புதன், 8 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 17

தற்போது அக்பரின் ஆசையின்படி ஜஹாங்கீர் டெக்கான் மீது கவனம் செலுத்தினார். முதலில் அஹ்மத்நகர் மீது படையெடுத்த போது நிஜாம்ஷாஹி மன்னராட்சியாக இருந்த அஹ்மத் நகரின் அபிசீனிய மந்திரி மலிக் அம்பரின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அவரின் வயதும் இராணுவ அநுபவமும் மொகலாயர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மலிக் அம்பர் மிகச் சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுனராகவும் இருந்தார். நாட்டின் வருவாயை மறுசீரமைப்பு செய்து வெற்றி கண்டிருந்தார். இவரின் இந்த வெற்றி அணுகுமுறையையே அக்பர் தொடர்ந்திருந்தார். இராணுவத்தினரை ஒழுங்கு படுத்தி கொரில்லா பயிற்சியும் அளித்திருந்தார். மொகலாயப் படைகளுக்கு அப்துர் ரஹீம் தலைமை தளபதியாக பொறுப்பேற்று அஹ்மத்நகரில் மலிக் அம்பரிடம் படுதோல்வி அடைந்தார். 1611ல் அப்துர் ரஹீம் தங்கத்தை கையூட்டாகப் பெற்று தோல்வி அடையச் செய்தார் என்று அவரின் எதிரிகளால் சொல்லப்பட்டது. ஜஹாங்கீர் கான் ஜஹான் லோதி என்பவரை தளபதியாக நியமித்து இளவரசர் பர்வேசுடன் காந்தேஷிலிருந்து அஹ்மத்நகர் மீது தொடர் தாக்குதல் நடத்தச் செய்தார். குஜராத்தின் கவர்னர் அப்துல்லாஹ்வும் கலந்து கொண்டார். ஆனாலும் தோல்வியிலேயே முடிந்தது. மொகலாயர்களுக்கு பெரும் சவாலாக இருந்த அஹ்மத்நகர் மீது 1617 ல் இளவரசர் குர்ரம் தலைமையில் சிறந்த இராணுவ அதிகாரிகள் துணையுடன் அனுப்பப்பட்டார். ஜஹாங்கீரின் ஆலோசனைப்படி ஆதில் ஷாவிடம் அமைதிக்கு பேச்சு வார்த்தை நடத்தினர். ஆதில் ஷா இளவரசருக்கு பதினைந்து லட்சம் ரூபாய் பெருமான பரிசுகளை அளித்து மலிக் அம்பரால் கைப்பற்றப் பட்டிருந்த மொகலாய பிரதேசங்களை திருப்பித் தர ஒப்புக் கொண்டார். இதில் இளவரசர் குர்ரமின் நடவடிக்கையும் பாராட்டப்பட்டு “ஷா ஜஹான்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். பேரரசர் ஜாங்கீரால் தட்டு நிறைய தங்கத்தை தலையில் கொட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார். சிறப்பான விருந்தளிக்கப்பட்டு மேலும் விலைமதிப்பில்லாத பரிசுகள் வழங்கப்பட்டன. 1629 ல் ஜஹாங்கீரின் மறைவிற்குப் பிறகு, அஹ்மத்நகர் வெல்லப்பட்டது. 
குஸ்ரு என்ற இன்னொரு இளவரசர் தந்தை ஜாங்கீருக்கு எதிராக சதி செய்து ஆட்சியைப் பிடிக்க முயற்ச்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்து இளவரசர் கண்கள் பறிக்கப்பட்டார். ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, நான்கு பேர் தூக்கிலிடப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு, குஸ்ருவின் துரோகம் மறக்கப்பட்டு, தந்தையின் பாசத்தால் கை தேர்ந்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குஸ்ருவிற்கு சிறிது பார்வை தெரியுமாறு செய்யப்பட்டது. அதனால் குஸ்ரு தந்தையின் கீழ் மரியாதையாக இருந்தார். இது சகோதரர் ஷாஜஹானுக்கு சற்று பிடித்தமானதாக இல்லை. இதனிடையில் தான் நூர்ஜஹான் தனது மருமகன் ஷஹ்ர்யாரை அடுத்து ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டார். அவரும் குஸ்ருவை விரும்பவில்லை. 1616 ல் பரம எதிரியான ஆசஃப் கானால் இளவரசர் குஸ்ரு சிறை பிடிக்கப்பட்டார். பின் ஷாஜஹான் வசம் 1622 ல் ஒப்படைக்கப்பட்டு புர்ஹான்பூர் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார். ஆனால் கடுமையான குடல் வலியால் இறந்து போனதாக சொல்லப்பட்டது. குஸ்ருவின் மீது பாசமாயிருந்த ஜஹாங்கீரால் இவரது அடக்கவிடம் தோண்டப்பட்டு, அலஹாபாத்தில் குஸ்ரு பாக் என்ற தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டார். இளவரசர் குஸ்ரு நாட்டு மக்களால் மதிக்கப்பட்ட அழகான தோற்றம் கொண்டவராய் இருந்தார். முப்பத்தைந்து வயது வரை ஒரே மனைவியுடன் அன்பாக இருந்தார். 
அவ்வளவாக கவனம் செலுத்த முடியாத தூரத்தில் அக்பர் ஆட்சியிலிருந்து பெங்கால் மொகலாயர்கள் வசம் இருந்தது. மொகலாயர்களுக்கு அடிபணிந்தவராக ராஜா மான் சிங் ஆண்டு வந்தார். அவர் பெயருக்கு தான் மொகலாயர்களுக்கு கீழிருப்பது போல் நடித்தாரே தவிர அவர் எண்ணமெல்லாம் ஆப்கானியர்களை இந்தியாவில் ஆளச் செய்யவேண்டும் என்ற ஆசையில் இருந்தார். எப்படியாவது மொகலாயர்களை அழிக்க எண்ணி தானே பெங்கால் முழுதும் சுற்றி புரட்சி குழுக்களையும், ஜமீந்தார்களையும் சந்தித்தார். அதற்கேற்றவாறு பல பகுதிகளின் கவர்னர்களை மாற்றி வைத்தார். உஸ்மான் என்பவரின் மூலம் 1612 ல் புரட்சியில் இறங்கி மொகலாயர்களுக்கெதிராக போரிட்டார். இதில் பலமான காயம் அடைந்த நிலையிலும் உஸ்மான் ஆறு மணி நேரம் படைகளை நடத்தினார். இறுதியில் தோல்வியுற்று பெங்கால் மொகலாயர்கள் வசமானது. ஜஹாங்கீர் இஸ்லாம் கான் என்பவரை தரம் உயர்த்தி அதன் கவர்னராக்கினார். ஆப்கானியர்களை கனிவாக நடத்தி அவர்களுக்கும் பதவிகளை ஜஹாங்கீர் கொடுத்தார். இதனால் பெங்கால் பலமானதாக இருந்தது. 1616 ல் இந்தியாவில் அக்குள் பகுதியை கடுமையாக தாக்கிய ப்ளேக் நோய் பரவியது. முதலில் எலிகளிடம் ஆரம்பித்த இது வேகமாக மனிதர்களிடம் பரவியது. பஞ்சாபில் துவங்கிய நோய் மொத்த வட இந்தியாவையும் தாக்கியது. அடுத்தடுத்து பலர் இறந்தனர். பெரும் தொற்றாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு காடுகளுக்கு ஓடினர். லாகூர், காஷ்மீர் மற்றும் ஆக்ராவில் பலர் உயிரிழந்தனர். 
       ஜஹாங்கீரின் ஆட்சியில் அவரின் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. டெஹ்ரானைச் சேர்ந்த கியாஸ் பேக் என்பவரின் அழகிய மகள் மெஹ்ர் உன் நிசா என்பவருடன் ஜஹாங்கீருக்கு திருமணம் நடந்தது. மணமகள் உச்ச அழகியாக இருந்தார். கியாஸ் பேக் தன் சொந்த ஊரை விட்டு நல்ல வாழ்க்கையை நாடி இந்தியா வந்தார். அவர் கந்தாரில் இருந்த போது அவர் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. வறுமையின் காரணமாக கியாஸ் பேக்கால் தாயையும், குழந்தையையும் சரியாக கவனிக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நல்ல மனம் படைத்த மலிக் மசாவூத் என்ற வியாபாரியின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்தார். அந்த வியாபாரிக்கு மொகலாய அரண்மனையில் சில தொடர்புகள் இருந்தது. மலிக் மசாவூத் மன்னர் அக்பருடன் பணியில் இருந்த போது சரியான சந்தர்ப்பத்தில் கியாஸ் பேக்கை அறிமுகப் படுத்தினார். உடனே அக்பரால் பணி கிடைக்கப்பட்டு அரண்மனையில் சேர்ந்தார். கியாஸின் குணத்தாலும், வேலைத்திறனாலும் பாராட்டைப் பெற்று முன்னூறு (RANK) தரத்திற்கு தகுதி பெற்றார். கியாஸின் மனைவியும், இளைய மெஹ்ர் உன் நிசாவும் தாராளமாக அந்தப்புரத்திற்கு நடமாடும் அனுமதி பெற்று ராஜகுடும்பத்திற்கு உதவியாக இருந்தார்கள். மெஹ்ர் உன் நிசா பருவம் எய்தி பதினேழு வயதான போது, பெர்ஷியாவின் இரண்டாம் ஷா இஸ்மாயிலிடம் மேஜைப் பணியாளராக இருந்த அலி குலி இஸ்தஜ்லூ (இன்னொரு பெயர் ஷேர் ஆப்கான்) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அலி குலி பேரரசர் அக்பரிடம் பணிக்கு சேர ஆவல் கொண்டார். அக்பர் அலி குலியை இளவரசர் சலீமுக்கு (ஜஹாங்கீர்) பணி செய்ய உத்தரவிட அதன் மூலம் மேவார் சென்றார். அலி குலியின் கனிவான சேவையில் மனம் குளிர்ந்த சலீம் ‘ஷேர் ஆப்கான்’ என்ற சிறப்புப் பெயரை அளித்தார். சலீம் தந்தைக்கு எதிராக புரட்சி செய்த போது அனைத்து ஆதரவாளர்களும் சலீமை விட்டு ஓடிவிட, அதில் ஷேர் ஆப்கானும் ஒருவர். தான் ஆட்சிக்கு வந்த பின் ஷேர் ஆப்கானை மன்னித்து பதவி உயர்வாக பெங்காலின் புர்த்வான் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார். 
ஷேர் ஆப்கான் ஜஹாங்கீருக்கு எதிராக புரட்சி செய்ய தயாராவதாக பெங்காலிலிருந்து தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அரண்மனைக்கு வந்து விளக்கம் கொடுக்க ஜஹாங்கீர் உத்தரவிட்டார். அதற்கு ஷேர் ஆப்கான் பணியவில்லை. இதை அப்பகுதியின் கவர்னரான குத்புதீன் கோகாவிடமும் ஜஹாங்கீர் தெரியப்படுத்தினார். குத்புதீன் கோகா முட்டாள்தனமாக ஷேர் ஆப்கானை கைது செய்ய உத்தரவிட்டார். குத்புதீன் கோகா பெரும் ஆட்களுடன் சென்று ஷேர் ஆப்கானை சூழ்ந்து கொள்ள, அதிர்ச்சியுற்ற ஷேர் ஆப்கான் ‘இது என்ன நடைமுறை? என்று வினவ, ஜஹாங்கீரின் உத்தரவை தெரிவிக்க குத்புதீன் அவரை நெருங்க, ஷேர் ஆப்கான் கவர்னரின் பணியாளை வாளினால் காயப்படுத்தினார். இந்த செயலினால் அருகிலிருந்த கவர்னரின் இன்னொரு பணியாள் ஷேர் ஆப்கானை எதிர்பாராத விதமாக வாளால் வெட்டிக் கொலை செய்தார். கணவர் இறந்த பிறகு மெஹ்ர் உன் நிசாவும், அவரின் சிறிய மகளும் அந்தப்புரத்திற்கு வரவழைக்கப்பட்டு, விதவையான ராணி சலீமா சுல்தானுக்கு பணிவிடை செய்ய நியமிக்கப்பட்டார். 1611 மே மாதம் ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசாவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசா மீது காதல் கொண்ட காரணத்தால் திட்டமிட்டே ஷேர் ஆப்கான் கொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல் நடமாடியது. ஆனால், ஷேர் ஆப்கானின் ஜஹாங்கீருடனான காலகட்டங்களை நன்கு ஆராய்ந்த பின்னும், கவர்னர் குத்புதீன் கோகாவின் கொலைக்கான விளக்கமும், அது தற்செயலாக நடந்தது தான் என்றும் ஜஹாங்கீருக்கு துளியும் சம்பந்தமில்லை என்று தெளிவானது. ஷேர்கான் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக ராணியை சந்திக்கச் சென்ற ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசாவின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொண்டார். அவரை மிகவும் விரும்பிய ஜஹாங்கீர் நூர் மஹால் ( அரண்மனையின் ஒளி) என்றும், நூர்ஜஹான் (உலகின் ஒளி) என்றும் புகழ்ந்தார். பதினாறு ஆண்டுகள் ஷேர் ஆப்கானுடன் வாழ்ந்த நூர்ஜஹான் ஜஹாங்கீருடனான நான்காண்டுகால வாழ்க்கையிலேயே பேரரசி ஆனார். இவர் மீது ஜஹாங்கீர் கொண்டிருந்த அன்பின் அடையாளமாக இஸ்லாமிய மன்னர்களிலேயே முதல்முறையாக நாணயத்தில் மனைவியைப் பொறித்தார்.
நூர்ஜஹான் விரைவில் பேரரசியாக புகழின் உச்சத்திற்கு வந்தார். உயர் கலாச்சாரத்தின் வடிவமாக திகழ்ந்த இவர் அரபு மற்றும் பெர்ஷிய மொழியில் புலமை வாய்ந்திருந்தார். கவிதைகளைப் புனைவதிலும் திறமை வாய்ந்த இவர் அரண்மனையின் மதிய வேளைகளை சிறப்பாக்கினார். இந்தியாவில் அதுவரை இல்லாத வகையில் புதுமையாக ஆபரணங்களையும், சில்க் மற்றும் காட்டன் உடைகளுக்கு அலங்காரங்கள் வடிவமைத்தார். இன்றைக்கும் இருக்கும் ரோஜா வாசம் கொண்ட அத்தர் என்னும் நறுமணம் இவர் கண்டுபிடித்தது தான். நூர்ஜஹானின் உருவ அமைப்பும் அவரின் பேரரசி தோற்றத்திற்கு கம்பீரமாக இருந்தது. கணவருடன் வேட்டைக்குச் சென்று புலிகளை வேட்டை ஆடியிருக்கிறார். ஒரு சமயம் இவர் திறமை கண்டு ஜஹாங்கீர் வியந்து வைரங்கள் பதிக்கப்பட்ட இரண்டு கை வளயங்களை பரிசளித்தார். மேலும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆயிரம் தங்க வில்லைகளையும் அளித்தார். தனது அதிபுத்திசாலி தனத்தால் எந்த சிக்கலும், ஆபத்துகளும் விளையாவண்ணம் பார்த்துக் கொண்டார். போரின் போது யானையின் மீது அமர்ந்து அம்புகளை எதிரியின் மீது எரிவதைப் பார்த்து இராணுவ அதிகாரிகளும், திறமையான போர் வீரர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
     

மொகலாய வரலாறு 18

ஜஹாங்கீரின் அரசியல் அதிகாரத்திற்கு பின் பலமாக நூஜஹான் திகழ்ந்தார். இவரின் உடன் புரிந்து கொள்ளும் ஆற்றலும், நுண்ணறிவும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஜஹாங்கீருக்கு பக்கபலமாக விளங்கினார். மந்திரிகளும், அறிவாளிகளும் இவரின் ஆலோசனைகளை ஏற்றார்கள். நிர்வாகத்தின் எந்த விஷயமும் இவரின் கவனத்திலிருந்து தப்பாது. அதே நேரத்தில் எல்லாமே நல்லதாக செய்தார் என்று கொள்ள முடியாது. தன் சொந்த குடும்பத்தினரின் நன்மையையே கருதினார். அவர்களை நல்ல பதவிகளில் அமர்த்தி தன்னைச் சுற்றி அவர்களையே வைத்துக் கொண்டார். ஷேர் ஆப்கான் மூலம் தனக்குப் பிறந்த மகளை ஷஹ்ர்யாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மேலும் தான் அதிகாரம் பெற ஷஹ்ர்யாரை ஆட்சிக்கு கொண்டுவர முயற்ச்சித்தார். ஜஹாங்கீருக்குப் பிறகு இளவரசர் குர்ரம் தான் ஆட்சிக்கு வருவார் என்று தெரிந்தும் தன் மருமகனை பதவிக்கு கொண்டுவர முயற்சி செய்தார். இதனால் அரண்மனையும், அந்தப்புரமும் அரசியலின் மத்திய களமானது. மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்த இளவரசர் குஸ்ருவை இடைவிடாத சதி செய்து கணவரிடமிருந்து தூரமாக்கினார். மேவாரின் வெற்றிக்குப் பிறகு ஷா குர்ரம் என்றும், டெக்கானின் வெற்றிக்குப் பிறகு ஷாஜஹான் என்றும் ஜஹாங்கீரால் புகழப்பட்ட குர்ரமின் புகழைக் குறைக்க பெரும் முயற்சி செய்தார். இளவரசர் குஸ்ருவின் மரணம், கந்தாரின் இழப்பு மற்றும் குர்ரம், மஹபத் கானின் புரட்சி ஆகியவற்றை தனக்கு சாதகமாக திட்டமிட்டார். அதேநேரத்தில் அநாதைப் பெண்களுக்கும், ஏழைப் பெண்களுக்கும் ஆதரவளித்தார். தனது சொந்த வருவாயிலிருந்து பலருக்கு உதவி செய்து நற்பெயரைப் பெற்றிருந்தார். கலப்படமில்லாத அன்பை கணவர் மீது வைத்திருந்தார். ஜஹாங்கீரின் போதை பழக்கங்களைக் குறைத்தார். அரசின் அநாவசியமான செலவுகளையும் தடை செய்தார். 
ஷாஜஹான் தந்தை நூர்ஜஹான் மீது வைத்திருந்த அன்பை அளவிட முடியாமல் இருந்தார். தன் ஆட்சியை காத்துக் கொள்ள புரட்சியில் இறங்கினார். பெரும் படையுடன் ஆக்ராவை நோக்கி முன்னேறிய ஷாஜஹான் தந்தையின் படையுடன் பலோச்பூர் என்ற இடத்தில் மோதினார். இதில் ஷாஜஹான் தொல்வி அடைய, மொகலாய தளபதி ஷாஜஹான் போகுமிடமெல்லாம் விரட்டி வந்து அசீர் என்ற இடத்தை எதிர்ப்பின்றி கைப்பற்றினார். ஆதரவாளர்கள் அனைவரும் ஷாஜஹானைக் கைவிட மலிக் அம்பரிடம் ஆதரவை வேண்டினார். அவர் மறுத்துவிட, கோல்கொண்டாவின் ஆட்சியாளரிடம் சென்றார். அவரும் மறுத்துவிட பெங்காலுக்கு வந்தார்.  பெங்காலின் ஆதரவுடன் அலஹாபாதில் மொகலாயப் படைகளுடன் மோதினார். மீண்டும் தோல்வியைத் தழுவ தப்பி ஓடி, ரோஹ்டாஸ் கோட்டையில் சில காலம் ஓய்வெடுத்தார். மீண்டும் டெக்கான் திரும்பி மொகலாயர்களின் பழைய எதிரியாக இருந்த மலிக் அம்பரிடமே வந்தார். இம்முறை மலிக் அம்பர் அரவணைக்க, புர்ஹான்பூர் மீது தாக்குதல் நடத்தினார். மீண்டும் மொகலாய படைகளிடம் தோல்வியுற்றார். ஷாஜஹானின் அதிகாரிகளும், வீரர்களும் இவரை விட்டு மொகலாயப் படைகளுடன் சேர்ந்து கொண்டனர். மீண்டும் ரோஹ்டாஸ் கோட்டையில் தஞ்சமடைந்த ஷாஜஹானால் பெரும் மொகலாய படைகளை சமாளிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் தான் இதுவரை புரிந்த எதிர்ப்புகளுக்காக மன்னிக்க வேண்டி கடிதம் எழுதினார். அதேநேரத்தில் மொகலாய அரசில் அதிவேகமாக வளர்ந்து வரும் மஹபத்கான் மற்றும் இன்னொரு இளவரசர் பர்வேசின்வளர்ச்சியை விரும்பாத நூர்ஜஹான், கணவர் ஜஹாங்கீரிடம் ஷாஜஹானை மன்னித்துவிட ஆலோசனை சொல்கிறார். ஷாஜஹான் தன் வசமிருந்த ரோஹ்டாஸ் கோட்டை மற்றும் அசீர் பகுதிகளை தந்தையிடம் ஒப்படைத்தார். மேலும் உத்தரவாதமாக பத்து வயதுள்ள தாரா மற்றும் எட்டு வயதுள்ள ஒளரங்கஸேப் ஆகிய தனது மகன்களையும் ஜஹாங்கீரின் அரண்மனைக்கு அனுப்பினார். ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளையும் பேரரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது மனைவி மற்றும் இன்னொரு மகன் முராதுடன் நாசிக் சென்றார். 
ஷாஜஹானின் இந்த சமாதானம் நூர்ஜஹானிடம் சற்று அமைதியை ஏற்படுத்தியது. இளவரசர் குஸ்ருவின் மரணம், ஷாஜஹானின் அமைதியைப் பயன்படுத்தி அவ்வப்போது புரட்சியில் ஈடுபடும் மஹபத்கானின் பக்கம் நூர்ஜஹான் கவனம் செலுத்தினார். அடுத்து தன் மருமகனுக்கு ஆட்சியைப் பிடிப்பதில் எதிராக இருப்பது இளவரசர் பர்வேஸ் மட்டுமே என்பதையும் கவனம் கொண்டார். நூர்ஜஹானின் திட்டப்படி, இராணுவ தலைமையில் இருந்து மஹபத் கானை ராஜினாமா செய்துவிட்டு பெங்காலின் நிர்வாகத்தைக் கவனிக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்த பர்வேஸ் பின் அடங்கிப் போனார். மஹபத்கான் உத்தரவை ஏற்காவிட்டால் ஊழல் செய்ததாக விசாரிக்கப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டு, இதுவரை அவர் வசம் இருந்த முக்கிய துறைகளின் கணக்குகளை ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும் அரசின் ஆலோசனை இன்றி தன் மகளுக்கு க்வாஜாஹ் உமர் நக் ஷ்பந்தியின் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்தது பற்றியும் விசாரிக்கப்பட்டார். மஹபத்கானின் மருமகனாக வர இருப்பவரையும் விசாரணை என்ற பேரில் தொந்திரவு செய்யப்பட்டார். மேற்கூறிய மொத்த புகாருக்கும் அரண்மனைக்கு வந்து விளக்கம் கூற உத்தரவிடப்பட்டார்.
ராஜாங்கத்தின் இந்த அணுகுமுறையால் பெரிதும் அவமானம் கொண்ட மஹபத்கான், ஜஹாங்கீர் தன் குடும்பத்துடன் ஐந்தாயிரம் ராஜபுத்திர வீரர்களுடன் ஜீலம் நதியைக் கடக்க இருந்த போது சென்று சிறை பிடிக்கச் சென்றார். நூர்ஜஹான் தன் மருமகனுடன் தப்பித்துக் கொண்டார். மொகலாய தளபதி ஃபிதாய்கான் எதிர் தாக்குதல் நடத்தி ஜஹாங்கீரைக் காப்பாற்ற முயன்று தோல்வி கண்டார். நூர்ஜஹான் ஆற்றைக் கடந்து யானை மீது அமர்ந்து மொகலாய வீரர்களுக்கு உத்தரவிட முயன்றார். ஆனால் அதிகாரிகள் ஓடிவிட்டனர். அசஃப்கான் தன் மூவாயிரம் வீரர்களுடன் ஓடி அட்டாக் கோட்டையில் ஒளிந்து கொண்டார். நூர்ஜஹான் ஒரு திட்டத்தை மனதில் கொண்டு மன்னருடன் சேர்ந்து கொண்டார். மிச்சமிருந்த வீரர்களின் உதவியுடன் மஹபத்கானை எதிர்கொண்டு, அவரின் செல்வங்களைக் கைப்பற்றினார். தப்பி மேவார் ஓடிய மஹபத்கான் பின் டெக்கான் சென்று ஷாஜஹானுடன் சேர்ந்து கொண்டார்.
1626 ல் இளவரசர் பர்வேஸும், 1627 ல் காஷ்மீரிலிருந்து திரும்பும் போது ஜஹாங்கீரும் மரணமடைந்தார்கள். இப்போது பட்டத்துக்கு உரியவரான ஷாஜஹான் ஷஹ்ர்யாரை எதிர்க்க முழுவீச்சில் தயாரானார். பேரரசர் ஜஹாங்கீரின் உடல் லாகூரில் ஷஹ்தாரா என்ற இடத்தில் உள்ள நூர்ஜஹானின் தில்குஷா தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது டெக்கானிலிருந்த ஷாஜஹானுக்கு தந்தை இறந்த செய்தியை மாமனார் அசஃப் கான் தான் தெரியப்படுத்தினார். லாகூரில் ஜஹாங்கீரின் அடக்கப் பணியிலிருந்த நூர்ஜஹானும், ஷஹ்ர்யாரும் எல்லாம் முடிந்த பிறகு, ஷஹ்ர்யார் மொகலாய மன்னராக அறிவித்து அரசு பெட்டகத்தைக் கைப்பற்றிக் கொண்டார். தன் மருமகன் ஆட்சிக்கு வரவேண்டியவர் என்று நம்பிய அசஃப்கான், ஷாஜஹான் வரும் வரை இறந்து போன குஸ்ருவின் மகன் தாவர் பக் ஷை தற்காலிக மன்னராக ஆக்ராவில் அறிவித்தார். நூர்ஜஹான், தனது சகோதரன் அசஃப்கானுக்கு தன் புறம் சாதகமாக இருக்க வேண்டுகோள் விடுத்தார். அசஃப்கான் பலத்த இராணுவத்துடன் லாகூரிலிருந்த ஷஹ்ர்யாருடன் மோதி, அவரை வென்று சிறையிலடைத்து கண்களைப் பிடுங்கினார். இதற்கிடையில் டெக்கானிலிருந்து திரும்பிய ஷாஜஹான் 1628 பிப்ரவரியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். காலமெல்லாம் ஷாஜஹானுக்கு எதிராகவே இருந்து சதி செய்த நூர்ஜஹான் மன்னிக்கப்பட்டு கௌரவமாக நடத்தப்பட்டார். ஷாஜஹான் அவருக்கு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினார். தனது ஆடம்பரங்களை எல்லாம் துறந்த நூர்ஜஹான் தனது விதவை மகளுடன் (ஷஹ்ர்யாரின் மனைவி) லாகூரில் வாழ்ந்தார். 1645 டிசம்பரில் இறந்த நூர்ஜஹானின் உடல் லாகூரில் கணவர் ஜஹாங்கீருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜஹாங்கீரின் ஆட்சியின் போது தான் மூன்று ஐரோப்பிய நாட்டினர் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்தினர் வருகை தந்தனர். அவர்கள் மொகலாயர்களுடன் நல்லுறவைப் பேணினர். ஜஹாங்கீரும் போர்ச்சுகீசியர்களுடன் சுமுகமான உறவை வைத்திருந்தார். ஆக்ராவிலும் லாகூரிலும் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டி சுதந்திரமாக வழிபடும், விரும்பியவர்கள் கிறிஸ்தவ மதம் மாறவும் அனுமதித்தார். தானும் ஏசு மற்றும் கன்னி மாதா உருவப்படங்களை வைத்திருந்தும், கிறிஸ்தவ மடங்களுக்கு பொருளுதவியும் செய்தார். போர்ச்சுகீசியர்களும் ஜஹாங்கீருக்கு மேற்கத்திய ஆயுதங்களை வரவழைத்து தந்தார்கள். 1613 ல் போர்ச்சுகீசியர்கள் மொகலாயர்களின் நான்கு கப்பல்களை சிறைப்பிடித்து கொள்ளையடித்தார்கள். இதன் எதிர் விளைவாக தாமன் பகுதியில் சர்ச்கள் மூடப்பட்டு அவர்களின் கிறிஸ்தவ கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதன் முழு விளைவுக்கும் போர்ச்சுகீசியர்களே காரணம்.
அப்போது பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் வாணிகம் செய்ய ஆவல் கொண்டன. 1600 ல் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்டது. 1600 லிருந்து 1608 வரை ஆங்கிலேயர்கள் மூன்று குழுக்களை ஜஹாங்கீரிடம் அனுப்பி வாணிபத்திற்கு பேச்ஸ்ர் வார்த்தை நடத்தினார்கள். அவைகள் தோல்வியில் முடிந்தது. காரணம் ஆங்கிலேயர்களின் வரவை போர்ச்சுகீசியர்கள் போட்டியாகக் கருதினார்கள். 1608 ல் வில்லியம் ஹாக்கின்ஸ் என்ற கடற்தளபதி, இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மொகலாயர்களுக்கு எழுதிய கடிதத்துடன் ஆக்ரா வந்தார். சூரத் நகரத்தில் ஒரு தொழிற்சாலைக் கட்டி தொழில் செய்ய உத்தரவு வேண்டினார். வில்லியம் ஹாக்கின்ஸை பேரரசர் நன்றாக வரவேற்று ஒரு மன்சாப் தகுதியும், 30,000 ஊதியமும் கொடுத்து கௌரவித்தார். ஆங்கிலேயர்களின் தொழிற்சாலைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உடனே போர்ச்சுகீசியர்களின் வற்புறுத்தலால் மறுக்கப்பட்டது. ஹாக்கின்ஸ் போன பிறகு, வில்லியம் எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் அதே கோரிக்கையுடன் வந்தார். அவருக்கும் அனுமதியளிக்கப்பட்டு, உடனே மறுக்கப்பட்டது. ஹாக்கின்ஸ் மற்றும் எட்வர்டுக்குப் பிறகு, இங்கிலாந்தின் தூதர் சர். தாமஸ் ரோய் இந்தியாவிற்கு வருகை தந்தார். வந்தவர் தூதுவர் ஆனதால் சிறப்பான முறையில் அரசியல் ரீதியான அணுகுமுறையாலும், வாணிபக் கண்ணோட்டத்திலும் பேச்சு வார்த்தை நடத்தினார். நூர்ஜஹான், அசஃப்கான், ஷஹ்ர்யார் மற்றும் ஷாஜஹானுக்கு மதிப்பான பரிசுகளைக் கொடுத்தார். இறுதியில் சூரத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலை கட்டிக் கொள்ள ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார். ஆங்கிலேய கப்பல்களும் சுதந்திரமாக துறைமுகம் வர அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வரவை விரும்பாத போர்ச்சுகீசியர்கள் அவர்களின் கப்பல்களை தாக்கினார்கள். ஆங்கிலேயர்களின் வருகை இந்தியாவில் ஒரு புதிய உறவை ஏற்படுத்தியதின் விளைவாக நினைவு கல்வெட்டை பதித்தார்கள். 
  

 

 

திங்கள், 6 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 11

ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர்
கூ.செ.செய்யது முஹமது
                                                 அக்பரின் முழுப்பெயர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் மொகலாயப் பேரரசின் அதிமுக்கிய மன்னரானவர். தன் குடிமக்களின் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாக ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். சிறுவய தில் சிறிய தந்தை கம்ரானின் பாதுகாப்பில் இருந்த போது, ஹுமாயுன் கம்ரா னைச் சுட கம்ரான் குழந்தை அக்பரை துப்பாக்கிக்கு முன் நீட்டினார். அதிர்ஷ்ட வசமாக அன்று அக்பர் தப்பித்தார். பனிரெண்டு வயதான போதே ஒட்டகம், யானை, குதிரைகளை கையாளும் திறமையைப் பெற்றார். போர்க்கருவிகளை யும் சிறப்பாகப் பயன்படுத்த அறிந்துகொண்டார். தந்தை ஹுமாயுன் இறந்த போது பதிமூன்று வயதான அக்பர் 1556 ல் பிப்ரவரி மாதம் 14 ல் பதவியேற்றார். சிறு வயதாய் இருந்ததால், தந்தையின் நண்பரான பைரம் கான் அதிகாரத்தில் உதவி புரிந்தார். அக்பரின் இளைய சகோதரர் முஹம்மது ஹகீம் காபூலின் தலைமையை ஏற்றார்.
                                        அக்பர் பதவியேற்ற வேளையில் இந்தியாவில் கடுமையான ப்ளேக் நோய் பரவி எண்ணற்றவர்கள் மரணமடைந்தனர். பூகோ ள அமைப்பின்படி பிரதேசம் மிகவும் சிறியதாக இருந்தது. அரசியல் ரீதியாக வடமேற்கு இந்தியாவை சிக்கந்தர்சூரும், முஹம்மது ஆதிலும் பிரித்து ஆண்டு கொண்டிருந்தார்கள். ஆப்கானுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே டெல்லி மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது. காபூலை சுதந்திரமாக முஹம்மது ஹக்கீம் ஆண்டு கொண்டிருந்தார். பதக் ஷானின் சுலைமான் இவருக்கு மிரட்ட லாக இருந்தார். பெங்காலும் சுதந்திரமாக ஆப்கான் ஆட்சியாளரின் அதிகாரத் தில் இருந்தது. ராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள் பாபரிடம் கண்ட தோல்வியிலி ருந்து இன்னும் மீளாமல் கோட்டையில் முடங்கி இருந்தனர். மால்வாவும், குஜராத்தும் அதன் மத்தியஅரசுடன் இணைந்து முஹம்மது துக்ளக் ஆண்டு வந்தார். கோண்ட்வானா உள்ளூர் தலைவனால் ஆளப்பட்டும், ஒரிசா சுதந்திரப் பிரதேசமாகவும், காஷ்மீர், சிந்த் மற்றும் பலுசிஸ்தான் யாருடைய கட்டுப்பாட் டிலும் இல்லாமல் இருந்தது. அஹமதாபாத், பிஜப்பூர், கோல்கொண்டா, காந் தேஷ் மற்றும் பிரார் போன்றவற்றை தனித்தனி சுல்தான்கள் ஆண்டு வந்தார் கள். இந்து பேரரசு விஜயநகரம் பலம் வாய்ந்தும், செல்வச் செழிப்பாகவும் இருந்தது. போர்ச்சுகீசியர்கள் அரபிக்கடல், பெர்ஷிய கடல்பகுதிகளில் பலமாக இருந்து இந்தியாவின் மேற்குக் கடலோர துறைமுகங்களிலும், கோவா, டையூ போன்ற இடங்களிலும் வாணிபம் செய்து கொண்டிருந்தார்கள். இதுதான் அக் பர் பதவியேற்றபோது இருந்த இந்தியாவின் அரசியல் அமைப்பு.                        
                                                      இராணுவத்தலைமை அதிகாரி ஹேமு, ஏற்கனவே இருபத்தி இரண்டு போர்களை முன்னின்று நடத்தி அனுபவம் பெற்றவர். இவர் பெரும்படைகளுடன் தலைநகர் சுனாரிலிருந்து ஆக்ரா நோக்கி மொகலாயர் களை எதிர்க்க வந்து கொண்டிருந்தார். பைராம்கான் தயாராகி வருவதற்குள், டெல்லியின் கவர்னர் தர்தி பெக் ஆக்ராவில் தோற்கடிக்கப்பட்டு தப்பி ஓடிவிட் டார். அக்பர் குறிப்பிட்ட வயதை எட்டும் வரை பைராம் கான் கண்ணும் கருத்து மாக வளர்த்து வந்தார். பைராம்கானின் தலையாய காரியம் ஹேமுவை வெற்றி கொள்வதாக இருந்தது. இராணுவ அதிகாரிகளும் அதையே கூறினார் கள். பைராம்கான் தவறுதலாக படை நடத்தி தோல்விகண்டு தப்பி யோடிய தர்திபெக்கை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு தானே ஹேமுவை எதிர்க்க தயாரானார். மொகலாய முன்னனிப்படைகள் ஹேமுவைத்தாக்கி கண்ணை ஊனமாக்கியது. அவன் யானையின் மீதிருந்து கீழே விழுந்தான். வீரர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இரு படைகளும் இரக்கமில்லாமல் மோதி க்கொண் டன. இறுதியில் மொகலாயப் படை வெற்றிபெற்றது. ஹேமு சிறைப் பிடிக்கப்பட்டு பேரரசர் முன் நிறுத்தப்பட்டான். பைராம்கான் இளம்மன்னன் அக்பர் ஹேமுவைக் கொல்வதைப்பார்க்க ஆர்வமாய் இருந்தார். ஆனால், அக் பர் தோல்வியுற்று கைதியாகிய ஒருவனைக் கொல்ல தான் விரும்ப வில்லை என்று கூறுகிறார். உடனே பைராம் கான் தனது வாளை உருவி ஹேமுவைக் கொன்றுவிடுகிறார்.
                                             அக்பரின் பலமான எதிரி பானிபட்டில் நடந்த இந்தப் போரினால் தோற்கடிக்கப்பட்டது. போரில் பெருவாரியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொன்பொருட்களும், 1500 யானைகளும் கைப்பற்றப்பட் டன. டெல்லி, ஆக்ரா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் மொகலாய வசமா யின. ஹேமுவின் மூலம் இந்து சாம்ராஜ் ஜியத்தை நிறுவதற்கு போட்ட திட் டம் சரிந்தது. அக்பர் இந்தியாவின் பேரரசர் ஆனார். இரண்டாம் பானிபட் போரையும் மொகலாயர்களே வென்றார்கள். இப்போது பைராம்கானும், அக்ப ரும் சூர் பிரதேசத்தின் மீது கவனம் கொண்டார்கள். பைராம்கான் சிக்கந்தர்சூரு க்கு எதிராக ஒரு படையை அனுப்பினார். சிக்கந்தர்சூர் தப்பித்து சிவாலிக் மலையின் மன்காட் பகுதியிலிருந்து எதிர்கொண்டார். அங்கிருந்து எதிர்ப்பின் பலம்குன்றி சரணடைந்தார். சிக்கந்தர்சூர் கிழக்கில் ஒரு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டு 1569 ல் மரணமடைந்தார். 1557 ல் முஹம்மது ஷா ஆதில் பெங்காலில் போரிட்டு மரணமடைந்தார். 1558 ல் அஜ்மீர், குவாலியர், ஜான்பூர் அகியவை மொகலாயப் பேரரசுடன் இணைந் தன. பைராம்கான் தற்போது உள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
பைராம்கானின் தனி வரலாறு  
                                                    பைராம்கான் பிறப்பால் ஒரு துருக்கியர். ஷியா பிரிவு முஸ்லீமைச் சேர்ந்தவர். தனது எஜமானர் ஹுமாயுனின் வீழ்ச்சியிலும், குடு ம்ப விவகாரத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். இவரின் ஆலோசனையால் தான் ஹுமாயுன் மீண்டும் இந்தியாவை வெல்ல முடிந்தது. ஒரு மன்னனுக்கு நன்றி விசுவாசத்துடன் கூடிய சிறந்த அறிவாளி அமைவது மிகவும் அபூர்வம், அதற்கு பைராம்கான் சிறந்த உதாரணம். துரோகத்தனமே மிஞ்சி இருக்கும் மன்னர்களின் வாழ்க்கையில் அக்பர் போன்ற சிறிய மன்ன னை பக்குவப்படுத்தி பேரரசராக உயர்த்தியதிலிருந்து இவர் தனிப்பெருமை யுடன் விளங்குகிறார். இவரின் கீழ்தான் ஒரு பேரரசுக் குண்டான பரந்த பிரதே சங்கள் அக்பருக்கு வென்று கொடுக்கப்பட்டது. ஒழுக்கத்துடன் கூடிய அரசியல் வாதியான இவரின் ஆற்றலும், அறிவும் மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரி தும் பயன்பட்டது.
                                                                  அக்பர் மற்றும் பைராம்கானின் நட்பு மிகவும் உணர்ச்சிகரமானது. ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம், மாற்றாந் தாய் மஹாம் அன்காஹ், மாற்றான் சகோதரர் ஆதம்கான், டெல்லி கவர்னர் ஷஹாபுத்தீன் ஆகியோர் சொந்த விருப்பின் காரணமாக பைராம்கானை வெறு த்தனர். குழந்தையிலேயே அக்பரிடம் நன்கு பரிச்சயமாக இருந்தாலும், தனக் காகவும், தன் பணியாட்களுக்காகவும் எந்த சிபாரிசுக்கும் அக்பரிடம் சென்ற தில்லை.  ஆனால் இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒருமுறை அக்பர் யானைகளுடன் போர்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது, அதில் இரண்டு யானைகள் தடுப்பைத் தாண்டி அருகிலிருந்த பைராம்கானின் கூடாரத்தை பிடுங்கி பைராம்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவி க்க இருந்தன. உடனே அக்பர் தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் பாய்ந்து யானைகளைக் கட்டுப்படுத்தினார். இதனால் பைராம்கான் கடும்கோபம் கொண்டு உடனிருந்த இரு பணியாட்களைக் கொன்று விடுமாறு உத்தரவிட் டார்.
                                          

மொகலாய வரலாறு 12

                                                               ஒரு சமயம் அக்பரின் ஆசிரியர் ஹுமாயுனின் உறவுப்பெண் சலீமா சுல்தானாவுக்கு தவறுதலாக கை குலுக்க முயல, அக்பர் பெரிதாக நினைக்காமல் அவரை மன்னிக்க இருந்தார். ஆனால், பைராம்கான் கோபத்துடன் அவரை சிறையில் அடைக்கச் செய்தார். இன்னொருமுறை அர ண்மனைப் பணியாள் பீர்முஹம்மது என்பவனை செய்த தவறுக்காக கொல்ல சொன்னார். மேலும் நம்பிக்கைக்காக தன் ஷியா பிரிவைச் சேர்ந்த உறவுக்கார ர்களை பணியில் அமர்த்தி இருந்தார். மேலும் ஹுமாயுனின் சகோதரர் கம்ரா னின் மகன் அபுல் யாஸிமை மன்னராக்க திட்டமிட்டிருப்பதாகவும் அக்பருக் குத் தகவல் போகிறது. இதனால் அக்பருக்கும், பைராம்கானுக்கும் இடையே ஆன உறவில் விரிசல் பலமாகிக் கொண்டு போனது. போதாக்குறைக்கு, ஒரு குழப்பம் உருவாக்கும் வகையில் ஹமீதாபானுபேகம், மஹம் அன்காஹ், ஆத ம்கான், ஷஹாபுதீன் மற்றும் அக்பர் ஆகியோர் வேட்டைக்காக பைனாஹ் போனபோது, அனைவரும் அக்பரை வற்புறுத்தி உடல் நலம் குன்றி இருக்கும் தாயாரைப் பார்க்க டெல்லி செல்ல வற்புறுத்தி அக்பரை அனுப்பிவிடுகிறார் கள்.
                                                    உடன்சென்ற மஹம் அன்காஹ் அக்பருக்கு திரும்பிச் சென்றவுடன் ஒரு உத்தரவை வெளியிட அறிவுரைக்கிறார். அதன்படி, அக்பர் டெல்லியிலிருந்து திரும்பியவுடன், நமது அரசின் நலனில் அக்கறையுள்ள அர சாங்கப் பணியாளர்கள் எல்லா பணிகளிலிருந்தும் முற்றிலுமாக விலக்கப் பட்டு புனித மக்கா பயணம் சென்று இறுதிகாலத்தை இறைவனை வணங்குவ தில் கழிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று அரசு உத்தரவொன் றைப் பிரப்பிக்கிறார். பைராம்கான் அந்த உத்தரவு தன்னைத்தான் பதவியிலி ருந்து விலக்குகிறது என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, இரண்டு நம்பிக்கை யான அதிகாரிகளை அக்பரிடம் அனுப்பி, தான் என்றைக்கும் ஆட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்றும் கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தன்னை அந்த உத்தரவிலிருந்து நீக்கவும் கோருகிறார். அக்பர் வந்த தூதுவர் களை சிறையில் அடைத்து, பீர்முஹம்மது என்ற அரசு ஊழியனிடம் செய்தி அனுப்பி பைராம்கானை மக்கா செல்ல பயணமாகும்படி கூறுகிறார். பைராம் கான் உணர்ச்சி வசப்பட்டு கலவரத்தில் இறங்குகிறார். ஆனால், விரைவில் கைது செய்யப்பட்டு அக்பரின் முன் நிறுத்தப்பட அக்பர் அவர் தனக்கு முன்பு செய்த நல்லவைகளை நினைத்து மன்னித்து விடுகிறார். அக்பரை அரண்ம னையில் கண்டதும் பைராம்கான் விழுந்து அழுதுவிடுகிறார். அக்பர் அவரை கைப் பிடித்து தூக்கி தன்னருகே வலப்பக்க இருக்கையில் அமர வைக்கிறார். அக்பர் அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் அழகிய அங்கியை அணிவித் து மூன்று மாற்று வாய்ப்புகளை அறிவித்து ஒன்றை  தேர்ந்தெடுத்துக் கொள்ள செய்கிறார்.
                                                    ஒன்று, அவர் பழைய பணியிலேயே இருப்பதானால் அரசு அவருக்கு உகந்த மரியாதை கொடுத்து அங்கீகரிக்கும். இரண்டு, அவர் விருப்பப்பட்டால் பெரிய மாகாணம் ஒன்றுக்கு கவர்னராக பதவி அளிக்கப் படும். மூன்று, புனித மக்கா பயணம் செல்வதாக இருந்தால் உரிய அரசு மரியா தையுடன் அனுப்பி வைக்கப்படுவார். பைராம்கான் ‘இந்த மூன்றை விட தாங் கள் என்னை மன்னித்து நான் முன்பு செய்த பணிகளுக்கு நன்றி செலுத்தி விட் டீர்கள் இதுவே போதும்’ என்றார். ஆனாலும், அக்பர் அவரை உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் புனித மக்காவுக்கு பயணம் அனுப்பி, அவர் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற வழிசெய்தார். ஆனால், மக்கா செல்லும் வழி யில் பைராம் கானால் பாதிக்கப்பட்ட எதிரி ஒருவனால், பதான் என்ற இடத்தில் கொல்லப்பட்டு இறந்து போனார். இது ஜனவரி மாதம் 1561 ல் நடந்தது. பைராம் கானின் மொகலாய அரசின் வெற்றிடம் பாவாடை அரசியலுக்கு (PETTY COAT POLITICS) சாதகமாகிப் போனது. டாக்டர் ஸ்மித் என்பவரின் கூற்றுப்படி, மஹம் அன்காஹ் அரசின் முக்கியமான உயர் பதவிக்கு வந்தார். ஒரு பெரிய பேரரசு க்கு தகுதியில்லாத மனசாட்சியற்ற பெண்மனி மஹம் அன்காஹ் யோக்கியம ற்றவர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தினார். டாக்டர் ஸ்மித் உண்மை யின் அடிப்படையிலேயே மதிப்பிட்டிருக்கிறார்.
                                                               எல்லா விஷயத்திலும் அவளாள் அக்பரை மீற முடியவில்லை.  பைராம்கானின் விதி முடிந்த பிறகு, ராஜ்ஜியத்தில் மஹம் அன்காஹ்வே அக்பருக்கு பிரதான எதிரியாக இருந்தாள். இவள் தூண்டுதலின் பேரிலேயே ஒருவேளை அக்பர் முழுமையாக செயல்பட்டிருந்தால், தனக்கெ திராக புரட்சியில் ஈடுபட்ட பைராம்கானை கனிவாக நடத்தி இருக்க மாட்டாள். இவள் தன் மகன் ஆதம்கானை எந்த உயர்பதவியிலும் அமர்த்த முடியவில் லை. ஒரு முறை ஆதம்கானை படைக்கு தலைமையாக்கி மால்வா பகுதிக்கு அனுப்பினார். அவன் அந்தப் போரையே நாசப்படுத்தினான். உடனே அக்பர் நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். அடுத்த முறை ஆதம்கான் ஷம்சுத்தீன் அத்கா கானை கொலை செய்து விட, அக்பர் நீதிபதிகளிடமும், வழக்கறிஞர் களிடம் அவன் தாயாரின் போக்கில் செயல்பட வேண்டாம் என்று கூறி, நேர் மையான முறையில் தீர்ப்பளிக்கச் சொன்னார். அதன்படி, ஆதம்கானை கோட்டையின் மதில் சுவரிலிருந்து இரண்டுமுறை தலைகீழாக வீசப்பட்டு தலை சிதறி சாகடிக்கப்பட்டான். ஒருவேளை அக்பர் முழுக்க மஹம் அன்கா ஹ்வின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது.
                                                  அக்பர் டெல்லி தலைநகரின் அரியணையில் இருந்து தானே நேரடியாக விவகாரங்களை கவனித்து ஆட்சி நடத்தினார். ஆட்சியில் அவ்வப்போது தோன்றிய கலவரங்கள், புரட்சியை அடக்கினார். 1560 ல் பெங்கா லில் இருந்து முஹம்மது ஷா ஆதிலின் மகன் இரண்டாம் ஷேர்ஷா டெல்லி யைக் கைப்பற்ற போரிட்டான். அக்பரின் தளபதி கான்ஸமான் என்பவரால் படுதோல்வி அடைந்து, யானைகள் மற்றும் போர்தளவாடங்களை ஒப்படைக்க மறுத்தான். அக்பர் நேரடியாக ஜான்பூர் சென்றார். அக்பர் வருவதைக் கேள்விப் பட்ட அவன் அவருக்குத் தலைவணங்கி எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத் தான். அக்பரின் வழக்கமான தாராள மனம் ஜான்பூரை இரண்டாம் ஷேர்ஷாவி டமே திரும்ப கொடுத்துவிட்டார். உஸ்பெஸ்கிஸ்தான்களை அடக்கினார்.
                                                             அக்பர் பரந்த மொகலாயப்பேரரசு இந்தியாவில் அமைய வேண்டுமானால், ராஜபுத்திரர்கள் போன்ற தாய்நாட்டு வீரர்களின் அரவணைப்பு வேண்டும் என்பதை உணர்ந்தார். அதனால் அவர்களுடன் இரத்த உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார். அதன்படி முதலில் அம்ப ரைச் சேர்ந்த பார்மல் கஸ்வாஹா என்ற ராஜபுத்திரரின் மகளை திருமணம் செய்து கொண்டார். தொடந்து ஜெய்சல்மார், பிகானிர் இளவரசிகளையும், இள வரசர் சலீமுக்கு ராஜா பக்வாந்தாசின் மகளையும் திருமணம் செய்து வைத் தார். திறமையான ராஜபுத்திரர்களை சமூக மற்றும் இராணுவத்துறைகளில் உயர்பதவியில் அமர்த்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். ராஜா தோடர் மால், ராஜா பர்மால், ராஜா பக்வான்தாஸ் மற்றும் ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் இராணு வத்தில் உயர்பதவியில் இருந்து அனுபவித்தார்கள். மேலும், பாதிக்கும் மேற்பட்ட படை வீரரகளும் இந்துக்களாகவே இருந்தனர். இந்துக்கள் சுதந்திரமாக கோவில்களில் வழிபடச் செய்தார். குழந்தை திருமணங்களை தடை செய்து, சதி ஏறுதல், விதவைத் திருமணங்களை ஆதரித்தார். முஸ்லீம் அல்லாதவர்களுக்கான ஜிஸ்யா வரியை நீக்கினார். இதனாலேயே மொகலாய பேரரசு நான்கு தலைமுறையாக ஆட்சி செய்ய ஏதுவாய் இருந்ததாக டாக்டர் பேனி பிரசாத் கூறுகிறார்.
                                                           அக்பர் ஃபதேபூர் சிக்ரியில் ‘இபாதத் கானா’ என்ற அறிவுஜீவிகளுக்கான அமைப்பொன்றை ஏற்படுத்தினார். கோவாவிலிருந்த போர்ச்சுகீசியர்களுக்கு அவர்களின் மதத்தில் இருந்த சிறந்த கிறிஸ்தவமத ஞானம் உள்ளவர்களை கலந்து கொண்டு கருத்துக்களை தெரியபடுத்த வேண் டினார். அவர்களும் இந்தியப் பேரரசின் மன்னரை கிறிஸ்துவராக மாற்ற அரு மையான சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதென்று ஃபாதர் ருடோல்ஃப் அக்வாவி வா மற்றும் ஃபாதர் மான்செர்ரட் தலைமையில் ஒரு குழுவை ஆர்வமுடன் அனுப்பி வைத்தனர். அக்பர் அவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்தி, ஆக் ராவில் அவர்களை தேவாலயம் கட்டிக்கொள்ள அனுமதித்தார். ஏசுநாதர் மற் றும் அன்னை மேரியின் படங்களின் மீது ஆர்வமாய் இருந்தார். தன் மகன் சலீமை அவர்களின் சபைக்கு அனுப்பி கிறிஸ்தவ போதனைகளைக் கேட்கச் செய்தார். ஆனால், சலீமுக்கு இஸ்லாமைத் தவிர வேறுமதத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. மூன்று ஆண்டுகள் அரண்மனையில் தங்கியிருந்த கிறிஸ்தவகுழு அக்பரை மதமாற்றம் செய்ய முடியாமல் திரும்பியது. 1590 ல் இரண்டாவது குழு வந்து மூன்று ஆண்டுகள் முயன்றது அதுவும் அக்பரை மதம் மாற்றம் செய்ய முடியாமல் திரும்பியது.
                                            மூன்றாவது கிறிஸ்தவகுழு லாஹூருக்கு வந்தது. அது முடிந்தமட்டும் மக்களில் சிலரை மதம் மாற்றம் செய்து, லாஹூரிலும், ஆக்ரா விலும் தேவாலயங்களைக் கட்டியது. மேலும் போர்ச்சுகீசியர்களுக்கு சாதகமா க வாணிப ஒப்பந்தம் ஒன்றை மொகலாயப்பேரரசுடன் ஏற்படுத்திக் கொண்டது. அக்பர் சிறு பிரதேசங்களையும் இணைத்து நிலையான அதிகாரமிக்க மத்திய ஆட்சியைக் கொண்டு வர ஆர்வம் கொண்டார். சிறு பிரதேசங்களின் ஆட்சியா ளர்களால் அவ்வப்போது எழும் பிரச்சினை இதனால் அடங்கிப் போகலாம் என்று எண்ணினார். 1564 ல் கோந்த் வானா என்ற ராஜபுத்திர இடத்திற்கு அசாஃப் கான தலைமையில் படையனுப்பினார். கோந்த்வானாவை சிறுவயது மகனின் சார்பாக துர்காவதி என்பவள் ஆண்டுவந்தாள். அவள் முடிந்த மட்டும் போராடி, போர்களத்திலேயே தற்கொலை செய்துகொண்டாள். பெருவாரியான போர் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இடையில் உஸ்பெஸ்கிஸ்தானின் கலவரத் தால் சற்று பாதிப்படைந்த ராஜபுத்திர பிரதேசங்களை சரி செய்ய எண்ணினார்.
                                                ராஜஸ்தானை ராணாசிங்கின் மகன் உதய்சிங் ஆண்டு வந்தான். இவன் தந்தையின் தரத்திற்கு தகுதி இல்லாதவனாக இருந்தான். சித் தூர் ராணாவும் அக்பரிடம் திருமண உறவு ஏற்படுத்திக்கொள்ள மறுத்தார். அக் பர் என்றுமே நிலையான இந்தியாவை ஆளவே ஆசைப்பட்டார். அக்பர் உதய்சி ங்குடன் போரிட்டார். உதய்சிங் 8000 வீரர்களை ஜெயமால் மற்றும் பட்டா என்ப வர்கள் தலைமையில் போரிட விட்டு விட்டு தப்பித்து மலைப்பிரதேசத்திற்கு ஒடினான். ராஜபுத்திர வீரர்கள் கோட்டைக்குள் பதுங்கி இருந்தபடி போரிட்ட னர். 1567 ல் கோட்டையை கைப்பற்றிய மொகலாயப் படைகள் சுரங்கம் இருப்ப தை கண்டுபிடித்தனர். அக்பர் பொறியாளர்களை வைத்து சுரங்கங்களை ஆய்வு செய்தார். வெடிவைத்து சுரங்கத்தை தகர்த்ததில் 500 வீரர்கள் இறந்து போயினா ர்கள். சித்தூருடன் ரன்தம்போர் மற்றும் கலிஞ்சர் என்ற இரண்டு கோட்டைக ளும் கைப்பற்றப்பட்டன. இன்னொரு ராஜபுத்திர மன்னர் ராஜா ராம் சந்திரா ராஜஸ்தானின் பலம்வாய்ந்த இரு கோட்டைகள் மொகலாயர்கள் வசம் வீழ்ந்த தைக் கேள்விப்பட்டவுடன் அக்பரிடம் சரணடைந்தார். இவரைத் தொடர்ந்து அனைத்து சிறு ராஜபுத்திர மன்னர்களும் அக்பரிடம் சரணடைந்தனர்.
                                                         தப்பிச் சென்ற உதய்சிங் உதய்பூர் என்ற நகரத்தை தனியாக உருவாக்கி ஆண்டுவந்தான். 1527 ல் அவன் மரணமடைந்தவுடன், அவன் மகன் ராணா பிரதாப் சிங் மன்னனாகி, பேரரசுக்கு எதிரானதைவிட, இஸ்லாமுக்கு எதிரானான். இந்துக்களிடம் மத உணர்வைத் தூண்டிவிட்டான். தான் முஸ்லீம்களை இந்த பூமியை விட்டு விரட்டுவேன் என்று சபதமிட்டான். மொகலாயப்படையுடன் ஒப்பிடும்போது இவனின் படைகள் பலமற்று இருந்த து. இவன் முறையற்ற போரின் மூலம் மேவாரை வென்றான். இரண்டாம் அசாஃப்கான் தலைமையில் பெரும் படையுடன் கோல்கொண்டா கோட்டை யை முற்றுகையிட்டான். கடுமையான போருக்குப் பிறகு, காயமடைந்து மலைப்பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டான். அக்பர் லாஹூரில் தூரன் என்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்ய தவிர்க்க முடியாத காரணத் தால் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மீண்டும் ராணா பிரதாப் சிங் 1578 ல் வெளியில் வந்து கோந்த்வானா, உதய்பூர் மட்டும் முன்பு இழந்திருந்தவன் சித்தூர், அஜ்மீர், மண்டல்கர் தவிர மொத்த மேவாரை யும் வென்றெடுத்தான்.  1597 ல் ராணா பிரதாப் சிங் இறந்துபோனான்.
                                     ,

மொகலாய வரலாறு 13

                                             இவனுக்குப் பிறகு, மகன் அமர்சிங் ஆட்சியிக்கு வந்தான். அக்பர் தன் மகன் சலீம் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். சலீம் ஃப தேபூர், அலஹாபாத், புகழ்பெற்ற கோட்டைகள் சித்தூர், ரன்தம்போர், கலிஞ்சர், அஜ்மீர் அனைத்தையும் கைப்பற்றினார். ராஜ்புதனா தனிப் பிரதேசமாக ஆக்கப் பட்டது. பெரும்பான்மை ராஜபுத்திரர்கள் அக்பரின் கீழ் வந்தனர். தன் தந்தை வசம் இருந்த குஜராத்தின் மீது அக்பர் இப்போது பார்வையைத் திருப்பினார். அச்சமயம் குஜராத் மிகவும் செழிப்பாக இருந்தது. குஜராத் முஸஃப்ஃபர் ஷா என்ற பொம்மை மன்னனின் ஆட்சியில் இருந்தது. உள்நாட்டு கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன. குஜராத்தின் மந்திரி இதிமத் கான் அக்பருக்கு தூது அனுப்பி குஜராத்தைக் கைப்பற்றி காப்பாற்றும்படி வேண்டினார். அக்பர் தலை நகர் அஹமதாபாத் வந்து விட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் முஸஃப்ஃபர் ஷா சோளக்காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். குஜராத் அக்பர் வசமானது தனது மாற்றாந்தாய் மகன் கான் இ அஸாம் மிர்ஸா அஸிஸ் கோகா என்பவ ரை அதற்கு கவர்னராக்கினார்.
                                                   பின் சூரத் நகரமும் மொகலாயர் வசம் சரணடைந்தது. அக்பர் அதுவரை கடலைப் பார்த்தது இல்லை. ஆர்வத்துடன் கடற்கரையில் சுற்றுலா சென்று, கடலிலும் சற்று தூரம் பயணித்தார். மிர்ஸாக்களால் குஜராத் தில் கலவரம் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அக்கால அதிசயமாக உடனே 600 மைல் தூரத்தை ஓன்பது நாட்களில் கடந்து அஹமதாபாத் வந்தார். இதை சற்றும் எதிர்பாராத மிர்ஸாக்களின் கலவரம் அடக்கப்பட்டு குஜராத் அமைதி யானது. ராஜாதோடர்மால் என்பவர் தான் அமைதி ஏற்பட பெரிதும் பாடுபட் டார். குஜராத் பேரரசுடன் இணைக்கப்பட்டவுடன் போர்ச்சுக்கீசியர்களின் வாணி பமும் நடந்தது. அந்தகால பணத்தில் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு வரு வாய் ஈட்டியது. குஜராத் வெற்றி மேலும் பெங்காலை வெல்வதற்கு உந்துத லாக இருந்தது. பெங்காலை சுலைமான் கரீம் என்பவர் சுதந்திரமாக ஆண்டு கொண்டிருந்தார். 1572 ல் அவர் மரணமடைந்த பின் அவர் மகன் தாவூத் என்பவ ன் ஆட்சிக்கு வந்து தன் பெயரிட்ட நாணயத்தை பதவியேற்கும் தினத்தன்றெ வெளியிட்டான். தாவூது வெளிப்படையாக பேரரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தான். ஸமானியா என்ற கோட்டையை பேரரசிடமிருந்து கைப்பற்றினான் அக்பர் நேர டியாக தானே படையெடுத்து அவனை பாட்னாவிலிருந்து ஓடச் செய்தார். தாவூதை துகராய் என்ற இடத்தில் வெற்றி பெற்று சரணடையச் செய்து பேரரசு க்கு ஆண்டு கப்பம் செலுத்தச் செய்தார். பெங்காலில் முனிம்கான் என்பவரை கவர்னராக அக்பர் நியமித்தார். 1575 ல் முனிம்கான் இறந்துவிட மீண்டும் தாவூ த் தன் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அக்பர் திறமையான தளபதியை அனுப்பி அவனை வெற்றி கொண்டு சிறைப்பிடித்து 1576 ல் ராஜ்மஹாலில் அடைத்தார்.
                                               1571 ல் அக்பர் ஃபதேபூர் சிக்ரியில் ஒரு அரண்மனையை கட்ட விரும்பினார். அது அக்பருக்கு மூன்று பிள்ளைகள் பிறக்கும் என்று முன் பே கூறிய அவரின் ஆஸ்தான சூஃபி மதபோதகர் ஒருவரின் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தது. முதல் இரு பிள்ளைகள் பிறந்தபோது அரண்மனைக்கு அடிக்கல் நாட்டினார். அதற்கு ஃபதேபூர் (வெற்றி) சிக்ரி என்று பெயரிட்டார். பிறகு தான் மூன்றாவது மகன் பிறந்தார். இந்த அரண்மனை சரித்திரத்தில் மிக வும் புகழப்பட்டது. மிக உயர்ந்த சிகப்புக்கல்லால் அலங்கரித்தார். உள்ளேயே மசூதியும் அமைத்திருந்தார். போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தா ல் அப்போது இந்த அரண்மனை 14 வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படுகிறது. அரண்மனை மலையின் முகப்பில் அமைக்கப்பட்டு, கீழே நகரம் நிர்மாணிக்கப்பட்டது. திவான் இ கஸ் என்னும் பொதுமக்கள் அரங்கமும் கட்டப்பட்டிருந்தது. இது ஒரே ஒரு மையத்தூணில் அமைக்கப்பட்டிருந்தது.
                                                         பெரும்பாலான தீவிர மதப்பற்றுள்ள முஸ்லீம்கள் அக்பரை அவரின் கொள்கைகளுக்காக எதிர்த்தார்கள். முஸ்லீம்கள் அக்பரின் சகோதரர் மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தலைமையில் கலவரம் உண்டாக்கி புரட்சியில் ஈடுபட்டனர். மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தளபதி ஒருவரின் தலை மையில் படையனுப்பி பஞ்சாபை தாக்கச் சொன்னார். அது தோல்வியில் முடி ந்தது. மிர்ஸா முஹம்மது ஹக்கீம் மீண்டும் ஷத்மான் என்ற தளபதி தலைமை யில் ஒரு படை அனுப்பினார். அப்போது பஞ்சாபின் பொறுப்பில் இருந்த ராஜா மன்சிங் அடக்கி விரட்டினார். இப்போது மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தானே 15,000 வீரர்களுடன் படையெடுத்து வந்தார். அக்பர் அவரை வென்று, காபூலிலே யே இறக்கும் வரை ஆட்சி செய்ய அனுப்பி வைத்தார். 1585 ல் மிர்ஸா முஹம் மது ஹக்கீம் இறந்த பின் காபூல் மொகலாயப் பேரரசில் இணைந்தது. ராஜா மான்சிங் காபூலின் அதிகாரம் கொடுக்கப்பட்டு, அந்த மக்களின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை அவருக்கு சரிவராமல் திரும்ப அழைக்கப்பட்டார். அவருக்கு பதில் ராஜா பீர் பால் அனுப்பப்பட்டு, அவரும் யூஸுஃப் அஃப்சலுக்கு எதிராக காபூலில் ஒரு போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் மங்கோலியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்தார்கள். பலமான இராணுவ எல்லைகளை அமைத்தும், திறமை யான உயரதிகாரிகளை பாதுகாப்புக்கு நிறுத்தியும் கண்காணித்தனர். பால்பன், காஸி மாலிக் மற்றும் அலாவுதீன் கில்ஜி போன்றவர்களின் நடவடிக்கைகள் சிறந்த உதாரணம்.
                                                           அக்பரும் வடமேற்கு எல்லையை பாதுகாப்பதில் தீவிரமாய் இருந்தார். காபூலை வென்றபின் பழங்குடி பகுதிகளை குறைத்தார். லாஹூரிலும் ஒரு அரண்மனையை 1585 லிருந்து 1598 வரை வைத்திருந்தார். அந்த காலங்களில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானியர்களை தடுத்துக் கொண்டிரு ந்தார். உஸ்பெகிஸ்தான் தலைவர் அப்துல்லாஹ், மிர்ஸா சுல்தான் மற்றும் பதக் ஷானுடன் சேர்ந்து கொண்டு காபூலைப் பிடிக்க சமயம் பார்த்துக் கொண்டி ருந்தார் அப்துல்லாவுக்கு காபூலின் தீவிர முஸ்லீம்கள் ஆதரவளித்தனர். மொகலாயப் படையிலிருந்து ராஜா பீர்பால், ஹகீம் அப்துல் பத் மற்றும் ஸைன் கான் ஆகியோர் அனுப்பப்பட் டனர். மூன்று ஜெனரல்களும் போர் அனுபவம் இல்லாதவர்கள் எட்டாயிரம் மொகலாய வீரர்களும், ராஜா பீர்பா லும் கொல்லப்பட்டு, ஸைன் கான் மயிரிழையில் உயிர் தப்பினார். அக்பர் ராஜா தோடர் மாலையும், அவர் மகன் முராதையும் பெரும் படையுடன் அனுப் பினார். அவர்கள் காபூலின் புரட்சிப் படையை அடக்கி எண்ணற்றவர்களை கொன்றார்கள். அப்துல்லாஹ் புரட்சியில் இருந்து விலகிக் கொண்டார்.                    
                                              1586 ல் காஷ்மீரை ஆண்ட முஸ்லீம் மன்னர் அங்குள்ள இந்து மக்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக அக்பருக்கு செய்தி வந்தது. இதனாலும், காஷ்மீரின் தட்பவெப்பநிலை, பள்ளத்தாக்கின் அழகு போன்றவற் றைக் கேள்விப்பட்டதாலும் காஷ்மீரை வெல்ல அக்பர் ஆர்வமானார். மிர்ஸா ஷாருக் மற்றும் ராஜா பக்வான் தாஸ் ஆகியோரை காஷ்மீர் ஆட்சியாளர் யூஸுஃப் ஷாவிடம் அனுப்பினார். யூஸுப் ஷா ஒரு சமாதான உடன்படிக்கை க்கு விரும்பினார். ஆனால், அக்பர் அதை விரும்பாமல் காஸிம் கான் என்ற தளபதியின் தலைமையில் ஒரு படையை அனுப்பி தனக்கு நேரடியாக சரண டைய வேண்டும் என்று உத்தரவிட்டார். யூஸுஃப் ஷா பணிந்து போக, அவர் மகன் யாகூப் தப்பித்து தலைமறைவானார். ஆனால், விரைவில் பிடிபட்டு அவ ரும் சரணடைந்தார். காஷ்மீர் மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப் பட்டு, அவ்வப்போது அக்பர் கோடையில் ஓய்வெடுக்கும் விடுமுறைத் தலமாக மாறியது. இதேபோல் முல்தானும், பலுசிஸ்தானும். கந்தாரும் வெற் றிகொள்ளப்பட்டது
                                           அக்பரின் ராஜ்ஜியம் டெல்லி, ஆக்ரா, ஔத், அலஹாபாத், அஜ்மீர், குஜராத், பெங்கால், பிஹார், ஒரிஸ்ஸா, மால்வா, சிந்த், முல்தான், லாஹூர், காபூல், காஷ்மீர், பந்தேஷ், அஹ்மத்நகர் மற்றும் பிரார் என்று பதி னெட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இறுதியாக அலிகாரை கைப்பற்றிய வுடன் அக்பர் மிகவும் குன்றிப்போனார். அவரின் பிள்ளைகளால் மிகவும் கவலை அடைந்தார். ஏற்கனவே மகன்கள் முராதும், தனியாலும் குடிப்பழக்க த்தால் முறையே 1599 லும், 1604 லும் இறந்து போனார்கள். அடுத்த மகன் சலீம் (ஜஹாங்கீர்) இவரும் நீண்ட குடி மற்றும் போதை பழக்கமுள்ளவர். இவரின் நலனுக்காக ராஜகுடும்பத்தினர் அதிகம் இறைவனை வேண்டியதாகவும், பல புனித பயணங்கள் மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர் உடல்ரீதி யாக பலமாக இருந்தவர்.
                                                      1600 ல் வயதான அக்பர் டெக்கான் பகுதியில் போரில் இருந்தபோது, சலீம் புரட்சியில் ஈடுபட்டு அலஹாபாத்தைக் கைப்பற்றினார். 1602 ல் மேலும் வயதான அக்பருக்கு அதிர்ச்சிதரும் வகையில் பிரபல கொள் ளைக்கூட்டத் தலைவன் பீர்சிங் பந்தேலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். இறுதி நாட்களில் அக்பர் கொஞ்சம் கூட நிம்மதியில் இருந்ததில்லை. அபுல் ஃபஸல் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டிருந்தார். நம்பிக்கையான சிலரை பதவியில் நியமித்திருந்தாலும், மக்களிடையே நம்பிக்கையற்று போனார் அக்பரின் மகன் சலீம். ராஜா மான்சிங் தலைமையில் ஒரு குழு அமைத்து சலீ மின் மகன் குஸ்ரு (பேரர்) தலைமையில் ஆட்சியை ஒப்படைத்தார். ஆனால், அது நிலையில்லாமல் போனது. 1605 ல் அக்பர் மிகவும் உடல்நலம்குன்றி போனார். அதிகமான வயிற்றுப்போக்கும், மூச்சுத்திணறலும் மருத்துவர்களா ல் காப்பாற்ற முடியாமல் போனது. அவர் கட்டிக்கொண்டிருந்த சிகந்தரா கோபு ர நினைவிடத்திலேயே அக்பரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
                                          இஸ்லாமிய ஆட்சி என்பது நபிகள் (ஸல்), நேர்மையான நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, முதலாம் வலீத் என்பவர் கிறிஸ்தவர்களும் இருந்த ஆட்சியில் இஸ்லாமிய ஆட்சியை நிலைப்படுத்தினார். இதில் அப்பா ஸிட்களுக்கு முக்கிய பங்குண்டு. பாக்தாதை இஸ்லாமிய மையமாக்கி தாரு ஸ் ஸலாம் ஏற்படுத்தினார்கள். ஒரு நாட்டை வென்றெடுத்த மன்னரின் விரு ப்பமே நாட்டின் மதமாக இருந்தது. ஆரம்பத்தில் அக்பர் இஸ்லாமிய ஆட்சியா க இந்தியாவில் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவே தெரிகிறது. அக்பரு ம் சிறுவயதிலேயே ஆட்சிக்கு வந்து அரசியலில் தீவிரமாக இருந்ததால் வெளி யுலக இஸ்லாமிய ஆட்சியை அறிந்திருக்கவில்லை. ஆனால், தீவிரமான இஸ்லாமிய மதபோதகர்கள் அக்பரை இஸ்லாமிய ஆட்சியே இந்தியாவில் ஆள வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அக்பரின் ஆளுகையின் கீழ் பெருவாரியான ராஜபுத்திர இந்துக்களின் பிரதேசங்களும் இருந்தன. அக்பரின் நெருங்கிய நண்பரும், ஆலோசகருமான அபுல் ஃபஸல் இந்த விவகாரத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய கடமைக்காளானார். இவரின் ஆலோசனையில் அக்பர் சுன்னி பிரிவு முஸ்லீமாய் இருந்தார். அக்பர் சிறந்த தொழுகையாளி யாக இருந்தார். சில சமயங்களில் மு அத்தீன் (தொழுகைக்கு அழைப்பு விடுப் பவர்) ஆகவும் இருந்திருக்கிறார். 

மொகலாய வரலாறு 14

                                           ஒவ்வொரு ஆண்டும் அஜ்மீரின் ஷெய்க் சலீம் சிஷ்டியின் நினைவிடத்திற்கு செல்பவராக இருந்தார். அந்த ஞானியின் பெயரையே தன் மகன் சலீமுக்கு சூட்டினார். நாடெங்கும் இமாம்களை அமர்த்தினார். ஒருமு றை அக்பரின் பிறந்த நாளுக்கு அரண்மனைக்கு இஸ்லாமிய ஞானி ஒருவர் வருகை தந்தார். அவர் அக்பருக்கு இந்துக்களின் முறைப்படி வண்ணமயமான உடையலங்காரம் செய்திருப்பதைக் கண்டு, கூடாது என்பதுபோல் கைத்தடி யை அசைத்தார். அது தவறுதலாக அக்பரின் மீது பட்டுவிட்டது என்பதற்காக கடுமையாக அரண்மனை பெண்மணிகளால் தண்டிக்கப்பட்டார். மெஹ்தி என்ற ஒரு அமைப்பும் அக்பரின் காலத்தில் இருந்தது. அதன் தலைவர்களை கைது செய்தார். பின் பெரும் இஸ்லாமிய அறிஞர்களை வரவழைத்து பல தர ப்பு ஆலோசனைக்குப் பிறகு, இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவித் தார். இதனால் பலமான எதிர்ப்பு கிளம்பியது. சில இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதனால் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுடன் இந்தியாவின் மற்ற மதக் கொள்கைகளையும் இணைத்து ‘தீனே இலாஹீ’ என்ற புதிய மதத்தை அறிமுக ப்படுத்தினார். இதில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, இஸ்லாமை ப்போல் ஸலாம் அலைக்கும் என்பதற்கு பதிலாக, அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொ ள்ள வேண்டும். அப்போதைய இஸ்லாமிய உலகின் அப்பாஸிட்களும், உமய் யாத்களும் அக்பரை மிகவும் கடுமையாக கண்டித்தனர். இது ஒரு முட்டாளின் கண்டுபிடிப்பு என்று இகழப்பட்டார். தீனே இலாஹீ ஒரு நபியின் வழியாக தோன்றிய மதமல்ல அரசியல் ஆதாயத்திற்காக ஒரு மன்னரால் தோற்றுவிக் கப்பட்டது என்று கூறப்பட்டது. உண்மைதான் ராஜபுத்திரர்கள் தங்கள் உறவுக ளை அக்பரின் குடும்பத்திற்கு மணமுடித்துக் கொடுத்தனர்.
                                                           பதாயோனி என்பவர் தனது புத்தகத்தில் கீழ் கண்ட நடைமுறைகள் அக்பரின் ஆட்சியில் இருந்ததாக குறிப்பிடுகிறார் :
தலையை தரையில் வைத்து (சஜ்தா) மன்னரை வணங்கும் முறை இருந்தது. தீ வழிபாடும், சூரிய வழிபாடும் அக்பரின் ஆட்சியில் இருந்தது. அக்பர் மணந்து கொண்ட இந்து பெண்களின் திருப்திக்காக ஆண் காட்டுப்பன்றி அரண்மனை யில் கட்டி வைக்கப்பட்டு சகுனம் பார்க்கப்பட்டது. தன் மனைவிகளுக்காக நெற்றியில் பொட்டிடும் பழக்கமும் அக்பரிடம் இருந்தது. மாட்டிறைச்சி, பூண் டு, வெங்காயம் உபயோகப்படுத்தப்பட்டு, தாடி வைப்பது தடை செய்யப்பட்டிரு ந்தது. தாடி வைத்திருந்த முல்லாக்கள் தண்டிக்கப்பட்டனர். மிருகங்களை பலி யிடுவதும், உண்பதும் இஸ்லாமில் ஆகுமானதாக இருக்க, அக்பர் இந்துக்களுக் காக பசுக்களைக் கொல்வதையும், உண்பதையும் தடை செய்தார். ஆண்களுக் கு பனிரெண்டு வயதிற்கு முன் விருத்தசேதனம் செய்வதும், பூப்பெய்தாத பெண்கள் மண முடிக்கவும் தடை செய்யப்பட்டது. அரபுமொழி பயில்வது ஆர் வமூட்டப்படாமல் இருந்தது. பகிரங்கமாக தொழுகைக்கு அழைப்பதும், பொது இடத்தில் தொழுவதும் தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய பெயர்களான முஹமது, அஹமது, முஸ்தபா போன்ற பெயர்கள் மன்னருக்கு எதிராக (அவர் அக்பர் அல்லவா) இருப்பதாக கூறி வேறு பெயர்கள் வைக்கப்பட்டனர். புனித மக்கா பயணம், ரமதான் மாத நோன்புகள் ஆதரிக்கப்படவில்லை. குர்ஆன், ஹதீஸ்கள் புழக்கத்திலிருந்து மறைக்கப்பட்டன. மசூதிகளும், வணக்கவிடங் களும் வீரர்களின் ஓய்வறையாகவும், பொருள் சேகரிக்கும் இடமாகவும் ஆக்க ப்பட்டன. தனது தீனே இலாஹிக்காக ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இஸ்லா மின் வாடையே இந்தியாவில் இல்லாமல் செய்தார். பிரிட்டிஷாரின் கூற்றுப் படி அக்பர் தங்களை விட பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டார். அவரின் ஆட்சிக்கு தீனே இலாஹீ போன்ற பொதுவான மதம்தான் இந்தியா போன்ற பல மதமுள் ள நாட்டுக்குத் தேவை என்று வாதிட்டாலும். இஸ்லாம் இதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது அல்லது அவர் இஸ்லாமியரே அல்ல. ஜஹாங்கீர் தன் தந் தை ஒரு சிறந்த தொழுகையாளி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதை யாரும் அங்கீகரிக்கவில்லை. நண்பர் அல்லாமா அபுல் ஃபஸல் மூலம் “அக்பர் நாமா” என்ற நூலை எழுதச்செய்தார்.
       கலைகளிலும், இலக்கியத்திலும் மிகவும் புலமை வாய்ந்திருந்தார். உலகளவில் ‘தி க்ரேட்’ என்று போற்றப்பட்ட மிகச்சிலரில் அக்பரும் ஒருவர். பிரபல்யமான புத்தகங்களான கான் இ கானான், ஜாமா இ ரஷீதி, மு அஜம் உல் புல்தான், ஷாஹ்னாமா, ஹயாத் உல் ஹைவான் ஆகிய வற்றை பெர்ஷிய மொழியில் மொழி பெயர்க்க வைத்தார். தன்னைச் சுற்றிலும் எப்போதும் தத்துவவாதிகள், போதகர்கள், கவிஞர்கள், சரித்திர ஆய்வாளர்கள் இருப்பது போல் வைத்துக் கொண்டார். அக்பரின் நெருங்கிய நண்பராகவும், ரகசிய ஆலோசகராகவும் அபுல் ஃபஸ்ல் என்பவர் இருந்தார். அபுல் ஃபஸ்ல் தலையாய பெர்ஷிய போதகராகவும், பரந்த கலாச்சார மற்றும் மத அடையாள மாகவும் திகழ்ந்தார். இவரின் மூத்த சகோதரர் ஃபைஸி என்ற அபுல் ஃபைஸ் அரண்மனை நூலகக் காப்பாளராகவும், பெர்ஷிய கவிஞராகவும் இருந்தார். எண்ணற்ற சமஸ்கிருத, ஹிந்தி மொழி கணிதம், விஞ்ஞானம் மற்றும் பலது றை புத்தகங்களை பெர்ஷிய மொழியில் மொழி பெயர்த்தார். தலைசிறந்த அப் துல் காதிர், பைரம்கான், பீர் முஹம்மது, அமீர் மீர் தகி ஷரீஃபி, மௌலானா கீருத்தீன் ரூமி, ஷெய்க் அபுன்நபி தெஹ்லாவி, மிர்சா முஃப்லிஸ், ஹாஃபிஸ் தாஷ்கண்டி மற்றும் முல்லாஹ் சாதிக் ஹால்வி போன்ற இஸ்லாமிய மதபோ தகர்களும் அக்பரின் சபையில் இருந்தார்கள்.
   தனக்கு ஆலோசனை வழங்கவும், அதிகாரிகளாக இருப்பவர்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அக்பர் பார்ப்பதில் லை. மற்ற முஸ்லீம் ஆட்சியாளர்களை விட அக்பரின் அரண்மனையில் இந்து க்கள் தான் பெருவாரியாக இருந்தார்கள். சூஃபி சகோதரர்களான அபுல் ஃபஸ்ல் மற்றும் அபுல் ஃபைஸ் தவிர, ராஜா தோடர்மால், பீர் பால், ராஜா பக்வான் தாஸ், ராஜா மான் சிங், ராஜா பிஹாரி மல், ஹரி நாத், சூர் தாஸ், துளசி தாஸ் மற்றும் பல் ஹிந்துக்கள் சிறப்பான அந்தஸ்தில் இருந்தார்கள். ஓவியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அக்பர் அதற்காக ஓவியப்பள்ளிகளை அமைத் தார். ஃபதேபூர் சிக்ரியில் அக்பர் அமைத்த ஓவியங்களுடன் கூடிய கலை மண் டபம் பிரசித்திப் பெற்றது. நல்ல ஓவியக் கலைஞர்களுக்கு பெரிய ஊதியமும், ஊக்கத் தொகைகளும் கொடுத்தார். சையத் அலி தப்ரீஸ், கவாஜா அப்துல் சமத் மற்றும் கேசு போன்ற சிறந்த ஓவியர்கள் இருந்தார்கள். தன் காலத்தில் இந்தியாவில் இசைக்கலையை மிக உச்சத்தில் அக்பர் வைத்திருந்தார். தானே ஒரு இசைக்கலைஞராக இருந்தார். சுபான் கான், சருத் கான், ஸ்ரீ கியான் கான், மியான் கான், மியான் லால், தாவூத் தாரி, முஹம்மத் கான் தாரி, முல்லாஹ் இஸ் ஹாக் தாரி, நானக் ஜர்ஜு, பிலாஸ் கான், தன்தரங்க் கான், ரங்க் சென், ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பீர் ஸாதாஹ் போன்ற இசைக்கலைஞர்கள் இருந் தார்கள். இவர்களுக்கெல்லாம் மேல் காலத்தால் அழிய முடியாத இசை மேதை மியான் தான்சேன் இருந்தார். தனது இசைத்திறமையால் யமுனா நதியையே தீயால் எரியச் செய்ததாக வரலாறு உள்ளது. இன்றும் இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்கள் குவாலியரில் உள்ள இவரின் கல்லறையில் அமர்ந் து பாடுவதுண்டு. மியான் தான்சேனைப் போலவே அக்பரின் அவையில் ராம் தாஸ் மற்றும் ஹரி தாஸ் என்ற இருவர் ‘பாடும் குயில்கள்’ என்ற சிறப்பில் அழைக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். பீன், புல்லாங்குழல், கிசக், கரானா, கபுஸ், சர்மண்டல், சுர்னா, தம்புரா, ரபப் மற்றும் கானூன் போன்ற இசைக்கரு விகள் பிரபல்யமாக இருந்தன. இந்த கருவிகளை இசைக்கும் வல்லுனர்களாக ஷெய்க் தவான் தாரி, ஷிஹாப் கான், புர்பின் கான், உஸ்தாத் தோஸ்த், மீர் செய்யத் அலி, பஹ்ராம் குலி, தாஷ் பேக், பீர் மண்டல் கான், உஸ்தாத் யூசுஃப், சுல்தான் ஹாஷிம், உஸ்தாத் முஹம்மத் ஹுசெய்ன், உஸ்தாத் முஹம்மத் அமீன், உஸ்தாத் ஷா முஹம்மத், மீர் அப்துல்லாஹ் மற்றும் காஸிம் ஆகியோ ர் இருந்தனர். அக்பரின் அவையில் ‘தர்பாரி’ என்ற ராகம் மிகவும் பிரபல்யமாக இருந்தது.
அக்பர் கட்டிடக் கலையில் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் கால கட்டிடக் கலை இன்றும் ஃபதேபூர் சிக்ரியில் பறைசாற்று கின்றது. பாரசீக கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் ஹுமாயுன் கல்லறை, அத ன் அருகிலுள்ள பிரமாண்ட வாயில் கொண்ட மசூதி உலகில் எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆக்ரா கோட்டையிலுள்ள ஜஹாங்கிரி மஹால், ஷெய்க் சலீம் சிஷ்தி கல்லறை, ஃபதேபூர் சிக்ரியின் அழகிய மசூதி, ஜோதாபா ய் அரண்மனை, அக்பர் அரண்மனையின் மத்திய அரங்கம், தி க்ரேட் மாஸ்க் என்னும் மசூதி, ராஜபுதனாவின் மிர்தாவில் உள்ள அழகிய மசூதி, குவாலியரி ல் உள்ள துறவி முஹம்மது கௌஸ் கல்லறை, ராஜா பிஹாரி மாலின் மனை வியின் சதி புர்ஜ், அலஹாபாத்தில் உள்ள நாற்பது தூண்கள் மண்டபம், பீர் பால் இல்லம், கோபிந்த் தேவ், கோபி நாத், மதன் மோஹன், ஜுகல் கிஷோர் ஆகி யோரின் நாற்கோவில் மற்றும் சிக்கந்தராவில் உள்ள அக்பர் ஸ்தூபி ஆகிய வை அக்பரின் கட்டிடக் கலையின் சிறப்புகள் ஆகும். தோட்டக்கலையிலும் ஃபதேபூர் சிக்ரி பூங்கா மற்றும் காஷ்மீரின் நசீம் பாக் ஆகியவை சிறப்பானவை. இவைகளை எல்லாம் மொகலாயர்களுக்குப் பின்னால் ஆளவந்த பிரிட்டிஷார் கண்டு வியந்து போயினர். உலக மன்னர்களெல்லாம் வாளெடுத்து ரத்தம் சிந்தி, கொள்ளையடித்து பூமிகளைத் தான் பிடிப்பார்கள் என்று அறிந்திருந்த பிரிட்டிஷாருக்கு மொகலாயர்களைப் போல் வென்ற இடங்களில் கலை வளர் க்க முடியுமா என்று திகைத்துப் போனார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பனி ரெண்டாம் நூற்றாண்டு வரை சீனாவிலிருந்து மேற்கில் ஸ்பெயின் வரை இஸ் லாமிய மன்னர்கள் இந்த உலகுக்கு காட்டிய கட்டிடம் மற்றும் கலைகளை யாரும் காட்டியதில்லை, இனி காட்டவும் முடியாது. தேம்ஸ் நதி பாலம், பிக் பென் கடிகாரம், சுதந்திரதேவி சிலை மற்றும் குதிரைகளில் அமர்ந்து வாள் காட் டும் நான்காம் ஹென்றி, இரண்டான் சார்லஸ் என்று இவர்களாகவே ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியது தான். உலகிலேயே வருடாவருடம் அதிகமா ன மக்கள் இஸ்லாத்தில் இணைவது ஸ்பெயினில் மட்டும் தான் காரணம் அங்கு இஸ்லாம் விட்டு வந்த உண்மையான ஆட்சி, கட்டிடக் கலை மற்றும் கலை, கலாச்சாரங்களும் தான். தோல் உரிக்கப்பட்ட சப்போட்டா பழத்தின் உள்ளே அதிசயமாக மாம்பழம் வந்தாலும் வருமே தவிர, மேற்கத்தியர்களால் உலகில் அமைதியை நிலை நாட்ட முடியாது.
           அக்பரால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இந்து கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறி, பின்னால் ஆட்சிக்கு வந்த அக்பரின் பேரர் ஷாஜஹான் இடித்தார்.

 

செவ்வாய், 30 ஜூன், 2015

மொகலாய வரலாறு 8

நசீர் உத் தீன் முஹம்மது ஹுமாயுன்
கூ.செ.செய்யது முஹமது
                     பாபரின் முதல் மனைவி மாஹம் பேகமுக்கு பிறந்தவர்கள் ஹுமாயுன், பார்பூல் மிர்சா, மிஹ்ர்ஜான் பேகம், இஷான் தௌ லத் பேகம் மற்றும் ஃபாரூக் மிர்சா. இரண்டாவது மனைவி மசூமா சுல்தான் பேகம் பிரசவத்தில் இறந்து போனதால், அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. மூன்றாவது குல்ருக் பேகம் என்ற மனைவிக்கு காம்ரான் மிர்சா, அஸ்கரி மிர்சா, ஷாருக் மிர்சா, சுல்தான் அஹ்மது மிர்சா மற்றும் குல் இஸார் பேகம் ஆகியோர் பிறந்தனர். நான்காவது மனைவிக்கு குல்ரங்க் பேகம், குல்சிஹ்ரா பேகம், ஹிண்டால் மிர்சா, குல்பதன் பேகம் மற் றும் அல்வார் மிர்சா ஆகியோர் பிறந்தனர். நசீருத்தீன் முஹம்மது ஹுமாயுன் 1508 மார்ச் 6 ல் (துல்கதா 4, 913) காபூல் அரண்மனையில் பிறந்தார். இவர் பிறந்த தற்குப் பிறகு தான் எல்லா மகன்களுக்கும் “மிர்சா” என்று வருமாறு பாபர் பெய ரிட்டார். தன்னையும் பாபர் பாதுஷா என்று அழைத்துக் கொண்டார்.
           ஒருமுறை ஹுமாயுன் கடுமையாக நோய் வாய்ப்பட்டு, மிகவும் பலவீனமாக போன போது பாபர் தொடர்ந்து தொழுகை யில் ஈடுபட்டு, இறைவனே உன்னுடைய அதிகாரத்தில் உயிர்களை பறிமாறிக் கொள்ளும்படி இருந்தால், என் மகன் ஹுமாயுனுக்குப் பதில் என்னுடைய உயிரை எடுத்துக் கொள் என்று வேண்டினார். பாபர் 1530 டிசம்பர் 26 ல் (ஜுமாதா 5, 937) இறந்தார். இறப்பதற்கு முன்பிருந்தே தனக்குப் பிறகு ஹுமாயுன் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். ஹுமாயுன் அழகாக திருக்கு ரானை ஓதக்கூடிய 60 நபர்களை சில தினங்கள் பாபரின் மறுமைக்காக ஓதச் செய்தார்.
                                                                           1530 ஆம் ஆண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஹுமாயுன் ஆட்சிக்கு வந்தார். இவரால் அமைதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. எதிரியான ஷேர்ஷாவினால் பல தொல்லைகளுக்கு ஆளா னார். ஹுமாயுனின் சகோதரர்கள் பல மாகாணங்களை கவர்னர்களாக நிர்வகி த்தனர். காபூல் மற்றும் கந்தஹாரை காம்ரானும், ஆள்வார் மற்றும் மெவாத் தை மிர்சா ஹிண்டாலும், சம்பலை மிர்சா அஸ்கரியும், பதக் ஷானை உறவி னர் மிர்சா சுலைமானும் நிர்வகித்தார்கள். இந்த சகோதரர்களின் சதியாலும், ராஜதுரோகத்தாலும் மொகலாயப் பேரரசு ஆரம்பத்திலேயே நிலை குலைந் தது.  பாபரை விட திறமை குறையவராக இருந்தார். ஹுமாயுனின் தாராள குணமும், தாட்சன்யமும் அவரின் மிகப்பெரிய குறையாக இருந்தது. அரசியல் சூழ்நிலை ஸ்திரமற்று இருந்தது. கிழக்கில் ஆஃப்கானில் ஷேர்கானும், மேற் கில் பஹதூர்ஷாவும் மொகலாய ஆட்சியை அப்புறப்படுத்த திட்டமிட்டனர். ஹுமாயுனின் சகோதரர்களோ தாங்கள் இருந்த பகுதிகளை சொந்தம் கொண் டாடுவதில் மும்முரமாய் இருந்தார்கள். சில தலைவர்களும், ஹுமாயுனால் பதவி அளிக்கப்பட்ட சில இராணுவ அதிகாரிகளும் ஹுமாயுனுக்கு எதிராகவே இருந்தார்கள்.
                     முஹம்மது ஸமான் என்பவனால் ஒரு குழப்பம் ஹுமாயுனுக்கு எதிராக உண்டானது. அதில் அவன் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். திட்டம் செயல்படு த்துவதற்கு முன்பாகவே வெளிப்பட்டு விட்ட்தால் அவன் தப்பியோடி குஜராத் தில் பஹதூர்ஷாவிடம் சேர்ந்து கொண்டான். அடுத்து சுல்தான் இப்ராஹிம் லோடியின் சகோதரன் அலாவுத்தீன் என்பவன் தன் மகன் டாடார்கானின் தலைமையில் 40,000 வீரர்களை ஹுமாயுனுக்கு எதிராக அனுப்பினான். பியா னாஹ் என்ற இடத்தில் சண்டை இடப்பட்டு தோற்கடிக்கப்பட்டு டாடார்கான் கொல்லப்பட்டான். காபூல், கந்தஹாரிலிருந்து ஹுமாயுனின் சகோதரர்கள் அஸ்கரியும், காம்ரானும் பெரும் படையுடன் திரண்டு வந்து ஹுமாயுனுக்கு ராஜ விருது வழங்க இருப்பதாக நாடகம் ஆடினர். ஆனால் ஹுமாயுன் முன் கூட்டியே ஒரு படையை அனுப்பி தான் காபூலுக்கு பதிலாக லம்கானையும், பெஷாவரையும் தன் பிரதேசத்தில் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கிறார். கம்ரான் அதைப் பொருட்படுத்தாமல் பஞ்சாபைக் கைப்பற்றி தனது காபூல் மற்றும் கந்தஹாருடன் இணத்துக் கொண்டார். சகோதரனுடன் போர் செய்ய விரும்பாத ஹுமாயுன் அமைதியாக இருந்தார். இது ஹுமாயுனின் மிகப் பெரிய தவறாகப் போனது. வடமேற்கில் மொகலாயப் படைகளுக்கு எதிராக ஒரு தடுப்புப்படையை உருவாக்க ஏதுவானது. டெல்லியில் இருந்து படை கந்தஹார் வந்தால் வழியிலேயே தடுக்கப்பட்டுவிடும்.
                 இதற்கிடையில் வளமானதும், பலமானதுமான குஜராத்திலிருந்து பஹதூர் ஷா, ஹுமாயுன் மீது படையெடுத்து வந்தார். பஹ தூர் ஷா ஹுமாயுனை சற்று குறைவாக மதிப்பிட்டார். ஹுமாயுன் பலமான பீரங்கித் தாக்குதல் கொடுக்க பஹதூர் ஷா தப்பித்து போர்ச்சுகீசியர்களிடம் ஓடி டையூ என்ற இடத்தில் அடைக்கலம் ஆனார். ஹுமாயுன் குஜராத் மற்றும் மால்வாவின் பெரும் பகுதியை தன் பிரதேசத்துடன் இணைத்துக் கொண்டார். வெற்றிபெற்ற பகுதிகளை நிரந்தரமாக தன்னுடன் வைத்துக் கொள்ள திட்டமிட தவறினார். பஹதூர் ஷா நம்பகமான இமாத் உல் முல்க் என்னும் தளபதியின் கீழ், போர்ச்சுகீசியர்களின் உதவியுடன் ஒரு படையை ஏற்பாடு செய்தார். இதை அறிந்த ஹுமாயுன் முன்னேறிச் சென்று இமாத் உல் முல்கை விரட்டினார். தன் சகோதரர் அஸ்கரியின் அதிகாரத்தில் குஜராத்தை விட்டார். அஸ்கரியின் நடவடிக்கைகள் அவரின் அதிகாரிகளுக்கே பிடிக்காது. சரியான சந்தர்பத்திற் காக காத்திருந்த பஹதூர் ஷா அஹமதாபாத்தின் மீது படையெடுத்து தான் இழந்த பகுதிகளை மீட்டார். ஹுமாயுன் மாண்டுவுக்கு சென்றதால் மால்வா வும் இழக்கப்பட்டது. ஆனால், பஹதூர் ஷாவால் ஆளமுடியாமல் துரதிஷ்ட வசமாக கடலில் தவறி விழுந்து இறந்து போனார். இதற்கிடையில் ஷேர்கான் சௌஸா என்ற் இடத்தை வென்று தன்னை “ஷேர் ஷா” என்று அழைத்துக் கொண்டார். ஹுமாயுனை கனாஜ் என்ற இடத்திலும் படுதோல்வி அடையச் செய்தார். இந்த தோல்விகள் ஹுமாயுனை இந்தியாவை விட்டு விரட்டியது. சர் ஹிந்த் பகுதிக்குச் சென்ற ஹுமாயுனை, இவரால் பாசமாகக் கவனிக்கப் பட்ட அவரது சகோதரர்களே பாதுகாப்பளிக்க மறுத்துவிட்டனர்.
          இந்த சூழ்நிலையில் ஷெய்க் அலி அக்பர் ஜாமி என்பவரின் மகள் ஹமீதா பானு பேகம் என்பவரை திருமணம் செய்து கொண் டார். ஜோத்பூரின் ராஜா இருபத்தைந்தாயிரம் ராஜ்புத் இராணுவ வீரர்களை தந்து உதவுவதாக வாக்களித்ததின் பேரில் ஹுமாயுன் அவரிடம் சென்றார். ஆனால் ராஜாவும் ஏமாற்றினார். இறுதியாக அமர்கோட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ராணா பிரசாத் ஹுமாயுனுக்கு நம்பிக்கை அளித்து தட்டா மற்றும் பக்கரை தாக்குவதற்கு உதவுவதாகக் கூறினார். இது மீண்டும் ஹுமா யுன் இந்தியாவின் பேரரசர் ஆவதற்கு சந்தர்பத்தைத் தந்தது. இந்த தருணத்தில் ஹுமாயுனுக்கு அக்பர் என்ற மகன் பிறந்தார். ராணா பிரசாதின் உதவியுடன் பக்கரை தாக்கினார். இடையில் ராஜ்புத் வீரர்களுக்கும், ஹுமாயுனின் வீரர்களு க்கும் இணக்கமில்லாமல் போக, ஹுமாயுனின் வீரர்கள் தனிமைப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பக்கரின் ஆட்சியாளர் போரினால் தளர்ந்து சமாதானத்திற்கு உடன்பட்டார். சமாதானத்தின் அடையாளமாக ஹுமாயுனுக்கு முப்பது படகு களும், பத்தாயிரம் மிஷ்கால்களும், ஆயிரம் மூட்டை தானியங்களும், முன் னூறு ஒட்டகங்களும் கிடைத்தன. அத்தனையும் எடுத்துக் கொண்டு கந்தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த பகுதி முழுவதும் சகோதரர்கள் காம்ரான், அஸ்கர் மற்றும் ஹிந்தால் வசமிருந்தால் பாதுகாப்பிருக்காது என கருதி பெர் ஷியா செல்ல முடிவெடுத்து ஷாவுக்கு தெரியப்படுத்தினார். தனது ஒரு வயது மகன் அக்பரை பிரிந்து பெர்ஷியா செல்ல ஹுமாயுன் முடிவெடுத்தார். பெர் ஷியாவின் ஷா ஹுமாயுனுக்கு ராஜ வரவேற்பு கொடுக்க வேண்டி தன் அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். பெர்ஷியாவின் ஷா ஷியா பிரிவு கொள்கை கொண்டவராக இருந்ததால், சுன்னிப் பிரிவு ஹுமாயுனையும் ஷியாவுக்கு மாறும்படி வற்புறுத்தினார். ஹுமாயுனின் உடனிருந்தவர்களும் ஆலோசனை கூறியதால் ஷியா பிரிவுக்கு மாற ஒப்புக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷா காபூல், கந்தார் மற்றும் பொகாரா ஆகியவற்றை வெல்ல ஹுமா யுனுக்கு இராணுவ உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இடைப்பட்ட ஷேர் ஷா சூரியின் ஆட்சி                              
                                                    வெற்றிபெற்ற ஷேர் ஷா சூர் டெல்லியைக் கைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டார். ஷேர் ஷாவின் உண்மைபெயர் ஃபரீத். இவர் 1486 ல் ஹிசார்ஃபிரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் ஹசன். ஹசனுக்கு நான்கு மனைவிகள். ஷேர் ஷா சிறுவயதில் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவித்தார். தந்தை ஹசன் மகன்களிடம் பாசமற்று இருந் தார். ஃபரீத் என்ற ஷேர்ஷா வீட்டைவிட்டு விலகி, ஜான்பூர் என்ற இடத்தில் தந்தையின் நண்பர் பீஹாரின் கவர்னராய் இருந்த ஜமால் கான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளைக் கற்றார். ஷேர்ஷாவின் திறமைகளை அறிந்த கவர்னர் ஜமால்கான் ஹசனிடம் பிள்ளை யிடம் கனிவாக இருக்க கேட்டுக்கொண்டார். திரும்ப வந்த மகன் ஃபரீதுக்கு ஹசன் நிர்வாகத்தில் வேலை கொடுத்தார். இவரின்நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்தது. 1519 ல் மாற்றாந் தாய்களின் பிரச்சினையால் அந்த வேலையிலிரு ந்து திரும்பிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பீஹார் சென்று தரியா கான் லோஹானியின் மகன் கவர்னர் பஹார்கானிடம் வேலைக்குச் சேர்ந்தார். 1522 லிருந்து 1526 வரை ஃபரீத் பஹார்கானிடம் மிகவும் சிறப்பாக சமூக மற்றும் வருவாய்துறையில் பணியாற்றினார். இயற்கையாக இவருக்கிருந்த வேட்டை யாடும் திறமையால் ஒரு முறை புலி ஒன்றைக் கொன்றதால் “ஷேர்கான்” என்ற சிறப்புப்பெயர் பெற்றார். தனது எஜமானரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் ராஜினாமா செய்துவிட்டு, பாபர் அவர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்.

மொகலாய வரலாறு 9

                                                                   இந்த சூழ்நிலையில் ஷெய்க் அலி அக்பர் ஜாமி என்பவரின் மகள் ஹமீதா பானு பேகம் என்பவரை திருமணம் செய்து கொண் டார். ஜோத்பூரின் ராஜா இருபத்தைந்தாயிரம் ராஜ்புத் இராணுவ வீரர்களை தந்து உதவுவதாக வாக்களித்ததின் பேரில் ஹுமாயுன் அவரிடம் சென்றார். ஆனால் ராஜாவும் ஏமாற்றினார். இறுதியாக அமர்கோட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ராணா பிரசாத் ஹுமாயுனுக்கு நம்பிக்கை அளித்து தட்டா மற்றும் பக்கரை தாக்குவதற்கு உதவுவதாகக் கூறினார். இது மீண்டும் ஹுமா யுன் இந்தியாவின் பேரரசர் ஆவதற்கு சந்தர்பத்தைத் தந்தது. இந்த தருணத்தில் ஹுமாயுனுக்கு அக்பர் என்ற மகன் பிறந்தார். ராணா பிரசாதின் உதவியுடன் பக்கரை தாக்கினார். இடையில் ராஜ்புத் வீரர்களுக்கும், ஹுமாயுனின் வீரர் களுக்கும் இணக்கமில்லாமல் போக, ஹுமாயுனின் வீரர்கள் தனிமைப்பட்ட னர். அதிர்ஷ்டவசமாக பக்கரின் ஆட்சியாளர் போரினால் தளர்ந்து சமாதானத் திற்கு உடன்பட்டார். சமாதானத்தின் அடையாளமாக ஹுமாயுனுக்கு முப்பது படகுகளும், பத்தாயிரம் மிஷ்கால்களும், ஆயிரம் மூட்டை தானியங்களும், முன்னூறு ஒட்டகங்களும் கிடைத்தன. அத்தனையும் எடுத்துக் கொண்டு கந் தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த பகுதி முழுவதும் சகோதரர்கள் காம்ரான், அஸ்கர் மற்றும் ஹிந்தால் வசமிருந்தால் பாதுகாப்பிருக்காது என கருதி பெர்ஷியா செல்ல முடிவெடுத்து ஷாவுக்கு தெரியப்படுத்தினார். தனது ஒரு வயது மகன் அக்பரை பிரிந்து பெர்ஷியா செல்ல ஹுமாயுன் முடிவெடுத் தார். பெர்ஷியாவின் ஷா ஹுமாயுனுக்கு ராஜ வரவேற்பு கொடுக்க வேண்டி தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பெர்ஷியாவின் ஷா ஷியா பிரிவு கொள்கை கொண்டவராக இருந்ததால், சுன்னிப் பிரிவு ஹுமாயுனையும் ஷியாவுக்கு மாறும்படி வற்புறுத்தினார். ஹுமாயுனின் உடனிருந்தவர்களும் ஆலோசனை கூறியதால் ஷியா பிரிவுக்கு மாற ஒப்புக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷா காபூல், கந்தார் மற்றும் பொகாரா ஆகியவற்றை வெல்ல ஹுமாயுனுக்கு இராணுவ உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இடைப்பட்ட ஷேர் ஷா சூரியின் ஆட்சி                              
                                                  வெற்றிபெற்ற ஷேர் ஷா சூர் டெல்லியைக் கைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டார். ஷேர் ஷாவின் உண்மைபெயர் ஃபரீத். இவர் 1486 ல் ஹிசார்ஃபிரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் ஹசன். ஹசனுக்கு நான்கு மனைவிகள். ஷேர் ஷா சிறுவயதில் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவித்தார். தந்தை ஹசன் மகன்களிடம் பாசமற்று இருந் தார். ஃபரீத் என்ற ஷேர்ஷா வீட்டைவிட்டு விலகி, ஜான்பூர் என்ற இடத்தில் தந்தையின் நண்பர் பீஹாரின் கவர்னராய் இருந்த ஜமால் கான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளைக் கற்றார். ஷேர்ஷாவின் திறமைகளை அறிந்த கவர்னர் ஜமால்கான் ஹசனிடம் பிள்ளை யிடம் கனிவாக இருக்க கேட்டுக்கொண்டார். திரும்ப வந்த மகன் ஃபரீதுக்கு ஹசன் நிர்வாகத்தில் வேலை கொடுத்தார். இவரின்நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்தது. 1519 ல் மாற்றாந் தாய்களின் பிரச்சினையால் அந்த வேலையிலிரு ந்து திரும்பிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பீஹார் சென்று தரியா கான் லோஹானியின் மகன் கவர்னர் பஹார்கானிடம் வேலைக்குச் சேர்ந்தார். 1522 லிருந்து 1526 வரை ஃபரீத் பஹார்கானிடம் மிகவும் சிறப்பாக சமூக மற்றும் வருவாய்துறையில் பணியாற்றினார். இயற்கையாக இவருக்கிருந்த வேட்டை யாடும் திறமையால் ஒரு முறை புலி ஒன்றைக் கொன்றதால் “ஷேர்கான்” என்ற சிறப்புப்பெயர் பெற்றார். தனது எஜமானரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் ராஜினாமா செய்துவிட்டு, பாபர் அவர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்.
                                                             இவரின் திறமைகளைக்கண்ட பாபர் இவரை பல மாகாணங்களுக்கு கவர்னராக்கினார். அதில் ஷெர்கானின் தந்தையார் இருந்த மாகாணமும் அடங்கும். இதற்கிடையில் பஹார்கான் மரணமடைய அவர் மகன் ஜலால்கான் பதவிக்கு வருகிறார். ஜலால்கான் வயதில் சிறியவராக இருந்ததால், ஷேர்கான் அதிகாரத்தில் துணைக்கு இருந்து நிர்வகித்தார். ஜலால்கான் பெரியவராக வளர்ந்ததும், ஷேர்கானின் உதவியின்றி தானே தனியாக நிர்வகிக்கவும், மொத்த ஆப்கானையும் ஆள்வதற்கும் விருப்பம் கொண்டார். ஜலால்கான் பெங்காலின் ஆட்சியாளரைத் துணைக்கு அழைத்துக் கொண்டார். ஆனால், இவர்களின் கூட்டணி சூரஜ்கர் என்ற இடத்தில் ஷேர் கானிடம் தோற்க அவர் பீஹாரின் ஆட்சியாளர் ஆனார். இதிலிருந்து ஷேர்கான் சோர்வடையாமல் ஆட்சியின் அடுத்த முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். பீஹா ருக்குப் பிறகு, பெங்கால் இவரை ஈர்த்தது 1536 ன் ஆரம்பத்தில் கௌர் நகரை நெருங்கினார். பெங்காலின் ஆட்சியாளர் ஷேர் கானுடன் போரிடுவதற்கு பதில், பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து காப்பாற்றிக்கொண்டார். அடுத்த வருடம் ஷேர்கான் மீண்டும் படையெடுத்து கௌர் மற்றும் பலமான ரோஹ்டாஸ் பகுதியை வென்று பெங்காலைக் கைப்பற்றினார்.  ஷேர்கானின் கிழக்குப்புற வெற்றிகளைக் கேள்விப்பட்ட ஹுமாயுன் தாமதிக்காமல் பெங்கா லைக் கைப்பற்ற படையெடுத்தார்.
                                    மொகலாயப் படைகள் கௌர் மற்றும் ஜன்னத்பாத் நகரங்களைக் கைப்பற்றியது. ஷேர்கானும் பீஹாரின் ஜான்பூரைக் கைப்பற்றி கன்னாஜ் வரை வந்தார். ஷேர்கானின் நடவடிக்கையை அறிந்த ஹுமாயுன் தனது தலைமையிலேயே சவ்ஸா என்ற இடத்தில் போருக்குத் தயாரானார். கங்கை நதி யைக் கடந்து முங்கீர் என்ற இடத்தை அடைந்தவுடன், நிலைமை வேறாக இருக்க  ஷேர்கானுடன் சமாதானத்திற்கு முயன்றார். ஆனால், முடி யாமல் போக சவ்ஸா போரில் ஹுமாயுன் தோல்வியுற்றார். பேரரசர் ஹுமா யுன் தப்பிக்கும்போது ஆற்றில் தவறிவிழ, நிஜாம் என்னும் பணியாள் அரசரை காப்பாற்றினான். நிஜாம் இரண்டு நாட்கள் ஹுமாயுனுடன் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டான். வெற்றி பெற்ற ஷேர்கான் தன்னை மன்னன் தகுதிக்கு ஆளாக்கிக் கொண்டார். ஆட்சியில் தனது சகோதரர்களை உதவிக்கு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டார். ஆனால், அவர் சகோதரர்கள் இவரை ஒதுக்கிவிட்டு, பாபரின் பிள்ளைகளுடன் நேசமாக இருந்தனர். ஷேர்கான் கங் கையைக் கடந்து கன்னாஜ் சென்று விடாமல் ஹுமாயுனுடன் போரிட்டார். இந்த முறையும் ஹுமாயுன் தோல்வியுற்று தப்பிச் சென்றார்.
                                             ஷேர்கான் இப்போது பெங்கால், பீஹார், ஜான்பூர் மற்றும் டெல்லிக்கு ஆட்சியாளரானார். பஞ்சாபையும், ஆக்ராவையும் வென்று முழு மையாக மொகலாயர்களை இந்தியாவை விட்டு விரட்ட எண்ணி புதிய போரைத் துவங்கினார். முதலில் பஞ்சாப் அவர் வசமானது. ஹுமாயுனின் சகோதரர் கம்ரான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒப்படைத்து விட்டார். இருந்தா லும் கம்ரான் காஷ்மீரின் அதிகாரத்தில் இருந்த ஹுமாயுனின் இன்னொரு சகோதரர் மிர்ஸா ஹிண்டாலுடன் சேர்ந்து வடமேற்கில் எதிர்க்கலாம் என்று எச்சரிக்கை அடைந்தார். இதனால், ஜீலம் நதிக்கரையில் பலமான கோட்டை ஒன்றை நிர்மாணித்து 50,000 வீரர்களையும், நம்பிக்கையான இராணுவ அதிகா ரியையும் காவலுக்கு வைத்தார். இப்போது ஷேர்கான் பெங்காலின் இன்னொரு பகுதியான மால்வாவின் மீது பார்வையைத் திருப்பினார். மால்வாவை பலமற்ற இரண்டாம் முஹமது என்பவர் ஆண்டு வந்தார். மல்லூகான் என்ற உள்ளூர் தலைவன் ஒருவன் இரண்டாம் முஹமதின் நிர்வாகம் சரியில்லாத தால், மாண்டு, உஜ்ஜைனி, சாரங்க்பூர் மற்றும் சில பகுதிகளை இணைத்து தனி சுதந்திரப்பிரதேசமாக ஆண்டுவந்தான்.
                                                          மல்லூகான் இல்லாமல் மேலும் இரண்டு உள்ளூர் தலைவர்கள் அருகில் இரு பிரதேசங்களை ஆண்டு வந்தார்கள். இந்த அருகா மை குழப்பங்களை கவனித்த ஷேர்கான் அந்த பிரதேசங்களை வெற்றிகொள்ள    எண்ணினார். 1542 ல் குவாலியர், சாரங்க்பூர், உஜ் ஜைனி மற்றும் மால்வா பகுதிகளை வென்றார். 1543 ல் ராஜபுதனா மற்றும் மார்வாரின் தலைநகர் ஜோத் பூரையும் வென்றார். மால் தேவாவில் ஷேர்கானுக்கு ராஜபுத்திரர்களிடமிரு ந்து பலத்த எதிர்ப்பு இருந்தது. ராஜபுத்திரர்கள் சதித்திட்டம் வைத்திருந்தனர். போரில் அதிகமான வன்முறையைக் கையாண்டனர். ஆனால், இறுதியில் ஷேர்கான் வெற்றி பெற்றார். வெற்றியின் உற்சாகத்தால், மவுண்ட் அபுவை வென்று, சித்தூரை நோக்கி முன்னேறினார். சாதாரண வாழ்க்கையிலிருந்து துவங்கிய ஷேர்கான் பல துறைகளிலும் சிறப்பான அனுபவம் பெற்றிருந்தார். இவரின் கீழிருந்த ராஜ்ஜியம் சூர் பேரரசு என்று அழைக்கப்பட்டது. இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த அறிவாளியாக இருந்தார். கீன் என்பவரின் கருத்து ஷேர்கானை மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது. பின்னால் வந்த மொகலாய மன் னர்கள் இவரின் நிர்வாக வழிமுறையையே தொடர்ந்தனர். ஆக்ராவிலிருந்து புர்ஹான்பூர், ஆக்ராவிலிருந்து பைனாஹ் வழியாக மார்வார், லாஹூரிலிரு ந்து முல்தான் பகுதிகளுக்கு சாலைகளை அமைத்திருந்தார். சாலைகளின் வழியில் மசூதிகளைக்கட்டி, பூந்தோட்டங்களை அமைத்து அதிகாரிகளின் மேற்பார்வையில் நீர்விட்டு பாதுகாக்கச் செய்தார்.  

மொகலாய வரலாறு 10

                       இந்துக்களையும், குறிப்பாக பிராமணர்களையும் பணியில் அமர்த்தி இருந்ததாக கனுங்கோ என்பவர் கூறுகிறார். தபால்துறையில் குதிரைகளை யும் மற்ற கால்நடைகளையும் பட்டுவாடாக்கள் செய்ய அமைத்தார். மக்தப், மதரஸாக்களை அமைத்து இலவச உணவு, கல்வி கிடைக்கச் செய்தார். பஞ்சா பில் ரோடாஸ் கோட்டை, ஆக்ராவின் அரண்மனைக் கோட்டை ஆகியவற்றை கட்டினார். இந்திய வரலாற்றில் தனி இடம் பிடித்த ஷேர்கான் ஹுமாயுனுக்கு எதிராக திறமையாக போர்திட்டம் வகுத்திருந்தார். இராணுவத்தில் 150,000 குதி ரை வீரர்கள், 250,000 போர் வீரர்கள், 5,000 யானைப்படைகள் என்று பிரம்மாண்ட மாக்கினார். இராணுவத்தில் ஊழல்களுக்கு இடம் தராமல் தன்நேரடி கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். நிலங்களின் பரப்பளவுக் கேற்றவாறு வருவாய் செலுத்தும் வழிமுறையைக் கொண்டு வந்தார். சாதாரண குடிமகனுக்கும் நியாயமான நீதி கிடைக்கச் செய்தார். மதிப்புக்கேற்றவாறு தங்கம், செம்பு, வெள்ளியில் உருக்கிய நாணயத்தை வெளியிட்டார். தன் வாழ்நாளிலேயே தனக்கும், தன் தந்தை ஹசன் கான் சூரிக்கும் நினைவு கோபுரங்களைக் கட்டி னார். இவர் மகன் இஸ்லாமுக்கும் நினைவுகோபுரம் கட்டியபோது, பாதியிலே யே ஆட்சியை இழந்தார். குழந்தைப்பருவத்திலிருந்து மாற்றாந்தாய்களினால் வேதனையைச் சுமந்து, பின் சமூக, வருவாய் துறையில் சிறப்பான பயிற்சி பெற்று கவர்னராய் மாறி, பலமான மொகலாய, ராஜபுத்திரர்களை வென்று மன் னனாகவே ஆகிப்போன ஷேர்கான் 1545 மே மாதம் 22 ல் வெடிமருந்தை  கையா ளும்போது தவறுதலாக வெடித்து இறந்துபோனார். இவருக்குப் பிறகு, இளைய மகன் ஜலால்கான், சலீம்ஷா என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார். இவர் தனக்கெ திராக இருந்த அமீர்களை சிறையிலிட்டும், கொன்றும் கடுமையாக நடந்து கொண்டார். ஒருமுறை அஸீம் ஹுமாயுன் என்ற பஞ்சாபின் கவர்னரை தன் னை வந்து சந்திக்கும்படி கூறினார். அஸீம் ஏதோ காரணத்தால் தன் உதவியா ளரை அனுப்பினார். இதை அவமானமாகக் கருதிய சலீம் ஷா அஸீமைக் கொன்றுவிட உத்தரவிட்டார். இதை அறிந்த அஸீம் புரட்சியில் ஈடுபட அம்பா லா என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டு, காஷ்மீருக்கு தப்பி ஓடினார். அங்கே ஒரு பழங்குடி மனிதனால் அஸீம் சுடப்பட்டு இறந்து போனார். எட்டாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு சலீம்ஷா இறந்துபோனார். அடுத்து சலீம்ஷாவின் மகன் ஃபிரோஸ்ஷா ஆட்சிக்கு வந்தார் . இவர் மகன்களாலும், பேரப் பிள்ளைகளா லும் ஆட்சி ஆளும் திறமை இல்லாததாலும்,எதிரிகளை கையாள முடியாத தால் ஷேர்கானின் சூர் பேரரசு ஆட்சி குறிகிய காலத்தில் முடிவுற்றது. பல குழப்பங்களுக்கிடையில் சிலர் ஹுமாயுனை மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டினர்.
மீண்டும் ஹுமாயுன்
14,000 வீரர்களுடன் சென்று கந்தஹாரில் சகோதரர் கம்ரானை வென்று, காபூல் நோக்கி முன்னேறி  அதையும் வென்றார். இரவு நேரத் தாக்குதலில் எதேச்சையாக மிர்சா ஹிண்டால் கொல்லப்பட்டார். காபூ லை விட்டு தப்பி ஓடிய கம்ரான் சுல்தான் சலீம் ஷாவிடம் அடைக்கலம் தேடி னார். சலீம் ஷா கம்ரானை அவமரியாதை செய்ய, ககார் என்ற பகுதிக்குச் சென் றார். அதன் ஆட்சியாளரும் கம்ரானை அவமரியாதை செய்து, ஹுமாயுனிடம் ஒப்படைத்தார். சகோதரர்களை நல்ல விதமாக பார்த்துக் கொள்ளச் சொன்ன தந்தை பாபரின் உபதேசம் நினைவுக்கு வர, கம்ரானைக் கொல்லாமல் கண்க ளை மட்டும் பிடுங்கி இனி தமக்கெதிராக சதிகள் புரியாவண்ணம் செய்தார். கம் ரானின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மனைவியுடன் புனித மக்கா நகருக்கு அனுப்பப்பட்டு, இறுதி காலம் வரை அங்கேயே இருந்தார். அதே போல் இன் னொரு சகோதரர் மிர்சா அஸ்கரியும் பிடிக்கப்பட்டு மக்காவுக்கு அனுப்பி வைக் கப்பட்டார். தனது எதிரிகளை விலக்கிய பின் மீண்டும் ஹிந்துஸ்தான் மீது படையெடுத்தார்.
    இந்தியாவின் சில பகுதிகளிலிருந்தும் ஹுமாயுனுக்கு ஆதரவு வந்தது. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். உன்னிப்பாக இந் தியாவை கவனித்து வந்த ஹுமாயுன் 1555 ல் தகுந்த இராணுவ பலத்துடன் லாகூரைக் கைப்பற்றினார். அரசு கஜானாவில் பல ஊழல்களைச் செய்த சுல் தான் சிக்கந்தர் சூர் சர்ஹிந்தில் எதிர்த்து வர அவரை ஹுமாயுன் விரட்டி அடித் தார். பழைய இந்திய தலைநகரைக் கைப்பற்றிய ஹுமாயுன் ஒரு வருட காலம் ஆட்சி செய்தார். . இவர் ஆட்சி செய்த காலத்தில் விஞ்ஞானத்திலும், கலைகளிலும் ஆர்வம் காட்டினார். கவிதையிலும், ஓவியத்திலும் மிகச்சிறந்த புலமை பெற்றிருந்தார்.இவரது கவிதைகள் அர்த்தம் வாய்ந்ததாக இருந்தது. பூகோளவியலிலும் சிறந்து விளங்கினார். வானின் ஏழு கோள்களை நினை வில் கொண்டு ஏழு பெரிய மண்டபங்களுடன் கூடிய மாளிகையைக் கட்டினார். சந்திரன் என்னும் மண்டபத்தில் நீதிபதிகள், தூதர்கள், கவிஞர்கள் மற்றும் பய ணிகள் கூடுவதற்கும், செவ்வாய் மண்டபத்தில் தளபதிகள் மற்றும் இராணுவ தலைவர்களுக்காகவும், புதன் மண்டபத்தில் பொறியாளர்களுக்காகவும், சனி மற்றும் வியாழன் மண்டபங்கள் அரசு நிர்வாகங்களுக்காகவும், வெள்ளி மண்ட பத்தில் கவிஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கூடவும் நிர்மாணித்திருந் தார்.
      மிகச்சிறந்த தச்சுத்தொழிலாளிகளை தருவித்து கலைநயத்துடன் கூடிய நான்கு படகுகளைத் தயாரித்து ஜமுனா ஆற்றில் பய ணிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். படகுகளில் சிலவற்றை சிறுவணிகத் திற்கும் பயன்படுத்தினார்.  அவைகள் டெல்லி ஃபரிதாபாத்திலிருந்து ஆக்ரா வரை சென்றன. ஒரு படகில் தோட்டம் அமைத்து நகரும் தோட்டம் ஆக்கி னார். இவரின் மிகப் பிரமாண்டமான பணியாவது ஒரு படகை மூன்று தளங்க ளடங்கிய அரண்மனை ஆக்கி இருந்தார். எப்போது வேண்டுமானாலும் அந்த மரப்படகை தனிமைப்படுத்தி பிரித்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது சேர்த்துக்கொள்ளலாம். சேர்க்கும்போது இணைத்ததற்கான அடையாளமே தெரியாது. படகின் மேல்தளத்திற்கு செல்லும் படிகள் தேவைப்படாத போது மடித்து வைத்துக் கொள்ளலாம். ஹுமாயுனின் ஆட்சி அமைப்பு, அதிகாரிகள், கலைகளைப்பற்றி பக்கம் பக்கமாக குறிப்புகள் ஆதாரங்களுடன் இருக்கின்றன. தஸ்கிரத் உல் வகியதி ஹுமாயுன் என்ற நூலில் ஆசிரியர்  ஜவஹர் என்பவர் பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறார். ஹுமாயுன் நிறைய படிப்பவராக இருந்தார். இந்தியாவை விட்டு தப்பி ஓடும்போது கூட பிடித்தமான புத்தகங்க ளையும், நூலகக் காப்பாளர் லாலா பெக் (தெரிந்த பெயர்-பாஸ் பஹதூர்)        கையும் அழைத்துக்கொண்டு போனார். மதப்பற்று மிக்க முஸ்லீமாக சுன்னி பிரிவைச் சார்ந்து இருந்தார். அரசு நிர்வாகத்தையும் நான்கு பிரிவாக பிரித்து க்வாஜாஹ் அப்துல் மலிக், க்வாஜாஹ் லுத்ஃப் உல்லாஹ், க்வாஜாஹ் ஹசன் மற்றும் க்வாஜாஹ் ஜலாலுத்தீன் மிர்சா பேக் ஆகிய தகுதியான அமைச்சர்கள் வசம் கொடுத்திருந்தார். டெல்லியில் சிறந்த கல்லூரியை நிறுவினார். ஹுமா யுன் கோபுரம் என்ற அந்த கட்டிடம் இன்றும் இருக்கிறது. ஆரம்பத்தில் ஷியா பிரிவுக்கு மாறியிருந்ததாலும், அதிகமான ஷியா பிரிவினரை பதவிகளில் வைத்திருந்ததாலும் ஹுமாயுன் ஷியா பிரிவைச் சேர்ந்தவராக அதிகமானோர் கருதினர். ஆனால் இவர் ஒரு சிறந்த சுன்னிப்பிரிவு முஸ்லீமாகவே இருந்தார். அதிகாரிகளிடமும், சாதாரண சிப்பாய்களிடம் கூட நண்பர் போல் பழகக் கூடிய வராக இருந்தார். சிறந்த மகனாகவும், தந்தையாகவும், சகோதரராகவும் இருந் தார். தந்தையைப் போலவே வெகு சீக்கிரத்தில் புகழ்பெற்ற தீன் பனாஹ் என்ற நூலக கட்டிடத்திலிருந்து 1556 ல் ஜனவரி மாதம் 24ல் தவறி விழுந்து மரணம டைந்தார்.