திங்கள், 6 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 13

                                             இவனுக்குப் பிறகு, மகன் அமர்சிங் ஆட்சியிக்கு வந்தான். அக்பர் தன் மகன் சலீம் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். சலீம் ஃப தேபூர், அலஹாபாத், புகழ்பெற்ற கோட்டைகள் சித்தூர், ரன்தம்போர், கலிஞ்சர், அஜ்மீர் அனைத்தையும் கைப்பற்றினார். ராஜ்புதனா தனிப் பிரதேசமாக ஆக்கப் பட்டது. பெரும்பான்மை ராஜபுத்திரர்கள் அக்பரின் கீழ் வந்தனர். தன் தந்தை வசம் இருந்த குஜராத்தின் மீது அக்பர் இப்போது பார்வையைத் திருப்பினார். அச்சமயம் குஜராத் மிகவும் செழிப்பாக இருந்தது. குஜராத் முஸஃப்ஃபர் ஷா என்ற பொம்மை மன்னனின் ஆட்சியில் இருந்தது. உள்நாட்டு கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன. குஜராத்தின் மந்திரி இதிமத் கான் அக்பருக்கு தூது அனுப்பி குஜராத்தைக் கைப்பற்றி காப்பாற்றும்படி வேண்டினார். அக்பர் தலை நகர் அஹமதாபாத் வந்து விட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் முஸஃப்ஃபர் ஷா சோளக்காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். குஜராத் அக்பர் வசமானது தனது மாற்றாந்தாய் மகன் கான் இ அஸாம் மிர்ஸா அஸிஸ் கோகா என்பவ ரை அதற்கு கவர்னராக்கினார்.
                                                   பின் சூரத் நகரமும் மொகலாயர் வசம் சரணடைந்தது. அக்பர் அதுவரை கடலைப் பார்த்தது இல்லை. ஆர்வத்துடன் கடற்கரையில் சுற்றுலா சென்று, கடலிலும் சற்று தூரம் பயணித்தார். மிர்ஸாக்களால் குஜராத் தில் கலவரம் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அக்கால அதிசயமாக உடனே 600 மைல் தூரத்தை ஓன்பது நாட்களில் கடந்து அஹமதாபாத் வந்தார். இதை சற்றும் எதிர்பாராத மிர்ஸாக்களின் கலவரம் அடக்கப்பட்டு குஜராத் அமைதி யானது. ராஜாதோடர்மால் என்பவர் தான் அமைதி ஏற்பட பெரிதும் பாடுபட் டார். குஜராத் பேரரசுடன் இணைக்கப்பட்டவுடன் போர்ச்சுக்கீசியர்களின் வாணி பமும் நடந்தது. அந்தகால பணத்தில் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு வரு வாய் ஈட்டியது. குஜராத் வெற்றி மேலும் பெங்காலை வெல்வதற்கு உந்துத லாக இருந்தது. பெங்காலை சுலைமான் கரீம் என்பவர் சுதந்திரமாக ஆண்டு கொண்டிருந்தார். 1572 ல் அவர் மரணமடைந்த பின் அவர் மகன் தாவூத் என்பவ ன் ஆட்சிக்கு வந்து தன் பெயரிட்ட நாணயத்தை பதவியேற்கும் தினத்தன்றெ வெளியிட்டான். தாவூது வெளிப்படையாக பேரரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தான். ஸமானியா என்ற கோட்டையை பேரரசிடமிருந்து கைப்பற்றினான் அக்பர் நேர டியாக தானே படையெடுத்து அவனை பாட்னாவிலிருந்து ஓடச் செய்தார். தாவூதை துகராய் என்ற இடத்தில் வெற்றி பெற்று சரணடையச் செய்து பேரரசு க்கு ஆண்டு கப்பம் செலுத்தச் செய்தார். பெங்காலில் முனிம்கான் என்பவரை கவர்னராக அக்பர் நியமித்தார். 1575 ல் முனிம்கான் இறந்துவிட மீண்டும் தாவூ த் தன் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அக்பர் திறமையான தளபதியை அனுப்பி அவனை வெற்றி கொண்டு சிறைப்பிடித்து 1576 ல் ராஜ்மஹாலில் அடைத்தார்.
                                               1571 ல் அக்பர் ஃபதேபூர் சிக்ரியில் ஒரு அரண்மனையை கட்ட விரும்பினார். அது அக்பருக்கு மூன்று பிள்ளைகள் பிறக்கும் என்று முன் பே கூறிய அவரின் ஆஸ்தான சூஃபி மதபோதகர் ஒருவரின் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தது. முதல் இரு பிள்ளைகள் பிறந்தபோது அரண்மனைக்கு அடிக்கல் நாட்டினார். அதற்கு ஃபதேபூர் (வெற்றி) சிக்ரி என்று பெயரிட்டார். பிறகு தான் மூன்றாவது மகன் பிறந்தார். இந்த அரண்மனை சரித்திரத்தில் மிக வும் புகழப்பட்டது. மிக உயர்ந்த சிகப்புக்கல்லால் அலங்கரித்தார். உள்ளேயே மசூதியும் அமைத்திருந்தார். போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தா ல் அப்போது இந்த அரண்மனை 14 வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படுகிறது. அரண்மனை மலையின் முகப்பில் அமைக்கப்பட்டு, கீழே நகரம் நிர்மாணிக்கப்பட்டது. திவான் இ கஸ் என்னும் பொதுமக்கள் அரங்கமும் கட்டப்பட்டிருந்தது. இது ஒரே ஒரு மையத்தூணில் அமைக்கப்பட்டிருந்தது.
                                                         பெரும்பாலான தீவிர மதப்பற்றுள்ள முஸ்லீம்கள் அக்பரை அவரின் கொள்கைகளுக்காக எதிர்த்தார்கள். முஸ்லீம்கள் அக்பரின் சகோதரர் மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தலைமையில் கலவரம் உண்டாக்கி புரட்சியில் ஈடுபட்டனர். மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தளபதி ஒருவரின் தலை மையில் படையனுப்பி பஞ்சாபை தாக்கச் சொன்னார். அது தோல்வியில் முடி ந்தது. மிர்ஸா முஹம்மது ஹக்கீம் மீண்டும் ஷத்மான் என்ற தளபதி தலைமை யில் ஒரு படை அனுப்பினார். அப்போது பஞ்சாபின் பொறுப்பில் இருந்த ராஜா மன்சிங் அடக்கி விரட்டினார். இப்போது மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தானே 15,000 வீரர்களுடன் படையெடுத்து வந்தார். அக்பர் அவரை வென்று, காபூலிலே யே இறக்கும் வரை ஆட்சி செய்ய அனுப்பி வைத்தார். 1585 ல் மிர்ஸா முஹம் மது ஹக்கீம் இறந்த பின் காபூல் மொகலாயப் பேரரசில் இணைந்தது. ராஜா மான்சிங் காபூலின் அதிகாரம் கொடுக்கப்பட்டு, அந்த மக்களின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை அவருக்கு சரிவராமல் திரும்ப அழைக்கப்பட்டார். அவருக்கு பதில் ராஜா பீர் பால் அனுப்பப்பட்டு, அவரும் யூஸுஃப் அஃப்சலுக்கு எதிராக காபூலில் ஒரு போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் மங்கோலியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்தார்கள். பலமான இராணுவ எல்லைகளை அமைத்தும், திறமை யான உயரதிகாரிகளை பாதுகாப்புக்கு நிறுத்தியும் கண்காணித்தனர். பால்பன், காஸி மாலிக் மற்றும் அலாவுதீன் கில்ஜி போன்றவர்களின் நடவடிக்கைகள் சிறந்த உதாரணம்.
                                                           அக்பரும் வடமேற்கு எல்லையை பாதுகாப்பதில் தீவிரமாய் இருந்தார். காபூலை வென்றபின் பழங்குடி பகுதிகளை குறைத்தார். லாஹூரிலும் ஒரு அரண்மனையை 1585 லிருந்து 1598 வரை வைத்திருந்தார். அந்த காலங்களில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானியர்களை தடுத்துக் கொண்டிரு ந்தார். உஸ்பெகிஸ்தான் தலைவர் அப்துல்லாஹ், மிர்ஸா சுல்தான் மற்றும் பதக் ஷானுடன் சேர்ந்து கொண்டு காபூலைப் பிடிக்க சமயம் பார்த்துக் கொண்டி ருந்தார் அப்துல்லாவுக்கு காபூலின் தீவிர முஸ்லீம்கள் ஆதரவளித்தனர். மொகலாயப் படையிலிருந்து ராஜா பீர்பால், ஹகீம் அப்துல் பத் மற்றும் ஸைன் கான் ஆகியோர் அனுப்பப்பட் டனர். மூன்று ஜெனரல்களும் போர் அனுபவம் இல்லாதவர்கள் எட்டாயிரம் மொகலாய வீரர்களும், ராஜா பீர்பா லும் கொல்லப்பட்டு, ஸைன் கான் மயிரிழையில் உயிர் தப்பினார். அக்பர் ராஜா தோடர் மாலையும், அவர் மகன் முராதையும் பெரும் படையுடன் அனுப் பினார். அவர்கள் காபூலின் புரட்சிப் படையை அடக்கி எண்ணற்றவர்களை கொன்றார்கள். அப்துல்லாஹ் புரட்சியில் இருந்து விலகிக் கொண்டார்.                    
                                              1586 ல் காஷ்மீரை ஆண்ட முஸ்லீம் மன்னர் அங்குள்ள இந்து மக்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக அக்பருக்கு செய்தி வந்தது. இதனாலும், காஷ்மீரின் தட்பவெப்பநிலை, பள்ளத்தாக்கின் அழகு போன்றவற் றைக் கேள்விப்பட்டதாலும் காஷ்மீரை வெல்ல அக்பர் ஆர்வமானார். மிர்ஸா ஷாருக் மற்றும் ராஜா பக்வான் தாஸ் ஆகியோரை காஷ்மீர் ஆட்சியாளர் யூஸுஃப் ஷாவிடம் அனுப்பினார். யூஸுப் ஷா ஒரு சமாதான உடன்படிக்கை க்கு விரும்பினார். ஆனால், அக்பர் அதை விரும்பாமல் காஸிம் கான் என்ற தளபதியின் தலைமையில் ஒரு படையை அனுப்பி தனக்கு நேரடியாக சரண டைய வேண்டும் என்று உத்தரவிட்டார். யூஸுஃப் ஷா பணிந்து போக, அவர் மகன் யாகூப் தப்பித்து தலைமறைவானார். ஆனால், விரைவில் பிடிபட்டு அவ ரும் சரணடைந்தார். காஷ்மீர் மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப் பட்டு, அவ்வப்போது அக்பர் கோடையில் ஓய்வெடுக்கும் விடுமுறைத் தலமாக மாறியது. இதேபோல் முல்தானும், பலுசிஸ்தானும். கந்தாரும் வெற் றிகொள்ளப்பட்டது
                                           அக்பரின் ராஜ்ஜியம் டெல்லி, ஆக்ரா, ஔத், அலஹாபாத், அஜ்மீர், குஜராத், பெங்கால், பிஹார், ஒரிஸ்ஸா, மால்வா, சிந்த், முல்தான், லாஹூர், காபூல், காஷ்மீர், பந்தேஷ், அஹ்மத்நகர் மற்றும் பிரார் என்று பதி னெட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இறுதியாக அலிகாரை கைப்பற்றிய வுடன் அக்பர் மிகவும் குன்றிப்போனார். அவரின் பிள்ளைகளால் மிகவும் கவலை அடைந்தார். ஏற்கனவே மகன்கள் முராதும், தனியாலும் குடிப்பழக்க த்தால் முறையே 1599 லும், 1604 லும் இறந்து போனார்கள். அடுத்த மகன் சலீம் (ஜஹாங்கீர்) இவரும் நீண்ட குடி மற்றும் போதை பழக்கமுள்ளவர். இவரின் நலனுக்காக ராஜகுடும்பத்தினர் அதிகம் இறைவனை வேண்டியதாகவும், பல புனித பயணங்கள் மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர் உடல்ரீதி யாக பலமாக இருந்தவர்.
                                                      1600 ல் வயதான அக்பர் டெக்கான் பகுதியில் போரில் இருந்தபோது, சலீம் புரட்சியில் ஈடுபட்டு அலஹாபாத்தைக் கைப்பற்றினார். 1602 ல் மேலும் வயதான அக்பருக்கு அதிர்ச்சிதரும் வகையில் பிரபல கொள் ளைக்கூட்டத் தலைவன் பீர்சிங் பந்தேலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். இறுதி நாட்களில் அக்பர் கொஞ்சம் கூட நிம்மதியில் இருந்ததில்லை. அபுல் ஃபஸல் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டிருந்தார். நம்பிக்கையான சிலரை பதவியில் நியமித்திருந்தாலும், மக்களிடையே நம்பிக்கையற்று போனார் அக்பரின் மகன் சலீம். ராஜா மான்சிங் தலைமையில் ஒரு குழு அமைத்து சலீ மின் மகன் குஸ்ரு (பேரர்) தலைமையில் ஆட்சியை ஒப்படைத்தார். ஆனால், அது நிலையில்லாமல் போனது. 1605 ல் அக்பர் மிகவும் உடல்நலம்குன்றி போனார். அதிகமான வயிற்றுப்போக்கும், மூச்சுத்திணறலும் மருத்துவர்களா ல் காப்பாற்ற முடியாமல் போனது. அவர் கட்டிக்கொண்டிருந்த சிகந்தரா கோபு ர நினைவிடத்திலேயே அக்பரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
                                          இஸ்லாமிய ஆட்சி என்பது நபிகள் (ஸல்), நேர்மையான நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, முதலாம் வலீத் என்பவர் கிறிஸ்தவர்களும் இருந்த ஆட்சியில் இஸ்லாமிய ஆட்சியை நிலைப்படுத்தினார். இதில் அப்பா ஸிட்களுக்கு முக்கிய பங்குண்டு. பாக்தாதை இஸ்லாமிய மையமாக்கி தாரு ஸ் ஸலாம் ஏற்படுத்தினார்கள். ஒரு நாட்டை வென்றெடுத்த மன்னரின் விரு ப்பமே நாட்டின் மதமாக இருந்தது. ஆரம்பத்தில் அக்பர் இஸ்லாமிய ஆட்சியா க இந்தியாவில் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவே தெரிகிறது. அக்பரு ம் சிறுவயதிலேயே ஆட்சிக்கு வந்து அரசியலில் தீவிரமாக இருந்ததால் வெளி யுலக இஸ்லாமிய ஆட்சியை அறிந்திருக்கவில்லை. ஆனால், தீவிரமான இஸ்லாமிய மதபோதகர்கள் அக்பரை இஸ்லாமிய ஆட்சியே இந்தியாவில் ஆள வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அக்பரின் ஆளுகையின் கீழ் பெருவாரியான ராஜபுத்திர இந்துக்களின் பிரதேசங்களும் இருந்தன. அக்பரின் நெருங்கிய நண்பரும், ஆலோசகருமான அபுல் ஃபஸல் இந்த விவகாரத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய கடமைக்காளானார். இவரின் ஆலோசனையில் அக்பர் சுன்னி பிரிவு முஸ்லீமாய் இருந்தார். அக்பர் சிறந்த தொழுகையாளி யாக இருந்தார். சில சமயங்களில் மு அத்தீன் (தொழுகைக்கு அழைப்பு விடுப் பவர்) ஆகவும் இருந்திருக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக