத்தின் உச்சங்கள். இஸ்ரவேலர்களிடத்திலே சமாதானத்தைக் கொண்டு வந்த ஈஸா (அலை) நபி அவர்களின் பெயரைச் சொல்லி புனித நகரத்தை உலகம் அழியும் மறக்காமல் இருக்கும் வண்ணம் பாழ்படுத்தி விட்டார்கள். இப்ராஹீம் (அலை) நபி மற்றும் சில ஞானிகளின் சமாதிகளைச் சேதப்படுத்தினார்கள். சுலைமான்(அலை) நபி தேவாலயத்தில் 10,000 யூதர்களைக் கொன்றார்கள். மேற்கத்திய கிறிஸ்தவ சிலுவைப் படைகள் தங்களின் ஆழமான இனவெறியாலும், கொடூரத்தனத் தாலும் யூதர்களை யும், சக கிறிஸ்தவர்களையும் கொன்றார்கள். புராதன கிறிஸ்தவர்களான ஜெரு சலம் பாதிரியாரை ஈஸா(அலை) நபி அவர்களை அறைந்த சிலுவையை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு சித்திரவதை செய்து கொன்றார்கள். ஜெருசலமும் ஐரோப்பிய காலனியாக இரத்த வெறி பிடித்த காட்ஃபிரே தலைமையில் ஆக்கப்பட்டது. அவன் அல் அக்ஸா மஸ்ஜிதை தன் அரண்மனையாக ஆக்கிக் கொண்டான்.




சிலுவைப்போர் 5

சில நாட்கள் கழித்து தப்பித்த சிலர் பாலஸ்தீன அகதிகளாக டமாஸ்கஸ் நகரம் வந்தார்கள். அவர்கள் நடந்த கொடூரங்களை மற்ற முஸ்லீம்களுக்கும், நகரங்களுக்கும் தெரியப்படுத்தி இஸ்லாமிய ஜிஹாத் நடத்தப்பட வேண்டும் என்றார்கள். ஆனால் அரபுகள் துருக்கி களாக, ஃபாத்திமிட்களாக, அப்பாஸிட்களாக, பெர்ஷியர்களாக, பல சிறிய ஆட்சியாளர்களாக பிரிந்து கிடந்தார்கள். எகிப்தின் ஆட்சியாளர் ஐரோப்பியர்களை பாலஸ்தீனத்திலிருந்து விரட்ட படையைத் தயார் செய்தார். சிலுவைப் படைகள் ஜெருசலம் முழுவதையும் கொள்ளையடித்து, எஞ்சிய நகரவாசிகளைக் கொன்றார்கள். 20 நாட்கள் கழித்து 1099 ஆகஸ்டில் எகிப்திய படைகள் ஜெருசலத்தை அடைந்தது. பாலஸ்தீனின் துறைமுக நகரமான அஸ்கலானில் முகாமிட்டிருந்த எகிப்திய படைகளுடன் சிலுவைப் படைகள் மோதி பத்தாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைக் கொன்று அவர்களின் கூடாரங்களை அழித்தது. சில நாட்களுக்குப் பிறகு அபு சாஃத் அல் ஹரவி என்ற டமாஸ்கஸின் நீதிபதி தலைமையில் ஒரு அகதிகள் குழு பாக்தாத் சென்று அப்பாஸிய கலீஃபா அல் முஸ்தஸீரைச் சந்தித்து அரபுகள் சிலுவைப் போராளிகளுக்கு எதிராக இணைய வேண்டியதின் அவசியத்தை உணர்த்தினார். 1099 ஆகஸ்டு 19 வெள்ளிக்கிழமை தொழுகையிலும் ஐரோப்பாவுக்கு எதிராக முஸ்லீம்கள் ஒன்று சேர வேண்டுமென்று அல் ஹரவி கேட்டுக்கொண்டார். 1011 ல் சிலுவைப் படைகள் பாலஸ்தீனின் துறைமுக நகரமான கெய்சரீயாவில் நுழைந்து கொள்ளையடித்தும், கொலைகளையும் செய்தார்கள். நகர மக்கள் அனைவரையும் பெரிய மஸ்ஜிதின் முன்பு கொண்டு வந்து நிறுத்திக் கொன்றார்கள். 1102 லும் ரெய்மா ண்ட் தலைமையில் திரிபோலி நகரத்தில் நுழைந்து 7,000 அரபு முஸ்லீம்களைக் கொன்றனர்.
1102 மே மாதம் முஸ்லீம்களுக்கு சிலுவைப் படைகளை ஒழிக்க அருமையான வாய்ப்பு வந்தது. ஆனால் நழுவ விட்டார்கள். எகிப்திய இராணுவம் திடீரென்று பாலஸ்தீனின் ரம்லாஹ் நகரில் சிலுவைப் படைகளை எதிர்த்தது. அதில் அதிகமான எதிரிகள் கொல்லப்பட்டு, சிறை பிடிக்கப்பட்டார்கள். ஜெருசலம் மன்னன் பால்ட்வின் பிடிபடாமல் தப்பிக்க ஒரு கூறையின் கீழே வயிறை சுருக்கிக் கொண்டு ஒளிந்து கொண்டான். அப்போது பாதுகாப்பு அதிகமில்லாத ஜெருசல த்தை அரபுகள் பிடித்திருக்கலாம். ஆனால் தீர்மானமாக இல்லாமலும், தயக்கத்துடனும் இருந்த அதன் தளபதியால் சந்தர்ப்பத்தை நழுவ விட்டார்கள். அதற்கடுத்த வருடம் புதிய இராணுவத்தை எகிப்து அனுப்பிய போது ஜெருசலத்தைப் பிடிக்க முடியாமல் போனது. ஒவ்வொரு தோல்வியின் போதும் உயிர் களுடன் நகரங்களையும் சிலுவைப் போராளிகளிடம் இழந்தார்கள். 1104 ல் சிலுவைப் படைகள் வரிசை யாக ஜஃப்ஃபா, ஹைஃபா மற்றும் அக்ரி ஆகிய அரபு நகரங்களைப் பிடித்தார்கள். 1109 ல் திரிபோலியின் மீது படையெடுத்து மிகக் கொடூரமான முறையில் கொன்று குவித்து அதைக் கைப்பற்றினார்கள். அரபு களின் கிழக்குப்பகுதி துறைமுக நகரமான திரிபோலி ‘ஜுவல் ஆஃப் அராப்’ என்று அழைக்கப்பட்டது. கனி வகைகளும், கரும்புத் தோட்டங்களும், ஆலீவ் மரங்களும் பூத்துக் குலுங்கும் நகரம் திரிபோலி. படித்த நீதிபதிகளும், தைரியமான கடலாடிகளும், மத போதகர்களும், புகழ் பெற்ற நூலகங்களும் கொண்ட நகரம் திரிபோலி. படிப்பறிவில்லாத காட்டுமிராண்டி கிறிஸ்தவ படைகள் திரிபோலியை நாசம் செய்தார்கள். முஸ்லீம்களின் பொக்கிஷமான தார் அல் இல்ம் என்றும் ஹவுஸ் ஆஃப் நாலட்ஜ் என்றும் அழைக்கப்பட்ட ‘பனூ அம்மார்’ நூலகத்தை சூறையாடினார்கள். ஒப்பற்ற களஞ்சியங்களான அதன் 100,000 புத்தகங்கள் இன்றுவரை வெளி உலகத்தினரால் படிக்க முடியாமல் போனது. பிடிக்கப்பட்ட திரிபோலி மக்கள் ஐரோப்பிய அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார்கள். செல்வந்தர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு நகரத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். திரிபோலியிலிருந்து வெளியேறிய சிலர் அருகா மை நகரமான டைரில் அகதிகளாக நுழைந்தார்கள். ஆண்டியாக், ஜெருசலத்தைத் தொடர்ந்து திரிபோ லியும் மேற்கத்தியர்களின் ஐரோப்பிய காலனியானது. மூன்றிலொரு பங்கு ஜினோயிசின் காலனியாக வும், மூன்றில் இரண்டு பங்கு காட்டுமிராண்டி ரெய்மாண்டும் பிரித்துக் கொண்டார்கள்.
1110 மே மாதம் சிலுவைப் படைகள் மற்றுமொரு கொடூரத் தாக்குதலுக்கு பெய்ரூட் நகரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதே ஆண்டு டிசம்பரில் புராதன சிடோன் நகரின் துறைமுகமான சைதாவைத் தாக்கி அதிகமான மக்களை டைருக்கும், டமாஸ்கஸுக்கும் அகதிகளாக துரத்தினார்கள். குறுகிய காலத்தில் ஜஃப்ஃபா, ஹைஃபா, அக்ரி, திரிபோலி, பெய்ரூட், சைதா ஆகிய ஆறு நகரங்களைப் பிடித்து அதிலிருந்த மசூதிகளை இடித்தார்கள். இவைகள் ஒட்டுமொத்த அரபு தேசங்களையும் உலுக்கியது. அடுத்த நகரங்களான டைர், அலிப்போ, மோசூல், டமாஸ்கஸ், கெய்ரோ, பாக்தாத் ஆகியவை மக்கா உட்பட பயத்துடன் இருந்தன. அலிப்போவின் நீதிபதி அப்துல் ஃபதல் இப்ன் அல் கஷாப், அப்பாஸிய கலீஃபா அல் முஸ்தஸிரின் கவனம் ஈர்க்கும் வண்ணம் தலைநகர் பாக்தாதில்  மக்களைத் திரட்டி ஜிஹாத் போர் செய்ய வேண்டுமென்று பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தினார். இது பெரிய கலவரமாக மாறியது. 1111 ஜூலையில் அஸ்கலோன் நகர மக்களும் தங்கள் கோழை தலைவர் ஷம்ஸ் அல் கலீஃபா 7,000 தீனார்களை கப்பமாக ஜெருசலம் மன்னன் பால்ட்வின்னுக்கு கொடுத்ததைக் கண்டித்து புரட்சி செய்தார்கள். புரட்சியை அறிந்த பால்ட்வின் கலீஃபாவுக்கு பாதுகாப்பாக 300 சிலுவைப்படை வீரர்களை அனுப்பினான். ஆனால் அஸ்கலோன் மக்கள் கலீஃபாவையும், 300 சிலுவைப்படை வீரர்களையும் கொன்று தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.
1119 ஜூனில் அலிப்போவின் ஆட்சியாளர் நஜ்ம் உத் தீன் இல் காஸி ஆண்டியாக்கில் சர்மதா என்ற இடத்தில் சிலுவைப் படைகளைத் தோற்கடித்தார். ஆண்டியாக் வழியாக மக்கா செல்லும் யாத்திரிகர்களிடம் வரி வசூலித்த இத்தாலியின் இளவரசர் ரிச்சர்டின் மகன் கொடுமைக்காரன் ஸர். ரோஜரை போரில் கொன்றார். இது பெரிய இழப்பாக கருதாத சிலுவைப் படைகள் வழக்கம் போல் அடுத்த நகரமாக டைரை 1124 ல் கைப்பற்றி மொத்த அரபு கிழக்கு மெடிட்டரேனியன் பகுதிகளையும் தங்கள் அதிகாரத்தில் கொண்டு வந்தார்கள். 1144 ல் மேற்கத்திய கிறிஸ்தவ வெறியாளர்களுக்கு இறங்கு முகம் ஆரம்பித்தது. ஈராக்கின் மோசூல் நகரின் கவர்னராக இருந்த இமாத் அத்தீன் ஸங்கி, பாக்தாதின் அப்பாஸிய கலீஃபாவின் ஆதரவில் இருந்தார். முதலில் எடிஸ்ஸாவை சுதந்திரமாக்கி, அடுத்தடுத்து நான்கு சிலுவைப் படைகளின் காலனிகளை வென்றெடுத்தார். அரபு உலகம் மொத்தமும் வெற்றிக் களிப்பில் மிதந்தது. பின்னர் ஆண்டியாக்கையும், திரிபோலியையும் சிலுவைப் படைகள் இழந்தது.
எடிஸ்ஸா நகரம் முஸ்லீம்கள் வசம் போனதை அறிந்த போப் மூன்றாம் ஈஜீனியஸ் ஐரோப்பாவில் இரண்டாம் சிலுவைப் போருக்கு கூக்குரலிட்டான். இதை செவியேற்ற ஐரோப்பா சக்திவாய்ந்த படையை தயார் செய்தது. அப்படைக்கு ஜெர்மனியின் பேரரசர் மூன்றாம் கொனார்டும், ஃப்ரான்சின் மன்னன் ஏழாம் லூயிஸும் தலைமை தாங்கினார்கள். ஐரோப்பாவின் முக்கிய மாகாணங்கள் கலந்து கொண்ட இரண்டாம் சிலுவைப் போர் அவர்களுக்கு பெரும் தோல்வியில் முடிந்தது. 1148 ல் ஸங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ்கஸில் சிலுவைப் படைகளை துவம்சம் செய்தார். அதுவும் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் மன்னர்களை சாதுரியமாக நூருத்தீன் எதிர்த்து வெற்றி பெற்ற செய்தி மொத்த அரபு உலகத்தையும் உற்சாகப்படுத்தியது. விரைவில் முஸ்லீம்கள் பிரதேசங்களான ஜெருசலம், ஆண்டியாக், திரிபோலியிலிருந்து அனைத்து ஐரோப்பியர்களும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள் என்று நம்பிக்கை கொண்டார்கள்.

சிலுவைப்போர் 6

இரண்டாம் சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது   
எடிஸ்ஸா நகரம் முஸ்லீம்கள் வசம் போனதை அறிந்த போப் மூன்றாம் ஈஜீனியஸ் ஐரோப்பாவில் இரண்டாம் சிலுவைப் போருக்கு கூக்குரலிட்டான். இதை செவியேற்ற ஐரோப்பா சக்திவாய்ந்த படையை தயார் செய்தது. அப்படைக்கு ஜெர்மனியின் பேரரசர் மூன்றாம் கொனார்டும், ஃப்ரான்சின் மன்னன் ஏழாம் லூயிஸும் தலைமை தாங்கினார்கள். ஐரோப்பாவின் முக்கிய மாகாணங்கள் கலந்து கொண்ட இரண்டாம் சிலுவைப்போர் அவர்களுக்கு பெரும் தோல்வியில் முடிந்தது. போப் ஐபீரிய தீபகற்பத்தையும், மூர்ஸ்களின் பிரதேசங்களையும் கைப்பற்ற சிலுவைப்படைகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். ஐரோப்பாவிலிருந்து வரும் வழியில் பல இடங்களை கொடுமையான முறையில் கொன்று வென்றார்கள். கொள்ளையடிக்கும் பொருள்கள் எங்களுக்குச் சேர வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் போர்ச்சுகீஸிய மன்னன் முதலாம் அஃபோன்ஸோவுடன் கூட்டு சேர்ந்து லிஸ்பனில் போரிட்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு, அதன் மூர்ஸ் ஆட்சியாளர் நகரில் உணவுத் தட்டுப்பாடு நிலவியதால் சரணடைவதாக ஒப்புக் கொண்டார். லிஸ்பனைப் பிடித்தார்கள். அங்கிருந்து கிளம்பிய சிலுவைப் படைகள் வழியில் சண்டாரீம், சின்ட்ரா, அல்மதா, பல்மேலா மற்றும் செதூபல் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள். பிடிக்கப்பட்ட இடங்களில் சில சிலுவைப்படை வீரர்கள் அங்கேயே தங்கிக் கொண்டார்கள். ஃப்ரான்ஸ், கடலான், ஜினோயிஸ் என்று கலப்படமாக இருந்த இன்னொரு சிலுவைப்படை வளமான நகரமான அல்மீரியாவைக் கைப்பற்றியது. பின் வாலன்ச்சியா பேரரசின் மாகாணமான அல்மொராவித், டோர்டோசா, ஃப்ராகா, ல்லீய்டா, மெக்வென்ஸா, சிக்ரி மற்றும் எப்ரோ ஆகியவற்றையும் வரிசையாகக் கைப்பற்றினார்கள்.
இந்த தருணத்தில் இஸ்லாமிய உலகில் பெரிய முழுநேர இராணுவமாக 10,000 வீர்ர்களைக் கொண்டு செல்ஜுக் பேரரசு மட்டுமே இருந்தது. அடுத்து சிறுவயது முதலே பயிற்சி பெற்ற தொழில் ரீதியான இராணுவம் மம்லுக்குகளிடம் இருந்தது. 15
1148 ல் ஸங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ்கஸில் சிலுவைப் படைகளை துவம்சம் செய்தார். அதுவும் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் மன்னர்களை சாதுரியமாக நூருத்தீன் எதிர்த்து வெற்றி பெற்ற செய்தி மொத்த அரபு உலகத்தையும் உற்சாகப்படுத்தியது. சிலுவைப் படைகள் போரில் தோல்வியுற்றிருந்தாலும் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதியில் மிச்சமிருக்கும் நகரங்களை வெல்வதிலும் அங்கிருக்கும் முஸ்லீம், கிறிஸ்தவ, யூதர்களைக் கொல்வதிலும் முனைப்பு காட்டினார்கள். 1156 ல் ஃப்ரான்ஸ் மன்னன் ரெய்னால்ட் சைப்ரஸ் மீது ஆக்கிரமித்து வளம் தரும் பயிர்களை நாசம் செய்து, கால்நடைகளை அழித்து, மக்களைக் கொன்றான். பெண்களைக் கற்பழித்து, தேவாலயங்களைக் கொள்ளையடித்து, கட்டிடங்களை இடித்தும் தீவைத்தும் கொளுத்தினான். கிரேக்க பாதிரியார் ஒருவரின் மூக்கை அறுத்தான். இதுபோல் அத்தனைக் கொடுமைகளுடனும் 1168 ல் எகிப்தின் அரபு நகரமான பில்பைய்ஸைப் பித்தார்கள். 1169 ல் அற்புதமான குணநலன்களையுடைய சலாவுத்தீன் அய்யூபி என்பவர் எகிப்தில் ஆட்சிக்கு வந்தார். 1180 ல் சலாவுத்தீனுக்கும், சிலுவைப் படைகளுக்கும் இடையே போடப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை மீறி, 1181 ல் ரெய்னால்ட் மக்கா புனிதப் பயணம் போய்க்கொண்டிருந்த யாத்திரிகர்கள் வாகனத்தைக் கொள்ளையடித்தன. ஐந்து சண்டைக்கப்பல்களை அரபு துறைமுகமான இலாத்தில் நிறுத்தி வைத்து வாணிபத்தடங்கள் செய்தான். ஹிஜாஸி, யான்பு துறைமுகங்களைக் கொள்ளை அடித்து புனித மக்கா நகரத்தையும் மிரட்டினான்.
சலாவுத்தீனின் சகோதரி பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்தையும் கொள்ளை அடித்தான். மீண்டும் 1187 ல் பெரிய மக்கா யாத்ரீகர்கள் கூட்டத்தைக் கொள்ளை அடித்தான். எதிர்த்த ஆண்கள் அனைவரையும் கொன்றான். ஒரு பயணி சலாவுத்தீனின் ஒப்பந்தத்தை நினைவூட்ட, அதற்கு அந்த ஃப்ரான்ஸ் மிருகம் ரெய்னால்ட், ‘உங்கள் முஹம்மது வந்து விடுதலை செய்வார் காத்திருங்கள்’ என்றான். இதைக் கேள்விப்பட்ட சலாவுத்தீன் தனது கைகளால் ரெய்னால்டைக் கொல்வேன் என்று திருக்குரான் மீது சத்தியம் செய்து கொண்டார். சலாவுத்தீன் எகிப்து அல்லாமல் சிரியா, வட ஈராக், லிபியாவின் ஒரு பகுதியான பர்காஹ், ஹிஜாஸ், ஏமன் ஆகியவற்றை வென்றபின் சிலுவைப் படைகளை வெல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார். 1187 ல் தாமதிக்காமல் சிலுவைப் படைகள் மீது போர் தொடுத்தார். சலாவுத்தீனின் அளப்பறிய போர் திறமை சிலுவைப் படைகளை ஹத்தீன் போரிலும், வட பாலஸ்தீனின் டைபீரியஸ் ஆற்றின் போரிலும் துவம்சம் செய்தது. இந்தப் போரின் முடிவில் சலாவுத்தீன் எதிரிகள் மீது காட்டிய கருணை இன்றளவும் (என்றைக்கும்) உலக சரித்திர ஆசிரியர்களால் போற்றப்படுகின்றது. ஜெருசலம் மன்னனை விடுதலை செய்து, மிருகம் ரெய்னால்டை சபதம் செய்தது போல் கொன்றார். அவனது உடலை மற்றொரு ஃப்ரென்சுக்காரனிடம் காட்டி இவன் நம்பிக்கை துரோகமும், கொடுமைகளும் செய்ததற்கான தண்டனை இதுதான் என்றார். சிலுவைப் படைகளின் தோல்வியினால் மீண்டும் ஜெருசலம் நகரம் முஸ்லீம்களின் சுதந்திரப் பிரதேசமானது. அடுத்த சில மாதங்களில் தொடர்ந்த படையெடுப்பால் அக்ரி, டோரான், பெய்ரூட், ஜுபைல் (பைப்லோஸ்), சைய்தா, நாஸரெத், கெய்சாரியா, நபுலுஸ், ஜஃப்ஃபா, ஹாஃபா, அஸ்கலான் ஆகியவை மேற்கத்திய கிறிஸ்தவ வெறியாளர்களிடமிருந்து விடுதலைப் பெற்றன. 88 ஆண்டு காட்டுமிராண்டி காலனி ஆட்சிக்குப் பிறகு ஜெருசலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மிஹ்ராஜ் பயணம் மேற்கொண்ட அதே நினைவு நாளில் 1187 அக்டோபர் 2, வெள்ளி கிழமை சலாவுத்தீன் வெற்றி வீரராக ஜெருசலத்தில் கால் பதித்தார். கொடுமையான வகையில் 88 ஆண்டு காலம் முஸ்லீம்களைக் கொன்றும், பெண்களைக் கற்பழித்தும், கொள்ளைகளும் புரிந்த சிலுவைப்படை வீரர்களை ஆயிரக்கணக்கில் மன்னித்து அவர்கள் திரும்பிப் போகச் செய்தார். கருணையே வடிவாக அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜெருசலத்திற்கு புனித பயணம் வரலாம் என்று அனுமதி கொடுத்தார். சிதறிப் போயிருந்த யூதர்களை அழைத்து பழைய இடங்களில் அவர்களைக் குடி அமர்த்தினார். டையர் என்னும் அரபு நகரமும், திரிபோலி, ஆண்டியாக் இன்னும் சிலுவைப்படைகள் வசமே இருந்தது.


சிலுவைப்போர் 7

மூன்றாவது மற்றும் பிற சிலுவைப் போர்கள்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
ஜெருசலம் முஸ்லீம்கள் போய்விட்டதை அறிந்த போப் எட்டாம் கிரிகோரி தன்னிலையை மறந்து போனான். உடனடியாக மூன்றாவது (1189-1192) சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தான். இம்முறை அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பலம் வாய்ந்தவர்களும் ஜெர்மனிய மன்னனும் ரோமப் பேரரசருமான  ஃப்ரெடெரிக் பார்பரொஸ்ஸா, இங்கிலாந்து மன்னனும், ‘லயன் ஹார்ட்’ என்ற பட்டப்பெயர் கொண்ட முதலாம் ரிச்சர்ட், ஃப்ரான்சின் மன்னன் பிலிப் இரண்டாம் அகஸ்டஸ் ஆகியோர் இணைந்தார்கள். இந்த மூன்றாவது சிலுவைப்போர் “மன்னர்களின் சிலுவைப்போர்” என்றும் அழைக்கப்பட்டது. இரண்டாம் சிலுவைப்போரில் கிறிஸ்தவ படைகளை தோல்வியடையச் செய்த பின், நூருத்தீன் ஸங்கி டமாஸ்கஸ் நகரைக் கட்டுப்படுத்தி சிரியாவை ஒன்று படுத்தினார். நம்பிக்கையான தளபதி ஷிர்குஹ் உடன் சலாவுத்தீனையும் எகிப்தை நோக்கி நைல் நதிக்கு ஒரு படையை அனுப்பினார். எகிப்தின் ஃபாத்திமிட் ஆட்சியாளர் சுல்தான் ஷவார், தன் உதவிக்கு ஜெருசலம் மன்னர் முதலாம் அமல்ரிக்கை அழைத்துக் கொண்டு, 1164 ல் பில்பெய்ஸ் என்ற இடத்தில் ஷிர்குஹ் படையை எதிர்கொண்டார். எகிப்திலிருந்து கிறிஸ்தவ சிலுவைப்படைகளின் கவனத்தை திசை திருப்ப நூருத்தீன் ஸங்கி தான் ஆண்டியாக்கைத் தாக்கினார். சிலுவைப்படைகளைத் தாக்கி பல தலைவர்களையும், ஆண்டியாக்கின் இளவரசர் மூன்றாம் பொஹிமாண்டையும் சிறைப்பிடித்தார். கொல்லப்பட்ட சிலுவைப்படை வீரர்களின் உடல்களை ஷிர்குஹ்ஹுக்கு அனுப்பி, பில்பெய்ஸில் அமல்ரிக் வீரர்களின் பார்வையில் படும்படி வைத்தார். இது அவருக்கு நல்ல பலனைத்தந்தது ஷவாரின் உதவிக்கு வந்த அமல்ரிக்கின் வீரர்கள் எகிப்தைவிட்டு ஓட்டம் பிடித்தார்கள்.
1167 ல் நூருத்தீன் ஸங்கி மீண்டும் ஷிர்குஹ்ஹை ஃபாத்திமிட்களின் எகிப்தைப் பிடிக்க அனுப்பினார். மீண்டும் ஷவார், ஜெருசலத்தின் அமல்ரிக்கின் உதவியை நாட ஷிர்குஹ் அலெக்ஸாண்டிரியாவை வென்றார். உதவவந்த அமல்ரிக் நன்றிகெட்டதனமாக எகிப்தின் பில்பெய்ஸ் நகரை பிடித்துக் கொண்டான். இம்முறை ஷவார், கிறிஸ்தவ அமல்ரிக்கை எதிர்க்க எதிரியான ஷிர்குஹ்ஹையே நாடினார். ஷிர்குஹ் ஷாவாருக்கு உதவிசெய்து அமல்ரிக்கை தோற்கடித்து, சிரியாவிலும், எகிப்திலும் வலுவான நிலையைப் பெற்றார். முஸ்லீம்கள் மீது மதவெறி கொண்டு வந்த சிலுவைப்படைகள் வந்த சமயத்தில் முஸ்லீம்களுக்கு துரோகம் செய்யும் விதமாக கிறிஸ்தவ அமல்ரிக்குடன் கூட்டு வைத்திருந்ததற்காக ஷவார் தூக்கிலிடப்பட்டார். 1169 ல் ஷிர்குஹ்கும் எதிர்பாராமல் மரணமடைந்தார். அவர் உறவினர் சலாவுத்தீன் அய்யூப் ஆட்சிக்கு வந்தார். நூருத்தீன் ஸங்கியும் மரணமடைந்து அவர் மகன் 11 வயது அஸ் ஸாலிஹ் ஆட்சியில் இருந்தார். முஸ்லீம் உலகம் வெறிபிடித்த கிறிஸ்தவ சிலுவைப்படைகளை எதிர்க்க சலாவூத்தீனையே நம்பினார்கள்.
ஜெருசலத்தின் அமல்ரிக்கும் 1174 ல் இறந்துபோக அவன் மகன் நான்காம் பால்ட்வின் ஆட்சியில் இருந்தான். வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டாலும், பால்ட்வின் சிறந்த தளபதியாய் இருந்து சாடில்லானைச் சேர்ந்த ரெய்னால்டுடன் இணைந்து சலாவுத்தீனை 1177 ல் மாண்ட்கிஸார்டு போரில் வென்றான். இவையெல்லாம் மூன்றாம் சிலுவைப்போருக்கு முன்பிருந்த நிலமைகள். 1189 ல் ரோமப்பேரரசர் ஃப்ரெட்ரிக் பார்பரொஸ்ஸாவுடன் 80,000 பேரும், 20,000 வீரர்களும் சேர்ந்தார்கள். மேலும், ஹங்கேரியின் மன்னன் மூன்றாம் பீலா 2,000 வீரர்களுடன் ஃப்ரெட்ரிக்குடன் இணைந்து கொண்டான். பைஸாந்திய பேரரசர் இசாக் இரண்டாம் ஆங்கிலஸ், ஃப்ரெட்ரிக்கிடமிருந்து தன் பிரதேசத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன் கூட்டியே சலாவுத்தீனிடம் ரகசிய உடன்பாடு செய்து கொண்டான். ரோம சுல்தான் ஃப்ரெட்ரிக்கின் படைகள் பாதுகாப்பாக அனடோலியாவைக் கடக்க உதவுவதாக வாக்களித்தான். ஆனால், பொறுமைகாக்காத ஃப்ரெட்ரிக் 1190 ல் சுல்தானிய தலைநகர் ஐகோனியத்தை நாசம் செய்தான். அங்கிருந்து சலீஃப் ஆற்றைக் கடக்கையில் ஆற்றின் உச்சியில் குதிரையிலிருந்து தவறி ஆற்றின் பாறையில் அடிபட்டு ஃப்ரெட்ரிக் இறந்து போனான். அவனின் படைகள் பெரும்பாலானவை அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜெர்மனி திரும்பியது. ஃப்ரெட்ரிக்கின் மகன் ஸ்வாபியாவைச் சேர்ந்த ஃப்ரெட்ரிக் என்பவன் எஞ்சிய 5,000 வீரர்களுடன் ஆண்டியாக் வந்தான். வரும்போது தந்தையின் உடலை சுடுநீரில் வேகவைத்து சதைகளையெல்லாம் பிய்த்து எறிந்துவிட்டு, எலும்புகளை ஒரு பையில் போட்டுக்கொண்டு வந்தான். ஆண்டியாக் வந்த அவன் படையில் சிலர் உடல்நலமில்லாமல் இறந்துபோய் எண்ணிக்கைக் குறைந்தது. ஃப்ரெட்ரிக் கூட்டாளி மாண்ட்ஃபெர்ரட்டைச் சேர்ந்த கான்ராடை பாதுகாப்பாக அக்ரியைக் கடக்க உதவுமாறு வேண்டினான். வரும்வழியில் தந்தையின் எலும்புகளைப் புதைத்தான். ரிச்சர்டும், இரண்டாம் பிலிப்பும் மார்செல்லியில் சந்திப்பதாக திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி மார்செல்லி வந்த ரிச்சர்ட் பிலிப் வராததால் காத்திருக்க விருப்பமின்றி படகுகளைப் பிடித்து இத்தாலியின் பல இடங்களைச் சுற்றிக் கொண்டு மெஸ்ஸினா வந்து சேர்ந்தான். இதற்கிடையில் மார்செல்லி வந்து சேர்ந்த பிலிப், ரிச்சர்டு சென்றுவிட்டதை அறிந்து ஜினோயிஸ்களின் படகுகளை அமர்த்தி 1,300 பேர்கள், 650 வீரர்கள், 1,300 குதிரைகள் என்று மெஸ்ஸினா கிளம்பினான்.
முன்னதாகவே மெஸ்ஸினா வந்த மன்னன் ரிச்சர்ட் அதைக் கைப்பற்றி அங்கு சிறையிலிருந்த ஜோன் என்பவனை விடுவித்தான். ரிச்சர்டின் திருமண விஷயமாக அவனுக்கும், பிலிப்புக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அதாவடு பிலிப்பின் ஒன்றுவிட்ட சகோதரி அலிஸை ரிச்சர்டு மணப்பதாக இருந்தது. ஆனால் அவன் நவர்ரியின் பெரிங்காரியா என்பவளை மணக்க முடிவு செய்திருந்தான். பிலிப் நேரடியாக டைர் நகரம் வந்து அக்ரியை வெற்றி கொள்ள இணைந்து கொண்டான். சிஸிலியை விட்டுக் 180 கப்பல்கள், 39 படகுகளுடன் கிளம்பிய ரிச்சர்ட் கடுமையான புயல்காற்றில் சிக்கிக் கொண்டான். அவனின் கப்பல்கள் சில மூழ்கின. அதில் அவன் உறவினன் ஜோனும், காதலி பெரிங்காரியாவும் இருந்த கப்பல் பெரும் செல்வத்துடன் மூழ்கியது. ஆனால் பின்னால் அக்கப்பல் சைப்ரஸின் இசாக் டுகாஸால் கைப்பற்றப்பட்டிருப்பது அறியப்பட்டது. அவன் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து சிலுவைப்போருக்கு 500 வீரர்களையும் கொடுத்தான். ரிச்சர்ட் லிமஸ்ஸோலில் தங்கி பெரிங்காரியாவை மணந்து கொண்டான். 1191 ல் ரிச்சர்ட் அக்ரியை இரண்டாண்டு காலமாகப் போராடி கைப்பற்றினான். இதில் 24,000 முஸ்லீம் வீரர்கள் கொல்லப்பட்டு, 6,000 வீரர்கள் காயமடைந்தார்கள். அக்ரி நகரத்தின் பெரும் செல்வங்களைக் கொள்ளையடித்தான். 2,700 முஸ்லீம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் சங்கிலியால் கட்டி, சவுக்கால் அடித்த வண்ணம் அய்யாதெய் மலைக்கு இழுத்துச் சென்றான். அங்கு சிலுவைப்படைகள் அனைவரையும் ஈவுஇரக்கமின்றி கொன்றார்கள். இச் செய்தி சலாவுத்தீனின் பேரரசு முழுதும் உலுக்கியது.
ஜாஃப்ஃபா நகருக்கருகில் அர்சூஃப் என்ற இடத்தில் சலாவுத்தீனின் படையை தோற்கடித்த ரிச்சர்ட், ‘லயன் ஹார்ட்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டான். முஸ்லீம்களைப் பொறுத்தவரை இவர் போர் வரம்புகளை மீறிய ஒரு இரக்கமற்ற கொலைகாரன். ஏற்கனவே ஆங்கிலமன்னன் சலாவுத்தீனிடம் போட்டிருந்த ஒப்பந்தம் பிரகாரம் அவர்களால் டைர் நகரம் தாண்டி ஜெருசலம் செல்ல முடியவில்லை. அக்ரி நகரத்தில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருந்த கொடூரத்தைக் கேட்டு சலாவுத்தீன் வாய்விட்டு அழுது கண்ணீர் சிந்தினாராம். அந்த துயரத்திலேயே அவர் இறந்தும் போனார். மூன்றாவது சிலுவைப்போரில் ஜெருசலத்தை மீட்க முடியாமல் போனதால், போப் மூன்றாம் இன்னோசெண்ட் நான்காவது சிலுவைப்போருக்கு அழைப்புவிடுத்தான். நேரடியாக எகிப்தை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தான். ஆனால், அது மூன்றாவது சிலுவைப்போரை விட படுதோல்வி அடைந்தது. நான்காவது சிலுவைப்போருக்கு வெனிஷிய வணிகர்கள் பொருளுதவி செய்தார்கள். சிலுவைப்படைகள் கிறிஸ்தவ டால்மேஷியன் துறைமுக நகரமான ஸராவை கொள்ளையடித்து அழித்து நாசம் செய்தது. ஆரம்ப சிலுவைப்போருக்கு அழைப்புவிடுத்த முதலாம் அலெக்சியஸின் காண்ஸ்டாண்டிநோபிளையே 1204 ல் சிலுவைப்படைகள் நாசம் செய்தன. வெனீஷியர்களும், சிலுவைப்படைகளும் கான்ஸ்டாண்டிநோபிளை லத்தீன் பேரரசாக 1261 வரை வைத்துக்கொண்டன. நகரின் முக்கிய தேவாலயத்தை நாசப்படுத்தி கொள்ளைகளும் நடத்தினர். கன்னியாஸ்திரிகளை கற்பழித்து அசிங்கமான ஃப்ரென்ச் பாடல்களுக்கு நடனமாட வைத்து, பாட்ரியார்ச்சிகளின் அரண்மனையில் விபச்சாரிகளாகவும் ஆக்கினார்கள். புனித பைபிள் புத்தகங்களை கால்களில் போட்டு மிதித்தனர். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவையல்ல. சரித்திரம் பதிவுசெய்து வைத்ததையே இங்கு குறிப்பிடுகிறோம். அடுத்து 1212 ல் குழந்தைகள் சிலுவைப்போர் என்று ஐரோப்பாவின் 100,000 குழந்தைகளை அழைத்து வந்தார்கள். இப்படி அழைத்து வரப்பட்ட ஃப்ரென்ச் மற்றும் ஜெர்மனிய வெள்ளை நிற குழந்தைகளை அழைத்துவந்த கிறிஸ்தவர்களே அடிமைச் சந்தையில் விற்றார்கள். 12 வயதான க்லோயசைச் சேர்ந்த ஸ்டீபன் என்னும் சிறுவன் பின்னாளில் சொன்னதாவது, புனித ஜெருசலத்தை மீட்க இவன் தலைமையில் மற்ற குழந்தைகளைத் திரட்டி பசியுடனும், நோயுடனும் ஃப்ரான்சின் மார்செய்லி துறைமுகத்திற்கு வரச்சொல்லி ஃப்ரென்ச் அடிமை வியாபாரி ஒருவனால் மெடிட்டரேனிய அடிமைச்சந்தையில் விற்கப்பட்டார்கள். இன்னொரு அபத்தமாக ஜெர்மனிய நிக்கோலஸ் என்பவனால் ஆயிரக்கணக்கான ஜெர்மனிய பெண்குழந்தைகள் ரோமப்பேரரசில் விபச்சாரத்திற்காக விற்கப்பட்டார்கள். உபயோகமில்லாத இந்த நான்காவது சிலுவைப்போர் எகிப்தைத் தாக்குவதற்கு பதில் கிறிஸ்தவ பைஸாந்திய பேரரசை தாக்கியது. மீண்டும் போப் மூன்றாவது இன்னொசெண்ட் (1217-1221) எகிப்தைத் தாக்குவதற்கு ஐந்தாவது சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தான். ஃப்ரான்ஸ், ஜெர்மன் தலைமையில் அமைந்த இந்த படையும் எகிப்தை வெற்றி கொள்ள தவறியது. 1218 ல் நைல் நதியில் டமெய்டாவை வென்றது. 1,500 அரபு முஸ்லீம்களை படகில் நதியில் மூழ்கடித்துக் கொன்றார்கள். எகிப்தின் ஆட்சியாளராக இருந்த சலாவுத்தீனின் உறவினர் அல் மாலிக் அல் காமில் ஐந்தாம் சிலுவைப் படை வீரர்களை 1221 ல் போரிட்டு விரட்டினார். ஏழு ஆண்டுகள் கழித்து 1228 ல் மீண்டும் போப் கிரிகோரியால் ஆறாவது சிலுவைப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்முறை ஜெர்மனியின் சக்திவாய்ந்த இரண்டாம் ஃப்ரெடெரிக் தலைமை வகித்தான். இரண்டாம் ஃப்ரெடெரிக் மற்றும் அல் காமிலுக்கும் இடையில் இரத்தமின்றி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜெருசலம், பெத்லஹேம் மற்றும் நாசரெத் நகரங்களை கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதற்கு முஸ்லீம்களிடத்தில் அல் காமிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். 1239 ல் ஒப்பந்தம் முடிந்து அந்நகரங்கள் மீண்டும் அல் காமில் வசம் வந்தது. 1248 ல் ஃப்ரான்சின் ஒன்பதாம் லூயிஸ் எகிப்தை எதிர்த்து ஏழாம் சிலுவைபோரைத் துவக்கினான். விரைவில் டமெய்டாவைக் கைப்பற்றி எகிப்தை நோக்கி முன்னேறிய லூயிஸை எகிப்து சுல்தான் தோற்கடித்தார். மன்னன் லூயிஸும் கைது செய்யப்பட்டான். பெரும் பணயத்தொகை பெற்றபின்னரே இவன் விடுவிக்கப்பட்டான்.

சிலுவைப்போர் 8

இத்தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஹுலகு (அக்காலத்திய ஜார்ஜ் டபிள்யூ. புஷ்) என்னும் மங்கோலிய மன்னனால் பாக்தாத் நகரம் அழிக்கப்பட்டது. 10 லட்சம் முஸ்லீம்களைக் கொன்று, மஸ்ஜிதுகள், நூலகங்கள், பள்ளிக்கூடங்கள், அரண்மனைகள் ஆகியவற்றைத் தரைமட்டமாக்கினான். அக்காலத்திலேயே கால்வாய் நீர்பாசனம் கொண்டிருந்த பாக்தாதின் நகர கால்வாய்களை சேதமாக்கி கலீஃபாவையும், அவர் குடும்பத்தினரையும் காட்டுமிராண்டித் தனமாக கொன்று குவித்தான். அதன்பின் ஓட்டோமான் ஆட்சியாளர்களால் தான் மீண்டும் இஸ்லாமியர்கள் தலைதூக்கினார்கள். திறமைவாய்ந்த பெய்பர்ஸ் அஸ் ஸாஹிர் என்பவர் மங்கோலியர்களை அய்ன் ஜாலூத் போரில் வென்று உருவெடுத்தார். கிறிஸ்தவ சிலுவைப்படைகளுடன் இணைந்திருந்த மங்கோலியர்களை போரிட்டு, சிலுவைப்படைகளிடமிருந்த அரபு நகரங்களான அர்சூஃப், அட்லிட், ஹைஃபா, சஃபிட், ஜஃப்ஃபா, ஆண்டியாக் ஆகியவற்றை தொடர்ச்சியாக வென்றார். ஃப்ரான்சின் மன்னன் ஒன்பதாம் லூயிஸ் மீண்டும் அரபுகளை வெல்ல 1270 ல் எட்டாவது சிலுவைப்போரை நடத்தினான். அரபு பிரதேசத்தை இடையில் துண்டித்துவிடும் நோக்கில் துனிஷியாவின் மீது படையெடுக்க இருந்தான். எதிர்பாராத விதமாக கொடும் கிருமி நோயால் தாக்கப்பட்டு, துனிஸ் நகரில் இறந்து போனான். அவன் உடல் பாரீஸ் நகரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு ‘ஞானி’ யாக புதைக்கப்பட்டான். அடுத்து பெய்பர்ஸ் சலாவுத்தீனால் வெற்றி கொள்ளமுடியாமல் போன சிலுவைப்படைகளின் சிரியாவிலுள்ள ஹிஸ்ன் அல் அக்ரத் (ஃப்ரென்சில் “க்ராக் டெஸ் செவாலியர்ஸ்”) கோட்டையைக் கைப்பற்றினார். 1289 ல் எகிப்திய சுல்தான் அல் மன்சூர் கலாவூன் என்பவர், முஸ்லீம்கள் சிலிர்ப்படையும் வகையில் சிலுவைப்படைகள் வசமிருந்த காலனிய பகுதியான திரிபோலியை வென்றார். இப்போது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஃப்ரான்சின் கொடுமைக்கார மன்னன் ஹென்றியின் கீழ் அக்ரி துறைமுக நகரம் மட்டும் இருந்தது. இந்நிலையில் ஹென்றியின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பாவில் போப் நான்காம் நிக்கோலஸ் ஒன்பதாம் சிலுவைப்போருக்கு ஆட்களைத் திரட்டினான். பெரும் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு அக்ரி நகரை நோக்கி வந்தார்கள். அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு அங்கிருந்த முஸ்லீம் வணிகர்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட அல் மன்சூர் கலாவூன் பெரும் கோபம் கொண்டு ஐரோப்பியர்களை அரபு மண்ணிலிருந்து விரட்டும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் செய்தார். ஆனால், அவர் இறந்துபோக, அவர் மகன் அல் அஷ்ரஃப் கலீல்அக்ரியை வென்று சபதத்தை நிறைவேற்றினார். மன்னன் ஹென்றியும், ஐரோப்பிய தலைவர்களும் தப்பித்து சைப்ரஸ் ஓடிச்சென்றார்கள். மீதியிருந்த ஐரோப்பியர்கள் கலீலின் படையால் பிடித்துக் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவ வெறியாளர்களிடமிருந்து அக்ரியைக் கைப்பற்ற முஸ்லீம்களுக்கு 100 ஆண்டுகள் ஆயிற்று. பெருமகிழ்ச்சி அடைந்த அரபுகள் இனி கிறிஸ்தவ சிலுவைப்படைகள் முஸ்லீம் பிரதேசத்தில் நுழைந்து கொடுமைகள் செய்யக்கூடாது என்று இறைவனைப் பிரார்த்தித்தார்கள். அது அடுத்த சில ஆண்டுகளுக்கு பதிலாய் அமைந்தது. 74 ஆண்டுகளுக்குப் பிறகு, சைப்ரஸின் மன்னன் பீட்டர் 1365 ல் பத்தாவது கடைசி சிலுவைப்போரை ஏற்பாடு செய்தான். இது கிறிஸ்தவ அரபு நகரமான அலெக்ஸாண்டிரியா நகரத்தை எதிர்த்து கிளம்பியது. நகரின் எண்ணற்ற பலர் கொல்லப்பட்டார்கள். லத்தீன் வியாபாரிகளின் கடைகளும், வீடுகளும் பீட்டரின் படைகளால் சூறையாடப்பட்டது. இவர்களை எதிர்த்து அரபுகளே புரட்சி செய்து மன்னன் பீட்டரைக் கொன்றார்கள். 1395 ல் துருக்கிய முஸ்லீம்கள் கான்ஸ்டாண்டிநோபிளை நோக்கி படையெடுத்தார்கள். அப்போது பைஸாந்திய மன்னன் மானுவேல் இரண்டாம் பலாயிவோலோகஸ் ஐரோப்பியர்களை உதவிக்கு அழைத்தான். உடனே ஹங்கேரியின் மன்னன் சிஜிமுண்ட் 1396 ல் பத்னோறாவது சிலுவைப்போராக அறிவித்து கான்ஸ்டாண்டிநோபிள் மட்டுமல்லாமல், ஜெருசலத்தையும் மீட்பேன் என்று சூளுரைத்தான். இந்தச் சிலுவைப்படையில் பால்கன், ஃப்ரான்ஸ், பர்கண்டி, ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகியவற்றின் வீரர்கள் இணைந்தார்கள். இந்த பதினோறாவது சிலுவைப்படை நிகோபோலிசில் துருக்கிய சுல்தான் முதலாம் பயாஸிட்டால் நொறுக்கப்பட்டது.
பிறகு 48 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய கிறிஸ்தவ தீவிரவாதிகள் பால்கனில் துருக்கியர்களை எதிர்த்து வந்தார்கள். சுல்தான் இரண்டாம் முராதால் வெற்றி கொள்ளப்பட்டார்கள். பலம் கொண்ட துருக்கிய முஸ்லிம் படைகள் பைஸாந்திய பேரரசை அழித்து பால்கனில் பலம் பெற்றது. அங்கிருந்து முன்னேறி கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பியாவில் நுழைந்து இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துச் சென்றது. 1481 ல் தென் இத்தாலியைக் கைப்பற்றியது. ஐரோப்பியர்களின் முஸ்லீம்கள் மீதான தீவிரவாதம் 15, 16, 17 ம் நூற்றாண்டுகளில் பல ரூபங்களில் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் காலனி ஆதிக்கத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பரப்பினார்கள். 19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில் பலம் வாய்ந்த ஓட்டோமான் பேரரசை வீழ்த்தும் வழியைக் கண்டுபிடித்தார்கள். பலநூறாண்டுகளாகப் போராடி பிடிக்க முடியாமல் போன ஜெருசலத்தை 1948 ல் யூத இஸ்ரேல் என்னும் நாடை பாலஸ்தீனத்தில் உருவாக்கி அதை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நீரூற்றி வளர்த்து, ஹாஷிமிட்கள், சௌத்கள், அல் தானிகள், அல் கலீஃபா, பனியாஸ்களாகவும் இன்னும் பல பிரிவுகளாக ஒவ்வொரு முஸ்லீம்களுக்குமான ஜிஹாதை மறந்து தங்கள் குடும்பப் பெருமைக்காக மட்டுமே வாழும் இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் வைத்து இஸ்லாமியர்கள் மீது தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்தி விடுகின்றன. ஆனாலும் துருக்கிய ஆட்சியாளர்கள் ரோமப்பேரரசின் கான்ஸ்டாண்டிநோபிளை ‘இஸ்தான்புல்’ லாக மாற்றி பல மஸ்ஜித்களை கட்டி ஆணித்தரமாக இஸ்லாமிய நகரமாக மாற்றி வெற்றிகொடி நாட்டினார்கள். மேற்கத்திய கிறிஸ்தவ தீவிரவாதிகளால் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என்று சொல்லப்படுகின்ற சமீபத்திய ISIS என்ற அமைப்பு பரம எதிரியான இஸ்ரேலை எதிர்த்து ஒரு ஊசிப்பட்டாசு கூட வெடிக்கவில்லை. மதுரையில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் திருச்சிக்காரர்கள் தான் காரணம் என்று எந்த ஆதாரமும் காட்டாமல், வெறும் கூப்பாடு மட்டுமே போட்டுக்கொண்டு திருச்சியில் ஒவ்வொரு வீட்டின் சமையல்கட்டு, கழிவறைகள், படுக்கை அறைகள் என்று மதுரைக்காரர்கள் பல ஆண்டாக நினைத்த போதெல்லாம் வந்தால் திருச்சிகாரர்கள் சும்மா இருப்பார்களா? ஆனால், என்ன ஆச்சரியம் அரபு நாடுகள் சும்மா இருக்கின்றன. இவர்கள் என்னதான் சர்வதேச அரசியலை காரணம்காட்டினாலும் நபி (ஸல்) கள் நாயகத்தின் உண்மையான இஸ்லாமிய ஆட்சி எங்கே என்பதற்கு இவர்களிடம் பதிலில்லை. நேட்டோ படைகளுக்கு விமானதளம், துறைமுகம், உணவு, பெட்ரோல் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோபடை கப்பல்களுக்கு ஜப்பான் அரசு வருடத்திற்கு 5000 விலைமாதர்களை அனுப்புகிறார்கள். 1570 ல் ஓட்டோமான் துருக்கிகள் சைப்ரஸை வென்ற பிறகு, கிறிஸ்தவ சிலுவைப்படை போராளிகளுக்கு, பெரும் பின்னடைவாகிவிட்டது. 1571 ல் ஓட்டோமானின் கடற்படையை சிலுவைப்படைகள் லெபாண்டோவில் அழித்தாலும், மீண்டும் ஓராண்டில் கடற்படையை சிறப்பாக ஓட்டோமான்கள் அமைத்துக் கொண்டார்கள். கடந்த காலங்களில் சிலுவைப்படைகள் செய்த அட்டூழியத்தால் புராதன கிறிஸ்தவர்களான அரபு கிறிஸ்தவர்களிடத்தில் மிகப்பெரிய இழிவான எண்ணத்தையே விதைத்திருந்தார்கள்.

வியாழன், 30 ஜூலை, 2015

கதார் வரலாறு 1

கதார் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
கதார் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கற்காலம் என்று சொல்லப்படும் 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்போது பெர்ஷிய வளைகுடாவைச் சேர்ந்த இப்பகுதி நீரில்லா ஆற்றுப் பள்ளத்தாக்காய் இருந்தது. இதனால் இது குளிர்காலங்களில் வேட்டையாடியவர்கள் தங்கிய பகுதியாக இருந்தது. 1961 ல் இங்கு ஆய்வு மேற்கொண்ட டச்சு நாட்டுக்காரர்கள் 122 பழங்கற்கால இடங்களை அறிந்து 30,000 கற்களைக் கண்டுபிடித்தார்கள். இவ்விடங்கள் கடற்கரையை ஒட்டி இருந்தன. மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நான்கு வகையான மக்கள் கூட்டத்தினரின் கோடாரிகள், அம்பு முனைகள் மற்றும் பல கருவிகளைக் கண்டுபிடித்தார்கள். 8000 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஷிய வளைகுடாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, சௌதி அரேபியாவிலிருந்து நஜ்த் மற்றும் அல் ஹசா பழங்குடியினர் குடிபெயர்ந்து கடற்கரையிலிருந்து கதாரை தலைநகரமாக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்தார்கள். கதாரின் மிகப்பழைய குடியிருப்புகளாக நியோலிதிக் காலத்து ‘வாதி தெபாயன்’ வாசிகள் இருந்தார்கள். இவர்களின் கடல் சார்ந்த மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் மொசொபோடாமியாவின் உபைத் காலத்தைக் குறிக்கின்றன. உறுதியான ஆதாரமாக கி.மு. 6000 தின் இரண்டு அறைகளைக் கொண்ட வீடும், மீனின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 1980 ல் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பானை ஒன்றும் தென் மெசொபொடாமியாவின் உபைத் காலத்தையே குறிக்கிறது. கதாரின் வட கிழக்கில் அல் தஃஅசா குடியிருப்பு உபைத் கால பெரும் குடியிருப்பாகக் கருதப்படுகிறது. இங்கு 65 தீக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு இங்கிருந்து மீன் பிடித்து சமைத்ததற்கான ஆதாரங்களைத் தெரிவித்தன. 1977-78 லும் அல் கோர் என்ற இடத்தில் நடந்த ஆராய்ச்சியில் உபைதுகளின் மிகப்பெரிய கல்லறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. அதில் கண்டுபிடிக்கப்பட்ட கழுத்து மணிகள் தென்மேற்கு அரேபியாவின் நஜ்ரான் பகுதியைச் சேர்ந்ததாகும். பஹ்ரைனைச் சேர்ந்த தில்முன் சமூகத்தின் நெருங்கிய உறவு கதாரின் பாலைவனப் பகுதி மக்களிடையே காணப்படுகிறது. கி.மு. 2100 லிருந்து 1700 வரை கதார் பகுதியில் முத்துக் குளிப்பவர்கள் இருந்தார்கள். அப்போது பேரீச்சம் மரங்களும் பயிரிடப்பட்டன. அஸ்ஸைரிய மன்னன் எசர்ஹட்டான் வெற்றி பெற்ற ‘பாஸு’ தில்முன், கதார் பகுதியில் தான் இருந்தது. கி.பி. 5 ம் நூற்றாண்டில் சரித்திர ஆய்வாளர் ஹிராடோடஸ் வெளியிட்ட புத்தகத்தில் கதாரை கனானிட்ஸ் கடல் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
250 ல் பார்த்தியன்கள் பெர்ஷியன் வளைகுடாவை வென்றபின் கதாரின் பகுதியில் காவல்படையை அமைத்தார்கள். இதை அங்கு கிடைத்த பானைகளின் பகுதிகள் உறுதி செய்கின்றன. துகானின் வடக்குப் பகுதியில் ராஸ் அப்ரூக் பகுதியில் 140 ல் மீன் பிடிப்பதற்கான வீடுகள், வெளிநாட்டினர் தங்கியதற்கான அடையாளங்கள், மீன்களை உலர்த்தியதற்கான தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 224 ல் சஸ்ஸானியர்கள் இந்த பகுதியை வென்றபின், முத்துக்களுக்கும், பவளத்திற்குமான வாணிபத்திற்கு கதார் முதலிடத்தில் இருந்தது. சஸ்ஸானியர்களின் பானைகளும், கண்ணாடிப் பொருள்களும் வடமேற்கு தோஹாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கிறிஸ்தவ மதம் இங்கு பரவலாக இருந்தது. பல கிறிஸ்தவ மடங்களும் இருந்தன. அப்போது கதார் பகுதி “பெத் கத்ராயீ” என்று சைரியாக் மொழியில் அழைக்கப்பட்டது. அப்போது இப்போதிருக்கும் கதார் நாட்டுப்பகுதி மட்டும் இல்லாமல் பஹ்ரைன், தரூத் தீவு, அல் காட், அல் ஹசா ஆகியவை இணைந்து இருந்தன. 628 ல் கிழக்கு அரேபியாவின் ஆட்சியாளராக இருந்த முன்ஸிர் இப்ன் சவா அல் தமீமிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல் அலாஃஅ அல் ஹத்ரமி என்ற தூதுவரை அனுப்பி இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். உடனே முன்ஸிர் தானும் இஸ்லாமை ஏற்று, அங்கிருந்த அரபு பழங்குடியினரையும் ஏற்கச் சொன்னார். மர்வாப் பகுதியில் சிறிய 100 இஸ்லாமிய கால வீடுகள் இதை உறுதி செய்கின்றன. பின்னால் இஸ்லாமியர்களின் பெர்ஷியா மீதான படையெடுப்பால் சஸ்ஸானியர்களின் ஆட்சி இப்பகுதியில் முடிவுற்றது. ஆனாலும் இப்பகுதி முழுமையாக இஸ்லாத்தை தழுவவில்லை என்றும் சில தேவாலயங்கள் ஏழாம் நூற்றாண்டில் இருந்ததென்றும் கருதப்படுகிறது.
உமய்யாத்களின் ஆட்சியின் போது குதிரை மற்றும் ஒட்டகங்கள் இங்கு வளர்க்கப்பட்டன. 8 ம் நூற்றாண்டில் இவற்றுடன் முத்துக்குளிப்பிலும் கதார் சிறந்து விளங்கியது. கதாரின் அல் குவைய்ர் பகுதியில் பிறந்த ஷியா பிரிவு கரீஜிய தளபதி கதாரி இப்ன் அல் ஃபுஜாஃஅ என்பவர் ‘அஸாரிகா’ என்ற அமைப்பின் மூலம் இங்கிருந்து 10 ஆண்டுகள் பல போர்களைப் புரிந்தார். 688-89 ல் நாணயங்களையும் வெளியிட்டிருந்தார். உமய்யாத் கலீஃபா மத மற்றும் அரசியல் மாற்றங்களுக்காக பல நடவடிக்கைகள் எடுத்த போது கதார் மற்றும் பஹரைன் பகுதிகள் முக்கிய இடமாக இருந்து இப்ன் அல் ஃபுஜாஃஅ அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக உமய்யாத்களை எதிர்க்க பயன்பட்டது. 750 ல் உமய்யாத்களின் ஆட்சி இப்பகுதியில் நீக்கப்பட்டு அப்பாஸிட்கள் ஆட்சிக்கு வந்தனர். இரு மசூதிகள் கட்டப்பட்டு, மர்வாப் பகுதி பல வகைகளிலும் முன்னேற்றம் கண்டது. இங்கிருந்த பழைய கோட்டை தீயில் நாசமடைய புதிய கோட்டைக் கட்டப்பட்டது. இவர்களின் காலத்தில் பஸ்ராவிலிருந்து இந்தியா, சீனா சென்ற கப்பல்கள் கதாரில் நின்று சென்றன. 9 ம் நூற்றாண்டுகளில் கதார் பகுதி நல்ல வளம் பெற்று செல்வச் செழிப்பில் இருந்தன. 868 ல் முஹம்மது இப்ன் அலி என்பவர் அப்பாஸிய ஆட்சிக்கு எதிராக பஹ்ரைன், கதார் மக்களைத் திரட்டி புரட்சியில் ஈடுபட்டு தோற்றுப்போய் பஸ்ராவுக்குச் சென்றார். 899 ல் ஷியா பிரிவு கர்மாஷியனின் இஸ்மாயிலி கூட்டம் இங்கிருந்து புனித பயணமாக மக்கா செல்லும் யாத்ரீகர்களைத் தாக்கினார்கள். 906 ல் பதுங்கியிருந்து யாத்ரீகர்களின் வாகனங்களைத் தாக்கி 20,000 பேரைக் கொலை செய்தார்கள். கதாரிகள் கட்டம்போட்ட மேலாடை நெய்வதில் பிரசித்தி பெற்றவர்கள் என்று 13 ம் நூற்றாண்டின் இஸ்லாமிய போதகர் யகுத் அல் ஹமாவி குறிப்பிட்டுள்ளார். 1320 ல் ஓர்முஸ்களின் ஆட்சியின் போது கதாரின் முத்து வாணிபம் நல்ல பொருளாதாரத்தை ஈட்டித்தந்தது. 1521 ல் போர்ச்சுகீசியர்கள் கதார் பகுதியைக் கைப்பற்றி அரேபிய கடலோரங்களில் பல கோட்டைகளைக் கட்டினார்கள். ஆனால் போர்ச்சுகீசியர்களின் அடையாளங்கள் கதாரில் இல்லை. 1550 ல் அல் ஹசா பகுதி மக்கள் தாங்களாகவே ஓட்டோமானின் கீழ் சென்றார்கள். அவ்வப்போது ஓட்டோமான்களின் இராணுவம் இந்த பகுதியில் நடமாடியது. 1670 ல் பனி காலித் பழங்குடியினர் ஓட்டோமான்களின் நடமாட்டத்தை விரட்டினார்கள். 
அப்போதிருந்து கதார் பனி காலித்களின் அதிகாரத்தில் இருந்தது. இதற்கிடையில் குவைத்திலிருந்து கதாரின் ஸுபராஹ் பகுதிக்கு அல் ஜலாஹ்மா மற்றும் அல் கலீஃபா பழங்குடிக் கூட்டத்தினர்கள் குடிபெயர்ந்தனர். அந்த நேரத்தில் பனி காலீதின் தூரத்து உறவினர் ஒருவர் அதிக பலமில்லாமல் ஸுபாராஹ் பகுதியை நிர்வகித்து வந்தார். அதேபோல் 1777 ல் பெர்ஷியர்கள் பஸ்ரா பகுதியைக் கைப்பற்றி இருந்ததால் அங்கிருந்த பல வணிகர்களும், குடும்பங்களும், குவைத்திலிருந்து மேலும் சில குடும்பங்களும் ஸுபாராஹ்வுக்கு குடிபெயர்ந்தார்கள். இதனால் அப்பகுதி செழிப்புற்று முத்து வாணிபமும் பெருகியது. 

கதார் வரலாறு 2

முடிவாக அல் கலீஃபா குடும்பத்தினர் கதாரையும், பஹ்ரைனையும் தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பற்ற, பனி காலித் குடும்பத்தினர் அல் ஹசா பகுதியை 1795 ல் கைப்பற்றினார்கள். அல் ஜலாஹ்மா குடும்பத்தினர் உதுப் குடும்பத்தின் உறவை விலக்கிக் கொண்டு 1783 ல் பஹ்ரைனை தங்களுக்காக இணைத்துக் கொண்டு ஸுபாராஹ் பகுதியை உதுபுக்கு விட்டுக் கொடுத்தார்கள். இதனால் அல் கலீஃபா குடும்பத்திற்கு பஹ்ரைனில் உரிமை இல்லாமல் போனது. அவர்கள் தங்களை ஸுபராஹ்விலிருந்து மனாமா என்ற பகுதிக்கு மாறினார்கள். அங்கிருந்து வஹ்ஹாபிகளுக்கு கப்பம் செலுத்தினார்கள். கதார் பல ஷெய்க் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ரஹ்மாஹ் இப்ன் ஜாபிர் அல் ஜலாஹிமாஹ் தலைமைக்கு வந்தது. 1790 ஸுபாராஹ் வணிகர்களுக்கு வரியில்லாத சிறந்த இடமாக இருந்து செழிப்பாக இருந்தது. 1795 ல் வஹ்ஹாபிகள் கதாரின் அல் ஜலாஹ்மாஹ் பழங்குடியினருடன் கூட்டு வைத்து, கிழக்கில் ஒமானிகளையும், அல் கலீஃபாக்களையும் எதிர்த்தார்கள். மஸ்கட்டின் ஆட்சியாளர் சைத் பின் சுல்தான் பஹ்ரைன் மற்றும் ஸுபராஹ்விலிருந்த வஹ்ஹாபிகளை எதிர்த்து ஸுபாராஹ் கோட்டையைத் தீவைத்துக் கொளுத்தி அல் கலீஃபாக்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனியின் வாணிபத்திற்காக பெர்ஷிய வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் மேற்கொண்ட ‘ஒப்பந்தய பகுதிகளில்’ கதார் கடல்பகுதியும் ஒன்று. அதில் கதாரின் அல் ஹுவைய்லா, ஃபுவைய்ரித், அல் பித்தா, தோஹா ஆகியவையும் அடங்கும். இதில் தோஹா நல்ல வளர்ச்சி கண்டது. இப்பகுதியில் பழங்குடியினர், குடிபெயர்ந்த அரபுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அடிமைகளும் இருந்தார்கள். 1821 ல் தோஹா வாசிகள் கடல்கொள்ளையில் ஈடுபட்டதால், கிழக்கிந்திய கம்பெனி குண்டு வீசி தீக்கிரையாக்கியது. இதனால் 400 பேர் வரை நகரை விட்டு ஓடிப்போனார்கள். இதனால் 1828 ல் தோஹாவை அல் புயய்னியன் பழங்குடியினர் ஆட்சி செய்தார்கள். அல் புயய்னியன் பழங்குடியினன் ஒருவன் பஹ்ரைனில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக பஹ்ரைன் ஷெய்கால் சிறையிலடைக்கப்பட்டார். இதனால் அல் புயய்னியன் பழங்குடிகள் புரட்சியில் இறங்கினார்கள். இக்காரியத்தால் தூண்டப்பட்ட அல் கலீஃபா கூட்டத்தினர் அவர்களின் கோட்டையை அழித்து அவர்களை தோஹாவை விட்டு விரட்டினார்கள். இதனால் தோஹா நகரம் அல் கலீஃபாக்களின் ஆட்சிக்கு வந்தது.  
1833 ல் இப்பகுதியின் வஹ்ஹாபிகளைக் கண்காணிக்க, பஹ்ரைன் அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்கலீஃபா என்பவரை அரசு அதிகாரியாக குவைத்தின் கரையோரத்தில் நியமித்தது. அவர் பஹ்ரைனியின் அல் ஹுவைய்லா மக்களை குவைத்தின் ஆட்சியிலிருந்த அல் கலீஃபா குடும்பத்தினருக்கு எதிராக கலவரம் செய்ய வைத்தார். இதனால் இருவருக்கும் இடையில் மஸ்கட்டின் சுல்தானுடைய மகன் முன்பு ஒரு ஒப்பந்தம் 1835 ல் உருவானது. அதன்படி அல் ஹுவைய்லா மக்கள் தங்கள் இருப்பிடங்களைத் தரைமட்டமாக்கி விட்டு பஹ்ரைனை விட்டு போக வேண்டும். அப்துல்லாஹ் பின் அஹ்மதின் உறவினன் ஒருவன் ஒப்பந்தத்ததை மீறி அல் குவாரி என்ற பழங்குடியினரைத் தூண்டிவிட்டு, வெளியேறிக் கொண்டிருந்த அல் ஹுவைய்லாஹ் மக்களை தாக்கச் சொன்னான். 1840 ல் பஹ்ரைன் ஷெய்க்குகளுக்கும், அல் ஹசாவின் எகிப்திய தளபதிக்கும் இடையே நடந்த பல சண்டைகளால் பாலைவன மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 1847 ல் பஹ்ரைனுக்கு எதிரியாகிப்போன அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல் கலீஃபா, கதாரிகளின் தலைவர் இசா பின் தாரிஃபுடன் இணைந்து பஹ்ரைனின் ஆட்சியாளர் முஹம்மது பின் கலீஃபாவை ‘ஃபுவௌய்ரித் போரில் சந்தித்தார். பின் கலீஃபாவுக்கு காதீஃப் மற்றும் அல் ஹசாவின் கவர்னர்களின் ஆதரவுடன் 500 வீரர்கள் இருந்தனர். கதாரி படைகளுக்கு பின் தாரிஃப் தலைமையில் 600 வீரர்கள் இருந்தனர். கடுமையான அந்தப்போரில் பின் தாரீஃபும், 80 வீரர்களும் கொல்லப்பட்டு கதாரி படைகள் தோற்றன. பின்னர் பஹ்ரைனின் பின் கலீஃபா, அல் பித்தா பகுதியை சேதப்படுத்தி அம்மக்களை பஹரைனுக்கு அனுப்பினார்.
19 ம் நூற்றாண்டில் ஸுபாராஹ் மற்றும் அல் ருவைஸ் பகுதிலிருந்த பனு தமீம் பழங்குடியினரின் ஒரு பிரிவான அல் தானிகள் கதாரின் தோஹா பகுதியில் தானி பின் முஹம்மது தலைமையில் ஒன்று கூடினார்கள். இவரின் மகன் முஹம்மது பின் தானி அக்கூட்டத்திற்கு தலைவராகி கதாரில் முதலில் ஆட்சியில் அமர்ந்தார். பல அரபு கூட்டுக் குடும்பமாக இருந்த அவர்களில் பனி அலி, பனி ஹமாத், பனி காலித் ஆகிய குடும்பங்கள் முக்கியமானவை. அப்போது இவர்கள் சுமார் 20,000 பேர் இருந்தார்கள். 1949, 1960, 1995 களில் ஆட்சிமாறும் போது இவர்களுக்குள் பெரும் துறத்தல்கள் இருந்தது. இந்த ஒவ்வொரு ஆட்சி துறத்தல்களிலும் அல் தானிகளின் கையே ஓங்கி இருந்தது. எமிரின் குடும்பட்த்தினரே பெரும் அதிகாரமுள்ள பதவிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். முஹம்மது பின் தானிக்குப் பிறகு, அவர் மூத்த   மகன் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது அல் தானி ஆட்சிக்கு வந்தார். 1825 ல் பிறந்த இவர் கதாரை நவீனப்படுத்தினார். முற்காலங்களில் தந்தையுடன் இருந்து பல அரசியல் அனுபவங்களைப் பெற்றார். அல் பித்தா பகுதியிலிருந்து கொண்டு 21 வயதில் தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து கதாரை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்தார். சுற்றுப்பகுதிகளை ஒன்றிணைத்து கதாரை தனி ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். பெர்ஷிய வளைகுடாவின் மீது கிழக்கிந்தியக் கம்பெனிக்காக பிரிட்டிஷும், போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கைத் தடுக்க ஓட்டோமான்களும் ஆர்வமாய் இருந்த போது இருவரையும் அரவணைத்துச் சென்றார்.    

கதார் வரலாறு 3

1867 ல் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது பஹ்ரைனால் கைது செய்யப்பட்டார். கதாரின் பிதோயின் பழங்குடியினர் ஒருவர் அத்துமீறி பஹ்ரைன் பகுதியில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிப்பது சம்பந்தமாக பேசச்சென்ற ஜாஸ்ஸிம் பின் முஹம்மதுவை பஹ்ரைன் ஆட்சியாளர் ஃபைசல் பின் துர்கி கைது செய்தார். இதனால் கதாருக்கும், பஹ்ரைனுக்கும் போர் மூள, பஹ்ரைனை அபுதாபி ஆதரித்தது. கதாரின் பல நகரங்கள் தாக்கப்பட்டன. இறுதியில் 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டு, 60 படகுகள் மூழ்கடிக்கப்பட்டு ஜாஸ்ஸிம் பின் முஹம்மது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓட்டோமான்கள் தங்கள் இராணுவ பாதுகாப்புப்படைக்கு அல் பித்தா கோட்டையை பயன்படுத்தினார்கள். ஓட்டோமான்கள் தனி நிர்வாகஸ்தர்களை நியமித்து ஸுபாராஹ், தோஹா, அல் வக்ராஹ் மற்றும் கவ்ர் அல் உதைத் ஆகிய பகுதிகளில் வரி வசூலிப்பதை ஜாஸ்ஸிம் பின் முஹம்மது முழுமூச்சாக எதிர்த்தார். இதனால் கதாரின் முன்ணனி அரசியல்வாதிகளையும், ஜாஸ்ஸிமின் இளைய சகோதரர் ஷெய்க் அஹ்மத் பின் முஹம்மது தானியையும் பிடித்துச் சென்றது. இதன் விளைவாக ஜாஸ்ஸிம் பின் முஹம்மது பல பழங்குடி இனத்தவர்களை இணைத்து கடுமையாக ஓட்டோமான் படைகளுடன் மோதி வெற்றி கண்டார். சகோதரரை விடுவித்து பதிலுக்கு ஓட்டோமான் படைகள் சுதந்திரமாக அவ்வப்போது சௌதியின் ஹாஃபூஃப் நகர் செல்ல அனுமதித்தார். கதார், ஓட்டோமான்களுடன் பல போர்கள் புரிந்திருந்தாலும் குறிப்பாக ‘அல் வாஜ்பாஹ் போர்’ பிரசித்தி பெற்றது. இப்போரினால் கதாரிகளுக்கு புகழும், ஆட்சி ஆள சுதந்திரமும் கிடைத்தது. கதாருக்கும், ஓட்டோமான்களுக்கும் இடையில் சமரசம் செய்ய பிரிட்டிஷ் முயன்று தோற்று போனது. முடிவில் கதாரின் ஆட்சியாளராக ஜாஸ்ஸிம் பின் முஹம்மதுவின் சகோதரர் ஷெய்க் அஹமது பின் முஹம்மதுவை வைத்துவிட்டு ஜாஸ்ஸிம் லுசைல் என்ற இடத்திற்கு சென்று அமைதியாக வசிக்க வேண்டும் என்று முடிவானது. அதன்படி கதாரின் ஆட்சியிலிருந்த சகோதரர் அஹ்மதை ஒரு சக படைவீரன் கொன்றுவிட மீண்டும் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். இவருக்கு 19 மகன்கள் இருந்தார்கள். 1913 ல் தோஹா நகரிலிருந்து 24 கி.மீ. தூரத்திலுள்ள லுசாலி என்ற கிராமத்தில் மரணமடைந்தார். இப்போது அப்பகுதி உம் சலால் நகராட்சியாக இருக்கிறது. 
இவருக்குப்பிறகு, மகன் ஷெய்க் முஹம்மது பின் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது அல் தானி 1913 ல் ஆட்சிக்கு வந்தார். 1881 ல் பிறந்த இவர் வளரும் பருவத்திலேயே பிற்கால ஆட்சிக்கு தந்தையால் பயிற்சி கொடுக்கப்பட்டார். உம் சலால் முஹம்மது பகுதிக்கு கவர்னராகவும் இருந்தார். இவருக்கு 12 மகன்களும், 6 மகள்களும் இருந்தனர். சில பிள்ளைகள் வைப்பாட்டிக்கு பிறந்ததாகக் கூறப்படுகிறது. 1971 ல் இவர் மரணமடைந்தார். ஷெய்க் முஹம்மது பின் ஜாஸ்ஸிம் ஆட்சியிலிருக்கும் போதே அவரை நீக்கிவிட்டு அடுத்து 1880 ல் பிறந்த அப்துல்லாஹ் பின் ஜாஸ்ஸிம் அல் தானி 1913 லிருந்து 1940 வரை ஆட்சிக்கு வந்தார். பிரிட்டனும், ஓட்டோமான்களும் இவரும் இவர் சந்ததியினரும் கதாரை ஆள உரிமை அளித்தார்கள். 1915 ல் ஓட்டோமானை கதாரைவிட்டு வலுக்கட்டாயமாக விலக்கி வைத்தார். 1916 ல் கதாரின் கடல்வழி பாதுகாப்புக்கும், அனைத்து முன்னேற்றத்துக்கும் ஆதரவளிப்பதின் பேரில் பிரிட்டிஷுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதேபோல் 1935 ல் வெளிநாட்டு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக பிரிட்டனுடன் மேலும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். 1927 ல் அல் பித்தாவுக்கு அருகில் அல் கூட் கோட்டை ஒன்றைக் கட்டி அதை காவல்நிலையமாக்கி திருடர்களிடமிருந்து பாதுகாத்தார். தலைநகர் தோஹாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் மதீனத் அஷ் ஷமல் நகராட்சியில் ஸுபாராஹ் நகரத்தில் ஸுபாராஹ் கோட்டை ஒன்றை 1938 ல் கட்டினார். இவரது ஆட்சியில் தான் எண்ணெய் வளத்திற்காக முதல் முறை ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்துல்லாஹ் பின் ஜாஸ்ஸிமின் முதல் மனைவியின் விவரம் தெரியவில்லை. இவரது இரண்டாவது மனைவி ஷெய்கா ஃபாத்திமா பின்த் இசா அல் தானியின் மூலம் இவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். 1957 ல் இவர் மரணமடைந்தார். 
இவருக்குப்பின் 1895 ல் பிறந்த மகன் அலி பின் அப்துல்லாஹ் அல் தானி 1949 ல் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் முதல்முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ஆட்சியாளர். இவர் இந்தியா, எகிப்து, ஐரோப்பா, லெபனான் மற்றும் லீவண்ட் பகுதிகளுக்குப் பயணம் செய்தார். கதாரின் அடிப்படை கட்டமைப்பிலும், கல்வியிலும் முன்னேற்றம் கண்டார். பல இஸ்லாமிய மதபோதகர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரது ஆட்சியில் தான் முதல் எண்ணெய்கப்பல் துறைமுக நகரமான மெஸ்ஸயீதிலிருந்து 1949 ல் ஏற்றுமதியாகி புறப்பட்டது. ஆண், பெண் பிள்ளைகளுக்கென தனி பள்ளிக்கூடங்களைத் திறந்தார். பல்கலைக்கழகம், மருத்துவமனைகளைக் கட்டினார். தோஹா சர்வதேச விமான நிலையத்தின் கட்டிடத்தையும் துவக்கினார். மேலும் எண்ணெய் வள வருமானத்தில் நல்ல சாலைகள், குடிநீர், மின்சாரவசதி மற்றும் துறைமுகங்களைக் கொண்டு வந்தார். பல துறைகளுக்கு அமைச்சகங்களைக் கொண்டு வந்து பங்குச்சந்தையும் தொடங்கினார். ரொனால்ட் கோட்ரனி என்ற வெளிநாட்டினரை வைத்து கதார் காவல்துறையும் துவக்கினார். அலி பின் அப்துல்லாஹ் 1950 ல் தனக்கு ஆலோசகராக பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸின் அதிகாரியாக இருந்த பில்லிப் ப்ளாண்ட் என்பவரை நியமித்துக் கொண்டார். இதுவரை வெளியிடப்படாமலே இருந்த பல இஸ்லாமிய வரலாறுகளை மதபோதகர்களை வைத்து வெளியிட்டார். எண்ணெய் தொழிலாளிகளிடமிருந்து திருப்தி இல்லாத நிலையில் பல எதிர்ப்புகள் கிளம்பின. அதை முன்னின்று சமாதானப்படுத்தினார். இவருக்கு 11 மகன்களும், 3 மகள்களும் இருந்தார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, லெபனானில் பார்பிர் மருத்துவமனையில் 1974 ல் மரணமடைந்தார். இவர் உடல் கதாருக்கு கொண்டு வரப்பட்டு அல் ரய்யான் நகராட்சியில் அடக்கம் செய்யப்பட்டது. 1960 ல் அலி பின் அப்துல்லாஹ்வுக்கு எதிராக கதாரிலும், 15 அரபு நாடுகளிலும் துண்டுப்பிரச்சாரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கதாரின் மக்கள் வறுமையிலும், நோயிலும் வாடிக்கொண்டிருக்க அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போவதாக சாடியிருந்தன. இதனால் ஆட்சியை 1960 ல் தன் மகன் ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் தானியிடம் ஒப்படைத்தார்.
ஷெய்க் அஹ்மத் பின் அலியின் ஆட்சியின் போதுதான் 1971 ல் பிரிட்டிஷாரிடமிருந்து கதார் சுதந்திரமடைந்தது. 1963 ல் தேசிய கூட்டமைப்பு, தொழிலாளர்கள் ஊர்வலம் ஒன்றை நடத்திய போது ஷெய்க் அஹ்மத் பின் அலி அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி சிலரைக் கொன்றார். இவர் நாட்டின் சில ஏழை விவசாயிகளுக்கு கடனுதவியும், சிலருக்கு நிலங்களையும் அளித்திருந்தாலும் இவர் மீது எதிர்ப்புகள் அதிகமிருந்தன. உண்மையில் ஷெய்க் அஹ்மத் பின் அலி ஆட்சியில் தான் கதார் பலதுறைகளில் முன்னேற்றம் கண்டது. இவரது ஆட்சியில் தான் உலகில் கடல்மேல் அமைந்த முதல் எண்ணெய்துறை இத் அல் ஷர்கி ஆகும். மிகப்பெரிய எண்ணெய்துறையான மைய்தான் மஹ்ஸாமும், புல் ஹன்னியன் எண்ணெய்துறையும் இவர் ஆட்சியில்தான் உருவானது. மூன்று மனைவிகளைத் திருமணம் செய்திருந்த இவர் மனைவியரில் ஒருவர் துபாயின் ஷெய்க் ராஷித் பின் ஸைத் அல் மக்தூம் அவர்களின் மகள் ஆவார். இவருக்கு 7 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஷெய்க் கலீஃபா பின் ஹமாத் அல் தானியை கதாரின் துணை ஆட்சியாளராக நியமித்திருந்தார். 1972 பிப்ரவரியில் ஷெய்க் அஹ்மத் பின் அலி வேட்டைக்காக ஈரான் பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு, கலீஃபா பின் ஹமத் அல் தானி ஆட்சிக்கு வந்தார். ஷெய்க் அஹ்மத் பின் அலி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அடைக்கலமாக இருந்தார்.
கலீஃபா பின் ஹமத் 1957 ல் கதாரின் கல்வித்துறை மந்திரியாக இருந்தார். 1960 ல் பிரதம மந்திரியாகவும், பொருளாதார மந்திரியாகவும் இருந்த இவர் இறுதியாக துணை ஆட்சியாளராக இருந்தார். இவர் ஆட்சிக்கு வந்ததை கடுமையான ஆட்சியாளரை தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர் என்று பேசப்பட்டார். முதல் வேலையாக அரசை மறுசீரமைத்தார். அரச குடும்பத்தின் செலவுகளைக் குறைத்தார். வெளியுறவுத்துறைக்கு ஒரு மந்திரியை அமைத்து தினசரி நடவடிக்கைகளை அறிந்து கொண்டார். பலதுறைகளுக்கு மந்திரிகளை அமைத்து, வெளிநாடுகளிலும் தூதர் அலுவலகங்களை ஏற்படுத்தினார். எண்ணெய் வளம் அதிகரித்ததால் 1985 ல் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் ஓஹாயோவுடன் ஒரு ஒப்பந்தமும், 1986 ல் அமோகோ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். உலகின் மிகப்பெரிய 250 ட்ரில்லியன் க்யூபிக் கொள்ளளவு உற்பத்தி கொண்ட ஏரிவாயு தொழிற்சாலையும், 500 ட்ரில்லியன் க்யூபிக் சேமிப்புத்திறன் கொண்ட எரிவாயு கிடங்கும் அமைத்தார். மேலும் கதாரின் பல இடங்களில் எண்ணெய் வளம் அறிய உத்தரவிட்டார். கலீஃபா பின் ஹமத் 1995 ல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருந்தபோது, அவர் மகன் ஹமாத் பின் கலீஃபாவால் ஆட்சி பறிக்கப்பட்டார். பின்னர் ஃப்ரான்சில் குடியிருந்த கலீஃபா பின் ஹமத் 2004 ல் கதார் திரும்பினார். இவருக்கு 4 மனைவிகள், 5 மகன்கள், 10 மகள்கள் இருந்தனர்.

கதார் வரலாறு 4

இரத்தம் சிந்தாமல் ஷெய்க் ஹமாத் பின் கலீஃபா அல் தானி 1995 ல் ஆட்சிக்கு வந்தார். கதாரின் எரிவாயு தயாரிப்பு 77 மில்லியன் டன்னுக்கு இருந்தது. உலகின் பணக்கார நாடாக இருந்து ஒரு தனிநபர் வருமானம் ஆண்டுக்கு $86,440 இருந்தது. இவர் பிறந்தவுடனே இவர் தாயார் இறந்து போனதால், மாமன் ஓருவரிடம் வளர்ந்தார். பிரிட்டிஷ் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்று 1971 ல் லெப்டினண்ட் கர்னல் ஆனவர். கதாரின் நடமாடும் படைக்கு தளபதி ஆனார். இவருடைய படை பின்னாளில் ‘ஹமாத் படை’ என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1972 ல் இராணுவத்தில் ஜெனரலாகி, தலைவராகவும் ஆனார். 1977 ல் இராணுவ மந்திரியாக இருந்தார். 1977 லிருந்து 1995 வரை வெளிப்படையாக கதாரின் ஆட்சி வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
கதாரின் எண்ணெய் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். அதிகாரப்பங்கீட்டில் தந்தையுடன் குழப்பம்வர, அவர் ஜெனீவா சென்றிருந்த நேரம் அவரின் வெளிநாட்டு வங்கிக்கணக்கை முடக்கி கதாரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இஸ்லாமிய மன்னர்களின் சரித்திரத்தை உடைத்து வெளிப்படையாக இவர் மனைவி ஷெய்கா மோஸா பின்த் நாஸர் அல் மிஸ்னெத் வழக்கறிஞராகவும், கதாரின் கல்வி மற்றும் குழந்தைகள் நலத்துறையையும் பார்த்துக்கொண்டார். ஹமாத் பின் கலீஃபா தானே ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், நீச்சல் வீரராகவும் இருந்து, கதாரின் தடகளப் பிரிவை உலகளவில் பலப்படுத்தினார். ஒலிம்பிக் பதக்கம், 15 வது ஆசிய விளையாட்டு பதக்கம் போன்றவற்றை கதார் அணி வெற்றி பெறச் செய்தார். மேலும் பல சாம்பியன் பட்டங்களை கதார் விளையாட்டில் பெறுவதற்கு துணை புரிந்தார். அல் ஜஸீரா என்னும் அரபு செய்தி தொலைக்காட்சிக்கு இவர்தான் நிதி வழங்குவதாக செய்தி பரவியது. செய்திதொடர்பு தலைவர் ஹமாத் பின் தாமர் அல் தானிக்கு இவர் நெருங்கிய உறவினராக இருந்த்தால் $137 மில்லியன்கள் இவரிடம் பெற்றதாகவும் செய்தி. பின் லாடனின் பழைய பேட்டிகளை ஒளிபரப்பி அமெரிக்காவின் விசாரணைக்கு தடையாக இருப்பதாகக் கூறி அமெரிக்காவின் காலின் பாவெல் இச்செய்தி நிறுவனத்தை மூடச்சொல்லி வற்புறுத்தினார். ஷெய்க் ஹமாத் இதை தனி நிறுவனமாக்கி தன் மகன் தமீமை அதற்கு தலைவராக்கினார். ‘ஒரு காலம் வரும் அப்போது இதன் பயணத்தின் புதிய பக்கங்கள் திறக்கும். புதிய தலைமுறைகள் பொறுப்பேற்பார்கள்’ என்றார்.
ஹமாத் பின் கலீஃபாவின் ஆட்சியில் மத்திய ஆசியாவிலேயே முதல்முறையாக (FIFA) சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டியை 2022 ல் கதாரில் நடத்த உரிமை பெற்றார். இவர் மற்றும் இவர் மனைவியின் ஈடுபாட்டால் பல தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களான கார்னிஜியே மெல்லான் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டௌன் பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் மற்றும் வீல் கார்னெல் மருத்துவக் கல்லூரி ஆகியவைகளை கதாரில் திறந்தார். 2005 ல் கதார் அருங்காட்சியகம் கழகம் என்று ஏற்படுத்தி ஐ.எம் பெய் என்பவரால் வடிவமைக்கப்பட்ட முயூசியம் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட் தோஹா என்று அருங்காட்சியகத்தைத் திறந்தார். இதனால் உலகில் சமகால கலைப்பொருட்களை அதிகம் வாங்கும் நாடாக கதார் அறியப்படுகிறது. இது 2012 ல் சீஸென்னின் “தி கார்ட் ப்ளேயரை” (ஃப்ரென்ச் ஓவியங்கள்) $ 250 மில்லியன்களுக்கு வாங்கியது. இதல்லாமல் திரைப்பட விருதுகள், புத்தகங்கள், திரைப்படங்கள் என்று பல கலைத்துறை விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. கதார் உலகின் பல முன்ணனி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. ஹமாத் பின் கலீஃபா 2012 ல் பாலஸ்தீனின் காஸா பகுதிக்கு சென்று ஹமாஸுக்கு $ 400 மில்லியன்கள் கொடுத்து மருத்துவமனை, அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக உதவி புரிந்தார். சிரியா மற்றும் லிபியாவின் உள்நாட்டுப் போராளிகளுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்தார். 2013 ல் ஆட்சியைத் தன் 33 வயது மகன் ஷெய்க் தமீமுக்கு வழங்கப்போவதாகச் சொன்னார். 2005 ல் அமெரிக்காவின் நியூ ஓர்லியன்சில் ஏற்பட்ட கத்ரினா புயலுக்கு $ 100 மில்லியன் கொடுத்தார். 2006 லெபனான் போரை முடிவுக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி புரிந்தார். வெளிநாட்டு இராணுவத்திற்காக அல் உதைத் ஏர்பேஸ் மற்றும் கேம்ப் அஸ் ஸய்லியாஹ் என்ற இரண்டு தளங்களைக் கொடுத்திருக்கிறார். கதார் பல தீவிரவாதக் குழுக்களுக்கு பொருளுதவி செய்வதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன. ஹமாத் பின் கலீஃபாவுக்கு முதல் மனைவி ஷெய்கா மரியம் பின்த் முஹம்மது மூலம் 11 மகன்கள், 13 மகள்களும், இரண்டாவது மனைவி ஷெய்கா மோஸாஹ் பின்த் நாசர் மூலம் 5 மகன்கள், 2 மகள்களும், மூன்றாவது மனைவி ஷெய்கா நூரா பின்த் காலித் மூலம் 4 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். ஹமாத் பின் கலீஃபா, அமெரிக்க உரிமையாளர் மால்கம் க்லேசரிடமிருந்து மான்செஸ்டர் கால்பந்தாட்ட அணியை வாங்குவதற்கு 1.65 பில்லியன் ஈரோக்கள் தர தயாராய் இருப்பதாக பத்திரிக்கை செய்தி வெளியானது. 2013 ல் ஹமாத் பின் கலீஃபா தன் மகன் ஷெய்க் தமீம் பின் ஹமாத் பின் கலீஃபா பின் அல் தானிக்கு ஆட்சியைக் கொடுத்தார்.
ஷெய்க் தமீம் பின் ஹமாத் 1980 ல் இரண்டாவது மனைவி மோஸாஹ் பின்த் நாசருக்குப் பிறந்தவர். பிரிட்டனின் ஷெர்பார்ன் மற்றும் ஹார்ரோ பள்ளிகளில் படித்து, சந்துர்ஸ்டின் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்றார். கதார் ஆயுதப்படைக்கு தலைவராக இருந்தார். லிபியாவின் மாம்மர் கடாபியை நீக்க லிபிய விடுதலைப்படைக்கு உதவினார். கதாரின் விளையாட்டுத்துறைக்கு அதிக ஆர்வமூட்டுபவராக இருக்கும் இவர் வெளிநாடுகளில் பில்லியன்களுக்கு மேற்பட்ட டாலர்களை முதலீடு செய்துள்ளார். 2015 மார்ச்சில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடுகள் செய்வதாக கூறியுள்ளார். ஷெய்க் தமீம் பின் ஹமாதின் முதல் மனைவி ஷெய்கா ஜவாஹிர் பின்த் ஹமாத் மூலம் இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும், இரண்டாவது மனைவி ஷெய்கா அனூத் பின்த் மன அல் ஹஜ்ரி மூலம் ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். பல பட்டங்களையும், பதவிகளையும் பெற்ற ஷெய்க் தமீம் பின் ஹமாத் தற்போதும் கதாரின் ஆட்சியாளராக இருக்கிறார்.    

புதன், 29 ஜூலை, 2015

ஈராக் வரலாறு 1

ஈராக் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
இப்போது இருக்கும் நவீன ஈராக் 1920 ல் வடிவமைக்கப்பட்டது. சரித்திர காலத்தில் பாபிலோனியாவாக இருந்தது. ஈராக் மத்தியில் மொசொபோடாமியாவின் கீழ் பகுதியும், குர்திஸ்தானில் மேல் மொசொபொடாமியாவையும், சிரிய மற்றும் அரேபிய பாலைவனப் பகுதியையும் கொண்டுள்ளது. 1957 ல் ரால்ஃப் சோலெச்கி என்பவர் கொலம்பியா பல்கலைக்கழக குழுவுடன் ஷனிடர் குகையில் நடத்திய ஆராய்ச்சியின் போது நியாண்டர்தால் மனித உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்தார். கீழ் மொசொபொடாமியாவின் உபைத் காலத்தில் சுமேரிய நாகரீகம் இங்கு இருந்திருக்கிறது. கி.மு. 1894 ல் அமோரிட் மன்னன் சுமுவாபும் பாபிலோனை தலைநகராக உருவாக்கி சுதந்திரமாக ஆண்டிருக்கிறார். மேல் மெசொபொடாமியாவை அஸ்ஸூரை தலைநகராக ஆக்கி அக்காடியன்கள் ஆண்டிருக்கிறார்கள். இந்த அஸ்ஸைரிய பேரரசு பாபிலோனியாவுக்கு மிகப்பெரிய வரலாறுகள் பக்கம் பக்கமாக இருக்கிறது. நாம் மேலோட்டமாகப் பார்ப்போம். 539 ல் மெசொபொடாமியா அக்காயிமெனிட் பெர்ஷியர்களால் சைப்ரஸ் தி கிரேட்டால் வெற்றி கொள்ளப்பட்டு இரண்டு நூற்றாண்டுகள் ஆளப்பட்டது. 331 ல் பெர்ஷியப் பேர்ரசு மாசிடோனியாவின் அலெக்ஸாண்டரால் வெற்றி கொள்ளப்பட்டு, செல்யூசிட் பேரரசாக ஆளப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் முதலாம் மித்ரிடேட்ஸ் என்பவரால் பார்த்தியன்கள் ஆட்சியாக ஆளப்பட்டது. இடையில் ரோம ட்ராஜனால் வெல்லப்பட்டு, உடனே பார்த்திய ஹத்ரியனால் வெல்லப்பட்டது. முதலாம் நூற்றாண்டில் ரோம சிரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு, மெசொபொடாமியா பகுதிகளில் கிறிஸ்துவம் வந்தது. ஆனாலும், நான்காம் நூற்றாண்டு வரை அஸ்ஸைரிய கடவுளான அஷூரின் கோவில்கள் அங்கிருந்தன. 7 ம் நூற்றாண்டில் இஸ்லாம் வரும் வரை சஸ்ஸானியர்கள் ஆண்டு வந்தார்கள். மேல் மெசொபொடாமியா டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் சூழப்பட்டிருந்ததால் அல் ஜஸீரா (அரபியில் தீவு) என்று அழைக்கப்பட்டது. கீழ் மெசொபொடாமியா ஈராக் (அரபியில் செங்குத்தான பகுதி) என்று அழைக்கப்பட்டது. 602 ல் பெர்ஷிய பேரரசின் அரபு லக்மிட் மன்னராக அல் ஹிராஹ் ஆட்சி செய்தார். அவரிடமிருந்து பழங்குடியினர்களின் ஆக்கிரமிப்பு மூலம் ஷாஹென்ஷா இரண்டாம் கோஸ்ரூ ஆட்சி செய்தார். 634 ல் 5000 முஸ்லீம் வீரர்களுடன் போரிட்ட காலீத் பின் அல் வலீத் (ரலி) என்ற இஸ்லாமிய தளபதியின் மூலம் அரபு இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. மீண்டும் 636 ல் சாஃத் இப்ன் அபி வக்காஸ் (ரலி) என்னும் தளபதியால் பெர்ஷியர்களின் தலைநகர் செஸிபோனும் ‘கதீஸிய்யாஹ்’ போரில் வெல்லப்பட்டது. 638 ல் இஸ்லாமியர்கள் மேலும் மேற்கு சஸ்ஸானிய பகுதிகளை (தற்போதைய ஈராக் உட்பட) வென்று சஸ்ஸானிய பேரரசர் மூன்றாம் யஸ்திகெர்டை வடக்கு பெர்ஷியாவை நோக்கி விரட்டினார்கள். அவர் 651 ல் கொல்லப்பட்டார்.
புதிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாதுகாப்பு நகரங்களாக புராதன பாபிலோனில் அல் குஃபாவையும், தெற்கில் பஸ்ராஹ்வையும் நிர்மாணித்தார்கள். வடக்கில் அஸ்ஸைரியன்களும், கிறிஸ்தவர்களும் பெருவாரியாக இருந்தார்கள். 8 ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சியாளராக இருந்த அப்பாஸிய கலீஃபாவால் பாக்தாத் நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இது உலகில் இஸ்லாமியர்களின் கலாச்சாரம், கலை, விஞ்ஞானம், கணிதம், பொது அறிவு, நுண்ணறிவு, மருத்துவம் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் முக்கிய நகரமாக விளங்கியது. 13 ம் நூற்றாண்டில் மங்கோலிய ஹுலகுகானால் சரணடையச் சொல்லி மறுத்ததால், ஆட்சியிலிருந்த கலீஃபா அல் முஸ்தஸீம் கொல்லப்பட்டு பாக்தாத் நகரம் பலத்த சேதமடைந்தது. இடையில் தைமூர் ஆட்சி செய்தார். 14 ம் நூற்றாண்டில் துருக்கி கருப்பின ஆடுகள் ஆட்சி செய்தார்கள். 1466 ல் அவர்களை துருக்கி வெள்ளையின ஆடுகள் வென்றார்கள். 16 ம் நூற்றாண்டில் மொத்த பகுதிகளும் ஓட்டோமானால் நியமிக்கப்பட்ட பாஷாக்களின் ஆட்சியின் கீழ் சென்றது. அன்றிலிருந்து இன்றுவரை பாக்தாத் நகரம் போர்களமாகவே இருந்து வருகிறது. உள்ளூர் போட்டி குழுக்களாலும், பழங்குடி இனத்தவர்களாலும், அருகாமை நாட்டு எதிரிகளாலும், சமீபத்தில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பாலும் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒருகாலத்தில் அறிவை அள்ளி வழங்கிய பாக்தாத் போர்ப்பதட்டத்திலேயே இருக்கிறது. 15 மற்றும் 16 ம் நூற்றாண்டுகளின் இடையில் சஃபாவிட் ஆட்சிவம்சம் ஈராக் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்தது. 16 மற்றும் 17 ம் நூற்றாண்டுகளில் ஜியார்ஜிய மம்லுக்குகள் ஓட்டோமானுக்கு கப்பம் செலுத்தும் வகையில் ஈராக்கை ஆண்டுவந்தார்கள். இடையில் ஜானிஸ்ஸரீஸ் என்னும் படைகளாலும், பழங்குடியினர்களாலும் ஏற்பட்ட கலவரங்களால் ஓட்டோமான்கள் மம்லுக்குகளை நீக்கிவிட்டு ஈராக்கை நேரடியாக தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.
முதலாம் உலகப்போரில் ஓட்டோமான் ஜெர்மனியின் மத்திய அதிகாரத்தை ஆதரித்தது. குட் போரில் பிரிட்டிஷ் படைகள் ஓட்டோமானைத் தோற்கடித்து 1817 ல் பாக்தாதைப் பிடித்தது. பிரிட்டிஷ் அங்கிருக்கும் பழங்குடிகள், குர்துக்கள், கிறிஸ்தவர்களை அரசியல் ரீதியாக பொருட்படுத்தாமல் ஹாஷிமிட்களை ஆட்சியில் வைத்தார்கள். ஒருபுறம் குர்துக்களும், ஷியாக்களும் பிரிட்டிஷின் போக்கிலிருந்து விடுதலை வேண்டி சண்டையிட்டார்கள். பிரிட்டிஷார் அஸ்ஸைரியன்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்ய வைத்தார்கள். ஈராக் முழுதும் தன்னலக் குழுக்களாக ஆனது. 1932 ல் ஈராக் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. சுதந்திர ஈராக் அரபு சுன்னிப்பிரிவு முஸ்லீம்கள் வசமானது. இதனால் அஸ்ஸைரியன்கள், யஸிதி மற்றும் ஷியா பிரிவினர்கள் இடைவிடாமல் கலவரத்தில் இறங்கினார்கள். ஈராக் ஆட்சியாளர்கள் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்கள். 1936 ல் பக்ர் சித்கி என்பவர் அரபு நாடுகளிலேயே முதல்முறையாகவும், ஈராக்கிலும் முதல்முறையாக இராணுவப்புரட்சியைச் செய்தார். ஹாஷிமிட்களின் மன்னராக யாசீன் அல் ஹாஷிமி ஈராக்கை ஆட்சி செய்தார். ஈராக்கின் இராணுவத் தளபதியாக பக்ர் சித்கி இருந்தார். 1936 ல் 11 ஈராக்கிய இராணுவ ஹெலிகாப்டர்கள் மன்னரை யாசீன் அல் ஹாஷிமை நீக்கிவிட்டு, பிரதம மந்திரி ஹிக்மத் சுலைமான் தலைமையில் மாற்று அரசு நிர்மாணிக்குமாறு நாடுமுழுதும் துண்டு பிரசுரங்களை வீசியது. மேலும், மக்களைத் தங்களுக்குக் கட்டுப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என்றும் எச்சரித்து தேசிய மறுசீரமைப்புப்படை தளபதி என்று பக்ர் சித்கின் கையொப்பம் இடப்பட்டிருந்தது.

ஈராக் வரலாறு 2

இராணுவ ஜெனெரல் தாஹா அல் ஹாஷிமி துருக்கிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தை பக்ர் சித்கி நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். தரைப்படை, வான்படையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். தாஹாவுக்கு ஈராக்குக்கு வராதீர்கள் என்று எச்சரிக்கை செய்தார். மன்னர் பிரிட்டிஷ் தூதர் ஸர். ஆர்சிபால்ட் கிளார்க் கெர்ரை ஆலோசனைக் கேட்க, அவர் அனைத்து மந்திரிகளையும் கூட்டி அவசர ஆலோசனை செய்யச் சொன்னார். அதன்படி மந்திரிகள் ஆலோசனை நடைபெற, பக்ர் சித்கி எச்சரிக்கும் வண்ணம் சில இடங்களில் குண்டுகளை வீசிவிட்டு படையுடன் அரண்மனையை நோக்கி வந்தார். நூரி அல் சாஃஇத் என்ற மந்திரி தவிர, அனைத்து மந்திரிகளும் பக்ர் சித்கின் சொல்படி ஹிக்மத் சுலைமானை ஆட்சியில் வைக்க ஒப்புக் கொண்டார்கள். பிரிட்டிஷ் தூதரின் ஆலோசனைப்படி  ஹிக்மத் சுலைமானை அழைக்க, அவர் பக்ர் சித்கியும், லதீஃப் நூர் என்பவரும் இராணுவ புரட்சிக்கான காரணத்தை விளக்கி எழுதிய கடிதத்துடன் அரண்மனைக்கு வந்தார். யாசீன் அல் ஹாஷிமி ராஜினாமா செய்தார். யாசீனால் இருமுறை பிரதம மந்திரியாகவும், அப்போது இராணுவ மந்திரியாகவும் இருந்த ஜாஃபர் அல் அஸ்கரி பக்ர் சித்கின் உத்தரவுப்படி அரண்மனைக்கு வந்து கொண்டிருக்கும் இரண்டு பட்டாலியன் படைகளை தனக்குக் கீழ்படியும் அதிகாரிகள் மூலம் திசை திருப்பினார். இதுபோல் ஏதும் நடக்கும் என்று எண்ணியிருந்த பக்ர் சித்கி விமானபடை வீரர் அக்ரம் முஸ்தபாவையும், இஸ்மாயில் தோஹல்லா என்பவரையும் அனுப்பி ஜாஃபர் அல் அஸ்கரியைக் கொன்றார். ஜாஃபரின் கொலை பழைய ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாகக் கருதப்பட்டது. நூரி அல் சாஃஇத் கெய்ரோவுக்கும், யாசீன் அல் ஹாஷிமி இஸ்தான்புல்லுக்கும் நாடு கடத்தப்பட்டார்கள். பக்ர் சித்கி பாக்தாத நகர வீதிகளில் இராணுவ அணிவகுப்பை நடத்தி ஈராக்கில் புதிய ஆட்சியைப் பறைசாற்றினார். 1937 ல் துருக்கிக்குச் செல்லும் வழியில் மோசூலில் விமானப்படைத் தோட்டத்தில் பக்ர் சித்ரி கொல்லப்பட்டார். உடனிருந்த இராணுவ அதிகாரி முஹம்மது அலி ஜவாதும் கொல்லப்பட்டார். சுலைமானின் பத்து மாத ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் ராஜினாமா செய்ய ஜமீல் அல் மிட்ஃபாய் ஆட்சிக்கு வந்தார். 1941 ல் இரண்டாம் உலகப்போரின்போது, கோல்டன் ஸ்கொயர் என்னும் அதிகாரிகளால் அப்த் அல் லாஹ் என்பவர் பதவி நீக்கப்பட்டார். அவர் நாஜிகளைச் சார்ந்திருந்ததால் இந்த நடவடிக்கையை ராஷித் அலி என்பவர் எடுத்தார். 1945 ஈராக் ஐ.நா. சபையில் உறுபினராகி அராப் லீகிலும் இணைந்தது. அதேசமயத்தில் குர்திஷ் தலைவர் முஸ்தபா பர்ஸானி என்பவர் ஈராக்கின் மத்திய ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தார். புரட்சி தோல்வி அடைந்ததால் அவரும் ஆதரவாளர்களும் சோவியத் யூனியன் தப்பிச் சென்றார்கள். 1948 ல் ஈராக் பிரிட்டிஷுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து அல் வத்பாஹ் கிளர்ச்சி உண்டானது.
1958 ல் ஜோர்டானின் மன்னர் ஹுஸ்ஸெய்ன் மற்றும் அப்த் அல் லாஹ் ஆகியோர் ஹாஷிமிட்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டி எகிப்து சிரியா கூட்டுடன் இணைய வேண்டுமென்று ஈராக்கை அழைத்தனர். பிரதம மந்திரி நூரி அஸ் ஸைத், குவைத்தையும் அழைத்தார். இக்கூட்டுக்கு பிரிட்டிஷ் எதிர்ப்பு தெரிவித்தது. எகிப்து நாசரின் கொள்கைகளால் கவரப்பட்ட பிரிகேடியர் அப்த் அல் கறீம் காசிம், கர்னல் அப்துல் சலாம் ஆரிஃப் ஆகியோர் ஈராக்கின் ஹாஷிமிட் ஆட்சியை 1958 ல் நீக்கினார்கள். பின் ஜோர்டானின் கோரிக்கையை நிராகரித்து ஈராக்கை சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அப்த் அல் கறீம் காசிம் சோவியத் யூனியனிலிருந்த முஸ்தபா பர்ஸானியை ஈராக்குக்கு வரவழைத்து குர்திஷ்கள் அதிகமுள்ள வடக்குப்பகுதியில் அரசுப்படைகளுக்கு அவரை அதிகாரமுள்ளவராக ஆக்கி முதலாம் குர்திஷ் ஈராக் போருக்கு வழிவகுத்தார்.
காசீம் படுகொலைக்குப்பிறகு, பாத் கட்சியின் சார்பில் பிரதம மந்திரியாகவும், ஜெனரலாகவும் அஹ்மத் ஹசன் அல் பாக்ர் மற்றும் கர்னல் அப்துல் சலாம் ஆரீஃப் ஆகியோர் ஈராக்கின் ஆட்சியை 1963 ல் கைப்பற்றினார்கள். அதேகாலகட்டத்தில் நான்கு மாதங்களுக்குப்பிறகு, சிரியாவிலும் பாத் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற, சிரியா, ஈராக்குக்கு குர்துக்களை எதிர்க்க விமானம், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், 6000 இராணுவ வீரர்களைத் தந்து உதவியது. பல மாதங்களுக்குப்பிறகு, அப்தல் சலாம் முஹம்மது என்பவர் கடும் முயற்சியில் பாத் கட்சியின் ஆட்சியை விரட்டினார். 1966 ல் அதிபர் அப்துல் சலாம் ஆரீஃப் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு, அவர் சகோதரர் ஜெனெரல் அப்துல் ரஹ்மான் ஆரீஃப் ஆட்சிக்கு வந்தார். இவர் குர்துக்களின் புரட்சியை முறியடிக்க பெரும்பாடுபட்டார். 1967 ல் முஸ்தபா பர்ஸானி ஆறுநாள் படையெடுப்பாக ரவாண்டுஸுக்கு அருகில் மவுண்ட் ஹண்ட்ரின் போரில் ஆளும் பாத் கட்சிக்கு பெரும் சேதத்தை விளைவித்து 1968 ல் அஹ்மது ஹசன் அல் பக்ர் தலைமையில் ஆட்சியைப் பிடித்தார். பாத் கட்சி மக்களிடையே குர்திஷ்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. சோவியத் யூனியன் ஈராக் மக்களை குர்திஷ்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. பாத்துக்கும், குர்திஷ்களுக்குமான வேறுபாட்டில் ஏறக்குறைய 100,000 பேர் காயமடைந்தார்கள். முதலாம் குர்திஷ் போரின்போதே ஆளும் கட்சிக்கும், குர்திஷ்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தமானது. அதன்படி, ஆட்சியில் குர்திஷ்களுக்கும் அதிகாரமுள்ள பதவிகள் கொடுக்கப்பட்டன. 1972 ல் ஈராக் அரசு சோவியத் யூனியனுடன் நெருங்கிய உறவு கொண்டு அரபுலகை விட்டு விலகியது போல் தோன்றியது. குர்திஷ்கள் அருகாமை ஈரானுடன் இராணுவத் தொடர்பு வைத்திருந்தார்கள். 1974 ல் மீண்டும் இரண்டாவது குர்திஷ் ஈராக் போர் நடந்தது. 1979 ல் அதிபர் அஹமது ஹசன் அல் பக்ர் சதாம் ஹுசெய்ன் (இவரைப் பற்றி பின்னால் பார்ப்போம்) என்பவரால் கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். சதாம் ஹுசெய்ன் அதிபராகவும், ரெவல்யுஷனரி கமாண்ட் கவுன்சிலுக்கு சேர்மனாகவும் பதவியேற்றார். 1980 லிருந்து எட்டு ஆண்டுகள் எல்லைகளுக்காகவும், குர்திஷ் ஆதரவுக்காகவும் ஈரானுடன் சதாம் ஹுசெய்ன் போர் தொடுத்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்தது. இறுதியில் ஐ.நாவின் தலையீட்டின் பேரில் அவரவர் எல்லைகளை வகுத்துக்கொண்டு, போரை நிறுத்திக் கொண்டார்கள். ஈரான் ஈராக் போர் இருதரப்பிலும் ஐந்து லட்சம் இராணுவத்தினரும், குடிமக்களும் இறந்து போக, பல லட்சம் பேர் காயமடைய பெரும் பொருளாதார வீழ்ச்சியுடன் முடிந்தது. 1990 ல் தனது எண்ணெய் கிணறுகளிலிருந்து குவைத் அனுமதி இல்லாமல் மில்லியன் கணக்கான காலன்கள் எண்ணெய் திருடிவிட்டது என்று குவைத் மீது ஈராக் ஆக்கிரமிப்பு செய்தது. உடனடியாக குவைத்திலிருந்து வெளியேற ஐ.நா அறிவுறுத்தியும் ஈராக் படைகள் வெளியேறாததால், அமெரிக்காவுடன் பல நாடுகள் ஒன்று சேர்ந்து கூட்டுப்படைகளுடன் ‘டெசெர்ட் ஸ்டார்ம்’ என்னும் தாக்குதலை ஈராக் படைகள் மீது நடத்தி ஏறக்குறைய 30,000 இராணுவ வீரர்களையும், பல ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தார்கள். 1991 ல் குர்திஷ்கள் அதிகமுள்ள வடக்கு ஈராக்கில் ஷியா பிரிவினர் புரட்சியில் இறங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதிபர் சதாம் ஹுசெய்னைக் கொல்லவும் முயற்சித்தார்கள்.

ஈராக் வரலாறு 3

குவைத் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கா ஈராக் மீது உலகப் பொருளாதாரத்தடை விதித்தது. இதனால் ஈராக் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்து வறுமையுடனும், நோய்களுடனும் மக்கள் அவதிப்பட்டனர். இதனால் தென், மத்திய ஈராக்கில் பலர் இறந்து போனார்கள். 1996 ல் ஐ.நா. சபை ‘எண்ணெய்காக உணவு’ என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தடையைத் தளர்த்தியது. இதன்பின் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்கா, ஈராக் அதிபயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, சதாம் ஹுசெய்னை தூக்கிலிடும்வரை நடத்திய நாடகத்தை உலகமே அறியும். கண் துடைப்புக்காக அதிபயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிக்க ரிச்சர்ட் பட்லர் தலைமையில் அனுப்பப்பட்ட குழு, ஈராக் ஒத்துழைக்கவில்லை என்ற முடிவை ஐ.நாவுக்கு தெரியப்படுத்தியது. பின்னால் வந்த பெண்பித்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஈராக்கின் இராணுவ, அரசு நிலைகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தினார். 9/11 அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின் சௌதியைச் சேர்ந்த ஒசாமா பின் லாடன் என்ற கோடீஸ்வரர் தான் காரணம் என்று அல்வாவில் இனிப்பு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது போல் அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிக்க, அமெரிக்க வெளியுறவுத்துறைச் சட்டப்படி, ஈராக்கின் பாத் கட்சியை ஆட்சியைவிட்டு விலக்க அமெரிக்கா முடிவு செய்தது. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்ற அந்நாட்டு மக்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால், உலக அதிசயமாக அமெரிக்கா 99% சதவீத வாக்குகளை செனெட் சபையில் (அதுவும் தன் அரசாங்கத்தில் பெற்று) பெற்று ஈராக் ஆட்சியை விரட்ட அனுமதி பெற்றது. கண்டம் வேறு, நாடு வேறு, இனம் வேறு, மொழி வேறு எங்கேயோ இருக்கும் அமெரிக்கா, ஈராக்கின் ஆட்சியை நீக்க தீர்மானம் போட்டது. ஈராக்கைச் சுற்றியுள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளும் (நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, உண்மை ஜிஹாதை மறந்து பாழாப்போன தனது பழங்குடி இனங்களே ஆள வேண்டும் என்ற குடும்ப பெருமைக்காகவே ஆளும் நாடுகள் வேடிக்கை மட்டும் பார்த்தன.) தள்ளி இருக்கும் விளக்கை தானே அணைக்கிறார்கள் நமக்கென்ன என்று இருந்துவிட்டார்கள். அமெரிக்க அதிபர் ஈராக் ஐ.நாவின் சொல்லுக்கு மதிப்பளிக்கவில்லை என்று கூப்பாடு போட்டு, இங்கிலாந்துடன் படை சேர்ந்து ஈராக்கை ஆக்கிரமித்தது. சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கூட்டுப்படைகளுக்கு விமானதளம், துறைமுகம், எரிபொருள், உணவு ஆகியவற்றைக் கொடுத்து தங்கள் நன்றியை தெரியப்படுத்திக் கொண்டன. இதில் ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்கும் திட்டமும் இருந்ததாக இன்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். 2003 ல் சதாம் ஹுசெய்ன் பதுங்கு குழியில் மயக்க மருந்து பீய்ச்சப்பட்டு பிடித்து கண்துடைப்பு வழக்காடி தூக்கிலிடப்பட்டார். இன்றுவரை ஈராக் என்னும் ஆதியில் மனிதன் சுமேரிய நாகரீகத்திலிருந்து வாழ்ந்ததாகவும், உலக கலாச்சாரத்திற்கும், அறிவுக்கும் வித்திட்ட அந்நாடு தினசரி பல உயிர்களை தீவிரவாத குண்டு வெடிப்பின் மூலம் இழந்து கொண்டிருக்கிறது. அல் காயிதா என்ற அமைப்பே இல்லை. ஆனால் இன்னும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, அமெரிக்கா முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்களின் உயிர்களை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. ஒருநாளைக்கு குறைந்தது 50 உயிர்கள் என்றால் 2003 லிருந்து 2015 வரை சராசரி எதிர்சண்டை இல்லாமல் 300,000 லட்சம் உயிர்களைக் கொன்றிருக்கிறார்கள். பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றால் அது தீவிரவாதிதான். இப்படி குண்டு வீசி திருமண கோஷ்டிகள், மத ஊர்வலங்கள், பள்ளிக்குழந்தைகள், ஈராக் காவலர்கள், அப்பாவிக் குழந்தைகள் என்று பல்லாயிரம் பேரைக் கொன்றிருக்கிறார்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போரில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பேர்களைக் கொன்ற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷே ஒரே ஒரு (சாரி - SORRY) மன்னியுங்கள் என்று ஆட்சியை விட்டுப் போகும்போது சொல்லிவிட்டார். இப்போது அமெரிக்க இராணுவம் ஏற்கனவே அச்சடித்து வைக்கப்பட்ட மன்னியுங்கள் என்ற அறிக்கையை ஒவ்வொரு தவறான குண்டுவீச்சின் போதும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஈராக்கில் இருக்கும் ஆட்சி மக்களின் ஆட்சியல்ல அமெரிக்காவால் வலுக்கட்டாயமாக ஈராக் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்சி.
மக்கா நகரின் ஷரீஃபாகவும், எமிராகவும் ஹுசெய்ன் பின் அலி என்பவர் இருந்தார். அவரின் மூன்றாவது மனைவி அதிலா கானுமுக்கு பிறந்தவர் இளவரசர் ஸெய்த். இவர்தான் ஈராக்கின் ஹாஷிமிட்கள் ஆட்சியாளராக இருந்தார். இவர் இஸ்தான்புல் கலடாஸராய் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பின்னர் கான்ஸ்டாண்டிநோபில், ஆக்ஸ்ஃபோர்டின் பல்லியோல் பல்கலைக்கழகங்களில் பயின்றார். 1916 லிருந்து 1919 வரை வடக்கு அரபு இராணுவத்தின் தளபதியாக இருந்தார். 1918 ல் மட்டுப்படுத்தப்பட்ட சிரியாவின் ஆட்சியாளராகவும் இருந்தார். ஃப்ரென்ச் அதிகாரத்தில் இருந்தபோது 1923 ல் ஈராக்கின் குதிரைப்படைக்கு கர்னலாக இருந்தார். 1930 ல் ஈராக்கின் தூதராக பெர்லின் மற்றும் அங்காராவிலும், 1950 ல் லண்டனிலும் இருந்தார். ஜெனெரல் முஹம்மது நஜீப் அர் ருபாஃஇ என்பவர் மன்னராட்சி கூடாது என்று சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஈராக்கின் மன்னர் இரண்டாம் ஃபைசலைக் கொன்றார். அதனால் 1958 ல் இளவரசர் ஸெய்த் ஈராக்கின் ஆட்சியாளரானார். இவர் கிரீசைச் சேர்ந்த இளவரசி ஃபஹ்ரெல்னிசா என்பவரை மணந்து அவர் மூலம் இளவரசர் ராஃஅத் பின் ஸெய்த் என்ற மகனைப் பெற்றார். இளவரசர் ஸெய்த் 1970 ல் மரணமடைந்து ஜோர்டான் அம்மானில் ரக்தான் அரண்மனையில் ராயல் மொசோலியமில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்குப்பிறகு, இளவரசர் ராஃஅத் பின் ஸெய்த், ஹாஷிமிட் மன்னராக ஈராக்கின் ஆட்சிக்கு வந்தார். தந்தை வழியில் ஜோர்டானின் மன்னர் தலாலுக்கும், ஈராக்கின் காஸிக்கும் மிக நெருங்கிய உறவினர் (தம்பி மகன்?). இவர் எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவிலும், 1960 ல் கேம்பிரிட்ஜின் கிறிஸ்ட் கல்லூரியில் இளங்கலையும், 1963 ல் முதிர்கலைப்பட்டமும் பெற்றார். இவர் ஜோர்டானின் மன்னர்கள் ஹுஸ்ஸெய்ன் மற்றும் இரண்டாம் அப்துல்லாஹ்வுக்கும் கூட நெருங்கிய உறவினர். இவர் ஸ்வீடனைச் சேர்ந்த மார்கரெடா இங்கா எலிசபெத் லிண்ட் என்ற மஜ்தா ராதை மணந்தார். அவர் மூலம் இவருக்கு இளவரசர்கள் ஸெய்த் பின் ராத், மிரித் பின் ராத், ஃபிராஸ் பின் ராத், ஃபைசல் பின் ராத் என்ற மூன்று மகன்களும், இளவரசி ஃபக்ரெல்னிசா பின்த் ராத் என்ற மகளும் பிறந்தார்கள்.
சதாம் ஹுசெய்ன் வரலாறு 
ஈராக்கின் திக்ரித் மாகாணத்தில் அல் பு நாசீர் என்ற பழங்குடியினத்தின் ஒரு பிரிவாக அல் பெகத் பழங்குடியினர் இருந்தார்கள். அவர்களில் சுபா துல்ஃபாஹ் அல் முஸ்ஸல்லத் என்ற பெண்மனிக்குப் பிறந்தவர் தான் சதாம் ஹுசெய்ன் (அனுகூலமானவர்). தன் தந்தை ஹுசெய்ன் ஆபித் அல் மாஜிதை அறியாதவர். தந்தையார் சதாம் ஹுசெய்ன் பிறப்பதற்கு முன்பே காணாமல் போய்விட்டார். 13 வயதான மூத்த சகோதரரும் புற்று நோயால் இறந்து போனார். சிறு குழந்தையாய் இருந்த சதாம் ஹுசெய்னை அவரது மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ் எடுத்துச் சென்று வளர்த்தார். யாருமில்லாத சதாம் ஹுசெய்னின் தாயார் மறுமணம் செய்து கொண்டார். அதன் மூலம் சதாமுக்கு மூன்று ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருந்தார்கள். மூன்று வயதானபோது திரும்பிவந்த சதாம் ஹுசெய்னை அவரது தாயாரின் கணவர் இப்ராஹீம் அல் ஹஸ்ஸன் கொடுமைப்படுத்தினார். இதனால் 10 வயதானபோது சதாம் ஹுசெய்ன் மீண்டும் பாக்தாத் நகரம் வந்து மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ்வுடன் சேர்ந்து கொண்டார். கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ் பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த ஆங்கிலோ ஈராக் போரில் அனுபவம் பெற்றவர். அவர் திக்ரித் நகரத்தைச் சேர்ந்தவராதலால் அங்கு அவருக்கு பல ஆலோசகர்களும், ஆதரவாளர்களும் இருந்தார்கள். மாமனின் ஆதரவில் பாக்தாதின் தேசிய பள்ளியில் படித்தார். பின் மூன்றாண்டுகள் சட்டம் படித்தார். 1957 ல் இருபது வயதானபோது பாத் புரட்சிக் கட்சியில் சேர்ந்தார். நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக இருந்த மன்னராட்சியை எதிர்த்து பல நாடுகளிலும் புரட்சி நடந்தது போல் ஈராக்கிலும் ஆட்சியாளரை எதிர்த்து புரட்சி நடந்தது. காலனி ஆதிக்கவாதம், நில முதலாளிகள், வாணிப செல்வந்தர்கள், பழங்குடியினத் தலைவர்கள் இவர்களே பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். எகிப்தின் கமால் அப்தெல் நாசர், சதாம் ஹுசெய்ன் போன்ற இளம் பாத் கட்சியினரை ஆதரித்தார். 1950- 60 ன் மத்தியில் எகிப்து நாசரின் புதிய எழுச்சியால் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மன்னராட்சி ஒழிந்தது. அப்போது சூயஸ் கால்வாய் பிரச்சினையும் உச்சத்திலிருந்ததால், பல நாடுகளில் பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ் ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போரிட்டனர்.
சதாம் ஹுசெய்ன் பாத் கட்சியில் சேர்ந்த சமயத்தில் அதன் இராணுவ அதிகாரி ஜெனெரல் அப்த் அல் கறீம் காசீம் என்பவர் இரண்டாம் ஃபைசலை ‘ஜூலை 14’ புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து விரட்டி இருந்தார். 16 உறுப்பினர்களைக் கொண்ட காசிமின் மந்திரிசபையில் 12 உறுப்பினர்கள் பாத் கட்சியைச் சேர்ந்தவர்கள். எகிப்து கமால் அப்தெல் நாசரின் ஐக்கிய அரபு குடியரசில் காசீம் சேர மறுத்ததால், பாத் கட்சி அவருக்கு எதிரானது. அதை ஈடுகட்ட எப்போதுமே பாத் கட்சிக்கு எதிராக இருக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காசீம் கூட்டு வைத்துக் கொண்டார். பாத் கட்சியினர் காசீமைக் கொல்லத் திட்டம் தீட்டினார்கள். பாத் கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் தீவிரமானவர்கள், நன்கு படித்தவர்கள், மாணாக்கர்கள், இளைஞர்கள் என்று நிரம்பி இருந்தார்கள். இக்கொலைத் திட்டத்திற்கு சதாம் ஹுசெய்ன் தலைமை ஏற்றார். இதற்காக அவரும், சிலரும் டமாஸ்கசில் பயிற்சி பெற்றார்கள். 1959 அக்டோபர் 7 ல் அல் ராஷித் சாலையில் காசீமைக் கொல்லத் திட்டமிடப்பட்டது. காரில் காசீமுடன் பின் இருக்கையில் இருப்பவர் காசீமைக் கொல்ல பொறுப்பெடுத்திருந்தார். திட்டமிட்டபடி வந்து கொண்டிருந்த காரின் முன்புறம் சென்று சதாம் ஹுசெய்ன் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டு, அப்த் அல் கறீம் காசிமும் துப்பாக்கியாலும், காரின் பின்புறம் இருந்தவராலும் தாக்கப்பட்டார். கொலையாளிகள் காசீம் இறந்தவிட்டதாகக் கருதி சென்றுவிட்டார்கள். ஆனால் காசீம் தப்பித்துவிட்டார். அப்போது பாத் கட்சியில் தீவிரமான 1000 உறுப்பினர்களுக்கும் கீழ்தான் இருந்தனர். கொலையில் ஈடுபட்ட சிலர் பாத் கட்சியின் பிறப்பிடமான சிரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். சதாம் ஹுசெய்ன் பாத் கட்சியின் தலைவரான மிசெல் அஃப்லக் என்பவரின் ஆதரவின் கீழ் இருந்தார். கொலைக்கு காரணமான ஆறு பேர் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதண்டனை கொடுக்கப்பட்டார்கள். ஆனால், என்ன காரணமோ தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1959 ல் சதாம் ஹுசெய்ன் எகிப்துக்கு தப்பித்துப் போய் 1963 வரை அங்கிருந்தார். சில வெளிநாடுகளும் அப்த் அல் கறீம் காசீமை வெறுத்தனர். அவர் குவைத் மீது ஆக்கிரமிப்பு செய்ய இருந்தார். 1960 ல் அமெரிக்க CIA அமைப்பு காசீமை விஷமருந்து துவைக்கப்பட்ட கைக்குட்டையால் கொல்ல முயன்றது. ஆனால் அதிலிருந்து காசீம் தப்பித்துக் கொண்டார். ஆனால், ஈராக்கின் இராணுவ அதிகாரிகள் ‘ரமதான் புரட்சி’ என்றதின் கீழ் அப்த் அல் கறீம் காசீமை ஆட்சியைவிட்டுத் தூக்கி அப்துல் சலாம் ஆரிஃப் என்பவரை அதிபராக்கினார்கள். ஆரீஃப் அனைத்து பாத் கட்சி உறுப்பினர்களையும் கைது செய்து பாத் கட்சியைக் கலைக்க உத்தரவிட்டார். 1966 ல் அப்துல் சலாம் ஆரீஃப் ஒரு விமான விபத்தில் பலியானார். இராணுவத்தில் பாத் கட்சியின் ஆதரவுள்ள ஒருவரால் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று ஒரு கருத்து நிலவியது. பின் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அப்த் அர் ரஹ்மான் அல் பஸ்ஸாஸ் என்பவர் சில நாட்களுக்கு ஆட்சி செய்தார். நிரந்தரமாக அவர் ஆள்வதற்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு தேவை. அது கிடைக்காமல் அவர் தோல்வி அடைய இறந்து போன அப்துல் சலாம் ஆரீஃபின் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆரீஃப் ஈராக்கின் அதிபரானார்.

ஈராக் வரலாறு 4

1963 ல் ஈராக் திரும்பிய சதாம் ஹுசெய்ன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவரை அஹ்மத் ஹசன் அல் பக்ர் துணை செய்லாளராக நியமித்தார். 1967 ல் சதாம் ஹுசெய்ன் சிறையிலிருந்து தப்பித்து பாத் கட்சிக்கு புத்துணர்வையும், திறமையான செயல்பாடுகளையும் ஒரு செயலாளராக சிறப்பாக அளித்தார். பாத் கட்சியின் ஸ்தாபகர் மிசெல் அஃப்லக்கால் மாகாண தலைவரானார். 1968 ல் அஹ்மது ஹசன் அல் பக்ர் தலைமையில் இரத்தமில்லாமல் அப்துல் ரஹ்மான் ஆரிஃபை ஆட்சியை விட்டுத் தூக்கிவிட்டு, அல் பக்ர் ஈராக்கின் அதிபராகவும், சதாம் ஹுசெய்ன் ஈராக்கின் துணை அதிபராகவும், பாத் கட்சியின் புரட்சிக்குழுக்கு தளபதியாகவும் ஆனார்கள். அப்துல் ரஹ்மான் ஆரீஃப் இஸ்தான்புல்லுக்கு நாடு கடத்தப்பட்டார். ஒரு துணை அதிபராக இருந்து புதிய அரசை வளப்படுத்தி, பாத் கட்சியையும் வளர்த்து, நாட்டின் விவகாரங்களில் அதிக அக்கரை கொண்டு தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார். உண்மையான உழைப்பைக் கொடுத்து ஈராக்கின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். எண்ணெய் வளம் இருந்த காரணத்தால் உலக அளவில் ஈராக்கை முன்னிலைப் படுத்தினார்.
சதாம் ஹுசெய்ன் ஆட்சிக்கு முன்பு ஈராக் பலவழிகளில் வேறுபாடு கண்டிருந்தது. சுன்னிப்பிரிவு-ஷியாபிரிவு, அரபுகள்-குர்துக்கள், பழங்குயின தலைவர்கள்-நவீன வாணிப செல்வந்தர்கள், பழங்குடியினர்-பொதுமக்கள் என்று அனைத்திலும் வேறுபட்டிருந்தார்கள். ஈராக்குக்கு அப்போதைக்கு தேவையான நிலையான ஆட்சியை உறுதி செய்து அனைவரின் தேவைகளையும் அவரவர்கேற்ப பூர்த்தி செய்து அரவணைத்துச் சென்றார். நாட்டையும் முன்னேற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றினார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்நாட்டு புரட்சிகள் எழாத வண்ணம் வைத்துக் கொண்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, கருத்து சொன்ன சதாம் ஹுசெய்ன், நான் குர்துக்களை கொன்றதற்காக வருத்தப்படவில்லை. ஒரு நாட்டின் மன்னரைக் கொல்ல முயல்பவர்களுக்கு என்ன தண்டனையோ அதைத்தான் நான் செய்தேன். என்னளவில் ஒரு தலைவன் இருந்தால் ஆட்சிக்கு வந்தவுடனே, அத்தனை குர்துக்களையும் கொன்று குவித்திருப்பான். ஆனால், நான் மற்ற எவருமே செய்ய முடியாத உதவிகளை ஒரு எதிர்தரப்பு ஆட்சியாளனாக இருந்து குர்துக்களுக்குச் செய்தேன்.இன்று எனக்கெதிராக் சாட்சி சொன்ன ஒரு குர்து இனத்தவன் கூட அதை எண்ணிப்பார்க்கவில்லை’ என்றார். உலக எண்ணெய் உற்பத்தியில் ஏறக்குறைய 40% சதவீதம் ஈராக்கிலிருந்து தான் அப்போது கிடைத்தது. 1973 ல் உலகெங்கிலும் எரிவாயு உற்பத்தியில் குழப்பம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெயின் விலை பலமடங்கு உயர்ந்து ஈராக்குக்கு நல்ல வருவாயைத் தந்தது. மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சொத்துக்கள் 20, 22 பில்லியன் டாலர்களிலிருக்க சதாம் ஹுசெய்னின் சொத்துக்கள் அவர் நாட்டு எண்ணெய் வளத்திற்க் 
மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் 20, 22 பில்லியன் டாலர்களில் இருக்க சதாம் ஹுசெய்னின் ஈராக்கின் எண்ணெய் வளத்திற்கு அவரின் சொத்து ஐந்து மடங்கு அடுத்தவர்களை விட இருக்க வேண்டும். ஆனால் 2000 ல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் இவருக்கு 5 பில்லியன் டாலர்கள் சொத்து இருந்ததாகக் கூறியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் வருமானத்தை நாட்டில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாதவராக இருக்கக்கூடாது என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதுவும் சர்வதேச அளவிலான கல்வியைக் கொடுத்தார். இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பல சலுகைகளை அளித்தார். விவசாயிகளுக்கு கடனுதவிகள் கொடுத்தார். மத்திய கிழக்கு நாடுகளிலேயே உயர்தர மருத்துவத்தை இலவசமாக நாட்டுமக்களுக்கு கொடுத்தவர் இவர்தான். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு கல்வி, விஞ்ஞான, கலாச்சார விருதை சதாம் ஹுசெய்னுக்கு கொடுத்து கௌரவித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, அன்று அம்மக்கள் இவரின் சிலையை மட்டும் தள்ளவில்லை. உலகின் சிறந்த அதிபர் அளித்த பல சலுகைகளையும், நல்லாட்சியையும் சேர்ந்தே தள்ளினார்கள். அதை அனுபவித்த தலைமுறையினர் இனி எப்பாடுபட்டாலும் அமெரிக்காவாலும், தங்கள் கரங்களாலும் ஏற்படுத்திக் கொண்ட சேதாரத்திலிருந்து அவைகளைப் பெறமுடியாது. காரணம் ஈராக் போன்ற ஒரு நாட்டை சதாம் ஹுசெய்ன் என்பவரால் மட்டுமே அரவணைத்து வாழமுடியும். அந்த அரவணைப்பு என்பது ஆயிரம் இழைகளில் ஒரு இழை, அந்த இழை எல்லார் கைகளுக்கும் வசப்படாது. அது சதாம் ஹுசெய்னுக்கு அழகாக வசப்பட்டது. இதற்கு இக்கட்டுரை எழுதும் நானே சாட்சியாகவும் இருக்கிறேன். நான் துபாயிலிருந்த காலங்களில் சில காலம் அல் ஷாப் என்னும் பகுதியில் இருந்தேன். அதன் கீழே குடியிருந்த ஒரு ஈராக்கியர் (2003 என்று நினைக்கிறேன்) என்னிடம் சொல்லி இருக்கிறார். எங்கள் தேசத்தை சதாம் ஹுசெய்ன் தவிர எந்த கொம்பனாலும் ஆளமுடியாது என்று.
இவரைக் கொல்வதற்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த மற்ற நாட்டு அதிபர்கள் போல் பாட்டன், தந்தை, மகன் என்ற அடிச்சுவட்டில் ஆட்சிக்கு வந்தவரல்ல அதிபர் சதாம் ஹுசெய்ன். அதிகப்படியாக வந்த எண்ணெய் வளத்தின் மூலம் பல சாலைகள், புதிய கட்டிடங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகளை அமைத்தார். மின்சாரம் இல்லாத ஊரே ஈராக்கில் இல்லாமல் செய்தார். 1972 ல் 15 ஆண்டாக இருந்த சோவியத் யூனியன் ஒப்பந்தத்தை புதுப்பித்தார். உலகில் அடுத்த நாடு வளம் பெறுவதையோ, சோவியத் யூனியனுடன் நட்பு கொள்வதையோ விரும்பாத அமெரிக்கா வழக்கம் போல ஈரானின் ஷா முஹம்மது ரேஸா பஹ்லவியை CIA  மூலம் தொடர்பு கொண்டு, ஈராக் குர்திஷ்களுக்கு ஈரான் மூலம் ஆயுதங்கள் வழங்கி இரண்டாவது குர்திஷ் ஈராக் போரைத் துவங்கியது. சதாம் ஹுசெய்ன் விவசாயிகளுக்கு இலவச நிலங்களைப் பகிர்ந்தளித்து பெரிய அளவில் விவசாயத்தை நாட்டில் வளர்த்தார். ஈராக் படுவேகமாக வளர்ச்சி அடைந்து பல அரபு நாடுகளிலிருந்தும், யூகோஸ்லேவியாவிலிருந்தும் பணியாட்களை வரவழைத்தார்கள். அதிபர் அல் பக்ர் வயது மூப்பின் காரணமாக அவ்வளவாக ஆட்சியில் ஆர்வம் காட்டாதபோது சதாம் ஹுசெய்ன் தான் முன்னிலையில் இருந்தார். இடையில் 1979 ல் அல் பக்ர், சிரியாவுடன் இணைந்து செயல்பட சிரிய அதிபர் ஹஃபீஸ் அல் அஸ்ஸாதுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இது சுதந்திரமாக பல நல்ல திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சதாம் ஹுசெய்னுக்கு எதற்கெடுத்தாலும் சிரியாவையும் கலந்து கொள்ள வேண்டுமென்பது ஒரு இடையூறாக இருந்தது. அவர் அல் பக்ரை ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டார். 1979 ல் அதிபரான சதாம் ஹுசெய்ன் முதலில் பாத் கட்சியின் கூட்டத்தைக் கூட்டி, அதை வீடியோபதிவு எடுக்கச் செய்தார். பாத் கட்சியில் சதிகாரர்கள் (சிரியாவுடன் ஒப்பந்தம் போட ஆதரவாய் இருந்தவர்கள்) என்று இருந்தவர்களை முஹ்யீ அப்தெல் ஹுஸ்ஸெய்னை விட்டு ஒவ்வொரு பெயராகப் படிக்கச் சொல்லி, அவர்களை அவையைவிட்டு வெளியேற்றி கைது செய்யச் சொன்னார். அதில் மிகவும் எதிர்ப்பாக இருந்த 68 பேரில் 22 கட்சி உறுப்பினர்களை தூக்கிலிட்டார். எஞ்சிய உயர்பதவியில் இருந்த பாத் கட்சி உறுப்பினர்கள் சதாம் ஹுசெய்னை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். அவர்களையும் சதாம் ஹுசெய்ன் தூக்கிலிட்டார். ஈராக் சமூகம் மதம், மொழி, இனத்தின் அடிப்படையில் பிரிந்திருந்தது. குர்திஷ்கள் வட ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட பிரிக்கச் சொன்னார்கள். ஒரு பிரிவினர் அருகாமை ஈரானின் ஷியா பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். சதாம் ஹுசெய்ன் நாட்டின் பலன்கள் அனைத்து தரப்பினருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக அனைவரையும் பாத் கட்சியில் சேரச்சொன்னார். சதாம் ஹுசெய்னைப் பொருத்தவரை தன் எண்ணத்திலுள்ள ஈராக்கின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள புற்களைத்தான் அழித்ததாகச் சொல்லப்பட்டது. எதிர்ப்பாளர்கள் அதை அடக்குமுறை என்றார்கள்.
1974 ல் தாஹா யாசீன் ரமதான் என்ற உறவினர் தலைமையில் நடமாடும் மக்கள் இராணுவம் ஒன்றை அமைத்தார். அவர்கள் மக்களிடையே ஊடூருவி புரட்சியில் ஈடுபட இருப்பவர்களை துல்லியமாகக் கண்டுபிடித்து சிறையில் அடைத்தார்கள். உள்நாட்டுப் பாதுகாப்பை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். அடுத்து ஒன்றுவிட்ட சகோதரர் பர்ஸான் இப்ராஹீம் அல் திக்ரிதி என்பவர் தலைமையில் பொது புலனாய்வு துறை ஒன்றையும் அமைத்தார். இது ஈராக்கின் சார்பாக வெளிநாடுகளிலும் செயல்பட்டதாகக் கூறினார்கள். இவர் தன் புகழ் பாடப்படுவதற்காக நாடெங்கிலும் சுவரொட்டிகள், புகைப்படங்கள், சிலைகள் என்று வடித்துக் கொண்டார் என்றும் குறை கூறினார்கள். இவரது உருவம் அரசுக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், கடைகள், நாணயங்களின் மீது அச்சடிக்கப்பட்டதாகக் கூறினார்கள். (ஏன் மற்ற இஸ்லாமிய நாடுகளில் இல்லையா என்ன?) பெரும்பாலும் சதாம் தான் சிறுவயதிலிருந்து அணியும் பிதோயின் பழங்குடியின உடையிலேயே இருப்பார். சில சமயங்களில் குர்திஷ் உடையும், சில சமயம் தலையிலிருந்து கால்வரை அரபுகள் உடையும் அணிந்திருப்பார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மேற்கத்திய உடையில் செல்வார். 1995, 2002 ல் நடந்த தேர்தல்களில் 8.4 மில்லியன் ஓட்டுகளில் வெறும் 3,052 ஓட்டுகள் மட்டும் எதிர்த்து வாக்கு பெற்றார். 99.96% வாக்குகள் ஆதரவாகப் பெற்றார். இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தின் போது எகிப்திய அதிபர் அன்வர் சதாதுடன் கருத்துவேறுபாடு கொண்டு ஈராக் உறவை முறித்துக் கொண்டது. இருநாட்டுக்கும் தூதரக உறவு இல்லாத நிலையிலும், எகிப்து ஈரானுடனான போரின் போது ஈராக்கை ஆதரித்தது. வைரம் பதித்த ‘ரோலக்ஸ்’ நிறுவன கைக்கடிகாரத்தை எப்போதும் அணிந்திருப்பார். ஸாம்பியா நாட்டின் முதல் அதிபரும், தனது நண்பருமான கென்னெத் டேவிட் கௌண்டாவுக்கு போயிங் 747 விமானம் முழுக்க விலை உயர்ந்த தரைவிரிப்புகளும், தொலைக்காட்சி பெட்டிகளும், தங்க நகைகளும் மற்றும் பல பொருட்களும் அனுப்பினார். கௌண்டாவும் தான் பொழுதுபோக்காகச் செய்யும் மாந்திரீக விளையாட்டுப் பொருள்களை சதாம் ஹுசெய்னுக்கு அனுப்பினார். இவர் ஒரே ஒருமுறைதான் மேற்கத்திய நாட்டுக்கு சென்றார். பெரும்பாலும் ஈராக் சார்பாக ஈராக்கின் வெளியுறவு மந்திரி தாரிக் அஜீஸ் தான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். 1975 ல் ஃப்ரான்ஸ் பிரதம மந்திரி ஜாக்வெஸ் சிராக்கைச் சந்தித்தார். சில ஈராக் தலைவர்களும், லெபனானின் ஆயுத வியாபாரி சர்கிஸ் சோகானாலியனும் சதாம் ஹுசெய்ன் சிராகின் கட்சிக்கு நிதியுதவி செய்தார் என்றார்கள். சதாம் ஹுசெய்னின் ஆட்சியின் போது ஈராக்குக்கு பெருமளவு ஆயுதம் விற்பனை செய்தது ஃப்ரான்ஸ் தான்.

ஈராக் வரலாறு 5

1979 ல் ஈரானில் ஷா முஹம்மது ரேஸா பஹ்லவி இஸ்லாமிய புரட்சியின் மூலம் துரத்தப்பட்டு, அயாதுல்லாஹ் ரூஹல்லாஹ் கொமெய்னி ஆட்சிக்கு வந்தார். இவர் தீவிர ஷியா பிரிவானதால், தன் பகுதி ஈராகில் குர்திஷ்கள் பலம் பெருவார்களோ என்று சதாம் ஹுசெய்ன் அச்சப்பட்டார். காரணம் 1964 ல் ஈரானை விட்டு ஓடிய கொமெய்னி ஈராக்கில் ஷியாக்கள் நிறைந்த அந்நஜஃப் பகுதியில் தான் தங்கி இருந்தார். அங்கிருந்தபடி சதாம் ஹுசெய்னுக்கும் தொல்லை கொடுத்திருந்தார். 1980 ல் ஃப்ரென்சின் உதவியுடன் ஈராக்கில் நியூக்ளியர் அணுஉலை ‘ஓசிரக்’ துவங்கப்பட்டது. 1981 ல் இஸ்ரேல் அதை குண்டுவீசி தகர்த்தது. 1980 ல் ஈராக் ஈரானின் தெஹ்ரான் மெஹ்ராபாத் விமான நிலையத்தைத் தாக்கி, எண்ணெய் வளமிக்க குஸெஸ்தான் பகுதியில் நுழைந்தது. அப்பகுதியை ஈராக்குடன் இணைத்து விட்டதாக செய்தி சொல்லியது. ஈரானை எதிர்த்து அரபு மாகாணங்கள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில நாடுகளின் பொருளாதார உதவியாலும் ஈராக் மத்திய ஆசியாவிலேயே பலம் பொருந்திய நாடாகக் கருதப்பட்டது. ஈரானுடனான போரின்போது ஆரம்பத்தில் ஈராக்குக்கு ஆதரவாய் இருப்பதாக அறிவித்த சோவியத் யூனியனின் மிக்காயில் கோர்பசேவ் பிறகு, பொதுவாக இருப்பதாக அறிவித்தார். முதல்நாள் போரில் பலனடைந்தது போலிருந்த ஈராக் அடுத்த நாட்களில் ஈரானின் தற்கொலைப்படை தாக்குதல்களால் பலம் இழந்தது. 1982 ல் ஈராக் போரை நிறுத்திக்கொள்ள தயாராய் இருந்தது. போரில் ஈராக் ஜெர்மனி நிறுவனம் கொடுத்த இரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது. அமெரிக்காவின் அதிபர் ரீகன் ஈரானின் செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தந்து, தெஹ்ரானில் மக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீச ஆலோசனை தந்தது. ஃப்ரான்ஸ் 25 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஈராக்குக்கு ஆயுதங்கள் விற்றது. அதேநேரத்தில் ஈராக்கின் எண்ணெய் வளங்கள் ஈரானின் கடற்படையால் பெர்ஷியா வளைகுடாவில் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஈராக்குக்கு தொடர்ந்து சோவியத் யூனியன் (மறைமுகமாக), சீனா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்தன. ஈரானும் விடாமல் போரிட்டு ஈராக்கை போரின் இழப்புகளுக்கு நஷ்டஈடு கொடுக்கச் சொன்னது. 1988 வரை ஐ.நா. சபை போரை நிறுத்தச் சொல்லி பேசி வந்தது. 1988 ல் ஈராக்கில் குர்துக்கள் அதிகம் வாழும் ஹலப்ஜா பகுதியில் இரசாய குண்டு வீசப்பட்டு, 10,000 பேர் வரை இறந்து போனார்கள். ஈராக் இதற்கு ஈரானைக் குற்றம் சாட்டியது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருநாடுகளிடையேயும் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏறக்குறைய இரு தரப்பிலும் 10 லட்சம் பேர் இறந்திருக்க, லட்சக்கணக்கானோர் காயமுற்றிருந்தனர். எண்ணெய் வளமிக்க குஸெஸ்தான் மற்றும் பஸ்ரா பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தன. ஈரானுக்கு சிறிதளவு வட குர்திஷ்கள் பகுதியில் நிலப்பரப்பு கிடைத்தது. பொதுவில் இருநாடுகளும் பெரிதும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டிருந்தன. 1986 ல் திருக்குரானின் அல் அன்ஃபால் சூராவின் பேரில் ‘அல் அன்ஃபால் பிரச்சாரம்’ என்று வட குர்திஷ்கள், ஷபக்குகள், யஸிதிஸ்கள், அஸ்ஸைரியன்கள், மண்டீயன்கள், துருக்கிகள் ஆகியோரை எதிர்த்து நடத்தப்பட்டது. மனித உரிமை கழகம் இதில் சதாம் ஹுசெய்னின் தரப்பில் 50,000 லிருந்து 100,000 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கணக்கிட்டது. ஆனால் குர்திஷ்கள் 182,000 பேர் என்றார்கள்.
ஈராக், குவைத் விவகாரம், ஈராக் மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, சதாம் ஹுசெய்னை கைது செய்து தூக்கிலிட்ட வரலாறுகள் நீங்கள் நன்கு அறியப்பட்டதே அதனால் மேலே செல்வோம். சதாம் ஹுசெய்ன் சரித்திரப் பூர்வமாக குவைத் ஈராக்கைச் சேர்ந்ததே என்றும், பிரிட்டிஷார் தான் அதைப்பிரித்து குவைத்தை தனியாக்கினார்கள் என்று பலகாலமாக சொல்லி வந்தார். தான் ஈரானுடன் போரில் ஈடுபட்டிருந்த எட்டாண்டு காலத்தில் குவைத் தனது பகுதியின் எண்ணெய் வளத்தைத் திருடிக் கொண்டதாக அமெரிக்காவிடம் குற்றம் சாட்டினார். அவ்வப்போது எடுத்து சேமித்து வைத்த தனது 27 லிட்டர் ரத்தத்தில் திருக்குரானை எழுதச் சொன்னார். அல்லாஹ் தன்னை பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியதற்காக தான் இதைச் செய்வதாகச் சொன்னார். எந்த ஓரு நாட்டின் தலைவர்களின் வழக்குகளும் சர்வதேச நீதிமன்றத்தில் தான் நடத்தப்படும். ஆனால், சதாம் ஹுசெய்னின் வழக்கு மட்டும் ஒருதலைப்பட்சமாக அவர் நாட்டில் அவரின் எதிரிகளின் முன்பு நடத்தப்பட்டு தூக்குதண்டனை கொடுக்கப்பட்டது. ஏனென்றால் எந்த ஒரு நாட்டு அதிபர் மீதும் கொலைத்தாக்குதல் நடந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதைத்தான் சதாம் ஹுசெய்ன் குர்திஷ்கள் மீது எடுத்தார். குர்திஷ்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தார். குர்திஷ்கள் பகுதியில் ஒரு கூட்டத்திற்கு சதாம் ஹுசெய்ன் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து அவர் வாகனம் அவ்வூர் எல்லையைக் கடக்கும் முன் சரமாரியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக சதாம் ஹுசெய்ன் வேறு ஒரு காரில் சென்று விட்டார். இது முழுக்க முழுக்க குர்திஷ்கள் செய்த தவறு. தலைநகர் திரும்பிய சதாம் ஹுசெய்ன் பாதுகாப்பு அதிகாரியை அழைத்து ஏவுகணைகள் விடப்பட்ட அந்த குறிப்பிட்ட குர்திஷ் கிராமத்தில் நடவடிக்கை எடுக்கச் சொன்னார். மொத்த கிராமமக்களும் வாயைத் திறக்காமல் மௌனமாகி விட்டார்கள். பாதுகாப்பு அதிகாரி பொறுமையைக் கைவிட்டு, 1800 பேருக்கு மேல் இருந்த அந்த கிராமத்தில் இரசாயன குண்டை வீசி அனைவரையும் கொன்று போட்டார். சதாம் ஹுசெய்னை தூக்கிலிட்டதற்கு இந்த வழக்குதான் காரணம். இவர் சிறையிலிருந்தபோது, தலைநிறைய முடியுடன் சீர்செய்யப்படாத தாடியுடன் தன் உடைகளை தானே துவைப்பது போன்றும், உறங்குவது போன்றுமான புகைப்படங்களை ‘தி சன்’ என்னும் பத்திரிக்கை வெளியிட்டது. சிறைக்குப் பக்கத்தில் தானே ஒரு சிறு தோட்டத்தை நிர்மாணிக்க அனுமதிக்கப்பட்டார். வழக்குக்கு முன்பே தீர்ப்பை திட்டமிட்டபடி 2006 டிசம்பர் 30 ல் சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்டார். சமாதியில் அடைக்கம் செய்தவர் தூக்குக்குப் பிறகு, சதாம் ஹுசெய்னின் உடலை ஆறு இடத்தில் குத்தி இருந்தார்களாம். அது நிச்சயமாக அவர் இறக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக என்று சொன்னார். அன்று அவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை, அவரால் வளம் கண்ட ஈராக்கும், அதன் மக்களும் தான் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று அமெரிக்க கைப்பாவையாக ஈராக்கை ஆளும் ஆட்சியினரால் வீணாக வளரும் ஒரு புல்லைக்கூட ஒரு நூற்றாண்டானாலும் வளர்க்க முடியாது. 
சதாம் ஹுசெய்ன் தன்னை வளர்த்த மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாவின் மகள் சஜிதா துல்ஃபாவை முதல் மனைவியாக மணந்து கொண்டார். அப்போது சதாம் ஹுசெய்னுக்கு ஐந்து வயது, மனைவி சஜிதாவுக்கு ஏழு வயது. திருமணம் எகிப்தில் நடந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். முதல் மகன் உதைய் ஹுசெய்ன். இவர் ஈராக் கால்பந்து சங்கத்தின் தலைவராக இருந்தார். ஈராக் தொலைக்காட்சி, பாபெல் பத்திரிக்கை ஆகியவற்றை நடத்தினார். இவரை உலக பத்திரிக்கைகள் பெரிய காமக்கொடூரனாக சித்தறித்தார்கள். ஏனென்றால் அமெரிக்கா இவரையும் குண்டுவீசிக் கொன்றுவிட்டது. சரித்திரமும், பூகோளமும் தெரியாத தமிழ் பத்திரிக்கைகள் தினத்தந்தி, தினமலர் கூட இவர் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு தன் மேனியை சொறிந்து கொண்டார்கள். ஒரு சாதாரண தனியார் நிர்வாகத்தில் பணிபுரிபவன் கூட வாரத்திற்கு மூன்று பெண்களுடன் சுற்றுகிறான். உதைய் ஒரு நாட்டு அதிபரின் மகன். இஸ்லாமைப் பொறுத்தவரை தவறுதான் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதன் தண்டனை அவனின் தனிப்பட்ட கணக்கு. இங்கிலாந்து ராணியின் பேரன் ஹாரி மட்டுமென்ன பாதிரியார் உடையணிந்து அப்பமும், தீர்த்தக் கூஜாவுடனுமா அலைகிறார்? அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகள், இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேரின் மகன் ஆகியோர் இரவுவிடுதியில் போதைமருந்துடன் கும்மாளமிட்டார்கள் அது கூட செய்தியாக வந்தது. ஆனால், அது புகாராக வரவில்லை, நாகரீகத்தின் அடையாளமாக வந்தது. உதைய் ஹுசெய்னைப் பற்றி மேலைநாட்டினர் சொல்லும் கதைகள் 1000 பக்கத்திற்கு ஒரு பெரிய புத்தகமாகப் போடலாம். விடுங்கள். அடுத்த மகன் குஸாய் ஹுசெய்ன். இவரும் அமெரிக்காவால் கொல்லப்பட்டார். சதாம் ஹுசெய்னுக்கு அடுத்து இவர்தான் ஆட்சிக்கு வருவதாக இருந்தார். அடுத்ததாக மகள் ராகத் ஹுசெய்ன். இவரை ஜோர்டானின் அரசகுடும்பம் ஆதரவாக அழைத்துக் கொண்டது. தற்போதைய ஈராக் அரசு இவர் பாத் கட்சிக்கு பொருளுதவி கொடுத்து ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி ஒப்படைக்கக் கேட்டது. ஆனால், ஜோர்டான் அரசு மறுத்துவிட்டது. அடுத்து இரண்டாவது மகள் ரணா ஹுசெய்ன் இவரையும் ஜோர்டான் அரசு ஆதரவில் வைத்துக் கொண்டது. இவர் சதாம் கமெல் என்பவரை மணந்து நான்கு குழந்தைகளைப் பெற்றார். மூன்றாவது மகள் ஹாலா ஹுசெய்ன் இவரும் குழந்தைகளுடன் ஜோர்டானில் இருக்கிறார். சதாம் ஹுசெய்ன் இரண்டாவதாக சமீரா ஷாஹ்பந்தர் என்ற பெண்மனியை மணந்தார். இவர் ஈராக் ஏர்வேஸ் தலைவரின் முன்னாள் மனைவி ஆவார். போரின் சமயம் சமீரா லெபனானின் பெய்ரூட்டுக்கு போய்விட்டார். இவருக்கு சதாம் ஹுசெய்னுடன் ஆறு குழந்தைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சதாமின் முதல் குடும்பம் இதை மறுக்கிறது. மூன்றாவது மனைவியாக சோலார் எனர்ஜி ரிசர்ச் செண்டரின் ஜெனரல் மேனேஜராக இருந்த நிடால் அல் ஹம்தானியை மணந்தார். நான்காவதாக வஃபா எல் முல்லாஹ் அல் ஹொவெய்ஷ் என்பவரை மணந்ததாக புரளி நிலவுகிறது.
மகள்கள் ராகதும், ரணாவும் அன்ணன், தம்பிகளான ஹுசெய்ன் காமெல் அல் மஜீதையும், சதாம் காமெல் அல் மஜீதையும் மணந்திருந்தார்கள். ஒரு விவகாரத்தில் சதாம் ஹுசெய்னால் ஆபத்து ஏற்படும் என்று கருதி, மருமகன்கள் இருவரும் ஜோர்டானுக்கு சென்றுவிட்டார்கள். 1996 ல் சதாம் ஹுசெய்னால் ஆபத்து இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின் ஈராக் திரும்பிய இவர்களை, இவர்களால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பழங்குடியினரால் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்கள். சகோதரிகள் இருவரும் ஜோர்டானில் CNN என்ற தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும்போது தந்தையைப்பற்றி மிக உயர்வாகச் சொன்னார்கள். சதாம் ஹுசெய்னைத் தூக்கில் போட்டவுடன் குவைத் மக்கள் தெருவில் வந்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாக தொலைக்காட்சியில் காட்டி அமெரிக்கா அகமகிழ்ந்தது. அதுவும் அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள் அளவுக்கதிகமாக இவரைப்பற்றி கதைகள், நடனங்கள் என்று ஆரவாரப்படுத்தின. ஆனால், உண்மையில் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் கவலை தெரிவித்தனர். இந்தியாவின் தென்பகுதி கேரளா மாநிலத்தில் பரப்பனங்காடி என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய மீன்பிடி கிராமத்திற்கு சதாம் கடற்கரை என்று பெயரிட்டார்கள். இதற்கு முன் இந்த கடற்கரை பிரிட்டிஷாரை எதிர்த்ததின் காரணமாக திப்பு சுல்தான் கடற்கரை என்று இருந்தது. சதாம் ஹுசெய்ன் அமெரிக்காவை எதிர்த்த காரணத்திற்காக தற்போது சதாம் கடற்கரை என்று மாற்றிக்கொண்டதாக அம்மக்கள் தெரிவித்தார்கள். அவரைத் தூக்கிலிட்ட ஆண்டில் உலகம் முழுவதும் பிறந்த 20 லட்சம் குழந்தைகளுக்கு மேல் சதாம் ஹுசெய்ன் பெயர் சூட்டப்பட்டது. சதாம் கடற்கரை மக்கள் தூக்குச் செய்தியைக் கேட்டவுடன் ஜார்ஜ்புஷ்ஷுக்கு எதிராக கோஷமிட்டு, குழந்தைகளும், பெண்களுமாக ஊர்வலம் சென்றார்கள். பாவம் எந்த தொலைக்காட்சிக்கும், பத்திரிக்கைகளுக்கும் கண் தெரியாமல் போனது. ஸ்ரீலங்காவில் பட்டிகோலா என்ற இடத்தில் இருந்த முஸ்லீம்கள் அதிகமுள்ள ஒல்ரு பகுதிக்கு சதாம் ஹுசெய்ன் டவுன் என்று பெயரிட்டார்கள். அவர் அதிபராய் இருந்த போது அந்த டவுனை வளர்ச்சி அடையவும், மஸ்ஜித் கட்டவும் உதவி புரிந்திருந்தார். 1978 ல் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியபோது ஈராக் தூதரகம் மூலம் அம்மக்களுக்கு பல உதவிகளைச் சதாம் ஹுசெய்ன் செய்திருந்தார். வெள்ளத்திற்குப் பிறகு, 100 வீடுகள், பள்ளிக்கூடங்கள், மஸ்ஜிதுகள் கட்டிக் கொடுத்தார். அமெரிக்க மக்களே சதாம் ஹுசெய்ன் ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், திருத்துவது அமெரிக்காவின் வேலையில்லை என்று ஆணித்தரமாக BBC யில் தெரிவித்தார்கள். ஆயிரம் அமெரிக்கா வந்தாலும் சூரியனை மறைத்துவிட முடியாது. நாம் சதாம் ஹுசெய்னுக்காக வாதாடவில்லை. சதாம் ஹுசெய்ன் சொந்தமாக நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ஸ்பீபாஹ் அண்ட் தி கிங், தி ஃபோர்டிஃபைய்ட் கேஸல், மென் அண்ட் தி சிட்டி, பிகோன் டெமென்ஸ் ஆகியவை ஆகும்.