வியாழன், 2 ஏப்ரல், 2015

டடார்கள் வரலாறு



டடார்கள் எனப்படுபவர்கள் பலவகை உண்டு. வோல்கா டடார்கள், கிரிமியன் டடார்கள், லிப்கா டடார்கள், அஸ்ட்ரகான் டடார்கள், சைபீரிய டடார்கள் இன்னும் சில சிறு பிரிவைச் சேர்ந்த டடார்கள். நாம் பார்க்கப் போவது பழைய துருக்கி டடார்கள். உய்குர் இனத்தைச் சேர்ந்த மத்திய ஆசியாவைச் சார்ந்தவர்கள். இவர்களை டர்டார்கள் என்றும் அழைப்பார்கள். சைபீரியா கலந்த துருக்கி மொழி பேசக்கூடியவர்கள். இவர்களின் மொழி 7 ம் நூற்றாண்டிலிருந்து 13 ம் நூற்றாண்டுவரை காலங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் டடர்ஸ்தான் மற்றும் பஷ்கோர்தோர்ஸ்தான் பகுதியிலிருந்த வோல்கான் டடார்கள் ஆவார்கள். இவர்கள் ஏறக்குறைய 6 மில்லியன்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது. துருக்கி மொழி பேசும் முஸ்லீம்களும் டடார்களாகவே கணக்கிடப்பட்டனர். இதில் 0.50% மில்லியன் கிரிமிய டடார்களும் அடங்கும். பொதுவாக ஜெங்கிஸ்கானின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும், ருஸ் எனப்படுபவர்களின் ஆக்கிரமிப்பின் மூலம் வந்த டடார்களே அதிகம். டடார் என்றால் துருக்கிய மற்றும் பெர்ஷிய மொழியில் “உயர்ந்த தூதன்” என்று பொருள். ரஷ்ய பேரரசில் இருந்த துருக்கிகள் அனைவருமே டடார்களாக அழைக்கப்பட்டனர். துருக்கிய மோங்கோல் டடார்களின் பலம் 14 மற்றும் 15 ம் நூற்றாண்டுகளில் அதிகமிருந்தது. ரஷ்யாவில் கிரிமிய நோகாய் படையெடுப்பின் மூலம் அதிகமான அடிமைகளை சிறைப் பிடித்து ஓட்டோமான் பேரரசுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இது இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது. மேலும் இந்த படையெடுப்புகள் கொசாக்குகளின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவியது.
                                          அதிகப்படியான டடார் மொழிபேசுபவர்கள் இருப்பதாக 2010 ல் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்தது. இவர்களின் எழுத்து வடிவம் ‘சிரில்லிக்’ என்னும் அமைப்பைக் கொண்டதாக இருக்கும். டடார்கள் மரம், துணி, செராமிக், தோல், உலோகங்களைக் குடைந்து வடிவமைப்பதில் மிகவும் கை தேர்ந்தவர்கள். இது அவர்களுக்கு பெரிதும் வாணிபத்தில் உதவியது. 
                                           7 ம் நூற்றாண்டுகளில் வோல்கா நதிக்கரையில் பரவியவர்கள் 922 ல் அஹ்மது இப்னு ஃபத்லான் என்பவரின் உபதேசத்தால் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள். பிறகு, மங்கோலிய படையெடுப்புக்குப் பின் வோல்கா பகுதி (கோல்டன் ஹார்டி) தங்க நாடோடிகளுடன் இணைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் துருக்கிய மொழி பேசும் இஸ்லாமிய கிரிமியன் டடார்கள் மத்திய ஐரோப்பாவில் சக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள். மங்கோலிய ஜெங்கிஸ்கானின் பேரன் பதூ கான் என்பவரின் தலைமையில் 1223 ல் ஐரோப்பாவை நோக்கி படையெடுத்தார்கள். முதலில் குமன்ஸ், வோல்கா பல்கேரியா, கெய்வன் ருஸ் ஆகிய பகுதிகளை வென்றார்கள். இவர்களின் திட்டம் அட்லாண்டிக் கரைப்பகுதிகள் வரை வெல்வதாக இருந்தது. பதூ கானின் உறவினரும், ஜெங்கிஸ்கானின் மூன்றாவது மகனுமாகிய ஓகிடெய் கானின் திடீர் மரணத்தால் படையெடுப்பை நிறுத்தி கொண்டு. கிழக்குப் புறமாக தங்கள் மலைப்பிரதேசத்திற்குத் திரும்பினார்கள். 1223 லிருந்து 1293 வரை நிறைய படையெடுப்புகளை பல்கேரியா, லுத்வேனியா, போலந்து மற்றும் இன்னும் பல பகுதிகளின் மீது நடத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக