திங்கள், 6 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 11

ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர்
கூ.செ.செய்யது முஹமது
                                                 அக்பரின் முழுப்பெயர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் மொகலாயப் பேரரசின் அதிமுக்கிய மன்னரானவர். தன் குடிமக்களின் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாக ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். சிறுவய தில் சிறிய தந்தை கம்ரானின் பாதுகாப்பில் இருந்த போது, ஹுமாயுன் கம்ரா னைச் சுட கம்ரான் குழந்தை அக்பரை துப்பாக்கிக்கு முன் நீட்டினார். அதிர்ஷ்ட வசமாக அன்று அக்பர் தப்பித்தார். பனிரெண்டு வயதான போதே ஒட்டகம், யானை, குதிரைகளை கையாளும் திறமையைப் பெற்றார். போர்க்கருவிகளை யும் சிறப்பாகப் பயன்படுத்த அறிந்துகொண்டார். தந்தை ஹுமாயுன் இறந்த போது பதிமூன்று வயதான அக்பர் 1556 ல் பிப்ரவரி மாதம் 14 ல் பதவியேற்றார். சிறு வயதாய் இருந்ததால், தந்தையின் நண்பரான பைரம் கான் அதிகாரத்தில் உதவி புரிந்தார். அக்பரின் இளைய சகோதரர் முஹம்மது ஹகீம் காபூலின் தலைமையை ஏற்றார்.
                                        அக்பர் பதவியேற்ற வேளையில் இந்தியாவில் கடுமையான ப்ளேக் நோய் பரவி எண்ணற்றவர்கள் மரணமடைந்தனர். பூகோ ள அமைப்பின்படி பிரதேசம் மிகவும் சிறியதாக இருந்தது. அரசியல் ரீதியாக வடமேற்கு இந்தியாவை சிக்கந்தர்சூரும், முஹம்மது ஆதிலும் பிரித்து ஆண்டு கொண்டிருந்தார்கள். ஆப்கானுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே டெல்லி மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது. காபூலை சுதந்திரமாக முஹம்மது ஹக்கீம் ஆண்டு கொண்டிருந்தார். பதக் ஷானின் சுலைமான் இவருக்கு மிரட்ட லாக இருந்தார். பெங்காலும் சுதந்திரமாக ஆப்கான் ஆட்சியாளரின் அதிகாரத் தில் இருந்தது. ராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள் பாபரிடம் கண்ட தோல்வியிலி ருந்து இன்னும் மீளாமல் கோட்டையில் முடங்கி இருந்தனர். மால்வாவும், குஜராத்தும் அதன் மத்தியஅரசுடன் இணைந்து முஹம்மது துக்ளக் ஆண்டு வந்தார். கோண்ட்வானா உள்ளூர் தலைவனால் ஆளப்பட்டும், ஒரிசா சுதந்திரப் பிரதேசமாகவும், காஷ்மீர், சிந்த் மற்றும் பலுசிஸ்தான் யாருடைய கட்டுப்பாட் டிலும் இல்லாமல் இருந்தது. அஹமதாபாத், பிஜப்பூர், கோல்கொண்டா, காந் தேஷ் மற்றும் பிரார் போன்றவற்றை தனித்தனி சுல்தான்கள் ஆண்டு வந்தார் கள். இந்து பேரரசு விஜயநகரம் பலம் வாய்ந்தும், செல்வச் செழிப்பாகவும் இருந்தது. போர்ச்சுகீசியர்கள் அரபிக்கடல், பெர்ஷிய கடல்பகுதிகளில் பலமாக இருந்து இந்தியாவின் மேற்குக் கடலோர துறைமுகங்களிலும், கோவா, டையூ போன்ற இடங்களிலும் வாணிபம் செய்து கொண்டிருந்தார்கள். இதுதான் அக் பர் பதவியேற்றபோது இருந்த இந்தியாவின் அரசியல் அமைப்பு.                        
                                                      இராணுவத்தலைமை அதிகாரி ஹேமு, ஏற்கனவே இருபத்தி இரண்டு போர்களை முன்னின்று நடத்தி அனுபவம் பெற்றவர். இவர் பெரும்படைகளுடன் தலைநகர் சுனாரிலிருந்து ஆக்ரா நோக்கி மொகலாயர் களை எதிர்க்க வந்து கொண்டிருந்தார். பைராம்கான் தயாராகி வருவதற்குள், டெல்லியின் கவர்னர் தர்தி பெக் ஆக்ராவில் தோற்கடிக்கப்பட்டு தப்பி ஓடிவிட் டார். அக்பர் குறிப்பிட்ட வயதை எட்டும் வரை பைராம் கான் கண்ணும் கருத்து மாக வளர்த்து வந்தார். பைராம்கானின் தலையாய காரியம் ஹேமுவை வெற்றி கொள்வதாக இருந்தது. இராணுவ அதிகாரிகளும் அதையே கூறினார் கள். பைராம்கான் தவறுதலாக படை நடத்தி தோல்விகண்டு தப்பி யோடிய தர்திபெக்கை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு தானே ஹேமுவை எதிர்க்க தயாரானார். மொகலாய முன்னனிப்படைகள் ஹேமுவைத்தாக்கி கண்ணை ஊனமாக்கியது. அவன் யானையின் மீதிருந்து கீழே விழுந்தான். வீரர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இரு படைகளும் இரக்கமில்லாமல் மோதி க்கொண் டன. இறுதியில் மொகலாயப் படை வெற்றிபெற்றது. ஹேமு சிறைப் பிடிக்கப்பட்டு பேரரசர் முன் நிறுத்தப்பட்டான். பைராம்கான் இளம்மன்னன் அக்பர் ஹேமுவைக் கொல்வதைப்பார்க்க ஆர்வமாய் இருந்தார். ஆனால், அக் பர் தோல்வியுற்று கைதியாகிய ஒருவனைக் கொல்ல தான் விரும்ப வில்லை என்று கூறுகிறார். உடனே பைராம் கான் தனது வாளை உருவி ஹேமுவைக் கொன்றுவிடுகிறார்.
                                             அக்பரின் பலமான எதிரி பானிபட்டில் நடந்த இந்தப் போரினால் தோற்கடிக்கப்பட்டது. போரில் பெருவாரியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொன்பொருட்களும், 1500 யானைகளும் கைப்பற்றப்பட் டன. டெல்லி, ஆக்ரா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் மொகலாய வசமா யின. ஹேமுவின் மூலம் இந்து சாம்ராஜ் ஜியத்தை நிறுவதற்கு போட்ட திட் டம் சரிந்தது. அக்பர் இந்தியாவின் பேரரசர் ஆனார். இரண்டாம் பானிபட் போரையும் மொகலாயர்களே வென்றார்கள். இப்போது பைராம்கானும், அக்ப ரும் சூர் பிரதேசத்தின் மீது கவனம் கொண்டார்கள். பைராம்கான் சிக்கந்தர்சூரு க்கு எதிராக ஒரு படையை அனுப்பினார். சிக்கந்தர்சூர் தப்பித்து சிவாலிக் மலையின் மன்காட் பகுதியிலிருந்து எதிர்கொண்டார். அங்கிருந்து எதிர்ப்பின் பலம்குன்றி சரணடைந்தார். சிக்கந்தர்சூர் கிழக்கில் ஒரு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டு 1569 ல் மரணமடைந்தார். 1557 ல் முஹம்மது ஷா ஆதில் பெங்காலில் போரிட்டு மரணமடைந்தார். 1558 ல் அஜ்மீர், குவாலியர், ஜான்பூர் அகியவை மொகலாயப் பேரரசுடன் இணைந் தன. பைராம்கான் தற்போது உள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
பைராம்கானின் தனி வரலாறு  
                                                    பைராம்கான் பிறப்பால் ஒரு துருக்கியர். ஷியா பிரிவு முஸ்லீமைச் சேர்ந்தவர். தனது எஜமானர் ஹுமாயுனின் வீழ்ச்சியிலும், குடு ம்ப விவகாரத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். இவரின் ஆலோசனையால் தான் ஹுமாயுன் மீண்டும் இந்தியாவை வெல்ல முடிந்தது. ஒரு மன்னனுக்கு நன்றி விசுவாசத்துடன் கூடிய சிறந்த அறிவாளி அமைவது மிகவும் அபூர்வம், அதற்கு பைராம்கான் சிறந்த உதாரணம். துரோகத்தனமே மிஞ்சி இருக்கும் மன்னர்களின் வாழ்க்கையில் அக்பர் போன்ற சிறிய மன்ன னை பக்குவப்படுத்தி பேரரசராக உயர்த்தியதிலிருந்து இவர் தனிப்பெருமை யுடன் விளங்குகிறார். இவரின் கீழ்தான் ஒரு பேரரசுக் குண்டான பரந்த பிரதே சங்கள் அக்பருக்கு வென்று கொடுக்கப்பட்டது. ஒழுக்கத்துடன் கூடிய அரசியல் வாதியான இவரின் ஆற்றலும், அறிவும் மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரி தும் பயன்பட்டது.
                                                                  அக்பர் மற்றும் பைராம்கானின் நட்பு மிகவும் உணர்ச்சிகரமானது. ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம், மாற்றாந் தாய் மஹாம் அன்காஹ், மாற்றான் சகோதரர் ஆதம்கான், டெல்லி கவர்னர் ஷஹாபுத்தீன் ஆகியோர் சொந்த விருப்பின் காரணமாக பைராம்கானை வெறு த்தனர். குழந்தையிலேயே அக்பரிடம் நன்கு பரிச்சயமாக இருந்தாலும், தனக் காகவும், தன் பணியாட்களுக்காகவும் எந்த சிபாரிசுக்கும் அக்பரிடம் சென்ற தில்லை.  ஆனால் இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒருமுறை அக்பர் யானைகளுடன் போர்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது, அதில் இரண்டு யானைகள் தடுப்பைத் தாண்டி அருகிலிருந்த பைராம்கானின் கூடாரத்தை பிடுங்கி பைராம்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவி க்க இருந்தன. உடனே அக்பர் தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் பாய்ந்து யானைகளைக் கட்டுப்படுத்தினார். இதனால் பைராம்கான் கடும்கோபம் கொண்டு உடனிருந்த இரு பணியாட்களைக் கொன்று விடுமாறு உத்தரவிட் டார்.
                                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக