செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 2


சுல்தான் ஓரனின் சகோதரர் அலாவுத்தீன் மிகவும் திறமையாளராக இருந்து செல் ஜுக்குகளின் பல பகுதிகளை வெல்ல திட்டம் அமைத்துக் கொடுத்தார். நாட்டின் சட்டத்தை சிறந்த முறையில் தீட்டினார். ஜானிஸ்ஸரீஸ் (இந்த இராணுவத்தைப் பற்றி தனி பதிவு உள்ளது) என்னும் இராணுவ அமைப்பு உருவாவதற்கு இவர் தான் மூலக் காரணம். மேலும் உயர்ந்த ஊதியம் கொடுக்கப்பட்டு “யா யா” என்று ஒரு இராணுவப்பிரிவு உருவாக்கினார். அவர்கள் அற்புதமான திறமை படைத்த வர்கள். போர் சமயங்களில் அழைத்தால் இளவரசரின் பெயர் தாங்கிய கொடியுடன் வருவார்கள். காரியம் முடிந்தவுடன் விரைவில் மறைந்து சென்று விடுவார் கள். இவர்கள் 10 பேர், 100 பேர், 1000 பேர் அடங்கிய குழுக்களாக தனித்தனி தளபதி களுடன் இருப்பார்கள்.
 சுல்தான் ஓர்ஹனின் மூத்த மகன் சுலெய்மான் பாஷா த்ரேஸ் பகுதியை வளமாக ஆக்கினார். அனுபவம் வாய்ந்த இவர் 1357 ல் மர்மரா கடற்கரை பகுதியில் பொலா யிர் என்ற இடத்தில் குதிரையிலிருந்து தவறி விழுந்து இறந்து போனார். இவரது உடல் வட கல்லிபோலியில் நினைவு மண்டபத்துடன் அடக்கம் செய்யப்பட்டு, இன் றும் இருக்கிறது. அடுத்த மகன் சுல்தான் பெய். அடுத்து ஹதீஸ் ஹதூன் என்ற மகள் சவ்ஜி பெய் என்பவரின் மகன் தமத் சுலெய்மான் பெய்யை மணந்தார். இவ ரது வழி பேரர் தான் முதலாம் ஓஸ்மான். 1299 ல் ஓர்ஹன் பைஸாந்திய இளவரசி ஹெலெனின் (நிலோஃபர்) மகள் வலீதே சுல்தானை (நிலோஃபர் ஹதுன்) மணந் தார். இவர் கிரேக்க வழிமுறையில் வந்தவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கொசோவா போரில் மொலோஸ் ஒபிலிச்சால் கொல்லப்பட்ட முதலாம் முராத். அடுத்து காசிம். 1356 ல் காசிம் சிறு பிள்ளையாக இருந்த போது ஜீனோயஸ் கடற் கொள்ளையன் ஏஜியன் கடல் பகுதியில் பொகாயா என்ற இடத்தில் கடத்தி வைத் துக் கொண்டு பணயத்தொகைக் கேட்டான். தற்போதைய பைஸாந்தியப் பேரரசரா கவும், தனது மைத்துனருமான நான்காம் பலயிவோலோகோஸ் மூலம் கொள் ளையர்களைத் தொடர்பு கொண்டு 100,000 ஹைபர்பைரா என்னும் அவர்கள் மதிப் பான பணம் கொடுத்து மீட்டார். 1316 ல் அஸ்போர்ஷா என்பவரை மணந்தார். இவருக்கும் இரண்டு குழந்தைகள். எஸ்கிசெஹ்ர் பகுதியின் கவர்னராக இருந்து ஒன்று விட்ட சகோதரர் முதலாம் முராதால் தூக்கிலிடப்பட்ட இப்ராஹீம் என்பவ ரும், ஃபத்மா ஹதுன் என்ற மகளும் ஆவார்கள். 1346 ல் நாம் மேலே கண்ட தியோ டோரா என்பவரை மணந்து அவர் மூலம் ஹலிலி என்ற மகன் இருந்தார். மேலும் ஓர்ஹன் தன் மாமன் மஹ்மூத் கூண்டூஸ் அல்பின் மகள் எஃப்டண்டைஸ் ஹது னையும் மணந்தார்.
ஓர்ஹன் பல வெற்றிகளைப் பெற்றார். ஓட்டோமான் பேரரசுக்காக முதல்முதலில் நாணயம் வெளியிட்டார். நீண்ட நாள் வாழ்ந்து நீண்ட நாள் ஓட்டோமான் பேரர சை ஆண்டவர் சுல்தான் ஓர்ஹன். கடைசி காலத்தில் அதிகாரத்தை இரண்டாவது மகன் முராதிடம் கொடுத்து விட்டு, பெயருக்கு சுல்தானாக புர்ஸாவில் வாழ்ந்தார். 1360 இவர் மரணமடைந்த பின் இவர் மகன் முராத் சுல்தான் பதவிக்கு வந்தார். 1363 ல் அட்ரியனோபிள் என்ற இடத்தை வென்று எடிர்னி என்று பெயர் மாற்றி ஓட்டோமான்களின் தலைநகராக்கிக் கொண்டார். 1359 ல் பைஸாந்திய பேரரசரின் மகள் கூல்சிசிக் ஹதுனையும், 1365 ல் கிஸில் முராத் பெய் என்பவரின் மகள் பாசா மெலிக் ஹதுனையும், 1370 ல் பல்கேரியாவின் இவான் அலெக்ஸாண்டர் என்பவரின் மகள் மரியா தமரா ஹதுனையும் மணந்தார். யாகூப் செலிபி என்னும் இவர் மகன் தான் ஆட்சிக்காக ஓட்டோமான் பேரரசின் சரித்திரத்தில் முதல்முறையாக சகோதரர் முதலாம் பயேஸிதைக் கொன்றவர். சவ்ஸிபெய் என்ற இன்னொரு மகன், பைஸாந்திய பேரரசர் ஜான் நான்காம் பலாயிலோகசின் மகன் அன்ரோ னிகசுடன் சேர்ந்து கொண்டு தந்தை முராதை எதிர்த்து புரட்சி செய்தார். பிடிபட்ட இவரை முராத் கொன்று விட உத்தரவிட்டார். தப்பித்த அன்ரோனிகஸ் தன் தந்தையிடம் சரணடைய, அவர் மூலமே அன்ரோனிகஸின் கண்களைப் பறிக்கச் செய்தார். மேலும், இப்ராஹிம் பெய், யஹ்சி பெய், ஹலில் பெய் என்ற மகன்க ளும், நஃபிஸெ ஹதுன், சுல்தான் ஹதுன் என்ற மகள்களும் இருந்தார்கள். இவர் எந்த ஒரு பிரதேசம் வெற்றிகொண்டபோதும் இத்தோடு பேரரசு போதும் என்று இருக்கவில்லை. பேரரசை விரிவுபடுத்துவதில் மிக ஆர்வம் கொண்டிருந்தார். முராத் செர்பிய பழங்குடி ஒன்றை வென்றபின் அதன் ஆட்சியாளர் சரணடைந்து 50 உக்காஸ் வெள்ளிகள் கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து முராத் தன் மகன் பயேஸித்துக்கு சுலைமான் ஷாவின் மகளை மணமுடித்தார். அதற்கு ஈடாக குடல்யா, டவ்ஷன், சிமாவ் மற்றும் எமிட் ஆகிய பகுதிகள் திருமணப்பரிசாக கிடைத்தது. இதன் பிறகு, முராத் நேரடியாக செர்பிய மன்னன் லாஸரை கொஸோவோ போரில் எதிர்த்தார். பலமான உயிர்பலிகளுக் குப் பிறகு, செர்பியாவை வெற்றி கொண்டார். மன்னர் லாஸரைக் கைது செய்து கூடாரத்தில் அடைத்து வைத்திருந்தார். இதனால் ஆத்திரமுற்ற மிலோஸ் ஒபிலிக் என்பவர் பத்து நபர்களை அழைத்துக்கொண்டு சுல்தான் முராதின் கூடாரத்திற்குள் நுழைந்து அவரை மார்பில் குத்திக் கொன்றான். இறக்கும் முன் பதிலுக்கு முராத் செர்பிய மன்னர் லாஸரை தன் முன்னே அழைத்து வரச்செய்து கொல்லச் சொன்னார்.
முராத் இறந்த அன்றே அவர் மகன் பயேஸித் சுல்தான் ஆனார். இந்த சூழ்நிலை யை பயன் படுத்தி கொள்ள நினை த்த மெண்டெஸ்க் மற்றும் ஹமித் ஓகௌல்லரி என்ற இரண்டு பழங்குடி குழுவினர் ஓட்டோமான் பேரரசின் மீது போர் தொடுத்த னர். ஆனால், பயெஸிட் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை வெற்றி கொண் டார். தன் தந்தையின் கொல்லப்பட்ட உடலை எடுத்து வந்து புஸ்ரா மசூதியில் அடக்கம் செய்தார். பயேஸிட் ஆரம்பத்தில் கூதஹ்யா பகுதியில் கவர்னராக இருந்தார். இவர் இளவரசர் சுலைமான் சாஹ் செலிபின் மகள் தெவ்லத் ஹதுன் னையும், செர்பிய இளவரசர் லாஸரின் மகள் தெஸ்பினா ஹதுனையும், இளவரசர் ஃபஹ்ரெத்தீன் இசா பெய்யின் மகள் ஹஃப்சா ஹதுனையும் மணந்திருந்தார். இவ
ருக்கு எர்துக்ருல் செலிபி, சுலெய்மான் செலிபி, இஸா செலிபி, மெஹ்மெத் செலிபி, முஸ்தஃபா செலிபி, மூஸா செலிபி, காசிம் செலிபி, யூசுஃப் செலிபி என்ற மகன்களும், எர்ஹொண்டு ஹதுன், ஹுண்டி ஃபத்மா ஹதுன், சுல்தான் ஃபத்மா ஹதுன், ஓருஸ் ஹதுன், பாசா மெலிக் ஹதுன் என்ற மகள்களும் இருந்தார்கள். பயேஸிட் காலத்தில் தான் அனடோலியாவில் கோட்டை கட்டப்பட்டது. மந்திரி அலி பாஷா தலைமையில் கோனியாஹ், புரானுத்தீன் மற்றும் மலாடியா போன் ற பகுதிகள் வெல்லப்பட்டன. ஓட்டோமான்களின் வெற்றிகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர்களின் இராணுவம் ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் மிகச்சிறந்த இராணுவமாக இருந்தது. தேனீக்களின் கூட்டம்போல் நிறைய வீரர்கள் இருந்தார்கள். போரில் பிடிக்கப்பட்டவர்களையும், அடிமைகளை விலை கொடுத்தும், அடிமைக் கப்பல்களை சிறைப்பிடித்தும் பிடிக்கப்பட்டவர்களை வைத்து ‘ஜானிசர்ஸ்’ (JANISSARS) என்ற ஒரு இராணுவ பிரிவையே வைத்திருந்தார்கள். இவர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்ட வர்கள், எந்த நிலையிலும் உயிருக்கு பயப்படாதவர்கள். மேலும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டார்கள். பெர்ஷியாவிலிருந்து கிழக்கு ஐரோப்பா வரையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஓட்டோமான் அரசின் நிர்வாகம் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. சுல்தானுக்கு அடுத்த நிலையிலிருந்தவர்கள் குலாம் என்று அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் காஸி போராளி குழுவிலிருந்து இஸ்லாமுக்காக போரிட்டதால், ஆளும் சுல்தான்கள் மதத்தலைவர்களாகவும் இருந்தார்கள். பிற்காலத்தில் புனித நகரமான மக்கா, மதீனாவையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 1345 ல் ஐரோப்பாவில் பைஸாந்தியப் பேரரசுக்கு எதிராக உள்நாட்டுப்போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அப்படிப் போனவர்கள் ஐரோப்பாவில் தங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்கள். அது அவர்களை சரித்திரத்தில் 400 வருடங்களுக்கு மேலாக ஆண்ட பேரரசாக ஆக்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக