வியாழன், 25 ஜூன், 2015

மொகலாய வரலாறு 2

மொகலாயப் பேரரசு 2  
                                                                     பெரும்பாலும் மொகலாய வரலாறு பாபரிட மிருந்து தான் ஆரம்பிக்கும். ஆனால், முதல் முதலில் இந்திய மண்ணில் கால் பதித்த முஸ்லீம் வீரர் முஹம்மது பின் காசிம் என்பவர். தனது பதினேழாவது வயதில் அவர் இந்த சாதனையை செய்தார். இவர் தைமூ ருக்கு முன் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தனது படையுடன் சிந்து மாகாணத்தில் நுழைந்து வெற்றி கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தார். இவரைப் பற்றி தெரிந்து கொண்டு நாம் இந்த மொகலாய வரலாற்றைத் தொடர்வோம். 695 ல் அரேபியாவின் தாயிஃப் நகரத்தில் பிறந்தவர் முஹம்மது பின் காசிம். உமய்யாத்களுக்காக மேற்கு பஞ்சாப், சிந்து போர்களை நடத்தியவர். தாகீஃப் என்னும் குலப் பிரிவை சேர்ந்தவர். இவர் தந்தை பெயர் காசிம் பின் யூசுஃப், முஹம்மது பின் காசிம் இளமையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர். இவரது நெருங்கிய உறவினரும் (சிறிய தந்தை) உமய்யாத் கவர்னராக இருந்த அல் ஹஜ்ஜாஜ் இப்ன் யூசுஃப் அல் தகாஃபி என்பவர் காசீமை வளர்க்கும் பொறு ப்பை ஏற்றுக் கொண்டார். நிர்வாகம், போர் பயிற்சி போன்றவற்றை சிறிய வயதிலேயே கற்று தேர்ந் தார். அல் ஹஜ்ஜாஜின் மகள் சுபைதாவை மணந்து கொண்டார். இவரின் இன்னொரு நெருங்கிய உறவினர் முஹம்மது பின் யுசுஃப் என்பவர் ஏமனில் கவர்னராக இருந்தார். அல் ஹஜ்ஜாஜின் வழி காட்டுதலில் பெர்ஷி யாவின் கவர்னராக நியமிக்கப்பட்டு அங்கு நடந்த உள்நாட்டு கலவரத்தை திறமையாக அடக்கி புகழ் பெற்றார். முஹம்மது பின் காசிம் மூலம் உமய்யாத் கள் சிந்துவைக் கைப் பற்றியதற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுகின் றன. பெர்ஸினின் கூற்றுப்படி சிந்துவிலிருந்து ராஜா தஹீர் என்பவர் மூலம் முஸ்லீம் வணிக கப்பல்கள் துருக்கி கந்தாராவிலிருந்து கைபர் கண வாயைக் கடக்கும் போதெல்லாம் தாக்கப்பட்டும், முஸ்லீம் ஆண், பெண்கள் சிறைப் பிடிக்கப்பட்டும் வந்தனர். மேலும், சிந்துவைக் கைப்பற்றுவதால் கந்தாராவி ற்கு செல்ல இன்னுமொரு வழி சுலபமாகும் போன்ற காரணத்திற்காக சிந்து வை கைப்பற்றினார்கள். அடுத்து விங்க்கின் கூற்றாவது, சிந்துவிலிருந்த மெட்ஸ் என்னும் பழங்குடியினர் டிக்ரிஸ் நதியிலிருந்து இலங்கை செல்லும் கடல்வழியில் கட்ச், டிபால் மற்றும் கதியாவார் போன்ற மெட்ஸ்களின் தளங் களி லிருந்து அரபுக்களின் கப்பல்களை கொள்ளையடித்து வந்தனர். மேலும், டிபால், கட்ச் பகுதிகளை வெல்வதின் மூலம் இந்தியாவிற்கான வாணிப வழி யும் சுலபமாகும் என்ற காரணத்தாலும், அல் ஹஜ்ஜாஜ் கவர்னராக இருந்த போது இலங் கையிலிருந்து அரேபியா திரும்பிக்கொண்டிருந்த பெண்கள் நிறைந்த கப்பல் ஒன்றை மெட்ஸ்கள் கடத்திச் சென்றனர். இதனால் அல் ஹஜ் ஜாஜ் தன் உறவினரான முஹம்மது பின் காசிம் தலைமையில் ஒரு படையை அனுப்பி சிந்துவைக் கைப்பற்ற உத்தரவிட்டார். காசிமின் சிந்துவின் மீதான படையெ டுப்பு மூன்றாவது முறையாக தான் முழுமையானது. முதல் இரண்டு முறை எதிரிகளைப்பற்றி சரியாகக் கணிக்கத் தவறியதாலும், கடுமையான வெப்பத்தாலும் பாதில் பின் துஹ்ஃபா என்பவரின் தலைமை யில் சென்று வெல்ல தவறவிட்டனர். அல் ஹஜ்ஜாஜ் தனது தனிப்பட்ட கவனம் கொண்டு கூஃபா நகரிலிருந்து மொத்த போர் நடவடிக்கைக்கும் உத்தரவுகளும், ஆலோச னைகளையும் வழங்கினார். 710 ல் முஹம்மது பின் காசிம் தலைமையில் ஷிராஸ் நகரத்திலிருந்து 6,000 சிரிய வீர்ர்கள் மற்றும் மாவாலிப் படைகளுடன் கிளம்பினார். சிந்துவின் எல்லையில் மேலும் சில முன்ணனிப் படைகளும், 6,000 ஒட்டகப் படைப்பிரிவினரும், மக்ரானின் கவர்னரின் உதவியில் ஐந்து போர்ப்படகுகளும் வழங்கப்பட்டன. காசிம் சிந்துவை கைப்பற்றிய சூட்டோடு, ஏற்கனவே இழந்திருந்த உமய்யாத்களின் நகரங்களான ஃபன்னாஸ் புர் மற்றும் அர்மானபெலாஹ் (லாஸ்பெலா) போன்றவற்றைக் கைப்பற்றினார். அல் ஹஜ்ஜாஜின் அறி வுரைப்படி டெபால் நகரை ஆக்ரோஷமாகத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்.
                            டெபாலுக்குப் பிறகு, அரபு இராணுவம் வடக்கில் அமைதியாக நெருன் மற்றும் சடுசான் (செஹ்வான்) நகரங்களைக் கைப்பற்றியது. போரில் கைப்பற்றிய ஐந்தில் ஒரு பகுதி பொருட் களும் அடிமைகளும் அல் ஹஜ்ஜாஜு க்கும், கலிஃபா வுக்கும் அனுப்பபட்டது. அடுத்தப் பகுதியில் ராஜா தஹிர் காசி மை எதிர்ப்பதற்கு படையைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார். காசிம் இந்துக் கரையை அடைந்து பெட் தீவின் ராஜா மோகாஹ் பசாயாஹ்வின் உதவியுடன் கரையின் அடுத்தபுறம் அடைந் தார். ரோஹ்ரி என்ற இடத்தில் தஹீரை எதிர் கொண்டார். போரில் ராஜா தஹிர் கொல்லப்பட்டு சிந்து வின் அதிகாரம் காசி மின் வசப்பட்டது. அதைத்தொடர்ந்து பிராமனாபாத், அரொர் மற்றும் முல்டான் போன்ற பகுதிகள் அரபுப் படைகளின் சிறிய இழப்பிற்குப் பின் கைப்பற்றப் பட் டன. காசிம் இந்து ராஜா க்களுக்கு கடிதம் எழுதி அவர்களை சரணடையும்படி யும், இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். ராஜா தஹிர் புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், அவருக்கு இந்துக்களிடம்  வெறுப் பிருந்தது. இது அவரை வெற்றி கொண்ட காசிமிற்கு சாதகமாக இருந்தது. வெற்றி கொண்ட பகுதிகளில் காசிம் புதிய இஸ்லாமிய நிர்வாகத்தின் கீழ் ஆட்சிமுறையை ஏற்படுத்தினார். கிராமப் புறங்களில் இந்துக்கள் அவர்களின் நிர்வாகத்தையே நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சச்னாமா, ஜைனுல் அக்பர் மற்றும் தரிக் இ பைஹாகி ஆகியோர் காசிமின் படைகளின் மீது போர் தொடுத்தனர். சிறை பிடிக்கப்பட்ட ஜாட்கள் ஈராக்குக்கு காசிமால் அடிமை களாக அனுப்பப்பட்டனர். முல்டானில் இருந்த சூரியக்கோவில் காசிமால் தகர்க்கப்பட்டதாக சில சரித்திர ஆசிரியர் களால் சொல்லப்படுகிறது. ஆனால், எல்லியாட், கோசென்ஸ், மஜும்தார் மற்றும் வைத்தியா போன்ற சரித்திர ஆசிரியர்கள் இது புனையப் பட்ட கதை என்று மறுக்கிறார்கள். சிலர் முஸ்லீம் களாக மதம் மாறியதாகவும், இந்துக்களும், புத்தமதத்தவர்களும் திம்மிக்களாக வே கருதப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.
                                                        இதற்கிடையில் ஹஜ்ஜாஜ் இறந்துவிட, கலீஃபா முதலாம் அல் வலீத் சுலைமான் இப்ன் அப்த் அவர்கள் அல் மாலிக்குக்கு பதிலாக பதவிக்கு வந்தார். இவர் ஹஜ்ஜாஜிக்கு மிகவும் நெருங்கியவர்களை பழிவாங்கினார். ஹஜ்ஜாஜால் முன்பு வெறுக்கப்பட்ட யாஸித் இப்ன் அல் முஹல்லப் என்பவரை ஃபார்ஸ், கிர்மான், மக்ரான் மற்றும் சிந்த் பகுதிகளுக்கு கவர்னராக்கி உடனடி யாக காசிமை விலக்கினார். முஹம்மது பின் காசிம் மேலும் இந்தியாவை நோக்கி முன்னேற விரும் பினார். அல் ஹஜ்ஜாஜின் நெருங்கிய உறவினர் என்ற காரணத்தாலேயே கலீஃபா ஆட்சிக்கு வந்ததும் முஹம்மது பின் காசிம் கொல்லப்பட்டார். சொந்த கலீஃபாவாலேயே கொல்ல ப்பட்டபோது காசிமிற்கு இருபது வயது. பிற்காலத்தில் இவரது மகன் அம்ர் பின் முஹம்மது அதே சிந்துவிற்கு கவர்னராக வந் தார். முஹம்மது பின் காசிம் தான் முதன் முதலாக இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த முஸ் லிம் ஆட்சியாளர். இவரைப்பற்றி ஸ்டான்சி லேன் பூலே என்பவரின் மெடீவல் இண்டியா என்ற புத்தகத்தை 1970 ல் ஹாஸ் கெல் ஹவுஸ் பப்ளி சர்ஸ் லிமிடட் வெளியிட்டிருக்கிறது.          
                                                                                  மஹாராஷ்டிராவில் மராத்திகளும், பஞ்சாபில் சீக்கியர்களும் பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். விவசாயி களாக இருந்த சீக்கியர்களுக்கு அவர்களின் தலைவர் கள் நாட்டின் நலம்கருதி போர்ப்பயிற்சி அளித்தார்கள்.

மொகலாய வரலாறு 1

மொகலாயர்கள் வரலாறு-1
கூ.செ.செய்யது முஹமது
                                                                                 உங்களுக்கு சந்தர்ப்பம் அமைந்தால் வாழ்நாளில் ஒருமுறையேனும் விடுமுறைப் பயணத்தை இந்தியாவின் வடக்குப்பகுதியில் அமைத்துக்கொண்டு டெல்லி, ஆக்ரா, அஹம தாபாத், ஃபதேபூர்சிக்ரி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு போய் பாருங்கள். மொகலாயர்களின் ஆட்சியைப்பற்றி யாரும் உங்களுக்கு பக்கம்பக்கமாகச் சொல்லத் தேவையில்லை. அங்கிருக்கும் கோட்டைகளும், அரண்மனைகளும், தோட்டங்களும் மௌனமாய் உங்களுக்கு மொகலாயர்களைப் பற்றிச் சொல்லும் அல்லது பார்த்தவர்களைக் கேளுங்கள் சொல்வார்கள். மொகலாயர்களை வென்று இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் பார்த்து வாயடைத்து அனுபவங்களை பிரிட்டிஷ் நூலகங் களில் புத்தகமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இது மிகைப்படுத்தப்பட்டதல்ல ஒருமுறை வட இந்தியா பயணித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சரித்திரத்தை எழுத வருபவன் நன்றாக அதன் உண்மைகளை கூடுமான வரை அறிய முயற்சித்திருக்க வேண்டும் அல்லது  அறிந்திருக்க வேண்டும் என்று புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  குறிப்பாக  எழுதுகோல் எந்த விதத்திலும் அநியாயத்தின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது. காலமெல்லாம் நல்ல சிந்தனையில் இருந்து விட்டு சாகும்போது மது குடிக்க பணமில்லாமல் ‘அர்த்தமுள்ள ...............’ என்று எழுதிவிட்டுப்போன கவிஞர்களையெல்லாம் கண்டவர்கள் நாம். இந்த தொடர் ஏதோ வாந்தி எடுத்தவர்கள் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ போல அல்ல. சரித்திரத்தில் தவறு ஏற்பட்டபோதெல்லாம் இந்த மனித சமுதாயம் உலகில் பல இடங் களில் இரத்தம் சிந்தி இருக்கிறது.
                                                                                  அதுவும் இந்தியா போன்ற பல சமுதாயத்தினர் இணைந்து வாழும் ஒரு நாட்டில் மிகவும் கவனமாக எழுதப்பட வேண்டும். எழுதினார்களா? அதை அறிந்தால் வேதனையின் உச்சிக்கே போய் விடுவீர்கள்.  இதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 ல் பூனாவில் நடைபெற்ற ஆல் இந்தியா சரித்திர மாநாட்டில் ஒரு கமிட்டியை அமைத்து இந்திய வரலா ற்றை குறிப்பாக முஸ்லீம்களின் ஆட்சியை முடிந்த மட்டிலும் உண்மைகளைத் திரட்டி எழுதிட பணித் தது. இஸ்லாமுக்குப் பிறகு, ‘தீனே இலாஹி’ என்ற மதத்தைத் தோற்றுவித்தவர் அயோக்கியனில்லாமல் எப்படி ‘மாமன்னன்’ அக்பர் ஆனார். (அக்பரின் மற்ற திறமைகளை நாம் குறை கூறவில்லை. இவர் தான் முழு இந்தியாவை உருவாக்கினார்.) நேர்மையான கலீஃபாக்களின் ஆட்சிக்கு ஈடாக ஆட்சி செய்த ஔரங்கஸேப் எப்படி உண்மைக்குப் புறம்பாக தீய ஆட்சியாளரானார். ஜஹாங்கீர் இந்தியாவிலேயே பிறந்தவர். இந்திய கலாச்சாரத்தை மிகவும் விரும்பியவர். இந்தி பாடல்கள் கவிதைகளை நேசித்தவர். டெல்லியை ஆட்சி செய்த முதல் மன்னன் அய்பெக். மொகலாயப் பேரரசை ஆட்சி செய்த முதல் பேரர சர் பாபர். இவரிலிருந்து தொடர்ந்த மொகலாய வாரிசுகள் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்களாய் இருந்தார்கள், இந்திய மக்களை ஆண்டார்கள். இவைகள் ஆதார பூர்வமாக அப்போதைய உயர் அதிகா ரிகள், இராணுவத்தினரின் உத்தரவுகள், நாட்குறிப்புகள் மூலம் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட ஆவணங் களின் மூலமும், கவர்னர்கள், ரகசிய உளவாளிகள், செய்தி ஆசிரியர்களின் மூலமும் தெரிகிறது. இது அல்லாமல் அக்பர்நாமா. பாபர் நாமா போன்ற சுயவரலாற்றிலிருந்தும், அக்கால வெளிநாட்டு பயணி கள் வான் நோயர், டி லாயட், கோர்யட், நிக்கோலியோ மனுச்சி, பெர்னியர் மற்றும் தவர்னியீ ஆகியோ ரின் பயணக்குறிப்பிலிருந்தும் தெரிகிறது. இந்த தொடர் பிரிட்டிஷ் சரித்திர எழுத்தாளர்கள், போர்ச்சு கீஸிய கடல் பயணிகளின் அனுபவங்களை கேட்டும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து திரட்டியது.
                                           இங்கிலாந்தின் சார்பில் ராஜ்ய பிரதிநிதி மற்றும் வைசிராயாக பேரரசர் ஜஹாங்கீரின் சபையில் டெர்ரி என்பவரும், ஹாகின்ஸ் என்பவரும் இருந்திருக்கிறார்கள். போர்ச்சுகீசிய நாட்டின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மான்செர்ரட் சேவியர் மற்றும் சிலர் மொக லாய அரண்மனையில் தங்கி இருந்திருக்கிறார்கள். 1857 ல் நடந்த கலவரத்தில் அதிகமான மொகலாய ஆவணங்கள் அழிந்து போனாலும், எஞ்சியவைகள் ஐரோப்பிய நூலகங்களில் மௌனமாக மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் உண்மைகளைச் சுமந்து கொண்டு இருக்கின்றன. பேராசிரியர் ரஷ்புரூக் வில்லிய ம்ஸ், இந்தியா புராதன நாடுதான் என்பதை மறுப்பதற்கில்லை இந்து, புத்தமத கலவரங்களாலும், சிறிய பிரதேச மன்னர்களின் முறையற்ற ஆட்சியாலும் களையிழந்திருந்த இந்தியாவை நவீனத்திற்கு இட்டுச் சென்றது பதினைந்தாம் நூற்றாண்டின் வாஸ்கோடா காமாவின் வருகையும், மொகலாய பேரரசர்களின் ஆட்சியும்தான் என்று கூறி இருக்கிறார். ஒருவகையில் நிச்சயமாக மொகலாயர்கள் இந்தியாவை வேறு காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்களின் பிடியில் செல்லாமல் பாதுகாத்ததா கவே மதிப்பிடுகிறார்கள். மங்கோலியர்கள் டெல்லியை நாசப்படுத்தியதை உதாரணமாகக் கூறுகி றார்கள். நமது இந்திய சரித்திரத்திலேயே மிகவும் ஆர்வமான பகுதி மொகலாயர்கள் ஆட்சி தான். மொகலாயர்கள் மதத்தால் இஸ்லாமையும், கலாச்சாரத்தால் பெர்ஷியாவையும் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அதுவும் ஔரங்கஸேப் குறிப்பாக மதப்பற்றுள்ளவராக இருந்தார்.
இந்த தொடரின் ஆதார மூலங்கள் :
ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால்                                 ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் லண்டன்                                   ஜர்னல் ஆஃப் தி ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸ், லண்டன்                                அலிகார் முஸ்லிம் யூனிவர்சிடி                                                                                                  மொகல் எம்பரர் ஆஃப் திமூர்                                                                      
 மெமோயர்ஸ் ஆஃப் ஸெஹிருத்தீன் பாபர்                                                           ஜஹாங்கீர் நாமா                                                                                        
ஹிஸ்டரி ஆஃப் ஹுமாயூன்                                                                              
 ஹிஸ்டரி ஆஃப் ஔரங்கஸேப்                                                                        
 மற்றும் பல பிரிட்டன் லைப்ரரி ஆன் லைன் புத்தகங்கள்.

செவ்வாய், 23 ஜூன், 2015

அய்யுபிட்கள் வரலாறு 2

அல் காமிலுக்கும், அல் முஃஅஸ்ஸிமுக்கும் இடையில் அதிகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் சிஸிலியின் மன்னர் இரண்டாம் ஃப்ரெடெரிக் முன் சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதற்குள் 1227 ல் முஃஅஸ்ஸிம் மரணமடைந்தார். ஃப்ரெடெரிக் ஆறாம் சிலுவைப்போருக்கு தயாரானார். அல் காமில் ஜெருசலம் மற்றும் அனைத்து புனித இடங்களையும் விட்டுக் கொடுத்து விடுவதாக அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைதி ஒப்பந்தம் போட்டார். அதில் கோவில் பகுதி, டோம் ஆஃப் ராக், அக்ஸா மசூதி ஆகியவை முஸ்லீம்கள் வசமிருக்கும் என்றும் முடிவானது. அவர்களுக்கு உண்டான புனித பகுதிகளை தனி அதிகாரிகளை வைத்து அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அல் காமில் 1238 ல் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அவர் மகன்கள் அஸ் ஸாலிஹ்ஹும், இரண்டாம் அல் ஆதிலும் எகிப்தையும், சிரியாவையும் ஆண்டார்கள். அய்யுபிட் பேரரசில் கடுமையான உள்நாட்டுப் போர் நிலவியது. இதற்கிடையில் 1239 ல் ஃப்ரெடெரிக்குடனான அமைதி ஒப்பந்தம் முடிவடைய ஜெருசலம் அய்யுபிட் வசமானது.   
                        அல் காமில் இஸ்லாமிய முறையில் போரிட்டார். சிலுவைபோரில் ஃப்ராங்க்ஸ்கள் தோல்வி அடைந்த போது, படைகளுக்கு உணவளித்ததாக ஆலிவர் ஷோலஸ்டிகஸ் புகழ்ந்தார். அவர்களின் பெற்றோர்களும், மகன்களும், மகள்களும், சகோதர, சகோதரிகளும் எங்கள் கையால் இரக்கமின்றி சாகடிக்கப்பட்டார்கள். அவர்களின் உடமைகளைப் பறித்து கொண்டு நிர்வாணமாக துரத்தி னோம். ஆனால் சுல்தான் எங்கள் படைகளுக்கு உணவளித்தார். இது இறைவனிடமிருந்து வந்த உதவியா கவே கருதுகிறோம் என்றார்.
                            சைஃபுத்தீன் அல் மாலிக் அல் ஆதில் அபுபக்கர் என்ற் இரண்டாம் ஆதில் 1238 ல் எகிப்து அய்யுபிட் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இரண்டு ஆண்டுகளே ஆண்ட இவர் சகோதரர் அஸ் ஸாலிஹின் புரட்சியால் சிறை பிடிக்கப்பட்டு, எட்டாண்டுகள் சிறையிலிருந்தே மரண மடைந்தார். பின் ஆட்சிக்கு வந்த அஸ் ஸாலிஹ் 1221 ல் ஐந்தாம் சிலுவைப் போரில் பணயக்கைதியாக ப்ரெய்னியின் ஜானிடம் இருந்தார். பின்னர் அல் ஜஸீராவில் விடுவிக்கப்பட்டார். 1234 ல் எகிப்தில் இவரால் மம்லுக்குகளுடன் குழப்பம் வர டமாஸ்கஸின் அதிபராக தந்தை இவரை அனுப்பினார். அங்கிருந்து இவர் சிறிய தந்தை அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் விரட்ட ஜஸீராவில் கவாரிசிம்களிடம் அடைக்கலமானார். பின் சில நாளில் டமாஸ்கஸைக் கைப்பற்றி தனது பகுதிகளை பெரிதாக்கினார். அப்போது சகோதரரை நீக்கக் கோரி எகிப்திலிருந்து உதவி கோர, எகிப்து வந்து சுல்தான் ஆனார். டமாஸ்கஸில் மீண்டும் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் ஆட்சியைப் பிடித்தார். அஸ் ஸாலிஹ் இப்போது தன்னை எகிப்துக்கு அழைத்தவர் களைக் கூட நம்பத்தயாராய் இல்லை. மத்திய ஆசியாவில் மங்கோலியர்கள் நுழைந்த பிறகு, பரவலாக கிடைத்த கிப்சக் (மம்லுக்) அடிமைகளை படைக்கு வாங்கினார். இவர் மட்டுமே மம்லுக் அடிமைகளை வாங்கிய முதல் அய்யுபிட் சுல்தான் அல்ல. ஆனால், அஸ் ஸாலிஹ் மட்டுமே மம்லுக்குகளை முழுமை யாக நம்பினார். அவர்களை ஆயிரம் பேர் கொண்ட ‘பஹ்ரிய்யாஹ்’ என்று பிரித்து நைல் நதியின் ரவ்தாஹ் தீவில் வைத்தார். இன்னொரு குழுவை ‘ஜம்தாரீயாஹ்’ என்று பிரித்து தன் சொந்த பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டார். பலகாலமாக அடிமையாகவே இருந்த மம்லுக்குகள் அருமையான சந்தர்ப்பம் வாய்க்க அஸ் ஸாலிஹை நீக்கி விட்டு அய்யுபிட் பேரரசுக்கு முடிவு கட்டினார்கள்.
                            மம்லுக்குகளுக்கு இது இரு சரித்திரப் பதிவாகிப் போன நிகழ்ச்சி. ஆட்சியைப் பிடித்த மம்லுக்குகள் தங்களை பாஹ்ரி மம்லுக் என்று சொல்லிக் கொண்டார்கள். ‘அஸ் ஸாலி ஹால் அமைக்கப்பட்ட ‘பஹ்ரிய்யாஹ்’ மம்லுக்குகள் சில சமயம் ‘சாலிஹிய்யாஹ்’ என்று சொல்லிக் கொண்டார்கள். அல் காமிலால் ஃப்ரெடெரிக்கிடம் இழக்கப்பட்டிருந்த ஜெருசலத்தை அஸ் ஸாலிஹ் சிரியா மற்றும் பாலஸ்தீன் வழியாக கவாரிஸ்மிகளுடன் உதவியுடன் கைப்பற்றினார். சிலுவைப் படையுடன் கூட்டு வைத்திருந்த அஸ் ஸாலிஹ் இஸ்மாயிலையும், கவாரிஸ்மிகளின் உதவியுடன்  ‘லா ஃபோர்பி’ போரில் வெற்றி கொண்டார். அஸ் ஸாலிஹ் 1245 ல் டமாஸ்கஸைப் பிடித்த போது தான் பாக்தாத் கலீஃபா அல் முஸ்தஃஸிம் மூலம் ‘சுல்தான்’ என்று அழைக்கப்பட்டார். கவாரிஸ்மிகள் எப்போதும் ஆபத்து என்றும், கையாள்வது சிரமம் என்றும் கருதிய அஸ் ஸாலிஹ் ஹாம்ஸ் பகுதியில் அவர்களின் தலைவரைக் கொன்று, சிரியா மற்றும் பால்ஸ்தீனில் மிச்சமிருந்த அவர்களின் அடையாளங்களை அழித்தார். அஸ் ஸாலிஹ் சிரியாவில் சண்டையில் இருந்த போது சிலுவைப் போராளிகள் நுழைந்து விட்டதாக செய்திவர, எகிப்து திரும்பி அல் மன்சூராவில் முகாமிட்டார். அங்கு அவரின் கால்கள் முட்டுக்கால் வரை அழுகி விட்டிருக்க நோய்வாய்ப்பட்டார். தனக்குப் பிறகு, அல் முஃஅஸ்ஸம் துரன்ஷா சரியான ஆட்சியாளராக இருக்க மாட்டர் என்று கருதிய அஸ் ஸாலிஹ் அவரை எகிப்தை விட்டு தூரப்பிரதேசமான ஹசன் கெய்ஃபில் வைத்திருந்தார்.  அஸ் ஸாலிஹ் இறந்து போக அவர் மனைவி ஷஜர் அத் துர் இறப்புச் செய்தியை துரன் ஷா வரும் வரை ரகசியமாக வைத்திருந்தார்.
                        துரன்ஷா அல் முஃஅஸ்ஸிம் ஓராண்டு தான் ஆட்சியில் இருந்தார். தந்தை அஸ் ஸாலிஹால் எகிப்தின் அரசியலுக்கு நிராகரிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டார். தந்தை இறந்த பிறகு, பஹ்ரி மம்லுக் கமாண்டர் ஃபரீசுத்தீன் அக்டாயால் ஹசன்கெய்ஃபிலிருந்து அழைத்து வரப்பட்டார். அக்டாய் 1249 டிசம்பரில் 50 வீரர்களுடன் அவரை அழைத்துக் கொண்டு, பதவிப்போட்டியில் இருப்பவர்கள் கண்ணில் படாமல் ரகசியமாக 1250 ஜனவரியில் டமாஸ்கஸின் குஸைர் கிராமத்திற்கு வந்தார்கள். அங்கேயே அவர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். துரன்ஷா ஊர் தலைவர்களுக்கும், தன் பாதுகாப்புக்கும் பெரும் பணம் செலவு செய்தார். எகிப்தின் அல் மன்சூராவுக்கு வந்த அவர் தந்தையின் பாஹ்ரி மம்லுக்கு களை நீக்கிவிட்டு, தனியாக தனக்கென மம்லுக்குகளை நியமித்துக் கொண்டார். கருப்பு மம்லுக் அடிமை களை நம்பகமான பதவியில் வைத்தார். ஒரு கருப்பு அரவாணியை உஸ்ததராக (தலைமை செயலாளர்) வும், இன்னொரு கருப்பரை அமீர் ஜன்தார் (தலைமை அரசு பாதுகாவலர்) ஆகவும் நியமித்தார்.
                        துரன்ஷா சரித்திர ஆசிரியர்களால் நல்ல விதத்தில் மதிப்பிடப்பட வில்லை. குறைந்த புத்திசாலித்தனமும், விரைவில் உணர்ச்சிவசப்படுபவராகவும் இருந்தாராம். ஒருமுறை கத்தியில் மெழுகுவர்த்திகளை வேகமாக நறுக்கிக் கொண்டே, ‘இதுபோல் தான் பாஹ்ரி மம்லுக்குகளை கையாள் வேண்டும்’ என்றாராம். சிலுவைப்போராளிகளிடமிருந்து டமெட்டாவை மீட்டார். பைபர்ஸ், துரன்ஷாவைத் திட்டமிட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 1250 ல் துரன்ஷா பெரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பைபரும், சில மம்லுக்குகளும் விரைந்து அவரைக் கொல்ல முயர்ச்சித் தார்கள். வாளொன்று அவர் கையைப் பிளக்க, தப்பித்த துரன்ஷா நைல் நதி அருகிலிருந்த கோபுரத்தில் ஏறிக் கொண்டார். அதைக் கவனித்த மம்லுக் ஒருவன் கோபுரத்திற்கு தீ வைத்தான். தீயிலிருந்து தப்பிக்க ஆற்றை நோக்கி ஓடிய துரன்ஷாவை மம்லுக் ஒருவன் இடுப்பில் வெட்ட, ஆற்றில் விழுந்த சுல்தான் துரன்ஷா உயிர் பிச்சைக் கேட்க விடாத மம்லுக்குகள் அம்புகளை எறிந்தார்கள். பின்னர் அவரை வெளியில் இழுத்து தூக்கிலிட்டார்கள். ஃபரிசுத்தீன் அக்டாய் தான் துரன்ஷாவின் நெஞ்சைப் பிளந்து இருதயத்தை வெளியே எடுத்தாராம். பின்னாளில் இதே அக்டாய் பைபரால் கொல்லப்பட்டாராம்.
                               அதன் பிறகு, மம்லுக்குகளுக்கு சிரியா அய்யுபிட்களிடமிருந்து எதிர்ப்புவர ஆறு வயது குழந்தையான அல் அஷ்ரஃப் மூஸாவை சுல்தானாக பாஹ்ரி மம்லுக் இஸ்ஸதீன் அய்பக் அறிவித்தார். அல் அஷ்ரஃபைப் பற்றி முழு விவரம் சரித்திர ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவர் அலிப்போவின் ஆட்சியாளராக இருந்த அஸ் ஸாஹிர் காஸியின் கொள்ளுப் பேரர் என்று சொல்லப்படுகிறது. ஏமனில் அய்யுபிட் ஆட்சியாளராக இருந்த அல் மஸ் ஊதின் வழி வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பிறகு, சிரியாவிலிருந்த அய்யுபிட் ஆட்சியாளர் அந் நாசிர் யூசுஃப் எகிப்தின் மீது போர் தொடுக்க, 1253 ல் எகிப்து மம்லுக்குகள் வசமானது. ஓராண்டு இடைவெளியில் இஸ்ஸத்தீன் அய்பக், சுல்தான் சிறுவர் அல் அஷ்ரஃபை அவரின் அத்தையிடமே அனுப்பினார்.

அய்யுபிட்கள் வரலாறு 1

                                                              அய்யுபிட்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
                            எகிப்தை மையமாக வைத்து ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் இன மன்னர் சலாவுத்தீன் அல் அய்யூபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமியப் பேரரசு தான் ‘அய்யுபிட் பேரரசு’. 12, 13 ம் நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளை ஆண்டார்கள். சலாவுத்தீன் அய்யூபி ஆரம்பத்தில் ஃபாத்திமிட் பேரரசில் வைசிராயராக இருந்தார். அய்யுபிட் பேரரசுக்கு ஆரம்ப தளம் அமைத்த நூருத்தீனுக்குப் பிறகு, இவர் மன்னரானார். மூதாதையர் நிஜாமுத்தீன் அய்யூப் பின் ஷாதி என்பவர் வட அர்மேனியாவில் ரவாதியா பழங்குடியினரின் ஒரு பிரிவினரான ஹதபனி பழங்குடியினத் தைச் சேர்ந்தவராவார். அங்கு அரசியலில் முக்கிய நபராக இருந்தார்.
                        ஷாதி அவர்கள் அரசியல் சூழ்நிலை மோசமானதால் அங்கிருந்து மகன் கள் நிஜாமுத்தீன் மற்றும் ஷிர்குஹ் உடன் ஈராக்குக்கு இடம் பெயர்ந்தார். இந் நிகழ்ச்சிகளை நாம் சலாவுத் தீன் அல் அய்யூபின் வரலாற்றில் பார்த்துவிட்டோம். சலாவுத்தீன் தான் வெற்றி பெற்ற பிரதேசங்களில் தன் உறவினர்களையும், அந்த பிரதேசங்களின் உள்ளுர் தலைவர்களையும் வைத்து ஆட்சி செய்தார். சலாவுத் தீன் இறந்த பிறகு, அலிப்போவை அஸ் ஸஹீரும், அவை மூத்த மகன் அல் அஃப்தல், பாலஸ்தீனும் லெபனானும் இணைந்த டமாஸ்கஸையும் ஆட்சி செய்தனர். 1193 ல் மோசூலைச் சேர்ந்த மஸ் உத், சின் ஜாரின் ஸங்கியுடன் இணைந்து (வட மொசபடோனியா) அதிகபட்ச அல் ஜசீரா பகுதிகளைக் கைப்பற்றினார். பெரிய வெற்றி காணும் முன் மஸ் உத் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசூல் திரும்பிவிட்டார். பல அரசியல் சூழ்நிலைகள் மாறி 60 வயதி சலாவுத்தீனின் மகன் அல் ஆதில் என்பவர் பேரரசை பிரித்து தன் மகன்களுக்கு கொடுத்து அடுத்த 50 ஆண்டுகளுக்கு அய்யுபிட் பேரரசை நிலைபடுத்தினார். எகிப்தை அல் காமிலுக்கும், அல் ஜஸீரவை அல் அஷ்ரஃபுக்கும், அல் அவ்ஹதுக்கு தியார் பக்ரையும் பிரித்துக் கொடுத் தார். பின்னாளில் அல் அவ்ஹத் இறந்து போக அப்பகுதி அல் அஷ்ரஃபுக்கு வந்தது.
                        சலாவுத்தீன் இறந்த பிறகு, இரண்டாவது அய்யுபிட் சுல்தானாக அவரின் இரண்டாவது மகன் அல் மாலிக் அல் ஜீஸ் ஒஸ்மான் பின் சலாவுத்தீன் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே சலாவுத்தீன் தன் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்ததில் பல குழப்பங்கள் இருந்தன. இதற்கிடை யில் அல் அஜீஸ் 1193 முதல் 1198 வரை ஒட்டுமொத்தமாக சுல்தானாக இருந்தார். மோசூலில் சன்ஜார் தலைமையிலும், தென் ஈராக்கில் அர்துகித்கள் என்பவர்களாலும் புரட்சி ஏற்பட்டது. அல் அஃப்தலால் துரத்தப்பட்ட மந்திரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அல் அஜீஸ் இழந்திருந்த சிரியாவை மீண்டும் வென்றார். சிரியாவை இழந்த அல் அஃப்தல் சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதிலின் உதவியை நாட அவர் சமதானப்படுத்தினார். சமாதானத்தை மீறி அல் அஃப்தல் செயல்பட இம்முறை 1196 ல் அல் ஆதில் அல் அஜீஸுடன் இணைந்து சிரியாவைக் கைப்பற்றினார். அல் அஃப்தல் சல்காதுக்கு தப்பி ஓடினார். பெயருக்கு அல் அஜீஸ் சுல்தானாக இருந்தாலும், சலாவுத்தீன் சகோதரர் அல் ஆதில் தான் டமாஸ்கஸில் அதிகாரத் தில் இருந்தார்.
                            அல் அஜீஸ் தன் ஆட்சியின் போது, எகிப்திலிருந்த புகழ் பெற்ற கிஸா பிரமிட்டை அழிக்க முயற்சித்தார். அது மிகப்பெரியதாக இருந்ததால் கைவிட்டு விட்டு மென்காயர் பிரமிட்டை அழித்தார். சரித்திரப்புகழ் வாய்ந்த பனியாஸ் மற்றும் சுபைதாஹ் கட்டிடங்களைக் கட்டினார். 1198 ல் ஒரு வேட்டையின் போது ஏற்பட்ட விபத்தில் அல் மாலிக் அல் அஜீஸ் இறந்து போனார்.
                            அல் அஜீஸுக்குப் பின் அவர் மகன் அல் மன்சூர் நாசிர் அல் தீன் முஹம்மது எகிப்தின் மூன்றாவது சுல்தானாக 12 வயதில் ஆட்சிக்கு வந்தார். அப்போது சலாவுத்தீனிடம் பணியாற்றிய அடபெக் என்னும் மம்லுக் அனுபவம் வாய்ந்த சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதில் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று குழப்பம் விளைவித்தார். சலாவுத்தீனின் சிறிய தந்தை ஷிர்குஹ் சலாவுத்தீனின் மூத்த மகன் அல் அஃப்தல் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார். இதனால் அல் அஃப்தலுக்கும், அல் ஆதிலுக்கும் இடையே சண்டை மூண்டது. அல் அஃப்தல் டமாஸ்கஸில் தோல்வி யடைந்ததால், அல் ஆதில் கெய்ரோவில் நுழைந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் அல் மன்சூரின் பெயரை நீக்கி தன் பெயரை முன் மொழிய வைத்தார். அங்கிருந்து வெளியேறிய அல் மன்சூர் தன் சிறிய தந்தை அஸ் ஸஹீர் காஸி இருக்கும் சிரியாவின் அலிப்போ நகரத்திற்குச் சென்றார். அஸ் ஸஹீர் 1216 ல் தனக்குப் பின் தன் பிராந்தியத்தில் அல் மன்சூரை ஆட்சியாளராக ஆக்கினார். அதன் பிறகு அல் மன்சூரின் விவரங்கள் கிடைக்கவில்லை.
                               நிஜாமுத்தீன் அய்யூபின் மகனான அல் ஆதில் (முதலாம் ஆதில்) எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இவரை மரியாதை கலந்து சைஃபுத்தீன் (உண்மையின் வாள்) என்றும் அழைத்தார்கள். சிலுவைப்போரின் போது ஃப்ராங்க்ஸ்கள் இவரை சபாதின் என்று அழைக்க இன்றும் மேற்கத்திய வரலாற்றில் இப் பெயர் நிலைத்திருக்கிறது. தன் சகோதரர் சலாவுத் தீனுடன் சேர்ந்து சமூக மற்றும் இராணுவத் திறமைகளைப் பெற்றவர் அல் ஆதில். அய்யுபிட்களின் ஆட்சி யில் சிறந்த தளபதியாகவும் இருந்தார். சிறிய தந்தை ஷிர்குஹ்ஹின் மூன்றாவது எகிப்தின் தாக்குதல் போது நூருத்தீன் ஸெங்கியின் படையில் அதிகாரியாக இருந்தார். நூருத்தீன் இறந்த பிறகு, 1174 ல் சலாவுத்தீனின் சார்பாக எகிப்தின் கவர்னராக இருந்து அதன் வளர்ச்சிக்கும், சிலுவைப் போராளிகளை திறம்பட எதிர்க்கவும் துணை புரிந்தார். சலாவுத்தீன் இறந்த பிறகு மோசூலில் கலவரம் செய்த இஸ்ஸத் தீனை அடக்கினார்.
                        சலாவுத்தீன் தனக்குப் பிறகு, மகன் அல் அஃப்தல் தான் சுல்தானாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரின் மற்ற மகன்கள் அல் அஃப்தலின் தலைமையை எற்க தயாராய் இல்லை. அல் ஆதில் அவர்கள் குறிப்பாக அல் அஜீஸுக்கும், அல் அஃப்தலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த முயன்றார். அல் ஆதிலுக்கு அல் அஃப்தல் சுல்தானாக தகுதி இல்லாதது போல் தோன்றியதால், அவர் அல் அஜீஸுக்கு ஆதரவளித்தார். எதிர்த்த உறவினர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு 1201 ல் சுல்தானாக ஆட்சி அமைத்தார். மிகச் சிறந்த அய்யுபிட் சுல்தானாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தையும், சிரியாவையும் ஆட்சி செய்தார், பின்னால் ஆட்சிக்கு வந்த இவர் மகன் அல் காமிலும் சிறப்பாக ஆட்சி செய்தார். அல் ஆதில் ஆட்சிக்கு வந்த போது 55 வயதிற்கு மேலாகி விட்டது. சலாவுத்தீன் காலத்திலிருந்து சிலுவைப் போராளிகளுடன் போரிட்டு வந்ததால் ஆட்சி நடத்த போதிய வருவாய் இல்லாமல் இருந்தது. முதலில் வருவாயைப் பெருக்க திட்டமிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால் புதிய நாணயத்தை வெளியிட்டு, புது வரிகளையும் விதித்தார். இச் சூழ்நிலையில் எகிப்தில் பெரிய பூகம்பமும், நைல் நதியில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதையெல்லாம் திறமையாக சமாளித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
                            புதிய சிலுவைப் போருக்கு வித்திட்டிருந்த மேற்கத்தியர்களுடன் மெடிட்டரேனியன் நகரங்களில் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தி திசை மாற்றினார். இதில் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஃப்ராங்கிஷ் கடற்படையினர் ரொஸட்டாவிலும், டமைட்டாவிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். மேலும் குடும்பப்பகை வளராமல் இருப்பதற்கு தன் மகள் தைஃபா கதூனை சலாவுத்தீனின் மகன் அலிப்போவின் அஸ் ஸஹீர் காஸிக்கு 1212 ல் மணமுடித்துக் கொடுத்தார். டமாஸ்கஸில் சிறந்த அரண்மனையைக் கட்டினார். 1217 ல் எதிர்பாராத தருணத்தில் அக்ரியில் சிலுவைப் போராளிகள் வந்திரங்கினார்கள். 72 வயதில் தயாராய் இல்லாத தன் படையை அவசரமாகத் திரட்டி பாலஸ்தீன் சென்றார். அது அவ்வளவாக வெற்றி தராத நேரத்தில் அடுத்த சிலுவைப்படை டமெய்டாவில் வந்திருக்கிறது என்ற செய்தி கிடைத்தது. ஏற்கனவே உடல்நலமில்லாதிருந்த அல் ஆதில் 1218ல் காலமானார். அவருக்குப் பிறகு அவர் மகன் மாலிக் அல் காமில் ஆட்சிக்கு வந்தார். அல் ஆதிலுன் உறவினர்கள் பல பகுதிகளை துண்டாடினார்கள். டமாஸ்கஸ் மட்டும் அய்யுபிட் சுல்தானை நிலை நிறுத்தியது.
                        அய்யுபிட்களின் எகிப்திய சுல்தானாக அல் மாலிக் அல் காமில் ஆட்சியில் அமர்ந்தார். தந்தை வேறொரு பகுதியிலிருக்க மார்டினில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைக்கு தந்தையின் வேண்டுகோளின்படி தலைமை ஏற்றார். எகிப்தின் வைசிராயராக இருந்தார். அப்போது அல் ஆதிலின் இன்னொரு மகன் அல் முஃஅஸ்ஸிம் இசா டமாஸ்கஸின் இளவரசராய் இருந்தார். அல் ஆதில் கெய்ரோவின் அரண்மனை கட்டும் பணியில் கவனமாய் இருந்த போது, அல் காமில் ஏறக்குறைய சுல்தான் போல் செயல்பட்டார். அதிகாரமிக்க மந்திரி இப்ன் ஷுக்ரை பதவியிலிருந்து நீக்கினார். அல் ஆதில் இற்ந்த போது அல் காமில் எகிப்தையும், அல் முஃஅஸ்ஸிம் பாலஸ்தீன் மற்றும் ட்ரான்ஸ்ஜோர்டானையும், மூன்றாவது சகோதரர் அல் அஷ்ரஃப் மூசா சிரியா மற்றும் அல் ஜஸீராவையும் நிர்வாகத்தில் வைத்திருந் தனர். ஐந்தாவது சிலுவைப்படை எகிப்தை தாக்க துவங்கியது.
                        அல் காமில் தலைமையில் டமெய்டாவில் சிலுவைப்படைகளை எதிர் கொண்டார். இதற்கிடையில் ஹக்கரி குர்திஷ் கமாண்டரான இமாதத்தீன் இப்ன் அல் மஷ்துப் குழப்பம் விளைவித்து ஏறக்குறைய அல் காமிலை ஆட்சியை விட்டு தூக்க இருந்தார். அதிலிருந்து தப்பித்து தன் மகன் அல் மஸ் உத் ஆட்சி செய்யும் ஏமனுக்கு தப்பிச் செல்ல இருந்தார். அதற்குள் சகோதரர் முஃஅஸ்ஸிம் சிரியாவிலிருந்து வந்து குழப்பத்தை சரி செய்தார். இதற்கிடையில் சிலுவைப்போரைத் தடுக்க பலவழியிலும் முயற்சி செய்தார். அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. கடுமையான பஞ்சமும், நைல் நதி வற்றிப் போனதும் அல் காமிலால் டமெய்டாவைக் காப்பற்ற முடியவில்லை. அல் மன்சூரா கோட்டையிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொண்டு மீண்டும் ஜெருசலத்தை விட்டுக் கொடுப்பதாகவும் சிலுவைப்படை எகிப்தை விட்டு வெளியேர வேண்டும் என்று சமாதானத்திற்கு முயன்றார். இம்முறையும் நிராகரிக்கப்பட்டு சிலுவைப்படை கெய்ரொவிற்கு படையெடுத்தது. அல் காமில் புத்திசாலித்தனமாக மக்களை பத்திரப்படுத்திக் கொண்டு, அப்போதைய நைல் நதியின் தடுப்புகளைத் திறந்து வெள்ளம் உண்டாக்கினார். வேறுவழியின்றி எட்டு ஆண்டு அமைதிக்கு ஒத்து வந்தார்கள் டமெய்டாவையும் திருப்பி தந்தார்கள்.

செவ்வாய், 16 ஜூன், 2015

மன்னரும், போரும் 3



8 ம் நூற்றாண்டிலிருந்து போர் கைதிகளை எந்த காயமும் இன்றி பிடிப்பதற்கே முயற்சி செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் பழங்கள், காய்கறி போல் ஒரு விற்பனைப்பொருள். ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியாவின் புகழ்பெற்ற அடிமைச்சந்தையில் விற்றுவிடுவார்கள். குறிப்பாக பெண்களைப் பிடிப்பார்கள் அது கூடுதல் விலைபோகும். போர் சித்திரவதை என்பது வெகுகாலத்திற்கு முன்பு முதல் இருக்கிறது. சித்திரவதையின் நோக்கம் மனோதத்துவ ரீதியிலும், காயம் ஏற்படுத்துவதற்காக செய்யப்படும். சித்திரவதையின் காரணங்களாக தண்டனைக்காகவும், பழிவாங்குவதற்காகவும் செய்யப்படும். சித்திரவதையின் முறைகளாக கைகளால் அடிப்பது, சவுக்கால் அடிப்பது, விரல்கள், கால்நகங்கள், முட்டி, பற்கள் மற்றும் தலையை இருபுறம் விரிந்த இரும்பு விசை கொண்டு நசுக்குவது, கொதிக்கும் எண்ணெய், கத்திகள், மிதமான தீ, செம்புக்கம்பியை சுட்டு கண்களை காயப்படுத்துவது என்று பலவகை உண்டு. சித்திரவதை செய்யப்படுபவர்களை நிர்வாணமாகத் தான் வைத்திருப்பார்கள். முதுகுக்குப் பின்னே கரிகளை எறியவிட்டு தோல்கள் கருகி விழவைப்பார்கள். தொங்கவிட்டு காலின் கீழே தீ எரிய வைப்பார்கள். தலையில் இரும்பு கயிரைக்கட்டி மூளையை நசுக்குவார்கள்.
                                     இவான் தி டெர்ரிபிள் என்ற மன்னன் தனது படுக்கையறையிலிருந்து நேராக சித்திரவதைக்கூடம் செல்ல தனி வழி வைத்திருந்தான். தன் வாலிப மகனுடன் சென்று சித்திரவதை செய்யப்படுவதை அனுபவித்துப் பார்ப்பான். பீட்டர் தி கிரேட், வ்ளாட் டிபிஸ் போன்ற மன்னர்களும் சித்திரவதையை அனுபவித்துப் பார்ப்பார்கள். ரோமர்கள், யூதர்கள், எகிப்தியர்கள் சித்திரவதையை ஒரு தண்டனைச் சட்டமாகவே வைத்திருந்தார்கள். ரோமர்கள் சிலுவையில் அறைவதும், யூதர்கள் கற்களால் அடிப்பதும், எகிப்தியர்கள் பாலைவன வெயிலில் போடுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் பாதாள அறைகளில் ரகசியமாக செய்யப்பட்டது. நாளடைவில் பலர் கூடி வேடிக்கை பார்க்க பொதுமக்களின் முன்பு நடத்தப்பட்டது. சித்திரவதைக் கருவிகளைக் கண்டுபிடிக்க என்றே குழுக்கள் இருந்தன.
                               ஹிட்லர் குறைந்த செலவில் யூதர்களைக் கொல்ல, தென்னை, பனை மரங்களைப்போல உயரமான மரத்தின் கீழே கை,கால்களைக் கட்டி, தலை அசையா வண்ணம் பெரிய பாறைகளை இருபுறமும் வைத்து கட்டி, நெற்றி முடிந்து, கன்னத்தின் மேற்புறம் மூளைப்பகுதி மரத்தின் உச்சியை நோக்கி இருக்கும் வகையில் வைத்து மரத்தின் உச்சியில் ஒரு எண்ணெய், பெயிண்ட் பயன்படுத்தும் தகர டப்பாவில் நீர் நிரப்பி சிறு ஓட்டையிட்டு அளவான நிலையில் தண்ணீர் சொட்டுவது போல் வைத்தார். அந்த சொட்டு 30 அடிக்கும் மேலாக இருந்து சரியாக மூளையின் மேல் பகுதியில் வந்து விழும். நீர் சொட்டு விழ விழ சகல நினைவுகளும் போய் மூளை அடுத்த சொட்டை எதிர்பார்த்து எதிர்பார்த்து உள்ளுக்குள்ளேயே சிதைந்து போய் விடும். ஐரோப்பாவில் அதிகமானவர்களைக் கொல்ல கைகளைக் கட்டி மலை மேல் ஓடச் சொல்வார்கள். குறிப்பிட்ட உச்சியை அடைந்தவுடன் மேலிருக்கும் வீரர்கள் குதிரையின் வயிறளவுள்ள பெரிய மரத்தின் அடிப்பாகங்களை தப்பிக்க இடைவெளி இல்லாமல் உருட்டி விடுவார்கள். ஒவ்வொரு மரத்துண்டும் எங்கே படும் எப்படிப்படும் என்றே சொல்லமுடியாது. ஒரு மேல் விவரமாகத் தான் மேற்படி சொன்னேன். போதும் என்று நினைக்கிறேன். அடுத்ததற்கு போவோம்.
                                    போரை இஸ்லாம் “ஜிஹாத்” என்று அரபியில் அழைக்கிறது. அதன் விவரம் அல்லாஹ்வின் வழியில் போராடுவது அல்லது எதிர்ப்பது என்பதாகும். இச்சொல் திருக்குர்ஆனில் 23 இடங்களிலும், ஜிஹாத் எப்படி இருக்க வேண்டுமென்று 41 இடங்களிலும் அல்லாஹுத்தாலா இந்த சொல்லை குறிப்பிட்டுள்ளான். ஆனாலும், இதைவைத்து இன்று அமெரிக்காவும், மேற்கத்தியர்களும் புதுப்புது அர்த்தங்கள் கூறி முஸ்லீம்களை வேட்டையாடி வருகிறார்கள். இப்படிப் போராடுபவர்களை முஜாஹிதீன்கள் என்று சொல்லப்படுவார்கள். தன்னை எதிர்ப்பவர்களுடன் போராடு என்பதை இஸ்லாமின் ஆறாவது தூண் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள். தனது மதக்கடமைகளை செய்யவிடாமல் தடுக்கும் சக்தியை எதிர்த்து போராடுவது முதல் ஜிஹாதாகும். வெளிப்படையான ஜிஹாதானது மற்ற எல்லாரையும் போல (இஸ்லாமியர்கள் அல்லாஹ்வின் வழியில் மட்டும்) போரிடுவது. இதைப் புனிதப்போர் என்றும் சொல்லலாம்.
                              BBC  நிறுவனம் மூன்றாவதாக ஒரு நல்ல சமுதாயம் அமைக்க போராடுவதும் ஜிஹாத் தான் என்று அல் மின்ஹஜ்ஜின் கீழ் சஹீஹ் புகாரியின் ஹதீஸை மேற்கோள் காட்டுகிறது. கிதால் என்ற அரபிச்சொல் தான் நேரடியான போர் என்பதும், ஜிஹாத் என்பது முஸ்லீம்களைச் சுற்றி உள்ளவர்களுடனான நிலைப்பாடு என்றும் கருதப்படுகிறது. நாளடைவில் சுற்றியுள்ளவர்களைத் தாண்டி எதிர்ப்பு பரவலானதால் ஜிஹாத் உலகம் முழுக்க பொதுவானதாகிப் போனது. ஜிஹாதைப்பற்றி முதல்முதலில் அப்த் அல் ரஹ்மான் அல் அவாஸி மற்றும் முஹம்மது இப்ன் அல் ஹசன் அல் ஷைபானி ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.
                               அரபியில் “ஜிஹாத் அல் நிக்காஹ்” என்பது பாலியல் சார்ந்த ஜிஹாத், அதாவது தன்னிடம் ஒன்றும் இல்லாத நிலையில் ஒரு அநியாயத்தை எதிர்க்கவோ அல்லது இஸ்லாத்தை நிலைநாட்டவோ ஒரு இஸ்லாமிய பெண் தன்னை ஒரு ஆணுடன் இணைய சம்மதிக்கலாம். இந்த வகையான ஜிஹாத் சமீபத்தில் துனிஷீயாவில் இருந்ததாக மீடியாக்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
                       முதல் ஜிஹாத் குர்ஆனின் 5 வது அத்தியாயத்தின் படி நபி (ஸல்) அவர்களால் வாணிப வாகனங்களை எதிர்த்து நடத்தப்பட்டது. மேலும், 60:1, 9:24 என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாத் செய்வதற்காகக் காரணங்களாக ஒப்புக்கொண்ட ஒன்றுக்காக உழைப்பது, தனி ஒருவனின் குறிக்கோளை எட்ட முயற்சிப்பது, சிறந்த ஒன்றுக்காக போராடுவது, அமைதிக்காகவும், நல்லவற்றிற்காகவும் அடுத்தவர்க்கு உதவுவது மற்றும் இஸ்லாமிய நெறியுடன் வாழ்வது போன்றதாகும். 11 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அல் காதிப் அல் பாக்தாதி என்பவர் தனது “பாக்தாத் சரித்திரத்தில்” நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தோழர் முஹம்மது ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்பி வந்து ஜிஹாத் என்பது அல்லாஹ்வின் அடியான் தனது தேவைகளுக்காக போராடுவதும் ஜிஹாத் தான் என்றார்கள், என்று கூறியுள்ளார். இப்படி பலவகையான குறிப்புகள் இமாம்கள், அறிஞர்கள் அதிகமதிகமாகக் கூறியுள்ளனர். சிறந்த ஜிஹாத் என்பது தனது மன்னனின் முன் நீதிக்காகப் போரிடுவது என்பதாக நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
                               ஜிஹாத் பற்றி நம் இஸ்லாமின் பல பிரிவுகளில் பல கருத்துகள் உண்டு. அஹமதிய்யாஹ் பிரிவு, அரசியலும், வன்முறையும் இன்றி தனியாகப் போராடுவது. வன்முறையை தன்னைக்காத்துக் கொள்ள கடைசியாகத் தான் பயன்படுத்த வேண்டும் என்கிறது. ஷியா பிரிவு, தற்பெருமை மற்றும் (நப்ஸ்) சுய எண்ணத்திற்கு எதிராக உள்ளும், புறமும் போராடுவது. சலஃபி வழிமுறை, வாளெடுத்து அல்லாஹ்வின் வழியில் போராடுவதுமாகும். மேலும், ஷைத்தானை விட்டு விலக மனதால் போராடுவதும், இஸ்லாமைப் பற்றி உண்மையாக நாவால் உரைப்பதும், நல்லவைகளுக்காகவும், தீயவற்றைத் தடுப்பதற்காகவும் கைகளால் போராடுவதும் ஜிஹாத் வகையைச் சேர்ந்தது தான். இந்த ஜிஹாத் என்பதின் சொல்பற்றி பல்வேறு நாடுகளும், பல்வேறு தரப்பினரும் இன்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். வேதத்தில் நமக்கு சொல்லப்பட்ட இந்த சொல் பற்றி நம்மைவிட கிறிஸ்தவர்களும், யூதர்களும் தான் இன்று விவாதிக்கிறார்கள். காரணம் அதற்கு ஒரு விளக்கம் கண்டு எப்படியாவது இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து விடவேண்டும் என்பதே நோக்கம்.
                                  நபி (ஸல்) அவர்கள் மறைவிற்குப் பிறகு, கலீஃபா உமர்(ரலி)அவர்கள் பைசாந்தியப் பேரரசு மற்றும் சஸ்ஸானிய பேரரசை எதிர்த்து போரை ஆரம்பித்தார்கள். 636 ல் யர்முக் போரில்  முஸ்லீம்கள் வெற்றி பெற்று பைசாந்தியர்களை சிரியாவை விட்டு விரட்டினார்கள். 641 ல் கெய்ரோவில் பைசாந்தியர்களை சரணடைய வைத்தார்கள். மேலும் பைசாந்திய ஆட்சியாளர்களால் துயரத்துடன் இருந்த எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவைக் கைப்பற்றினார்கள். 637 ல் கதிஸ்ஸியா போரில் பெர்ஷியர்களை வென்றார்கள். 642 ல் நஹாவந்த் போரில் மீண்டும் பெர்ஷியர்களை வென்றார்கள். அடுத்த 15 ஆண்டுகளில் ஈரானை வென்று மத்திய ஆசியாவில் காலடி வைத்தார்கள்.
                            இதற்குப் பின் மாபெரும் பேரரசுகளான ஓட்டோமானும் (உஸ்மானியா), பெர்ஷியாவும் பாரம்பரிய இஸ்லாமிய மதக்கல்விக்கான அமைப்புகளை உருவாக்கினார்கள். போர்வீரர்களுக்காக “காஸா” என்ற அடிப்படை அமைப்பில் இஸ்லாமிய இராணுவத்தை அமைத்தார்கள். ஓட்டோமானின் இரண்டாம் மெஹ்மெத் கிறிஸ்துவர்களின் கான்ஸ்டாண்டிநோபிளை வெல்வது ஜிஹாத் வழிமுறையாகும் என்று கூறினார்.
                                  இஸ்லாமிய இராணுவம் என்பது ஷரியா சட்டம், இஸ்லாமிய நீதி மற்றும் உலமாக்களின் தீர்ப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாம் காட்டிய வழியில் அமைக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் முதலில் இதை திருக்குர்ஆன் காட்டிய வழியில் மதீனாவில் அமைத்தார்கள். ஜிஹாதின் முதல் எதிர்ப்பின் இலக்காக முஸ்லீம்களுக்கு மக்கா குரைஷிகள் ஆனார்கள். பின்னால் இது முஸ்லீம் பகுதிகளுக்கும்(தார் அல் இஸ்லாம்), முஸ்லீம் அல்லாதவர் பகுதிகளுக்கும் (தார் அல் ஹர்ப்) தனித்தனியாக அமைக்கப்பட்டது. எதிரிகளையும் நம்மவர்கள் போல் மதிக்க வேண்டும். தாக்குதலில் தம்மை தடுத்துக் கொள்வதற்கும், சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் அதை மீறக்கூடாது. நபி(ஸல்)அவர்கள் ஜிஹாத் போர் பற்றி அதிகமாக உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். முதல் கலீஃபா அபுபக்கர் சித்திக்(ரலி)அவர்கள் அதை இராணுவத்திற்கு போதித்தார்கள். அலி(ரலி) அவர்கள் தனது இராணுவத்தினருக்கு எக்காரணத்தைக் கொண்டும் எதிரியின் உணவு மற்றும் நீராதாரங்களைத் தடுக்கக் கூடாது என்றார்கள்.
                               நபி (ஸல்)அவர்கள் இறப்பதற்கு முன்பே,” ஒருநாள் நீங்கள் செல்வம் கொழிக்கும் எகிப்தில் நுழைவீர்கள். அதிகபட்சமாக அவர்களோடு திருமண உறவை வைத்துக் கொள்ளும் அளவிற்கு நல்லுறவை பேணுங்கள். நான் இறந்த பிறகு நடக்கும் எகிப்தின் நுழைவில் அவர்களை நமது இஸ்லாமிய படையில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் தான் உலகின் மிகச் சிறந்த போர் வீரர்கள். அவர்களும், அவர்களின் மனைவிகளும் மறுமை நாள் வரை கடமைக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கருவி ஆவார்கள். அல்லாஹ்வின் முன்பு அவர்களுடன் நீதமாக நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவைகளை அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர்கள் தனது தலைமையில் எகிப்தை வென்றபோது, கடைபிடித்தார்கள். 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவரான நிக்யூவைச் சேர்ந்தவரான ஜான் என்பவர், “அலெக்ஸாண்டிரியா சரணடைந்தவுடன் அவர்களின் தலைமை இராணுவ தளபதி அம்ர் அவர்கள் தனது படைகளையும் மற்ற அதிகாரிகளையும் சைப்ரஸ் தீவிலேயே விட்டுவிட்டு தான் மட்டும் நகருக்குள் வந்தார். அவரை எகிப்து மக்கள் மரியாதையுடன் வரவேற்றார்கள். நகரின் தேவாலயங்களைக் கொள்ளையடிக்கவில்லை.” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸலாவுத்தீன், அல் காமில் ஆகியோர் சிலுவைப்போரில் வென்ற பின் கூட முஸ்லீம் படைகள் நடந்து கொண்ட விதம் ஆச்சரியம் அளித்ததாக ஓலிவெரஸ் ஸ்கோலஸ்டிகஸ் என்ற கிறிஸ்தவர் கூறினார். மேலும், ‘நாங்கள் அவர்களுடைய இடங்களைக் கைப்பற்றினோம். அவர்களுடைய பெற்றோர்கள், மகன்கள், மகள்கள், சகோதர, சகோதரிகளை எங்கள் கரங்களால் கொன்றோம். அவர்களின் வீடுகளை விட்டு நிர்வாணமாக விரட்டினோம். ஆனால், நாங்கள் தோல்வியுற்று அவர்களின் அதிகாரத்தில் இருந்தபோது, எங்கள் பசிக்கு முஸ்லீம் படைகள் உணவளித்தார்கள்’ என்று கூறினார்.
                                ஆரம்பகால இஸ்லாமிய படைகளில் 15 வயதிற்கு மேலுள்ள உடலும், மனமும் வலுவான நிலையில் அவர்களுக்கு பெற்றோர் இருந்தால் அவர்களின் அனுமதியுடனே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். முதலில் தானாக போரிட உத்தரவிட்டவர் 820 ல் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ் ஷஃபி ஆவார். இவர் ஷாஃபி கல்விக்கூடங்களைத் தொடங்கியவர். இவர் காட்டு அரபுகளுடன் போரிடச் சொன்னார். ஆனால் அதே நேரத்தில் முஸ்லீமல்லாதவர்களையும், முஸ்லீமல்லாத அரபுகளிடமும் போரிடக்கூடாது என்று உத்தரவிட்டார். இஸ்லாமிய சட்டப்படி தாக்குதல் முன்னறிவிப்பு இல்லாமல் போர் செய்யக்கூடாது. எதிரியைக் கொடுமைப் படுத்துவதோ, தீயிலிடுவதோ கூடாது. மேலும் போர் செய்வதைப்பற்றிய பல விவரங்களைக் குர் ஆன் கூறுகிறது.

மன்னரும், போரும் 2



 மனிதன் முதல் முதலில் போரிட்டது நீருக்காகத்தான். அந்தகாலத்தில் மனித கூட்டம் ஒரு சமுதாயமாக கால்போன போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும். நீர்வளத்தைப் பிடிப்பதற்கு இரு கூட்டங்களும் அடித்துக் கொள்ளும். அப்போது அவர்களுக்குண்டான அறிவு அடிப்படையில் ஒரு உயிரின் மதிப்பு தெரியாது. (இப்போது மட்டும் என்ன இஸ்ரேலும், அமெரிக்காவும் உயிரின் மதிப்பையா தெரிந்து வைத்திருக்கிறார்கள்). நீர்வளம் கிடைத்தவுடன் கால்நடைகளுடன் கூடிய ஒரு நிரந்தர வாழ்க்கைச் சூழலை உருவாக்குவார்கள். பின் இன்னொரு கூட்டம் வரும் அவர்கள் இவர்களை அழிப்பார்கள் இப்படித்தான் அக்கால போர் இருந்தது. சட்டங்கள், எல்லைகள் கிடையாது. உங்களுக்கொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் உலகிலுள்ள எல்லா நாகரீகங்களும் நதியின் விலாசமிட்டு தான் தோன்றியது. சிந்து சமவெளி நாகரீகம், யூப்ரடீஸ், டைக்ரீஸ் நாகரீகம், வோல்கா நதி நாகரீகம் என்று. பின் நாகரீகங்கள் போரிட்டன. ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இறைவனால் பல கூட்டங்களுக்கு பல இறை தூதர்கள் வந்தார்கள் அவர்கள் மூலம் வேதங்கள் வந்தன. மறுத்தே பழகிப்போன மனிதர்களால் மதமும் சேர்ந்து கொண்டது.
                                போருக்கு பல காரணங்கள் உண்டு. பெண்களுக்காக, குலப் பெருமைக்காக, சுய கௌரவத்திற்காக, அடுத்தவரின் வளத்தையும், நிலப்பரப்பையும் கைப்பற்றுவதற்காக இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தாவூத் (அலை) நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட சபூர் வேதம் நீங்க, முதலில் நிலையான வேதத்துடன் வந்த மூஸா(அலை) நபியவர்களின் வழி வந்த யூதர்களும், இரண்டாவதாக வந்த ஈஸா(அலை) நபியவர்களின் வழி வந்த கிறிஸ்தவர்களும் கூட போரிட்டிருக்கிறார்கள். எப்படியும் யாரையும் அடித்துக் கொள்ளலாம். நீங்கள் நினைக்கலாம் ஈஸா(அலை) நபியவர்களுக்கு சட்டப்படி விசாரித்து தானே சிலுவைத் தண்டனை கொடுத்தார்கள் என்று அதுவேறு அது மதகுருமார்களால் கொடுக்கப்பட்டது. போர் சட்டம் என்பது வேறு. போருக்கென்று எந்த சட்டமும் இல்லை. அன்றும், இன்றும் ஒரு நாட்டில் போர் வீரர்கள் நுழைந்தால் முதலில் செய்வது கற்பழிப்பு. அடுத்து கொள்ளை, அடுத்து அடையாளங்களை அழிப்பது.
                                    உலகில் முதல்முதலில் வாயால் போர் சட்டம் போட்டவர்கள் நபி (ஸல்) அவர்களின் அன்புத்தோழர் அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் தான். போருக்கு புறப்படும் முன் வீரர்களிடம் சட்டம் போட்டார்கள். இதுவே அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “ நில்லுங்கள் மக்களே நான் உங்களுக்கு போர்களத்தில் கையாள்வதற்கான பத்து சட்டங்கள் போடுகிறேன். எக்காரணத்தை முன்னிட்டும் நேர்பாதையை விட்டு ராஜதுரோகம் செய்தோ அல்லது விலகவோ கூடாது. இறந்த உடல்களை சித்திரவதை செய்யக்கூடாது. எந்நிலையிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களைக் கொல்லக்கூடாது. எதற்காகவும் மரங்களைச் சேதப்படுத்துவதோ, எரிப்பதோ (குறிப்பாக கனிதரும் மரங்களை) கூடாது. எதிரியை தீயிட்டு கொல்லக்கூடாது. மதகுருமார்களையும் கொல்லக்கூடாது” என்று சொன்னார்கள். அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கு முன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போர் உரை தான் நிகழ்த்தினார்கள்.
                                மேலும், குர்ஆன் மட்டுமே மனித குலத்திற்கு முதல் முறையாக போர் சட்டத்தைச் சொன்னது. அல்-பகரா: 2:190-193 ல் உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். போரின்போது அவர்களை எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள். மேலும், எங்கிருந்து உங்களை வெளியேற்றினார்களோ, அங்கிருந்து நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். போர் கொடியதுதான் என்றாலும், அதைவிட அராஜகத்தை தோற்றுவிப்பது கொலையைக்காட்டிலும் கொடியது என்று கூறுகிறது. கோடிட்ட இடங்களை கவனமாகப் படியுங்கள் படைத்தவன் மனிதர்களுக்கு எந்த மாதிரி அறிவுரை கூறுகிறான் என்று விளங்கும்.
                           சர்வதேச அளவில் முதல்முறை ஜினீவா போர் ஒப்பந்தம் என்று 1864 ல் ஐரோப்பிய சக்திகள் இயற்றின. இன்றளவிலும் அதை ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகள் மதிப்பதில்லை. நூரெம்பர்க் போருக்குப் பிறகு, 1907 ல் நூரெம்பர்க் பிரின்ஸிபிள்ஸ் என்று இயற்றினார்கள். நிறைய போட ஆரம்பித்தார்கள், போட்டார்கள், போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  
                               சர்வதேச சட்டப்படி, போருக்கான காரணம் ஒரு நாடு இன்னொரு நாட்டை அரசியல் ஆதாயத்திற்காக நிலப்பரப்பைப் பிடிப்பதற்கு போரிடலாம். ஆனால் தேவையில்லாமல் சேதாரங்களை ஏற்படுத்தக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போரை முடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டு மக்களோ அல்லது சொத்துக்களுக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது. போர் புரியும் நாடும், போர் தொடுக்கப்பட்ட நாடும் தேவையில்லாத கஷ்டங்களைத் தவிர்க்க வேண்டும். மனித உரிமைச் சட்டப்படி கைதியாக பிடிபட்டவர்களையும், காயங்களுடன், நோய்வாய் பட்டுள்ளவர்களையும் மற்றும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். கூடுமானவரை அமைதிக்கு முயற்சிக்க வேண்டும். ஒரு இராணுவம் இன்னொரு இராணுவத்தினரையோ அல்லது இராணுவ நிலைகளையோ மட்டும் தான் தாக்க வேண்டும். போர் வீரர்கள் பொது மக்களிடமிருந்து தனித்துத்தெரிய அந்தந்த நாட்டின் சீருடை அணிந்திருக்க வேண்டும். நாட்டுக்குச் சொந்தமான பாராளுமன்றம், இராணுவ நிலைகள், தபால் நிலையங்கள், இரயில் நிலையங்கள், பாலங்கள், தொலைகாட்சி மற்றும் ரேடியோ நிலையங்கள் என்று குண்டு வீசித் தாக்கிக்கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் கல்விக்கூடம், மருத்துவமனை போன்ற நிலைகளில் வீசக்கூடாது. வெள்ளைக்கொடி அல்லது துணி ஏந்தி வந்தால் கொல்லக்கூடாது.
                                      பெயரளவில் உள்ள சர்வதேச போர் சட்டத்தை யாரும் மதிப்பதில்லை. கொசோவா, போஸ்னியா, இலங்கை, ஈராக், ஈரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், சூடான், கொரியா இப்படி வரிசையாக நடந்த போர்களில் யாரும் மதித்ததில்லை. போர் சட்டம் என்பது வான்வழிப்போர், கடற்படைப்போர், தரை இராணுவம், போர் கைதிகளைக் கையாள்வது, காயம் நோய்வாய்ப்பட்டவர்கள், சரணடைந்தவர்களைக் கையாள்வது, எந்த வகையான குண்டுகளைப் (சிரிப்பாய் இருக்கும் 400 கிராம் வெடி மருந்து கொண்ட குண்டைதான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சட்டம்/ இன்று 2000 கிலோ வெடி மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்) பயன்படுத்துவது என்று இன்னும் பல பிரிவுகளில் உள்ளது.
                                கடல் சட்டம் ஒவ்வொரு நாட்டின் கரைப்பகுதியில் இருந்து 3 நாட்டிகல் மைல்களாகும். இது பீரங்கித் தாக்குதலின் அளவை வைத்து டச்சுக்காரர் கார்னலியஸ் வான் பின்கர்ஷூக் என்பவர் நிர்ணயித்தது. இந்த எல்லையைத் தாண்டிய கடல்பகுதி சர்வதேசத்திற்கும் சொந்தமானதாகும். அதில் எந்த குற்றம் நடந்தாலும் எந்த நாடும் விசாரிக்கவோ, கேள்வி கேட்கவோ கூடாது. அப்போது யாரையாவது கொல்ல வேண்டுமென்றால் கை, கால் கட்டி நடுக்கடலுக்கு கூட்டி போய் கொன்றுவிடுவார்கள். 20 ம் நூற்றாண்டில் எல்லா நாடுகளும் தங்கள் கடல் எல்லையை இயற்கை வளங்களுக்காகவும், மீன்பிடி உரிமையை மேலும் விரிப்படுத்தவும், தன் நாட்டு கடல்பகுதி சுற்றுச்சூழலை கவனிப்பதற்கும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டின. 1930 ல் அப்போதிருந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் அதை அங்கீகரிக்கவில்லை. ஆனால், 1945 ல் அமெரிக்க அதிபர் ட்ரூமன் மேற்சொன்ன காரணங்களுக்காக கடல் எல்லையை விரிவு படுத்திக் கொள்வது அந்த அந்த நாட்டின் சொந்த விஷயம் என்று சட்டத்தை மீறிக்கொண்டது. 1946 லிருந்து 1950 வரை சிலி, பெரு, ஈக்வடார் போன்ற நாடுகள் மீன்வளம் சார்ந்ததாகச் சொல்லி 200 நாட்டிகல் வரை எல்லையை வகுத்துக் கொண்டார்கள். சில நாடுகள் 12 நாட்டிகல் வரை வகுத்துக் கொண்டார்கள்.
                                      1967 கணக்குப்படி, 25 நாடுகள் 3 நாட்டிகள், 66 நாடுகள் 12 நாட்டிகல், 8 நாடுகள் 200 நாட்டிகல் என்று கடல் எல்லையிட்டுக் கொண்டார்கள். பின் 1973 ல் 160 நாடுகள் கூடி பேசினார்கள். 12 நாட்டிகல்கள் எல்லாநாடுகளுக்கும் பொதுவானது என்று அமைத்துக் கொண்டார்கள். மேலும் அதிலிருந்து 12 நாட்டிகல்கள் தொட்டுள்ள எல்லை என்றும், 200 நாட்டிகல்கள் மீன்பிடிப்பு, எண்ணெய் வளம், வாணிபத்திற்கென வகுத்துக் கொண்டார்கள். அதன்படி எந்த நாட்டின் கடலோர எல்லைப்பகுதியிலும் வெளிநாட்டு கப்பல்கள் கடக்க அனுமதியில்லை.
                                   இன்று சர்வதேச கடலில் எல்லா கண்டத்திலும் அமெரிக்கா தனது 13 க்கும் மேற்பட்ட பெரிய விமானம் தாங்கி கப்பல்களை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. கடற்கொள்ளையையும் முடிந்தால் எந்த நாடும் தடுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் ஆப்பிரிக்காவின் தீவுகளில் கடலோரத்தில் நியூக்ளியர் கழிவுகள், மருத்துவ கழிகள், இரசாயன கழிவுகள் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தன. இதனால் ஆத்திரமுற்று தான் சோமாலியா போன்ற நாடுகளின் தீவிரவாத குழுக்கள் அவர்களின் கப்பல்களை சிறை பிடித்துவருகிறார்கள். மேலைநாடுகள் அவர்களை கடற்கொள்ளையர்களாக சித்தரிக்கிறார்கள்.
                             முதல்முறையாக 1474 ல் ரோமப் பேரரசில் பீட்டர் வான் ஹாகன்பாக் என்பவர் போர்குற்றம் புரிந்தார் என்று தலைத் துண்டித்துக் கொல்லப்பட்டார். மேஜர் கன்னாட் என்பவரை 1643 ல் செஷையர் என்ற இடத்தில் ஒரு தேவாலயத்தில் வைத்து மொத்த கிராம மக்களையும் கொன்றார் என்று 1654 ல் தூக்கிலிடப்பட்டார். 1865 ல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆண்டர்சன் சிறைச்சாலையிலிருந்த போர் கைதிகளைக் கொன்றதற்காக ஹென்றி விர்ஸ் என்பவரை தூக்கிலிட்டார்கள்.