திங்கள், 6 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 14

                                           ஒவ்வொரு ஆண்டும் அஜ்மீரின் ஷெய்க் சலீம் சிஷ்டியின் நினைவிடத்திற்கு செல்பவராக இருந்தார். அந்த ஞானியின் பெயரையே தன் மகன் சலீமுக்கு சூட்டினார். நாடெங்கும் இமாம்களை அமர்த்தினார். ஒருமு றை அக்பரின் பிறந்த நாளுக்கு அரண்மனைக்கு இஸ்லாமிய ஞானி ஒருவர் வருகை தந்தார். அவர் அக்பருக்கு இந்துக்களின் முறைப்படி வண்ணமயமான உடையலங்காரம் செய்திருப்பதைக் கண்டு, கூடாது என்பதுபோல் கைத்தடி யை அசைத்தார். அது தவறுதலாக அக்பரின் மீது பட்டுவிட்டது என்பதற்காக கடுமையாக அரண்மனை பெண்மணிகளால் தண்டிக்கப்பட்டார். மெஹ்தி என்ற ஒரு அமைப்பும் அக்பரின் காலத்தில் இருந்தது. அதன் தலைவர்களை கைது செய்தார். பின் பெரும் இஸ்லாமிய அறிஞர்களை வரவழைத்து பல தர ப்பு ஆலோசனைக்குப் பிறகு, இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவித் தார். இதனால் பலமான எதிர்ப்பு கிளம்பியது. சில இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதனால் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுடன் இந்தியாவின் மற்ற மதக் கொள்கைகளையும் இணைத்து ‘தீனே இலாஹீ’ என்ற புதிய மதத்தை அறிமுக ப்படுத்தினார். இதில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, இஸ்லாமை ப்போல் ஸலாம் அலைக்கும் என்பதற்கு பதிலாக, அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொ ள்ள வேண்டும். அப்போதைய இஸ்லாமிய உலகின் அப்பாஸிட்களும், உமய் யாத்களும் அக்பரை மிகவும் கடுமையாக கண்டித்தனர். இது ஒரு முட்டாளின் கண்டுபிடிப்பு என்று இகழப்பட்டார். தீனே இலாஹீ ஒரு நபியின் வழியாக தோன்றிய மதமல்ல அரசியல் ஆதாயத்திற்காக ஒரு மன்னரால் தோற்றுவிக் கப்பட்டது என்று கூறப்பட்டது. உண்மைதான் ராஜபுத்திரர்கள் தங்கள் உறவுக ளை அக்பரின் குடும்பத்திற்கு மணமுடித்துக் கொடுத்தனர்.
                                                           பதாயோனி என்பவர் தனது புத்தகத்தில் கீழ் கண்ட நடைமுறைகள் அக்பரின் ஆட்சியில் இருந்ததாக குறிப்பிடுகிறார் :
தலையை தரையில் வைத்து (சஜ்தா) மன்னரை வணங்கும் முறை இருந்தது. தீ வழிபாடும், சூரிய வழிபாடும் அக்பரின் ஆட்சியில் இருந்தது. அக்பர் மணந்து கொண்ட இந்து பெண்களின் திருப்திக்காக ஆண் காட்டுப்பன்றி அரண்மனை யில் கட்டி வைக்கப்பட்டு சகுனம் பார்க்கப்பட்டது. தன் மனைவிகளுக்காக நெற்றியில் பொட்டிடும் பழக்கமும் அக்பரிடம் இருந்தது. மாட்டிறைச்சி, பூண் டு, வெங்காயம் உபயோகப்படுத்தப்பட்டு, தாடி வைப்பது தடை செய்யப்பட்டிரு ந்தது. தாடி வைத்திருந்த முல்லாக்கள் தண்டிக்கப்பட்டனர். மிருகங்களை பலி யிடுவதும், உண்பதும் இஸ்லாமில் ஆகுமானதாக இருக்க, அக்பர் இந்துக்களுக் காக பசுக்களைக் கொல்வதையும், உண்பதையும் தடை செய்தார். ஆண்களுக் கு பனிரெண்டு வயதிற்கு முன் விருத்தசேதனம் செய்வதும், பூப்பெய்தாத பெண்கள் மண முடிக்கவும் தடை செய்யப்பட்டது. அரபுமொழி பயில்வது ஆர் வமூட்டப்படாமல் இருந்தது. பகிரங்கமாக தொழுகைக்கு அழைப்பதும், பொது இடத்தில் தொழுவதும் தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய பெயர்களான முஹமது, அஹமது, முஸ்தபா போன்ற பெயர்கள் மன்னருக்கு எதிராக (அவர் அக்பர் அல்லவா) இருப்பதாக கூறி வேறு பெயர்கள் வைக்கப்பட்டனர். புனித மக்கா பயணம், ரமதான் மாத நோன்புகள் ஆதரிக்கப்படவில்லை. குர்ஆன், ஹதீஸ்கள் புழக்கத்திலிருந்து மறைக்கப்பட்டன. மசூதிகளும், வணக்கவிடங் களும் வீரர்களின் ஓய்வறையாகவும், பொருள் சேகரிக்கும் இடமாகவும் ஆக்க ப்பட்டன. தனது தீனே இலாஹிக்காக ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இஸ்லா மின் வாடையே இந்தியாவில் இல்லாமல் செய்தார். பிரிட்டிஷாரின் கூற்றுப் படி அக்பர் தங்களை விட பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டார். அவரின் ஆட்சிக்கு தீனே இலாஹீ போன்ற பொதுவான மதம்தான் இந்தியா போன்ற பல மதமுள் ள நாட்டுக்குத் தேவை என்று வாதிட்டாலும். இஸ்லாம் இதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது அல்லது அவர் இஸ்லாமியரே அல்ல. ஜஹாங்கீர் தன் தந் தை ஒரு சிறந்த தொழுகையாளி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதை யாரும் அங்கீகரிக்கவில்லை. நண்பர் அல்லாமா அபுல் ஃபஸல் மூலம் “அக்பர் நாமா” என்ற நூலை எழுதச்செய்தார்.
       கலைகளிலும், இலக்கியத்திலும் மிகவும் புலமை வாய்ந்திருந்தார். உலகளவில் ‘தி க்ரேட்’ என்று போற்றப்பட்ட மிகச்சிலரில் அக்பரும் ஒருவர். பிரபல்யமான புத்தகங்களான கான் இ கானான், ஜாமா இ ரஷீதி, மு அஜம் உல் புல்தான், ஷாஹ்னாமா, ஹயாத் உல் ஹைவான் ஆகிய வற்றை பெர்ஷிய மொழியில் மொழி பெயர்க்க வைத்தார். தன்னைச் சுற்றிலும் எப்போதும் தத்துவவாதிகள், போதகர்கள், கவிஞர்கள், சரித்திர ஆய்வாளர்கள் இருப்பது போல் வைத்துக் கொண்டார். அக்பரின் நெருங்கிய நண்பராகவும், ரகசிய ஆலோசகராகவும் அபுல் ஃபஸ்ல் என்பவர் இருந்தார். அபுல் ஃபஸ்ல் தலையாய பெர்ஷிய போதகராகவும், பரந்த கலாச்சார மற்றும் மத அடையாள மாகவும் திகழ்ந்தார். இவரின் மூத்த சகோதரர் ஃபைஸி என்ற அபுல் ஃபைஸ் அரண்மனை நூலகக் காப்பாளராகவும், பெர்ஷிய கவிஞராகவும் இருந்தார். எண்ணற்ற சமஸ்கிருத, ஹிந்தி மொழி கணிதம், விஞ்ஞானம் மற்றும் பலது றை புத்தகங்களை பெர்ஷிய மொழியில் மொழி பெயர்த்தார். தலைசிறந்த அப் துல் காதிர், பைரம்கான், பீர் முஹம்மது, அமீர் மீர் தகி ஷரீஃபி, மௌலானா கீருத்தீன் ரூமி, ஷெய்க் அபுன்நபி தெஹ்லாவி, மிர்சா முஃப்லிஸ், ஹாஃபிஸ் தாஷ்கண்டி மற்றும் முல்லாஹ் சாதிக் ஹால்வி போன்ற இஸ்லாமிய மதபோ தகர்களும் அக்பரின் சபையில் இருந்தார்கள்.
   தனக்கு ஆலோசனை வழங்கவும், அதிகாரிகளாக இருப்பவர்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அக்பர் பார்ப்பதில் லை. மற்ற முஸ்லீம் ஆட்சியாளர்களை விட அக்பரின் அரண்மனையில் இந்து க்கள் தான் பெருவாரியாக இருந்தார்கள். சூஃபி சகோதரர்களான அபுல் ஃபஸ்ல் மற்றும் அபுல் ஃபைஸ் தவிர, ராஜா தோடர்மால், பீர் பால், ராஜா பக்வான் தாஸ், ராஜா மான் சிங், ராஜா பிஹாரி மல், ஹரி நாத், சூர் தாஸ், துளசி தாஸ் மற்றும் பல் ஹிந்துக்கள் சிறப்பான அந்தஸ்தில் இருந்தார்கள். ஓவியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அக்பர் அதற்காக ஓவியப்பள்ளிகளை அமைத் தார். ஃபதேபூர் சிக்ரியில் அக்பர் அமைத்த ஓவியங்களுடன் கூடிய கலை மண் டபம் பிரசித்திப் பெற்றது. நல்ல ஓவியக் கலைஞர்களுக்கு பெரிய ஊதியமும், ஊக்கத் தொகைகளும் கொடுத்தார். சையத் அலி தப்ரீஸ், கவாஜா அப்துல் சமத் மற்றும் கேசு போன்ற சிறந்த ஓவியர்கள் இருந்தார்கள். தன் காலத்தில் இந்தியாவில் இசைக்கலையை மிக உச்சத்தில் அக்பர் வைத்திருந்தார். தானே ஒரு இசைக்கலைஞராக இருந்தார். சுபான் கான், சருத் கான், ஸ்ரீ கியான் கான், மியான் கான், மியான் லால், தாவூத் தாரி, முஹம்மத் கான் தாரி, முல்லாஹ் இஸ் ஹாக் தாரி, நானக் ஜர்ஜு, பிலாஸ் கான், தன்தரங்க் கான், ரங்க் சென், ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பீர் ஸாதாஹ் போன்ற இசைக்கலைஞர்கள் இருந் தார்கள். இவர்களுக்கெல்லாம் மேல் காலத்தால் அழிய முடியாத இசை மேதை மியான் தான்சேன் இருந்தார். தனது இசைத்திறமையால் யமுனா நதியையே தீயால் எரியச் செய்ததாக வரலாறு உள்ளது. இன்றும் இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்கள் குவாலியரில் உள்ள இவரின் கல்லறையில் அமர்ந் து பாடுவதுண்டு. மியான் தான்சேனைப் போலவே அக்பரின் அவையில் ராம் தாஸ் மற்றும் ஹரி தாஸ் என்ற இருவர் ‘பாடும் குயில்கள்’ என்ற சிறப்பில் அழைக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். பீன், புல்லாங்குழல், கிசக், கரானா, கபுஸ், சர்மண்டல், சுர்னா, தம்புரா, ரபப் மற்றும் கானூன் போன்ற இசைக்கரு விகள் பிரபல்யமாக இருந்தன. இந்த கருவிகளை இசைக்கும் வல்லுனர்களாக ஷெய்க் தவான் தாரி, ஷிஹாப் கான், புர்பின் கான், உஸ்தாத் தோஸ்த், மீர் செய்யத் அலி, பஹ்ராம் குலி, தாஷ் பேக், பீர் மண்டல் கான், உஸ்தாத் யூசுஃப், சுல்தான் ஹாஷிம், உஸ்தாத் முஹம்மத் ஹுசெய்ன், உஸ்தாத் முஹம்மத் அமீன், உஸ்தாத் ஷா முஹம்மத், மீர் அப்துல்லாஹ் மற்றும் காஸிம் ஆகியோ ர் இருந்தனர். அக்பரின் அவையில் ‘தர்பாரி’ என்ற ராகம் மிகவும் பிரபல்யமாக இருந்தது.
அக்பர் கட்டிடக் கலையில் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் கால கட்டிடக் கலை இன்றும் ஃபதேபூர் சிக்ரியில் பறைசாற்று கின்றது. பாரசீக கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் ஹுமாயுன் கல்லறை, அத ன் அருகிலுள்ள பிரமாண்ட வாயில் கொண்ட மசூதி உலகில் எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆக்ரா கோட்டையிலுள்ள ஜஹாங்கிரி மஹால், ஷெய்க் சலீம் சிஷ்தி கல்லறை, ஃபதேபூர் சிக்ரியின் அழகிய மசூதி, ஜோதாபா ய் அரண்மனை, அக்பர் அரண்மனையின் மத்திய அரங்கம், தி க்ரேட் மாஸ்க் என்னும் மசூதி, ராஜபுதனாவின் மிர்தாவில் உள்ள அழகிய மசூதி, குவாலியரி ல் உள்ள துறவி முஹம்மது கௌஸ் கல்லறை, ராஜா பிஹாரி மாலின் மனை வியின் சதி புர்ஜ், அலஹாபாத்தில் உள்ள நாற்பது தூண்கள் மண்டபம், பீர் பால் இல்லம், கோபிந்த் தேவ், கோபி நாத், மதன் மோஹன், ஜுகல் கிஷோர் ஆகி யோரின் நாற்கோவில் மற்றும் சிக்கந்தராவில் உள்ள அக்பர் ஸ்தூபி ஆகிய வை அக்பரின் கட்டிடக் கலையின் சிறப்புகள் ஆகும். தோட்டக்கலையிலும் ஃபதேபூர் சிக்ரி பூங்கா மற்றும் காஷ்மீரின் நசீம் பாக் ஆகியவை சிறப்பானவை. இவைகளை எல்லாம் மொகலாயர்களுக்குப் பின்னால் ஆளவந்த பிரிட்டிஷார் கண்டு வியந்து போயினர். உலக மன்னர்களெல்லாம் வாளெடுத்து ரத்தம் சிந்தி, கொள்ளையடித்து பூமிகளைத் தான் பிடிப்பார்கள் என்று அறிந்திருந்த பிரிட்டிஷாருக்கு மொகலாயர்களைப் போல் வென்ற இடங்களில் கலை வளர் க்க முடியுமா என்று திகைத்துப் போனார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பனி ரெண்டாம் நூற்றாண்டு வரை சீனாவிலிருந்து மேற்கில் ஸ்பெயின் வரை இஸ் லாமிய மன்னர்கள் இந்த உலகுக்கு காட்டிய கட்டிடம் மற்றும் கலைகளை யாரும் காட்டியதில்லை, இனி காட்டவும் முடியாது. தேம்ஸ் நதி பாலம், பிக் பென் கடிகாரம், சுதந்திரதேவி சிலை மற்றும் குதிரைகளில் அமர்ந்து வாள் காட் டும் நான்காம் ஹென்றி, இரண்டான் சார்லஸ் என்று இவர்களாகவே ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியது தான். உலகிலேயே வருடாவருடம் அதிகமா ன மக்கள் இஸ்லாத்தில் இணைவது ஸ்பெயினில் மட்டும் தான் காரணம் அங்கு இஸ்லாம் விட்டு வந்த உண்மையான ஆட்சி, கட்டிடக் கலை மற்றும் கலை, கலாச்சாரங்களும் தான். தோல் உரிக்கப்பட்ட சப்போட்டா பழத்தின் உள்ளே அதிசயமாக மாம்பழம் வந்தாலும் வருமே தவிர, மேற்கத்தியர்களால் உலகில் அமைதியை நிலை நாட்ட முடியாது.
           அக்பரால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இந்து கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறி, பின்னால் ஆட்சிக்கு வந்த அக்பரின் பேரர் ஷாஜஹான் இடித்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக